தென்னாடு மார்கழித் திங்கள் இதழ் - 03

சிலை நல்லோரை மார்கழித் திங்கள், 2020 m தென்னாடு www.thennadu.org சிவத்திரு. செந்தமிழாதன், ஆசிரியர்-தென்னாட்டுத் திண்ணை, சைவ மாணவர் சபை (பதிவு - HA/4/JA/343) 0715588737, aathan@thennadu.org ஈழமண் காணட்டும் மார்கழிப் பெருவிழா! கொடுந் துயரம் தரும், கொரோனா நுண்மியின் பரவுகை யால்,நாமெல்லாம் நலிவுற்று,அகத்தில் அச்சமுற்று அல்லல் படுகின்றோம்! சமூக முற்றடக்கத்தால், வாழ்வாதாரம் இழந்தும், வறுமைப்பட்டும் எம் மண்ணில் பல அன்றாடக் கூலிகள் பாதிக்கப்பட்டிருப்பதை நாம் நாளும் காண்கின்றோம். வாழ்வியல் சடங்குகளில் எல்லாம் உறவுகள் கூட முடியாத துயரமும், ஆலயங் களில் கூட மட்டுப்படுத்தப்பட்ட அடியவர்களை உள்வாங்குவதுமாக, கூறமுடியாத அளவுக்கு இந்த வாழ்க்கை மீது வெறுப்பை உமிழ்ந்து போகிறது. சைவத் தமிழர்களால் இந்த நிலையைத் திடீரென ஏற்றுக் கொள்ள முடியாது தான்! நாளெல்லாம் விழாக்களையும், மாதங்கள் தோறும் ஊர்க்கூடும் நிகழ்வுகளையும் நடாத்தி, உலக கலாசாரத்தின் உயர் புள்ளியில் வரலாறு பொதித்த, செறிந்த இலக்கியச் சான்றுகளும், இணையில்லாப் பெருங்காப்பிய ஆதாரங்களும் கொண்டவர்கள் அல்லவா நாம்? எங்கள் வாழ்வியல் முறைகளும், வழிபாட்டுக் கோலங்களும், முதலில் நாம் செழிப்புற இந்த மண்ணில் வாழ் வதற்கான வழிகளையே எமக்குச் சொல்லித் தருகின்றன. சுத்தமும் சுகாதாரமும் நல் ஒழுக்கமும், எங்கள் வாழ்வியலில் சடங்குகளிலும், விழாக்களிலும் குறியீடுகளாகக் காட்டப்பட்டன, சட்டங்ககளாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டன... அவற்றை மறந்ததால் தான் இன்று முழு உலகமும் இடர்படுகின்றது. இந்த நிலையில், வருட ஆரம்பத் திலேயே தொடங்கிய இப்பெருந்துயர் நீண்டு நீண்டு இந்த மார்கழி வரை தன்னை நிலைப்படுத்தி எம்மைத்துயர்படுத்துகின்றது! மார்கழி பிறந்து விட்டது! சைவத் தமிழர்கள் சிலர் பிற சமயத்தவர்கள் பண்டிகைகளை, பொதுவென ஏற்றுத் தம் வீடுகளை அலங்கரிக்கின்றனர், சிலரோ ஆண்டிறுதி விடுமுறை கிடைக்கும் என்று புலம்பெயர் தேசங்களில் புழகாங்கிதம் அடைகின்றனர். இன்னும் சிலரோ வருட நிறைவு சிறப்புச் சம்பளச் சலுகைக்காக காத்திருக்கின்றனர். ஆனால் மார்கழியின் மாண்பையும் மகத்துவத்தையும் யாரும் பேசுவதாக இல்லை! இந்தப் பிரபஞ்சத்தில் புவி சார்ந்து, சூரியனின் உத்தராயணம் என்று வடமொழி கூறும், வடதிசை நகர்வு தொடங்கவும், தட்சணாயனம் என்று வடமொழி கூறும்,தென்திசை நகர்வு நிறைவுறவும் இடைப்பட்ட, சந்திக் காலமாக இன்னும் குறிப்பாக, இறை வாழிபாட்டுக்கு உகந்த காலமாக இந்த மார்கழி பிறந்துள்ளது! தில்லையில் கூத்தனாகிய நடராசர், ஆதிரைநாள் திருக்காட்சி காட்டும், வைகுண்டத்திலே