தென்னாடு மாசித் திங்கள் இதழ் - 05

தெ 10 இலங்கைத் தீவு அந்நியர் ஆட்சிக்கு உட்பட்டிருந்த சமயத்தில் சைவமும் தமிழும் நலிவுறும் ஆபத்து உருவானது. அதிலிருந்து நம் மதத்தையும், மொழியையும் பேணிக் காத்து மேன்மையுறச் செய்யும் விடாமுயற்சியில் - விழிப்புணர்வு எழுச்சியில் - ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரும் அவர் வழி வந்த நம் முன்னோர்களும் தீவிரமாக ஈடுபட்டனர். அதன் ஓர் அங்கமாக சைவபரிபாலன சபையின் நோக்கில் புலர்ந்ததுதான் இன்று போற்றுதலுக்குள்ளாகி நிற்கும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி. மிசனரிமார்களின் ஆங்கில மொழிக் கல்வியையும் அதனால் அரச உத்தியோகங்களையும் வாய்ப்புக்களை யும் பெறலாம் என்ற சாதக சூழலையும் பயன்படுத்தி மிசனரிமாரின் கிறிஸ்தவ மதத்துக்கு இந்துக்கள் மதம் மாறும் ஓர் அவல நிலைமை மோசமாக எழுந்தபோது அதினின்றும் நம் சமூகத்தைக் காப்பாற்றவும் இந்துக்கள் மதம் மாறுவதைத் தடுக்கவும் சைவசமயச் சூழலில் அந்த ஆங்கிலக் கல்வியைப் போதிக்கும் எத்தனமாக யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி போன்ற சுதேசிய கல்வி மையங்கள் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பரவலாக உருவாக்கப்பட்டன. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அந்த வகையில் முதன்மையானதாக உருவாயிற்று. பாடசாலையின் தோற்றம் சைவச் சூழலில் ஆங்கில மொழிக் கல்வியைப் போதிக்கும் முனைப்போடு 1890 இல் உருவான யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதன் தொடக்குனர் களின் எதிர்பார்ப்புக்கு அமைய ஓங்கி வளர்ந்து. ஆரம்பத்தில் இருந்தே ஆங்கில மொழிமூல கல்விக்கும் சைவத்துக்கும் அரும்பணியாற்றியது. எனினும் ஆங்கில மொழிக் கல்விக்கு ஈடுகொடுக்க முடியாத சுதேசிய மக்களை கல்வித் துறையில் உயர்த்திவிடும் நோக்கில் இந்த நடைமுறைத் திட்டம் பயனளிக்கவில்லை என்பதை இந்துக் கல்லூரி நிர்வாகத்தினரும் - கல்லூ ரியை வழி நடாத்திய யாழ். இந்துக் கல்லூரிச் சபையினரும் உணர்ந்தபோதுதான் மாற்றுத் திட்டம் குறித்து அவர்கள் சிந்திக்கத் தலைப்பட்டனர் என்று கூறப்படுகின்றது. அந்தச் சிந்தைனையில் பிறந்ததுதான் யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலை. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி நிர்வாகத்தை ஒட்டி, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி வளாகத்தை அண்டிய நிலப்பரப்பிலேயே 18.01.1915 இல் இருந்து யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி தமிழ்ப் பாடசாலை என்ற பெயரில் இது இயங்கத் தொடங்கிற்று எனக் கூறப்படுகின்றது. அத்தகைய பதிவுகளே கடந்த சில தசாப்தங்களாக இப்பாடசாலையை ஒட்டி வெளியான நூல்கள், கையேடுகள், சஞ்சிகைகள், அறிக்கைகள் போன்றவற்றில் இடம்பிடித்துள்ளன. எனினும் இதுவரை அதற்கான சான்றாதாரங்கள் வெளிப்படை யாக முன்வைக்கப்படவோ, பதியப்படவோ இல்லை. இந்துக் கல்லூரி இயக்குநர் சபை யாழ். இந்துக் கல்லூரி ஆரம்பித்து சரியாகக் கால் நூற்றாண்டு கழித்து