தென்னாடு மாசித் திங்கள் இதழ் - 05

தெ 04 Carrer தென்னாடு சிவபுராணம் சிவத்திரு. சிவ செந்தமிழாதன், தலைவர் - சைவ மாணவர் சபை, (பதிவு - HA/4/JA/343) 0715588737, aathan@thennadu.org தாய்மொழித் தினத்தில் உறுதிகொள்வோம்! 1952 ஆம் வருடம் மாசி மாதம் 21 ஆம் நாள் அன்றைய கிழக்குப் பாகித்தான் (இன்றைய வங்காள தேசம்) தலைநகர் தாக்காவில், வங்காள மொழியை அரச மொழியாக்க கோரி நடாத்தப்பட்ட போராட்டத்தில் நான்கு மாணவர்கள் தமது உயிரைத் தியாகம் செய்கின்றனர். அந்த நாளை, 1999 ஆம் வருடம் மாசி மாதம் 21 ஆம் திகதி பன்னாட்டு தாய்மொழி தினமாக யுனெஸ்கோ அமைப்பு அறிவிக்கின்றது. இந்த நாளை கடந்த வாரம் உலகத்தமிழர்களும், ஏனைய மொழிவழித் தேசிய இனங்களும் தம் தம் தாய்மொழியை ஏற்றி போற்றி கொண்டாடி மகிழ்ந்தனர். வங்காளதேசத்தின் தனிநாட்டுக் கோரிக்கைக்கு வித்திட்ட, அந்த நாளை பன்னாட்டு தாய்மொழித்தினமாக நாமெல்லாம் கொண்டாடினாலும், தமிழகத்தில் இந்தி திணிப்புக்கு எதிராக போராடி தம் இன்னுயிரை ஈகம்செய்த தியாகிகளும் தமிழர்களால் நீள நினைந்து போற்றுதற்குரியவர்களே! ஆனால் அந்தப் போராட்டத்தில், எம் தாய் மொழியை ஆட்சி மொழியாக்க கோரி உயிர்நீத்த தியாகி அரங்கநாதன் நினைவாக அமைக்கப்பட்ட சுரங்க வழியை இன்று “அரங்கநாதன் சப் வேய்" என்று ஆங்கிலத்திலேயே அடையாளப்படுத்துகின்றோம்! www.thennadu.org எந்த இலட்ச்சியத்துக்காக எம் முன்னவர்கள் போராடி வணங்குதற்குரியவர்கள் ஆனார்களோ, அந்த இலட்சியத்தையும் நோக்கத்தையும் அடுத்த தலைமுறைக்கு கடத்தாமையே இந்தத் துயரத்துக்கு காரணமாகும்! நிற்க. பிறந்த போதே உயிருடனும் உணர்வுடனும் பிணைக்கப்பட்ட தாய் மொழி யாவர்க்கும் உன்னதமானதும், உயர்வானதுமே! எந்த மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவரும் அம்மொழியிலேயே உரையாடவும், வழிபடவும், உத்தியோகபூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இருக்கின்ற உரிமையை தவிர்ப்பதை எம்மடத்தனமாகவே கொள்ளவேண்டும்! அதிலும் குறிப்பாகத் தமிழர்களே இந்த மடத்தனத்தை தெரிந்தோ தெரியாமலோ அந்நிய ஆட்சியின் அடிமைத்தனத்தின் நீட்சியாகவோ கைக்கொண்டு வருகின்றனர்! வழிபட ஒருமொழி, கையொப்பமிட ஒருமொழி, உரையாட ஒருமொழி என்று பட்டியல் நீளும்! மொழிக்கடத்துகையை அடுத்த தலைமுறைக்குக் கையளிப்பதில் ஒரு கனதியான கருவியே வழிபாடாகும்! இளவயதில் இருந்து இருகரம் குவித்து இறைவனைத் தம்மொழியால் வழிபடுவதே தாய்மொழியின் மீதான பற்றுதலை பக்தியோடு வளர்ப்பதற்கு உந்துதல் தரும்! தென்னாடு முன்னெடுக்கும் தமிழ் வழிபாடும், தென்புல போற்றுதலும் இந்த தாய்மொழியின் உன்னத உயர்வுகளை அடுத்த தலைமுறைக்கு திரிபுகளோ, கொள்கைப் பிறழ்வுகளோ இன்றிக்கொடுப்பதற்கேயாகும். உலக தாய்மொழித்தினத்தில், உலக மொழிகளுக்கெல்லாம் தாயான மொழியை தாய்மொழியாக கொண்ட ஒவ்வொருதமிழனும் தெளிந்த பார்வையோடு தாய்மொழிச்செயற்பாடுகளை முன்னெடுக்க முயல வேண்டும்! கருமுதல் கருவறை வரை தமிழ் ஒலித்தால், திருவும் சிறப்பும் பெருகும் என்பதை எங்கள் வீட்டுக் குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுப்போம்! நாளை தமிழில் அவர்கள் இடப்போகும் கையெழுத்து எதிர்கால தமிழ் பிள்ளைகளின் தலையெழுத்தை மாற்றட்டும்! சைவ மாணவர் சபை - சிவத்தொண்டர்கள் பிரதித் தலைவர் சிவத்திரு.