சுவர்க்க வாசல் திறந்து திருமால் தன் திருக்கோலம் காட்டும் புண்ணிய மாதம் இந்த மார்கழி மாதம்! எப்படி ஒரு நாளில் இருள் நீங்கி ஒளி பிறக்கும், இருளும் ஒளியும் கலந்த, அவையிரண்டும் சந்திக்கும் சந்திக்காலத்தில், இறைவனுக்கு பூசை நடைபெறுகிறதோ, அங்கனம், இந்த மார்கழி மாதம் முழுதும், வழிபாடுகளும், நல்லதைச் செய்யும், அன்னதானங்களும், அறிவு பெருகும் பக்தி உரைகளும், இறைவன் மகிழும் இன்தமிழ் வேள்விகளும், இசை விழாக்களும் நடாத்தப்பட வேண்டும்! தேவர்களும், அசுரர்களும், பாற்கடலைக் கடைந்தது இந்த மார்கழியில் என்பதை மனதுள் நிறுத்துவோம்! ஆலாலகண்டனாகிய ஆடல்வல்லான், பொங்கி வந்த அமுதத்தை அடியவர்க்கு வழங்கி, சீறிவந்த, கொடு விடத்தை தனதாக்கிகொண்ட இந்த மார்கழி மாதத்தில் நாம் செய்யும் நற் செயல்களில் நாம் அறியாமல் உருவாகும் தீவினைகளை இறைவன் தனதாக்கிக் கொள்வான் என்ற நம்பிக்கை நம்மில் உண்டாகட்டும்! அன்பான சைவத் தமிழ் உறவுகளே, நம்மிடையேயும் தமிழாகிய ஒரு பாற்கடல் தேங்கிக் கிடக்கிறது! அதன் பெரும் பிரிவுகளான, இயல், இசை நாடகம் அலைகளென எழுந்து சிறக்கிறது! அந்தத் தமிழ் கடலை ஊர்கூடிக் கடைவோம்! தமிழகத்தில் பல்வேறு மாநிலங்களிலும் நடைபெறும், மார்கழிப் பெருவிழாவை ஈழமண்ணும் காணட்டும்! முத்தமிழால், எங்கள் முற்றமெல்லாம் சிறக்க, இளைய தலைமுறை இந்த இறைமாதத்தின் பெருஞ்சிறப்பை உணர, எம் இருப்புக்களைக் காக்க, தம் பொறுப்புக்களையுணர்ந்து, எம் சைவத் தமிழ் உலகின் பெரியவர்கள் மார்கழிப் பெருவிழாக் காண வழி செய்வார்களாயின் வாழும் தலைமுறையும் வரும் தலைமுறையும் வாழ்த்தும்! தென்னாடு பள்ளி நிறுவுனர் சிவத்திரு ச.ஏழூர்.இராசரத்தினம் STO192: ஏழைப்பிள்ளைகளுக்கு உணவில்லை, உடையில்லை, கல்விவசதியில்லை. இந்த இல்லாமைகளைக் களைய எழுந்த பெருமனம் படைத்த ஏழூரர் உணவுகொடுத்து, உடை கொடுத்துக், கல்வியும் கொடுத்த நிறுவனம் தான் எமது பாடசாலை. தான் பெருஞ் செல்வராயில்லாத போதும் இல்லையென்னாத பொன்மனம் படைத்தவராக அவர் இருந்தார். வசதி படைத்தவர்களை நாடிச் சென்று அவர்களையும் வள்ளல்களாக்கி அறப் பணியாகப் பாடசாலையை வளர்த்தார். தனது சொந்தக்காணி 28 பரப்பையும் பாடசாலைக்கு நல்கியதோடு மட்டுமன்றிப் பாடசாலைக்கு நிரந்தரக்கட்டிடம் அமைக்கப்பட்டபோது அதற்கு ஓடு போடுவதற்கு நிதி தேவைப்பட்டபோது தன்மனை யாளின் மாங்கல்யத்தையே நல்கினாரென்றால் அவரது வள்ளன்மைக்கு நிகரேது. தானும் ஆசிரியராயிருந்து கற்பித்ததோடு முகாமையாளராயும் இருந்தார். சைவசமய மாணவரின் கல்வி வளர்ச்சிக்கு ஊற்றுக்கண்ணாயிருந்த சைவவித்தியா விருத்திச் சங்கம், இப்பாடசாலையை உதவி நன்கொடை பெறும் பாடசாலையாகப் பதிவு செய்து கைகொடுத்தது. ஏழூர் இராசரத்தினம் தொடங்கிய இப்பாடசாலைக்கு இந்து போட் இராசரத்தினம் உதவிக்கரம் நீட்டினார். இரட்டையர்கள் என அந்நாளிற் போற்றப்பட்ட இராசரத்தினங்களின் அரவணைப்பில் மெய்கண்டான் வீறுநடை போட்டு வளர்ந்தது. இப்பாடசாலை வரலாற்றில் துன்னாலை ச. சுப் பையா அவர்கள் அதிபராயிருந்தகாலம் பொற்காலம் எனப் போற்றப்படுகிறது. எம்போன்ற பலநூறுபேரை இந்த மாநிலம் பயனுறவாழ உருவாக்கிய பெருமை அவருக்குண்டு. திங்கள் ஒரு பள்ளி வலிகாமம் தென்மேற்கின் சித்தாந்த விழுது இளவாலை மெய்கண்டான் மகாவித்தியாலயம் அபிவிருத்திகளை மேற்கொண்டார். முன்னோர் நல்கிய உழைப்பாகிய உரத்தின் துணைக்கொண்டு பாடசாலை வேகமாக வளர்ந்தது. பௌதிக வள அபிவிருத்தி, கல்வி அபிவிருத்தி, கலை, விளையாட்டு முதலாம் இணைப்பாட அபிவிருத்தி ஆகிய பன்முக வளர்ச்சி ஏற்பட்டது. பல்வேறு போட்டிகளிலும் பங்கு பற்றிப்பாடசாலை வெற்றிகளை ஈட்டி நாற்றிசையும் பெருமை பெற்றது. இப்பாடசாலை 1922ஆம் ஆண்டு வள்ளல் ஏழூர் இராசரத்தினம் அவர்களால், அவ்வேளையில் இளவாலை வடக்கில் வாழ்ந்த நன்மனம் படைத்த பல பெரியோரின் துணை கொண்டு நிறுவப்பட்டது. அந்நியர் ஆட்சிக் காலமாகிய அந்நாளிற் பணவசதி படைத்தவர்கள் மட்டுமே கல்வி பெறமுடிந்தது, கிறீஸ்தவ மதத்தைத் தழுவவிரும்பியோர்க்கும் கல்வி வசதி கிடைத்தது. ஏழை மக்கள் குறிப்பாகச் சைவசமய ஏழைப் பிள்ளைகள் கல்வி வாய்ப்பின்றி அலைவதை இருபத்து நாலுவயது இளைஞரான ஏழூரரின் உள்ளம் பொறுக்கவில்லை. "எல்லார்க்கும் கல்வி" என்ற கல்வித்தத்துவம், இந்நாட்டில் இலவசக்கல்வி நடைமுறைக்கு வந்து பலதலைமுறைகள் கழிந்தபின் கூட இன்றும் அழகியதத்துவமாகச், சொல்வடிவில் இருக்கின்றதே தவிரச் செயல்வடிவு பெறவில்லை. இன்றும் பணவசதிபடைத்த பிள்ளைகள்தான் தாம் விரும்பிய பாடசாலையில் அனுமதி பெற முடிகிறது. பிள்ளையின் முன்னாற் பணம் போனால் தான் அனுமதி கிடைக்கும் நிலைதொடர்கிறது என்றால் 75 ஆண்டுகளுக்கு முன்பு நிலைமை எப்படி இருந்திருக்கும் என்பதைக்கற்பனை செய்து பார்க்கவேண்டும். தொடர்ந்து அதிபர்களாக வந்தவர்களில் வித்துவான் வ. செல்லையா அவர்களும் திரு. மு. சிவராசரத்தினம் ஆ.யு.அவர்களும் ஒளிமயமான எழுச்சிக்கு வழிவகுத்து, வளர்ச்சித்திட்டங்களை உருவாக்கிப் பாடசாலையை உறுதியுடன் முன்னெடுத்து மறுமலர்ச்சியை ஏற்படுத்தினர். 1974ல் அதிபரான சைவப்புலவர் சு.செல்லத்துரை 1998 வரை பல 03 தெ சைவப்புலவர். சு.செல்லத்துரை அதிபர் 1974-1998 எழுபதுகளின் பிற்பகுதியிலும் எண்பதுகளிலும் பாடசாலைபெற்றவளர்ச்சி குறிப்பிடக்கூடிய பெருமைக்குரியது. இதற்கு உதவியோரில் அந்நாள் வட்டாரக்கல்வி அதிகாரி திரு. பொ. சிவஞானசுந்தரம், கிராம சேவையாளர் க.க.