தென்னாடு கார்த்திகை திங்கள் இதழ் - 02

== தென்னாடு Miyafargoan Pade ெ 08 (07ஆம் பக்கத் தொடர்ச்சி) இப்படி மாதம் தோறும் செய்யமுடியாததால் பன்னிரெண்டு மாதங்களுக்கும் சேர்த்து முதல் மாத பிறைநாளாகிய (திதியாகிய) தினத்தில் அல்லது அந்தியெட்டி நாளில் ஒன்றாக சேர்த்துக் கொடுப்பது தற்கால வழமையாக மாறிவிட்டது. அதன் பின்னர் ஒவ்வொரு ஆண்டும் அதே திங்கள் (மாத) அதே பிறைநாளில் (திதியில்) ஆண்டுபிறைநாளாக (ஆண்டுத்திதியாக) தமிழர் மரபில் கடைபிடிக்கப்படுகிறது. இப்படியான காலங்களில் அம்மாவை அல்லது அப்பாவை நினைத்து சிவனடியார்களுக்கு உணவளித்தல் பெரும்புண்ணியம். யாவர்க்குமாம் உண்ணும்போது ஒருகைப்பிடி - திருமூலர் உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத்தோரே - மணிமேகலை பசித்தோர் முகம் பார் - பட்டினத்தடிகள் ஐயமிட்டுண் - ஒளவையார். ஒருபிடி சோறுகொண்டு இட்டு உண்டு இரு - அலங்காரம் ஜீவகாருண்யம், வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம், வாடினேன் -திருவருட்பிரகாச வள்ளலார் பசித்தவனுக்கு அன்னந்தந்தால், உண்டவனுக்கு ஊன் குளிரும், உள்ளம் குளிரும், உணர்வு குளிரும் அத்துடன் உயிரும் குளிரும். உயிர் குளிர்ந்தால் உயிருக்குயிரான சிவம் குளிரும். யாவர்க்குமாம் இறைவற்கு ஒரு பச்சிலை யாவர்க்குமாம் பசுவுக்கு ஒரு வாயுறை யாவர்க்குமாம் உண்ணும்போது ஒரு கைப்பிடி யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே - திருமந்திரம் அத்துடன் சிவனடியாருக்கு அமுது கொடுத்தலை திருஞானசம்பந்தர் சுவாமிகள் பின்வருமாறு விபரிக்கின்றார். இரண்டாம் திருமுறையில் திருஞானசம்பந்த சுவாமிகள் மயிலாப்பூரில் இறந்த பெண்ணின் சாம்பலில் இருந்து அந்தப்பெண்ணை உயிர் பெறச்செய்தார். அதற்காக தமிழில் பாடிய திருப்பதிகம் பூம்பாவைத் திருப்பதிகம் ஆகும். இப்படி பல அற்புதங்களை செய்யப் பாடப்பட்ட பதிகங்கள் தமிழிலே தான் பாடப்பட்டது என்பதை கவனத்தில் கொள்க. அதிலே அடியாருக்கு அமுது செய்வதன் மகத்துவத்தினையே முதலாவது பாடலாக பாடியுள்ளார். மட்டிட்ட புன்னையங் கானன் மடமயிலைக் கட்டிட்டங் கொண்டான் கபாலீச் சரமமர்ந்தான் www மகாவிஷ்ணு சிவனை பூஜிக்கிருர். சம். Alon A? THE இக்ரி வரம் தென்னாடு தென்புலத்தார் வழிபாடு ஒட்டிட்ட பண்பி னுருத்திர பல்கணத்தார்க் கட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய் இதனை பெரியபுராணத்தில் திருஞானசம்பந்த நாயனார் வரலாற்றில் தெய்வசேக்கிழார், மண்ணினில் பிறந்தார் பெறும் பயன் மதி சூடும் அண்ணலார் அடியார் தமை அமுது செய்வித்தல் கண்ணினால் அவர் நல்விழாப் பொலிவு கண்டு ஆர்தல் உண்மையாம் எனில் உலகர் முன் வருக என்று