யாழ். இந்துக் கல்லூரி என்ற தாய் மர நிழலில் யாழ். இந்துக் கல்லூரியில் அப்போது முன்னெடுக்கப்பட்ட ஆங்கில மொழிமூலமான கல்விக்கு ஈடுகொடுக்க முடியாத இந்தப் பிரதேச மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு யாழ். இந்துக் கல்லூரி தமிழ்ப் பாடசாலை இயங்கத் தொடங்கியது. அச்சமயத்தில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் நிர்வாகத்தின் கீழ் முற்றும் முழுதாக இப்பாடசாலை இயங்கிய போதிலும் அங்கு கற்பிக்கும் சிரேஷ்ட ஆசிரியர் ஒருவரே அதன் தலைமை உபாத்தியாயராகச் செயற்பட்டார். தென்னாடு முன்னோர் மத்தியில் தீவிரம் பெறத் தொடங்கியது போது, அதற்கு வடிகாலமைக்கும் நோக்குடன் 05.03.1927 இல் இருந்து யாழ். இந்துக் கல்லூரி தமிழ்ப் பாடசாலை மகளிரையும் உள்ளீர்த்து யாழ். இந்துக் கல்லூரி தமிழ் கலவன் பாடசாலையாகத் தொழிற்படத் தொடங்கியது என பாடசாலைகள் பதிவுகள் எடுத்தியம்புகின்றன. சைவப் பிள்ளைகளுக்கு ஆங்கிலக் கல்வியைக் கொடுத்து மதமாற்றத்தினை தடுக்க உருவாக்கிய பாடசாலையே யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலை 1941ஆம் ஆண்டு வரை நீண்டகாலமாக இப்பாடசாலையின் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்த த.பொ.குழந்தைவேல் பற்றிய தகவல்கள் உள்ளன. எனினும் அவருக்கு முந்திய தலைமையாசிரியர்கள் பற்றிய பதிவுகள் இன்னும் அறியப்படவில்லை. தமிழ் கலவன் பாடசாலையாக மாற்றம் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி உருவான பின்னர் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் பெண்களுக்கான கல்வி பற்றிய விழிப்புணர்வும் நம் அக்காலகட்டத்தில் 1928 ஆம் ஆண்டளவில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு கிழக்குப் புறத்தே கல்லூரி ஒழுங்கைக்கும் கிழக்கே - தற்போது இந்துக் கல்லூரியின் மைதானமாக விளங்கும் திடலின் மேற்குப் பக்கத்தில் கொட்டகைகள் அமைக்கப்பட்டு அந்தக் கொட்டகை வகுப்புகளில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி தமிழ் கலவன் பாடசாலை இயங்கியமை தலைமுறைகள் கடந்தும் வாய்மூலம் அறியப்பட்டு வந்த தகவலாக உள்ளது. அறுபதுகள் வரை யாழ்ப் பாணம் இந்துக் கல்லூரியில் ஆங்கில மொழி மூலக் கல்வியே பிரதானமாகத் தொடர, தமிழ்க் கலவன் பாடசாலையே முற்று முழுதாகத் தமிழ்மொழி மூலக் கல்வியைப் போதித்தமையினால் இது தமிழ் பள்ளிக்கூடம் என்ற சுருக்கப் பெயரினாலேயே ஆரம்பம் முதல் அறியப்பட்டு வந்தது என்பதும் கவனிக்கத்தக்கது. யாழ். இந்து மகளிர் பாடசாலை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி தமிழ்க் கலவன் பாடசாலையில் பெண்களும் கற்கக்கூடிய நிலைமை இருந்தபோதிலும் மகளிருக்கென தனியான ஆங்கில மொழி மூலக் கல்வி மையம் வேண்டும் என்ற அவசியம் 40களில் உணரப்பட்டது. 