தென்னாடு மாசித் திங்கள் இதழ் - 05

தெ 06 தென்னாடு கும்பம் நல்லோரை மாசித் திங்கள், 2021 சிவபூமியில் சிவனைத் தேடி - மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சரம் கல் நந்தி புல் உண்ட அதிசயம் u the தொன்று தொட்டுச் சைவமும் தமிழும் குழுமி வளர்ந்த ஈழத்துப் புண்ணிய பூமியிலே பால், தயிர், தேன், பாடும் மீன் என்பவற்றுக்குப் புகழ்பெற்ற மட்டக்களப்பு மண்ணில் வரலாற்றுச் சிறப்பும், தொன்மையும் மிக்க புகழ்பூத்த முதன்மை யான சிவன் கோவிலாக கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சரம் விளங்குகின்றது. இப்பதி மட்டு நகரிலிருந்து தெற்கே மண்முனைத்துறை யினூடாகச் சுமார் 13 கி.மீ தூரத்தில் அமைந்துள் ளது. கொக்கட்டி மரங்கள் நிறைந்த சோலையில் சுயம்புலிங்கமாக மூர்த்தி எழுந்தருளியுள்ளமையால் இப்பதிக்கு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச் சரம் என்ற நாமம் பெயர் உருவாயிற்று. இப்பதியின் வரலாற்றினைப் பற்றிப் பல கர்ண பரம்பரைக் கதைகளிலும், கல்வெட்டுத் தகவல் களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட மட்டக்களப்பு மான்மியம் எனும் வரலாற்று நூ லிலும் இருந்து அறியக்கூடிய செய்திகள் உள்ளன. திருமூலர் இலங்கைத் திருநாட்டை 'சிவபூமி' எனும் சிறப்பித்தமைக்கு ஏற்றால் போல் கிழக்கிலங்கையிலும் சிவலிங்க வணக்கமே காலுான்றிக் கிடந்துள்ளது. அதற்கமைய கொக் கட்டி மரக்காட்டுச்சூழலில் தான்தோன்றியாய் அமைந்த லிங்கத்தை வேடர்கள் கொத்துப் பந்தலிட்டு நீண்ட காலமாய் வழிபட்டு வந்தன ரென்பது நெடுங்காலச் செவிவழி மரபுக் கதையாகும். இது செவிவழி மரபுக்கதையாக இருப்பினும் தொன்மைக் காலத் தமிழர்களின் கொடிநிலை, கந்தழி, வள்ளி வணக்க முறையின் எச்சமே கொக்கட்டி மர அடியில் உருவான சிவலிங்க வழிபாடு. அதுவே பின்னாளில் திருத்தல மாக உயர்வு பெற்றது என்பதை ஊகித்துக் கொள்ள முடிகின்றது. இவ்வரலாற்றினைக் கொக்கட்டியார் மரபோடு திருவேட்டைக்காவியம் தொடர்புபடுத் திக் கூறுகின்றது. மற்றும் மட்டக்களப்பு மான்மியத்தில் வரும் "பெரிய கல்வெட்டு' பாடலில் மண்முனைப் பிரதேசத்தை ஆட்சி புரிந்த உலகநாச்சி எனும் அரசியால் அமைக்கப்பட்ட இரு சிவாலயங்களுள் ஒன்று கொக்கட்டிச்சோலை கோயில் என்று கூறப்படுகின்றது. மேற்படி கூறப்பட்ட தகவல் மகாவம்ச நூலிலும் ஒத்திருக்கிறது. பெரிய கல்வெட்டுத் தகவலின்படி "ஒரிசா நகரில் இருந்து அனேக குடும்பங்களை அழைத்துக் காப்பு முனைக்காட்டை அழித்துச் செப்பனிட்டுக் குடியேற்றி, அப்பதிக்கு அரசனாக்கி மண்முனை யென பெயர்சூட்டி வாழுங்காலம் காப்பு முனைக் குத் தென்பாகமாயுள்ள காடுகளை அழிக்கும் போது திகடன் என்பவன் கொக்கட்டி மரத்தை வெட்ட உதிரம் பாய்ந்தது. அதைக் கண்ட திகடன் தனது உடைத்துகிலால் மரத்து வெட்டு வாயைக் கட்டி வைத்துவிட்டு வந்து