தென்னாடு ஆனித் திங்கள் இதழ் - 09

தெ 02 ஆடவை நல்லோரை ஆனித் திங்கள், 2021 சைவநெறி உய்யவந்த தெய்வச் சேக்கிழார் உலகின் மூத்த முதல் நெறியாகிய சைவநெறியின் சாரமே, தொண்டுதான்! தனக்காகவும் பிறருக்காகவும், தவமும் தானமும் செய்வதோடு இறைக்காகவும், வாழும் முறைக்காகவும் தொண்டு செய்வதும் இந்த நெறியின் தெளிவாகக் கொள்ளப்படுகிறது. நான் என்கிற அகங்காரமும், எனது என்கிற மமதையும் நீங்கி எவன் ஒருவன் தொண்டு செய்கிறானோ, அவன் இறைவன் என்கிற நிலைக்கு உயர்த்தி வழிபடப்படுவான் என்பதை, வரலாறு எமக்கு நினைவு படுத்துகிறது. சொன்னான், காம்பன் பாடினான்' என்று பதிவு செய்கின்றோம், ஆனால் அதே தொனியில், அதே விகுதியில், 'சேக்கிழார் பாடினான்' என்றோ, 'சேக்கிழார் சொன்னான்' என்றோ கூறவும் முடியாது, பதியவும் தோன்றாது! இது தெய்வத் தன்மையின் சான்று! "தாழ்வெனும் தமையோடு, சைவமாம் சமயம் சாரும், ஊழ்பெறல்" என்கிறது சிவஞான சித்தியார். எனவே, தம்மை தாழ்த்தி கொண்டு, தொண்டு செய்யும் தன்மையே, உலகின் * Vove மிகப்பெரிய விடயமாகவும் இருக்கிறது. அந்த நிலை வாய்க்கப்பெற்றவர்கள் அருளாளர்களாகத் தம் வரலாற்றால் எம்மை வழிபடுத்துவார்கள்! அந்த அருள் பெருகும் வரலாறு ஆண்டாண்டு காலமாய் கடந்து வரவேண்டும், இளைய தலைமுறைக்கு தொண்டின் சிறப்பைச் சொல்ல தொடர்ந்து வரவேண்டும் என்பதற்காக, தன் வாழ்நாளை அர்ப்பணித்து, உழைத்த பெருந்தகை, தெய்வச்சேக்கிழாரை அவரது பணிகளால் உயர்த்தி பாரின் மிசை வணங்குவதே சைவத்தமிழரின் பெருங்கடனாகும்! தென்னாடு பெரியபுராணமாகிய திருத்தொண்டர் புராணத்தை எமக்கு தந்து, சைவசமயத்தின், ஒப்பற்ற பெரும் புதையலை உருவாக்கிய பெருமை வாய்ந்த, தெய்வச்சேக்கிழாரை கடந்த பதின்நான்காம் திகதி, திங்கட்கிழமை அவரது குருபூசை நன்னாளில் வணங்கி நிறைந்தோம். அவரின் அர்பணிப்பான பணியை அடுத்த தலைமுறை ஓதி உணரவேண்டும் என்று, 14ம் நூற்றாண்டில் தோன்றிய உமாபதி சிவாச்சாரியார் ‘ சேக்கிழார் புராணம் ' என்கிற ஒப்பற்ற நூலை எமக்கு தந்தார். நூற்று மூன்று பாடல்களைக் கொண்டமைந்த அந்நூலே சேக்கிழார் வரலாற்றை நாம் அறியத் துணை செய்யும் தொன்மையான ஆவணமாகும். இன்று தமிழர்கள் ஆவணப்படுத்துவதில் பின்னிற்பதாக அனைவரும் குறை சொல்வதைக் கண்ணூடாகக் காண்கிறோம். ஆனால் உலகம் 'ஆவணப்படுத்தல்’ என்ற எண்ணக்கருவை, எடுத்தாள முதலே, கல்லிலும், செப்பிலும், ஆவணப்படுத்திய வர்கள் தமிழர்கள் தான்! வாழ்ந்து உயர்ந்த மனிதர்களின் வாழ்வை, ஆவணப்படுத்த வேண்டும் என்ற உயரிய சிந்தனையில் காவியங்களையும் புராணங்களையும் பாடி வைத்தவர்கள் தான் சைவத்தமிழர்கள். ஆனால் அவற்றை, வெறுமனே பத்தி இலக்கியங்களை மட்டுமே பார்த்து எம், மகத்துவத்தைத் தொலைத்தது வருத்தமே! இந்த மகத்தான