தென்னாடு வைகாசித் திங்கள் இதழ் - 08

தென்னாடு அடியார் பெருமையின் ஆவண ஊற்று பெரியபுராணம்: ஆலங்காடனின் அன்புத்தாய் - காரைக்கால் அம்மையார் தெ 08 உலகெலாம் படைத்தும், காத்தும், கரந்தும், விளையாடி கொண்டிருப்பவன் இறைவன். அவனின்றி இங்கு ஏதும் நடப்பதில்லை. தாயும், தந்தையுமாய் உலகில் வாழும் அத்தனை உயிர் களையும் அரவணைப்பதும் அவனே. அவன் எங்கிருந்து வந்தான், என்ற கேள்வி எழுமாயின் அதற்கு அருளாளர்கள் அற்புதமான பதிலை தருகின்றனர். மாணிக்க வாசகப் பெருமான் "ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ் சோதி" என சிறப்பித்துப் பாடுகிறார். மேலும் திருச்சாழல் பதிகத்தில் "தாயுமிலி, தந்தையிலி தான் தனியன்" என்கிறார். எனவே தோற்றமும் இல்லை, முடிவும் இல்லை என்பது நன்கு புலனாகிறது. இருப்பினும் நாம் எப்படி நினைக்கிறோமோ, அப்படியே அருள் தந்து நிற்கிறான். இதனை அப்பர் பெருமான் "அப்பன் நீ, அம்மை நீ, அன்புடைய மாமனும், மாமியும் நீ" என வரும் பாடல் மூலம் தெளிவு படுத்துகிறார். இப்படியாக உலகத்திற்கே அம்மையப்பனாக இருப்பவனே, "அம்மை" என அழைத்தா னென்றால் அது எவ்வளவு பெரிய பேறு என்பதை நாம் உணர்ந்து கொள்ளவேண்டும். அப்பேற்றை பெருவதற்கு காரைக்காலினில் மலர்ந்ததொரு தெய்வக்கொழுந்து. புனிதவதி எனும் குணவதியாக அவதரித்தார் அம்மையார். செல்வ வளமிக்க குடும்பத்தில் பிறந்தாலும், பிறை முடி பெம்மானையே பெருஞ்செல்வமாக கருதி வளர்ந்து வந்தார். தந்தையின் பேரன்பு பெருமாட்டியை பேணி வந்தது. திருமணப் பருவம் வந்தவுடன் நாகைப் பட்டினத்து பெரு வணிகணின் மகனான பரமதத்தனுக்கு நல் மணம் புரிந்து வைத்தார். மேலும், தன் மகளைப் பிரிய சிவத்திரு. பா.சிவமாதவன் புதுக்கோட்டை மாணவர் மன்றத்தில் 2 நாட்கள் திருமணம் புதுமனைப் புகுவிழா, திருமண உறுதி விழா, திருவடிப்பேறு வழிபாடு செய்முறைப் பயிற்சி வகுப்பு 2001 முதல் 2008 வரையும் 2010, 2011 ஆகிய ஆண்டுகளில் ஆக 10 முறை ஒளியரசு ஐயா அவர்கள் நடத்தியுள்ளார். மனமில்லாது கணவனுடன் வசிப்பதற்கு அவ்வூரிலேயே மாளிகை அமைத்தார். இப்படியாக பெருமாட்டி இன்புற்று வாழ்ந்து வந்தார். தமிழகம் எங்கும்... (07ஆம் பக்கத் தொடர்ச்சி) 1929 மே 21 முதல் 26 வரை ஆறு நாட்கள் திருப்பாதிரிப்புலியூர் திருக்கோவிலூர் திருமடத்தில் அருட்டிரு ஞானியார் அடிகள் முன்னிலையில் அறிவுக்கடல் மறைமலை அடிகளார் தலைமையில் நடைபெற்ற மாநாட்டிலும், அதனை அடுத்து 18.04.1930ல் பேரறிஞர் கா.