உலகநாச்சியிடம் செய்தியைக் கூறினான். உலகநாச்சியும் அந்த இடத்திற்குச் சென்று பார்த்த போது மரத்தடியில் ஒரு லிங்கம் இருந்தது. உலகநாச்சி வனத்தினை அழித்து, இலிங்கத்தின் தூசி நீக்கி ஆலயமியற்றி, வடநாட்டுக் கொல்லடத் திலிருந்து பட்டர் மூவரை வரவழைத்துப் பூசை புரியும்படி அமர்த்தினார்” என்று சொல்லப்பட்டி ருக்கிறது. புல் உண்ட கல் நந்தி - அதிசயம் போர்த்துக்கேயர் இலங்கையைக் கைப்பற்றி கிழக்கில் ஆதிக்கம் செலுத்திய காலகட்டத்தில் பல சைவக் கோயில்கள் இடித்தழிக்கப்பட்டன. இந்நிலையில் இந்தக் கோயிலையும் போர்த்துக் கேயர் முற்றுகையிட்டனர். அப்போது கோயிலைச் சுற்றிப் பார்த்த போர்த்துக்கேயத் தளபதி கல்லில் செதுக்கிய நந்தியை கண்ணுற்று, இந்த நந்தி புல் உண்ணுமா என்று பூசகரிடம் வினாவினான். அதற்கு பூசகர் இந்நந்தி ஒரு நாளைக்கு ஒரு தடவைதான் புல் உண்ணும், இன்றைக்கு ஏற்கனவே உண்டுவிட்டது எனக்கூறினார்.தளபதி நாளை வருகின்றேன் என்று கூறி மறுநாள் வந்து நிற்க பூசகர் நந்திக்கு புல் கொடுக்க அது உயிர் பெற்று எழுந்து புல்லை உண்டு பின் சாணம் போட்டு அதன்பின் மீண்டும் கல் நந்தியானது. இதனைக் கண்ணுற்ற தளபதி இந்தக்கோவிலை அழிக்காது விட்டான் என்று இன்றும் செவி வழிக்கதைகள் கூறுகின்றன. இதற்குச் சாட்சியாக இன்றும் அந்த நந்தி காட்சி தருகின்றது. கட்டட அமைப்பு இக்கோயிலில் காலத்துக்குக் காலம் திருப்பணி வேலைகள் நடைபெற்று வந்துள்ளன. அதனால் அதன் கட்டட அமைப்பும் ஏனைய நுண்கலை மரபுகளும் அவ்வப்போது மாற்றமடைந்துள்ளன. இதன் அமைப்பினை நோக்கும் போது அது பாண்டியர் கால முறைமையில் அமைந்ததென்று பெரும்பாலான வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். தொல்லியர் ஆய்வாளர் க. தங்கேஸ்வரி அவர்களின் கூற்றுப்படி ஆலயத்தின் ஆதிமூலம், அந்தராளம், அர்த்தமண்டபம் என்பன பாண்டியர் காலத்திற் குரியது என்கிறார். எனவே இந்தக் கோவிலின் நிலையான கட்டடம் கி.பி 11 ஆம், 12 ஆம் நூ ற்றாண்டு காலத்தில் அமைக்கப்பட்டதாக இருக்க வேண்டும் எனக் கருதமுடிகிறது. பழைய கோயிலில் இரண்டு சுற்றுமதில்கள் மற்றும் சிவன் கோயிலுடன் சேர்ந்து வடக்கில் அம்மன் கோயில், பிள்ளையார் கோயில் மற்றும் முருகன் கோயில்கள் என்பனவும் இருந்தன.1978 ஆம் ஆண்டு ஏற்பட்ட சூறாவளியில் பாதிப்படைந்த இக்கோயிலில் பரிவாரத் தெய்வங்களுக்கான சன்னதிகள், இராச கோபுரம், மணித்தூண்கள் என்பன புதிதாக அமைக்கப்பட்டு, 1998ஆம் ஆண்டு குடமுழுக்கு இடம்பெற்றதோடு, அதன் நினைவாக 'தேரோட்டம்' எனும் சிறப்பு மலரும் வெளியிடப்பட்டது. மற்றும் கோயிலின் விமானம், கோபுரம் ஆகிய உறுப்புக்களில் சிற்பாகமம் விதிமுறைகளைத் தழுவிய சிற்பங்களும், மண்டபச் சுவரில் தல வரலாற்றுடன் தொடர்புடைய அழகான ஓவியங்களும் தீட்டப்பட்டுள்ளன. கோயிலின் தேரோட்ட நிகழ்விற்கு சித்திரத் தேர், பிள்ளையார் தேர் என இரண்டு