தென்னாடு சித்திரைத் திங்கள் இதழ் - 07

8ெ 08 தென்னாடு அடியார் பெருமையின் ஆவண ஊற்று பெரியபுராணம் கருணையாளனைக் கவர்ந்த பேரன்பு - அன்பே சிவம் உலகில் வாழும் அத்தனை உயிர்களுக்கும் பொதுவானது அன்பு. எல்லா உயிர்களின் மீதும் அன்பு செலுத்தும்போது தான் இறைவனும் மகிழ்கிறான். அன்பின்றி செய்யக் கூடிய எந்தவொரு செயலாக இருந்தாலும், அரன் அதை ஒருபோதும் ஏற்றுக் கொள்வதில்லை. இதனைப் பின்வரும் பாடல் மூலம் தெளிவுபடுத்துகிறார் அப்பர் பெருமான், "கோடி தீர்த்தம் கலந்து குளித்தவை ஆடினாலும் அரனுக்(கு) அன்பில்லையேல் ஓடும் நீரினை ஓட்டைக் குடத்(து) அட்டி மூடி வித்திட்ட மூர்க்கனோ(டு) ஒக்குமே!” எனவே இறைவனை அன்பால் மட்டுமே பிடிக்க இயலும். இதனை பல்வேறு விதமாக அருளாளர்கள் நமக்கு எடுத்தியம்பியிருக்கிறார்கள். ஏன் இவற்றையெல்லாம் நாம் அறிந்து கொள்ள வேண்டுமென்றால், இறைவனை எப்படி வணங்குவது, இறைவன் நம்முடைய வணக்கத்தை ஏற்றுக் கொள்வாரா? என்கிற ஐயங்களுக்கு எல்லாம் மாபெரும் விடைகளாக அருளாளர்களின் திருமுறை பாடல்களும், அடியார்களின் வரலாறுகளும் இருக்கின்றன. சைவ நெறி என்பது அன்பு நெறி. அனைத்து உயிர்களையும் அரவணைத்துச் செல்லும் நெறி. அதுமட்டுமின்றி பரம்பொருளும் காத சய்யும் நேசர்களின் கைதவழ் மழலையாகவேத் திகழ்கிறான். அன்பின் திறத்தை ஆழமாக அனுபவித்து சொன்னவர் மணிவாசகப் பெருந்தகையாவர். அப்படிப்பட்ட மணிவாசகரே ஒரு அடியாரை விளித்துப்பாடுகிறார். ஆம் காளத்தியில் பிறந்து கயிலை நாடராக உயர்ந்த கண்ணப்ப நாயனாரை தான் அவ்வாறு பாடுகிறார். "கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின் என்னப்பன் என்னொப்பில் என்னையும்ஆட் கொண்டருளி வண்ணப் பணித்தென்னை வாவென்ற வான்கருணைச் சுண்ணப்பொன் நீற்றற்கே சென்றூதாய் கோத்தும்பீ." இப்பாடலில் நாம் ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய வரிகள், ”கண்ணப்பன் ஒப்பதோர் அன்பு”. அன்பென்பது அளவிட முடியாதது, இருப்பினும் அன்பென்றால் எப்படி இருக்கவேண்டும் என்கின்ற கேள்விக்கு, கண்ணப்பரைப் போல அன்பு வைக்க வேண்டும் என்ற பதிலைச் சொல்கிறார். அந்த அளவிற்கு கண்ணப்பருடைய அன்பு ஆற்றல் மிக்கதாக இருந்திருக்கின்றது. கானகத்தில் சுற்றித்திரிந்த வேடனான திண்ணனை பரிவால் பார்த்தான் பரமன். திண்ணனுடைய எண்ணமெல்லாம் முக்கண்ணனின் வண்ணமாய் மாறிப்போனது. குடுமித் தேவரைக் கண்டபொழுது நாயனார் எப்படி இருந்தார் என்பதை தெய்வச் சேக்கிழார் பெருமான் அற்புதமாய் காட்டுகிறார். அப்பாடல் "திங்கள்சேர் சடையார் தம்மைச் சென்றவர் காணா முன்னே அங்கணர் கருணை கூர்ந்த அருட்டிரு