தென்னாடு தைத் திங்கள் இதழ் - 04

சுறவம் நல்லோரை தைத் திங்கள், 2021 கலாநிதி சு.குணேஸ்வரன் (கடந்த மாதத் தொடர்சி) 1. வையை வரவும் வளமும் 'வளி பொரு மின்னொடு வான் இருள் பரப்பி விளிவு இன்று, கிளையொடு மேல் மலை முற்றி, தளி பொழி சாரல் ததர் மலர் தாஅய் ஒளி திகழ் உத்தி உருகெழு நாகம், அகரு வழை, ஞெமை, ஆரம், இனைய, தகரமும் ஞாழலும் தாரமும் தாங்கி நளி கடல் முன்னியது போலும், தீம் நீர் வளி வரல் வையை வரவு' (பரி. 12:1-8) பரிபாடல் வையைப் பாடல்களில் e நீர்ப்பண்பாடு என்று வையையில் கடல்போல் நீர் பெருகி வந்த காட்சி சொல்லப்படுகிறது. மண்ணிலுள்ள நீர் ஆவியாகி மேகமாகத் திரண்டு மழையாகப் பொழிகிறது. மின்னலும் இருளுமாக மாறிமாறித் தோன்றி சைய மலையில் பெய்த மழை வையை ஆற்றில் காற்றினால் உதிர்ந்த மலர்களைப் பரப்பியும் நாகம், அகில், சுரபுன்னை, ஞெமை, சந்தனம், ஆகிய மரங்கள் வருந்துமாறும் தகரம், ஞாழல், தேவதாரம் ஆகிய மரங்களைச் சாய்த்து அடித்துக்கொண்டு வந்தது. இவ்வாறு வருகின்ற வையையானது பெரிய கடல் பொங்கி வருவதைப்போல இருந்தது என புலவர் வையையின் வரவைக் குறிக்கின்றார். வையையாறு நறுமணத்தோடு ஓடி வருகின்றது. அந்த நறுமணம் நீர்ப்பூ, நிலப்பூ, கோட்டுப்பூ, கொடிப்பூ ஆகிய நால்வகைப்பூக்களையும் சுமந்து வருவதால் ஏற்பட்டது. அதுவே வையை ஆற்றின் பொதுநாற்றம் என பரிபாடல் குறிப்பிடுகிறது. இது எப்படியிருக்கிறது என்றால் மணப்பொருள் பலவற்றைக் கலந்து உருவாக்கப்படும் மணக்கலவை நூல்களில் சொல்லப்பட்ட விதிமுறையின்படி கலக்கப்பட்ட மணத்தைப்போல வையை ஓடுகிறது. அதில் நீராடும் ஆடவரும் மகளிரும் மேலும் நறுமணப்பொருட்களை தமது உடலில் பூசிக்கொண்டு நீராடுவதால், எல்லாம் சோர்ந்து புதிய மணத்தைப் பரப்பியது என்று கூறப்படுகிறது. இவ்வாறு வையை ஆற்றின் வரவு சொல்லப்படுகிறது. தென்னாடு ‘ஆடல் அறியா அரிவை போலவும் ஊடல் அறியா உவகையள் போலவும் வேண்டு வழி நடந்து, தாங்கு தடை பொருது, விதி ஆற்றான் ஆக்கிய மெய்க்கலவை போலப் பொது நாற்றம் உள்உள் கரந்து, புது நாற்றம் செய்கின்றே, செம்பூம் புனல் ' (பரி 7: 17-22) 2. நீராடுவோர் இயல்புகளும் நீர்ப்பண்பாடுகளும் வையையில் புதுவெள்ளம் வந்ததும் மக்கள் குதிரைகளிலும் யானைகளிலும் கோவேறு கழுதைகளிலும் பல்லாக்குகளிலும், மற்றும் நடந்தும் நீராடச் செல் கின்றனர். நோக்கில் உருவாக்கப்பட்டதே இந்தத் தண்ணீர் பீய்ச்சும் சடங்கு.ஆடு அல்லது மாட்டுத் தோலைப் பைபோல எடுத்த நான்கு புறமும் தைத்து ஒரு மூலையில் பீச்சாங்குழலைச் செருகி விடுவர். நீர் நிரம்பிய துருத்தியை அழுத்தும்போது பீய்ச்சாங்குழல் வழியாகத் தண்ணீர் விசையோடு வெளிவந்து நீர்த்தூவல் நிகழ்த்தும்........ புதுப்புனலாடச் செல்லும் மகளிர் எடுத்துவரும் பொருட்களும் தங்கள் ஆடவரை அணியச் செய்யும்....மதுரையில் வையையாற்றில் புதுப்புனல் வரும்போது ஆடை வகைகளும் கூறப்படுகின்றன. நீரில் விளையாடுவோரும், தம் தலைவரோடு ஊடல் கொள்ளும் நீராடச் செல்பவர்கள் இவ்வகை நீர்பாய்ச்சும் கருவிகளை வைத்து விளையாடுவதைப் பரிபாடல் இலக்கியம் பலபட எடுத்துரைக்கின்றது. இக்கருவிக்கு நீரெக்கி, தலைவியரும், முகைப்பருவத்து மகளிர் தாம் விரும்பும் சிவிறி, துருத்தி என்று பெயர். நீரை எக்கி வீசுவதாலும், சிவிறப் பரப்புவதாலும், துருத்தி அடிப்பதாலும் இக்கருவிக்கு இப்பெயர்கள் வந்தன.' (4) இவ்வாறாக வையையில் இடம்பெற்ற புனல் விளையாட்டில் பயன்படுத்த நீர் விளையாட்டுக்கருவிகள் பற்றிய குறிப்பு பரிபாடலிலேயே அதிகம் பதிவுசெய்யப்பட்டுள்ளது. காதலர் தம்மை வந்து சேருமாறு காத்திருத்தலும், காமவயப்பட்ட ஆடவரும் மகளிரும் ஊரார் பழி தூ ற்றுவர் என்று எண்ணி மறைந்து நிற்றலும் வாழைத் தண்டின்மேல் படுத்து விளையாடும் ஆடவரும், பந்து கவருவோரும், சிற்றில் விளையாடும் பெண்களிடம் சிறுசோற்றுக்கு கையேந்துதல், முதலானவையும் எடுத்துக்காட்டப்படுகின்றன. இவ்வாறு நீராடி தம் இல்லம் திரும்பும்போது ஆடியும் பாடியும் செல்கின்றனர். அவர்கள் செல்லும்போது மாடங்களில் இருந்து எழுந்த அகில் புகையும் வண்டுகளின் ரீங்காரமும் ஒன்று சேர்ந்தன. இவ்வாறு வையையில் இடம்பெறும் ஒன்பது பாடற்பகுதிகளும் தனித்தனியே வையையின் வரவையும் புனலாட்டத்தில் ஈடுபடும் மாந்தர்களின் இயல்புகளையும் எடுத்துக்காட்டுகின்றன. அதற்கு மேலாக ஆற்றில் நீராடும் பலதிறத்தவரும் வையை ஆற்றில் இடம்பெற்ற நீராட்டத்தில் குறிப்பாக மகளிரும் ஆடவரும் பல்வகை நறுமணப் நீர்விளையாட்டுக் கருவிகளை அக்கால மக்கள் பொடிகளை உடம்பில் பூசி நீராடுகின்றனர். பயன்படுத்திய செய்திகள் கிடைக்கின்றன. இவர்கள் அன்று போர்க்களத்திற்குக் கருவிகள் கொண்டு சென்றதுபோல பல கருவிகளையும் எடுத்துச் சென்றனர். அவற்றில் நீர் விளையாட்டுக்குரிய நெய் பூசப்பட்ட சிவிறி, வண்ணத்திரவம் நிரப்பி அல்லது குருதியைப்போன்ற அரக்கு நிறமுடைய நீரை அடைத்த நீரெக்கி, வாசனை நீர் அடைக்கப்பட்ட கொம்பு, மூங்கில் குழாய், வண்ணக்கலவைகளை நிரப்பி ஒருவர் மீது மற்றவர் வீசியெறியும் வட்டுக்கள் ஆகியன நீர்விளையாட்டுக்குரிய கருவிகளாகக் குறிக்கப்படுகின்றன. 05 நெய்ம்மாண்சிவிறியர் நீர் மணக்கோட்டினர் (பரி. 6:25) ‘நெய்த்தோர் நிற அரக்கின் நீரெக்கி (பரி. 10:12) ‘வண்ண நீர் கரந்த வட்டு விட்டு எறிவோரும் (பரி. 