1935 முதல் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் ஆங்கில மொழி மூலக் கல்விக்கு பெண்களும் உள்ளீர்க்கப்பட்டனர். எனினும், இச்சூழலில் இருந்த அத்தகைய மாணவிகள் அப்போதும் காத்திரமாக இயங்கிக்கொண்டிருந்த சுன்னாகம் இராமநாதன் கல்லூரியில் கற்பதற்கே பெரும்பாலும் வழிகாட்டப்பட்டனர். இதனால், பல பெற்றோர்களது வேண்டுகோளுக்கு அமைய யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சூழலில் பெண்களுக்கான ஆங்கிலமொழி மூல பாடசாலை அமைக்கும் திட்டம் முகாமைத்துவ சபையால் கருத்தில் கொள்ளப்பட்டது. இதன் விளைவாக யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்துக்கு எதிரே (கிழக்குப் புறத்தில் கஸ்தூ ரியார் வீதியில் இருந்த தனியாருக்குச் சொந்தமான பொன்னாலயம் என்ற பெயருடைய - நாற்சதுர வீட்டில் (இந்த வீடு இப்போது இடிக்கப்பட்டு விட்டது.) 1943ஆம் ஆண்டில் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. அது பின்னர் 1945 ஆம் ஆண்டு தற்போதுள்ள இடத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் இருந்து யாழ்ப்பாணம் இந்துக் கல்லூ ரி தமிழ்க் கலவன் பாடசாலையும், அதிலிருந்து யாழ். இந்து மகளிர் கல்லூரியும், அதிலிருந்து யாழ். இந்து மகளிர் ஆரம்ப பாடசாலையும் ஆரம்பமாயின என்பது ஈண்டு குறிப்பிடத்தக்கது. அதிபர் க. முத்துக்குமாரு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியை அண்டி, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி தமிழ்க் கலவன் பாடசாலை செயற்பட்ட சமயத்தில் நீண்டகாலம் தலைமை ஆசிரியராக இருந்த த. பொ.குழந்தைவேல் 1941இல் மறைய அவரது இடத்துக்கு, 1930இல் இருந்து அதே பாடசாலையில் கற்பித்து வந்த கந்தையா முத்துக்குமாரு பதவியேற்றார். 1966 ஆம் ஆண்டு வரை, கால் நூற்றாண்டு காலம் பாடசாலையை வழிநடத்திய பெருமையுடையவர் இவர். இவரது காலத்தில்தான் பாடசாலை அதன் தற்போதைய இடத்துக்கு மாற்றம் கொண்டது. யாழ். இந்துக் கல்லூ ரி வளாகத்தை அண்டி தமிழ்க் கலவன் பாடசாலை இருந்தபோது, பாடசாலையின் கொட்டகைகளிலேயே சைவபரிபாலன சபையினர் ஏற்பாடு செய்த பல சைவமாநாடுகள் நடைபெற்றன. அவற்றை முன்னின்று நடாத்துவதில் அதிபர் முத்துக்குமாரு அதீத ஈடுபாடு காட்டினார். அதேவேளை பாடசாலையை அண்டிய கல்லூரி விளையாட்டு மைதான வளவில்தான் யாழ். இந்துக் கல்லூரி கட்டட நிதிக்காக கல்லூரியினால் கும்பம் நல்லோரை மாசித் திங்கள், 2021 அவ்வப்போது களியாட்ட விழாக்கள் நடத்தப்பட்டன. அவற்றின் வெற்றிக்காகவும் அதிபர் முத்துக்குமாரு பம்பரமாக உழைத்தார். அத்தகைய விழாவொன்றின் மத்தியில் இரவில் இடம்பெற்ற வானவேடிக்கையின் போது சிதறிய தீ துகள்கள் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி தமிழ்க் கலவன் பாடசாலையின் கொட்டகை மீது வீழ்ந்ததால் சில வகுப்பறைக் கொட்டகைகள் தளபாடங்களுடன் எரிந்து நாசமாகின என்ற செய்தியும் வாய்வழியாகப் பேசப்பட்டு வருகின்றது. பாடசாலை புதிய இடத்தில் அதிபர் கந்தையா முத்துக்குமாரு, பிரதி அதிபர் மு.