பெரும் பணிக்கு மணிமகுடம் வைத்ததை போல வந்து சைவநெறிக்கு வாய்த்தவர் தான் தெய்வச் சேக்கிழார் திருத் தொண்டர் புராணத்தை எழுதும் போது, அவர் அதைக் கற்பனையிலேயே, அல்லது, செவிவழிச் செய்திகளை ஆதாரமாக வைத்தோ, முன்வைக்கவில்லை. தன் வகித்த, நாட்டின் பெரும் பணியான முதல் அமைச்சர் பதவியைத் துறந்து, திருத்தொண்டர்கள் வாழ்ந்த ஊர்களைத் தேடித் தேடிப் போனார். திருத்தலங்களை ஆராய்ந்து தேவாரத் திருப்பதிகங்களை ஓதி உணர்ந்து, மிக நுட்ப்பமாகத் திறனாய்வு செய்தார். இதுவரை உலகில் எவரும் செய்திராத மிகமிகக் கண்ணியமான திறனாய்வு அது! தான் சரிவர உறுதிப்படுத்தாத எந்தத் தகவலையும், இலக்கிச் சுவைக்காக வேனும் அந்த ஆவணச் சுரங்கத்தில் உட்சேர்க்கவில்லை. நாயன்மார்களின் தாய் தந்தையர்களின் பெயர்களைக் கூட சரிவரத் தெரிந்தால் மட்டுமே குறிப்பிட்டார். எந்த நாயன்மார்களின் பெயரையோ, அல்லது அவரை விழிக்கும் போது, கவிக்கூற்றாக, 'அன், ஆன்' விகுதிகளைச் சேர்க்க வில்லை. அவ்வளவு கண்ணியமாக, அடியார்க்கு அடியாராக நின்று அந்த ஆவணப் பேழையில் அருளமுதம் நிறைத்தார்! "பணியுமாம் என்றும் பெருமை" என்றாரே வள்ளுவர், அந்தக்குறலுக்கு தானே உதாரணமாய் தோன்றினார். அந்தப் பணிவு, தெளிவால் விளைந்த விளைவு! இறை அருளால் கனிந்த கனிவு, அதனாலே தான், தம் இன்று, 'வள்ளுவன் சேக்கிழாருக்கு தானாய் வாய்த்தது என்பதை விட, பணிவாலும், தொண்டை யும், தொண்டரையும் இறைவனுக்கு நிகராக உயர்த்தியதாலும் பெற்ற பேறென்றே கருதலாம். தெய்வச்சேக்கிழார் என்ற ஒருவர் சைவத் தமிழ் உலகுக்கு கிடைத்திராமல் போயிருந்தால், திருத்தொண்டர் தொகையிலும், திருத்தொண்டர் திருவந்தாதியிலும் இருந்த அடியவர் பெருமை, பாசிமூடிய பவளமாயும், மாசியில் மறைந்த மதியாயும் போயிருக்கும். அதை விரித்திச்சொன்ன தெய்வச்சேக்கிழாரின் திருத்தொண்டர் புராணமே, 'தொண்டை 'சாரமாக கொண்ட, சைவத்தின் பெரும் எழுச்சிக்குத் துணை நின்றது என்பதே உண்மை! அறுபத்து மூன்று தனியாடியர்களதும், ஒன்பது தொகையடியார்களதும், அதியுச்சமான இறையன்பை, அவர்களின் தொண்டின் பற்றுதலையும், இறைவன் புகழ்பாடுவதையன்றி, முத்தியின் மீதும் பற்றற்று இருக்கும் அவர் பான்மையையும் பத்திச்சுவை நனி சொட்டச்சொட்ட எமக்கு அளித்ததாலேயே, இன்று இத்தகு பெரும் வரலாற்றைத் தொண்டர்கள் சார்ந்து நாம் எம் கைகளில் வைத்து வணங்குகின்றோம். சிவத்திரு. செந்தமிழாதன் எப்படி திருநெறிய செந்தமிழ் தந்த மூவர் தேவாரங்களை, மருந்தாக, மந்திரங்களாக, புரிந்து கேட்கப்படும் புண்ணியங்களாக கொள்கிறோமோ, அப்படியே தெய்வச்சேக்கிழார் திருவாய் மொழிந்த பெரியபுராணத்தையும் சைவத்தமிழ் உலகம் செப்பேட்டில் பதித்து, நடராசர், திருக்கமலங்களில் வைத்து, உயர்த்தியது. "தோடுசெய்த திருநெறிய