தென்னாடு சித்திரைத் திங்கள் இதழ் - 07

தென்னாடு ஈசனைத் தேடிய தென்னாட்டுப் பயணம்- அருள்மிகு தையல்நாயகி உடனுறை வைத்தியநாத சுவாமி திருக்கோயில் - புள்ளிருக்குவேளூர் தேவாரப் பாடல்பெற்ற சிவபுரங்களில் 16வது திருக்கோயில் மேழம் நல்லோரை சித்திரைத் திங்கள், 2021 அமைவிடம்: மயிலாடுதுறை மாவட்டம் - தமிழ்நாடு தேவாரப் பாடல்களில் திருபுள்ளிருக்குவேளூர் என்று குறிப்பிடப்பட்ட சிவத்தலம் தற்போது வைத்தீசுவரன் கோவில் என்று வழங்கப்படுகிறது. சீர்காழியில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ளது. மயிலாடுதுறை, சீர்காழி, கும்பகோணம் மற்றும் தமிழ்நாட்டின் பல முக்கிய ஊர்களில் இருந்து வைத்தீசுவரன் கோவிலுக்கு பேருந்து வசதிகள் இருக்கின்றன. ஒன்பான் கோள்த் (நவக்கிரக) தலங்களில் வைத்தீசுவரன் கோவில் செவ்வாய்த் தலமாக விளங்குகிறது. இத்தல இறைவன் சுயம்பு மூலவராக அருள்பாலிக்கிறார். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 16 வது தேவாரத்தலம் ஆகும். தேவார காலத்தில் புள்ளிருக்குவேளார் என்ற பெயருடனும், இன்று வைத்தீசுவரன் கோயில் என்றும் விளங்கும் இவ்வாலயம் காவிரியின் வடகரையிலுள்ள பாடல் பெற்ற தலமாகும். தலச் சிறப்புக்கள் இங்குள்ள 5 கோபுரங்களும் ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளன. இங்குள்ள மரகதலிங்கம் புகழ்பெற்றது. மூலவருக்கு முன் தங்கம், வெள்ளியால் ஆன இரண்டு கொடிமரங்கள் உள்ளன. பொதுவாக கோயில்களில் ஒன்பது கோள்களும் வேறுவேறு திசையில் இருக்கும். ஆனால் இங்கு ஒன்பது கோள்களும் சிவன் சந்நிதிக்குப் பின்புறம், ஒரே நேர்கோட்டில் நின்று புள்ளிருக்குவேளுாரானுக்கு அடங்கி, கோள்களின் பலனை அடியவர்களுக்கு சாதகமாக்கி நோய்கள் மற்றும் குற்றங்களை நீக்குவதாக நம்பிக்கை. ஒன்பது கோள்களும் ஒரே வரிசையில் தங்களுக்கு உரிய வாகனம்,ஆயுதம் இல்லாமல் நிற்கின்றனர். சடாயு என்னும் புள் (பறவை), இருக்குவேதம், முருகவேள், சூரியன் ஆகிய நால்வரும் இறைவனைப் பூசித்த தலம் என்பதால் புள்ளிருக்குவேளுார் என்ற பெயர் வந்ததாக புராணங்கள் கூறுகின்றன. இத்தலத்திலுள்ள இறைவன் வைத்தியநாதரையும் இறைவி தையல்நாயகியையும் வேண்டித் தொழுதால், எல்லாவகை வியாதிகளும் தீர்ந்துபோகும் அங்காரகனுக்கு தொழு நோய் வந்தது. அப்போது ஆகாயவாணி ஒன்று ஒலித்தது. புள்ளிருக்கு வேளூர் கோயில் சென்று ஒருமண்டலம் சித்தாமுதக் குளத்தில் குளித்துவிட்டு புள்ளிருக்குவேளூரானை வணங்கினால் நோய் குணமாகிவிடும் என்று