சு. பிள்ளை அவர்கள் தலைமையில் நடைபெற்ற முதல் சைவ இளைஞர் மாநாட்டிலும் நிறைவேற்றப்பெற்ற "சைவர்களுக்குள் நடக்கும் திருமணம் முதலிய எல்லாச் சடங்குகளை" தூ ய்மையும், சிக்கனமுமுடைய முறையில் தமிழிலேயே செய்தல் வேண்டுமென்றும், அவ்வாறு அழகுறச் செய்வதற்குச் சில சைவர்களைப் பழக்கும் பொறுப்பை சமாஜத்தார் மேற்கொள்ள வேண்டுமென்றும் இம் மாநாடு கேட்டுக்கொள்கிறது" என்று தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. இதனை செயல்முகப்படுத்தும் வகையில், முதலில் திருமணம் செய்வதற்கு ஒரு நூல் திருமுறை அடிப்படையில் வெளியிட வேண்டும் என்று 1988ல் புதுச்சேரி மாநாட்டில் (88ம் மாநாட்டில்) ஒரு தீர்மானம் நிறைவேற்றச் செய்து ஒளியகம் ந.ரா.ஆடலரசு அவர்களைக் கொண்டு "திருமுறைத் திருமணம்" செய்முறை விளக்கத்துடன் கூடிய நூல் எழுதச் செய்து அன்றைய பெருமன்றத் தலைவர் திரு. கி.இல. பழநி சுவாமி அவர்களின் நிதி உதவியில் அச்சிட்டு 1989ல் வெள்ளக்கோயில் மாநாட்டில் வெளியிடப்பட்டது. புலவர் அம்பை சங்கரன் அவர்களைக் கொண்டு சைவ சமய தோத்திரம், சாத்திரம், விழாக்கள், அறுபான் மும்மை நாயன்மார் வரலாறு முதலிய தகவல்களைத் தொகுக்கச் 1997 செய்து குறிஞ்சிப்பாடி திரு. ஆ. இராஜரத்தின முதலியார் அவர்களின் நிதி உதவியில் "சைவ சமயக் கையேடு" என்ற நூலினை வெளியிட்டார். அத்துடன் திருவெற்றியூர் மாநாட்டில் “சுருக்கமுறைச் சிவபூசை" நூல் வெளியீடு எனப் பல நூல்களை வெளியிடும் பணிகளை முன்னின்று நடத்தினார். 1979 முதல் தந்தையார் சிவத்திரு ந.ரா. ஆடலரசு ஐயா அவர்கள் செய்து வைக்கும் திருமுறைத் திருமணம் முதலிய நிகழ்வுகளுக்கு உடன் சென்று தொண்டாற்ற தொடங்கி, 1987ஆம் ஆண்டு முதல் வாழ்வியல் சடங்குகளைத் தமிழில் செய்யத் தொடங்கினார்கள். தொடர்ந்து 30 ஆண்டுகளுக்கு ஆங்கொருநாள் பரமதத்தன் மாங்கனிகள் ஓரிரண்டு இல்லத்தில் கொடுக்கச் செய்தான். அம்மையாரும் அத வாங்கி அங்கு வைத்த பிறகு, நல்லடிசில்தான் (சோறு) செய்ய மேலாக, தமிழகம், ஆந்திரம், கர்நாடகம், கேரளம், மகாராட்டிரம், தில்லி முதலிய மாநிலங்களில் திருநெறிய தீந்தமிழ் ஓதி திருமுறை வழியில் வாழ்வியல் சடங்குகளை நடாத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தகுந்தது. செந்தமிழ் வேள்விச் சதுரர் திரு.மு.பெ. சத்தியவேல் முருகனார், அமுதமொழியரசு திரு. சங்கர நாராயணன் ஆகியோருடனும் பல குடமுழுக்கு பணிகளில் திருஞானசம்பந்தர் பெருமானுக்கு பக்கான வழங்கிய பிடம் பங்குகொண்டமை குறிப்பிடத்தகுந்தது ஆகும். 