தென்னாடு கார்த்திகை திங்கள் இதழ் - 02

நளித் திங்கள், 2020 (03ஆம் பக்கத் தொடர்ச்சி) நடைபெற்று வருகின்றன. ஆடவை உத்தரம், சிலைத்திங்கள் திருவாதிரை ஆகிய இரு சிவநீராட்டு நாட்களில் சிவகாமி அம்மனுடனுறை ஆனந்தக் கூத்தப் பெருமான் வீதி வலம் வரும் நிகழ்வும் சிறப்பாக இடம் பெற்று வருகின்றது. இதன் போது மாணவர்கள் சுவாமி காவுதல், தீவட்டி பிடித்தல், குடை, கொடி, ஆலவட்டம் பிடித்தல், சாமரை வீசுதல் போன்ற சரியைத் தொண்டுகளை பாடசாலையிலே செய்யப் பழகிக் கொண்டனர். விஞ்ஞான பாடத்திற்கு ஆய்வு கூடங்களில் செயன்முறைப் பயிற்சி பெறுவது போல, சமய பாடத்திற்கு செயன்முறைப் பயிற்சி ஆலயத்தில் வழங்கப்படுகிறது. திருநாவுக்கரசு நாயனார் பாடிய "நிலைபெறுமா றெண்ணுதியேல் நெஞ்சே நீவா நித்தலுமெம் பிரானுடைய கோயில் புக்குப் புலர்வதன்முன் அலகிட்டு மெழுக்கு மிட்டுப் பூமாலை புனைந்தேத்திப் புகழ்ந்து பாடி" என்ற தேவார வரிகளில் உள்ள வண்ணம், ஆலயத்தை கூட்டி சுத்தஞ் செய்தல் (திருவலகிடுதல்), மண்டபத்தை நீரினால் கழுவுதல், விளக்குகளை மினுக்குதல், பூமாலை கட்டுதல், தோரணம் பின்னுதல், தோரணம், மாவிலை கட்டுதல், சங்கு ஊதுதல், சேமக்கலம் அடித்தல், காண்டாமணி அடித்தல், கோலம் போடுதல், ஆனந்தக் கூத்தனின் மற்றும் அம்பாளின் பொன்னாடைகளை மடித்துக் கொடுத்தல் போன்ற பலவகையான சரியைத் தொண்டுகளை மாணவர்கள் தினமும் செய்து கொண்டிருக்கிறார்கள். தைப்பொங்கல், வருடப் பிறப்பு போன்ற முக்கிய தினங்களில் பொங்கல் பொங்கிப் படைத்து, சிறப்பான வழிபாடு நடை பெறுகிறது. பொங்கல் பானை வைக்கும் முறை, அரிசி போடும் முறை, வாழையிலை எந்தப் பக்கம் போட்டு படைக்க வேணும் போன்ற பலவிதமான விளக்கங்களையும் மாணவர்கள் செயன்முறையாகவே பெற்றுக் கொள்கின்றனர். மாசி மாதத்தில் சிவனிரவு விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. காலையில் மாணவர்களுக்கு சைவ சமய தீட்சை வழங்கியும், இரவு நான்கு வேளைப் பூசைகளும் சிறப்பாக நடை பெற்றும். இடைநேரங்களில் மாணவர்களின் பண்ணிசை, பேச்சு, சிவபுராணம் ஓதுதல் போன்றவையும் நிகழப்பெறுகின்றன. தென்னாடு பதின்மைப் பிறைநாளில் (விஜய தசமியன்று) மாணவர்கள் வேட்டி, சால்வையுடனும், மாணவிகள் முழுப் பாவாடை, தாவணியுடனும் பாடசாலைக்கு வருவார்கள். ஆலயப் பூசைகளில் பங்குபற்றி, மானம்பூ எனப்படும் வன்னி வாழை வெட்டு நிகழ்ச்சியை ஆவலுடன் பார்த்து, இறைவனுக்கு படைத்த உணவுகளைப் பெற்று, கலை நிகழ்வுகளிலும் பங்கு பற்றி, பண்ணிசை பாடியும், பேசியும், இசைக் கருவிகள் இசைத்தும், நடனம் ஆடியும் மகிழ்வாய் வீடு செல்வர். அன்று ஆலயத்தில் மாணவர்களின் இளைய சகோதரர்களிற்கும், அயலிலுள்ள குழந்தைகட்கும் ஏடு தொடக்கும் வைபவம் சிறப்பாக நிகழும். TELLIPPALAI T/MANATANA COLLEGE யா/ மகாஜனக் கல்லூரி தெல்லிப்பழை சமய