கணபதிப்பிள்ளை, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூ ரி நிர்வாக சபையின் தலைவர் சாண்டோ) திரு. முத்துச்சாமிப்பிள்ளை போன்றோரினதும் கல்லூரிச் சபை மற்றும் ஆரம்பப் பாடசாலை கல்விச் சமூகம் ஆகியவற்றினதும் ஒத்துழைப்புடன் யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில், கொண்டலடிப் பிள்ளையார் கோயிலுக்குப் பக்கத்தில் தற்போது பாடசாலை அமைந்துள்ள இடத்தில் நிலம் கொள்வனவு செய்யப் பட்டது. அங்கு 17.08.1951 இல் புதிய கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. பாடசாலைச் சமூகத்தைச் சேர்ந்த பிரமுகர்கள் குடாநாடு எங்கும் ஊர் ஊராக அலைந்து நிதி சேர்த்தனர். பிரதி அதிபர் மு.கணபதிப்பிள்ளையே கட்டட வேலையை முன்னின்று கவனித்தார். சுமார் மூன்றாண்டு கால கடும் பிரயத்தனத்துக்கு மத்தியில் கட்டட வேலை பூர்த்தியாகி 22.01.1954 இல் பாடசாலை யாழ். இந்துக் கல்லூரி வளாகத்திலிருந்து இடம்பெயர்ந்து தற்போதைய களத்தில் இயங்கத் தொடங்கியது. தற்போது விளையாட்டு மைதானப் பிரதேசத்தை உற்றாசல்பந்தையான (AVட் பட் ஐ தவிர்த்து பாடசாலை அமைந்துள்ள வளாகத்தில் சுமார் அறுபது வீத நிலத்தையே அச்சமயம் பாடசாலை கொண்டிருந்தது. அதன் வடக்குப் புறம் உள்ள நிலப்பகுதி 90களின் நடுப்பகுதியில் மேலதிகமாகக் கொள்வனவு செய்யப்பட்டு பாடசாலையுடன் சேர்க்கப்பட்டதால் விஸ்தீரணம் அதிகரிக்கப்பட்டது. ஐம்பதுகளின் நடுப்பகுதியில் அங்கு பாடசாலைகள் இயங்கத் தொடங்கிய போது அப்போதைய வளாகத்தின் வடக்கு எல்லை ஓரத்தில் சுமார் ஐந்து வகுப்பு அறைகளையும் அதிபர் அறையையும் அவற்றுக்கு அருகே நீண்ட நடைபாதையையும் கொண்ட ஒரே கட்டடத் தொகுதியே இருந்தது. மேற்புறம் கூரை ஓடு. அக்கட்டடத் தொகுதியின் எல்லையில் - வளாகத்தின் வடக்கு கிழக்கு மூலையில் கிணறு. கிழக்கு, மேற்கு எல்லை ஓரங்களில் நீண்ட கொட்டகைகள் அமைக்கப்பட்டு, தடுப்புக்களினால் வகுப்புகள் பிரிக்கப்பட்டிருந்தன. தென்மேற்கு எல்லையில் தெருவோரமாக கொண்டலடி விநாயகர் கோயில். ஐம்பதுகளில், பாடசாலை வளாகம் அமைந்திருந்த பிரதேசத்தில் உள்ள ஆரம்ப நிலை மாணவருக்கு கல்விக் கண்ணைத் திறந்துவிடும் தாயாக இப்பாடசாலை விளங்கியது. அதிபர் முத்துக்குமாருவும், பிரதி அதிபர் கணபதிப்பிள்ளையும் பாடசாலை கல்விச் சமூகத்தினரும் இப்பிரதேச மக்களுடன் நெருங்கி ஊடாடி, அவர்களது சிறார்களை பாடசாலையில் இணைத்து கல்வி ஊட்டுவதில் முனைப்புக்காட்டினர். அக்காலத்தில் ஆசிரியரை வாத்தியார் (உபாத்தியாயர்) என்றும் ஆசிரியையை அக்கர் என்றும் மாணவர்கள் விளிக்கும் நிலையே இருந்தது. பாடசாலை அரசுடைமையானது 1960களின் முற்பகுதியில் பாடசாலைகளை தேசிய மயமாக்கும் திட்டத்தின் கீழ் தனியார் நிர்வாகத்தில் இருந்த பாடசாலைகள், கல்லூரிகள் என்பன அவற்றின் சொத்துக்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஆளணியினருடன் அரசினால் பொறுப்பேற்கப்பட்டன. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியும், அதனோடிணைந்த ஏனைய பாடசாலைகளும் கூட இதற்கு விதிவிலக்காக அமையவில்லை. அதுவரை காலமும் ஒரே பிரதேசத் துக்குள் யாழ். இந்துக் கல்லூரி இயக்குநர் சபை என்ற ஒரு முகாமைத்துவத்தின் கீழ் இயங்கி வந்த யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, யாழ்ப்பாணம் இந்து (11ஆம் பக்கம் பார்க்க)