வேலாயுதபிள்ளை பாடசாலை அபிவிருத்திச் சங்கச் செயலாளர்களாயிருந்த திரு. மா. மார்க்கண்டு, திரு.சா. செல்லையா, திரு. சி. அப்புத்துரை முதலானவர்களின் வழிகாட்டலும் பங்களிப்பும் போற்றுதற்குரியன. 1980 மகாவித்தியாலயமாக தரமுயர்த்தப்பட்டது மற்றும் உயர்தர கலை வகுப்பும் ஆரம்பிக்கப்பட்டது. அத்துடன் மாடிக்கட்டிடம், விளையாட்டரங்கு, திறந்த வெளி அரங்கு, சிறுவர் பூங்கா அமைக்கப் பட்டன. "எல்லார்க்கும் கல்வி"எனும் இலட்சியமும் "வாழக்கல்மின்" எனும் மகுடவாசகமும், இல்லாதோர்க்கு உணவும், உடையும் கொடுத்துக் கல்வி புகட்ட வேண்டும் எனும் கொள்கையும், சாதிசமய வர்க்கபேதமின்றிக் கல்வி என எவர் வந்தாலும் அவரை ஆதரித்துக் கல்வி வழங்கும் பண்பும் இன்று வரை தொடர்ந்து உயிரான கொள்கையாகக் கடைப் பிடிக்கப்பட்டு வருகிறது. பாடசாலை, சமூகத்தின் பண்பாட்டுமையம் என்பதற்கிணங்கச் சமூகப் பயன்பாடுகளுக்கு சமூக மேம்பாட்டுக்கு இப்பாடசாலை அளப்பரிய சேவை செய்து வருகிறது. போர் நெருக்கீடுகளால் மக்கள் இடம் பெயர்ந்த காலகட்டங்களில், இது நலனோம்பு நிலையமாகவும், வைத்திய நிலையமாகவும், கூட்டுறவுச் சங்கக்கடைகள் இயங்குவதற்குரிய இடமாகவும், அரசு அலுவலகங்கள் இயங்குவதற்குரிய இடமாகவும், எண்ணில்லாத இடம் பெயர்ந்த மாணவர் கல்வி பயில்வதற்குரிய இடமாகவும் விளங்கி வந்துள்ளது. ஒருபாடசாலையின் உயர்வுக்கு உண்மையான உழைப்பாளிகள் ஆசிரியர்களே. ஆசிரியர்களின் தியாகசேவையும், பற்றுறுதியும் எனது பாடசாலை எனும் அயராத ஆர்வமும், சுயதிருப்திகாணும் செயல் திறனுமே மெய்கண்டானை மெய்யாக உயர்த்தின. எழுபது எண்பதுகளிற் கடமையாற்றிய அத்தனை ஆசிரியர்களுக்கும் இந்தப்பெருமையிற் பங்குண்டு. நீண்டகாலம் தியாக சிந்தையுடன் பணிபுரிந்தோர் முதல்நிலையில் வைத்துப் போற்றப்பட வேண்டிய வர்களே! தொடர்ந்து இங்கு கல்வி கற்பித்த ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் முன்னோர்வழிநின்று போற்றுவதற்குரிய சேவை செய்துள்ளனர். பாடசாலை இடம்பெயர்ந்து பண்டத்தரிப்பிலும் மானிப்பாயிலும் இயங்கிய வேளையில் எமது ஆசிரியர்கள் தமது இழப்புகளையும் பொருட்படுத்தாமல், பாடசாலையைத் தளரவிடாமற் செய்த சேவை வரலாற்றுப்பெருமைமிக்கது. வலிகாம இடம் பெயர்வின் பின் பல ஆசிரியர்கள் வன்னிக்கும், பிறமாவட்டங்களுக்கும் இடம் பெயர்ந்ததால் உறுதியான ஆசிரிய அணி நிலைகுலைந்தது. (04ஆம் பக்கம் பார்க்க) தென்னாடு செந்தமிழாகம சிவமடம் குளங்கரை வீதி, கொக்குவில் கிழக்கு, கொக்குவில், யாழ்ப்பாணம். மின்னஞ்சல் : aathan@thennadu.org இப்பகுதியில் உங்கள் பாடசாலையின் வரலாறு இடம்பெறவேண்டுமாயின் உங்கள் பாடசாலை அல்லது கல்லூரி குறித்து 350 சொற்களுக்கு மேற்படாமல் எழுதி எமக்கு அனுப்பி வையுங்கள். அனுப்ப வேண்டிய முகவரி