11) தெ இதன் இன்றைய நிலைப்பற்றிய கூற்று ஒன்றையும் இங்கு தொடர்புபடுத்திக் காட்டத்தக்கது. தொடர்புடையது. அழகர் மதுரைக்கு வரும் காலம் கோடைக்காலமாக இருப்பதால், கோடையைத் தணிக்கும் வானத்தில் இருந்து கங்கை ஆறு ஒழுகுவதுபோல வையை வானக்கங்கையை ஒத்து விளங்கியது எனவும் வள்ளல்தன்மைமிக்க பாண்டியனது ஈகைபோல வையையின் நீர்வரவு இருந்ததெனவும் வையையின் வரவு பாடப்படுகிறது. சையமலையில் உருவான வையை வையைக்கரைக்கண் இருந்த சிறப்பான நீராடுதுறையான திருமருதமுன்துறையிலே மக்கள் புகுந்து சிறப்பாக நீராடும் காட்சிகள் மிக விரிவாக விபரிக்கப்படுகின்றன. இவ்வாறு மலையிலே பிறந்த வையை நதி பண்டைக்காலத்தில் 'வையை மடுத்தாற் கடலென' (பரி 20:42) அடிகளின் ஊடாக கடலில் கலந்த காலம் இருந்ததென்பதை புலப்படுத்துகிறது. வையையின் வரவு மதுரையின் வளத்தின் குறியீடாகப் பார்க்கப் படுகின்றது. அது பலவாறாக விரிவடையக்கூடியது. மதுரையின் செழிப்பும் மக்களின் மகிழ்ச்சியுமாக அமைகின்றது. அது ஓடும் இடங்கள் எல்லாவற்றையும் 'முன்முறை செய் தவத்தின் இம்முறை இயைந்தேம் மறுமுறை அமையத்தும் இயைக நறுநீர் வையை நயத்தகு நிறையே’ (பரி 11:138–140) கல்வி கற்கத் தொடங்கும் இளம்புலவர் மை 'துருத்தியில் நீர் பீய்ச்சுதல் எனும் நிகழ்வு பல நூற் வளப்படுத்திக் கொண்டு செல்கின்றது. மற்றும் வழிபாட்டு றாண்டுகளாய் அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வோடு தடவப்பெற்ற சுவடிகளைக் கையிலேந்திப் பயிலும் மரபின் அடியாகவும் வையையின் வரவு குறிப் பிடப்படுகின்றது. மையாடல் பற்றிய செய்தியும் சொல்லப்படுகிறது. (07ஆம் பக்கம் பார்க்க) சங்ககால மகளிர் தங்கள் கூந்தலை அழகுபடுத்துதலை சங்க இலக்கியங்கள் குறிக்கின்றன. மகளிர் தங்கள் கூந்தலை ஐந்து வகையாக அழகுபடுத்துவர். அதனை ஐம்பால் என அழைப்பர். முடி (கூந்தலை உச்சியில் கூட்டி முடிதல்), கொண்டை (பக்கவாட்டில் முடிதல்), சுருள் (பின்னிச் செருகுதல்), குழல் (சுருட்டி முடிதல்) பனிச்சை (சடையாகப் பின்னுதல்) என்று குறிப்பிடுவர். பரிபாடலில் ‘கார்கொள் கூந்தல் கதுப்பு அமைப்போரும்' (பரி 12-15) என்ற பரிபாடல் அடியினூடாக கூந்தலைக் குழலாக முடிப்பதைக் கதுப்பு என்று குறிக்கின்றனர். நீர்ப்பண்பாடுகளில் வையையில் தைநீராடல் பற்றிக் குறிப்பிடப்படுகிறது. திருமணமாகாத கன்னிப்பெண்கள் தங்கள் தாயாருடன் சென்று சடங்குமுறைகளை அறிந்த மூத்த பார்ப்பணியர் கூறியபடி நீராடுதல் தைநீராடல் எனப்படும். இவ்வாறு நீராடினால் அவர்களின் வேண்டுதல் பலிக்கும் என்ற நம்பிக்கை இருந்தது. எனவேதான் இப்பிறவியில் நீராடக்கிடைத் தாங்கள் முற்பிறவியில் செய்த பலன் என்றும் மறுபிறவியிலும் இப்பேறு நிலைக்கவேண்டும் என்று வேண்டுகின்றனர். இதனையே