தேர்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பூசைகளும், விழாக்களும் நாள்தோறும் மூன்று வேளை பூசையும் மேலாக சுக்கிரவாரப் பூசையும் சிறப்பாக நிகழ்ந்து வருகின்றது. கோயிலின் வருடாந்த திருவிழா ஆவணி உத்தரம் நாண்மீன் அன்று கொடியேற் றப்பட்டு நிறைமதியை அடுத்து வரும் ஞாயிறு தேரோட்டமும், மறுநாள் நீராடற் திருவிழாவும் என 16 நாட்கள் திருவிழா நடைபெறும். தேரோட்டத்தை அடுத்து மறுநாள் அதிகாலை திருவேட்டை நிகழ்ச்சி நடைபெறும். அதில் திருவேட்டைப்பதிகம் பாடப்படும். அதனைத் தொடர்ந்து மட்டு மண்ணில் வாழும் ஏறத்தாள 140 சாதிப்பிரிவுகளுக்கும் திருக்குடுக்கை (முட்டி) வழங்கி கௌரவிக்கும் திருவருட் படையல் நிகழ்வு நடைபெறும். இவை கலிங்க மாகோன் வகுத்த சட்டமாகும். இதனாலேயே இக்கோயிலை "தேசத்துக் கோயில்' என்றும், 'திருப்படைக் கோயில்' என்றும் புகழ்ந்து பேசுவர். சைவப்பலவர் சுந்தரமூர்த்தி துஷ்யந்த் இவை தவிர தைப்பொங்கல், அலைமாணி முதுகலைமணி மாசிமகம், சிவனிரவு, சித்திரை வருடப்பிறப்பு, ஆனி உத்தரம், ஆடி மறைமதி திருக்கார்த்திகை, பெருங்கதை விரதம், திருவாதிரை ஆகிய விழாக்களும் விரதங்களும் கொண்டாடப்பட்டு வருகின்றன. மற்றும் இங்குள்ள மக்களின் வாழ்வியலோடு தொடர்புபட்ட புதிரெடுத்தல், புதிறுண்ணல், கறியமுது படையல், மழை வேண்டி அமுது செய்தல் முதலிய காரியங்களையும் இவ் ஆலய வழிபாட்டுடன் தொடர்புபடுத்தி நீண்ட காலமாக கொண்டாடி வருவதையும் காணலாம். இங்கு சங்கமர் எனும் வீரசைவ மரபில் வந்த குருக்கள் மாரே பூசைகளை நிறைவேற்றி வருகின்றார்கள். பொதுவாக இந் நடைமுறை நெடுங்காலமாக கைக்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. மாகோன் வகுத்த வன்னிமை இக்கோயிலுக்கு குளக்கோட்டன், விமலதர்ம சூரியன், விக்கிரம சிங்கன் போன்ற மன்னர்கள், உலகநாச்சி எனும் அரசி போன்றவர்கள் ஆதரவு பல நல்கியிருந்தாலும், குளக்கோட்டன் குறிப்பாகத் திருகோணமலை மண்ணில் பல திருக்கோயிற் திருப்பணிகள் புரிந்தது போல மட்டக்களப்பு கோயில்களுக்கு மாகோன் புரிந்த மகத்தான பணிகள் தலை சிறந்தவை. மட்டக்களப்பு மான்மியம் எனும் நூலில் வரும் குளிக்கல்வெட்டு, பெரிய கல்வெட்டு, பங்குகூறும் கல்வெட்டு, சாதித் தெய்வ கல்வெட்டு, ஆசாரிகள் கல்வெட்டு முதலிய பாடல்களில் மாகோனின் நடைமுறைகள் விளக்கப்பட்டுள்ளன. 'முக்குகர் வன்னிமை' என்ற பகுதியில் கொக்கட்டிச்சோலைக்கு ஏற்படுத்திய கோயில் நடைமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளது. "சீர்தாங்கு வில்லவரும் பணிக்கனாரும் சிறந்த சட்டிலான், தனஞ்சயன்றன் கார்தாங்கு மாளவன், சங்கு பயத்தன் கச்சிலாகுடி முற்குகரின் மேழேகாண்" முற்குகரின் ஏழுகுடிகளான வில்லவன், பணிக்கன், சட்டிலான், தனஞ்சயன், மாளவன், சங்கு பயத்தன், கச்சிலான் ஆகியோர் கோயில் நிர்வாகத்திற்குப் பொறுப்பானவர்கள். இவர்களின் நடைமுறைகள் இன்றுவரை