குரவர் குருபூசைகள், சந்தான குரவர் குருபூசைகள் சிறப்பாக நடைபெறுவது வழமை. மாணிக்கவாசகர் குருபூசையன்று திருவாசக முற்றோதல் நிகழ்ந்து, மகேசுவர பூசையும் நடைபெறுகின்றது. நாளித் திங்கள் (கார்த்திகை சோமவாரங்களில்) திங்கட்கிழமைகளில் சிறப்புப் பூசை நிகழ்வதுடன், கார்த்திகை விளக்கீட்டிலன்று தீபங்கள் ஏற்றப்படுகின்றன. இவ்வகையாக திருவிழாக்கள் நடைபெறும்போது, விழாக்களின் தத்துவங்களை ஆசியர்கள் விளக்கிக் கூறுவதால் மாணவர்களிற்கு திருவிழாக்களின் முக்கியத்துவம் புரிந்து, பாடசாலையை விட்டு வெளியேறிய பின்பும், இவற்றை தம் வாழ்வில் கடைப் பிடிப்பதோடு தம்முடைய குழந்தைச் செல்வங்களுக்கும் சொல்லித் தருகிறார்கள். விளையாட்டு, விஞ்ஞானம், கலை, இலக்கியம், வணிகம் போன்ற பிரிவுகளுக்கு கழகங்கள் இருக்கின்றது போல, சைவ சமய செயற்பாடுகளிற்கும் "சைவ வளர்ச்சிக் கழகம்" என ஒரு கழகம் இருக்கின்றது. ஆலயத்திற்கு மேற்குப் பக்கமாக இருந்த அறையில், இக்கழகத்தினர் நூலகம் ஒன்றை அமைத்ததுடன், "மகாஜன சைவ மஞ்சரி" என்ற மாதாந்த கையெழுத்து பத்திரிகையையும் வெளியிட்டு வருகின்றனர். மாணவர்கள் தாங்கள் சுயமாக தங்களிற்கு விரும்பிய சமய நூல்களை வாசிக்கவும், அவற்றைச் சிந்தித்து தெளிவு பெற்று கட்டுரைகள் எழுதவும், திருமுறைகளை மனனம் செய்யவும் கழகம் வழியமைத்துக் கொடுத்தது. இக்கழகத்தில் பலர் பொறுப்பாசிரியர்களாக இருந்த போதிலும் ஆசிரியர் திரு.க. விநாயகரத்தினம் அவர்களின் காலம் பொற்காலம் எனலாம். கல்விக்கரசியான சரசுவதியைக் கொண்டாடும் ஒன்பானிரா (நவராத்திரி) விழா மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. ஒன்பானிரா நாட்களில் தினசரி பூசைகள் வகுப்புகளிற்கு பிரித்துக் கொடுக்கப்படும். மாணவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பூசைப் பொருள், பூமாலை, படையல் முதலியன கொண்டு வருதல் அல்லது தொண்டு செய்தல் என ஏதோ வகையில் ஈடுபாட்டுடன், பூசையிற் பங்கேற்பர். ஒவ்வொரு மாணவனுக்கும், மாணவிக்கும் தன்னுடைய பூசை என்ற உணர்வு மேலோங்க, ஒழுக்கத்துடன் ஆலயத்திற்கு வந்து, பூசைகளில் பங்கேற்று விரதமும் இருப்பர். ஒன்பது மாணவிகள் ஒன்பது சக்திகளாக அலங்கரித்து வருதலும், செய்த திருமுறைகள், திருக்குறள் என்பவற்றை ஆசிரியரிடம் பிழையற ஒப்புவித்து, பயிற்சிப் புத்தகத்தில் அவரின் பெயரின் முதலெழுத்தும் இறுதியெழுத்தும் சேர்ந்த “விம்” என்ற கையொப்பத்தை பெற்றுக் கொள்வர். இதன் காரணமாக விவேகானந்த சபை, பரிபாலன சபை, சைவநெறிக் கழகம் போன்ற சமய நிறுவனங்கள் நடத்தும் பரீட்சைகளில் பெருந்தொகையான மாணவர்கள் பங்கு பற்றி வெற்றி பெற்று, தங்கப் பதக்கங்களையும், பெறுமதி வாய்ந்த பரிசில்களையும் சான்றிதழ்களையும் பெற்று கொலு வைத்தலும் சிறப்பான நிகழ்வாக தெ.து.