சுறவம் நல்லோரை தைத் திங்கள் 2021 கலாநிதி சு.குணேஸ்வரன் ( கடந்த மாதத் தொடர்சி ) 1. வையை வரவும் வளமும் ' வளி பொரு மின்னொடு வான் இருள் பரப்பி விளிவு இன்று கிளையொடு மேல் மலை முற்றி தளி பொழி சாரல் ததர் மலர் தாஅய் ஒளி திகழ் உத்தி உருகெழு நாகம் அகரு வழை ஞெமை ஆரம் இனைய தகரமும் ஞாழலும் தாரமும் தாங்கி நளி கடல் முன்னியது போலும் தீம் நீர் வளி வரல் வையை வரவு ' ( பரி . 12 : 1-8 ) பரிபாடல் வையைப் பாடல்களில் e நீர்ப்பண்பாடு என்று வையையில் கடல்போல் நீர் பெருகி வந்த காட்சி சொல்லப்படுகிறது . மண்ணிலுள்ள நீர் ஆவியாகி மேகமாகத் திரண்டு மழையாகப் பொழிகிறது . மின்னலும் இருளுமாக மாறிமாறித் தோன்றி சைய மலையில் பெய்த மழை வையை ஆற்றில் காற்றினால் உதிர்ந்த மலர்களைப் பரப்பியும் நாகம் அகில் சுரபுன்னை ஞெமை சந்தனம் ஆகிய மரங்கள் வருந்துமாறும் தகரம் ஞாழல் தேவதாரம் ஆகிய மரங்களைச் சாய்த்து அடித்துக்கொண்டு வந்தது . இவ்வாறு வருகின்ற வையையானது பெரிய கடல் பொங்கி வருவதைப்போல இருந்தது என புலவர் வையையின் வரவைக் குறிக்கின்றார் . வையையாறு நறுமணத்தோடு ஓடி வருகின்றது . அந்த நறுமணம் நீர்ப்பூ நிலப்பூ கோட்டுப்பூ கொடிப்பூ ஆகிய நால்வகைப்பூக்களையும் சுமந்து வருவதால் ஏற்பட்டது . அதுவே வையை ஆற்றின் பொதுநாற்றம் என பரிபாடல் குறிப்பிடுகிறது . இது எப்படியிருக்கிறது என்றால் மணப்பொருள் பலவற்றைக் கலந்து உருவாக்கப்படும் மணக்கலவை நூல்களில் சொல்லப்பட்ட விதிமுறையின்படி கலக்கப்பட்ட மணத்தைப்போல வையை ஓடுகிறது . அதில் நீராடும் ஆடவரும் மகளிரும் மேலும் நறுமணப்பொருட்களை தமது உடலில் பூசிக்கொண்டு நீராடுவதால் எல்லாம் சோர்ந்து புதிய மணத்தைப் பரப்பியது என்று கூறப்படுகிறது . இவ்வாறு வையை ஆற்றின் வரவு சொல்லப்படுகிறது . தென்னாடு ஆடல் அறியா அரிவை போலவும் ஊடல் அறியா உவகையள் போலவும் வேண்டு வழி நடந்து தாங்கு தடை பொருது விதி ஆற்றான் ஆக்கிய மெய்க்கலவை போலப் பொது நாற்றம் உள்உள் கரந்து புது நாற்றம் செய்கின்றே செம்பூம் புனல் ' ( பரி 7 : 17-22 ) 2. நீராடுவோர் இயல்புகளும் நீர்ப்பண்பாடுகளும் வையையில் புதுவெள்ளம் வந்ததும் மக்கள் குதிரைகளிலும் யானைகளிலும் கோவேறு கழுதைகளிலும் பல்லாக்குகளிலும் மற்றும் நடந்தும் நீராடச் செல் கின்றனர் . நோக்கில் உருவாக்கப்பட்டதே இந்தத் தண்ணீர் பீய்ச்சும் சடங்கு.ஆடு அல்லது மாட்டுத் தோலைப் பைபோல எடுத்த நான்கு புறமும் தைத்து ஒரு மூலையில் பீச்சாங்குழலைச் செருகி விடுவர் . நீர் நிரம்பிய துருத்தியை அழுத்தும்போது பீய்ச்சாங்குழல் வழியாகத் தண்ணீர் விசையோடு வெளிவந்து நீர்த்தூவல் நிகழ்த்தும் ........ புதுப்புனலாடச் செல்லும் மகளிர் எடுத்துவரும் பொருட்களும் தங்கள் ஆடவரை அணியச் செய்யும் .... மதுரையில் வையையாற்றில் புதுப்புனல் வரும்போது ஆடை வகைகளும் கூறப்படுகின்றன . நீரில் விளையாடுவோரும் தம் தலைவரோடு ஊடல் கொள்ளும் நீராடச் செல்பவர்கள் இவ்வகை நீர்பாய்ச்சும் கருவிகளை வைத்து விளையாடுவதைப் பரிபாடல் இலக்கியம் பலபட எடுத்துரைக்கின்றது . இக்கருவிக்கு நீரெக்கி தலைவியரும் முகைப்பருவத்து மகளிர் தாம் விரும்பும் சிவிறி துருத்தி என்று பெயர் . நீரை எக்கி வீசுவதாலும் சிவிறப் பரப்புவதாலும் துருத்தி அடிப்பதாலும் இக்கருவிக்கு இப்பெயர்கள் வந்தன . ' ( 4 ) இவ்வாறாக வையையில் இடம்பெற்ற புனல் விளையாட்டில் பயன்படுத்த நீர் விளையாட்டுக்கருவிகள் பற்றிய குறிப்பு பரிபாடலிலேயே அதிகம் பதிவுசெய்யப்பட்டுள்ளது . காதலர் தம்மை வந்து சேருமாறு காத்திருத்தலும் காமவயப்பட்ட ஆடவரும் மகளிரும் ஊரார் பழி தூ ற்றுவர் என்று எண்ணி மறைந்து நிற்றலும் வாழைத் தண்டின்மேல் படுத்து விளையாடும் ஆடவரும் பந்து கவருவோரும் சிற்றில் விளையாடும் பெண்களிடம் சிறுசோற்றுக்கு கையேந்துதல் முதலானவையும் எடுத்துக்காட்டப்படுகின்றன . இவ்வாறு நீராடி தம் இல்லம் திரும்பும்போது ஆடியும் பாடியும் செல்கின்றனர் . அவர்கள் செல்லும்போது மாடங்களில் இருந்து எழுந்த அகில் புகையும் வண்டுகளின் ரீங்காரமும் ஒன்று சேர்ந்தன . இவ்வாறு வையையில் இடம்பெறும் ஒன்பது பாடற்பகுதிகளும் தனித்தனியே வையையின் வரவையும் புனலாட்டத்தில் ஈடுபடும் மாந்தர்களின் இயல்புகளையும் எடுத்துக்காட்டுகின்றன . அதற்கு மேலாக ஆற்றில் நீராடும் பலதிறத்தவரும் வையை ஆற்றில் இடம்பெற்ற நீராட்டத்தில் குறிப்பாக மகளிரும் ஆடவரும் பல்வகை நறுமணப் நீர்விளையாட்டுக் கருவிகளை அக்கால மக்கள் பொடிகளை உடம்பில் பூசி நீராடுகின்றனர் . பயன்படுத்திய செய்திகள் கிடைக்கின்றன . இவர்கள் அன்று போர்க்களத்திற்குக் கருவிகள் கொண்டு சென்றதுபோல பல கருவிகளையும் எடுத்துச் சென்றனர் . அவற்றில் நீர் விளையாட்டுக்குரிய நெய் பூசப்பட்ட சிவிறி வண்ணத்திரவம் நிரப்பி அல்லது குருதியைப்போன்ற அரக்கு நிறமுடைய நீரை அடைத்த நீரெக்கி வாசனை நீர் அடைக்கப்பட்ட கொம்பு மூங்கில் குழாய் வண்ணக்கலவைகளை நிரப்பி ஒருவர் மீது மற்றவர் வீசியெறியும் வட்டுக்கள் ஆகியன நீர்விளையாட்டுக்குரிய கருவிகளாகக் குறிக்கப்படுகின்றன . 05 நெய்ம்மாண்சிவிறியர் நீர் மணக்கோட்டினர் ( பரி . 6:25 ) நெய்த்தோர் நிற அரக்கின் நீரெக்கி ( பரி . 10:12 ) வண்ண நீர் கரந்த வட்டு விட்டு எறிவோரும் ( பரி . 