தென்னாடு சித்திரைத் திங்கள் இதழ் - 07

மேழம் நல்லோரை சித்திரைத் திங்கள், 2021 இம்முறை பிறந்த புத்தாண்டின் பெயர் கீழறை.60 ஆண்டு முறை ஆரியம் என்று சொல்கின்றோம் ஆனால் அதைத் எல்லாம் தாண்டி கொஞ்சம் பார்ப்போம். முல்லை, மருதம், நெய்தல், பாலை, குறிஞ்சி என ஐந்து நிலங்களாக தமிழ் மூதாதையர் பிரிந்தனர். இவற்றில் மருத நிலத்தில் மட்டுமே நெல் விளையும் என்பது மறுக்க முடியா உண்மை. ஆக மருத நிலத்தில் தைத்திங்களும், நெய்தல் நிலத்தில் ஆவணித் திங்களும், குறிஞ்சி நிலத்தில் மார்கழித் திங்களும், முல்லை நிலத்தில் ஐப்பசித் திங்களும் பெயர் பெற்ற பெரு விழாக்கள். அவை, அவை சார்ந்த இலக்கிய பாடல்களில் அந்தந்த திங்கள் பற்றி பெருமையாக பேசுகின்றன. சரி இவை ஒரு புறம் இருக் கட்டும். மார்கழி மழை மண்ணுக்கு உதவாது என்று ஒரு பழமொழி இன்று வரை நிலவி வருகின்றது. அதன் விளக்கம் என்ன எனில் மார்கழி மாத மழை நெல்லுக்கு மட்டுமே பொருந்தும். நெல் அல்லாத மற்றைய தானிய பயிர் வகைகளுக்கு மார்கழி, தை ஏற்புடைய மாதம் இல்லை. "அப்படி என்றால் மற்றைய பயிர்கள் எப்போது பயிரிடுவது?" மார்கழி மாதம் பெருமாரி கொள்ள சித்திரைச் சிறுமாரி மகிழ்வையும் கொள்ள என்று சித்திரை சிறப்பிக்கப்படுகின்றது. தையில் நெல் அறுத்தவார்கள் அதை களஞ்சியம் செய்து மேலதிக நெல்லை விற்று அதில் வரும் பணத்தை உற்றார் உறவுகளுக்கு பகிர்ந்து வழங்கும் தினமே சித்திரை புத்தாண்டு. இதனை கையன்பளிப்பு, கைச் சிறப்பு எனும் வழக்கால் சுட்டுவார். ஒரு காலத்தில் சமூகத்தில் உயர்ந்த வர்களால் மட்டுமே நெல்லை உண்ண முடிந்தது. அதுவும் வளமற்ற இடங்களில் நெல்லுக்கே இடம் இல்லை. பெரும்பான்மை தமிழ்ச் சமூகத்தின் உணவுத்தேவையை பூர்த்திசெய்தது சிறு தானியமே. ஆண்டு திங்களில் உளுந்து படைத்து வைரவரையும் மக்கள் நினைவு கொள்வது முக்கியமானது. காட்டுக்குள் திணையும் கேள்வரகு கூழும் குடித்து வாழும் மக்களுக்கு நெல் எங்கே தெரியும். ஒன்றைப்புரிந்து கொள்ளுங்கள். நெல் மட்டும் தான் தமிழனின் உணவு இல்லை. சரி விவசாயம் இருக்கட்டும். ஆகியது. அறுபது வருடங்களின் ஆதிப்பெயர்கள் பிறந்த புதுவருடம் கீழறை ஆடு எனும் விண்ணில் இருக்கும் விண்மீனுடன் சூரியன் பொருந்தி வரும் நாளே சித்திரை பிறப்பு. இரா வணன், முருகன் என்று நாம் புகழும் எம் முன்னோரின் வானியல் அறிவை ஆரியம் என்ற பெயரில் நாமே நழுவ விடுகின்றோம். சரி இந்த இன மத மனித குல பிரிவுகளை விட்டுத் தள்ளுவோம். சித்திரை இயற்கை துளிர்க்கும் காலம். இணை தேடி பறவைகளும் விலங்குகளும் ஓடும். மரங்கள் பூத்து காய்த்து கனியும். குயில்கள் கூவும் மயில்கள் ஆடும். இலங்கை யிலும் இது வசந்தம் தான். அந்தார்டிக்கா விலும் இது வசந்தம் தான். கால நிலையை பிரித்து வகுத்த எம் தமிழன் ஏன் முன் பனி