கேட்டது. இதையடுத்து அங்காரகனும் இங்கு வந்து வழிபட்டு நோய் நீங்கப்பெற்றான். இந்த நோய்க்கு சுவாமி மருந்து தயார் செய்யும்போது, பார்வதிதேவி தைல பாத்திரம் கொண்டு வந்ததால் அம்பாளுக்கு தைல நாயகி என்று பெயர் வந்தது. தோல் நோய் உள்ளவர்கள், இங்குள்ள புனுகு எண்ணெய் வாங்கி தேய்த்து நீராடுகின்றனர். இத்தல இறைவனுக்கு சித்தர்கள் அமுதத்தால் நீராட்டுச் செய்து வழிபட்டு பல வரங்கள் பெற்றனர். அப்போது திருமுன்களை தரிசித்த பலனைத் தரும் என்பது நம்பிக்கை. வைத்தியநாதரும் மேற்கு நோக்கி உள்ளார். இது, முருகப் பெருமான் இறைவனை வழிபட்டு சூரனை அழிக்க வேல் வாங்கிய தலம். இராமர் வழிபட்டு அருள் பெற்ற தலம். தன்வந்திரி சித்தர் முத்தி இன்பம் அடைந்த தலம். இத்தலத்தில் சம்பாதி, சடாயு என்ற கழுகரசர்கள் இறைவனை வழிபட்டு அருள் பெற்றுள்ளனர். சடாயுவின் வேண்டுகோ ளின்படி இராமபிரான் இத்தலத்தில் (திருநீற்றுக் குண்டத்தில்) சிதையடுக்கிச் சாடாயுவின் உடலை வைத்து தகனம் செய்ததனால் இவ்விடம் சடாயு குண்டம் எனப்பட்டது. அலைமகள் திருமுன் உள்ளது. ஒன்பது கோள் தலங்களில் இது அங்காரக (செவ்வாய்) தலம் ஆகும். சிந்திய அமுதம் இங்குள்ள தீர்த்த குளத்திலும் கலந்துள்ளது. அதனால் இக்குளம் சித்தாமுத தீர்த்தம் எனப்படுகிறது. கோயிலின் கிழக்கேயுள்ள நுழைவிடத்தில், ஆதிவைத்தியநாதர் அருள்பாலிக்கி றார். மேற்கு பார்த்த சிவன் செல்வ முத்துக் குமாரராக இத்தலத்தில் முருகன் தன் தகப்பனாரைப் பூசிக்கிறார். தையல் நாயகி அம்மனை வணங்கினால் குழந்தைகளுக்கு உண்டாகும் பாலபீடைகள் (பாலதோசம்) நீங்கும். செவ்வாய்க் கிழமைகளில் ஆடு வாகனத்தில் அங்காரகன் சிவத்திரு குமரேசன் திருமுன்னை வழிபட்டால், அது இராஜசிம்மன் எழுந்தருள்வார். மருத்துவத்துறையில் படிப்ப ஆயிரம் கிழக்கு பார்த்த சிவன் இறைவன்: புள்ளிருக்குவேளுாரான், வைத்தியநாதர், தீராவினை தீர்த்த தம்பிரான் இறைவியார் : தையல்நாயகி கோவயில் மரம் : வேம்பு திருக்குளம் : சித்தாமுதம் வழிபட்டோர் : அருணகிரிநாதர், குமர குருபரர், சிதம்பர முனிவர், காளமேகப்புலவர், இராமலிங்க அடிகள், வடுகநாத தேசிகர், சடாயு,வேதம், முருகன், சூரியன், அங்காரகன், அயன், இராமர்,கலைமகள், இலக்குமி, மலைமகள், பரராச முனிவர், துர்வாச முனிவர் தேவாரப் பாடல்கள் : திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் தலத்தின் மீது தேவார முதலிகளால் பாடப்பட்ட பதிகங்கள் திருஞானசம்பந்தர் பாடிய பதிகம் கள்ளார்ந்த