1987 - திருக்குறள் பீடம் - வைத்தமிழ்மணி 2001 2009 2012 யோகாம்பிகை திருமுறைக்குழு - திருமுறை வேள்விச் செம்மல் - பாம்பனார் பணி மன்றம் - சிவநெறிச் சீலர் -பேரூர் ஆதீனம் - தமிழ்நெறி வேள்விச் செம்மல் தமிழ்நாடு திருமுறை சித்தாந்த ஆய்வு மையம் - சிவஞானச்சுடர் என்றெல்லாம் ஐயா அவர்களைப் போற்றி, தமிழ் வழிபாட்டைப் போற்றும் அமைப்பினர் பலர் அளித்த பட்டங்கள் ஏராளம். விரிப்பின் பெருகும் தொகுப்பின் எஞ்சுமென அஞ்சி இவ்வளவில் விடுக்கின்றோம். ஆசிரியத் திருமுழுக்கு (ஆச்சாரிய அபிடேகம்):- 2003 தந்தையார் சிவத்திரு ந.ரா. ஆடலரசு அவர்களுக்கு உடம்பு தளர்ச்சியுற்றதனாலும், தொடர்ந்து விரும்புகின்ற அன்பர்களுக்கு திருமுறை அடிப்படையில் தீக்கை செய்து வைக்க ஒருவர் வேண்டுமே என்ற எண்ணத்தினாலும், 1988 முதல் 1997 வரையில் தன்னுடன் இருந்து சைவ சித்தாந்தப் பெருமன்ற மாநாடு நடைபெற்ற இடங்களிலும், 1993 முதல் 2002 வரையில் கோவை ஒத்தகால் மண்டபம், பவானி, விடை நல்லோரை வைகாசித் திங்கள், 2021 ஆயத்தமானார். அவ்வேளையில் பரமனார் திருத்தொண்டர் பசியின் மிகுதியால் மனையுள் புகுந்தார். திருதொண்டரின் நிலை கண்டு, திருவமுது கொடுப்பேன் என்று, முன்னர் பாதங்கள் விளக்க நீர் அளித்து பரிகலம் திருத்தி இட்டார். அந்த நேரத்தில் அடிசில் (சோறு) மட்டுமே தயாராக இருந்தது. இச்சூழலை தெய்வச் சேக்கிழார் பெருமான் சிறப்பாக காட்டுகிறார். "கறியமுதங் குதவாதே திருவமுது கைகூட, வெறிமலர்மேற் றிருவனையார் விடையவன்ற னடியாரே பெறலரிய விருந்தானாற் பேறிதன்மே லில்லை யெனும் அறிவினரா, யவரமுது செய்வதனுக் காதரிப்பார்" கறியமுது என்பது அடிசிலுடன் கூட்டுணவாகக் கொள்ளும் கறி வகைகள். இருந்ததோ திருவமுது மட்டும் தான். ஆனால் எவ்வித திகைப்புமின்றி, சிவனடியாரே தேடிப்பெறுதற்கரிய விருந்தாக இங்கு வந்து இருப்பதால், வேறு என்ன பேறு நமக்கு வேண்டும் என்று எண்ணி, அமுது கொடுக்க ஆயத்தமானார். தன் கணவர் கொடுத்த நல்ல நறு மாங்கனிகளில் ஒன்றை படைத்து அடியார்க்கு அமுது செய்வித்தார். அடியாரும் பசி தீர்ந்து அம்மையாரை வாழ்த்தி போயினார். அதன் பிறகு மனைப்பதியாகிய பரமதத்தன் உணவருந்த வருகிறான். அம்மையாரும் அன்புடனே பரிமாற அதில் மாங்கனியும் இடம்பெறுகிறது. மாங்கனியை உண்ட பிறகு அதன் சுவையில் திளைத்தவன், இன்னொரு கனியையும் வேண்டுகிறான். அம்மையார் மனம் தடுமாறுகிறார். இன்னொரு கனிக்கு எங்கு செல்வேன் என தன்னை மறந்த நிலையில் இறைவனை நினைக்கிறார். அந்த மாத்திரத்திலேயே அவருடைய கைகளில் ஒரு மாங்கனி, உற்ற இரு