காலத்தை வருட ஆரம்பமாக கொள்ள வேண்டும். முன்பனி நீங்க, பின் பனி ஓட பெரு வெயில் அகல, வசந்தம் உதிக்கும். முழுதும் சோற்றை உண்ணும் எமக்கு சிறு தானியம் பற்றி அறியாமல் இருப்பது வியப்பில்லை. திணை, குரக்கன, வரகு, எள்ளு, சாமி, கடலை, பயறு, கெளப்பி என அந்த பட்டியல் நீளுகின்றது. திணைப்புலம் காக்கும் செவ்வேள் முருகனையும், உளுந்து நிலம் காக்கும் நாய் அமர் வைரவரையும் இந்நாட்களில் அவர் அவர் மக்கள் நினைவு கூர்வார். வைரவர் சித்திரைத் திங்களில் குயவர்கள் தம் வனை சில்லை புதுப்பித்தலும், கம்மாளர் புது உலை நிர்மாணித்தலும், சலவைத் தொழிலாளர் தோய் கல்லை மாற்றுதலும், ஏன் தையில் ஏர் பிடித்து உழுத உழவர் கூட ஏரினை இந்நாளில் தான் மாற்றுவார்கள். ஏர்ப்பிடி இடுதல் என்றும் இந்நாள் நினைவு கொள்ளப்பட்டு வருகின்றது. தைத்திங்கள் அறுவடை பெருநாள். ஆனால் அது தான் வருட ஆரம்பம் என்று எந்த ஒரு இலக்கியங்களும் சான்று பகிரவில்லை. உளுந்து வடை மாலை அணிந்து குளிர்த்தி கொள்வதும், முருகன் தேனும் திணைமாவும் பிசைந்து குரவை கொள்வதும் இந்நாட்களில் தான். சுப்பிர மணியனில் இருந்து செவ்வேள் மீண்டது போல், தேவஸ்தானத்தில் இருந்து கோயில் மீண்டது, போல் மஹா தேவனில் இருந்து தென்னாட்டு ஈசன் மீண்டது போல், பிலவத்தில் இருந்து கீழுறை மீள வேண்டும். மேஷத்தில் இருந்து ஆடும் மேழமும் மீள வேண்டும்.சமசுகிருதத்தில் இருந்து தமிழ் மீள வேண்டும். நாமே எம் தமிழை சிதைத்து ஆனால் சித்திரை பற்றி நெடுநல்வாடை பகிர்ந்து செல்லுகின்றது. திண்ணிலை மருப்பின் ஆடு தலையாக விண்ணூர்பு திரி தரும் வீங்கு செலல் மண்டிலம் என்று நெடு நல் வாடை சொல்லி போகின்றது. இங்கு ஆட்டினை தலையாக கொண்டு சங்கம், சங்க மருவிய காலங்களில் நெற்பயிர்ச்செய்கை எல்லா இடமும் பரவ சிறு தானிய பயிர்ச் செய்கை மெல்ல மெல்ல வீழ்ந்தது. இன்றும் குறிஞ்சி வாழ் பெரு மக்கள் திணைமாவுடன் சித்திரைதிங்களில் ஓரை சுழல்கின்றது என சொல்லப்படுகின்றது. அழித்துக் கொண்டிருக்கின்றோம். தமிழை முருகனை வழிபடுவது நினைவு கொள்ளத் ஆடு என்ற தூய தமிழுக்கு ஆரியர் இட்ட மீட்போம் தமிழால் மீள்வோம். வசந்த வாழ்த்துகள். சிறு மாரி தக்கது. அது போல் பங்குனி சித்திரை பெயரே மேஷம். மேழம் என்றும் தமிழில் வாழ்த்துக்கள். குறிஞ்சி வாழ்த்துகள். உளுந்து அழைப்பார். பண்பாடு எம்முடையது அவர்கள் வந்து பெயர் வைத்தார்கள். எவ்வாறு கோவில் தேவஸ்தானமாக மாறியதோ, முருகன் ஸ்ரீ சுப்பிரமணியன் ஆனானோ, ஈசன் மஹா தேவன் ஆனானோ அது போல் தமிழ்முறை வடமுறை ஆகியது ஆகியது. ஆடு எனும் மேழம் மேஷம் அறுவடை வாழ்த்துகள். ஏர் மாற்றல் வாழ்த்துகள். உலை மாற்றல் வாழ்த்துகள். வனை சில்லு மாற்றல் வாழ்த்துகள். கடல் புகும் ஆரம்ப வாழ்த்துகள். சித்திரைதிங்கள் வாழ்த்துகள். மேழ ஆட்டு பெருநாள் வாழ்த்துகள். தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள். அடியார் பெருமையின் ஆவண உற்று பெரியபுராணம் (08ஆம் பக்கத் தொடர்ச்சி) இதை இறைவன் எவ்வளவு மகிழ்ந்து சொல்கிறார் தெரியுமா, முருகவேளானவன் குழந்தை பருவத்தில் என் மீது ஏறி விளையாடுவான், அதை விடவும், அன்பால் இவன் செய்யக்கூடிய இந்த செயல் எனக்கு மிகவும் சிறப்புடையதாக இருக்கின்றது என்கிறார். அதன்பின்பு தன்னுடைய வாயில் உள்ள நீரால் நீராட்டுச் செய்ததை இறைவன் சொல்லுகையில் என் சடைமுடியில் இருக்கக்கூடிய கங்கையை விடவும் புனிதமானது என்கிறார். அதனை விளக்கும் பாடல், ''உருகிய அன்பு ஒழிவு இன்றி நிறைந்த அவன் உரு என்னும் பெருகிய கொள்கல முகத்தில் பிறங்கி இனிது ஒழுகுதலால் ஒரு முனிவன் செவி உமிழும் உயர் கங்கை முதல் தீர்த்த பொரு புனலின் எனக்கு அவன்-தன் வாய் உமிழும் புனல் புனிதம்" தென்னாடு அதன்பிறகு அவன் தலையில் வைத்து எனக்கு சூட்டக்கூடிய மலர்கள் எப்படி இருக்குமென்றால் "இம்மலை வந்து எனை அடைந்த கானவன்-தன் இயல்பாலே மெய் மலரும் அன்பு மேல் விரிந்தன போல் விழுதலால் செம்மலர் மேல் அயனொடு மால் முதல் தேவர் வந்து புனை எம்மலரும் அவன் தலையால் இடு மலர் போல் எனக்கு ஒவ்வா” எவ்வளவு அற்புதமான ஒரு பாடல். இக்காளத்தி மலைக்கு வந்து என்னை அடைந்த வேடனான திண்ணன் தன் இயல்பான குணத்தால், உண்மையாக மலரும் அன்பு மென்மேலும் விரிந்தது போல் அவன் தலையில் வைத்து, எனக்கு இடக்கூடிய இந்த மலர்களுக்கு, சிவந்த தாமரை மேல் வீற்றிருக்கும் நான்முகனும் திருமாலும் வந்து இடும் மலர்கள் கூட ஒப்பாகாது. அதன்பிறகு கண்ணப்ப நாயனார் இறைவனுக்கு வைத்த அமுதாகிய பன்றி இறைச்சியானது எதைக் காட்டிலும் உயர்நததென்பதைப் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.. "வெய்ய கனல் பதம்கொள்ள வெந்துளதோ எனும் அன்பால் நையும் மனத்து இனிமையினால் நைய மிக மென்றிடலால் செய்யும் மறை வேள்வியோர் முன்பு தரும் திருந்து அவியில் எய்யும் வரி சிலையவன்-தான் இட்ட ஊன் எனக்கு இனிய” இதில் மிக அற்புதமான செய்தி, கண்ணப்பர் இறைவனை காண்பதற்கு முன்னால் எப்படி இருந்தாரெனில், வேடர்களுக்கே உரிய குணத்தோடு இருந்தார் என்பது தான். இறைவனைக் கண்டதும் மனம் நைந்து போனது. அன்பின் வடிவாகிப் போனார். திருவிசைப்பாவில் ஒரு பாடல் வரும் "நையாத மனத்தினை நைவிப்பான் இத்தருவே. கண்ணப்பர் இறைவனுக்கு படைக்க வேண்டுமென இறைச்சியை பதப்படுத்தி அமுதாக்கினார். இறைவனோ கண்ணப்பரைப் பக்குவப்படுத்தி அடியார் ஆக்கினார். அந்த உணவானது வேதத்தில் சொல்லப்பட்டுள்ளமை போன்று செய்கின்ற வேள்வித்தீயில் தரும் அவியைக் காட்டிலும் எனக்கு சிறப்பான உணவென்பதை பரம்பொருளே சொல்கிறார். அடுத்ததாக எல்லாவற்றையும் செய்துவிட்டு