ஜெயரத்தினம் தமக்கும் பாடசாலைக்கும் பெருமை இடம் பெறுகின்றன. சரசுவதி பூசையன்று வகுப்பிற்கொரு புத்தகம் பெறப்பட்டு, சேர்த்தனர். பன்னிரு திருமுறை முற்றோதல் செய்யவும், புராண படனம் நிகழும்போது யாழ்ப்பாணத்தின் சைவப் பாசறை- மகாஜனக் கல்லூரி பாடசாலை இடைவேளையின் போது, ஓய்வெடுக்காமல் ஆசிரியர் திரு .ச. விநாயகரத்தினம் அவர்கள் ஆலயத்தின் மேற்குப் பக்க அறையில் அமர்ந்திருப்பார். மாணவர்கள் தாங்கள் புதிதாக மனனஞ் ஆலயத்தில் பூசையில் வைத்து பதின்மைப் பிறைநாளில் பாடல்களை எழுத்துப் பிழையற உச்சரித்து, சந்தி (விஜய தசமியன்று) எடுத்துப் படிப்பார்கள். அநேகமான மாணவர்கள் ஒன்பானிராமுழுவதும் விரதம் இருப்பார்கள். மற்றவர்கள் சரசுவதி பூசை 3 நாளும் விரதம் இருந்து அன்னை சரசுவதியின் அருளைப் பெறுவர்கள். பிரித்துப் படிக்கும் வல்லமையும் இதன் பயனாய் மாணவர்கள் பெற்றுக் கொண்டார்கள். "இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்" என்ற திருக்குறளிற் கிணங்க விநாயகரத்தினம் ஆசிரியர் அவர்கள் ஒவ்வொரு செயலுக்கும் பொருத்தமான மாணவரைத் தேர்ந்தெடுத்து, பொறுப்புகளை அவர்களிடம் கையளிப்பர். பின் அவர்களுக்கு உதவியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் முறை பற்றியும், மேற்பார்வை செய்யும் முறை பற்றியும் சொல்லிக் கொடுத்து ஆளுமை மிக்க மாணவர்களை உருவாக்கினார். நாயன்மார்களில் இருவரான திருஞானசம்பந்த மூர்த்தி நாயனாராலும், சுந்தரமூர்த்தி நாயனாராலும் பாடப் பெற்று, ஆறுமுகநாவலரால் தேன்பொந்து என்று குறிப்பிடப் பெற்ற திருக்கேதீச்சர ஆலயத்தில், மகாஜனாக் கல்லூரியினர் திருவிழாவில் ஐந்தாம் நாள் பகல் திருவிழாவை 1955ம் ஆண்டிலிருந்து எடுத்து, தொடர்ந்து செய்து வருகிறார்கள். அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் என பெருந்தொகையானோர் இந்நாளில் திருக்கேதீச்சரம் சென்று "சுடுவார்பொடி நீறுந்நல துண்டப்பிறை கீளும் கடமா யணிந்தகறைக் கண்டன்” திருவடிகளைப் பணிந்து வணங்கி வழிபட்டு வருகின்றனர். 05 மாருதப்பிரவீகவல்லி எனும் சோழ இளவரசியின் குதிரை முகத்தை மாற்றி, அழகிய மனித முகம் வழங்கிய, பழம்பெருமை வாய்ந்த மாவிட்டபுரம் கந்தன் திருக்கோவிலும் திருவிழாக் காலத்தில் பதினேழாவது நாள் திருவிழாவை (பகலும் இரவும்) மகாஜனாக் கல்லூ ரியினர் பொறுப்பேற்று பல காலமாகச் சிறப்பாக செய்து தென்னாடு கடைய சீஸன் 319 thommes வருகிறார்கள். மாணவர்கள் ஆலய வீதிகளை சுத்தஞ் செய்து, கழுவி, மாவிலை, தோரணம் இட்டு, அன்று கடவுள் நீராட்டுக்கு பால்,தயிர், இளநீர், கரும்பு, பழ வகைகள், பூசைத் தட்டங்கள், பூ மாலைகள், என்பவற்றை கொண்டு சென்று, "முருகன், குமரன், குகன், என்று மொழிந்து" மாவிளக்கு இட்டு, வாகனம் காவுதல், கற்பூரச் சட்டி எடுத்தல், பிரதிட்டை செய்தல் போன்றவற்றையும் செய்து, முருகப் பெருமானின் திருவருள் பெறுவதுடன், தமிழ்கடவுளுக்கு