மு. ஒளியரசன் நிர்வாகச் செயலாளர் சிவத்திரு.வ.தமிழரசன் பொதுச் செயலாளர் சிவத்திரு.அ.இசையமுதன் தென்னாடு பொருளாளர் சிவத்திரு.தி. கௌரீசன் சிவபுராணம் சிவனது அனாதி முறைமையான பழமை (திருப்பெருந்துறையில் அருளியது) கும்பம் நல்லோரை மாசித் திங்கள், 2021 (கலிவெண்பா) திருச்சிற்றம்பலம் நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க ஏகன், அநேகன், இறைவன் அடிவாழ்க வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க புறத்தார்க்குச் சேயோன்தன் பூங்கழல்கள் வெல்க கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க சிரங்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல்வெல்க ஈசன் அடிபோற்றி எந்தைஅடி போற்றி தேசன் அடிபோற்றி சிவன்சே வடிபோற்றி நேயத்தே நின்ற நிமலன் அடிபோற்றி மாயப் பிறப்பறுக்கும் மன்னன் அடிபோற்றி சீரார் பெருந்துறைநம் தேவன் அடிபோற்றி ஆராத இன்பம் அருளும்மலை போற்றி சிவன் அவன்என் சிந்தையுள் நின்ற அதனால் அவன் அருளாலே அவன்தாள் வணங்கிச் சிந்தை மகிழச் சிவபுரா ணம்தன்னை முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன்யான் கண்நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி எண்ணுதற்கு எட்டா எழிலார் கழல்இறைஞ்சி விண்நிறைந்து மண்நிறைந்து மிக்காய் விளங்குஒளியாய் எண்ணிறந்து எல்லை இலாதானே, நின்பெருஞ்சீர் பொல்லா வினையேன், புகழும்ஆறு ஒன்று அறியேன், புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல்அசுர ராகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்றஇத் தாவர, சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன் எம்பெருமான் மெய்யேஉன் பொன்னடிகள் கண்டுஇன்று வீடுற்றேன் உய்யஎன் உள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற மெய்யா, விமலா, விடைப்பாகா, வேதங்கள் "ஐயா!" எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே, வெய்யாய் தணியாய் இயமானன் ஆம்விமலா, பொய்யா யினஎல்லாம் போயகல வந்தருளி மெய்ஞ்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே, எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்துலகும் ஆக்குவாய்,காப்பாய், அழிப்பாய், அருள்தருவாய், போக்குவாய், என்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பில் நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே மாற்றம் மனம்கழிய நின்ற மறையோனே கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச் சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான் நிறங்கள்ஓர் ஐந்துடையாய், விண்ணோர்கள் ஏத்த மறைந்திருந்தாய், எம்பெருமான், வல்வினையேன் தன்னை மறைந்திட மூடிய மாய இருளை அறம்பாவம் என்னும் அருங்கயிற்றால் கட்டிப் புறந்தோல்போர்த்து எங்கும் புழுஅழுக்கு மூடி மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய, விலங்கு மனத்தால், விமலா, உனக்கு கலந்தஅன் பாகிக் கசிந்துஉள் உருகும் நலன்தான் இலாத சிறியேற்கு நல்கி நிலந்தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காஅட்டி நாயில் கடையாய்க் கிடந்த அடியேற்குத் தாயில் சிறந்த தயாவான தத்துவனே மாசற்ற சோதி, மலர்ந்த மலர்ச்சுடரே தேசனே, தேனார் அமுதே, சிவபுரனே பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே, நேச அருள்புரிந்து நெஞ்சில்வஞ் சங்கெடப் பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே ஆரா அமுதே, அளவிலாப் பெம்மானே ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே, நீராய் உருக்கிளன் ஆருயிராய் நின்றானே, இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே அன்பருக்கு அன்பனே, யாவையுமாய் அல்லையுமாம் சோதியனே, துன்இருளே, தோன்றாப் பெருமையனே, ஆதியனே, அந்தம் நடுவாகி அல்லானே, ஈர்த்துஎன்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே, கூர்த்தமெய்ஞ் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தின் நோக்கரிய நோக்கே, நுணுக்கரிய நுண்ணுணர்வே, போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே, காக்கும்எம் காவலனே, காண்பரிய பேரொளியே, ஆற்றின்ப வெள்ளமே, அத்தாமிக் காய்நின்ற தோற்றச் சுடரொளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய் மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம் தேற்றனே, தேற்றத் தெளிவே, என்சிந்தனையுள் ஊற்றான உண்ணார் அமுதே, உடையானே, வேற்று விகார விடக்குடம்பின் உட்கிடப்ப ஆற்றேன்எம் ஐயா அரனே 'ஓ' என்றென்று போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்ஆனார் மீட்டுஇங்கு வந்து, வினைப்பிறவி சாராமே கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே, நள்ளிருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே. தில்லையுள் கூத்தனே, தென்பாண்டி நாட்டானே, அல்லற் பிறவி அறுப்பானே 'ஓ'என்று சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச் சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார் செல்வர், சிவபுரத்தின் உள்ளார், சிவனடிக்கீழ்ப் பல்லோரும் ஏத்தப் பணிந்து திருச்சிற்றம்பலம்
தெ 04 Carrer தென்னாடு சிவபுராணம் சிவத்திரு . சிவ செந்தமிழாதன் தலைவர் - சைவ மாணவர் சபை ( பதிவு - HA / 4 / JA / 343 ) 0715588737 aathan@thennadu.org தாய்மொழித் தினத்தில் உறுதிகொள்வோம் ! 1952 ஆம் வருடம் மாசி மாதம் 21 ஆம் நாள் அன்றைய கிழக்குப் பாகித்தான் ( இன்றைய வங்காள தேசம் ) தலைநகர் தாக்காவில் வங்காள மொழியை அரச மொழியாக்க கோரி நடாத்தப்பட்ட போராட்டத்தில் நான்கு மாணவர்கள் தமது உயிரைத் தியாகம் செய்கின்றனர் . அந்த நாளை 1999 ஆம் வருடம் மாசி மாதம் 21 ஆம் திகதி பன்னாட்டு தாய்மொழி தினமாக யுனெஸ்கோ அமைப்பு அறிவிக்கின்றது . இந்த நாளை கடந்த வாரம் உலகத்தமிழர்களும் ஏனைய மொழிவழித் தேசிய இனங்களும் தம் தம் தாய்மொழியை ஏற்றி போற்றி கொண்டாடி மகிழ்ந்தனர் . வங்காளதேசத்தின் தனிநாட்டுக் கோரிக்கைக்கு வித்திட்ட அந்த நாளை பன்னாட்டு தாய்மொழித்தினமாக நாமெல்லாம் கொண்டாடினாலும் தமிழகத்தில் இந்தி திணிப்புக்கு எதிராக போராடி தம் இன்னுயிரை ஈகம்செய்த தியாகிகளும் தமிழர்களால் நீள நினைந்து போற்றுதற்குரியவர்களே ! ஆனால் அந்தப் போராட்டத்தில் எம் தாய் மொழியை ஆட்சி மொழியாக்க கோரி உயிர்நீத்த தியாகி அரங்கநாதன் நினைவாக அமைக்கப்பட்ட சுரங்க வழியை இன்று அரங்கநாதன் சப் வேய் என்று ஆங்கிலத்திலேயே அடையாளப்படுத்துகின்றோம் ! www.thennadu.org எந்த இலட்ச்சியத்துக்காக எம் முன்னவர்கள் போராடி