கடைப்பிடிக்கப்பட்டு வருவதையும் அவதானிக்கலாம். கோயிலின் அன்றாட நடைமுறைகளைச் செயற்படுத்துவதற்கு முற்குகர் குல வண்ணக்கர் மூவர் தொன்று தொட்டு நியமிக்கப்பட்டு வருகின்றனர். எல்லாச் சாதியினருக்கும் கோயில் திருத்தொண்டு செய்வதற்கும் திட்டம் வகுத்திருந்தான் என்பதை "சொல்லரிய விளக்கேற்றல் பூவெடுத்தல் தூசகற்றல் சாணமிடல் அணிவிளக்கல் நல்ல மலர் மாலை கட்டல்...” என்ற நீண்ட கல்வெட்டுப்பாடல் சான் றுரைக்கின்றது. கோயில் இலக்கியங்கள் ஈழத்தின் பழமைமிக்க சிவ ஈச்சரங்களில் கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சரமும் ஒன்று. கிழக்கிலங்கை மக்களின் பழைமையும் பத்தியும் மிக்க கோயிலாகவும், திருப்படைக் கோயில்களில் மூத்த கோயிலாகவும், சிறப்புமிக்க பாரம்பரியங்களைக் கொண்ட கோயிலாகவும் அடையாளம் பெற்றுள்ளது. இலங்கையில் தான் தோன்றி ஈச்சரங்கள் இரண்டு உள்ளன. அவற்றுள் ஒன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒட்டுசுட்டான் தான்தோன்றீச்சரம் மற்றையது மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சரம். மற்றும் மட்டுநகரில் தேரோடும் முதற்சிவத்தலம் என்ற பெருமையையயும், வீரசைவத் தமிழ் மரபை நீண்ட காலம் தொட்டு விளக்கி நிற்கும் திருக்கோயி லாகவும் விளங்கி நிற்பதையும் காண முடிகின்றது. தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்கும் இறைவா போற்றி
தெ 06 தென்னாடு கும்பம் நல்லோரை மாசித் திங்கள் 2021 சிவபூமியில் சிவனைத் தேடி - மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சரம் கல் நந்தி புல் உண்ட அதிசயம் u the தொன்று தொட்டுச் சைவமும் தமிழும் குழுமி வளர்ந்த ஈழத்துப் புண்ணிய பூமியிலே பால் தயிர் தேன் பாடும் மீன் என்பவற்றுக்குப் புகழ்பெற்ற மட்டக்களப்பு மண்ணில் வரலாற்றுச் சிறப்பும் தொன்மையும் மிக்க புகழ்பூத்த முதன்மை யான சிவன் கோவிலாக கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சரம் விளங்குகின்றது . இப்பதி மட்டு நகரிலிருந்து தெற்கே மண்முனைத்துறை யினூடாகச் சுமார் 13 கி.மீ தூரத்தில் அமைந்துள் ளது . கொக்கட்டி மரங்கள் நிறைந்த சோலையில் சுயம்புலிங்கமாக மூர்த்தி எழுந்தருளியுள்ளமையால் இப்பதிக்கு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச் சரம் என்ற நாமம் பெயர் உருவாயிற்று . இப்பதியின் வரலாற்றினைப் பற்றிப் பல கர்ண பரம்பரைக் கதைகளிலும் கல்வெட்டுத் தகவல் களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட மட்டக்களப்பு மான்மியம் எனும் வரலாற்று நூ லிலும் இருந்து அறியக்கூடிய செய்திகள் உள்ளன . திருமூலர் இலங்கைத் திருநாட்டை ' சிவபூமி ' எனும் சிறப்பித்தமைக்கு ஏற்றால் போல் கிழக்கிலங்கையிலும் சிவலிங்க வணக்கமே காலுான்றிக் கிடந்துள்ளது . அதற்கமைய கொக் கட்டி