படைத்த ஆறுவகை படையல்களை பெற்று மகிழ்வுடன் வாழ்கின்றனர். "தோற்றம் துடியதனில் தோயும் திதிஅமைப்பில் சாற்றியிடும் அங்கியிலே சங்காரம் - ஊற்றமா ஊன்று மலர்ப்பதத்தில் உற்ற திரோதம்முத்தி நான்ற மலப்பதத்தே நாடு." என்று மனவாசகங் கடந்தாரால் பாடப்பெற்ற, தனது ஆனந்தக் கூத்தினால் ஐந்தொழில்களைச் செய்து வருகின்ற சிவகாமி அம்மனுடனுறை ஆனந்தக் கூத்தப் பெருமானின் அருளுடன் தான், பாடசாலையில் நடக்கும் எல்லா நிகழ்வுகளும் ஆரம்பிக்கும். மாணவர்கள் போட்டிகளுக்குச் செல்ல முன் பொறுப்பாசிரியருடன் கூத்தனிடம் சென்று வழிபாடு செய்தே செல்லும் நடைமுறை இன்றும் வழக்கில் உள்ளது. பாடசாலை வளாகத்துள் சைவ உணவு மட்டுமே உண்ணும் வழக்கம் இன்றும் கடைப் பிடிக்கப் படுகிறது. எந்த நிகழ்வானாலும், எந்த விருந்தானாலும் சைவ உணவு மட்டுமே பரிமாறப் படுகிறது. மாணவர்கள் தங்கள் தேவைக்கு உணவு வீட்டில் இருந்து கொண்டு வருவதானாலும் சைவ உணவு மட்டுமே கொண்டு வர அனுமதி உள்ளது. ஐம்பெரும் குற்றங்களான பொய் சொல்லுதல், களவு எடுத்தல், சூது ஆடுதல், கொலை செய்தல், மது, மாமிசம் உண்ணல் என்பவற்றை செய்யாமலிருக்க வேண்டும் என வலியுறுத்தி, பாடசாலை வளாகத்தினுள் இவற்றை அனுமதிப்பதில்லை, சிவகாமி அம்மனுடனுறை ஆனந்தக் கூத்தப் பெருமான் ஆலயத்தில் 06.09.1976ல் மீளமைப்பு கடவுள் மங்கல நன்னீராட்டும், 1982ல் மாணிக்க வாசகர் சிலை எழுந்தருளல் மற்றும் 02.07.1985 ல் மீண்டும் கடவுள் மங்கல நன்னீராட்டும் நிகழ்ந்துள்ளன. நாட்டின் அசாதாரண சூழலிலும் மக்கள் எல்லோரும் இடம்பெயர்ந்தாலும் கூத்தப் பெருமான் இங்கிருந்து இடம் பெயரவில்லை. 2009ம் ஆண்டில் பாடசாலைக் கட்டிடங்கள் திருத்தப்படும் போது, கோவில் புத்தாக்கம் செய்ய புதிய இடத்தில் அத்திவாரமிடப்பட்டு 12.09.2010ல் மீண்டும் மிகச்சிறப்பாக கடவுள் மங்கல நீராட்டு நடைபெற்றது. "உனை நீ அறி" என்ற கல்லூரியின் மகுட வாசகத்தை ஆழ்ந்து சிந்திக்கும் பொழுது, அதனுள் பொதிந்திருக்கும் சைவ சித்தாந்த்த தத்துவங்களை உணர, கோவில் வழிபாடும், தொண்டுகளும் பேருதவி புரிகின்றன என்பது வெள்ளிடைமலை. மகாஜனக் கல்லூரி மாணவர்கள் சிவகாமி அம்மனுடனுறை ஆனந்தக் கூத்தப் பெருமானின் திருவடிகளைத் தினமும் வணங்கி, கல்வி, விளையாட்டு, கலைகள் என்பவற்றில் சிறந்தோங்கி அன்பும் அறமும் பண்பும் உடைய சிறந்த மனிதர்களாக, நால்வேதங்களாகிய அறவழி நின்று, பொருள் ஈட்டி, இன்பமாய் வையத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து சிவப்பேற்றினை அடையும் வழிகளை காட்டிய அனைத்துப் பெரியோர்களையும் நினைந்து போற்றுகின்றோம். குனித்த புருவமுங் கொவ்வைச்செவ் வாயிற் குமிண்சிரிப்பும் பனித்த சடையும் பவளம்போன் மேனியிற் பால்வெண்ணீறும் இனித்த முடைய வெடுத்தபொற் பாதமுங் காணப்பெற்றால் மனித்தப் பிறவியும் வேண்டுவ தேயிந்த மாநிலத்தே. திருநாவுக்கரசு நாயனார்
நளித் திங்கள் 2020 ( 03 ஆம் பக்கத் தொடர்ச்சி ) நடைபெற்று வருகின்றன . ஆடவை உத்தரம் சிலைத்திங்கள் திருவாதிரை ஆகிய இரு சிவநீராட்டு நாட்களில் சிவகாமி அம்மனுடனுறை ஆனந்தக் கூத்தப் பெருமான் வீதி வலம் வரும் நிகழ்வும் சிறப்பாக இடம் பெற்று வருகின்றது . இதன் போது மாணவர்கள் சுவாமி காவுதல் தீவட்டி பிடித்தல் குடை கொடி ஆலவட்டம் பிடித்தல் சாமரை வீசுதல் போன்ற சரியைத் தொண்டுகளை பாடசாலையிலே செய்யப் பழகிக் கொண்டனர் . விஞ்ஞான பாடத்திற்கு ஆய்வு கூடங்களில் செயன்முறைப் பயிற்சி பெறுவது போல சமய பாடத்திற்கு செயன்முறைப் பயிற்சி ஆலயத்தில் வழங்கப்படுகிறது . திருநாவுக்கரசு நாயனார் பாடிய நிலைபெறுமா றெண்ணுதியேல் நெஞ்சே நீவா நித்தலுமெம் பிரானுடைய கோயில் புக்குப் புலர்வதன்முன் அலகிட்டு மெழுக்கு மிட்டுப் பூமாலை புனைந்தேத்திப் புகழ்ந்து பாடி என்ற தேவார வரிகளில் உள்ள வண்ணம் ஆலயத்தை கூட்டி சுத்தஞ் செய்தல் ( திருவலகிடுதல் ) மண்டபத்தை நீரினால் கழுவுதல் விளக்குகளை மினுக்குதல் பூமாலை கட்டுதல் தோரணம் பின்னுதல் தோரணம் மாவிலை கட்டுதல் சங்கு ஊதுதல் சேமக்கலம் அடித்தல் காண்டாமணி அடித்தல் கோலம் போடுதல் ஆனந்தக் கூத்தனின் மற்றும் அம்பாளின் பொன்னாடைகளை மடித்துக் கொடுத்தல் போன்ற பலவகையான சரியைத் தொண்டுகளை மாணவர்கள் தினமும் செய்து கொண்டிருக்கிறார்கள் . தைப்பொங்கல் வருடப் பிறப்பு போன்ற முக்கிய தினங்களில் பொங்கல் பொங்கிப் படைத்து சிறப்பான வழிபாடு நடை பெறுகிறது . பொங்கல் பானை வைக்கும் முறை அரிசி போடும் முறை வாழையிலை எந்தப் பக்கம் போட்டு படைக்க வேணும் போன்ற பலவிதமான விளக்கங்களையும் மாணவர்கள் செயன்முறையாகவே பெற்றுக் கொள்கின்றனர் . மாசி மாதத்தில் சிவனிரவு விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது . காலையில் மாணவர்களுக்கு சைவ சமய தீட்சை வழங்கியும் இரவு நான்கு வேளைப் பூசைகளும் சிறப்பாக நடை பெற்றும் . இடைநேரங்களில் மாணவர்களின் பண்ணிசை பேச்சு சிவபுராணம் ஓதுதல் போன்றவையும் நிகழப்பெறுகின்றன . தென்னாடு பதின்மைப் பிறைநாளில் ( விஜய தசமியன்று ) மாணவர்கள் வேட்டி சால்வையுடனும் மாணவிகள் முழுப் பாவாடை தாவணியுடனும் பாடசாலைக்கு வருவார்கள் . ஆலயப் பூசைகளில் பங்குபற்றி மானம்பூ எனப்படும் வன்னி வாழை வெட்டு நிகழ்ச்சியை ஆவலுடன் பார்த்து இறைவனுக்கு படைத்த உணவுகளைப் பெற்று கலை நிகழ்வுகளிலும் பங்கு பற்றி பண்ணிசை பாடியும் பேசியும் இசைக் கருவிகள் இசைத்தும் நடனம் ஆடியும் மகிழ்வாய் வீடு செல்வர் . அன்று ஆலயத்தில் மாணவர்களின் இளைய சகோதரர்களிற்கும் அயலிலுள்ள குழந்தைகட்கும் ஏடு தொடக்கும் வைபவம் சிறப்பாக நிகழும் . TELLIPPALAI T / MANATANA COLLEGE யா / மகாஜனக் கல்லூரி தெல்லிப்பழை சமய குரவர் குருபூசைகள் சந்தான