இறைவனுக்கு வேதங்களும் தோத்திரங்களும் பாடுவார்கள். நாம் இன்று இறைவனை அப்படித்தான் வழிபாடு செய்கின்றோம். ஆனால் கண்ணப்பர் என்ன செய்தார் தெரியுமா? அதை கருணையாளன் கூறுகிறான். ”மன் பெரு மா மறை மொழிகள் மா முனிவர் மகிழ்ந்து உரைக்கும் இன்ப மொழி தோத்திரங்கள் மந்திரங்கள் யாவையினும் முன்பு இருந்து மற்று அவன்-தன் முகம் மலர அகம் நெகிழ அன்பில் நினைந்து எனையல்லால் அறிவுறா மொழி நல்ல” நாம் இறைவனை நோக்கி பாடும் போது எந்த நிலையில் நின்று பாட வேண்டும், என்பதை இறைவனே நமக்கு கண்ணப்பர் மூலமாக தெரிவிக்கிறார். எப்படி பாட வேண்டும் என்றால், முகம் மலர, அகம் நெகிழ அன்பால் நிறைந்து அவனை நினைத்துக்கொண்டே, உருகி மிக சிறப்பாகப் பாடவேண்டும். அப்படி அன்பால் முகம் மலர்ந்து அகம் நெகிழ்ந்து பேசக்கூடிய மொழிகள், வேதங்கள் மற்றும் தோத்திரங்களைக் காட்டிலும் எனக்கு இனிமையான 09 தெ சிவத்திரு யாழவன் சிவவேதன் மொழி என்கிறார். எம்பெருமான் இப்படியாக ஒரு ஐந்து செய்திகளை கண்ணப்பர் பற்றி எடுத்துரைக்கின்றார். கண்ணப்ப நாயனார் செய்த ஒவ்வொரு செயலுமே இறைவனை கவர்ந்திழுத்திருக்கின்றது. ஏனெனில் அவன்தான் உள்ளம் கவர் கள்வன். ஆனால் அந்த உள்ளங்கவர் கள்வனையே கவர்ந்தவர்தான், கானகத்தில் பிறந்த கண்ணப்ப நாயனார் என்பதை இந்த பாடல்கள் மூலமாக நாம் அறிய முடிகிறது. நிறைவாக அன்பு என்றால் கண்ணப்பர் போன்று இருக்க வேண்டும். அப்படிப்பட்ட அன்பை இறைவா! நீ எனக்கு தர வேண்டும் என்ற உயரிய விண்ணப்பத்தை நாம் எப்பொழுதுமே இறைவனிடம் வைக்க வேண்டும். ஏனென்றால் மணிவாசகரும் கூறுவார், ”வேண்டாது ஒன்றும் வேண்டாது மிக்க அன்பே மேவுதலே". ஆகையால் அன்புதான் சிவம். அன்பில்லாத இடத்தில் அரன் இருப்பதில்லை. எனவே கருணையாளனை அன்பால் என்றும் எப்பொழுதும் வணங்குவோம் பெறுவோம். கண்ணப்பரைப் பற்றி "மறைகளே முறையென முன்னின்ற காலத்தில் மானைக் கொன்று தேனையுண்டு கானகத்தில் களிற்றைப்போல் திரிந்தவனை, தானே சென்று தனியே நின்று காரணமாய் முக்கண்ணனும் புறக்கண்ணை இழந்தவனாய் இன்பமாயிருந்தான்... திண்ணனும் திகைத்துப்போய்ப் பார்த்தவுடன் பரிவோ பாதியில் விட்டதொடர்போ எனகண்ணைப் பறிக்க முன்னமே மறந்தான் வலியை குருதியே வந்தாலும் உறுதியில் நின்றதால்மருளனாய் இருந்தவன் அருளனாய் உயர்ந்தான்.. பத்திதான் முத்தியை அடையும் உத்தியென சுத்தமாகச் சொல்லிவிட்டான். நானும் அர்த்தமாக உணர்ந்தேன். சற்று அயர்ந்தே போனேன்" அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார் அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார் அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்தி ருப்பாரே- திருமந்திரம் திருச்சிற்றம்பலம் தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