உரைப்பார் சிவபெருமானின் அடியார்களுக்கு அமுது செய்வித்தலும், சிவபிரானின் திருவிழாக்களைக் கண்டு களித்தலும் மனிதப்பிறவியில் கிடைத்தற்கரிய பேறு என்று கூறுகிறார். அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு - திருக்குறள் என்பதற்கு அறவழியில் பொருளைத்தேடும் இவ்வுலகில் நாங்கள் அருளையும் தேடவேண்டும். அதேவேளை இறந்த எங்கள் முன்னோருக்கு, அப்பா அம்மா போன்றோருக்கு அவ்வுலகில் அருள் கிடைக்க இவுலகில் இருந்து ஆற்றும் கடனே பிறைநாள் (திதி பிதிர் வழிபாடுகள்) வழிபாடுகள். இப்படியான வழிபாட்டினை நிச்சயமாக பிள்ளைகளாகிய, சகோதரர்களாகிய நாங்கள் செய்யவேண்டும். இது அவர்களுக்கு அவர்கள் சென்றபின் செய்யும் பணிவிடையாகும். அத்துடன் இதன்வழி எங்களுக்கும் அருளும், பொருளும், ஆற்றலும் வந்து கிடைக்கின்றன. மறைமதி (அமாவாசை) தினத்தில் தென்புலத்தார் வழிபாடு மற்றும் பேரொடுக்கம் (மகாலய அமாவாசை) > வருடத்தில் சுறவத்திங்கள் மறைமதிப் பிறைநாள் (தை அமாவாசை) மற்றும் கடகத்திங்கள் மறைமதிப் பிறைநாள் (ஆடி அமாவாசை) முக்கியமான நாட்களாகும். இத்தினத்தில் விரதமிருந்து, நீர் நிலைகளில் அல்லது கிணற்றில் நீராடி இறந்தவர்களுக்கு வழிபாடு செய்வது சிறப்பானதாகும். அத்துடன் எள்ளுடன் தர்ப்பை புல் சேர்த்து, நீர் இறைத்து, பிண்டம் வைக்கக்கூடியவர்கள் பிண்டம் வைத்து வழிபாடு செய்யலாம். (அண்டத்தில் இருப்பது பிண்டத்தில் இருக்கும் என்பார்கள். தென்னாட்டு நிகழ்வுகளின் நிழல்கள் ஈசனைத் தேடிய தென்னாட்டுப் பயணம் திருமால் பூசைசெய்த திருக்கோவில் திருக்கச்சூர் நளித் திங்கள், 2020 அத்துடன் ஆண்டுபிறைநாளாக (ஆண்டுத்திதியாக) மற்றும் திங்கள் (மாத) பிறைநாளில் (திதியில்) தென்புலத்தார் வழிபாடு செய்ய முடியாதவர்கள், பலவருடங்களாக செய்யாமல் விட்டவர்களுக்கு ஒரு சிறப்பான செய்தி. கவலையைவிட்டு கன்னித்திங்கள் (புரட்டாசி மாதம்) வருகின்ற மறைமதிப் பிறைநாள் (புரட்டாசி அமாவாசை) தினத்தன்று இந்த வழிபாட்டினை செய்யலாம். முன்னர் குறிப்பிட்டது போல கதிரவனின் தென்புலப்பயணம் தூ ய்மைப்படுத்துவதற்கானது (ஒடுக்க காலம்), ஆகவே இந்த மறைமதிப் பிறைநாள் மேலும் சிறப்பு பெறுகிறது. அத்துடன் இந்தக் காலப்பகுதியில் எம்முன்னோர்கள் பூமிக்கு வந்து எமது வழிபாட்டினை மற்றும் படையலை ஏற்கின்றனர் என்றும் கருதப்படுகிறது. அதற்கும் மேலாக அவர்களுக்கு அருளுாட்டும் வகையில் நாங்கள் வழிபாடுகள், சிவபூசை, சிவமங்கல நீராட்டு, சிவப்பெருவேள்வி, அடியாருக்கு அமுது, மற்றைய உயிரினங்களுக்கு உணவு, பசுவுக்கு உணவு, காக்கைக்கு உணவு படைத்தல் போன்றவற்றினை செய்து பலன்களை பெறலாம். வையம் நீடுக மாமழை மன்னுக மெய் விரும்பிய அன்பர் விளங்குக