மரக்காட்டுச்சூழலில் தான்தோன்றியாய் அமைந்த லிங்கத்தை வேடர்கள் கொத்துப் பந்தலிட்டு நீண்ட காலமாய் வழிபட்டு வந்தன ரென்பது நெடுங்காலச் செவிவழி மரபுக் கதையாகும் . இது செவிவழி மரபுக்கதையாக இருப்பினும் தொன்மைக் காலத் தமிழர்களின் கொடிநிலை கந்தழி வள்ளி வணக்க முறையின் எச்சமே கொக்கட்டி மர அடியில் உருவான சிவலிங்க வழிபாடு . அதுவே பின்னாளில் திருத்தல மாக உயர்வு பெற்றது என்பதை ஊகித்துக் கொள்ள முடிகின்றது . இவ்வரலாற்றினைக் கொக்கட்டியார் மரபோடு திருவேட்டைக்காவியம் தொடர்புபடுத் திக் கூறுகின்றது . மற்றும் மட்டக்களப்பு மான்மியத்தில் வரும் பெரிய கல்வெட்டு ' பாடலில் மண்முனைப் பிரதேசத்தை ஆட்சி புரிந்த உலகநாச்சி எனும் அரசியால் அமைக்கப்பட்ட இரு சிவாலயங்களுள் ஒன்று கொக்கட்டிச்சோலை கோயில் என்று கூறப்படுகின்றது . மேற்படி கூறப்பட்ட தகவல் மகாவம்ச நூலிலும் ஒத்திருக்கிறது . பெரிய கல்வெட்டுத் தகவலின்படி ஒரிசா நகரில் இருந்து அனேக குடும்பங்களை அழைத்துக் காப்பு முனைக்காட்டை அழித்துச் செப்பனிட்டுக் குடியேற்றி அப்பதிக்கு அரசனாக்கி மண்முனை யென பெயர்சூட்டி வாழுங்காலம் காப்பு முனைக் குத் தென்பாகமாயுள்ள காடுகளை அழிக்கும் போது திகடன் என்பவன் கொக்கட்டி மரத்தை வெட்ட உதிரம் பாய்ந்தது . அதைக் கண்ட திகடன் தனது உடைத்துகிலால் மரத்து வெட்டு வாயைக் கட்டி வைத்துவிட்டு வந்து உலகநாச்சியிடம் செய்தியைக் கூறினான் . உலகநாச்சியும் அந்த இடத்திற்குச் சென்று பார்த்த போது மரத்தடியில் ஒரு லிங்கம் இருந்தது . உலகநாச்சி வனத்தினை அழித்து இலிங்கத்தின் தூசி நீக்கி ஆலயமியற்றி வடநாட்டுக் கொல்லடத் திலிருந்து பட்டர் மூவரை வரவழைத்துப் பூசை புரியும்படி அமர்த்தினார் என்று சொல்லப்பட்டி ருக்கிறது . புல் உண்ட கல் நந்தி - அதிசயம் போர்த்துக்கேயர் இலங்கையைக் கைப்பற்றி கிழக்கில் ஆதிக்கம் செலுத்திய காலகட்டத்தில் பல சைவக் கோயில்கள் இடித்தழிக்கப்பட்டன . இந்நிலையில் இந்தக் கோயிலையும் போர்த்துக் கேயர் முற்றுகையிட்டனர் . அப்போது கோயிலைச் சுற்றிப் பார்த்த போர்த்துக்கேயத் தளபதி கல்லில் செதுக்கிய நந்தியை கண்ணுற்று இந்த நந்தி புல் உண்ணுமா என்று பூசகரிடம் வினாவினான் . அதற்கு பூசகர் இந்நந்தி ஒரு நாளைக்கு ஒரு தடவைதான் புல் உண்ணும் இன்றைக்கு ஏற்கனவே உண்டுவிட்டது எனக்கூறினார்.தளபதி நாளை வருகின்றேன் என்று கூறி மறுநாள் வந்து நிற்க பூசகர் நந்திக்கு புல் கொடுக்க அது உயிர் பெற்று எழுந்து புல்லை உண்டு பின் சாணம் போட்டு அதன்பின் மீண்டும் கல் நந்தியானது . இதனைக் கண்ணுற்ற தளபதி இந்தக்கோவிலை அழிக்காது விட்டான் என்று இன்றும் செவி வழிக்கதைகள் கூறுகின்றன . இதற்குச் சாட்சியாக இன்றும் அந்த நந்தி காட்சி தருகின்றது . கட்டட அமைப்பு இக்கோயிலில் காலத்துக்குக் காலம் திருப்பணி வேலைகள் நடைபெற்று வந்துள்ளன . அதனால் அதன் கட்டட