குரவர் குருபூசைகள் சிறப்பாக நடைபெறுவது வழமை . மாணிக்கவாசகர் குருபூசையன்று திருவாசக முற்றோதல் நிகழ்ந்து மகேசுவர பூசையும் நடைபெறுகின்றது . நாளித் திங்கள் ( கார்த்திகை சோமவாரங்களில் ) திங்கட்கிழமைகளில் சிறப்புப் பூசை நிகழ்வதுடன் கார்த்திகை விளக்கீட்டிலன்று தீபங்கள் ஏற்றப்படுகின்றன . இவ்வகையாக திருவிழாக்கள் நடைபெறும்போது விழாக்களின் தத்துவங்களை ஆசியர்கள் விளக்கிக் கூறுவதால் மாணவர்களிற்கு திருவிழாக்களின் முக்கியத்துவம் புரிந்து பாடசாலையை விட்டு வெளியேறிய பின்பும் இவற்றை தம் வாழ்வில் கடைப் பிடிப்பதோடு தம்முடைய குழந்தைச் செல்வங்களுக்கும் சொல்லித் தருகிறார்கள் . விளையாட்டு விஞ்ஞானம் கலை இலக்கியம் வணிகம் போன்ற பிரிவுகளுக்கு கழகங்கள் இருக்கின்றது போல சைவ சமய செயற்பாடுகளிற்கும் சைவ வளர்ச்சிக் கழகம் என ஒரு கழகம் இருக்கின்றது . ஆலயத்திற்கு மேற்குப் பக்கமாக இருந்த அறையில் இக்கழகத்தினர் நூலகம் ஒன்றை அமைத்ததுடன் மகாஜன சைவ மஞ்சரி என்ற மாதாந்த கையெழுத்து பத்திரிகையையும் வெளியிட்டு வருகின்றனர் . மாணவர்கள் தாங்கள் சுயமாக தங்களிற்கு விரும்பிய சமய நூல்களை வாசிக்கவும் அவற்றைச் சிந்தித்து தெளிவு பெற்று கட்டுரைகள் எழுதவும் திருமுறைகளை மனனம் செய்யவும் கழகம் வழியமைத்துக் கொடுத்தது . இக்கழகத்தில் பலர் பொறுப்பாசிரியர்களாக இருந்த போதிலும் ஆசிரியர் திரு.க. விநாயகரத்தினம் அவர்களின் காலம் பொற்காலம் எனலாம் . கல்விக்கரசியான சரசுவதியைக் கொண்டாடும் ஒன்பானிரா ( நவராத்திரி ) விழா மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றது . ஒன்பானிரா நாட்களில் தினசரி பூசைகள் வகுப்புகளிற்கு பிரித்துக் கொடுக்கப்படும் . மாணவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பூசைப் பொருள் பூமாலை படையல் முதலியன கொண்டு வருதல் அல்லது தொண்டு செய்தல் என ஏதோ வகையில் ஈடுபாட்டுடன் பூசையிற் பங்கேற்பர் . ஒவ்வொரு மாணவனுக்கும் மாணவிக்கும் தன்னுடைய பூசை என்ற உணர்வு மேலோங்க ஒழுக்கத்துடன் ஆலயத்திற்கு வந்து பூசைகளில் பங்கேற்று விரதமும் இருப்பர் . ஒன்பது மாணவிகள் ஒன்பது சக்திகளாக அலங்கரித்து வருதலும் செய்த திருமுறைகள் திருக்குறள் என்பவற்றை ஆசிரியரிடம் பிழையற ஒப்புவித்து பயிற்சிப் புத்தகத்தில் அவரின் பெயரின் முதலெழுத்தும் இறுதியெழுத்தும் சேர்ந்த விம் என்ற கையொப்பத்தை பெற்றுக் கொள்வர் . இதன் காரணமாக விவேகானந்த சபை பரிபாலன சபை சைவநெறிக் கழகம் போன்ற சமய நிறுவனங்கள் நடத்தும் பரீட்சைகளில் பெருந்தொகையான மாணவர்கள் பங்கு பற்றி வெற்றி பெற்று தங்கப் பதக்கங்களையும் பெறுமதி வாய்ந்த பரிசில்களையும் சான்றிதழ்களையும் பெற்று கொலு வைத்தலும் சிறப்பான நிகழ்வாக தெ.து.