வணங்குதற்குரியவர்கள் ஆனார்களோ அந்த இலட்சியத்தையும் நோக்கத்தையும் அடுத்த தலைமுறைக்கு கடத்தாமையே இந்தத் துயரத்துக்கு காரணமாகும் ! நிற்க . பிறந்த போதே உயிருடனும் உணர்வுடனும் பிணைக்கப்பட்ட தாய் மொழி யாவர்க்கும் உன்னதமானதும் உயர்வானதுமே ! எந்த மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவரும் அம்மொழியிலேயே உரையாடவும் வழிபடவும் உத்தியோகபூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இருக்கின்ற உரிமையை தவிர்ப்பதை எம்மடத்தனமாகவே கொள்ளவேண்டும் ! அதிலும் குறிப்பாகத் தமிழர்களே இந்த மடத்தனத்தை தெரிந்தோ தெரியாமலோ அந்நிய ஆட்சியின் அடிமைத்தனத்தின் நீட்சியாகவோ கைக்கொண்டு வருகின்றனர் ! வழிபட ஒருமொழி கையொப்பமிட ஒருமொழி உரையாட ஒருமொழி என்று பட்டியல் நீளும் ! மொழிக்கடத்துகையை அடுத்த தலைமுறைக்குக் கையளிப்பதில் ஒரு கனதியான கருவியே வழிபாடாகும் ! இளவயதில் இருந்து இருகரம் குவித்து இறைவனைத் தம்மொழியால் வழிபடுவதே தாய்மொழியின் மீதான பற்றுதலை பக்தியோடு வளர்ப்பதற்கு உந்துதல் தரும் ! தென்னாடு முன்னெடுக்கும் தமிழ் வழிபாடும் தென்புல போற்றுதலும் இந்த தாய்மொழியின் உன்னத உயர்வுகளை அடுத்த தலைமுறைக்கு திரிபுகளோ கொள்கைப் பிறழ்வுகளோ இன்றிக்கொடுப்பதற்கேயாகும் . உலக தாய்மொழித்தினத்தில் உலக மொழிகளுக்கெல்லாம் தாயான மொழியை தாய்மொழியாக கொண்ட ஒவ்வொருதமிழனும் தெளிந்த பார்வையோடு தாய்மொழிச்செயற்பாடுகளை முன்னெடுக்க முயல வேண்டும் ! கருமுதல் கருவறை வரை தமிழ் ஒலித்தால் திருவும் சிறப்பும் பெருகும் என்பதை எங்கள் வீட்டுக் குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுப்போம் ! நாளை தமிழில் அவர்கள் இடப்போகும் கையெழுத்து எதிர்கால தமிழ் பிள்ளைகளின் தலையெழுத்தை மாற்றட்டும் ! சைவ மாணவர் சபை - சிவத்தொண்டர்கள் பிரதித் தலைவர் சிவத்திரு.மு . ஒளியரசன் நிர்வாகச் செயலாளர் சிவத்திரு.வ.தமிழரசன் பொதுச் செயலாளர் சிவத்திரு.அ.இசையமுதன் தென்னாடு பொருளாளர் சிவத்திரு.தி . கௌரீசன் சிவபுராணம் சிவனது அனாதி முறைமையான பழமை ( திருப்பெருந்துறையில் அருளியது ) கும்பம் நல்லோரை மாசித் திங்கள் 2021 ( கலிவெண்பா ) திருச்சிற்றம்பலம் நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க புறத்தார்க்குச் சேயோன்தன் பூங்கழல்கள் வெல்க கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க சிரங்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல்வெல்க ஈசன் அடிபோற்றி எந்தைஅடி போற்றி தேசன் அடிபோற்றி சிவன்சே வடிபோற்றி நேயத்தே நின்ற நிமலன் அடிபோற்றி மாயப் பிறப்பறுக்கும் மன்னன் அடிபோற்றி சீரார் பெருந்துறைநம் தேவன் அடிபோற்றி ஆராத இன்பம் அருளும்மலை போற்றி சிவன் அவன்என் சிந்தையுள் நின்ற அதனால் அவன் அருளாலே அவன்தாள் வணங்கிச் சிந்தை மகிழச் சிவபுரா ணம்தன்னை முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன்யான் கண்நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி எண்ணுதற்கு எட்டா எழிலார் கழல்இறைஞ்சி விண்நிறைந்து மண்நிறைந்து மிக்காய் விளங்குஒளியாய் எண்ணிறந்து எல்லை இலாதானே நின்பெருஞ்சீர் பொல்லா வினையேன் புகழும்ஆறு ஒன்று அறியேன் புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல்அசுர ராகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன் எம்பெருமான் மெய்யேஉன் பொன்னடிகள் கண்டுஇன்று வீடுற்றேன் உய்யஎன் உள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள் ஐயா ! எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே வெய்யாய் தணியாய் இயமானன் ஆம்விமலா பொய்யா யினஎல்லாம் போயகல வந்தருளி மெய்ஞ்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே ஆக்கம் அளவு இறுதி இல்லாய் அனைத்துலகும் ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருவாய் போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பில் நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே மாற்றம் மனம்கழிய நின்ற மறையோனே கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச் சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான் நிறங்கள்ஓர் ஐந்துடையாய் விண்ணோர்கள் ஏத்த மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் தன்னை மறைந்திட மூடிய மாய இருளை அறம்பாவம் என்னும் அருங்கயிற்றால் கட்டிப் புறந்தோல்போர்த்து எங்கும் புழுஅழுக்கு மூடி மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய விலங்கு மனத்தால் விமலா உனக்கு கலந்தஅன் பாகிக் கசிந்துஉள் உருகும் நலன்தான் இலாத சிறியேற்கு நல்கி நிலந்தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காஅட்டி நாயில் கடையாய்க் கிடந்த அடியேற்குத் தாயில் சிறந்த தயாவான தத்துவனே மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே தேசனே தேனார் அமுதே சிவபுரனே பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே நேச அருள்புரிந்து நெஞ்சில்வஞ் சங்கெடப் பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே நீராய் உருக்கிளன் ஆருயிராய் நின்றானே இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே அன்பருக்கு அன்பனே யாவையுமாய் அல்லையுமாம் சோதியனே துன்இருளே தோன்றாப் பெருமையனே ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே ஈர்த்துஎன்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே கூர்த்தமெய்ஞ் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தின் நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே காக்கும்எம் காவலனே காண்பரிய பேரொளியே ஆற்றின்ப வெள்ளமே அத்தாமிக் காய்நின்ற தோற்றச் சுடரொளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய் மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம் தேற்றனே தேற்றத் தெளிவே என்சிந்தனையுள் ஊற்றான உண்ணார் அமுதே உடையானே வேற்று விகார விடக்குடம்பின் உட்கிடப்ப ஆற்றேன்எம் ஐயா அரனே ' ' என்றென்று போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்ஆனார் மீட்டுஇங்கு வந்து வினைப்பிறவி சாராமே கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே நள்ளிருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே . தில்லையுள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே அல்லற் பிறவி அறுப்பானே ' ஓ'என்று சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச் சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்ப் பல்லோரும் ஏத்தப் பணிந்து திருச்சிற்றம்பலம்