தென்னாடு வைகாசித் திங்கள் இதழ் - 08

தெ 10 தென்னாடு விடை நல்லோரை வைகாசித் திங்கள், 2021 சிவபூமியில் சிவனைத் மட்டக்களப்பு செட்டிபாளையம் சிவன் கோயில் தேடி - 1981 ஆனியில் இடம்பெற்ற முதலாவது கடவுள் மங்கல நீராட்டு "கதிரவன் விழித்திடும் கிழக்கினிலெ ஆலைகடல் மோதும் தரையினிலெ ஆமர்ந்தாய் சோமநாதராய் செட்டியூரினிலே” என்னும் கவிநயமான பாவிற்கேற்ப இலங்கையின் கிழக்கு கரையில் அமைந்துள்ள மட்டக்களப்பில் செட்டியூர் என்று புகழப்படும் செட்டிபாளையம் எனும் பழம்பதியில் சோமநாதலிங்கேசுவரராய் சிவனார் அருள் பாலித்து வருகின்றார். இவ்வூர் மட்டக்களப்பு நகரிலிருந்து தெற்கே 12 மைல் தொலைவில் அமைந்துள்ளது. பண்டைய காலம் தொட்டு இந்திய செட்டியார்கள் வணிக நோக்கம் கருதி இலங்கையின் பல பாகங்களுக்கும் சென்று வணிகம் புரியக் குடியேறினார்கள். குறிப்பாக யாழ்ப்பாண ஆரியச்சக்கரவர்த்தி காலமிருந்து இந்திய செட்டியார்களின் இருப்பிடங்கள் கிழக்கின் பகுதிகள் சிலவற்றிலும் செல்வாக்குற்றிருந்தது. அந்ந வகையில் இவ்வூரிலும் வருகை தந்த செட்டியார்கள் பாளையமடித்திருந்தார்கள் என்பதாகையால் செட்டிப்பாளையம், செட்டியூர் என பெயர் பெற்றது என்பர். தமிழ் நாட்டிலும் செட்டிபாளையம் எனும் இடமுள்ளது அங்கும் சிவனுக்கு கோயில் உண்டு. இயற்கை அமைவும் கோயில் வரலாறும் நீர்வளமும், நல்ல நிலவளத்தால் கமத்தொழிலும், கற்றவர் வளமும், பொருள் பெற்றவர் வளமும் ஒருங்கே அமையப் பெற்ற இவ்வூரின் இடையில் சிவனாருக்கு கோயிலும், இதனைச் சூழ வடக்கே விநாயகர் கோயிலும், தெற்கே கந்ந சுவாமி கோயிலும், கிழக்கே வைரவர் கோயிலும், மேற்கே பத்தினிக்கும் கோயில் உண்டு. தற்போதுள்ள சிவன் கோயில் வடக்கு நோக்கிய வாசலையும், ஆகம முறைப்படி விமானத்துடன் கூடிய கருவறை, கொடிமர அமைப்பு, நந்திபீடம், இராசகோபுரம், மணிக்கோபுரம், பரிபார தேவர் கோயில்கள் என்பவற்றுடன் பிரமிப்பான அழகிய ஓவியங்களும், சிற்பங்களும் செறிந்தும் காணப்படுகின்றது. இத்தலத்தின் உற்பத்தி வரலாற்றினை ஆராயும் போது LI ஸ்ரீசோமேஸ்வரா கிரி (ஆலய ஸ்தாபகற்) இருபதாம் நூற்றாண்டின் மூன்றாம் தசாப்த காலத்திலே தோன்றியதாக கூறப்படுகிறது. இந்நியாவிலிருந்து 1939 ஆம் ஆண்டில் இலங்கைக்கு வருகை தந்த சோமேசுவரானந்த கிரி எனும் சுவாமியால் திருகோணமலை, குருக்கள்மடம், செட்டிபாளையம் என்னும் இடங்களில் மடங்கள் அமைத்து சமயப் பிரச்சாரங்கள் புரிந்து வருங்கால் திருகோணமலை குச்ச வெளியில் உள்ள செம்பி மலையில் செம்பீசுவரர் ஆலயத்தையும், குருக்கள்மடத்தில் திருமால் கோயிலையும், அருள்மிகு