ஜெயரத்தினம் தமக்கும் பாடசாலைக்கும் பெருமை இடம் பெறுகின்றன . சரசுவதி பூசையன்று வகுப்பிற்கொரு புத்தகம் பெறப்பட்டு சேர்த்தனர் . பன்னிரு திருமுறை முற்றோதல் செய்யவும் புராண படனம் நிகழும்போது யாழ்ப்பாணத்தின் சைவப் பாசறை மகாஜனக் கல்லூரி பாடசாலை இடைவேளையின் போது ஓய்வெடுக்காமல் ஆசிரியர் திரு .ச . விநாயகரத்தினம் அவர்கள் ஆலயத்தின் மேற்குப் பக்க அறையில் அமர்ந்திருப்பார் . மாணவர்கள் தாங்கள் புதிதாக மனனஞ் ஆலயத்தில் பூசையில் வைத்து பதின்மைப் பிறைநாளில் பாடல்களை எழுத்துப் பிழையற உச்சரித்து சந்தி ( விஜய தசமியன்று ) எடுத்துப் படிப்பார்கள் . அநேகமான மாணவர்கள் ஒன்பானிராமுழுவதும் விரதம் இருப்பார்கள் . மற்றவர்கள் சரசுவதி பூசை 3 நாளும் விரதம் இருந்து அன்னை சரசுவதியின் அருளைப் பெறுவர்கள் . பிரித்துப் படிக்கும் வல்லமையும் இதன் பயனாய் மாணவர்கள் பெற்றுக் கொண்டார்கள் . இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல் என்ற திருக்குறளிற் கிணங்க விநாயகரத்தினம் ஆசிரியர் அவர்கள் ஒவ்வொரு செயலுக்கும் பொருத்தமான மாணவரைத் தேர்ந்தெடுத்து பொறுப்புகளை அவர்களிடம் கையளிப்பர் . பின் அவர்களுக்கு உதவியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் முறை பற்றியும் மேற்பார்வை செய்யும் முறை பற்றியும் சொல்லிக் கொடுத்து ஆளுமை மிக்க மாணவர்களை உருவாக்கினார் . நாயன்மார்களில் இருவரான திருஞானசம்பந்த மூர்த்தி நாயனாராலும் சுந்தரமூர்த்தி நாயனாராலும் பாடப் பெற்று ஆறுமுகநாவலரால் தேன்பொந்து என்று குறிப்பிடப் பெற்ற திருக்கேதீச்சர ஆலயத்தில் மகாஜனாக் கல்லூரியினர் திருவிழாவில் ஐந்தாம் நாள் பகல் திருவிழாவை 1955 ம் ஆண்டிலிருந்து எடுத்து தொடர்ந்து செய்து வருகிறார்கள் . அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர் என பெருந்தொகையானோர் இந்நாளில் திருக்கேதீச்சரம் சென்று சுடுவார்பொடி நீறுந்நல துண்டப்பிறை கீளும் கடமா யணிந்தகறைக் கண்டன் திருவடிகளைப் பணிந்து வணங்கி வழிபட்டு வருகின்றனர் . 05 மாருதப்பிரவீகவல்லி எனும் சோழ இளவரசியின் குதிரை முகத்தை மாற்றி அழகிய மனித முகம் வழங்கிய பழம்பெருமை வாய்ந்த மாவிட்டபுரம் கந்தன் திருக்கோவிலும் திருவிழாக் காலத்தில் பதினேழாவது நாள் திருவிழாவை ( பகலும் இரவும் ) மகாஜனாக் கல்லூ ரியினர் பொறுப்பேற்று பல காலமாகச் சிறப்பாக செய்து தென்னாடு கடைய சீஸன் 319 thommes வருகிறார்கள் . மாணவர்கள் ஆலய வீதிகளை சுத்தஞ் செய்து கழுவி மாவிலை தோரணம் இட்டு அன்று கடவுள் நீராட்டுக்கு பால் தயிர் இளநீர் கரும்பு பழ வகைகள் பூசைத் தட்டங்கள் பூ மாலைகள் என்பவற்றை கொண்டு சென்று முருகன் குமரன் குகன் என்று மொழிந்து மாவிளக்கு இட்டு வாகனம் காவுதல் கற்பூரச் சட்டி எடுத்தல் பிரதிட்டை செய்தல் போன்றவற்றையும் செய்து முருகப் பெருமானின் திருவருள் பெறுவதுடன் தமிழ்கடவுளுக்கு படைத்த ஆறுவகை படையல்களை