பூங்கொன்றை மதமத்தங் கதிர்மதியம் உள்ளார்ந்த சடைமுடியெம் பெருமானா குறையுமிடந் தள்ளாய சம்பாதி சடாயென்பார் தாமிருவர் புள்ளானார்க் கரையனிடம் புள்ளிருக்கு வேளாரே திருநாவுக்கரசர் பாடிய பதிகம் வெள்ளெருக்கரவம் விரவுஞ்சடைப் புள்ளிருக்கு வேளுாரரன் பொற்கழல் உள்ளிருக்கு முணர்ச்சியில்லாதவர் நள்ளிருப்பர் நரகக் குழியிலே பேரா யிரம்பரவி வானோ ரேத்தும் பெம்மானைப் பிரிவிலா அடியார்க் கென்றும் வாராத செல்வம் வருவிப் பானை மந்திரமுந் தந்திரமும் மருந்து மாகித் தீராநோய் தீர்த்தருள வல்லான் தன்னைத் என்று பத்தர்கள் நம்புகின்றனர். திரிபுரங்கள் தீயெழத்திண் சிலைகைக் கொண்ட போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே இத்தலத்திலுள்ள இறைவன் வைத்தியநாதரையும் இறைவி போரானைப் புள்ளிருக்கு வேஞா ரானைப் தையல்நாயகியையும் வேண்டித் தொழுதால், எல்லாவகை வியாதிகளும் தீர்ந்துபோகும் என்று அடியவர்கள் நம்புகின்றனர். இங்கு புற்று மண், திருமுழுக்குத் தீர்த்தம், வேப்பம் இலை, அப்பனுக்குச் சாத்திய சந்தனம், அப்பனுக்குச் சாத்திய விபூதி இவைகளை கொண்டு "திருச்சாந்து" எனப்படும் உருண்டை தயாரிக்கப்படுகிறது. இதைச் உண்டால் தீராத நோய்கள் எல்லாம் குணமாகும் என்பது நம்பிக்கை. தல வழிபாட்டு முறைகள் வைத்தியநாதருக்கும், தையல்நாயகிக்கும் செல்லப் பிள்ளையாதலால், இங்குள்ள முருகன் "செல்வ முத்துக்குமாரர்" என அழைக்கப்படுகிறார். முருகன், சூரனை அழிப்பதற்காக இத்தல இறைவனைப் பூசித்து வரம் பெற்றுள்ளார். செல்வமுத்துக்குமாரர் சன்னதியில் தினமும் நடக்கும் நள்ளிரவு பூசையின் போது புனுகு, பச்சைக்கற்பூரம், சந்தனம், எலுமிச்சை, பன்னீர், பூ, பால்சாதம், பால் ஆகியவற்றுடன் சிறப்புப் பூசை செய்யப்படும். முருகன் திருவடியில் சாத்தப்படும் சந்தனத்தை வாங்கி சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் உண்டாகும். முருகனுக்கு முக்கியத்துவம் உள்ள தலம் என்பதால், இங்கு அனைத்து விழாக்களும் முத்துக்குமார சுவாமிக்கு தான். தினமும் காலையிலும், நள்ளிரவு பூசையின் போதும் முதலில் முருகனுக்கு பூசை செய்த பிறகே, சிவனுக்கும் அம்மனுக்கும் பூசை நடக்கும். முத்துக்குமாசுவாமிக்கு தைமாதம் செவ்வாய்கிழமை ஆரம்பித்து 10 நாள் விழா நடக்கும். பங்குனித் திருவிழா 28 நாள் நடைபெறும். இங்கே தெ 03 இங்கு வழிபாடு செய்ய ஏராளமாக வருகின்றனர். செவ்வாய்க்கு இத்தலத்தில் தனிச் சந்நிதி உண்டு. செவ்வாய்க்கிழமைகளில் ஆடு