தெ 10 இலங்கைத் தீவு அந்நியர் ஆட்சிக்கு உட்பட்டிருந்த சமயத்தில் சைவமும் தமிழும் நலிவுறும் ஆபத்து உருவானது . அதிலிருந்து நம் மதத்தையும் மொழியையும் பேணிக் காத்து மேன்மையுறச் செய்யும் விடாமுயற்சியில் - விழிப்புணர்வு எழுச்சியில் - ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரும் அவர் வழி வந்த நம் முன்னோர்களும் தீவிரமாக ஈடுபட்டனர் . அதன் ஓர் அங்கமாக சைவபரிபாலன சபையின் நோக்கில் புலர்ந்ததுதான் இன்று போற்றுதலுக்குள்ளாகி நிற்கும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி . மிசனரிமார்களின் ஆங்கில மொழிக் கல்வியையும் அதனால் அரச உத்தியோகங்களையும் வாய்ப்புக்களை யும் பெறலாம் என்ற சாதக சூழலையும் பயன்படுத்தி மிசனரிமாரின் கிறிஸ்தவ மதத்துக்கு இந்துக்கள் மதம் மாறும் ஓர் அவல நிலைமை மோசமாக எழுந்தபோது அதினின்றும் நம் சமூகத்தைக் காப்பாற்றவும் இந்துக்கள் மதம் மாறுவதைத் தடுக்கவும் சைவசமயச் சூழலில் அந்த ஆங்கிலக் கல்வியைப் போதிக்கும் எத்தனமாக யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி போன்ற சுதேசிய கல்வி மையங்கள் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பரவலாக உருவாக்கப்பட்டன . யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அந்த வகையில் முதன்மையானதாக உருவாயிற்று . பாடசாலையின் தோற்றம் சைவச் சூழலில் ஆங்கில மொழிக் கல்வியைப் போதிக்கும் முனைப்போடு 1890 இல் உருவான யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதன் தொடக்குனர் களின் எதிர்பார்ப்புக்கு அமைய ஓங்கி வளர்ந்து . ஆரம்பத்தில் இருந்தே ஆங்கில மொழிமூல கல்விக்கும் சைவத்துக்கும் அரும்பணியாற்றியது . எனினும் ஆங்கில மொழிக் கல்விக்கு ஈடுகொடுக்க முடியாத சுதேசிய மக்களை கல்வித் துறையில் உயர்த்திவிடும் நோக்கில் இந்த நடைமுறைத் திட்டம் பயனளிக்கவில்லை என்பதை இந்துக் கல்லூரி நிர்வாகத்தினரும் - கல்லூ ரியை வழி நடாத்திய யாழ் . இந்துக் கல்லூரிச் சபையினரும் உணர்ந்தபோதுதான் மாற்றுத் திட்டம் குறித்து அவர்கள் சிந்திக்கத் தலைப்பட்டனர் என்று கூறப்படுகின்றது . அந்தச் சிந்தைனையில் பிறந்ததுதான் யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலை . யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி நிர்வாகத்தை ஒட்டி யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி வளாகத்தை அண்டிய நிலப்பரப்பிலேயே 18.01.1915 இல் இருந்து யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி தமிழ்ப் பாடசாலை என்ற பெயரில் இது இயங்கத் தொடங்கிற்று எனக் கூறப்படுகின்றது . அத்தகைய பதிவுகளே கடந்த சில தசாப்தங்களாக இப்பாடசாலையை ஒட்டி வெளியான நூல்கள் கையேடுகள் சஞ்சிகைகள் அறிக்கைகள் போன்றவற்றில் இடம்பிடித்துள்ளன . எனினும் இதுவரை அதற்கான சான்றாதாரங்கள் வெளிப்படை யாக முன்வைக்கப்படவோ பதியப்படவோ இல்லை . இந்துக் கல்லூரி இயக்குநர் சபை யாழ் . இந்துக் கல்லூரி ஆரம்பித்து சரியாகக் கால் நூற்றாண்டு கழித்து யாழ் . இந்துக் கல்லூரி என்ற தாய் மர நிழலில் யாழ் . இந்துக் கல்லூரியில் அப்போது