11 ) தெ இதன் இன்றைய நிலைப்பற்றிய கூற்று ஒன்றையும் இங்கு தொடர்புபடுத்திக் காட்டத்தக்கது . தொடர்புடையது . அழகர் மதுரைக்கு வரும் காலம் கோடைக்காலமாக இருப்பதால் கோடையைத் தணிக்கும் வானத்தில் இருந்து கங்கை ஆறு ஒழுகுவதுபோல வையை வானக்கங்கையை ஒத்து விளங்கியது எனவும் வள்ளல்தன்மைமிக்க பாண்டியனது ஈகைபோல வையையின் நீர்வரவு இருந்ததெனவும் வையையின் வரவு பாடப்படுகிறது . சையமலையில் உருவான வையை வையைக்கரைக்கண் இருந்த சிறப்பான நீராடுதுறையான திருமருதமுன்துறையிலே மக்கள் புகுந்து சிறப்பாக நீராடும் காட்சிகள் மிக விரிவாக விபரிக்கப்படுகின்றன . இவ்வாறு மலையிலே பிறந்த வையை நதி பண்டைக்காலத்தில் ' வையை மடுத்தாற் கடலென ' ( பரி 20:42 ) அடிகளின் ஊடாக கடலில் கலந்த காலம் இருந்ததென்பதை புலப்படுத்துகிறது . வையையின் வரவு மதுரையின் வளத்தின் குறியீடாகப் பார்க்கப் படுகின்றது . அது பலவாறாக விரிவடையக்கூடியது . மதுரையின் செழிப்பும் மக்களின் மகிழ்ச்சியுமாக அமைகின்றது . அது ஓடும் இடங்கள் எல்லாவற்றையும் ' முன்முறை செய் தவத்தின் இம்முறை இயைந்தேம் மறுமுறை அமையத்தும் இயைக நறுநீர் வையை நயத்தகு நிறையே ( பரி 11 : 138–140 ) கல்வி கற்கத் தொடங்கும் இளம்புலவர் மை ' துருத்தியில் நீர் பீய்ச்சுதல் எனும் நிகழ்வு பல நூற் வளப்படுத்திக் கொண்டு செல்கின்றது . மற்றும் வழிபாட்டு றாண்டுகளாய் அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வோடு தடவப்பெற்ற சுவடிகளைக் கையிலேந்திப் பயிலும் மரபின் அடியாகவும் வையையின் வரவு குறிப் பிடப்படுகின்றது . மையாடல் பற்றிய செய்தியும் சொல்லப்படுகிறது . ( 07 ஆம் பக்கம் பார்க்க ) சங்ககால மகளிர் தங்கள் கூந்தலை அழகுபடுத்துதலை சங்க இலக்கியங்கள் குறிக்கின்றன . மகளிர் தங்கள் கூந்தலை ஐந்து வகையாக அழகுபடுத்துவர் . அதனை ஐம்பால் என அழைப்பர் . முடி ( கூந்தலை உச்சியில் கூட்டி முடிதல் ) கொண்டை ( பக்கவாட்டில் முடிதல் ) சுருள் ( பின்னிச் செருகுதல் ) குழல் ( சுருட்டி முடிதல் ) பனிச்சை ( சடையாகப் பின்னுதல் ) என்று குறிப்பிடுவர் . பரிபாடலில் கார்கொள் கூந்தல் கதுப்பு அமைப்போரும் ' ( பரி 12-15 ) என்ற பரிபாடல் அடியினூடாக கூந்தலைக் குழலாக முடிப்பதைக் கதுப்பு என்று குறிக்கின்றனர் . நீர்ப்பண்பாடுகளில் வையையில் தைநீராடல் பற்றிக் குறிப்பிடப்படுகிறது . திருமணமாகாத கன்னிப்பெண்கள் தங்கள் தாயாருடன் சென்று சடங்குமுறைகளை அறிந்த மூத்த பார்ப்பணியர் கூறியபடி நீராடுதல் தைநீராடல் எனப்படும் . இவ்வாறு நீராடினால் அவர்களின் வேண்டுதல் பலிக்கும் என்ற நம்பிக்கை இருந்தது . எனவேதான் இப்பிறவியில் நீராடக்கிடைத் தாங்கள் முற்பிறவியில் செய்த பலன் என்றும் மறுபிறவியிலும் இப்பேறு நிலைக்கவேண்டும் என்று வேண்டுகின்றனர் . இதனையே