வாகனத்தில் அங்காரகமூர்த்தி எழுந்தருள்வார். இத்தலம் ஒரு கோளிலித் தலம் ஆகும். FAALG கோவில் அமைப்பு: நான்கு புறமும் உயர்ந்த மதில்கள் சூழ கிழக்கிலும், மேற்கிலும் இராச கோபுரங்களுடனும், ஐந்து வீதிகளுடனும் கோயில் அமைந்துள்ளது. கிழக்கில் உள்ள 7 நிலை இராசகோபுரம் வழியாக உள்ளே சென்றால் அங்கு காணப்படும் வேப்ப மரமே, இத்தலத்தின் தலமரமாகும். இந்த மரத்தினடியில் ஆதி வைத்தியநாதர் மேற்கே பார்த்தவாறு உள்ளார். எதிரில் வீரபத்திரர் திருமுன் உள்ளது. உள்வாயிலைக் கடந்ததும் தண்டபாணி திருமுன் உள்ளது. மேற்கு இராசகோபுரம் வழியாக உள்ளே நுழைந்தால், மூலவர் வைத்தியநாதர் மேற்கே பார்த்தவாறு காட்சி தருகிறார். சுவாமி திருமுன்னிற்கு நேரில் இரு கொடிமரங்கள் உள்ளன. இறைவி தையல்நாயகியின் திருமுன் தெற்கு நோக்கி அமைந்துள்ளது. இறைவியின் திருமுன்னிற்கு அருகில் இத்தலத்தின் முருகக் கடவுள் முத்துக்குமாரசுவாமி என்ற பெயரில் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். குமரகுருபர சுவாமிகள் இத்தலத்து முத்துக்குமார சுவாமியின் மீது பிள்ளைத்தமிழ் பாடியுள்ளார். அருண கிரியாரும் இத்தலத்து முருகனைப் பாடியுள்ளார். கார்த்திகை தினத்தன்று முத்துக்குமாரசுவாமிக்கு சிறப்புப் பூசைகள், சந்தன நீராட்டு முதலியன நடைபெறும். நள்ளிரவு பூசையில் செல்வ முத்துக்குமாரசுவாமிக்கு வழிபாடு நடந்த பிறகே சுவாமிக்கு வழிபாடு நடைபெறும். கோயிலின் தெற்கு வீதியில் சடாயு குண்டம் என்ற இடமுள்ளது. சடாயு இராவணனுடன் போர் புரிந்து மாண்ட ஊர் இது எனவும், அந்த சடாயுவிற்கு இராமனும், இலக்குமணனும் இத்தலத்தில் தினச் சடங்குகளைச் செய்தனர் என்றும் புராணங்கள் கூறுகின்றன. இங்குள்ள சடாயு குண்டத்தில் என்றும் சாம்பல் இருந்துகொண்டே இருக்கும். இச்சாம்பலை இட்டுக் கொள்வதால் வியாதிகள் நீங்கும் என்பதும் நம்பிக்கை. வடக்கு வீதியில் பத்திரகாளியம்மன் சந்நிதி உள்ளது. வீரபத்திரர், அன்னபூரணி, தென்முகக்கடவுள், ஆடல்வல்லான், மலைமகள் மற்றும் அலைமகள் திருமுன்களும் இக்கோயிலில் உள்ளன. நடராச சபையில் சிவகாமி அம்மனுடன் மாணிக்கவாசகரும், காரைக்கால் அம்மையாரும் உள்ளனர். நான்கு மறைகள், அமராவதி, கைலாசநாதர், அங்கயற்கண்ணி உடனுறை சொக்கநாதர், விசுவநாதர் முதலிய பெயர்களில் அமைந்துள்ள சிவலிங்கச் சந்நிதிகளும், 1008 சிவலிங்கமும் வரிசையாகவுள்ளன. சிவத்திரு.குமரேசன் இராஜசிம்மன் உதவிப் பேராசிரியர் SRM கலை மற்றும் அறிவியல் கல்லூரி 919003296221 - easanaithedi.in.