அமைப்பும் ஏனைய நுண்கலை மரபுகளும் அவ்வப்போது மாற்றமடைந்துள்ளன . இதன் அமைப்பினை நோக்கும் போது அது பாண்டியர் கால முறைமையில் அமைந்ததென்று பெரும்பாலான வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர் . தொல்லியர் ஆய்வாளர் . தங்கேஸ்வரி அவர்களின் கூற்றுப்படி ஆலயத்தின் ஆதிமூலம் அந்தராளம் அர்த்தமண்டபம் என்பன பாண்டியர் காலத்திற் குரியது என்கிறார் . எனவே இந்தக் கோவிலின் நிலையான கட்டடம் கி.பி 11 ஆம் 12 ஆம் நூ ற்றாண்டு காலத்தில் அமைக்கப்பட்டதாக இருக்க வேண்டும் எனக் கருதமுடிகிறது . பழைய கோயிலில் இரண்டு சுற்றுமதில்கள் மற்றும் சிவன் கோயிலுடன் சேர்ந்து வடக்கில் அம்மன் கோயில் பிள்ளையார் கோயில் மற்றும் முருகன் கோயில்கள் என்பனவும் இருந்தன .1978 ஆம் ஆண்டு ஏற்பட்ட சூறாவளியில் பாதிப்படைந்த இக்கோயிலில் பரிவாரத் தெய்வங்களுக்கான சன்னதிகள் இராச கோபுரம் மணித்தூண்கள் என்பன புதிதாக அமைக்கப்பட்டு 1998 ஆம் ஆண்டு குடமுழுக்கு இடம்பெற்றதோடு அதன் நினைவாக ' தேரோட்டம் ' எனும் சிறப்பு மலரும் வெளியிடப்பட்டது . மற்றும் கோயிலின் விமானம் கோபுரம் ஆகிய உறுப்புக்களில் சிற்பாகமம் விதிமுறைகளைத் தழுவிய சிற்பங்களும் மண்டபச் சுவரில் தல வரலாற்றுடன் தொடர்புடைய அழகான ஓவியங்களும் தீட்டப்பட்டுள்ளன . கோயிலின் தேரோட்ட நிகழ்விற்கு சித்திரத் தேர் பிள்ளையார் தேர் என இரண்டு தேர்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன . பூசைகளும் விழாக்களும் நாள்தோறும் மூன்று வேளை பூசையும் மேலாக சுக்கிரவாரப் பூசையும் சிறப்பாக நிகழ்ந்து வருகின்றது . கோயிலின் வருடாந்த திருவிழா ஆவணி உத்தரம் நாண்மீன் அன்று கொடியேற் றப்பட்டு நிறைமதியை அடுத்து வரும் ஞாயிறு தேரோட்டமும் மறுநாள் நீராடற் திருவிழாவும் என 16 நாட்கள் திருவிழா நடைபெறும் . தேரோட்டத்தை அடுத்து மறுநாள் அதிகாலை திருவேட்டை நிகழ்ச்சி நடைபெறும் . அதில் திருவேட்டைப்பதிகம் பாடப்படும் . அதனைத் தொடர்ந்து மட்டு மண்ணில் வாழும் ஏறத்தாள 140 சாதிப்பிரிவுகளுக்கும் திருக்குடுக்கை ( முட்டி ) வழங்கி கௌரவிக்கும் திருவருட் படையல் நிகழ்வு நடைபெறும் . இவை கலிங்க மாகோன் வகுத்த சட்டமாகும் . இதனாலேயே இக்கோயிலை தேசத்துக் கோயில் ' என்றும் ' திருப்படைக் கோயில் ' என்றும் புகழ்ந்து பேசுவர் . சைவப்பலவர் சுந்தரமூர்த்தி துஷ்யந்த் இவை தவிர தைப்பொங்கல் அலைமாணி முதுகலைமணி மாசிமகம் சிவனிரவு சித்திரை வருடப்பிறப்பு ஆனி உத்தரம் ஆடி மறைமதி திருக்கார்த்திகை பெருங்கதை விரதம் திருவாதிரை ஆகிய விழாக்களும் விரதங்களும் கொண்டாடப்பட்டு வருகின்றன . மற்றும் இங்குள்ள மக்களின் வாழ்வியலோடு தொடர்புபட்ட புதிரெடுத்தல் புதிறுண்ணல் கறியமுது படையல் மழை வேண்டி அமுது செய்தல் முதலிய காரியங்களையும் இவ் ஆலய வழிபாட்டுடன் தொடர்புபடுத்தி நீண்ட காலமாக