சைவ நன்னெறி தான்தழைத் தோங்குக தெய்வ வெண்திரு நீறு சிறக்கவே - பெரியபுராணம் சிவனோபொக்கும் தெய்வம் தேடினும் இல்லை அவனோடு ஒப்பார் இங்கு யாவரும் இல்லை புவனம் கடந்தன்று பொன்னொளி மின்னும் தவனச் சடைமுடி தாமரையோனே - திருமந்திரம் இப்படிப்பட்ட இறைவனை முழுமுதலாகக் கொண்ட சைவம் அதன் வழி வந்த தமிழ் இரண்டையும் இரு கண்களாகப் போற்றி, அதன்வழி நின்று பிறவிப் பெருங்கடலை நீந்திக் கடப்போம். மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம். தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ஒன்பானிரா வழிபாடுகள் கந்தன் கவின் அறுமை மற்றும் சூரன் பெருவாழ்வு CECKBERRELESTE CA தென்னாடு செந்தமிழாகம சிவமடம் மற்றும் சைவ மாணவர் சபையின் இரண்டாவது திங்கள் செய்தியிதழ் “தென்னாடு" சிவத்திரு. சிவஞானம் ஜெயானந்தன் அவர்களால் வடிவமைக்கப்பட்டு அச்சிடப்பட்டு நளித் திங்கள் வளர்பிறை 15ம் நாள் (30-11-2020 திங்கட்கிழமை) தென்னாட்டில் வெளியிடப்பட்டது. முதலாம் தமிழ்ச் சங்கம் கண்ட தென்னாடு என்பதை மனதில் நிறுத்தி, தென்னாடு செய்தியிதழையும் இயன்றளவு பிறமொழிக் கலப்பின்றி தனித்தமிழில் தர முயற்சிக்கிறோம். தொடர்பு: குளங்கரை ஒழுங்கை, கொக்குவில் கிழக்கு, கொக்குவில், யாழ்ப்பாணம். தொலைபேசி +94 21 221 2739 | மின்னஞ்சல் thennavan@thennadu.org
== தென்னாடு Miyafargoan Pade 08 ( 07 ஆம் பக்கத் தொடர்ச்சி ) இப்படி மாதம் தோறும் செய்யமுடியாததால் பன்னிரெண்டு மாதங்களுக்கும் சேர்த்து முதல் மாத பிறைநாளாகிய ( திதியாகிய ) தினத்தில் அல்லது அந்தியெட்டி நாளில் ஒன்றாக சேர்த்துக் கொடுப்பது தற்கால வழமையாக மாறிவிட்டது . அதன் பின்னர் ஒவ்வொரு ஆண்டும் அதே திங்கள் ( மாத ) அதே பிறைநாளில் ( திதியில் ) ஆண்டுபிறைநாளாக ( ஆண்டுத்திதியாக ) தமிழர் மரபில் கடைபிடிக்கப்படுகிறது . இப்படியான காலங்களில் அம்மாவை அல்லது அப்பாவை நினைத்து சிவனடியார்களுக்கு உணவளித்தல் பெரும்புண்ணியம் . யாவர்க்குமாம் உண்ணும்போது ஒருகைப்பிடி - திருமூலர் உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத்தோரே - மணிமேகலை பசித்தோர் முகம் பார் - பட்டினத்தடிகள் ஐயமிட்டுண் - ஒளவையார் . ஒருபிடி சோறுகொண்டு இட்டு உண்டு இரு - அலங்காரம் ஜீவகாருண்யம் வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் -திருவருட்பிரகாச வள்ளலார் பசித்தவனுக்கு அன்னந்தந்தால் உண்டவனுக்கு ஊன் குளிரும் உள்ளம் குளிரும் உணர்வு குளிரும் அத்துடன் உயிரும் குளிரும் . உயிர் குளிர்ந்தால் உயிருக்குயிரான சிவம் குளிரும் . யாவர்க்குமாம் இறைவற்கு ஒரு பச்சிலை யாவர்க்குமாம் பசுவுக்கு ஒரு வாயுறை யாவர்க்குமாம் உண்ணும்போது