தென்னாடு ஈசனைத் தேடிய தென்னாட்டுப் பயணம் அருள்மிகு தையல்நாயகி உடனுறை வைத்தியநாத சுவாமி திருக்கோயில் - புள்ளிருக்குவேளூர் தேவாரப் பாடல்பெற்ற சிவபுரங்களில் 16 வது திருக்கோயில் மேழம் நல்லோரை சித்திரைத் திங்கள் 2021 அமைவிடம் : மயிலாடுதுறை மாவட்டம் - தமிழ்நாடு தேவாரப் பாடல்களில் திருபுள்ளிருக்குவேளூர் என்று குறிப்பிடப்பட்ட சிவத்தலம் தற்போது வைத்தீசுவரன் கோவில் என்று வழங்கப்படுகிறது . சீர்காழியில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ளது . மயிலாடுதுறை சீர்காழி கும்பகோணம் மற்றும் தமிழ்நாட்டின் பல முக்கிய ஊர்களில் இருந்து வைத்தீசுவரன் கோவிலுக்கு பேருந்து வசதிகள் இருக்கின்றன . ஒன்பான் கோள்த் ( நவக்கிரக ) தலங்களில் வைத்தீசுவரன் கோவில் செவ்வாய்த் தலமாக விளங்குகிறது . இத்தல இறைவன் சுயம்பு மூலவராக அருள்பாலிக்கிறார் . சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 16 வது தேவாரத்தலம் ஆகும் . தேவார காலத்தில் புள்ளிருக்குவேளார் என்ற பெயருடனும் இன்று வைத்தீசுவரன் கோயில் என்றும் விளங்கும் இவ்வாலயம் காவிரியின் வடகரையிலுள்ள பாடல் பெற்ற தலமாகும் . தலச் சிறப்புக்கள் இங்குள்ள 5 கோபுரங்களும் ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளன . இங்குள்ள மரகதலிங்கம் புகழ்பெற்றது . மூலவருக்கு முன் தங்கம் வெள்ளியால் ஆன இரண்டு கொடிமரங்கள் உள்ளன . பொதுவாக கோயில்களில் ஒன்பது கோள்களும் வேறுவேறு திசையில் இருக்கும் . ஆனால் இங்கு ஒன்பது கோள்களும் சிவன் சந்நிதிக்குப் பின்புறம் ஒரே நேர்கோட்டில் நின்று புள்ளிருக்குவேளுாரானுக்கு அடங்கி கோள்களின் பலனை அடியவர்களுக்கு சாதகமாக்கி நோய்கள் மற்றும் குற்றங்களை நீக்குவதாக நம்பிக்கை . ஒன்பது கோள்களும் ஒரே வரிசையில் தங்களுக்கு உரிய வாகனம் ஆயுதம் இல்லாமல் நிற்கின்றனர் . சடாயு என்னும் புள் ( பறவை ) இருக்குவேதம் முருகவேள் சூரியன் ஆகிய நால்வரும் இறைவனைப் பூசித்த தலம் என்பதால் புள்ளிருக்குவேளுார் என்ற பெயர் வந்ததாக புராணங்கள் கூறுகின்றன . இத்தலத்திலுள்ள இறைவன் வைத்தியநாதரையும் இறைவி தையல்நாயகியையும் வேண்டித் தொழுதால் எல்லாவகை வியாதிகளும் தீர்ந்துபோகும் அங்காரகனுக்கு தொழு நோய் வந்தது . அப்போது ஆகாயவாணி ஒன்று ஒலித்தது . புள்ளிருக்கு வேளூர் கோயில் சென்று ஒருமண்டலம் சித்தாமுதக் குளத்தில் குளித்துவிட்டு புள்ளிருக்குவேளூரானை வணங்கினால் நோய் குணமாகிவிடும் என்று கேட்டது . இதையடுத்து அங்காரகனும் இங்கு வந்து வழிபட்டு நோய் நீங்கப்பெற்றான் . இந்த நோய்க்கு சுவாமி மருந்து தயார் செய்யும்போது பார்வதிதேவி தைல பாத்திரம் கொண்டு வந்ததால் அம்பாளுக்கு தைல நாயகி என்று பெயர் வந்தது . தோல் நோய் உள்ளவர்கள் இங்குள்ள புனுகு எண்ணெய் வாங்கி தேய்த்து நீராடுகின்றனர் . இத்தல இறைவனுக்கு சித்தர்கள் அமுதத்தால் நீராட்டுச் செய்து வழிபட்டு பல வரங்கள் பெற்றனர் . அப்போது திருமுன்களை தரிசித்த பலனைத் தரும் என்பது நம்பிக்கை . வைத்தியநாதரும் மேற்கு நோக்கி உள்ளார் . இது முருகப் பெருமான் இறைவனை வழிபட்டு சூரனை அழிக்க வேல் வாங்கிய தலம் . இராமர் வழிபட்டு அருள் பெற்ற தலம் . தன்வந்திரி சித்தர் முத்தி இன்பம் அடைந்த தலம் . இத்தலத்தில் சம்பாதி சடாயு என்ற கழுகரசர்கள் இறைவனை வழிபட்டு அருள் பெற்றுள்ளனர் . சடாயுவின் வேண்டுகோ ளின்படி இராமபிரான் இத்தலத்தில் ( திருநீற்றுக் குண்டத்தில் ) சிதையடுக்கிச் சாடாயுவின் உடலை வைத்து தகனம் செய்ததனால் இவ்விடம் சடாயு குண்டம் எனப்பட்டது . அலைமகள் திருமுன் உள்ளது . ஒன்பது கோள் தலங்களில் இது அங்காரக ( செவ்வாய் ) தலம் ஆகும் . சிந்திய அமுதம் இங்குள்ள தீர்த்த குளத்திலும் கலந்துள்ளது . அதனால் இக்குளம் சித்தாமுத தீர்த்தம் எனப்படுகிறது . கோயிலின் கிழக்கேயுள்ள நுழைவிடத்தில் ஆதிவைத்தியநாதர் அருள்பாலிக்கி றார் . மேற்கு பார்த்த சிவன் செல்வ முத்துக் குமாரராக இத்தலத்தில் முருகன் தன் தகப்பனாரைப் பூசிக்கிறார் . தையல் நாயகி அம்மனை வணங்கினால் குழந்தைகளுக்கு உண்டாகும் பாலபீடைகள் ( பாலதோசம் ) நீங்கும் . செவ்வாய்க் கிழமைகளில் ஆடு வாகனத்தில் அங்காரகன் சிவத்திரு குமரேசன் திருமுன்னை வழிபட்டால் அது இராஜசிம்மன் எழுந்தருள்வார் . மருத்துவத்துறையில் படிப்ப ஆயிரம் கிழக்கு பார்த்த சிவன் இறைவன் : புள்ளிருக்குவேளுாரான் வைத்தியநாதர் தீராவினை தீர்த்த தம்பிரான் இறைவியார் : தையல்நாயகி கோவயில் மரம் : வேம்பு திருக்குளம் : சித்தாமுதம் வழிபட்டோர் : அருணகிரிநாதர் குமர குருபரர் சிதம்பர முனிவர் காளமேகப்புலவர் இராமலிங்க அடிகள் வடுகநாத தேசிகர் சடாயு வேதம் முருகன் சூரியன் அங்காரகன் அயன் இராமர் கலைமகள் இலக்குமி மலைமகள் பரராச முனிவர் துர்வாச முனிவர் தேவாரப் பாடல்கள் : திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் தலத்தின் மீது தேவார முதலிகளால் பாடப்பட்ட பதிகங்கள் திருஞானசம்பந்தர் பாடிய பதிகம் கள்ளார்ந்த பூங்கொன்றை மதமத்தங் கதிர்மதியம் உள்ளார்ந்த சடைமுடியெம் பெருமானா குறையுமிடந் தள்ளாய சம்பாதி சடாயென்பார் தாமிருவர் புள்ளானார்க் கரையனிடம் புள்ளிருக்கு வேளாரே திருநாவுக்கரசர் பாடிய பதிகம் வெள்ளெருக்கரவம் விரவுஞ்சடைப் புள்ளிருக்கு வேளுாரரன் பொற்கழல் உள்ளிருக்கு முணர்ச்சியில்லாதவர் நள்ளிருப்பர் நரகக் குழியிலே பேரா யிரம்பரவி வானோ ரேத்தும் பெம்மானைப் பிரிவிலா அடியார்க் கென்றும் வாராத செல்வம் வருவிப் பானை மந்திரமுந் தந்திரமும் மருந்து மாகித் தீராநோய் தீர்த்தருள வல்லான் தன்னைத் என்று பத்தர்கள் நம்புகின்றனர் . திரிபுரங்கள் தீயெழத்திண் சிலைகைக் கொண்ட போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே இத்தலத்திலுள்ள இறைவன் வைத்தியநாதரையும் இறைவி போரானைப் புள்ளிருக்கு வேஞா ரானைப் தையல்நாயகியையும் வேண்டித் தொழுதால் எல்லாவகை வியாதிகளும் தீர்ந்துபோகும் என்று அடியவர்கள் நம்புகின்றனர் . இங்கு புற்று மண் திருமுழுக்குத் தீர்த்தம் வேப்பம் இலை அப்பனுக்குச் சாத்திய சந்தனம் அப்பனுக்குச் சாத்திய விபூதி இவைகளை கொண்டு திருச்சாந்து எனப்படும் உருண்டை தயாரிக்கப்படுகிறது . இதைச் உண்டால் தீராத நோய்கள் எல்லாம் குணமாகும் என்பது நம்பிக்கை . தல வழிபாட்டு முறைகள் வைத்தியநாதருக்கும் தையல்நாயகிக்கும் செல்லப் பிள்ளையாதலால் இங்குள்ள முருகன் செல்வ முத்துக்குமாரர் என அழைக்கப்படுகிறார் . முருகன் சூரனை அழிப்பதற்காக இத்தல இறைவனைப் பூசித்து வரம் பெற்றுள்ளார் . செல்வமுத்துக்குமாரர் சன்னதியில் தினமும் நடக்கும் நள்ளிரவு பூசையின் போது புனுகு பச்சைக்கற்பூரம் சந்தனம் எலுமிச்சை பன்னீர் பூ பால்சாதம் பால் ஆகியவற்றுடன் சிறப்புப் பூசை செய்யப்படும் . முருகன் திருவடியில் சாத்தப்படும் சந்தனத்தை வாங்கி சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் உண்டாகும் . முருகனுக்கு முக்கியத்துவம் உள்ள தலம் என்பதால் இங்கு அனைத்து விழாக்களும் முத்துக்குமார சுவாமிக்கு தான் . தினமும் காலையிலும் நள்ளிரவு பூசையின் போதும் முதலில் முருகனுக்கு பூசை செய்த பிறகே சிவனுக்கும் அம்மனுக்கும் பூசை நடக்கும் . முத்துக்குமாசுவாமிக்கு தைமாதம் செவ்வாய்கிழமை ஆரம்பித்து 10 நாள் விழா நடக்கும் . பங்குனித் திருவிழா 28 நாள் நடைபெறும் . இங்கே தெ 03 இங்கு வழிபாடு செய்ய ஏராளமாக வருகின்றனர் . செவ்வாய்க்கு இத்தலத்தில் தனிச் சந்நிதி உண்டு . செவ்வாய்க்கிழமைகளில் ஆடு வாகனத்தில் அங்காரகமூர்த்தி