செந்தமிழோடொக்கும் என்று வரை தொடர்ந்து செய் பேடு செய்து நடராசர் சந்தியிலேற்றுனர்களிது பாலிசூழ், நடுசெய்ததவ நீடுகுன்றைவள நகரிசெய்ததவ நிகரிலாப், பீடுசெய்ததாகி ரதிகுலத்திலகர் சேக்கிழார் செய்த பெரும் தவம்.” என்கிறார், கொற்றவன்குடி - உமாபதிசிவாச்சாரியார். சேக்கிழாரின் பெருங்குடி செய்த தவம் மட்டுமல்ல, சேக்கிழாரை பெற்றதே சைவத்தமிழ் உலகின் மிகப்பெரும் தவப்பயனாகிறது. இன்று வாழும் தலைமுறைக்கு சேக்கிழார் வரலாறு, ஒரு மகத்தான வழிகாட்டி! பணியும் தன்மையும், கீழ்ப்படிந்து ஒழுகும் பாங்கும் இல்லாமல் முறைதவறிப்பயணிக்கும் இளைய தலைமுறைக்கு நல்ல மருந்து. திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரின் வரலாறு, பெரியபுராணத்தின் பெரும்பங்காய் நிறைந்து நீள்கிறது. 'பிள்ளை பாதி புராணம் பாதி’ என்று, சான்றோர் வழங்குமளவுக்கு, தெய்வச்சேக்கிழார், ஞானசம்பந்தரின் வரலாற்றை அடுத்து வரப்போகும், இளைய சைவத்தமிழ் பிள்ளைகளுக்காக தந்தார் என்பதே உயர்ந்தோர் கொள்கை! வேதநெறி தளைத்து ஓங்க மிகுசைவத்துறை விளங்க, இன்னும் இன்னும் இளைய தொண்டர்கள் தோன்றி வரவேண்டும் என்பதே, தெய்வச்சேக்கிழாரின் பெருங்கனவாக பெரியபுராணம் எங்கும் நிறைந்து இருக்கிறது. எந்த அமங்கலச்சொற்களும் இன்றி, எந்த அகந்தை விழிப்புக்களும் தெய்வத்திரு சேக்கிழார் திருக்கோயில் குன்றத்தூர். Cecigerec nadgire சிமி இன்றி, தெளிந்த நீரில், நிறைந்த மலராக, பெரியபுராணத்தை சேக்கிழார் படைத்த போது, இயல்பாக ஞானசம்பந்தரின் பெருமையை உரைத்து, திருநாவுக்கரசரின் முதுமையின் வாசலின் நின்றும் இறைவனை அணுகும் தன்மையையையும் வியந்தும், வயது, முத்திக்கும், தொண்டுக்கும் தடையில்லை என்றும் எமக்கு சான்று தந்தார். எல்லாவற்றுக்கும் மேலாக, வரலாறு நீட்சித்தன்மை வாய்ந்தது. அது தான் புராணம் பாடும் காலத்தோடு முடிவுற்றுப் போகாது, தான் வாழ்வதும் நாளை வரலாறாகும், நாளைகளும், நாளை மறுநாள் வரலாறூகும். என்பதை உணர்ந்தவர் சேக்கிழார்! சைவத்தின் வேர், தென்பாரதத்தில் இருந்தாலும், சைவத்தின் விழுதுகளாக சிவனையே தொழுது முத்தியின்பம் பெற்றவர்களும், பெறப்போபவர்களும், தமிழக எல்லைகளுக்கு அப்பாலும் இருப்பார்கள் என்பதை, ஆய்ந்து தெளிந்தவர் தெய்வச்சேக்கிழார், "மூவேந்தர் தமிழ் வழங்கும் நாட்டுக்கு அப்பால் முதல்வனார் அடிசார்ந்த முறைமையோரும் நாவேய்ந்த திருத்தொண்டர் தொகையில் கூறும் நல்ல தொண்டர் காத்து முன்னும் பின்னும் பூவேய்ந்த நெடுஞ்சடைமேல் அடம்பு தும்பை புதிய மதி நதி இதழி பொருந்த வைத்த சே ஏந்து வேல் கெடியான் அடிச்சார்ந்தாரும் செப்பிய அம்பாலும் அடிச்சார்ந்தார் தாமே." என்று, அப்பாலும் அடிசார்ந்தார் தமை, சுந்தரமூர்த்தி