ஒரு கைப்பிடி யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே - திருமந்திரம் அத்துடன் சிவனடியாருக்கு அமுது கொடுத்தலை திருஞானசம்பந்தர் சுவாமிகள் பின்வருமாறு விபரிக்கின்றார் . இரண்டாம் திருமுறையில் திருஞானசம்பந்த சுவாமிகள் மயிலாப்பூரில் இறந்த பெண்ணின் சாம்பலில் இருந்து அந்தப்பெண்ணை உயிர் பெறச்செய்தார் . அதற்காக தமிழில் பாடிய திருப்பதிகம் பூம்பாவைத் திருப்பதிகம் ஆகும் . இப்படி பல அற்புதங்களை செய்யப் பாடப்பட்ட பதிகங்கள் தமிழிலே தான் பாடப்பட்டது என்பதை கவனத்தில் கொள்க . அதிலே அடியாருக்கு அமுது செய்வதன் மகத்துவத்தினையே முதலாவது பாடலாக பாடியுள்ளார் . மட்டிட்ட புன்னையங் கானன் மடமயிலைக் கட்டிட்டங் கொண்டான் கபாலீச் சரமமர்ந்தான் www மகாவிஷ்ணு சிவனை பூஜிக்கிருர் . சம் . Alon A ? THE இக்ரி வரம் தென்னாடு தென்புலத்தார் வழிபாடு ஒட்டிட்ட பண்பி னுருத்திர பல்கணத்தார்க் கட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய் இதனை பெரியபுராணத்தில் திருஞானசம்பந்த நாயனார் வரலாற்றில் தெய்வசேக்கிழார் மண்ணினில் பிறந்தார் பெறும் பயன் மதி சூடும் அண்ணலார் அடியார் தமை அமுது செய்வித்தல் கண்ணினால் அவர் நல்விழாப் பொலிவு கண்டு ஆர்தல் உண்மையாம் எனில் உலகர் முன் வருக என்று உரைப்பார் சிவபெருமானின் அடியார்களுக்கு அமுது செய்வித்தலும் சிவபிரானின் திருவிழாக்களைக் கண்டு களித்தலும் மனிதப்பிறவியில் கிடைத்தற்கரிய பேறு என்று கூறுகிறார் . அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு - திருக்குறள் என்பதற்கு அறவழியில் பொருளைத்தேடும் இவ்வுலகில் நாங்கள் அருளையும் தேடவேண்டும் . அதேவேளை இறந்த எங்கள் முன்னோருக்கு அப்பா அம்மா போன்றோருக்கு அவ்வுலகில் அருள் கிடைக்க இவுலகில் இருந்து ஆற்றும் கடனே பிறைநாள் ( திதி பிதிர் வழிபாடுகள் ) வழிபாடுகள் . இப்படியான வழிபாட்டினை நிச்சயமாக பிள்ளைகளாகிய சகோதரர்களாகிய நாங்கள் செய்யவேண்டும் . இது அவர்களுக்கு அவர்கள் சென்றபின் செய்யும் பணிவிடையாகும் . அத்துடன் இதன்வழி எங்களுக்கும் அருளும் பொருளும் ஆற்றலும் வந்து கிடைக்கின்றன . மறைமதி ( அமாவாசை ) தினத்தில் தென்புலத்தார் வழிபாடு மற்றும் பேரொடுக்கம் ( மகாலய அமாவாசை ) > வருடத்தில் சுறவத்திங்கள் மறைமதிப் பிறைநாள் ( தை அமாவாசை ) மற்றும் கடகத்திங்கள் மறைமதிப் பிறைநாள் ( ஆடி அமாவாசை ) முக்கியமான நாட்களாகும் . இத்தினத்தில் விரதமிருந்து நீர் நிலைகளில் அல்லது கிணற்றில் நீராடி இறந்தவர்களுக்கு வழிபாடு செய்வது சிறப்பானதாகும் . அத்துடன் எள்ளுடன் தர்ப்பை புல் சேர்த்து நீர் இறைத்து பிண்டம் வைக்கக்கூடியவர்கள் பிண்டம் வைத்து வழிபாடு