சிலை நல்லோரை மார்கழித் திங்கள் 2020 m தென்னாடு www.thennadu.org சிவத்திரு . செந்தமிழாதன் ஆசிரியர் - தென்னாட்டுத் திண்ணை சைவ மாணவர் சபை ( பதிவு - HA / 4 / JA / 343 ) 0715588737 aathan@thennadu.org ஈழமண் காணட்டும் மார்கழிப் பெருவிழா ! கொடுந் துயரம் தரும் கொரோனா நுண்மியின் பரவுகை யால் நாமெல்லாம் நலிவுற்று அகத்தில் அச்சமுற்று அல்லல் படுகின்றோம் ! சமூக முற்றடக்கத்தால் வாழ்வாதாரம் இழந்தும் வறுமைப்பட்டும் எம் மண்ணில் பல அன்றாடக் கூலிகள் பாதிக்கப்பட்டிருப்பதை நாம் நாளும் காண்கின்றோம் . வாழ்வியல் சடங்குகளில் எல்லாம் உறவுகள் கூட முடியாத துயரமும் ஆலயங் களில் கூட மட்டுப்படுத்தப்பட்ட அடியவர்களை உள்வாங்குவதுமாக கூறமுடியாத அளவுக்கு இந்த வாழ்க்கை மீது வெறுப்பை உமிழ்ந்து போகிறது . சைவத் தமிழர்களால் இந்த நிலையைத் திடீரென ஏற்றுக் கொள்ள முடியாது தான் ! நாளெல்லாம் விழாக்களையும் மாதங்கள் தோறும் ஊர்க்கூடும் நிகழ்வுகளையும் நடாத்தி உலக கலாசாரத்தின் உயர் புள்ளியில் வரலாறு பொதித்த செறிந்த இலக்கியச் சான்றுகளும் இணையில்லாப் பெருங்காப்பிய ஆதாரங்களும் கொண்டவர்கள் அல்லவா நாம் ? எங்கள் வாழ்வியல் முறைகளும் வழிபாட்டுக் கோலங்களும் முதலில் நாம் செழிப்புற இந்த மண்ணில் வாழ் வதற்கான வழிகளையே எமக்குச் சொல்லித் தருகின்றன . சுத்தமும் சுகாதாரமும் நல் ஒழுக்கமும் எங்கள் வாழ்வியலில் சடங்குகளிலும் விழாக்களிலும் குறியீடுகளாகக் காட்டப்பட்டன சட்டங்ககளாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டன ... அவற்றை மறந்ததால் தான் இன்று முழு உலகமும் இடர்படுகின்றது . இந்த நிலையில் வருட ஆரம்பத் திலேயே தொடங்கிய இப்பெருந்துயர் நீண்டு நீண்டு இந்த மார்கழி வரை தன்னை நிலைப்படுத்தி எம்மைத்துயர்படுத்துகின்றது ! மார்கழி பிறந்து விட்டது ! சைவத் தமிழர்கள் சிலர் பிற சமயத்தவர்கள் பண்டிகைகளை பொதுவென ஏற்றுத் தம் வீடுகளை அலங்கரிக்கின்றனர் சிலரோ ஆண்டிறுதி விடுமுறை கிடைக்கும் என்று புலம்பெயர் தேசங்களில் புழகாங்கிதம் அடைகின்றனர் . இன்னும் சிலரோ வருட நிறைவு சிறப்புச் சம்பளச் சலுகைக்காக காத்திருக்கின்றனர் . ஆனால் மார்கழியின் மாண்பையும் மகத்துவத்தையும் யாரும் பேசுவதாக இல்லை ! இந்தப் பிரபஞ்சத்தில் புவி சார்ந்து சூரியனின் உத்தராயணம் என்று வடமொழி கூறும் வடதிசை நகர்வு தொடங்கவும் தட்சணாயனம் என்று வடமொழி கூறும் தென்திசை நகர்வு நிறைவுறவும் இடைப்பட்ட சந்திக் காலமாக இன்னும் குறிப்பாக இறை வாழிபாட்டுக்கு உகந்த காலமாக இந்த மார்கழி பிறந்துள்ளது ! தில்லையில் கூத்தனாகிய நடராசர் ஆதிரைநாள் திருக்காட்சி காட்டும் வைகுண்டத்திலே சுவர்க்க வாசல் திறந்து