நாயனாரின் திருத்தொண்டர் தொகையின், நீட்சியாக, அவர்கள் யார் யார் என்று பாடி எம்மையும் வணங்குமாறு அருளாணைத் தருகின்றார். திருத்தொண்டர் அறுபத்துமூவரை என்ற மட்டுப்பாடோ, வரையறையோ இல்லை. அந்த எண்ணப்பாங்கு யாருக்கும் வரவும் கூடாது என்பதே சைவத்தின் கோட்பாடாகும். தன் வாழ்நாள் முழுவதும் சைவம் உய்வதற்க்காக, திருத்தொண்டர்கள் வரலாற்றைத் தேடிய தெய்வச்சேக்கிழாரின் விருப்பும் அதுவே ஆகும். இன்று உலகம் இயந்திரமயமாகி சுழல்கிறது. தொண்டு செய்வதற்கும், அதன் மாண்பை மற்றவர்களுக்கு சொல்லவும் யாரும் முன்வருவாருமில்லை. பெரும் தொற்றினைப் போலத்தான், சரியைத்தொண்டின் தார்ப்பரியமும் குறைந்தே போனது. ஆனால், மனிதர்களுக்குச் செய்யும் சேவையே மகத்தான சேவையெனக்கருதி மருத்துவ பணியாளர்களும், சமூகநலன் விரும்பிகளும் அயராது தினமும் உழைக்கின்றனர். இந்த தொண்டு ஆண்டாண்டாய் தொடர்ந்து வந்த தொண்டு மனப்பாங்கின் தொடர்ச்சியே தான்! அந்த மனப்பாங்கு வளரக் காரணமாய் அமைந்தவரும் சேக்கிழார் பெருமானே தான்! அருளாளர்களாய் ஆற்றலாளர்களாய் இந்த மண்ணில் தோன்றி இறைவனின் பெருங்கருணைப் பேறுபெற்று, இறையோடு இரண்டறக்கலந்து பேரானந்த நிலை எய்திய, திருத்தொண்டர் வரலாற்றை எமக்கு தந்து தெய்வநிலை அடைந்த சேக்கிழாரின் திருப்பாதங்களை நினைந்து வணங்குவோமாக. "என்றும் இன்பம் பெருகும் இயம்பினால் ஒன்று காதலித்து உள்ளமும் ஓங்கிட மற்று உளார் அடியார் அலர் வான் புகழ் நின்றது எங்கும் நிலவி உலகலாம்.” திருச்சிற்றம்பலம்
தெ 02 ஆடவை நல்லோரை ஆனித் திங்கள் 2021 சைவநெறி உய்யவந்த தெய்வச் சேக்கிழார் உலகின் மூத்த முதல் நெறியாகிய சைவநெறியின் சாரமே தொண்டுதான் ! தனக்காகவும் பிறருக்காகவும் தவமும் தானமும் செய்வதோடு இறைக்காகவும் வாழும் முறைக்காகவும் தொண்டு செய்வதும் இந்த நெறியின் தெளிவாகக் கொள்ளப்படுகிறது . நான் என்கிற அகங்காரமும் எனது என்கிற மமதையும் நீங்கி எவன் ஒருவன் தொண்டு செய்கிறானோ அவன் இறைவன் என்கிற நிலைக்கு உயர்த்தி வழிபடப்படுவான் என்பதை வரலாறு எமக்கு நினைவு படுத்துகிறது . சொன்னான் காம்பன் பாடினான் ' என்று பதிவு செய்கின்றோம் ஆனால் அதே தொனியில் அதே விகுதியில் ' சேக்கிழார் பாடினான் ' என்றோ ' சேக்கிழார் சொன்னான் ' என்றோ கூறவும் முடியாது பதியவும் தோன்றாது ! இது தெய்வத் தன்மையின் சான்று ! தாழ்வெனும் தமையோடு சைவமாம் சமயம் சாரும் ஊழ்பெறல் என்கிறது சிவஞான சித்தியார் . எனவே தம்மை தாழ்த்தி கொண்டு தொண்டு செய்யும் தன்மையே உலகின் * Vove மிகப்பெரிய விடயமாகவும் இருக்கிறது . அந்த நிலை வாய்க்கப்பெற்றவர்கள் அருளாளர்களாகத் தம் வரலாற்றால் எம்மை வழிபடுத்துவார்கள் ! அந்த அருள் பெருகும் வரலாறு ஆண்டாண்டு காலமாய் கடந்து வரவேண்டும் இளைய தலைமுறைக்கு