திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

544 திருவாசக ஆராய்ச்சியுரை தாள் " இதன்கண் 'ஆரொருவரிவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் என்றதனால் சத்தியை வியந்தது என்னும் பதிகப் பொருள் புலப்படுமாறு காண்க. 15 170. முன்னிக் கடலைச் சுருக்கி யெழுந்துடையாள் என்னத் திகழ்ந்தெம்மை யாளுடையா ளிட்டிடையின் மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேற் பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம் என்னச் சிலைகுலவி நந்தம்மை யாளுடையாள் தன்னிற் பிரிவில: வெங்கோமான் அன்பர்க்கு முன்னி யவணமக்கு முன் சுரக்கும் இன்னருளே யென்னப் பொழியாய் மழையேலோ ரெம்பாவாய். எம் ப - ரை. மழை - மேகமே, கடலை முன்னி சுருக்கி எழுந்து - நீ கடலை அடைந்து அதன் நீர் குறையும்படி முகந்துகொண்டு விண் ணில் எழுந்து, உடையாள் என்ன திகழ்ந்து - எம்முடைய இறைவி யின் திருமேனிபோலாக நீலநிறமாய் விளங்கி, எம்மை ஆள் உடை யாள் இட்டு இடையின் மின்னி பொலிந்து - எம்மை ஆளாகவுடைய இறைவியின் சிறிய இடையைப்போல் மின்னி விரிவடைந்து, பிராட்டி திருவடிமேல் பொன் அம் சிலம்பில் சிலம்பி- எங்கள் இறைவி திருவடியின்மேல் அணிந்த பொன்னாலாகிய அழகிய சிலம்புபோல் ஒலித்து, திரு புருவம் என்ன சிலைகுலவி - அவ்விறைவியின் அழகிய கட் புருவங்கள் போலாக வானவில்லை வளைய இட்டு, நம் தம்மை ஆள் உடையாள் தன்னில் பிரிவு இலா எம்கோமான் அன்பர்க்கும் - நம்மை ஆளாக உடைய இறைவி தன்னின்றும் பிரிதல் இல்லாத எம் இறை அன்பர்களுக்கும், அவள் நமக்கும் - அவ்விறைவி தமது தொண்டுடைய நமக்கும், முன்னி முன் சுரக்கும் இன் அருள் என்ன பொழியாய் - சார்ந்து நின்று முதலிற் சொரிகின்ற இனிய அருளைப் போல மழையினைப் பொழிவாயாக. எம்பாவாய் - எங்கள் வழிபாட் டிற்குரிய பாவையாகிய பார்வதிதேவீ! வேண்டும்போது தப்பாது மழை பெய்யும்படி அருள் செய்வாயாக (என மழையினை வேண்டுதல் செய்தனர்) என்பதாம். வனின் மேகமே, கடலை முன்னிச் சுருக்கி எழுந்து, எம்மையுடைய இறை வியின் திருமேனிபோல நீலநிறமாக விளங்கி, எம்மை ஆளாகவு டைய இறைவியின் சிறிய இடையைப்போல மின்னி விரிவடைந்து எம்பிராட்டி திருவடிமேல் அணிந்த பொன்னாலாகிய அழகிய சிலம் பினைப்போல வில்லை வளைய இட்டு, எம்தம்மை ஆளாகவுடைய இறைவி தன்னின்றும் பிரிவில்லாத எம் இறைவனின் அன்பர்க்கும் அவ்விறைவி தமக்கு தொண்டுடைய நமக்கும் முன்னி முதலிற் சொரி கின்ற இனிய அருளைப்போல மழையினைப்பொழிவாயாக. எம்பாவாய்
544 திருவாசக ஆராய்ச்சியுரை தாள் இதன்கண் ' ஆரொருவரிவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் என்றதனால் சத்தியை வியந்தது என்னும் பதிகப் பொருள் புலப்படுமாறு காண்க . 15 170 . முன்னிக் கடலைச் சுருக்கி யெழுந்துடையாள் என்னத் திகழ்ந்தெம்மை யாளுடையா ளிட்டிடையின் மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேற் பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம் என்னச் சிலைகுலவி நந்தம்மை யாளுடையாள் தன்னிற் பிரிவில : வெங்கோமான் அன்பர்க்கு முன்னி யவணமக்கு முன் சுரக்கும் இன்னருளே யென்னப் பொழியாய் மழையேலோ ரெம்பாவாய் . எம் - ரை . மழை - மேகமே கடலை முன்னி சுருக்கி எழுந்து - நீ கடலை அடைந்து அதன் நீர் குறையும்படி முகந்துகொண்டு விண் ணில் எழுந்து உடையாள் என்ன திகழ்ந்து - எம்முடைய இறைவி யின் திருமேனிபோலாக நீலநிறமாய் விளங்கி எம்மை ஆள் உடை யாள் இட்டு இடையின் மின்னி பொலிந்து - எம்மை ஆளாகவுடைய இறைவியின் சிறிய இடையைப்போல் மின்னி விரிவடைந்து பிராட்டி திருவடிமேல் பொன் அம் சிலம்பில் சிலம்பி- எங்கள் இறைவி திருவடியின்மேல் அணிந்த பொன்னாலாகிய அழகிய சிலம்புபோல் ஒலித்து திரு புருவம் என்ன சிலைகுலவி - அவ்விறைவியின் அழகிய கட் புருவங்கள் போலாக வானவில்லை வளைய இட்டு நம் தம்மை ஆள் உடையாள் தன்னில் பிரிவு இலா எம்கோமான் அன்பர்க்கும் - நம்மை ஆளாக உடைய இறைவி தன்னின்றும் பிரிதல் இல்லாத எம் இறை அன்பர்களுக்கும் அவள் நமக்கும் - அவ்விறைவி தமது தொண்டுடைய நமக்கும் முன்னி முன் சுரக்கும் இன் அருள் என்ன பொழியாய் - சார்ந்து நின்று முதலிற் சொரிகின்ற இனிய அருளைப் போல மழையினைப் பொழிவாயாக . எம்பாவாய் - எங்கள் வழிபாட் டிற்குரிய பாவையாகிய பார்வதிதேவீ ! வேண்டும்போது தப்பாது மழை பெய்யும்படி அருள் செய்வாயாக ( என மழையினை வேண்டுதல் செய்தனர் ) என்பதாம் . வனின் மேகமே கடலை முன்னிச் சுருக்கி எழுந்து எம்மையுடைய இறை வியின் திருமேனிபோல நீலநிறமாக விளங்கி எம்மை ஆளாகவு டைய இறைவியின் சிறிய இடையைப்போல மின்னி விரிவடைந்து எம்பிராட்டி திருவடிமேல் அணிந்த பொன்னாலாகிய அழகிய சிலம் பினைப்போல வில்லை வளைய இட்டு எம்தம்மை ஆளாகவுடைய இறைவி தன்னின்றும் பிரிவில்லாத எம் இறைவனின் அன்பர்க்கும் அவ்விறைவி தமக்கு தொண்டுடைய நமக்கும் முன்னி முதலிற் சொரி கின்ற இனிய அருளைப்போல மழையினைப்பொழிவாயாக . எம்பாவாய்