திருமால் தன் திருக்கோலம் காட்டும் புண்ணிய மாதம் இந்த மார்கழி மாதம் ! எப்படி ஒரு நாளில் இருள் நீங்கி ஒளி பிறக்கும் இருளும் ஒளியும் கலந்த அவையிரண்டும் சந்திக்கும் சந்திக்காலத்தில் இறைவனுக்கு பூசை நடைபெறுகிறதோ அங்கனம் இந்த மார்கழி மாதம் முழுதும் வழிபாடுகளும் நல்லதைச் செய்யும் அன்னதானங்களும் அறிவு பெருகும் பக்தி உரைகளும் இறைவன் மகிழும் இன்தமிழ் வேள்விகளும் இசை விழாக்களும் நடாத்தப்பட வேண்டும் ! தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தது இந்த மார்கழியில் என்பதை மனதுள் நிறுத்துவோம் ! ஆலாலகண்டனாகிய ஆடல்வல்லான் பொங்கி வந்த அமுதத்தை அடியவர்க்கு வழங்கி சீறிவந்த கொடு விடத்தை தனதாக்கிகொண்ட இந்த மார்கழி மாதத்தில் நாம் செய்யும் நற் செயல்களில் நாம் அறியாமல் உருவாகும் தீவினைகளை இறைவன் தனதாக்கிக் கொள்வான் என்ற நம்பிக்கை நம்மில் உண்டாகட்டும் ! அன்பான சைவத் தமிழ் உறவுகளே நம்மிடையேயும் தமிழாகிய ஒரு பாற்கடல் தேங்கிக் கிடக்கிறது ! அதன் பெரும் பிரிவுகளான இயல் இசை நாடகம் அலைகளென எழுந்து சிறக்கிறது ! அந்தத் தமிழ் கடலை ஊர்கூடிக் கடைவோம் ! தமிழகத்தில் பல்வேறு மாநிலங்களிலும் நடைபெறும் மார்கழிப் பெருவிழாவை ஈழமண்ணும் காணட்டும் ! முத்தமிழால் எங்கள் முற்றமெல்லாம் சிறக்க இளைய தலைமுறை இந்த இறைமாதத்தின் பெருஞ்சிறப்பை உணர எம் இருப்புக்களைக் காக்க தம் பொறுப்புக்களையுணர்ந்து எம் சைவத் தமிழ் உலகின் பெரியவர்கள் மார்கழிப் பெருவிழாக் காண வழி செய்வார்களாயின் வாழும் தலைமுறையும் வரும் தலைமுறையும் வாழ்த்தும் ! தென்னாடு பள்ளி நிறுவுனர் சிவத்திரு ச.ஏழூர்.இராசரத்தினம் STO192 : ஏழைப்பிள்ளைகளுக்கு உணவில்லை உடையில்லை கல்விவசதியில்லை . இந்த இல்லாமைகளைக் களைய எழுந்த பெருமனம் படைத்த ஏழூரர் உணவுகொடுத்து உடை கொடுத்துக் கல்வியும் கொடுத்த நிறுவனம் தான் எமது பாடசாலை . தான் பெருஞ் செல்வராயில்லாத போதும் இல்லையென்னாத பொன்மனம் படைத்தவராக அவர் இருந்தார் . வசதி படைத்தவர்களை நாடிச் சென்று அவர்களையும் வள்ளல்களாக்கி அறப் பணியாகப் பாடசாலையை வளர்த்தார் . தனது சொந்தக்காணி 28 பரப்பையும் பாடசாலைக்கு நல்கியதோடு மட்டுமன்றிப் பாடசாலைக்கு நிரந்தரக்கட்டிடம் அமைக்கப்பட்டபோது அதற்கு ஓடு போடுவதற்கு நிதி தேவைப்பட்டபோது தன்மனை யாளின் மாங்கல்யத்தையே நல்கினாரென்றால் அவரது வள்ளன்மைக்கு நிகரேது . தானும் ஆசிரியராயிருந்து கற்பித்ததோடு முகாமையாளராயும் இருந்தார் . சைவசமய மாணவரின் கல்வி வளர்ச்சிக்கு ஊற்றுக்கண்ணாயிருந்த சைவவித்தியா விருத்திச் சங்கம் இப்பாடசாலையை உதவி நன்கொடை பெறும் பாடசாலையாகப் பதிவு செய்து கைகொடுத்தது . ஏழூர் இராசரத்தினம் தொடங்கிய