மேழம் நல்லோரை சித்திரைத் திங்கள் 2021 இம்முறை பிறந்த புத்தாண்டின் பெயர் கீழறை .60 ஆண்டு முறை ஆரியம் என்று சொல்கின்றோம் ஆனால் அதைத் எல்லாம் தாண்டி கொஞ்சம் பார்ப்போம் . முல்லை மருதம் நெய்தல் பாலை குறிஞ்சி என ஐந்து நிலங்களாக தமிழ் மூதாதையர் பிரிந்தனர் . இவற்றில் மருத நிலத்தில் மட்டுமே நெல் விளையும் என்பது மறுக்க முடியா உண்மை . ஆக மருத நிலத்தில் தைத்திங்களும் நெய்தல் நிலத்தில் ஆவணித் திங்களும் குறிஞ்சி நிலத்தில் மார்கழித் திங்களும் முல்லை நிலத்தில் ஐப்பசித் திங்களும் பெயர் பெற்ற பெரு விழாக்கள் . அவை அவை சார்ந்த இலக்கிய பாடல்களில் அந்தந்த திங்கள் பற்றி பெருமையாக பேசுகின்றன . சரி இவை ஒரு புறம் இருக் கட்டும் . மார்கழி மழை மண்ணுக்கு உதவாது என்று ஒரு பழமொழி இன்று வரை நிலவி வருகின்றது . அதன் விளக்கம் என்ன எனில் மார்கழி மாத மழை நெல்லுக்கு மட்டுமே பொருந்தும் . நெல் அல்லாத மற்றைய தானிய பயிர் வகைகளுக்கு மார்கழி தை ஏற்புடைய மாதம் இல்லை . அப்படி என்றால் மற்றைய பயிர்கள் எப்போது பயிரிடுவது ? மார்கழி மாதம் பெருமாரி கொள்ள சித்திரைச் சிறுமாரி மகிழ்வையும் கொள்ள என்று சித்திரை சிறப்பிக்கப்படுகின்றது . தையில் நெல் அறுத்தவார்கள் அதை களஞ்சியம் செய்து மேலதிக நெல்லை விற்று அதில் வரும் பணத்தை உற்றார் உறவுகளுக்கு பகிர்ந்து வழங்கும் தினமே சித்திரை புத்தாண்டு . இதனை கையன்பளிப்பு கைச் சிறப்பு எனும் வழக்கால் சுட்டுவார் . ஒரு காலத்தில் சமூகத்தில் உயர்ந்த வர்களால் மட்டுமே நெல்லை உண்ண முடிந்தது . அதுவும் வளமற்ற இடங்களில் நெல்லுக்கே இடம் இல்லை . பெரும்பான்மை தமிழ்ச் சமூகத்தின் உணவுத்தேவையை பூர்த்திசெய்தது சிறு தானியமே . ஆண்டு திங்களில் உளுந்து படைத்து வைரவரையும் மக்கள் நினைவு கொள்வது முக்கியமானது . காட்டுக்குள் திணையும் கேள்வரகு கூழும் குடித்து வாழும் மக்களுக்கு நெல் எங்கே தெரியும் . ஒன்றைப்புரிந்து கொள்ளுங்கள் . நெல் மட்டும் தான் தமிழனின் உணவு இல்லை . சரி விவசாயம் இருக்கட்டும் . ஆகியது . அறுபது வருடங்களின் ஆதிப்பெயர்கள் பிறந்த புதுவருடம் கீழறை ஆடு எனும் விண்ணில் இருக்கும் விண்மீனுடன் சூரியன் பொருந்தி வரும் நாளே சித்திரை பிறப்பு . இரா வணன் முருகன் என்று நாம் புகழும் எம் முன்னோரின் வானியல் அறிவை ஆரியம் என்ற பெயரில் நாமே நழுவ விடுகின்றோம் . சரி இந்த இன மத மனித குல பிரிவுகளை விட்டுத் தள்ளுவோம் . சித்திரை இயற்கை துளிர்க்கும் காலம் . இணை தேடி பறவைகளும் விலங்குகளும் ஓடும் . மரங்கள் பூத்து காய்த்து கனியும் . குயில்கள் கூவும் மயில்கள் ஆடும் . இலங்கை யிலும் இது வசந்தம் தான் . அந்தார்டிக்கா விலும் இது வசந்தம் தான் . கால நிலையை பிரித்து வகுத்த எம் தமிழன் ஏன் முன் பனி