கொண்டாடி வருவதையும் காணலாம் . இங்கு சங்கமர் எனும் வீரசைவ மரபில் வந்த குருக்கள் மாரே பூசைகளை நிறைவேற்றி வருகின்றார்கள் . பொதுவாக இந் நடைமுறை நெடுங்காலமாக கைக்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது . மாகோன் வகுத்த வன்னிமை இக்கோயிலுக்கு குளக்கோட்டன் விமலதர்ம சூரியன் விக்கிரம சிங்கன் போன்ற மன்னர்கள் உலகநாச்சி எனும் அரசி போன்றவர்கள் ஆதரவு பல நல்கியிருந்தாலும் குளக்கோட்டன் குறிப்பாகத் திருகோணமலை மண்ணில் பல திருக்கோயிற் திருப்பணிகள் புரிந்தது போல மட்டக்களப்பு கோயில்களுக்கு மாகோன் புரிந்த மகத்தான பணிகள் தலை சிறந்தவை . மட்டக்களப்பு மான்மியம் எனும் நூலில் வரும் குளிக்கல்வெட்டு பெரிய கல்வெட்டு பங்குகூறும் கல்வெட்டு சாதித் தெய்வ கல்வெட்டு ஆசாரிகள் கல்வெட்டு முதலிய பாடல்களில் மாகோனின் நடைமுறைகள் விளக்கப்பட்டுள்ளன . ' முக்குகர் வன்னிமை ' என்ற பகுதியில் கொக்கட்டிச்சோலைக்கு ஏற்படுத்திய கோயில் நடைமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளது . சீர்தாங்கு வில்லவரும் பணிக்கனாரும் சிறந்த சட்டிலான் தனஞ்சயன்றன் கார்தாங்கு மாளவன் சங்கு பயத்தன் கச்சிலாகுடி முற்குகரின் மேழேகாண் முற்குகரின் ஏழுகுடிகளான வில்லவன் பணிக்கன் சட்டிலான் தனஞ்சயன் மாளவன் சங்கு பயத்தன் கச்சிலான் ஆகியோர் கோயில் நிர்வாகத்திற்குப் பொறுப்பானவர்கள் . இவர்களின் நடைமுறைகள் இன்றுவரை கடைப்பிடிக்கப்பட்டு வருவதையும் அவதானிக்கலாம் . கோயிலின் அன்றாட நடைமுறைகளைச் செயற்படுத்துவதற்கு முற்குகர் குல வண்ணக்கர் மூவர் தொன்று தொட்டு நியமிக்கப்பட்டு வருகின்றனர் . எல்லாச் சாதியினருக்கும் கோயில் திருத்தொண்டு செய்வதற்கும் திட்டம் வகுத்திருந்தான் என்பதை சொல்லரிய விளக்கேற்றல் பூவெடுத்தல் தூசகற்றல் சாணமிடல் அணிவிளக்கல் நல்ல மலர் மாலை கட்டல் ... என்ற நீண்ட கல்வெட்டுப்பாடல் சான் றுரைக்கின்றது . கோயில் இலக்கியங்கள் ஈழத்தின் பழமைமிக்க சிவ ஈச்சரங்களில் கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சரமும் ஒன்று . கிழக்கிலங்கை மக்களின் பழைமையும் பத்தியும் மிக்க கோயிலாகவும் திருப்படைக் கோயில்களில் மூத்த கோயிலாகவும் சிறப்புமிக்க பாரம்பரியங்களைக் கொண்ட கோயிலாகவும் அடையாளம் பெற்றுள்ளது . இலங்கையில் தான் தோன்றி ஈச்சரங்கள் இரண்டு உள்ளன . அவற்றுள் ஒன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒட்டுசுட்டான் தான்தோன்றீச்சரம் மற்றையது மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சரம் . மற்றும் மட்டுநகரில் தேரோடும் முதற்சிவத்தலம் என்ற பெருமையையயும் வீரசைவத் தமிழ் மரபை நீண்ட காலம் தொட்டு விளக்கி நிற்கும் திருக்கோயி லாகவும் விளங்கி நிற்பதையும் காண முடிகின்றது . தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்கும் இறைவா போற்றி