சோமநாதலிங்கேசு செட்டிபாளையத்தில் சிவனார் கோயிலையும் உருவாக்கினார் என்று கூறப்படுகின்றது. இதற்கேற்றால் போல் சிவன் கோயிலின் அருகாமையில் இன்றும் அவருக்கும் திரு வுருவப்பூசை நடைபெற்று வருவதையும் சுவாமியினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட சிவன் ஆலய திருவருள் சங்கம் (1940), ஐக்கிய மாதர் சங்கம் (1940) ஆகிய திருப் பணிச்சபைகள் இன்றும் முட்டுப்படாமல் இயங்கி வருகின்றமையையும் செம்மி மலையில் உள்ள செம்பீசுவர பெருமானைச் செட்டிபாளை யச் சிவனடியார்கள் சென்று வழிபட்டு வருவதனையும் காணமுடிகின்றது. சுவாமி அவர்களால் இவ்வூரில் உருவாக்கப்பட்ட திருவருள் ஆண்கள் சங்கம், திருவருள் பெண்கள் சங்கத்தினரின் ஊடாக தற்போது உள்ள ஆலய இடத்தில் களிமண்ணால் மடம் ஒன்று அமைக்கப்பட்டு சிவ வழிபாடும் வெள்ளிக்கிழமை களில் பூசைகளும் இடம் பெற்று வந்தன. திருவருள் சங்க பெண்கள் ஒவ்வொரு வாரமும் செவ்வாக்கிழமைகளில் கூடி சைவப்புலவர் சுந்தரமூர்த்தி துஷ்யந்த் கலைமாணி முதுகலைபாணி, பிரான்சு தாம் வீடுவீடாகச் சேர்த்த பிடிஅரிசியினைச் சேர்த்து பூசை பணிக்காகக்கொடுத்து வந்தனர். இவ்வாறு இக் கோயில் மடத்தில் தோன்றி வளர்ந்தமையால் இன்றும் இவ்வூரார் மடத்து கோயில் என்று பழமை மாறாது போற்றிவருகின்றனர். சுவாமியின் இறைபதத்தைத் தொடர்ந்து மடம் இருந்த இடத்தில் புதிய ஆலயம் ஒன்று அமைக்கப்பட்டு நுன்மதி வருடம் ஆனி மாதம் நான்காம் தேதி தட்சணா நல்வேளையில் இறைதிருகூட்டி பின்பு இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட சிவலிங்கத்திற்கு ஆகம முறைப்படி திருகுடமுழுக்கு விழா 1981-06-18 நிறைவேற்றப்பட்டது. அன்றிலிருந்து சுவாமியின் பெயரை நினைவிற் கொண்டு அங்கு அருள் சுரக்கும் சிவனை சோமநாதலிங்கேசுவரர் என்றும் நாயகியை சோம கலாநாயகி என்றும் பெயர் போற்றலாகினர். இதன் பின்பு 1996 ஆம் ஆண்டு திருகுடமுழுக்குப் பெற்று கீர்த்தியும் பெற்றது. கோயில் பூசைகளும் சிறப்புகளும் இவ்வாலயத்தின் சிறப்பு என்னவெனில் வழமையாக எல்லா சிவன்கோயில்களிலும் இடம் பெறும் மூர்த்தி, தலம், தீர்த்த அம்சங்களுக்கு பதிலாக, வீரசைவபண்பாட்டைத் துலக்கும் குருலிங்க சங்கவழிபாடு மேன்மை பெற்றிருப்பதே ஆகும். இதற்கு காரணம் சோமேசுவரானந்த கிரி சுவாமியின் மடபாரம்பரியங்களும், சிவலிங்க பூசையும் ஆண், பெண் பக்தர்களை ஒன்றாக இணைத்து சங்கவழிபாடியற்றிய பேறுகளின் விளைவுகளே ஆகும். இவ் ஆலயத்தில் தினப் பூசைகளும், வெள்ளிக்கிழமைகளில் விசேட பூசையும் நடைபெற்று வருகின்றது. வருடம் தோறும் சிவனிரவு, கேதார கௌரி