இடத்தில் உதவும் பெருமான் அருளால் வருகிறது. (09ஆம் பக்கம் பார்க்க) கரூர், திருக்கழுக்குன்றம், புன்செய்ப்புளியம்பட்டி, மதுரை, திருநெல்வேலி, இன்னபிற இடங்களிலும் சிவத்திரு ஆடலரசு ஐயா அவர்கள் செய்து வைத்த சமய, விசேட தீக்கைகளின் போதும் உடனிருந்து தொண்டு செய்து பெற்ற அடைவு முதலியவற்றைக் கருத்தில் கொண்டும் திரு. ஒளியரசு அவர்களுக்கு அவருடைய தந்தையார் சிவத்திரு ஆடலரசு ஐயா அவர்கள், நுண்மை மற்றும் ஆசிரியத் திருமுழுக்குகளைச் செய்துவைத்து, இனி விரும்பும் அன்பர்களுக்குத் திருமுறை அடிப்படையில் தீக்கைகள் செய்து வைக்க ஆணையிட்டார்கள். அவ்வாணைக்கு ஏற்ப அவ்வாண்டே 15.06.2003 ன்று புதுச்சேரியில் நடைபெற்ற சைவசித்தாந்தப் பெருமன்றத்தின் மாநாட்டில் 21 அன்பர்களுக்கு சமய தீக்கையும், 10.10.2003 அன்று பவானியில் சிவனடியார் திருக்கூட்டத்தின் ஏற்பாட்டில் 42 அன்பர்களுக்கு சமய தீக்கையும், 18 அன்பர்களுக்கு விசேட தீக்கையும், திருக்கழுக்குன்றம் அப்பர் சுந்தரர் விழாக்களின் போதும், வேளச்சேரி அன்பர் சத்தியமூர்த்தி இல்லத்தில் அவருக்கும் சில அன்பர்களுக்கும் தீக்கை செய்து வைத்துள்ளார்கள். தொடர்ந்து, திருமுறை நெறியில் பல்லாயிர கணக்காக அன்பர்களுக்கு தீக்கை செய்து வருகிறார்கள். ஒரே விழாவில், 5 முதல் 225 அன்பர்களுக்கு சமய தீக்கையும், ஒருவர் முதல் 70 அன்பர்களுக்கு விசேட தீக்கையும் அருளும் கருணையும் ஆற்றலும் நிரம்பப் பெற்றவர்கள். பாடல்பெற்ற திருத்தலங்கள் சிலவற்றிற்கு பலமுறையும், பலவற்றிற்கு சிலமுறையும் தம் மாணாக்கர்களோடு சென்று வழிபட்டு வந்திருக்கிறார்கள். அழகரடிகளார் காலந்தொட்டு திருமுறை பாடல் பெற்ற தலங்களை, அன்பர்களோடு சென்ற வழிபாடு செய்து வரும் செய்திகளை விரிப்பின் அது தனி நூலாகும். தெய்வீக சித்தாந்த இலக்கிய மன்றப் பணி, தீக்கை அருளுதல், தமிழில் வழிபாடாற்றல், சொற்பொழிவு, நூ லாக்கம், தமிழில் வழிபாடாற்ற பல நூறு மாணவர்களை தமிழகமெங்கும் உருவாக்கி வருதல், திருக்கழுக்குன்றம் நால்வர் குருபூசை விழாக்கள், அருட்குருநாதர் ஆடலரசு ஐயா குருபூசை விழா என தொடர்ந்து பல பணிகளை தனது 70ம் அகவையிலும் இடையறாது செய்து வரும் எம்மருமை குருநாதர் உரைத்தது: "என் தந்தையார் தன் இறுதி காலம் வரை பேருந்திலும், இரயிலிலும் பயணித்து, திருமுறை நெறியில் தமிழ் வழிபாடு செய்து வைத்தார்கள். எல்லாம் வல்ல பெருமான் கருணையினால் சொந்த மகிழுந்தில் சென்று வழிபாடாற்றும் நிலையை எமக்கு வாய்த்துள்ளது. உடலில் உயிர் உள்ளளவும் திருமுறை நெறியில் வழிபாடு செய்துவைக்க செல்வேன்." என்னே, எம் குருநாதரின் தனித்தமிழ்ப் பற்று, சைவத்திறம்!