இப்பாடசாலைக்கு இந்து போட் இராசரத்தினம் உதவிக்கரம் நீட்டினார் . இரட்டையர்கள் என அந்நாளிற் போற்றப்பட்ட இராசரத்தினங்களின் அரவணைப்பில் மெய்கண்டான் வீறுநடை போட்டு வளர்ந்தது . இப்பாடசாலை வரலாற்றில் துன்னாலை . சுப் பையா அவர்கள் அதிபராயிருந்தகாலம் பொற்காலம் எனப் போற்றப்படுகிறது . எம்போன்ற பலநூறுபேரை இந்த மாநிலம் பயனுறவாழ உருவாக்கிய பெருமை அவருக்குண்டு . திங்கள் ஒரு பள்ளி வலிகாமம் தென்மேற்கின் சித்தாந்த விழுது இளவாலை மெய்கண்டான் மகாவித்தியாலயம் அபிவிருத்திகளை மேற்கொண்டார் . முன்னோர் நல்கிய உழைப்பாகிய உரத்தின் துணைக்கொண்டு பாடசாலை வேகமாக வளர்ந்தது . பௌதிக வள அபிவிருத்தி கல்வி அபிவிருத்தி கலை விளையாட்டு முதலாம் இணைப்பாட அபிவிருத்தி ஆகிய பன்முக வளர்ச்சி ஏற்பட்டது . பல்வேறு போட்டிகளிலும் பங்கு பற்றிப்பாடசாலை வெற்றிகளை ஈட்டி நாற்றிசையும் பெருமை பெற்றது . இப்பாடசாலை 1922 ஆம் ஆண்டு வள்ளல் ஏழூர் இராசரத்தினம் அவர்களால் அவ்வேளையில் இளவாலை வடக்கில் வாழ்ந்த நன்மனம் படைத்த பல பெரியோரின் துணை கொண்டு நிறுவப்பட்டது . அந்நியர் ஆட்சிக் காலமாகிய அந்நாளிற் பணவசதி படைத்தவர்கள் மட்டுமே கல்வி பெறமுடிந்தது கிறீஸ்தவ மதத்தைத் தழுவவிரும்பியோர்க்கும் கல்வி வசதி கிடைத்தது . ஏழை மக்கள் குறிப்பாகச் சைவசமய ஏழைப் பிள்ளைகள் கல்வி வாய்ப்பின்றி அலைவதை இருபத்து நாலுவயது இளைஞரான ஏழூரரின் உள்ளம் பொறுக்கவில்லை . எல்லார்க்கும் கல்வி என்ற கல்வித்தத்துவம் இந்நாட்டில் இலவசக்கல்வி நடைமுறைக்கு வந்து பலதலைமுறைகள் கழிந்தபின் கூட இன்றும் அழகியதத்துவமாகச் சொல்வடிவில் இருக்கின்றதே தவிரச் செயல்வடிவு பெறவில்லை . இன்றும் பணவசதிபடைத்த பிள்ளைகள்தான் தாம் விரும்பிய பாடசாலையில் அனுமதி பெற முடிகிறது . பிள்ளையின் முன்னாற் பணம் போனால் தான் அனுமதி கிடைக்கும் நிலைதொடர்கிறது என்றால் 75 ஆண்டுகளுக்கு முன்பு நிலைமை எப்படி இருந்திருக்கும் என்பதைக்கற்பனை செய்து பார்க்கவேண்டும் . தொடர்ந்து அதிபர்களாக வந்தவர்களில் வித்துவான் . செல்லையா அவர்களும் திரு . மு . சிவராசரத்தினம் ஆ.யு.அவர்களும் ஒளிமயமான எழுச்சிக்கு வழிவகுத்து வளர்ச்சித்திட்டங்களை உருவாக்கிப் பாடசாலையை உறுதியுடன் முன்னெடுத்து மறுமலர்ச்சியை ஏற்படுத்தினர் . 1974 ல் அதிபரான சைவப்புலவர் சு.செல்லத்துரை 1998 வரை பல 03 தெ சைவப்புலவர் . சு.செல்லத்துரை அதிபர் 1974-1998 எழுபதுகளின் பிற்பகுதியிலும் எண்பதுகளிலும் பாடசாலைபெற்றவளர்ச்சி குறிப்பிடக்கூடிய பெருமைக்குரியது . இதற்கு உதவியோரில் அந்நாள் வட்டாரக்கல்வி அதிகாரி திரு . பொ . சிவஞானசுந்தரம் கிராம சேவையாளர் க.க.