காலத்தை வருட ஆரம்பமாக கொள்ள வேண்டும் . முன்பனி நீங்க பின் பனி ஓட பெரு வெயில் அகல வசந்தம் உதிக்கும் . முழுதும் சோற்றை உண்ணும் எமக்கு சிறு தானியம் பற்றி அறியாமல் இருப்பது வியப்பில்லை . திணை குரக்கன வரகு எள்ளு சாமி கடலை பயறு கெளப்பி என அந்த பட்டியல் நீளுகின்றது . திணைப்புலம் காக்கும் செவ்வேள் முருகனையும் உளுந்து நிலம் காக்கும் நாய் அமர் வைரவரையும் இந்நாட்களில் அவர் அவர் மக்கள் நினைவு கூர்வார் . வைரவர் சித்திரைத் திங்களில் குயவர்கள் தம் வனை சில்லை புதுப்பித்தலும் கம்மாளர் புது உலை நிர்மாணித்தலும் சலவைத் தொழிலாளர் தோய் கல்லை மாற்றுதலும் ஏன் தையில் ஏர் பிடித்து உழுத உழவர் கூட ஏரினை இந்நாளில் தான் மாற்றுவார்கள் . ஏர்ப்பிடி இடுதல் என்றும் இந்நாள் நினைவு கொள்ளப்பட்டு வருகின்றது . தைத்திங்கள் அறுவடை பெருநாள் . ஆனால் அது தான் வருட ஆரம்பம் என்று எந்த ஒரு இலக்கியங்களும் சான்று பகிரவில்லை . உளுந்து வடை மாலை அணிந்து குளிர்த்தி கொள்வதும் முருகன் தேனும் திணைமாவும் பிசைந்து குரவை கொள்வதும் இந்நாட்களில் தான் . சுப்பிர மணியனில் இருந்து செவ்வேள் மீண்டது போல் தேவஸ்தானத்தில் இருந்து கோயில் மீண்டது போல் மஹா தேவனில் இருந்து தென்னாட்டு ஈசன் மீண்டது போல் பிலவத்தில் இருந்து கீழுறை மீள வேண்டும் . மேஷத்தில் இருந்து ஆடும் மேழமும் மீள வேண்டும்.சமசுகிருதத்தில் இருந்து தமிழ் மீள வேண்டும் . நாமே எம் தமிழை சிதைத்து ஆனால் சித்திரை பற்றி நெடுநல்வாடை பகிர்ந்து செல்லுகின்றது . திண்ணிலை மருப்பின் ஆடு தலையாக விண்ணூர்பு திரி தரும் வீங்கு செலல் மண்டிலம் என்று நெடு நல் வாடை சொல்லி போகின்றது . இங்கு ஆட்டினை தலையாக கொண்டு சங்கம் சங்க மருவிய காலங்களில் நெற்பயிர்ச்செய்கை எல்லா இடமும் பரவ சிறு தானிய பயிர்ச் செய்கை மெல்ல மெல்ல வீழ்ந்தது . இன்றும் குறிஞ்சி வாழ் பெரு மக்கள் திணைமாவுடன் சித்திரைதிங்களில் ஓரை சுழல்கின்றது என சொல்லப்படுகின்றது . அழித்துக் கொண்டிருக்கின்றோம் . தமிழை முருகனை வழிபடுவது நினைவு கொள்ளத் ஆடு என்ற தூய தமிழுக்கு ஆரியர் இட்ட மீட்போம் தமிழால் மீள்வோம் . வசந்த வாழ்த்துகள் . சிறு மாரி தக்கது . அது போல் பங்குனி சித்திரை பெயரே மேஷம் . மேழம் என்றும் தமிழில் வாழ்த்துக்கள் . குறிஞ்சி வாழ்த்துகள் . உளுந்து அழைப்பார் . பண்பாடு எம்முடையது அவர்கள் வந்து பெயர் வைத்தார்கள் . எவ்வாறு கோவில் தேவஸ்தானமாக மாறியதோ முருகன் ஸ்ரீ சுப்பிரமணியன் ஆனானோ ஈசன் மஹா தேவன் ஆனானோ அது போல் தமிழ்முறை வடமுறை ஆகியது ஆகியது . ஆடு எனும் மேழம் மேஷம் அறுவடை வாழ்த்துகள் . ஏர் மாற்றல் வாழ்த்துகள் . உலை மாற்றல் வாழ்த்துகள் . வனை சில்லு மாற்றல் வாழ்த்துகள் . கடல் புகும் ஆரம்ப வாழ்த்துகள் . சித்திரைதிங்கள் வாழ்த்துகள் . மேழ ஆட்டு பெருநாள் வாழ்த்துகள் . தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் . அடியார் பெருமையின் ஆவண உற்று பெரியபுராணம் ( 08 ஆம் பக்கத் தொடர்ச்சி ) இதை இறைவன் எவ்வளவு மகிழ்ந்து சொல்கிறார் தெரியுமா முருகவேளானவன் குழந்தை பருவத்தில் என் மீது ஏறி விளையாடுவான் அதை விடவும் அன்பால் இவன் செய்யக்கூடிய இந்த செயல் எனக்கு மிகவும் சிறப்புடையதாக இருக்கின்றது என்கிறார் . அதன்பின்பு தன்னுடைய வாயில் உள்ள நீரால் நீராட்டுச் செய்ததை இறைவன் சொல்லுகையில் என் சடைமுடியில் இருக்கக்கூடிய கங்கையை விடவும் புனிதமானது என்கிறார் . அதனை விளக்கும் பாடல் ' ' உருகிய அன்பு ஒழிவு இன்றி நிறைந்த அவன் உரு என்னும் பெருகிய கொள்கல முகத்தில் பிறங்கி இனிது ஒழுகுதலால் ஒரு முனிவன் செவி உமிழும் உயர் கங்கை முதல் தீர்த்த பொரு புனலின் எனக்கு அவன் - தன் வாய் உமிழும் புனல் புனிதம் தென்னாடு அதன்பிறகு அவன் தலையில் வைத்து எனக்கு சூட்டக்கூடிய மலர்கள் எப்படி இருக்குமென்றால் இம்மலை வந்து எனை அடைந்த கானவன் - தன் இயல்பாலே மெய் மலரும் அன்பு மேல் விரிந்தன போல் விழுதலால் செம்மலர் மேல் அயனொடு மால் முதல் தேவர் வந்து புனை எம்மலரும் அவன் தலையால் இடு மலர் போல் எனக்கு ஒவ்வா எவ்வளவு அற்புதமான ஒரு பாடல் . இக்காளத்தி மலைக்கு வந்து என்னை அடைந்த வேடனான திண்ணன் தன் இயல்பான குணத்தால் உண்மையாக மலரும் அன்பு மென்மேலும் விரிந்தது போல் அவன் தலையில் வைத்து எனக்கு இடக்கூடிய இந்த மலர்களுக்கு சிவந்த தாமரை மேல் வீற்றிருக்கும் நான்முகனும் திருமாலும் வந்து இடும் மலர்கள் கூட ஒப்பாகாது . அதன்பிறகு கண்ணப்ப நாயனார் இறைவனுக்கு வைத்த அமுதாகிய பன்றி இறைச்சியானது எதைக் காட்டிலும் உயர்நததென்பதைப் பின்வருமாறு குறிப்பிடுகிறார் .. வெய்ய கனல் பதம்கொள்ள வெந்துளதோ எனும் அன்பால் நையும் மனத்து இனிமையினால் நைய மிக மென்றிடலால் செய்யும் மறை வேள்வியோர் முன்பு தரும் திருந்து அவியில் எய்யும் வரி சிலையவன் - தான் இட்ட ஊன் எனக்கு இனிய இதில் மிக அற்புதமான செய்தி கண்ணப்பர் இறைவனை காண்பதற்கு முன்னால் எப்படி இருந்தாரெனில் வேடர்களுக்கே உரிய குணத்தோடு இருந்தார் என்பது தான் . இறைவனைக் கண்டதும் மனம் நைந்து போனது . அன்பின் வடிவாகிப் போனார் . திருவிசைப்பாவில் ஒரு பாடல் வரும் நையாத மனத்தினை நைவிப்பான் இத்தருவே . கண்ணப்பர் இறைவனுக்கு படைக்க வேண்டுமென இறைச்சியை பதப்படுத்தி அமுதாக்கினார் . இறைவனோ கண்ணப்பரைப் பக்குவப்படுத்தி அடியார் ஆக்கினார் . அந்த உணவானது வேதத்தில் சொல்லப்பட்டுள்ளமை போன்று செய்கின்ற வேள்வித்தீயில் தரும் அவியைக் காட்டிலும் எனக்கு சிறப்பான உணவென்பதை பரம்பொருளே சொல்கிறார் . அடுத்ததாக எல்லாவற்றையும் செய்துவிட்டு