தென்னாடு அடியார் பெருமையின் ஆவண ஊற்று பெரியபுராணம் : ஆலங்காடனின் அன்புத்தாய் - காரைக்கால் அம்மையார் தெ 08 உலகெலாம் படைத்தும் காத்தும் கரந்தும் விளையாடி கொண்டிருப்பவன் இறைவன் . அவனின்றி இங்கு ஏதும் நடப்பதில்லை . தாயும் தந்தையுமாய் உலகில் வாழும் அத்தனை உயிர் களையும் அரவணைப்பதும் அவனே . அவன் எங்கிருந்து வந்தான் என்ற கேள்வி எழுமாயின் அதற்கு அருளாளர்கள் அற்புதமான பதிலை தருகின்றனர் . மாணிக்க வாசகப் பெருமான் ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ் சோதி என சிறப்பித்துப் பாடுகிறார் . மேலும் திருச்சாழல் பதிகத்தில் தாயுமிலி தந்தையிலி தான் தனியன் என்கிறார் . எனவே தோற்றமும் இல்லை முடிவும் இல்லை என்பது நன்கு புலனாகிறது . இருப்பினும் நாம் எப்படி நினைக்கிறோமோ அப்படியே அருள் தந்து நிற்கிறான் . இதனை அப்பர் பெருமான் அப்பன் நீ அம்மை நீ அன்புடைய மாமனும் மாமியும் நீ என வரும் பாடல் மூலம் தெளிவு படுத்துகிறார் . இப்படியாக உலகத்திற்கே அம்மையப்பனாக இருப்பவனே அம்மை என அழைத்தா னென்றால் அது எவ்வளவு பெரிய பேறு என்பதை நாம் உணர்ந்து கொள்ளவேண்டும் . அப்பேற்றை பெருவதற்கு காரைக்காலினில் மலர்ந்ததொரு தெய்வக்கொழுந்து . புனிதவதி எனும் குணவதியாக அவதரித்தார் அம்மையார் . செல்வ வளமிக்க குடும்பத்தில் பிறந்தாலும் பிறை முடி பெம்மானையே பெருஞ்செல்வமாக கருதி வளர்ந்து வந்தார் . தந்தையின் பேரன்பு பெருமாட்டியை பேணி வந்தது . திருமணப் பருவம் வந்தவுடன் நாகைப் பட்டினத்து பெரு வணிகணின் மகனான பரமதத்தனுக்கு நல் மணம் புரிந்து வைத்தார் . மேலும் தன் மகளைப் பிரிய சிவத்திரு . பா.சிவமாதவன் புதுக்கோட்டை மாணவர் மன்றத்தில் 2 நாட்கள் திருமணம் புதுமனைப் புகுவிழா திருமண உறுதி விழா திருவடிப்பேறு வழிபாடு செய்முறைப் பயிற்சி வகுப்பு 2001 முதல் 2008 வரையும் 2010 2011 ஆகிய ஆண்டுகளில் ஆக 10 முறை ஒளியரசு ஐயா அவர்கள் நடத்தியுள்ளார் . மனமில்லாது கணவனுடன் வசிப்பதற்கு அவ்வூரிலேயே மாளிகை அமைத்தார் . இப்படியாக பெருமாட்டி இன்புற்று வாழ்ந்து வந்தார் . தமிழகம் எங்கும் ... ( 07 ஆம் பக்கத் தொடர்ச்சி ) 1929 மே 21 முதல் 26 வரை ஆறு நாட்கள் திருப்பாதிரிப்புலியூர் திருக்கோவிலூர் திருமடத்தில் அருட்டிரு ஞானியார் அடிகள் முன்னிலையில் அறிவுக்கடல் மறைமலை அடிகளார் தலைமையில் நடைபெற்ற மாநாட்டிலும் அதனை அடுத்து 18.04.1930 ல் பேரறிஞர் கா.