நோக்கம் எய்தத் தங்கிய பவத்தின் முன்னைச் சார்புவிட்டு அகல நீங்கிப் பொங்கிய ஒளியின் நிழல் பொருவில் அன்பு உருவம் ஆனார்” எப்படி கதிரவனைக் கண்டதும் தாமரை தானாக மலருமோ, அதேபோன்று பரம்பொருளின் திருக்கண்பார்வைப் பட்ட உடனேயே கண்ணப்பர் அன்பே உருவமாய் மாறிப்போனார். அதனால்தான் இறைவன் இவரைப் பற்றி சொல்ல வரும் பொழுது அவனுடைய வடிவெல்லாம் நம்பக்கல் அன்பென்கிறார். சிவபெருமான் கண்ணப்பர் உடைய ஒவ்வொரு செயலையும் எப்படி விரும்பி இருக்கிறார் என்பதை அவர் சொல்வதாகவே, தெய்வச் சேக்கிழார் பெருமான் பல இடங்களில் குறிப்பிடுகிறார். குடுமித்தேவரைக் கண்டதும் அன்பின் மிகுதியால் என்னென்னவோ செய்கிறார் கண்ணப்பர். அதில் நாயனார்க்கே உரித்தான ஒரு அற்புதமான செயல் என்னவென்றால், இறைவனைக் கண்டதும் அரனுக்குப் பசிக்கும், அவனுக்கு அமுது கொடுக்க யாரும் இங்கில்லை என்ற சிந்தனை அவருக்கு பிறந்ததுதான். கோயிலுக்கு செல்லக்கூடிய நாம் யாரும் இறைவனை பார்த்து, "இறைவா தங்களுக்கு அமுது படைக்கிறார்களா? என்று யாரும் கேட்பதில்லை. ஆனால் எங்கோ கானகத்தில் பிறந்த கண்ணப்பருக்கு இறைவனைக் கண்டதும் பசியோடு இருப்பாரே, என்கின்ற சிந்தனை வருகிறது. இதற்கெல்லாம் என்ன காரணம், திண்ணனார் இறைவனை கற்சிலையாக பார்க்கவில்லை. கண்ணுக்குத் தெரிந்த ஒரு குழந்தையாகவே பார்த்திருக்கிறார். சேக்கிழார் பெருமான் இதனைக் குறிப்பிடுகையில் இறைவனுக்கு உணவு கொண்டுவர கிளம்புகையில் கண்ணப்பர் என்ன செய்தார் என்பதை பின்வரும் பாடலில் அற்புதமாக குறிப்பிடுகிறார். "போதுவர் மீண்டு செல்வர் புல்லுவர் மீளப் போவர் காதலின் நோக்கி நிற்பர் கன்றகல் புனிற்றாப் போல்வர் நாதனே அமுது செய்ய நல்லமெல் லிறைச்சி நானே கோதறத் தெரிந்து வேறு கொண்டிங்கு வருவே னென்பார்”. மேழம் நல்லோரை சித்திரைத் திங்கள், 2021 WWW அமுது கொண்டு வருவதற்கா0 கிளம்ப நினைக்கிறார். ஆனாலும் அவரால் போகமுடியவில்லை. போவதும் வருவதும், குடுமித்தேவரை அப்படியே நோக்கியே நிற்பதும் இவ்வாறெல்லாம் செய்கிறார். குறிப்பாக கன்றகல் புனிற்றாப் போல்வர்” என்ற லயில் இருக்கிறார். மணிவாசகப் பெருமானும் திருப்புலம்பலில் இந்த ஒரு நிலை தான் வேண்டுமென்பதை ” ”குற்றாலத்து அமர்ந்து உறையும் கூத்தா உன் குரைகழற்கே கற்றாவின் மனம்போலக் கசிந்துருக வேண்டுவனே" என உருகிக் கேட்கிறார். அந்த நிலையில் நின்றவர்தான் கண்ணப்பநாயனார் என்பதை பெரியபுராணம் நமக்கு காட்டுகிறது. ஏன் அந்த கன்று ஈன்ற பசுவை போல் இருக்க வேண்டும். தாயை உவமையாக சொல்லலாம் அல்லவா. அதற்கு காரணம் தாயானவள் தன் குழந்தையை அன்பாக பார்ப்பதென்பது