முன்னெடுக்கப்பட்ட ஆங்கில மொழிமூலமான கல்விக்கு ஈடுகொடுக்க முடியாத இந்தப் பிரதேச மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு யாழ் . இந்துக் கல்லூரி தமிழ்ப் பாடசாலை இயங்கத் தொடங்கியது . அச்சமயத்தில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் நிர்வாகத்தின் கீழ் முற்றும் முழுதாக இப்பாடசாலை இயங்கிய போதிலும் அங்கு கற்பிக்கும் சிரேஷ்ட ஆசிரியர் ஒருவரே அதன் தலைமை உபாத்தியாயராகச் செயற்பட்டார் . தென்னாடு முன்னோர் மத்தியில் தீவிரம் பெறத் தொடங்கியது போது அதற்கு வடிகாலமைக்கும் நோக்குடன் 05.03.1927 இல் இருந்து யாழ் . இந்துக் கல்லூரி தமிழ்ப் பாடசாலை மகளிரையும் உள்ளீர்த்து யாழ் . இந்துக் கல்லூரி தமிழ் கலவன் பாடசாலையாகத் தொழிற்படத் தொடங்கியது என பாடசாலைகள் பதிவுகள் எடுத்தியம்புகின்றன . சைவப் பிள்ளைகளுக்கு ஆங்கிலக் கல்வியைக் கொடுத்து மதமாற்றத்தினை தடுக்க உருவாக்கிய பாடசாலையே யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலை 1941 ஆம் ஆண்டு வரை நீண்டகாலமாக இப்பாடசாலையின் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்த த.பொ.குழந்தைவேல் பற்றிய தகவல்கள் உள்ளன . எனினும் அவருக்கு முந்திய தலைமையாசிரியர்கள் பற்றிய பதிவுகள் இன்னும் அறியப்படவில்லை . தமிழ் கலவன் பாடசாலையாக மாற்றம் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி உருவான பின்னர் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் பெண்களுக்கான கல்வி பற்றிய விழிப்புணர்வும் நம் அக்காலகட்டத்தில் 1928 ஆம் ஆண்டளவில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு கிழக்குப் புறத்தே கல்லூரி ஒழுங்கைக்கும் கிழக்கே - தற்போது இந்துக் கல்லூரியின் மைதானமாக விளங்கும் திடலின் மேற்குப் பக்கத்தில் கொட்டகைகள் அமைக்கப்பட்டு அந்தக் கொட்டகை வகுப்புகளில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி தமிழ் கலவன் பாடசாலை இயங்கியமை தலைமுறைகள் கடந்தும் வாய்மூலம் அறியப்பட்டு வந்த தகவலாக உள்ளது . அறுபதுகள் வரை யாழ்ப் பாணம் இந்துக் கல்லூரியில் ஆங்கில மொழி மூலக் கல்வியே பிரதானமாகத் தொடர தமிழ்க் கலவன் பாடசாலையே முற்று முழுதாகத் தமிழ்மொழி மூலக் கல்வியைப் போதித்தமையினால் இது தமிழ் பள்ளிக்கூடம் என்ற சுருக்கப் பெயரினாலேயே ஆரம்பம் முதல் அறியப்பட்டு வந்தது என்பதும் கவனிக்கத்தக்கது . யாழ் . இந்து மகளிர் பாடசாலை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி தமிழ்க் கலவன் பாடசாலையில் பெண்களும் கற்கக்கூடிய நிலைமை இருந்தபோதிலும் மகளிருக்கென தனியான ஆங்கில மொழி மூலக் கல்வி மையம் வேண்டும் என்ற அவசியம் 40 களில் உணரப்பட்டது . 