சு. பிள்ளை அவர்கள் தலைமையில் நடைபெற்ற முதல் சைவ இளைஞர் மாநாட்டிலும் நிறைவேற்றப்பெற்ற சைவர்களுக்குள் நடக்கும் திருமணம் முதலிய எல்லாச் சடங்குகளை தூ ய்மையும் சிக்கனமுமுடைய முறையில் தமிழிலேயே செய்தல் வேண்டுமென்றும் அவ்வாறு அழகுறச் செய்வதற்குச் சில சைவர்களைப் பழக்கும் பொறுப்பை சமாஜத்தார் மேற்கொள்ள வேண்டுமென்றும் இம் மாநாடு கேட்டுக்கொள்கிறது என்று தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது . இதனை செயல்முகப்படுத்தும் வகையில் முதலில் திருமணம் செய்வதற்கு ஒரு நூல் திருமுறை அடிப்படையில் வெளியிட வேண்டும் என்று 1988 ல் புதுச்சேரி மாநாட்டில் ( 88 ம் மாநாட்டில் ) ஒரு தீர்மானம் நிறைவேற்றச் செய்து ஒளியகம் ந.ரா.ஆடலரசு அவர்களைக் கொண்டு திருமுறைத் திருமணம் செய்முறை விளக்கத்துடன் கூடிய நூல் எழுதச் செய்து அன்றைய பெருமன்றத் தலைவர் திரு . கி.இல. பழநி சுவாமி அவர்களின் நிதி உதவியில் அச்சிட்டு 1989 ல் வெள்ளக்கோயில் மாநாட்டில் வெளியிடப்பட்டது . புலவர் அம்பை சங்கரன் அவர்களைக் கொண்டு சைவ சமய தோத்திரம் சாத்திரம் விழாக்கள் அறுபான் மும்மை நாயன்மார் வரலாறு முதலிய தகவல்களைத் தொகுக்கச் 1997 செய்து குறிஞ்சிப்பாடி திரு . . இராஜரத்தின முதலியார் அவர்களின் நிதி உதவியில் சைவ சமயக் கையேடு என்ற நூலினை வெளியிட்டார் . அத்துடன் திருவெற்றியூர் மாநாட்டில் சுருக்கமுறைச் சிவபூசை நூல் வெளியீடு எனப் பல நூல்களை வெளியிடும் பணிகளை முன்னின்று நடத்தினார் . 1979 முதல் தந்தையார் சிவத்திரு ந.ரா. ஆடலரசு ஐயா அவர்கள் செய்து வைக்கும் திருமுறைத் திருமணம் முதலிய நிகழ்வுகளுக்கு உடன் சென்று தொண்டாற்ற தொடங்கி 1987 ஆம் ஆண்டு முதல் வாழ்வியல் சடங்குகளைத் தமிழில் செய்யத் தொடங்கினார்கள் . தொடர்ந்து 30 ஆண்டுகளுக்கு ஆங்கொருநாள் பரமதத்தன் மாங்கனிகள் ஓரிரண்டு இல்லத்தில் கொடுக்கச் செய்தான் . அம்மையாரும் அத வாங்கி அங்கு வைத்த பிறகு நல்லடிசில்தான் ( சோறு ) செய்ய மேலாக தமிழகம் ஆந்திரம் கர்நாடகம் கேரளம் மகாராட்டிரம் தில்லி முதலிய மாநிலங்களில் திருநெறிய தீந்தமிழ் ஓதி திருமுறை வழியில் வாழ்வியல் சடங்குகளை நடாத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தகுந்தது . செந்தமிழ் வேள்விச் சதுரர் திரு.மு.பெ. சத்தியவேல் முருகனார் அமுதமொழியரசு திரு . சங்கர நாராயணன் ஆகியோருடனும் பல குடமுழுக்கு பணிகளில் திருஞானசம்பந்தர் பெருமானுக்கு பக்கான வழங்கிய பிடம் பங்குகொண்டமை குறிப்பிடத்தகுந்தது ஆகும் . 