இயல்புதான். இருப்பினும் ஏதோ ஒரு வகையில் அதில் சிறிய எதிர்பார்ப்பு இருந்துவிடுகிறது. நாளை நம்முடைய குழந்தை வளர்ந்த பின்பு நம்மை நன்றாக பார்த்துக் கொள்ளும், ஆனந்தமாக வைத்துக் கொள்ளும் என்ற சிந்தனை இயல்பாகவே வந்துவிடும். ஆனால் பசுவிற்கு அந்த சிந்தனையெல்லாம் கிடையாது. தன்னுடைய கன்றை விட்டுப் பிரிய கூடாது. அதற்கு பாலூட்ட வேண்டும். கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும். எதையும் சிந்திக்காது, அதை மட்டுமே சிந்தித்துக் கொண்டு எந்தவித எதிர்பார்ப்புமின்றி இருக்கும். அதனால் தான் மணிவாசகப் பெருமான் அவ்வாறு பாடுகிறார். சிவத்திரு. பா.சிவமாதவன் புதுக்கோட்டை இங்கே கண்ணப்பரும் அப்படித்தான், இவருக்கு நாம் உணவு கொடுத்தால் அவரை அன்பாக பார்த்தால் நமக்கு ஏதாவது செய்வார், இன்னும் சொல்லப் போனால் முத்தி கிடைத்துவிடும், பிறப்பு அழிந்துவிடும், என்ற சிந்தனைகூட ஒருபோதும் கிடையாது. அன்பைத் தவிர வேறொன்றும் அல்லாதவராய் நின்றார். இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டு கண்ணப்பரால் கவரப்பட்ட நிலையில்தான் காளத்தியப்பர் இருந்தார். அதனை இறைவன் சொல்வதாக வரக்கூடிய பெரியபுராணப் பாடல்கள் மிகவும் சிறப்பானவை. நாம் ஒரு காட்சியைப் பார்க்கின்றோமெனில் நாம் அதைப்பற்றி சொல்வோம். அதே போலவே கண்ணப்பநாயனார் செய்த ஒவ்வொரு செயலும் எப்படி இருந்ததென்பதை காளத்தியப்பர் அவ்வளவு கனிவாக சிவகோசரியாரிடம் எடுத்துரைக்கிறார். ஒரு ஐந்து செயல்களை இறைவன் பட்டியலிடுகிறார்.முதலில் இதை சொல்ல வருகையில் ”அவனுடைய வடிவெல்லாம் நம்பக்கல் அன்பென்றும் அவனுடைய அறிவெல்லாம் நமையறியும் அறிவென்றும் அவனுடைய செயலெல்லாம் நமக்கினிய வாமென்றும் அவனுடைய நிலைஇவ்வா றறிநீயென் றருள்செய்வார்”. ஒவ்வொன்றாக மிக அற்புதமாக இறைவன் சொல்கிறார். ஒரு கையில் வில்லும் மறுகையில் இறைவனுக்கான இறைச்சியும் இருக்கிறது. எனவே அவருடைய வாயில் நீரை எடுத்துக் கொண்டார். இறைவனுக்கு தேவையான மலர்களை எங்கு வைப்பது என திகைத்து தன்னுடைய குடுமியில் வைத்துக்கொண்டார். கண்ணப்பர் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு நேராக வருகிறார். முதலில், "பொருப்பினில் வந்து அவன் செய்யும் பூசனைக்கு முன்பு என் மேல் அருப்புறும் மென் மலர் முன்னை அவை நீக்கும் ஆதரவால் விருப்புறும் அன்பு எனும் வெள்ளக்கால் பெருகிற்று என வீழ்ந்த செருப்பு அடி அவ்விளம் பருவ சேயடியின் சிறப்பு உடைத்து -ஆல்" சிவகோசாரியார் செய்த பூசையினால் இறைவன்மேல் இருந்த மலர்களை எல்லாம், தன்னுடைய செருப்புக் காலால் அப்புறப்படுத்துகிறார். (09ஆம் பக்கம் பார்க்க)
8ெ 08 தென்னாடு அடியார் பெருமையின் ஆவண ஊற்று பெரியபுராணம் கருணையாளனைக் கவர்ந்த பேரன்பு - அன்பே சிவம் உலகில் வாழும் அத்தனை உயிர்களுக்கும் பொதுவானது அன்பு . எல்லா உயிர்களின் மீதும் அன்பு செலுத்தும்போது தான் இறைவனும் மகிழ்கிறான் . அன்பின்றி செய்யக் கூடிய எந்தவொரு செயலாக இருந்தாலும் அரன் அதை ஒருபோதும் ஏற்றுக் கொள்வதில்லை . இதனைப் பின்வரும் பாடல் மூலம் தெளிவுபடுத்துகிறார் அப்பர் பெருமான் கோடி தீர்த்தம் கலந்து குளித்தவை ஆடினாலும் அரனுக் ( கு ) அன்பில்லையேல் ஓடும் நீரினை ஓட்டைக் குடத் ( து ) அட்டி மூடி வித்திட்ட மூர்க்கனோ ( டு ) ஒக்குமே ! எனவே இறைவனை அன்பால் மட்டுமே பிடிக்க இயலும் . இதனை பல்வேறு விதமாக அருளாளர்கள் நமக்கு எடுத்தியம்பியிருக்கிறார்கள் . ஏன் இவற்றையெல்லாம் நாம் அறிந்து கொள்ள வேண்டுமென்றால் இறைவனை எப்படி வணங்குவது இறைவன் நம்முடைய வணக்கத்தை ஏற்றுக் கொள்வாரா ? என்கிற ஐயங்களுக்கு எல்லாம் மாபெரும் விடைகளாக அருளாளர்களின் திருமுறை பாடல்களும் அடியார்களின் வரலாறுகளும் இருக்கின்றன . சைவ நெறி என்பது அன்பு நெறி . அனைத்து உயிர்களையும் அரவணைத்துச் செல்லும் நெறி . அதுமட்டுமின்றி பரம்பொருளும் காத சய்யும் நேசர்களின் கைதவழ் மழலையாகவேத் திகழ்கிறான் . அன்பின் திறத்தை ஆழமாக அனுபவித்து சொன்னவர் மணிவாசகப் பெருந்தகையாவர் . அப்படிப்பட்ட மணிவாசகரே ஒரு அடியாரை விளித்துப்பாடுகிறார் . ஆம் காளத்தியில் பிறந்து கயிலை நாடராக உயர்ந்த கண்ணப்ப நாயனாரை தான் அவ்வாறு பாடுகிறார் . கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின் என்னப்பன் என்னொப்பில் என்னையும்ஆட் கொண்டருளி வண்ணப் பணித்தென்னை வாவென்ற வான்கருணைச் சுண்ணப்பொன் நீற்றற்கே சென்றூதாய் கோத்தும்பீ . இப்பாடலில் நாம் ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய வரிகள் கண்ணப்பன் ஒப்பதோர் அன்பு . அன்பென்பது அளவிட முடியாதது இருப்பினும் அன்பென்றால் எப்படி இருக்கவேண்டும் என்கின்ற கேள்விக்கு கண்ணப்பரைப் போல அன்பு வைக்க வேண்டும் என்ற பதிலைச் சொல்கிறார் . அந்த அளவிற்கு கண்ணப்பருடைய அன்பு ஆற்றல் மிக்கதாக இருந்திருக்கின்றது . கானகத்தில் சுற்றித்திரிந்த வேடனான திண்ணனை பரிவால் பார்த்தான் பரமன் . திண்ணனுடைய எண்ணமெல்லாம் முக்கண்ணனின் வண்ணமாய் மாறிப்போனது . குடுமித் தேவரைக் கண்டபொழுது நாயனார் எப்படி இருந்தார் என்பதை தெய்வச் சேக்கிழார் பெருமான் அற்புதமாய் காட்டுகிறார் . அப்பாடல் திங்கள்சேர் சடையார் தம்மைச் சென்றவர் காணா முன்னே அங்கணர் கருணை கூர்ந்த அருட்டிரு நோக்கம் எய்தத் தங்கிய