1935 முதல் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் ஆங்கில மொழி மூலக் கல்விக்கு பெண்களும் உள்ளீர்க்கப்பட்டனர் . எனினும் இச்சூழலில் இருந்த அத்தகைய மாணவிகள் அப்போதும் காத்திரமாக இயங்கிக்கொண்டிருந்த சுன்னாகம் இராமநாதன் கல்லூரியில் கற்பதற்கே பெரும்பாலும் வழிகாட்டப்பட்டனர் . இதனால் பல பெற்றோர்களது வேண்டுகோளுக்கு அமைய யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சூழலில் பெண்களுக்கான ஆங்கிலமொழி மூல பாடசாலை அமைக்கும் திட்டம் முகாமைத்துவ சபையால் கருத்தில் கொள்ளப்பட்டது . இதன் விளைவாக யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்துக்கு எதிரே ( கிழக்குப் புறத்தில் கஸ்தூ ரியார் வீதியில் இருந்த தனியாருக்குச் சொந்தமான பொன்னாலயம் என்ற பெயருடைய - நாற்சதுர வீட்டில் ( இந்த வீடு இப்போது இடிக்கப்பட்டு விட்டது . ) 1943 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது . அது பின்னர் 1945 ஆம் ஆண்டு தற்போதுள்ள இடத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டது . யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் இருந்து யாழ்ப்பாணம் இந்துக் கல்லூ ரி தமிழ்க் கலவன் பாடசாலையும் அதிலிருந்து யாழ் . இந்து மகளிர் கல்லூரியும் அதிலிருந்து யாழ் . இந்து மகளிர் ஆரம்ப பாடசாலையும் ஆரம்பமாயின என்பது ஈண்டு குறிப்பிடத்தக்கது . அதிபர் . முத்துக்குமாரு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியை அண்டி யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி தமிழ்க் கலவன் பாடசாலை செயற்பட்ட சமயத்தில் நீண்டகாலம் தலைமை ஆசிரியராக இருந்த . பொ.குழந்தைவேல் 1941 இல் மறைய அவரது இடத்துக்கு 1930 இல் இருந்து அதே பாடசாலையில் கற்பித்து வந்த கந்தையா முத்துக்குமாரு பதவியேற்றார் . 1966 ஆம் ஆண்டு வரை கால் நூற்றாண்டு காலம் பாடசாலையை வழிநடத்திய பெருமையுடையவர் இவர் . இவரது காலத்தில்தான் பாடசாலை அதன் தற்போதைய இடத்துக்கு மாற்றம் கொண்டது . யாழ் . இந்துக் கல்லூ ரி வளாகத்தை அண்டி தமிழ்க் கலவன் பாடசாலை இருந்தபோது பாடசாலையின் கொட்டகைகளிலேயே சைவபரிபாலன சபையினர் ஏற்பாடு செய்த பல சைவமாநாடுகள் நடைபெற்றன . அவற்றை முன்னின்று நடாத்துவதில் அதிபர் முத்துக்குமாரு அதீத ஈடுபாடு காட்டினார் . அதேவேளை பாடசாலையை அண்டிய கல்லூரி விளையாட்டு மைதான வளவில்தான் யாழ் . இந்துக் கல்லூரி கட்டட நிதிக்காக கல்லூரியினால் கும்பம் நல்லோரை மாசித் திங்கள் 2021 அவ்வப்போது களியாட்ட விழாக்கள் நடத்தப்பட்டன . அவற்றின் வெற்றிக்காகவும் அதிபர் முத்துக்குமாரு பம்பரமாக உழைத்தார் . அத்தகைய விழாவொன்றின் மத்தியில் இரவில் இடம்பெற்ற வானவேடிக்கையின் போது சிதறிய தீ துகள்கள் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி தமிழ்க் கலவன் பாடசாலையின் கொட்டகை மீது வீழ்ந்ததால் சில வகுப்பறைக் கொட்டகைகள் தளபாடங்களுடன் எரிந்து நாசமாகின என்ற செய்தியும் வாய்வழியாகப் பேசப்பட்டு வருகின்றது . பாடசாலை புதிய இடத்தில் அதிபர் கந்தையா முத்துக்குமாரு பிரதி அதிபர் மு.