1987 - திருக்குறள் பீடம் - வைத்தமிழ்மணி 2001 2009 2012 யோகாம்பிகை திருமுறைக்குழு - திருமுறை வேள்விச் செம்மல் - பாம்பனார் பணி மன்றம் - சிவநெறிச் சீலர் -பேரூர் ஆதீனம் - தமிழ்நெறி வேள்விச் செம்மல் தமிழ்நாடு திருமுறை சித்தாந்த ஆய்வு மையம் - சிவஞானச்சுடர் என்றெல்லாம் ஐயா அவர்களைப் போற்றி தமிழ் வழிபாட்டைப் போற்றும் அமைப்பினர் பலர் அளித்த பட்டங்கள் ஏராளம் . விரிப்பின் பெருகும் தொகுப்பின் எஞ்சுமென அஞ்சி இவ்வளவில் விடுக்கின்றோம் . ஆசிரியத் திருமுழுக்கு ( ஆச்சாரிய அபிடேகம் ) : 2003 தந்தையார் சிவத்திரு ந.ரா. ஆடலரசு அவர்களுக்கு உடம்பு தளர்ச்சியுற்றதனாலும் தொடர்ந்து விரும்புகின்ற அன்பர்களுக்கு திருமுறை அடிப்படையில் தீக்கை செய்து வைக்க ஒருவர் வேண்டுமே என்ற எண்ணத்தினாலும் 1988 முதல் 1997 வரையில் தன்னுடன் இருந்து சைவ சித்தாந்தப் பெருமன்ற மாநாடு நடைபெற்ற இடங்களிலும் 1993 முதல் 2002 வரையில் கோவை ஒத்தகால் மண்டபம் பவானி விடை நல்லோரை வைகாசித் திங்கள் 2021 ஆயத்தமானார் . அவ்வேளையில் பரமனார் திருத்தொண்டர் பசியின் மிகுதியால் மனையுள் புகுந்தார் . திருதொண்டரின் நிலை கண்டு திருவமுது கொடுப்பேன் என்று முன்னர் பாதங்கள் விளக்க நீர் அளித்து பரிகலம் திருத்தி இட்டார் . அந்த நேரத்தில் அடிசில் ( சோறு ) மட்டுமே தயாராக இருந்தது . இச்சூழலை தெய்வச் சேக்கிழார் பெருமான் சிறப்பாக காட்டுகிறார் . கறியமுதங் குதவாதே திருவமுது கைகூட வெறிமலர்மேற் றிருவனையார் விடையவன்ற னடியாரே பெறலரிய விருந்தானாற் பேறிதன்மே லில்லை யெனும் அறிவினரா யவரமுது செய்வதனுக் காதரிப்பார் கறியமுது என்பது அடிசிலுடன் கூட்டுணவாகக் கொள்ளும் கறி வகைகள் . இருந்ததோ திருவமுது மட்டும் தான் . ஆனால் எவ்வித திகைப்புமின்றி சிவனடியாரே தேடிப்பெறுதற்கரிய விருந்தாக இங்கு வந்து இருப்பதால் வேறு என்ன பேறு நமக்கு வேண்டும் என்று எண்ணி அமுது கொடுக்க ஆயத்தமானார் . தன் கணவர் கொடுத்த நல்ல நறு மாங்கனிகளில் ஒன்றை படைத்து அடியார்க்கு அமுது செய்வித்தார் . அடியாரும் பசி தீர்ந்து அம்மையாரை வாழ்த்தி போயினார் . அதன் பிறகு மனைப்பதியாகிய பரமதத்தன் உணவருந்த வருகிறான் . அம்மையாரும் அன்புடனே பரிமாற அதில் மாங்கனியும் இடம்பெறுகிறது . மாங்கனியை உண்ட பிறகு அதன் சுவையில் திளைத்தவன் இன்னொரு கனியையும் வேண்டுகிறான் . அம்மையார் மனம் தடுமாறுகிறார் . இன்னொரு கனிக்கு எங்கு செல்வேன் என தன்னை மறந்த நிலையில் இறைவனை நினைக்கிறார் . அந்த மாத்திரத்திலேயே அவருடைய கைகளில் ஒரு மாங்கனி உற்ற இரு இடத்தில் உதவும் பெருமான் அருளால் வருகிறது . ( 09 ஆம் பக்கம் பார்க்க ) கரூர் திருக்கழுக்குன்றம் புன்செய்ப்புளியம்பட்டி மதுரை திருநெல்வேலி இன்னபிற இடங்களிலும் சிவத்திரு ஆடலரசு ஐயா அவர்கள் செய்து வைத்த சமய விசேட தீக்கைகளின் போதும் உடனிருந்து தொண்டு செய்து பெற்ற அடைவு முதலியவற்றைக் கருத்தில் கொண்டும் திரு . ஒளியரசு அவர்களுக்கு அவருடைய தந்தையார் சிவத்திரு ஆடலரசு ஐயா அவர்கள் நுண்மை மற்றும் ஆசிரியத் திருமுழுக்குகளைச் செய்துவைத்து இனி விரும்பும் அன்பர்களுக்குத் திருமுறை அடிப்படையில் தீக்கைகள் செய்து வைக்க ஆணையிட்டார்கள் . அவ்வாணைக்கு ஏற்ப அவ்வாண்டே 15.06.2003 ன்று புதுச்சேரியில் நடைபெற்ற சைவசித்தாந்தப் பெருமன்றத்தின் மாநாட்டில் 21 அன்பர்களுக்கு சமய தீக்கையும் 10.10.2003 அன்று பவானியில் சிவனடியார் திருக்கூட்டத்தின் ஏற்பாட்டில் 42 அன்பர்களுக்கு சமய தீக்கையும் 18 அன்பர்களுக்கு விசேட தீக்கையும் திருக்கழுக்குன்றம் அப்பர் சுந்தரர் விழாக்களின் போதும் வேளச்சேரி அன்பர் சத்தியமூர்த்தி இல்லத்தில் அவருக்கும் சில அன்பர்களுக்கும் தீக்கை செய்து வைத்துள்ளார்கள் . தொடர்ந்து திருமுறை நெறியில் பல்லாயிர கணக்காக அன்பர்களுக்கு தீக்கை செய்து வருகிறார்கள் . ஒரே விழாவில் 5 முதல் 225 அன்பர்களுக்கு சமய தீக்கையும் ஒருவர் முதல் 70 அன்பர்களுக்கு விசேட தீக்கையும் அருளும் கருணையும் ஆற்றலும் நிரம்பப் பெற்றவர்கள் . பாடல்பெற்ற திருத்தலங்கள் சிலவற்றிற்கு பலமுறையும் பலவற்றிற்கு சிலமுறையும் தம் மாணாக்கர்களோடு சென்று வழிபட்டு வந்திருக்கிறார்கள் . அழகரடிகளார் காலந்தொட்டு திருமுறை பாடல் பெற்ற தலங்களை அன்பர்களோடு சென்ற வழிபாடு செய்து வரும் செய்திகளை விரிப்பின் அது தனி நூலாகும் . தெய்வீக சித்தாந்த இலக்கிய மன்றப் பணி தீக்கை அருளுதல் தமிழில் வழிபாடாற்றல் சொற்பொழிவு நூ லாக்கம் தமிழில் வழிபாடாற்ற பல நூறு மாணவர்களை தமிழகமெங்கும் உருவாக்கி வருதல் திருக்கழுக்குன்றம் நால்வர் குருபூசை விழாக்கள் அருட்குருநாதர் ஆடலரசு ஐயா குருபூசை விழா என தொடர்ந்து பல பணிகளை தனது 70 ம் அகவையிலும் இடையறாது செய்து வரும் எம்மருமை குருநாதர் உரைத்தது : என் தந்தையார் தன் இறுதி காலம் வரை பேருந்திலும் இரயிலிலும் பயணித்து திருமுறை நெறியில் தமிழ் வழிபாடு செய்து வைத்தார்கள் . எல்லாம் வல்ல பெருமான் கருணையினால் சொந்த மகிழுந்தில் சென்று வழிபாடாற்றும் நிலையை எமக்கு வாய்த்துள்ளது . உடலில் உயிர் உள்ளளவும் திருமுறை நெறியில் வழிபாடு செய்துவைக்க செல்வேன் . என்னே எம் குருநாதரின் தனித்தமிழ்ப் பற்று சைவத்திறம் !