விரதம், கழுவாய் விரத வழிபாடுகள், திருவாதிரை, நவராத்திரி முதலிய விரத வழிபாடுகளும், தைவருடம், தைப்பூசம், மாசிமகம், பங்குனி உத்தரம், சித்திரை நிறைமதி, ஆனி உத்தரம், ஆடி மறைமதி முதலிய விசேட மாத பூசைகளும், திருவாதிரை விரத காலத்தில் மட்டும் திருவெம்பாவை ஓதுதல், திருவாசகப் படிப்பு, திருவிழா இறுதிநாள் சமுத்திரத்தில் தீர்த்தம் ஆடுதல் என்பனவும் இடம்பெற்று வருவதை தரிசிக்க முடிகின்றது. இத்தலத்தின் மீதும் இவ்வூர்க் கவிஞர்களால் பல இலக்கியங்கள் தொடுக்கப்பட்டுள்ளன. இத்தலத்தின் வரலாறுபற்றி திருக்கேதீச்சரம் ஸ்ரீமத் சபாரத்தினம் சுவாமிகள் தொண்டர் சபை வெளியிட்ட “ஈழத்து சிவாலயங்கள்” என்ற நூலில் ஒருகட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. அதேபோல் திருவருள் சங்க வெளியீடாக அமைந்த "ஆனந்தகிரி" பவளவிழாச் சிறப்பு மலரிலும் இக்கோயிலின் வரலாறு எழுதப்பட்டுள்ளது. "மக்கள் சேவையே மகேசன் சேவை” என்பதற்கிணங்க செட்டியூர் சமூகத்தை ஒன்றிணைத்து சிவனார் கோயிலின் பெயருடன் சங்கம் அமைத்து, சமயம், சமூகம், கல்வி எனப் கோயில் தொடங்கும் போது அடிகளார் சோமேசுவரானந்த கிரி அவர்கள் பல்துறைச் சார்ந்த ஆக்கபூர்வமான தொண்டுகளை புரிந்து சமயச் சமூக மேம்பாட்டிற்கு உதவி வரும் திருக்கோயிலாகவும் விளங்குகின்றது. "சிவ சிவ என்றிடச் சிவகதிதானே"
தெ 10 தென்னாடு விடை நல்லோரை வைகாசித் திங்கள் 2021 சிவபூமியில் சிவனைத் மட்டக்களப்பு செட்டிபாளையம் சிவன் கோயில் தேடி - 1981 ஆனியில் இடம்பெற்ற முதலாவது கடவுள் மங்கல நீராட்டு கதிரவன் விழித்திடும் கிழக்கினிலெ ஆலைகடல் மோதும் தரையினிலெ ஆமர்ந்தாய் சோமநாதராய் செட்டியூரினிலே என்னும் கவிநயமான பாவிற்கேற்ப இலங்கையின் கிழக்கு கரையில் அமைந்துள்ள மட்டக்களப்பில் செட்டியூர் என்று புகழப்படும் செட்டிபாளையம் எனும் பழம்பதியில் சோமநாதலிங்கேசுவரராய் சிவனார் அருள் பாலித்து வருகின்றார் . இவ்வூர் மட்டக்களப்பு நகரிலிருந்து தெற்கே 12 மைல் தொலைவில் அமைந்துள்ளது . பண்டைய காலம் தொட்டு இந்திய செட்டியார்கள் வணிக நோக்கம் கருதி இலங்கையின் பல பாகங்களுக்கும் சென்று வணிகம் புரியக் குடியேறினார்கள் . குறிப்பாக யாழ்ப்பாண ஆரியச்சக்கரவர்த்தி காலமிருந்து இந்திய செட்டியார்களின் இருப்பிடங்கள் கிழக்கின் பகுதிகள் சிலவற்றிலும் செல்வாக்குற்றிருந்தது . அந்ந வகையில் இவ்வூரிலும் வருகை தந்த செட்டியார்கள் பாளையமடித்திருந்தார்கள் என்பதாகையால் செட்டிப்பாளையம் செட்டியூர் என பெயர் பெற்றது என்பர் . தமிழ் நாட்டிலும் செட்டிபாளையம் எனும் இடமுள்ளது அங்கும் சிவனுக்கு கோயில் உண்டு . இயற்கை அமைவும் கோயில் வரலாறும் நீர்வளமும் நல்ல நிலவளத்தால் கமத்தொழிலும் கற்றவர் வளமும் பொருள் பெற்றவர் வளமும் ஒருங்கே அமையப் பெற்ற இவ்வூரின் இடையில் சிவனாருக்கு கோயிலும் இதனைச் சூழ வடக்கே விநாயகர் கோயிலும் தெற்கே கந்ந சுவாமி கோயிலும் கிழக்கே வைரவர் கோயிலும் மேற்கே பத்தினிக்கும் கோயில் உண்டு . தற்போதுள்ள சிவன் கோயில் வடக்கு நோக்கிய வாசலையும் ஆகம முறைப்படி விமானத்துடன் கூடிய கருவறை கொடிமர அமைப்பு நந்திபீடம் இராசகோபுரம் மணிக்கோபுரம் பரிபார தேவர் கோயில்கள் என்பவற்றுடன் பிரமிப்பான அழகிய ஓவியங்களும் சிற்பங்களும் செறிந்தும் காணப்படுகின்றது . இத்தலத்தின் உற்பத்தி வரலாற்றினை ஆராயும் போது LI ஸ்ரீசோமேஸ்வரா கிரி ( ஆலய ஸ்தாபகற் ) இருபதாம் நூற்றாண்டின் மூன்றாம் தசாப்த காலத்திலே தோன்றியதாக கூறப்படுகிறது . இந்நியாவிலிருந்து 1939 ஆம் ஆண்டில் இலங்கைக்கு வருகை தந்த சோமேசுவரானந்த கிரி எனும் சுவாமியால் திருகோணமலை குருக்கள்மடம் செட்டிபாளையம் என்னும் இடங்களில் மடங்கள் அமைத்து சமயப் பிரச்சாரங்கள் புரிந்து வருங்கால் திருகோணமலை குச்ச வெளியில் உள்ள செம்பி மலையில் செம்பீசுவரர் ஆலயத்தையும் குருக்கள்மடத்தில் திருமால் கோயிலையும் அருள்மிகு சோமநாதலிங்கேசு செட்டிபாளையத்தில் சிவனார் கோயிலையும் உருவாக்கினார் என்று கூறப்படுகின்றது . இதற்கேற்றால் போல் சிவன் கோயிலின் அருகாமையில் இன்றும் அவருக்கும் திரு வுருவப்பூசை நடைபெற்று வருவதையும் சுவாமியினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட சிவன் ஆலய திருவருள் சங்கம் ( 1940 ) ஐக்கிய மாதர் சங்கம் ( 1940 ) ஆகிய திருப் பணிச்சபைகள் இன்றும் முட்டுப்படாமல் இயங்கி வருகின்றமையையும் செம்மி மலையில் உள்ள செம்பீசுவர பெருமானைச் செட்டிபாளை யச் சிவனடியார்கள் சென்று வழிபட்டு வருவதனையும் காணமுடிகின்றது . சுவாமி அவர்களால் இவ்வூரில் உருவாக்கப்பட்ட திருவருள் ஆண்கள் சங்கம் திருவருள் பெண்கள் சங்கத்தினரின் ஊடாக தற்போது உள்ள ஆலய இடத்தில் களிமண்ணால் மடம் ஒன்று அமைக்கப்பட்டு சிவ வழிபாடும் வெள்ளிக்கிழமை களில் பூசைகளும் இடம் பெற்று வந்தன . திருவருள் சங்க பெண்கள் ஒவ்வொரு வாரமும் செவ்வாக்கிழமைகளில் கூடி சைவப்புலவர் சுந்தரமூர்த்தி துஷ்யந்த் கலைமாணி முதுகலைபாணி பிரான்சு தாம் வீடுவீடாகச் சேர்த்த பிடிஅரிசியினைச் சேர்த்து பூசை பணிக்காகக்கொடுத்து வந்தனர் . இவ்வாறு இக் கோயில் மடத்தில் தோன்றி வளர்ந்தமையால் இன்றும் இவ்வூரார் மடத்து கோயில் என்று பழமை மாறாது போற்றிவருகின்றனர் . சுவாமியின் இறைபதத்தைத் தொடர்ந்து மடம் இருந்த இடத்தில் புதிய ஆலயம் ஒன்று அமைக்கப்பட்டு நுன்மதி வருடம் ஆனி மாதம் நான்காம் தேதி தட்சணா நல்வேளையில் இறைதிருகூட்டி பின்பு இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட சிவலிங்கத்திற்கு ஆகம முறைப்படி திருகுடமுழுக்கு விழா 1981-06-18 நிறைவேற்றப்பட்டது . அன்றிலிருந்து சுவாமியின் பெயரை நினைவிற் கொண்டு அங்கு அருள் சுரக்கும் சிவனை சோமநாதலிங்கேசுவரர் என்றும் நாயகியை சோம கலாநாயகி என்றும் பெயர் போற்றலாகினர் . இதன் பின்பு 1996 ஆம் ஆண்டு திருகுடமுழுக்குப் பெற்று கீர்த்தியும் பெற்றது . கோயில் பூசைகளும் சிறப்புகளும் இவ்வாலயத்தின் சிறப்பு என்னவெனில் வழமையாக எல்லா சிவன்கோயில்களிலும் இடம் பெறும் மூர்த்தி தலம் தீர்த்த அம்சங்களுக்கு பதிலாக வீரசைவபண்பாட்டைத் துலக்கும் குருலிங்க சங்கவழிபாடு மேன்மை பெற்றிருப்பதே ஆகும் . இதற்கு காரணம் சோமேசுவரானந்த கிரி சுவாமியின் மடபாரம்பரியங்களும் சிவலிங்க பூசையும் ஆண் பெண் பக்தர்களை ஒன்றாக இணைத்து சங்கவழிபாடியற்றிய பேறுகளின் விளைவுகளே ஆகும் . இவ் ஆலயத்தில் தினப் பூசைகளும் வெள்ளிக்கிழமைகளில் விசேட பூசையும் நடைபெற்று வருகின்றது . வருடம் தோறும் சிவனிரவு கேதார கௌரி விரதம் கழுவாய் விரத வழிபாடுகள் திருவாதிரை நவராத்திரி முதலிய விரத வழிபாடுகளும் தைவருடம் தைப்பூசம் மாசிமகம் பங்குனி உத்தரம் சித்திரை நிறைமதி ஆனி உத்தரம் ஆடி மறைமதி முதலிய விசேட மாத பூசைகளும் திருவாதிரை விரத காலத்தில் மட்டும் திருவெம்பாவை ஓதுதல் திருவாசகப் படிப்பு திருவிழா இறுதிநாள் சமுத்திரத்தில் தீர்த்தம் ஆடுதல் என்பனவும் இடம்பெற்று வருவதை தரிசிக்க முடிகின்றது . இத்தலத்தின் மீதும் இவ்வூர்க் கவிஞர்களால் பல இலக்கியங்கள் தொடுக்கப்பட்டுள்ளன . இத்தலத்தின் வரலாறுபற்றி திருக்கேதீச்சரம் ஸ்ரீமத் சபாரத்தினம் சுவாமிகள் தொண்டர் சபை வெளியிட்ட ஈழத்து சிவாலயங்கள் என்ற நூலில் ஒருகட்டுரை வெளியிடப்பட்டுள்ளது . அதேபோல் திருவருள் சங்க வெளியீடாக அமைந்த ஆனந்தகிரி பவளவிழாச் சிறப்பு மலரிலும் இக்கோயிலின் வரலாறு எழுதப்பட்டுள்ளது . மக்கள் சேவையே மகேசன் சேவை என்பதற்கிணங்க செட்டியூர் சமூகத்தை ஒன்றிணைத்து சிவனார் கோயிலின் பெயருடன் சங்கம் அமைத்து சமயம் சமூகம் கல்வி எனப் கோயில் தொடங்கும் போது அடிகளார் சோமேசுவரானந்த கிரி அவர்கள் பல்துறைச் சார்ந்த ஆக்கபூர்வமான தொண்டுகளை புரிந்து சமயச் சமூக மேம்பாட்டிற்கு உதவி வரும் திருக்கோயிலாகவும் விளங்குகின்றது . சிவ சிவ என்றிடச் சிவகதிதானே