பவத்தின் முன்னைச் சார்புவிட்டு அகல நீங்கிப் பொங்கிய ஒளியின் நிழல் பொருவில் அன்பு உருவம் ஆனார் எப்படி கதிரவனைக் கண்டதும் தாமரை தானாக மலருமோ அதேபோன்று பரம்பொருளின் திருக்கண்பார்வைப் பட்ட உடனேயே கண்ணப்பர் அன்பே உருவமாய் மாறிப்போனார் . அதனால்தான் இறைவன் இவரைப் பற்றி சொல்ல வரும் பொழுது அவனுடைய வடிவெல்லாம் நம்பக்கல் அன்பென்கிறார் . சிவபெருமான் கண்ணப்பர் உடைய ஒவ்வொரு செயலையும் எப்படி விரும்பி இருக்கிறார் என்பதை அவர் சொல்வதாகவே தெய்வச் சேக்கிழார் பெருமான் பல இடங்களில் குறிப்பிடுகிறார் . குடுமித்தேவரைக் கண்டதும் அன்பின் மிகுதியால் என்னென்னவோ செய்கிறார் கண்ணப்பர் . அதில் நாயனார்க்கே உரித்தான ஒரு அற்புதமான செயல் என்னவென்றால் இறைவனைக் கண்டதும் அரனுக்குப் பசிக்கும் அவனுக்கு அமுது கொடுக்க யாரும் இங்கில்லை என்ற சிந்தனை அவருக்கு பிறந்ததுதான் . கோயிலுக்கு செல்லக்கூடிய நாம் யாரும் இறைவனை பார்த்து இறைவா தங்களுக்கு அமுது படைக்கிறார்களா ? என்று யாரும் கேட்பதில்லை . ஆனால் எங்கோ கானகத்தில் பிறந்த கண்ணப்பருக்கு இறைவனைக் கண்டதும் பசியோடு இருப்பாரே என்கின்ற சிந்தனை வருகிறது . இதற்கெல்லாம் என்ன காரணம் திண்ணனார் இறைவனை கற்சிலையாக பார்க்கவில்லை . கண்ணுக்குத் தெரிந்த ஒரு குழந்தையாகவே பார்த்திருக்கிறார் . சேக்கிழார் பெருமான் இதனைக் குறிப்பிடுகையில் இறைவனுக்கு உணவு கொண்டுவர கிளம்புகையில் கண்ணப்பர் என்ன செய்தார் என்பதை பின்வரும் பாடலில் அற்புதமாக குறிப்பிடுகிறார் . போதுவர் மீண்டு செல்வர் புல்லுவர் மீளப் போவர் காதலின் நோக்கி நிற்பர் கன்றகல் புனிற்றாப் போல்வர் நாதனே அமுது செய்ய நல்லமெல் லிறைச்சி நானே கோதறத் தெரிந்து வேறு கொண்டிங்கு வருவே னென்பார் . மேழம் நல்லோரை சித்திரைத் திங்கள் 2021 WWW அமுது கொண்டு வருவதற்கா 0 கிளம்ப நினைக்கிறார் . ஆனாலும் அவரால் போகமுடியவில்லை . போவதும் வருவதும் குடுமித்தேவரை அப்படியே நோக்கியே நிற்பதும் இவ்வாறெல்லாம் செய்கிறார் . குறிப்பாக கன்றகல் புனிற்றாப் போல்வர் என்ற லயில் இருக்கிறார் . மணிவாசகப் பெருமானும் திருப்புலம்பலில் இந்த ஒரு நிலை தான் வேண்டுமென்பதை குற்றாலத்து அமர்ந்து உறையும் கூத்தா உன் குரைகழற்கே கற்றாவின் மனம்போலக் கசிந்துருக வேண்டுவனே என உருகிக் கேட்கிறார் . அந்த நிலையில் நின்றவர்தான் கண்ணப்பநாயனார் என்பதை பெரியபுராணம் நமக்கு காட்டுகிறது . ஏன் அந்த கன்று ஈன்ற பசுவை போல் இருக்க வேண்டும் . தாயை உவமையாக சொல்லலாம் அல்லவா . அதற்கு காரணம் தாயானவள் தன் குழந்தையை அன்பாக பார்ப்பதென்பது இயல்புதான் . இருப்பினும் ஏதோ ஒரு வகையில் அதில் சிறிய எதிர்பார்ப்பு இருந்துவிடுகிறது . நாளை நம்முடைய குழந்தை வளர்ந்த பின்பு நம்மை நன்றாக பார்த்துக் கொள்ளும் ஆனந்தமாக வைத்துக் கொள்ளும் என்ற சிந்தனை இயல்பாகவே வந்துவிடும் . ஆனால் பசுவிற்கு அந்த சிந்தனையெல்லாம் கிடையாது . தன்னுடைய கன்றை விட்டுப் பிரிய கூடாது . அதற்கு பாலூட்ட வேண்டும் . கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும் . எதையும் சிந்திக்காது அதை மட்டுமே சிந்தித்துக் கொண்டு எந்தவித எதிர்பார்ப்புமின்றி இருக்கும் . அதனால் தான் மணிவாசகப் பெருமான் அவ்வாறு பாடுகிறார் . சிவத்திரு . பா.சிவமாதவன் புதுக்கோட்டை இங்கே கண்ணப்பரும் அப்படித்தான் இவருக்கு நாம் உணவு கொடுத்தால் அவரை அன்பாக பார்த்தால் நமக்கு ஏதாவது செய்வார் இன்னும் சொல்லப் போனால் முத்தி கிடைத்துவிடும் பிறப்பு அழிந்துவிடும் என்ற சிந்தனைகூட ஒருபோதும் கிடையாது . அன்பைத் தவிர வேறொன்றும் அல்லாதவராய் நின்றார் . இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டு கண்ணப்பரால் கவரப்பட்ட நிலையில்தான் காளத்தியப்பர் இருந்தார் . அதனை இறைவன் சொல்வதாக வரக்கூடிய பெரியபுராணப் பாடல்கள் மிகவும் சிறப்பானவை . நாம் ஒரு காட்சியைப் பார்க்கின்றோமெனில் நாம் அதைப்பற்றி சொல்வோம் . அதே போலவே கண்ணப்பநாயனார் செய்த ஒவ்வொரு செயலும் எப்படி இருந்ததென்பதை காளத்தியப்பர் அவ்வளவு கனிவாக சிவகோசரியாரிடம் எடுத்துரைக்கிறார் . ஒரு ஐந்து செயல்களை இறைவன் பட்டியலிடுகிறார்.முதலில் இதை சொல்ல வருகையில் அவனுடைய வடிவெல்லாம் நம்பக்கல் அன்பென்றும் அவனுடைய அறிவெல்லாம் நமையறியும் அறிவென்றும் அவனுடைய செயலெல்லாம் நமக்கினிய வாமென்றும் அவனுடைய நிலைஇவ்வா றறிநீயென் றருள்செய்வார் . ஒவ்வொன்றாக மிக அற்புதமாக இறைவன் சொல்கிறார் . ஒரு கையில் வில்லும் மறுகையில் இறைவனுக்கான இறைச்சியும் இருக்கிறது . எனவே அவருடைய வாயில் நீரை எடுத்துக் கொண்டார் . இறைவனுக்கு தேவையான மலர்களை எங்கு வைப்பது என திகைத்து தன்னுடைய குடுமியில் வைத்துக்கொண்டார் . கண்ணப்பர் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு நேராக வருகிறார் . முதலில் பொருப்பினில் வந்து அவன் செய்யும் பூசனைக்கு முன்பு என் மேல் அருப்புறும் மென் மலர் முன்னை அவை நீக்கும் ஆதரவால் விருப்புறும் அன்பு எனும் வெள்ளக்கால் பெருகிற்று என வீழ்ந்த செருப்பு அடி அவ்விளம் பருவ சேயடியின் சிறப்பு உடைத்து -ஆல் சிவகோசாரியார் செய்த பூசையினால் இறைவன்மேல் இருந்த மலர்களை எல்லாம் தன்னுடைய செருப்புக் காலால் அப்புறப்படுத்துகிறார் . ( 09 ஆம் பக்கம் பார்க்க )