செய்யலாம் . ( அண்டத்தில் இருப்பது பிண்டத்தில் இருக்கும் என்பார்கள் . தென்னாட்டு நிகழ்வுகளின் நிழல்கள் ஈசனைத் தேடிய தென்னாட்டுப் பயணம் திருமால் பூசைசெய்த திருக்கோவில் திருக்கச்சூர் நளித் திங்கள் 2020 அத்துடன் ஆண்டுபிறைநாளாக ( ஆண்டுத்திதியாக ) மற்றும் திங்கள் ( மாத ) பிறைநாளில் ( திதியில் ) தென்புலத்தார் வழிபாடு செய்ய முடியாதவர்கள் பலவருடங்களாக செய்யாமல் விட்டவர்களுக்கு ஒரு சிறப்பான செய்தி . கவலையைவிட்டு கன்னித்திங்கள் ( புரட்டாசி மாதம் ) வருகின்ற மறைமதிப் பிறைநாள் ( புரட்டாசி அமாவாசை ) தினத்தன்று இந்த வழிபாட்டினை செய்யலாம் . முன்னர் குறிப்பிட்டது போல கதிரவனின் தென்புலப்பயணம் தூ ய்மைப்படுத்துவதற்கானது ( ஒடுக்க காலம் ) ஆகவே இந்த மறைமதிப் பிறைநாள் மேலும் சிறப்பு பெறுகிறது . அத்துடன் இந்தக் காலப்பகுதியில் எம்முன்னோர்கள் பூமிக்கு வந்து எமது வழிபாட்டினை மற்றும் படையலை ஏற்கின்றனர் என்றும் கருதப்படுகிறது . அதற்கும் மேலாக அவர்களுக்கு அருளுாட்டும் வகையில் நாங்கள் வழிபாடுகள் சிவபூசை சிவமங்கல நீராட்டு சிவப்பெருவேள்வி அடியாருக்கு அமுது மற்றைய உயிரினங்களுக்கு உணவு பசுவுக்கு உணவு காக்கைக்கு உணவு படைத்தல் போன்றவற்றினை செய்து பலன்களை பெறலாம் . வையம் நீடுக மாமழை மன்னுக மெய் விரும்பிய அன்பர் விளங்குக சைவ நன்னெறி தான்தழைத் தோங்குக தெய்வ வெண்திரு நீறு சிறக்கவே - பெரியபுராணம் சிவனோபொக்கும் தெய்வம் தேடினும் இல்லை அவனோடு ஒப்பார் இங்கு யாவரும் இல்லை புவனம் கடந்தன்று பொன்னொளி மின்னும் தவனச் சடைமுடி தாமரையோனே - திருமந்திரம் இப்படிப்பட்ட இறைவனை முழுமுதலாகக் கொண்ட சைவம் அதன் வழி வந்த தமிழ் இரண்டையும் இரு கண்களாகப் போற்றி அதன்வழி நின்று பிறவிப் பெருங்கடலை நீந்திக் கடப்போம் . மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம் . தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ஒன்பானிரா வழிபாடுகள் கந்தன் கவின் அறுமை மற்றும் சூரன் பெருவாழ்வு CECKBERRELESTE CA தென்னாடு செந்தமிழாகம சிவமடம் மற்றும் சைவ மாணவர் சபையின் இரண்டாவது திங்கள் செய்தியிதழ் தென்னாடு சிவத்திரு . சிவஞானம் ஜெயானந்தன் அவர்களால் வடிவமைக்கப்பட்டு அச்சிடப்பட்டு நளித் திங்கள் வளர்பிறை 15 ம் நாள் ( 30-11-2020 திங்கட்கிழமை ) தென்னாட்டில் வெளியிடப்பட்டது . முதலாம் தமிழ்ச் சங்கம் கண்ட தென்னாடு என்பதை மனதில் நிறுத்தி தென்னாடு செய்தியிதழையும் இயன்றளவு பிறமொழிக் கலப்பின்றி தனித்தமிழில் தர முயற்சிக்கிறோம் . தொடர்பு : குளங்கரை ஒழுங்கை கொக்குவில் கிழக்கு கொக்குவில் யாழ்ப்பாணம் . தொலைபேசி +94 21 221 2739 | மின்னஞ்சல் thennavan@thennadu.org