எழுந்தருள்வார் . இத்தலம் ஒரு கோளிலித் தலம் ஆகும் . FAALG கோவில் அமைப்பு : நான்கு புறமும் உயர்ந்த மதில்கள் சூழ கிழக்கிலும் மேற்கிலும் இராச கோபுரங்களுடனும் ஐந்து வீதிகளுடனும் கோயில் அமைந்துள்ளது . கிழக்கில் உள்ள 7 நிலை இராசகோபுரம் வழியாக உள்ளே சென்றால் அங்கு காணப்படும் வேப்ப மரமே இத்தலத்தின் தலமரமாகும் . இந்த மரத்தினடியில் ஆதி வைத்தியநாதர் மேற்கே பார்த்தவாறு உள்ளார் . எதிரில் வீரபத்திரர் திருமுன் உள்ளது . உள்வாயிலைக் கடந்ததும் தண்டபாணி திருமுன் உள்ளது . மேற்கு இராசகோபுரம் வழியாக உள்ளே நுழைந்தால் மூலவர் வைத்தியநாதர் மேற்கே பார்த்தவாறு காட்சி தருகிறார் . சுவாமி திருமுன்னிற்கு நேரில் இரு கொடிமரங்கள் உள்ளன . இறைவி தையல்நாயகியின் திருமுன் தெற்கு நோக்கி அமைந்துள்ளது . இறைவியின் திருமுன்னிற்கு அருகில் இத்தலத்தின் முருகக் கடவுள் முத்துக்குமாரசுவாமி என்ற பெயரில் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார் . குமரகுருபர சுவாமிகள் இத்தலத்து முத்துக்குமார சுவாமியின் மீது பிள்ளைத்தமிழ் பாடியுள்ளார் . அருண கிரியாரும் இத்தலத்து முருகனைப் பாடியுள்ளார் . கார்த்திகை தினத்தன்று முத்துக்குமாரசுவாமிக்கு சிறப்புப் பூசைகள் சந்தன நீராட்டு முதலியன நடைபெறும் . நள்ளிரவு பூசையில் செல்வ முத்துக்குமாரசுவாமிக்கு வழிபாடு நடந்த பிறகே சுவாமிக்கு வழிபாடு நடைபெறும் . கோயிலின் தெற்கு வீதியில் சடாயு குண்டம் என்ற இடமுள்ளது . சடாயு இராவணனுடன் போர் புரிந்து மாண்ட ஊர் இது எனவும் அந்த சடாயுவிற்கு இராமனும் இலக்குமணனும் இத்தலத்தில் தினச் சடங்குகளைச் செய்தனர் என்றும் புராணங்கள் கூறுகின்றன . இங்குள்ள சடாயு குண்டத்தில் என்றும் சாம்பல் இருந்துகொண்டே இருக்கும் . இச்சாம்பலை இட்டுக் கொள்வதால் வியாதிகள் நீங்கும் என்பதும் நம்பிக்கை . வடக்கு வீதியில் பத்திரகாளியம்மன் சந்நிதி உள்ளது . வீரபத்திரர் அன்னபூரணி தென்முகக்கடவுள் ஆடல்வல்லான் மலைமகள் மற்றும் அலைமகள் திருமுன்களும் இக்கோயிலில் உள்ளன . நடராச சபையில் சிவகாமி அம்மனுடன் மாணிக்கவாசகரும் காரைக்கால் அம்மையாரும் உள்ளனர் . நான்கு மறைகள் அமராவதி கைலாசநாதர் அங்கயற்கண்ணி உடனுறை சொக்கநாதர் விசுவநாதர் முதலிய பெயர்களில் அமைந்துள்ள சிவலிங்கச் சந்நிதிகளும் 1008 சிவலிங்கமும் வரிசையாகவுள்ளன . சிவத்திரு.குமரேசன் இராஜசிம்மன் உதவிப் பேராசிரியர் SRM கலை மற்றும் அறிவியல் கல்லூரி 919003296221 - easanaithedi.in .