கணபதிப்பிள்ளை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூ ரி நிர்வாக சபையின் தலைவர் சாண்டோ ) திரு . முத்துச்சாமிப்பிள்ளை போன்றோரினதும் கல்லூரிச் சபை மற்றும் ஆரம்பப் பாடசாலை கல்விச் சமூகம் ஆகியவற்றினதும் ஒத்துழைப்புடன் யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் கொண்டலடிப் பிள்ளையார் கோயிலுக்குப் பக்கத்தில் தற்போது பாடசாலை அமைந்துள்ள இடத்தில் நிலம் கொள்வனவு செய்யப் பட்டது . அங்கு 17.08.1951 இல் புதிய கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது . பாடசாலைச் சமூகத்தைச் சேர்ந்த பிரமுகர்கள் குடாநாடு எங்கும் ஊர் ஊராக அலைந்து நிதி சேர்த்தனர் . பிரதி அதிபர் மு.கணபதிப்பிள்ளையே கட்டட வேலையை முன்னின்று கவனித்தார் . சுமார் மூன்றாண்டு கால கடும் பிரயத்தனத்துக்கு மத்தியில் கட்டட வேலை பூர்த்தியாகி 22.01.1954 இல் பாடசாலை யாழ் . இந்துக் கல்லூரி வளாகத்திலிருந்து இடம்பெயர்ந்து தற்போதைய களத்தில் இயங்கத் தொடங்கியது . தற்போது விளையாட்டு மைதானப் பிரதேசத்தை உற்றாசல்பந்தையான ( AV ட் பட் தவிர்த்து பாடசாலை அமைந்துள்ள வளாகத்தில் சுமார் அறுபது வீத நிலத்தையே அச்சமயம் பாடசாலை கொண்டிருந்தது . அதன் வடக்குப் புறம் உள்ள நிலப்பகுதி 90 களின் நடுப்பகுதியில் மேலதிகமாகக் கொள்வனவு செய்யப்பட்டு பாடசாலையுடன் சேர்க்கப்பட்டதால் விஸ்தீரணம் அதிகரிக்கப்பட்டது . ஐம்பதுகளின் நடுப்பகுதியில் அங்கு பாடசாலைகள் இயங்கத் தொடங்கிய போது அப்போதைய வளாகத்தின் வடக்கு எல்லை ஓரத்தில் சுமார் ஐந்து வகுப்பு அறைகளையும் அதிபர் அறையையும் அவற்றுக்கு அருகே நீண்ட நடைபாதையையும் கொண்ட ஒரே கட்டடத் தொகுதியே இருந்தது . மேற்புறம் கூரை ஓடு . அக்கட்டடத் தொகுதியின் எல்லையில் - வளாகத்தின் வடக்கு கிழக்கு மூலையில் கிணறு . கிழக்கு மேற்கு எல்லை ஓரங்களில் நீண்ட கொட்டகைகள் அமைக்கப்பட்டு தடுப்புக்களினால் வகுப்புகள் பிரிக்கப்பட்டிருந்தன . தென்மேற்கு எல்லையில் தெருவோரமாக கொண்டலடி விநாயகர் கோயில் . ஐம்பதுகளில் பாடசாலை வளாகம் அமைந்திருந்த பிரதேசத்தில் உள்ள ஆரம்ப நிலை மாணவருக்கு கல்விக் கண்ணைத் திறந்துவிடும் தாயாக இப்பாடசாலை விளங்கியது . அதிபர் முத்துக்குமாருவும் பிரதி அதிபர் கணபதிப்பிள்ளையும் பாடசாலை கல்விச் சமூகத்தினரும் இப்பிரதேச மக்களுடன் நெருங்கி ஊடாடி அவர்களது சிறார்களை பாடசாலையில் இணைத்து கல்வி ஊட்டுவதில் முனைப்புக்காட்டினர் . அக்காலத்தில் ஆசிரியரை வாத்தியார் ( உபாத்தியாயர் ) என்றும் ஆசிரியையை அக்கர் என்றும் மாணவர்கள் விளிக்கும் நிலையே இருந்தது . பாடசாலை அரசுடைமையானது 1960 களின் முற்பகுதியில் பாடசாலைகளை தேசிய மயமாக்கும் திட்டத்தின் கீழ் தனியார் நிர்வாகத்தில் இருந்த பாடசாலைகள் கல்லூரிகள் என்பன அவற்றின் சொத்துக்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் ஆளணியினருடன் அரசினால் பொறுப்பேற்கப்பட்டன . யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியும் அதனோடிணைந்த ஏனைய பாடசாலைகளும் கூட இதற்கு விதிவிலக்காக அமையவில்லை . அதுவரை காலமும் ஒரே பிரதேசத் துக்குள் யாழ் . இந்துக் கல்லூரி இயக்குநர் சபை என்ற ஒரு முகாமைத்துவத்தின் கீழ் இயங்கி வந்த யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி யாழ்ப்பாணம் இந்து ( 11 ஆம் பக்கம் பார்க்க )