பெற்று மகிழ்வுடன் வாழ்கின்றனர் . தோற்றம் துடியதனில் தோயும் திதிஅமைப்பில் சாற்றியிடும் அங்கியிலே சங்காரம் - ஊற்றமா ஊன்று மலர்ப்பதத்தில் உற்ற திரோதம்முத்தி நான்ற மலப்பதத்தே நாடு . என்று மனவாசகங் கடந்தாரால் பாடப்பெற்ற தனது ஆனந்தக் கூத்தினால் ஐந்தொழில்களைச் செய்து வருகின்ற சிவகாமி அம்மனுடனுறை ஆனந்தக் கூத்தப் பெருமானின் அருளுடன் தான் பாடசாலையில் நடக்கும் எல்லா நிகழ்வுகளும் ஆரம்பிக்கும் . மாணவர்கள் போட்டிகளுக்குச் செல்ல முன் பொறுப்பாசிரியருடன் கூத்தனிடம் சென்று வழிபாடு செய்தே செல்லும் நடைமுறை இன்றும் வழக்கில் உள்ளது . பாடசாலை வளாகத்துள் சைவ உணவு மட்டுமே உண்ணும் வழக்கம் இன்றும் கடைப் பிடிக்கப் படுகிறது . எந்த நிகழ்வானாலும் எந்த விருந்தானாலும் சைவ உணவு மட்டுமே பரிமாறப் படுகிறது . மாணவர்கள் தங்கள் தேவைக்கு உணவு வீட்டில் இருந்து கொண்டு வருவதானாலும் சைவ உணவு மட்டுமே கொண்டு வர அனுமதி உள்ளது . ஐம்பெரும் குற்றங்களான பொய் சொல்லுதல் களவு எடுத்தல் சூது ஆடுதல் கொலை செய்தல் மது மாமிசம் உண்ணல் என்பவற்றை செய்யாமலிருக்க வேண்டும் என வலியுறுத்தி பாடசாலை வளாகத்தினுள் இவற்றை அனுமதிப்பதில்லை சிவகாமி அம்மனுடனுறை ஆனந்தக் கூத்தப் பெருமான் ஆலயத்தில் 06.09.1976 ல் மீளமைப்பு கடவுள் மங்கல நன்னீராட்டும் 1982 ல் மாணிக்க வாசகர் சிலை எழுந்தருளல் மற்றும் 02.07.1985 ல் மீண்டும் கடவுள் மங்கல நன்னீராட்டும் நிகழ்ந்துள்ளன . நாட்டின் அசாதாரண சூழலிலும் மக்கள் எல்லோரும் இடம்பெயர்ந்தாலும் கூத்தப் பெருமான் இங்கிருந்து இடம் பெயரவில்லை . 2009 ம் ஆண்டில் பாடசாலைக் கட்டிடங்கள் திருத்தப்படும் போது கோவில் புத்தாக்கம் செய்ய புதிய இடத்தில் அத்திவாரமிடப்பட்டு 12.09.2010 ல் மீண்டும் மிகச்சிறப்பாக கடவுள் மங்கல நீராட்டு நடைபெற்றது . உனை நீ அறி என்ற கல்லூரியின் மகுட வாசகத்தை ஆழ்ந்து சிந்திக்கும் பொழுது அதனுள் பொதிந்திருக்கும் சைவ சித்தாந்த்த தத்துவங்களை உணர கோவில் வழிபாடும் தொண்டுகளும் பேருதவி புரிகின்றன என்பது வெள்ளிடைமலை . மகாஜனக் கல்லூரி மாணவர்கள் சிவகாமி அம்மனுடனுறை ஆனந்தக் கூத்தப் பெருமானின் திருவடிகளைத் தினமும் வணங்கி கல்வி விளையாட்டு கலைகள் என்பவற்றில் சிறந்தோங்கி அன்பும் அறமும் பண்பும் உடைய சிறந்த மனிதர்களாக நால்வேதங்களாகிய அறவழி நின்று பொருள் ஈட்டி இன்பமாய் வையத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து சிவப்பேற்றினை அடையும் வழிகளை காட்டிய அனைத்துப் பெரியோர்களையும் நினைந்து போற்றுகின்றோம் . குனித்த புருவமுங் கொவ்வைச்செவ் வாயிற் குமிண்சிரிப்பும் பனித்த சடையும் பவளம்போன் மேனியிற் பால்வெண்ணீறும் இனித்த முடைய வெடுத்தபொற் பாதமுங் காணப்பெற்றால் மனித்தப் பிறவியும் வேண்டுவ தேயிந்த மாநிலத்தே . திருநாவுக்கரசு நாயனார்