இறைவனுக்கு வேதங்களும் தோத்திரங்களும் பாடுவார்கள் . நாம் இன்று இறைவனை அப்படித்தான் வழிபாடு செய்கின்றோம் . ஆனால் கண்ணப்பர் என்ன செய்தார் தெரியுமா ? அதை கருணையாளன் கூறுகிறான் . மன் பெரு மா மறை மொழிகள் மா முனிவர் மகிழ்ந்து உரைக்கும் இன்ப மொழி தோத்திரங்கள் மந்திரங்கள் யாவையினும் முன்பு இருந்து மற்று அவன் - தன் முகம் மலர அகம் நெகிழ அன்பில் நினைந்து எனையல்லால் அறிவுறா மொழி நல்ல நாம் இறைவனை நோக்கி பாடும் போது எந்த நிலையில் நின்று பாட வேண்டும் என்பதை இறைவனே நமக்கு கண்ணப்பர் மூலமாக தெரிவிக்கிறார் . எப்படி பாட வேண்டும் என்றால் முகம் மலர அகம் நெகிழ அன்பால் நிறைந்து அவனை நினைத்துக்கொண்டே உருகி மிக சிறப்பாகப் பாடவேண்டும் . அப்படி அன்பால் முகம் மலர்ந்து அகம் நெகிழ்ந்து பேசக்கூடிய மொழிகள் வேதங்கள் மற்றும் தோத்திரங்களைக் காட்டிலும் எனக்கு இனிமையான 09 தெ சிவத்திரு யாழவன் சிவவேதன் மொழி என்கிறார் . எம்பெருமான் இப்படியாக ஒரு ஐந்து செய்திகளை கண்ணப்பர் பற்றி எடுத்துரைக்கின்றார் . கண்ணப்ப நாயனார் செய்த ஒவ்வொரு செயலுமே இறைவனை கவர்ந்திழுத்திருக்கின்றது . ஏனெனில் அவன்தான் உள்ளம் கவர் கள்வன் . ஆனால் அந்த உள்ளங்கவர் கள்வனையே கவர்ந்தவர்தான் கானகத்தில் பிறந்த கண்ணப்ப நாயனார் என்பதை இந்த பாடல்கள் மூலமாக நாம் அறிய முடிகிறது . நிறைவாக அன்பு என்றால் கண்ணப்பர் போன்று இருக்க வேண்டும் . அப்படிப்பட்ட அன்பை இறைவா ! நீ எனக்கு தர வேண்டும் என்ற உயரிய விண்ணப்பத்தை நாம் எப்பொழுதுமே இறைவனிடம் வைக்க வேண்டும் . ஏனென்றால் மணிவாசகரும் கூறுவார் வேண்டாது ஒன்றும் வேண்டாது மிக்க அன்பே மேவுதலே . ஆகையால் அன்புதான் சிவம் . அன்பில்லாத இடத்தில் அரன் இருப்பதில்லை . எனவே கருணையாளனை அன்பால் என்றும் எப்பொழுதும் வணங்குவோம் பெறுவோம் . கண்ணப்பரைப் பற்றி மறைகளே முறையென முன்னின்ற காலத்தில் மானைக் கொன்று தேனையுண்டு கானகத்தில் களிற்றைப்போல் திரிந்தவனை தானே சென்று தனியே நின்று காரணமாய் முக்கண்ணனும் புறக்கண்ணை இழந்தவனாய் இன்பமாயிருந்தான் ... திண்ணனும் திகைத்துப்போய்ப் பார்த்தவுடன் பரிவோ பாதியில் விட்டதொடர்போ எனகண்ணைப் பறிக்க முன்னமே மறந்தான் வலியை குருதியே வந்தாலும் உறுதியில் நின்றதால்மருளனாய் இருந்தவன் அருளனாய் உயர்ந்தான் .. பத்திதான் முத்தியை அடையும் உத்தியென சுத்தமாகச் சொல்லிவிட்டான் . நானும் அர்த்தமாக உணர்ந்தேன் . சற்று அயர்ந்தே போனேன் அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார் அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார் அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்தி ருப்பாரே- திருமந்திரம் திருச்சிற்றம்பலம் தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி