தென்னாடு வைகாசித் திங்கள் இதழ் - 08

தெ 06 (யோகர் சுவாமிகள் கடந்த மாத தொடர்ச்சி) இந்த நாட்டைப் பொறுத்தவரை பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக சராசரி மனிதரிலும் பன்மடங்கு உயர்ந்து நின்ற பெரியோர்கள் பலருண்டு. திருமூலர், பாம்பாட்டிச் சித்தர், சிவவாக்கியர் போன்ற வர்கள் தம் பாடல்கள் மூலம் மக்கள் சமுதா யத்திற்கு வழிகாட்டியவர்கள் ஆவார்கள். இதன் எதிராக வேறு பல சித்தர்கள் தாங்கள் வாழ்கின்ற காலத்தில் தம்மை வந்தடையும் மக்களின் குறைகளைப் போக்கி நல்வாழ்வு வாழ வழி செய்தவர்கள் ஆவார்கள். யாழ்ப்பாணத்தில் நீண்டகாலம் வாழ்ந்து 1964 வாக்கில் வீடுபேறடைந்தவர் இச்சுவாமியாவார். இவர் ஒரு தனிப்பட்ட இடத்தில், சிறிய குடிசையொன்றை அமைத்துக் கொண்டு அதனுள் இருந்து வந்தார். அந்தக் குடிசைக்குள் நுழைய வேண்டுமானால் யாராக இருந்தாலும் குனிந்து இடுப்பை வளைத்துக் கொண்டுதான் உள்ளே செல்ல முடியும். மீண்டும் வெளியே செல்வதும் இதே முறையில்தான். அந்த நாட்டை ஆண்ட பிரதம மந்திரி முதல் ஆங்கிலேயர்வரை மிகப்பலர்ச் சுவாமியிடம் அளவிலாத அன்பு பூண்டு வாழ்ந்தனர். சிங்களவர், இசுலாமியர், தமிழர், ஆங்கிலேயர்கள் என்ற வேறுபாடுமின்றிச் சுவாமியிடம் ஒவ்வொரு மாலையும் மக்கள் கூட்டம் திரண்டு நிற்கும். குடிசைக்குள் அதிகமாக பதினைந்து அல்லது இருபதுபேர் தான் நிற்க முடியும். இவ்வாறு நிற்ப தம் வழிபாட்டை முடித்துக் கொண்டு வெளியே சென்ற பிறகு தான் அடுத்த கூட்டம் உள்ளே நுழையமுடியும். ஒவ்வொருவரும் காணிக்கையாக பழங்களை வாங்கி வந்துச் சுவாமியின் திருவடிகளில் வைத்து வணங்கு வார்கள். எந்த ஒன்றையும் சுவாமி எடுத்து வாயில்ப் போட்டதாக வரலாறு இல்லை. குறைதீர்க்க வேண்டி வந்தவர்கள் வாய்விட்டுத் தம்குறைகளை சொல்லும் பழக்கமில்லை. எனவே பதினைந்து இருபது நிமிடங்கள் ஒரு கூட்டம் உள்ளே நின்றாலும் ஒருவர்கூட வாய்திறந்து எதனையும்ச் சுவாமியிடம் கூறியதில்லை. இந்த நடைமுறையின் பொருளை நான் தெரிந்து கொள்வதற்குச் சிறிதுகாலம் பிடித்தது. 1950 வாக்கில் முதன் முறையாகச் சுவாமியைத் தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது. அதற்குமுன்னர் சுவாமியைப் பற்றி அதிகமொன்றும் தெரிந்துகொண்டதில்லை. முதன் முறையாக என்னை அழைத்துச் சென்றவர் வழக்கறிஞர் பணிபுரியும் ஓர் அன்பராவார். உள்ளே சென்று, சுவாமிகளை விழுந்து வணங்கிவிட்டு ஏனையோர்களுடன் நானும் நின்று கொண்டிருந்தேன். திடீரென்று சுவாமி, "எடே பொடியன் இங்காலை வந்திருக்கட்டும்” என்று கூறிவிட்டு வலப்புறம் கையைக் காட்டினார்கள். என்னைத் தான் சுவாமி குறிப்பிட்டார்கள் என்பதை அறியாத நான் பொடியன் என்று கூறியது யாரையென்று தெரியாமல் நின்று கொண்டிருந்தேன். சுவாமி விரலினால் சுட்டிக்காட்டி "பொடியா! உன்னைத் தான்" என்று கூறினார்கள். இப்பொழுது என்னை ஒரு பயம் பற்றிக் கொண்டது. சுவாமி முன்நிற்பவர்கள் யாரும் எதிரே அமர்வதில்லை என்பதைக் கேள்விப்பட்டிருக்கிறேன். அப்படியிருக்க நான் மட்டும் எப்படி அமர்வது என்று பயந்து நிற்கையில் கருணை நிறைந்த பார்வையோடு "வா மகனே! இங்கே வந்து உட்கார்" என்று கூறிவிட்டு வலக்கையால் அமரவேண்டிய இடத்தையும் தொட்டுக் காட்டினார்கள். அன்று முதல் எத்தனையோ தடவைகள் சுவாமியிடம் சென்றுள்ளேன். ஒவ்வொரு முறையும் வீழ்ந்து வணங்கியவுடன் அமரச் செய்வார். முதல் இரண்டு தடவைகளில் சுவாமி சொல்லிக் கொண்டிருந்தவை, என் மனத்தில் குழப்பத்தை விளைவித்தன. சுவாமி விடாமல் நீளமாகப் பாடிக்கொண்டே இருப்பார். கூர்ந்து கவனித்த பொழுது திருவாசகத்தில் ஒரு அரையடி, தேவாரத்தில் ஒன்றரையடி, திருவிசைப்பாவில் நாலு சொற்கள் என்று மாறி மாறிப் பாடிக்கொண்டே இருப்பார். என் போன்ற விவரம் புரியாதோருக்கு ஏன் சுவாமி இப்படி அரையடி முக்காலடி என்று பாடுகிறார் என்ற சந்தேகம். வெளியே வந்து நண்பர்களைக் கேட்டபோது எப்போதும் சுவாமிகள் இப்படித்தான் பாடிக்கொண்டே இருப்பார்கள் என்றார்களே தவிர யாரும் தென்னாடு விடை நல்லோரை வைகாசித் திங்கள், 2021 பேசுவதை அந்தச் ஒளிப்படம் காட்டிற்று. என் ஐயத்தைப் போக்கவில்லை. உள்ளிருந்து குடிலுக்குச் சென்று அவர்கள் அமரும் கதிர்காமத்தில் ஒலிவாங்கியின் முன்னர் வெளியே வந்த அன்பர்களைக் கண்டு பீடத்திற்கு ஒரு கும்பிடுபோட்டு வரலாம் பேசும்போது ஓர் உண்மை தெரியலாயிற்று.வாருங்கள்" என்றார். அதை ஏற்றுக்கொண்டு தாங்கள் பெரும் குறையோடு இருந்ததாகவும், சுவாமி பாடிக் கொண்டிருக்கையில் குறிப்பிட்ட சிலவார்த்தைகள் தம் மனத்துள் புகுந்து பெரிய அமைதியைத் தந்ததாகவும், தம்முடைய பிரச்சனைகட்கு அவை விடையாக அமைந்த தாகவும் கூறினார்கள். அதிர்ந்துபோன நான் செயலாள நண்பரைப் பார்த்து "இது என்ன பழையபடம், இதைப் போட்டுக் காட்டினீர்களே” என்றேன். அதை மறுத்த அவர் முந்தாநாள் எடுத்ததுதான் இது என்பதற்கு அத்தாட்சியாக அந்தப் படச்சுருளை வைக்கும் தகரப் பெட்டியின் மேல் எழுதியிருந்ததைக் காட்டினார். எப்பொழுது எடுக்கப்பட்டது எந்த மணியிலிருந்து எதுவரை என்றெல்லாம் அதில் எழுதியிருந்தது. வருபவர் வாய்விட்டுக் குறைகளைக் கூறுவதும் இல்லை. தங்களுக்கு என்ன குறையென்று அந்த அருளாளர் கேட்பது மில்லை. ஆனாலும் வருபவர்க்கு அமைதி கிடைத்துவிடும். கம்பநாடன் "வாராதே வர வல்லாய்" என்று கூறுவதன் பொருளை சுவாமி உடன் இருக்கும்போது தெரிந்து கொள்ள முடிந்தது. ஏறத்தாழ இருபது தடவைகளுக்கு மேல் சுவாமியைத் தரிசித்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் நான்கைந்து நாட்கள் யாழ்ப்பாணத்தில் இருப்பேன். ஆதலால் அன்றன்று என் சொற்பொழிவு முடிந்தவுடன் சுவாமியின் சந்நிதிக்குச் சென்று அரை மணியோ ஒரு மணியோ அவரின் திருவடிக்கீழ் அமர்ந்து அவரின் அருளைப்பெறும் வாய்ப்புப் பெற்றி ருந்தேன். இப் பெருமகனார் எல்லாம் வல்ல சித்தர் என்பதை நிரூபிக்க இந்நிகழ்ச்சிகள் நான் புறப்பட நானே காரை ஓட்ட ஏற்றுக்கொண்டேன். முதல் இருக்கையில் சிறீகாந்தாவும் நானுமிருக்க பின் இருக்கையில் திருமதி சிறீகாந்தா அமர்ந்தார்கள். உறுதியாக சுவாமி இருக்கமாட்டார் என்ற துணிவுடன் சென்றோமாதலால் குடிலின் வாயிலை நெருங்குகின்ற வரையில் பேசிக்கொண்டே சென்றோம். மூவரும் நுழைந்தவுடன் மிகப்பெரிய அதிர்ச்சிக்குள்ளானோம். நாங்கள் வாய்திறந்து ஒன்றும் பேசவில்லை பேசவும் முடியவில்லை. அந்த நிலையிலும் அந்த அருளாளர் "பொடியா உன்னுடைய இடத்தில் வந்து இருக்கட்டும்" என்றார். நண்பர் சிறீகாந்தாவும் அவர் மனைவியும் சுவாமி கூட ஆடிவேலுக்குப் போகவில்லை என்பதைக்கண்டு ஒன்றும் புரியாமல் நின்றார்கள். சுவாமி அவர்களைப் பார்த்து "ஏன் மகனே! ஆடிவேலுக்குப் போகவில்லையா?” என்று கேட்டார்கள். நண்பர் சிறீகாந்தா கண்ணீர் ஆறாகப் பெருக, வாய்குழறி அரச ஆணையின் காரணமாக தான் யாழ்ப்பாணத்தில் தங்க நேரிட்டது என்று சொல்லி அழுதார்கள். உடனே சுவாமி பின்வருமாறு கூறினார் பொறுமை இழந்த நான் உடனே தொலைபேசி மூலம் யாழ்ப்பாணத்திலுள்ள சிறீகாந்தாவுடன் தொடர்பு கொண்டேன். நான் எவ்வளவு எடுத்துக் கூறியும் சிறீகாந்தா நம்ப மறுத்துவிட்டார். “அ. ச. ஐயா! நாம் மூன்றுபேரும் சுவாமிகளிடம் ஒரு மணிநேரம் இருந்ததையும் அவரது பொன்மொழிகளைக் கேட்டதையும் நன்றாக அறிவோம். 'நமக்கென்ன வாகனமா இருக்கிறது. அந்த மடையனுக்குத் தான் மயிலிருக்கிறது' என்று கூறியது நினைவில்லையா?” என்று கேட்டார். எவ்வளவு சொல்லியும் நண்பர் சிறீகாந்தா படச்சுருளை நம்பத் தயாராக இல்லை. அரசுப் பணியாளர்கள் ஏதோ தவறு செய்து விட்டார்களென்றே உறுதியாக நம்பினார். இந்நிலையில் நான் ஒரு முடிவுக்கு வந்தேன். ஐந்து நாள் சொற்பொழிவு முடிந்ததும் கொழும்பிலிருந்து நேரே சென்னை வருவதற்கு என்னிடம் பயணச் சீட்டிருந்தாலும் அதை மாற்றி யாழ்ப்பாணத்தில் ஒரு நாள் தங்கிச் செல்ல முடிவு செய்தேன். அன்று கூட்டத்திற்கு வந்திருந்த பலரும் கதிர்காமம் சென்று மயில்வாகன முருகனையும் மானுட வடிவில் யோகர்சுவாமிகள் என்ற பெயரில் இருந்த முருகனையும் கண்டவர்கள் ஆவர். பேசியதை இவர்கள் அனைவரும் நேரே சுவாமியின் சொற்போழிவை கேட்டவர்களாதலால் அவர்கள் என்னை நம்பத் தயாராகவில்லை. இந்த நிலையில் என் பணி முடிந்தவுடன் ஆறாம் நாள் புறப்பட்டு யாழ்ப்பாணம் வந்தேன். விமான நிலையத்திற்கு வந்த சிறீகாந்தா இது பற்றி அவசரமாக என்னுடன் பேசவிரும்பியதால் ஓட்டுநரை விட்டுவிட்டு தானே வண்டி ஓட்டி வந்திருந்தார். பலாவி அ.ச.ஞானசம்பந்தன் ஐயா அவர்கள் ஈழத்து சித்தர்கள்: தவத்திரு யோகர் சுவாமிகள் எண்சித்திகளும் வல்லர்-யாழ்ப்பாணத்தினும் இருந்தார் கதிர்காகம் ஆடிவேலிலும் இருந்தார் விமான நிலையத்திலிருந்து மாவட்ட இணைப்பாளர் இல்லம் செல்லும்வரையில் நடந்தவற்றையெல்லாம் கூறினேன். நண்பர் சிறீகாந்தா அவர்கள் உறுதியாக அந்தச் சினிமாப் படம் பழையபடம் என்ற முடிவிலிருந்து மாறவேயில்லை. அன்றுமாலை ஒரு மணியளவில் நாங்கள் மூவரும் சுவாமியைத் தரிசிக்கச் சென்றோம். விழுந்து வணங்கியவுடன் சுவாமி "பொடியா! நீ ஏன் பட்டணம் போகாமல் இங்கே வந்தாய்?” என்றவுடன் நான் அச்சத்தோடு நடந்தவற்றைக் கூறினேன். சுவாமி கடகடவென்று சிரித்துவிட்டு, "அந்த மடையனுக்குத்தான் மயிலிருக்கிறது. நாங்கள் எப்படி அங்கே போகமுடியும்.மயிலா இருக்கிறது. நமக்கு?" என்று கூறிச் சிரித்தார். அட்டமா சித்திகளில், வேறொருவர் காணாமல் ஒரே நேரத்தில் பல இடங்களில் இருக்கும் சிறப்பு சித்தர்களுக்குரியது என்பதைப் படித்திருக்கிறேன். ஆதலால் மனத்தில் கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, "சுவாமிகள் அங்கே இருந்ததும் உண்மை. இது அட்ட...., என்று தொடங்கினேன், அந்த வார்த்தையை முழுவதும் கூறவிடாமல் சுவாமிகள் உரத்தகுரலில், "பொடியா! செருப்படி வேண்டுமோ மகனே உனக்கு? மூடடா" என்றார்கள், பிறகு அன்பொழுகப் பேசிக் கொண்டிருந்தார்கள். மறுநாள் நான் சென்னை மீண்டு விட்டேன். யோகர் சுவாமிகள் எல்லாம் வல்ல சித்தர் என்பதற்கு தலையாய எடுத்துக் காட்டு இதுவாகும். "சித்த யோகசுவாமிகள் என்ற கட்டுரை முப்பத்தைந்து ஆண்டுகள் முன்னர் எனக்குப் புதுவாழ்வு தந்து, என்னைப் பணிகொண்ட ஒரு மாபெரும் சித்தருடைய வாழ்க்கையில் எனக்கு நேர்ந்த அனுபவங்களைத் தொகுத்து எழுதியதாகும்." - பேராசிரியர் அ.ச.ஞான சம்பந்தன் திருச்சிற்றம்பலம் துணைபுரியும் என்று நம்புகிறேன். ஒருமுறை திருவாளர் சிறீகாந்தா என்பவர் யாழ்ப்பாணத்தில் மாவட்ட இணைப்பாளராக பணிபுரிந்து வந்தார். அவரும் அவர் துனைவியாரும் சுவாமியிடம் பெரும் பத்தி கொண்டவர்கள். அவர்களுடன் தங்கியிருந்த நானும் சுவாமியைப் பற்றி அவர்களிடம் பேசிக் கொண்டிருப் பதில் பெருமகிழ்ச்சி அடைவேன். இம்முறை கதிர்காமத்தில் ஆடிவேல் விழா நடைபெறுகின்ற நாளாகும். திருவாளர் சிறீகாந்தா எங்கிருந்தாலும் ஆடிவேலுக்கு கதிர்காமம் செல்வது வழக்கம். ஆனால் இம்முறை ஊரைவிட்டுப் போகக் கூடாதென்று அரசு ஆணைகட்டிப் போட்டதால் போக முடியவில்லையென்று வருந்தினார். நெருங்கிய நண்பராகிய அவர் "அ.ச.ஐயா! யோகசுவாமிகள் தவறாமல் ஆடிவேலுக்கு கதிர்காமம் போய் விடுவார்கள். இந்த ஆண்டும் போயிருப்பார்கள் நமக்கோ போகமுடியவில்லை. சுவாமி தங்கி இருக்கும் கள்: "கவலைவேண்டாம் மகனே, நமக் கென்ன கூறினார்கள்: வாகனமா இருக்கிறது? அந்த மடையனுக்குத் தான் மயில் வாகனம் இருக்கிறது. வேண்டுமானால் அவன்தான் நம்மிடம் வரவேண்டும். நாமெங்கே போவது?" என்று சொல்லி விட்டு சிரித்துக்கொண்டே பாட ஆரம்பித்து விட்டார். ஒரு மணி நேரம் இங்கே தங்கியபிறகு சுவாமியிடம் விடை பெற்றுக் கொண்டு வீடு திரும்பினோம். வரும் பொழுது நண்பர் சிறீகாந்தா சொல்லியது இன்னும் என் கவனத்தில் உள்ளது, "அ. ச. ஐயா! பல ஆண்டுகளாக தவறாமல் ஆடிவேலுக்குக் கதிர் காமம் செல்லுகின்ற நான் இந்த ஆண்டு போகமுடியவில்லையே என்று வருந்தினேன். ஆனால் சுவாமியும் போகவில்லை என்பதை இப்போ கண்டு விட்டோம். அவரைத் தரிசித்ததால் கதிர்காமத்தானைத் தரிசித்துவிட்டோம் என மனத்தில் நிறைந்து விட்டது" என்றார். இரண்டு நாட்கள் கழித்து கொழும்பிற்குச் சென்றேன். அங்கு ஐந்து நாட்கள் பேச ஏற்றுக் கொண்டிருந்தேன். முதல்நாள் போய் இறங்கியவுடன் வழக்கம்போல் சேர். கந்தையா வைத்தியநாதன் உட்பட பலர் விமானநிலையம் வந்திருந்தனர். அன்று நண்பகல் செய்தி விளம்பரத்துறைச் செயலாளர் வீட்டில் நண்பகல் உணவிற்கு ஏற்பாடாகி இருந்தது. சாப்பிடுவதற்கு முன் ஆடிவேல் விழாவை ஒளிப்பதிவு எடுத்திருக்கிறோம் பார்க்கிறீர்களா என்று கேட்டார். நான் சரியென்றவுடன் சன்னல்களை எல்லாம் மூடிவிட்டு 14. மி.மி திரைப்பட செழதநஉவழச) கருவி வைத்து மூன்று நாட்கள் முன்னர் நடந்த ஆடிவேல் விழாவில் எடுத்த படத்தைப் போட்டார்கள். சில நிமிடங்கள் கழிந்த உடன் என்மூச்சே நின்றுவிடும் போல் ஆகிவிட்டது. காரணம் யாழ்ப்பாணத்தில் சிறீகாந்தா உட்பட எங்கள் மூவரிடமும் ஒருமணிநேரம் காட்சி தந்த யோகசுவாமிகள் அதே நேரத்தில் 46 ஆக்கம் - பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன் தொகுப்பு- சிவத்திரு. வடிவேலு கங்காளன்
தெ 06 ( யோகர் சுவாமிகள் கடந்த மாத தொடர்ச்சி ) இந்த நாட்டைப் பொறுத்தவரை பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக சராசரி மனிதரிலும் பன்மடங்கு உயர்ந்து நின்ற பெரியோர்கள் பலருண்டு . திருமூலர் பாம்பாட்டிச் சித்தர் சிவவாக்கியர் போன்ற வர்கள் தம் பாடல்கள் மூலம் மக்கள் சமுதா யத்திற்கு வழிகாட்டியவர்கள் ஆவார்கள் . இதன் எதிராக வேறு பல சித்தர்கள் தாங்கள் வாழ்கின்ற காலத்தில் தம்மை வந்தடையும் மக்களின் குறைகளைப் போக்கி நல்வாழ்வு வாழ வழி செய்தவர்கள் ஆவார்கள் . யாழ்ப்பாணத்தில் நீண்டகாலம் வாழ்ந்து 1964 வாக்கில் வீடுபேறடைந்தவர் இச்சுவாமியாவார் . இவர் ஒரு தனிப்பட்ட இடத்தில் சிறிய குடிசையொன்றை அமைத்துக் கொண்டு அதனுள் இருந்து வந்தார் . அந்தக் குடிசைக்குள் நுழைய வேண்டுமானால் யாராக இருந்தாலும் குனிந்து இடுப்பை வளைத்துக் கொண்டுதான் உள்ளே செல்ல முடியும் . மீண்டும் வெளியே செல்வதும் இதே முறையில்தான் . அந்த நாட்டை ஆண்ட பிரதம மந்திரி முதல் ஆங்கிலேயர்வரை மிகப்பலர்ச் சுவாமியிடம் அளவிலாத அன்பு பூண்டு வாழ்ந்தனர் . சிங்களவர் இசுலாமியர் தமிழர் ஆங்கிலேயர்கள் என்ற வேறுபாடுமின்றிச் சுவாமியிடம் ஒவ்வொரு மாலையும் மக்கள் கூட்டம் திரண்டு நிற்கும் . குடிசைக்குள் அதிகமாக பதினைந்து அல்லது இருபதுபேர் தான் நிற்க முடியும் . இவ்வாறு நிற்ப தம் வழிபாட்டை முடித்துக் கொண்டு வெளியே சென்ற பிறகு தான் அடுத்த கூட்டம் உள்ளே நுழையமுடியும் . ஒவ்வொருவரும் காணிக்கையாக பழங்களை வாங்கி வந்துச் சுவாமியின் திருவடிகளில் வைத்து வணங்கு வார்கள் . எந்த ஒன்றையும் சுவாமி எடுத்து வாயில்ப் போட்டதாக வரலாறு இல்லை . குறைதீர்க்க வேண்டி வந்தவர்கள் வாய்விட்டுத் தம்குறைகளை சொல்லும் பழக்கமில்லை . எனவே பதினைந்து இருபது நிமிடங்கள் ஒரு கூட்டம் உள்ளே நின்றாலும் ஒருவர்கூட வாய்திறந்து எதனையும்ச் சுவாமியிடம் கூறியதில்லை . இந்த நடைமுறையின் பொருளை நான் தெரிந்து கொள்வதற்குச் சிறிதுகாலம் பிடித்தது . 1950 வாக்கில் முதன் முறையாகச் சுவாமியைத் தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது . அதற்குமுன்னர் சுவாமியைப் பற்றி அதிகமொன்றும் தெரிந்துகொண்டதில்லை . முதன் முறையாக என்னை அழைத்துச் சென்றவர் வழக்கறிஞர் பணிபுரியும் ஓர் அன்பராவார் . உள்ளே சென்று சுவாமிகளை விழுந்து வணங்கிவிட்டு ஏனையோர்களுடன் நானும் நின்று கொண்டிருந்தேன் . திடீரென்று சுவாமி எடே பொடியன் இங்காலை வந்திருக்கட்டும் என்று கூறிவிட்டு வலப்புறம் கையைக் காட்டினார்கள் . என்னைத் தான் சுவாமி குறிப்பிட்டார்கள் என்பதை அறியாத நான் பொடியன் என்று கூறியது யாரையென்று தெரியாமல் நின்று கொண்டிருந்தேன் . சுவாமி விரலினால் சுட்டிக்காட்டி பொடியா ! உன்னைத் தான் என்று கூறினார்கள் . இப்பொழுது என்னை ஒரு பயம் பற்றிக் கொண்டது . சுவாமி முன்நிற்பவர்கள் யாரும் எதிரே அமர்வதில்லை என்பதைக் கேள்விப்பட்டிருக்கிறேன் . அப்படியிருக்க நான் மட்டும் எப்படி அமர்வது என்று பயந்து நிற்கையில் கருணை நிறைந்த பார்வையோடு வா மகனே ! இங்கே வந்து உட்கார் என்று கூறிவிட்டு வலக்கையால் அமரவேண்டிய இடத்தையும் தொட்டுக் காட்டினார்கள் . அன்று முதல் எத்தனையோ தடவைகள் சுவாமியிடம் சென்றுள்ளேன் . ஒவ்வொரு முறையும் வீழ்ந்து வணங்கியவுடன் அமரச் செய்வார் . முதல் இரண்டு தடவைகளில் சுவாமி சொல்லிக் கொண்டிருந்தவை என் மனத்தில் குழப்பத்தை விளைவித்தன . சுவாமி விடாமல் நீளமாகப் பாடிக்கொண்டே இருப்பார் . கூர்ந்து கவனித்த பொழுது திருவாசகத்தில் ஒரு அரையடி தேவாரத்தில் ஒன்றரையடி திருவிசைப்பாவில் நாலு சொற்கள் என்று மாறி மாறிப் பாடிக்கொண்டே இருப்பார் . என் போன்ற விவரம் புரியாதோருக்கு ஏன் சுவாமி இப்படி அரையடி முக்காலடி என்று பாடுகிறார் என்ற சந்தேகம் . வெளியே வந்து நண்பர்களைக் கேட்டபோது எப்போதும் சுவாமிகள் இப்படித்தான் பாடிக்கொண்டே இருப்பார்கள் என்றார்களே தவிர யாரும் தென்னாடு விடை நல்லோரை வைகாசித் திங்கள் 2021 பேசுவதை அந்தச் ஒளிப்படம் காட்டிற்று . என் ஐயத்தைப் போக்கவில்லை . உள்ளிருந்து குடிலுக்குச் சென்று அவர்கள் அமரும் கதிர்காமத்தில் ஒலிவாங்கியின் முன்னர் வெளியே வந்த அன்பர்களைக் கண்டு பீடத்திற்கு ஒரு கும்பிடுபோட்டு வரலாம் பேசும்போது ஓர் உண்மை தெரியலாயிற்று.வாருங்கள் என்றார் . அதை ஏற்றுக்கொண்டு தாங்கள் பெரும் குறையோடு இருந்ததாகவும் சுவாமி பாடிக் கொண்டிருக்கையில் குறிப்பிட்ட சிலவார்த்தைகள் தம் மனத்துள் புகுந்து பெரிய அமைதியைத் தந்ததாகவும் தம்முடைய பிரச்சனைகட்கு அவை விடையாக அமைந்த தாகவும் கூறினார்கள் . அதிர்ந்துபோன நான் செயலாள நண்பரைப் பார்த்து இது என்ன பழையபடம் இதைப் போட்டுக் காட்டினீர்களே என்றேன் . அதை மறுத்த அவர் முந்தாநாள் எடுத்ததுதான் இது என்பதற்கு அத்தாட்சியாக அந்தப் படச்சுருளை வைக்கும் தகரப் பெட்டியின் மேல் எழுதியிருந்ததைக் காட்டினார் . எப்பொழுது எடுக்கப்பட்டது எந்த மணியிலிருந்து எதுவரை என்றெல்லாம் அதில் எழுதியிருந்தது . வருபவர் வாய்விட்டுக் குறைகளைக் கூறுவதும் இல்லை . தங்களுக்கு என்ன குறையென்று அந்த அருளாளர் கேட்பது மில்லை . ஆனாலும் வருபவர்க்கு அமைதி கிடைத்துவிடும் . கம்பநாடன் வாராதே வர வல்லாய் என்று கூறுவதன் பொருளை சுவாமி உடன் இருக்கும்போது தெரிந்து கொள்ள முடிந்தது . ஏறத்தாழ இருபது தடவைகளுக்கு மேல் சுவாமியைத் தரிசித்திருக்கிறேன் . ஒவ்வொரு முறையும் நான்கைந்து நாட்கள் யாழ்ப்பாணத்தில் இருப்பேன் . ஆதலால் அன்றன்று என் சொற்பொழிவு முடிந்தவுடன் சுவாமியின் சந்நிதிக்குச் சென்று அரை மணியோ ஒரு மணியோ அவரின் திருவடிக்கீழ் அமர்ந்து அவரின் அருளைப்பெறும் வாய்ப்புப் பெற்றி ருந்தேன் . இப் பெருமகனார் எல்லாம் வல்ல சித்தர் என்பதை நிரூபிக்க இந்நிகழ்ச்சிகள் நான் புறப்பட நானே காரை ஓட்ட ஏற்றுக்கொண்டேன் . முதல் இருக்கையில் சிறீகாந்தாவும் நானுமிருக்க பின் இருக்கையில் திருமதி சிறீகாந்தா அமர்ந்தார்கள் . உறுதியாக சுவாமி இருக்கமாட்டார் என்ற துணிவுடன் சென்றோமாதலால் குடிலின் வாயிலை நெருங்குகின்ற வரையில் பேசிக்கொண்டே சென்றோம் . மூவரும் நுழைந்தவுடன் மிகப்பெரிய அதிர்ச்சிக்குள்ளானோம் . நாங்கள் வாய்திறந்து ஒன்றும் பேசவில்லை பேசவும் முடியவில்லை . அந்த நிலையிலும் அந்த அருளாளர் பொடியா உன்னுடைய இடத்தில் வந்து இருக்கட்டும் என்றார் . நண்பர் சிறீகாந்தாவும் அவர் மனைவியும் சுவாமி கூட ஆடிவேலுக்குப் போகவில்லை என்பதைக்கண்டு ஒன்றும் புரியாமல் நின்றார்கள் . சுவாமி அவர்களைப் பார்த்து ஏன் மகனே ! ஆடிவேலுக்குப் போகவில்லையா ? என்று கேட்டார்கள் . நண்பர் சிறீகாந்தா கண்ணீர் ஆறாகப் பெருக வாய்குழறி அரச ஆணையின் காரணமாக தான் யாழ்ப்பாணத்தில் தங்க நேரிட்டது என்று சொல்லி அழுதார்கள் . உடனே சுவாமி பின்வருமாறு கூறினார் பொறுமை இழந்த நான் உடனே தொலைபேசி மூலம் யாழ்ப்பாணத்திலுள்ள சிறீகாந்தாவுடன் தொடர்பு கொண்டேன் . நான் எவ்வளவு எடுத்துக் கூறியும் சிறீகாந்தா நம்ப மறுத்துவிட்டார் . . . ஐயா ! நாம் மூன்றுபேரும் சுவாமிகளிடம் ஒரு மணிநேரம் இருந்ததையும் அவரது பொன்மொழிகளைக் கேட்டதையும் நன்றாக அறிவோம் . ' நமக்கென்ன வாகனமா இருக்கிறது . அந்த மடையனுக்குத் தான் மயிலிருக்கிறது ' என்று கூறியது நினைவில்லையா ? என்று கேட்டார் . எவ்வளவு சொல்லியும் நண்பர் சிறீகாந்தா படச்சுருளை நம்பத் தயாராக இல்லை . அரசுப் பணியாளர்கள் ஏதோ தவறு செய்து விட்டார்களென்றே உறுதியாக நம்பினார் . இந்நிலையில் நான் ஒரு முடிவுக்கு வந்தேன் . ஐந்து நாள் சொற்பொழிவு முடிந்ததும் கொழும்பிலிருந்து நேரே சென்னை வருவதற்கு என்னிடம் பயணச் சீட்டிருந்தாலும் அதை மாற்றி யாழ்ப்பாணத்தில் ஒரு நாள் தங்கிச் செல்ல முடிவு செய்தேன் . அன்று கூட்டத்திற்கு வந்திருந்த பலரும் கதிர்காமம் சென்று மயில்வாகன முருகனையும் மானுட வடிவில் யோகர்சுவாமிகள் என்ற பெயரில் இருந்த முருகனையும் கண்டவர்கள் ஆவர் . பேசியதை இவர்கள் அனைவரும் நேரே சுவாமியின் சொற்போழிவை கேட்டவர்களாதலால் அவர்கள் என்னை நம்பத் தயாராகவில்லை . இந்த நிலையில் என் பணி முடிந்தவுடன் ஆறாம் நாள் புறப்பட்டு யாழ்ப்பாணம் வந்தேன் . விமான நிலையத்திற்கு வந்த சிறீகாந்தா இது பற்றி அவசரமாக என்னுடன் பேசவிரும்பியதால் ஓட்டுநரை விட்டுவிட்டு தானே வண்டி ஓட்டி வந்திருந்தார் . பலாவி அ.ச.ஞானசம்பந்தன் ஐயா அவர்கள் ஈழத்து சித்தர்கள் : தவத்திரு யோகர் சுவாமிகள் எண்சித்திகளும் வல்லர் - யாழ்ப்பாணத்தினும் இருந்தார் கதிர்காகம் ஆடிவேலிலும் இருந்தார் விமான நிலையத்திலிருந்து மாவட்ட இணைப்பாளர் இல்லம் செல்லும்வரையில் நடந்தவற்றையெல்லாம் கூறினேன் . நண்பர் சிறீகாந்தா அவர்கள் உறுதியாக அந்தச் சினிமாப் படம் பழையபடம் என்ற முடிவிலிருந்து மாறவேயில்லை . அன்றுமாலை ஒரு மணியளவில் நாங்கள் மூவரும் சுவாமியைத் தரிசிக்கச் சென்றோம் . விழுந்து வணங்கியவுடன் சுவாமி பொடியா ! நீ ஏன் பட்டணம் போகாமல் இங்கே வந்தாய் ? என்றவுடன் நான் அச்சத்தோடு நடந்தவற்றைக் கூறினேன் . சுவாமி கடகடவென்று சிரித்துவிட்டு அந்த மடையனுக்குத்தான் மயிலிருக்கிறது . நாங்கள் எப்படி அங்கே போகமுடியும்.மயிலா இருக்கிறது . நமக்கு ? என்று கூறிச் சிரித்தார் . அட்டமா சித்திகளில் வேறொருவர் காணாமல் ஒரே நேரத்தில் பல இடங்களில் இருக்கும் சிறப்பு சித்தர்களுக்குரியது என்பதைப் படித்திருக்கிறேன் . ஆதலால் மனத்தில் கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு சுவாமிகள் அங்கே இருந்ததும் உண்மை . இது அட்ட .... என்று தொடங்கினேன் அந்த வார்த்தையை முழுவதும் கூறவிடாமல் சுவாமிகள் உரத்தகுரலில் பொடியா ! செருப்படி வேண்டுமோ மகனே உனக்கு ? மூடடா என்றார்கள் பிறகு அன்பொழுகப் பேசிக் கொண்டிருந்தார்கள் . மறுநாள் நான் சென்னை மீண்டு விட்டேன் . யோகர் சுவாமிகள் எல்லாம் வல்ல சித்தர் என்பதற்கு தலையாய எடுத்துக் காட்டு இதுவாகும் . சித்த யோகசுவாமிகள் என்ற கட்டுரை முப்பத்தைந்து ஆண்டுகள் முன்னர் எனக்குப் புதுவாழ்வு தந்து என்னைப் பணிகொண்ட ஒரு மாபெரும் சித்தருடைய வாழ்க்கையில் எனக்கு நேர்ந்த அனுபவங்களைத் தொகுத்து எழுதியதாகும் . - பேராசிரியர் அ.ச.ஞான சம்பந்தன் திருச்சிற்றம்பலம் துணைபுரியும் என்று நம்புகிறேன் . ஒருமுறை திருவாளர் சிறீகாந்தா என்பவர் யாழ்ப்பாணத்தில் மாவட்ட இணைப்பாளராக பணிபுரிந்து வந்தார் . அவரும் அவர் துனைவியாரும் சுவாமியிடம் பெரும் பத்தி கொண்டவர்கள் . அவர்களுடன் தங்கியிருந்த நானும் சுவாமியைப் பற்றி அவர்களிடம் பேசிக் கொண்டிருப் பதில் பெருமகிழ்ச்சி அடைவேன் . இம்முறை கதிர்காமத்தில் ஆடிவேல் விழா நடைபெறுகின்ற நாளாகும் . திருவாளர் சிறீகாந்தா எங்கிருந்தாலும் ஆடிவேலுக்கு கதிர்காமம் செல்வது வழக்கம் . ஆனால் இம்முறை ஊரைவிட்டுப் போகக் கூடாதென்று அரசு ஆணைகட்டிப் போட்டதால் போக முடியவில்லையென்று வருந்தினார் . நெருங்கிய நண்பராகிய அவர் அ.ச.ஐயா ! யோகசுவாமிகள் தவறாமல் ஆடிவேலுக்கு கதிர்காமம் போய் விடுவார்கள் . இந்த ஆண்டும் போயிருப்பார்கள் நமக்கோ போகமுடியவில்லை . சுவாமி தங்கி இருக்கும் கள் : கவலைவேண்டாம் மகனே நமக் கென்ன கூறினார்கள் : வாகனமா இருக்கிறது ? அந்த மடையனுக்குத் தான் மயில் வாகனம் இருக்கிறது . வேண்டுமானால் அவன்தான் நம்மிடம் வரவேண்டும் . நாமெங்கே போவது ? என்று சொல்லி விட்டு சிரித்துக்கொண்டே பாட ஆரம்பித்து விட்டார் . ஒரு மணி நேரம் இங்கே தங்கியபிறகு சுவாமியிடம் விடை பெற்றுக் கொண்டு வீடு திரும்பினோம் . வரும் பொழுது நண்பர் சிறீகாந்தா சொல்லியது இன்னும் என் கவனத்தில் உள்ளது . . ஐயா ! பல ஆண்டுகளாக தவறாமல் ஆடிவேலுக்குக் கதிர் காமம் செல்லுகின்ற நான் இந்த ஆண்டு போகமுடியவில்லையே என்று வருந்தினேன் . ஆனால் சுவாமியும் போகவில்லை என்பதை இப்போ கண்டு விட்டோம் . அவரைத் தரிசித்ததால் கதிர்காமத்தானைத் தரிசித்துவிட்டோம் என மனத்தில் நிறைந்து விட்டது என்றார் . இரண்டு நாட்கள் கழித்து கொழும்பிற்குச் சென்றேன் . அங்கு ஐந்து நாட்கள் பேச ஏற்றுக் கொண்டிருந்தேன் . முதல்நாள் போய் இறங்கியவுடன் வழக்கம்போல் சேர் . கந்தையா வைத்தியநாதன் உட்பட பலர் விமானநிலையம் வந்திருந்தனர் . அன்று நண்பகல் செய்தி விளம்பரத்துறைச் செயலாளர் வீட்டில் நண்பகல் உணவிற்கு ஏற்பாடாகி இருந்தது . சாப்பிடுவதற்கு முன் ஆடிவேல் விழாவை ஒளிப்பதிவு எடுத்திருக்கிறோம் பார்க்கிறீர்களா என்று கேட்டார் . நான் சரியென்றவுடன் சன்னல்களை எல்லாம் மூடிவிட்டு 14. மி.மி திரைப்பட செழதநஉவழச ) கருவி வைத்து மூன்று நாட்கள் முன்னர் நடந்த ஆடிவேல் விழாவில் எடுத்த படத்தைப் போட்டார்கள் . சில நிமிடங்கள் கழிந்த உடன் என்மூச்சே நின்றுவிடும் போல் ஆகிவிட்டது . காரணம் யாழ்ப்பாணத்தில் சிறீகாந்தா உட்பட எங்கள் மூவரிடமும் ஒருமணிநேரம் காட்சி தந்த யோகசுவாமிகள் அதே நேரத்தில் 46 ஆக்கம் - பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன் தொகுப்பு- சிவத்திரு . வடிவேலு கங்காளன்