வேலாயுதபிள்ளை பாடசாலை அபிவிருத்திச் சங்கச் செயலாளர்களாயிருந்த திரு . மா . மார்க்கண்டு திரு.சா. செல்லையா திரு . சி . அப்புத்துரை முதலானவர்களின் வழிகாட்டலும் பங்களிப்பும் போற்றுதற்குரியன . 1980 மகாவித்தியாலயமாக தரமுயர்த்தப்பட்டது மற்றும் உயர்தர கலை வகுப்பும் ஆரம்பிக்கப்பட்டது . அத்துடன் மாடிக்கட்டிடம் விளையாட்டரங்கு திறந்த வெளி அரங்கு சிறுவர் பூங்கா அமைக்கப் பட்டன . எல்லார்க்கும் கல்வி எனும் இலட்சியமும் வாழக்கல்மின் எனும் மகுடவாசகமும் இல்லாதோர்க்கு உணவும் உடையும் கொடுத்துக் கல்வி புகட்ட வேண்டும் எனும் கொள்கையும் சாதிசமய வர்க்கபேதமின்றிக் கல்வி என எவர் வந்தாலும் அவரை ஆதரித்துக் கல்வி வழங்கும் பண்பும் இன்று வரை தொடர்ந்து உயிரான கொள்கையாகக் கடைப் பிடிக்கப்பட்டு வருகிறது . பாடசாலை சமூகத்தின் பண்பாட்டுமையம் என்பதற்கிணங்கச் சமூகப் பயன்பாடுகளுக்கு சமூக மேம்பாட்டுக்கு இப்பாடசாலை அளப்பரிய சேவை செய்து வருகிறது . போர் நெருக்கீடுகளால் மக்கள் இடம் பெயர்ந்த காலகட்டங்களில் இது நலனோம்பு நிலையமாகவும் வைத்திய நிலையமாகவும் கூட்டுறவுச் சங்கக்கடைகள் இயங்குவதற்குரிய இடமாகவும் அரசு அலுவலகங்கள் இயங்குவதற்குரிய இடமாகவும் எண்ணில்லாத இடம் பெயர்ந்த மாணவர் கல்வி பயில்வதற்குரிய இடமாகவும் விளங்கி வந்துள்ளது . ஒருபாடசாலையின் உயர்வுக்கு உண்மையான உழைப்பாளிகள் ஆசிரியர்களே . ஆசிரியர்களின் தியாகசேவையும் பற்றுறுதியும் எனது பாடசாலை எனும் அயராத ஆர்வமும் சுயதிருப்திகாணும் செயல் திறனுமே மெய்கண்டானை மெய்யாக உயர்த்தின . எழுபது எண்பதுகளிற் கடமையாற்றிய அத்தனை ஆசிரியர்களுக்கும் இந்தப்பெருமையிற் பங்குண்டு . நீண்டகாலம் தியாக சிந்தையுடன் பணிபுரிந்தோர் முதல்நிலையில் வைத்துப் போற்றப்பட வேண்டிய வர்களே ! தொடர்ந்து இங்கு கல்வி கற்பித்த ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் முன்னோர்வழிநின்று போற்றுவதற்குரிய சேவை செய்துள்ளனர் . பாடசாலை இடம்பெயர்ந்து பண்டத்தரிப்பிலும் மானிப்பாயிலும் இயங்கிய வேளையில் எமது ஆசிரியர்கள் தமது இழப்புகளையும் பொருட்படுத்தாமல் பாடசாலையைத் தளரவிடாமற் செய்த சேவை வரலாற்றுப்பெருமைமிக்கது . வலிகாம இடம் பெயர்வின் பின் பல ஆசிரியர்கள் வன்னிக்கும் பிறமாவட்டங்களுக்கும் இடம் பெயர்ந்ததால் உறுதியான ஆசிரிய அணி நிலைகுலைந்தது . ( 04 ஆம் பக்கம் பார்க்க ) தென்னாடு செந்தமிழாகம சிவமடம் குளங்கரை வீதி கொக்குவில் கிழக்கு கொக்குவில் யாழ்ப்பாணம் . மின்னஞ்சல் : aathan@thennadu.org இப்பகுதியில் உங்கள் பாடசாலையின் வரலாறு இடம்பெறவேண்டுமாயின் உங்கள் பாடசாலை அல்லது கல்லூரி குறித்து 350 சொற்களுக்கு மேற்படாமல் எழுதி எமக்கு அனுப்பி வையுங்கள் . அனுப்ப வேண்டிய முகவரி