தொண்டின் சிறப்பைச் சொல்ல தொடர்ந்து வரவேண்டும் என்பதற்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்து உழைத்த பெருந்தகை தெய்வச்சேக்கிழாரை அவரது பணிகளால் உயர்த்தி பாரின் மிசை வணங்குவதே சைவத்தமிழரின் பெருங்கடனாகும் ! தென்னாடு பெரியபுராணமாகிய திருத்தொண்டர் புராணத்தை எமக்கு தந்து சைவசமயத்தின் ஒப்பற்ற பெரும் புதையலை உருவாக்கிய பெருமை வாய்ந்த தெய்வச்சேக்கிழாரை கடந்த பதின்நான்காம் திகதி திங்கட்கிழமை அவரது குருபூசை நன்னாளில் வணங்கி நிறைந்தோம் . அவரின் அர்பணிப்பான பணியை அடுத்த தலைமுறை ஓதி உணரவேண்டும் என்று 14 ம் நூற்றாண்டில் தோன்றிய உமாபதி சிவாச்சாரியார் சேக்கிழார் புராணம் ' என்கிற ஒப்பற்ற நூலை எமக்கு தந்தார் . நூற்று மூன்று பாடல்களைக் கொண்டமைந்த அந்நூலே சேக்கிழார் வரலாற்றை நாம் அறியத் துணை செய்யும் தொன்மையான ஆவணமாகும் . இன்று தமிழர்கள் ஆவணப்படுத்துவதில் பின்னிற்பதாக அனைவரும் குறை சொல்வதைக் கண்ணூடாகக் காண்கிறோம் . ஆனால் உலகம் ' ஆவணப்படுத்தல் என்ற எண்ணக்கருவை எடுத்தாள முதலே கல்லிலும் செப்பிலும் ஆவணப்படுத்திய வர்கள் தமிழர்கள் தான் ! வாழ்ந்து உயர்ந்த மனிதர்களின் வாழ்வை ஆவணப்படுத்த வேண்டும் என்ற உயரிய சிந்தனையில் காவியங்களையும் புராணங்களையும் பாடி வைத்தவர்கள் தான் சைவத்தமிழர்கள் . ஆனால் அவற்றை வெறுமனே பத்தி இலக்கியங்களை மட்டுமே பார்த்து எம் மகத்துவத்தைத் தொலைத்தது வருத்தமே ! இந்த மகத்தான பெரும் பணிக்கு மணிமகுடம் வைத்ததை போல வந்து சைவநெறிக்கு வாய்த்தவர் தான் தெய்வச் சேக்கிழார் திருத் தொண்டர் புராணத்தை எழுதும் போது அவர் அதைக் கற்பனையிலேயே அல்லது செவிவழிச் செய்திகளை ஆதாரமாக வைத்தோ முன்வைக்கவில்லை . தன் வகித்த நாட்டின் பெரும் பணியான முதல் அமைச்சர் பதவியைத் துறந்து திருத்தொண்டர்கள் வாழ்ந்த ஊர்களைத் தேடித் தேடிப் போனார் . திருத்தலங்களை ஆராய்ந்து தேவாரத் திருப்பதிகங்களை ஓதி உணர்ந்து மிக நுட்ப்பமாகத் திறனாய்வு செய்தார் . இதுவரை உலகில் எவரும் செய்திராத மிகமிகக் கண்ணியமான திறனாய்வு அது ! தான் சரிவர உறுதிப்படுத்தாத எந்தத் தகவலையும் இலக்கிச் சுவைக்காக வேனும் அந்த ஆவணச் சுரங்கத்தில் உட்சேர்க்கவில்லை . நாயன்மார்களின் தாய் தந்தையர்களின் பெயர்களைக் கூட சரிவரத் தெரிந்தால் மட்டுமே குறிப்பிட்டார் . எந்த நாயன்மார்களின் பெயரையோ அல்லது அவரை விழிக்கும் போது கவிக்கூற்றாக ' அன் ஆன் ' விகுதிகளைச் சேர்க்க வில்லை . அவ்வளவு கண்ணியமாக அடியார்க்கு அடியாராக நின்று அந்த ஆவணப் பேழையில் அருளமுதம் நிறைத்தார் ! பணியுமாம் என்றும் பெருமை என்றாரே வள்ளுவர் அந்தக்குறலுக்கு தானே உதாரணமாய் தோன்றினார் . அந்தப் பணிவு தெளிவால் விளைந்த விளைவு ! இறை அருளால் கனிந்த கனிவு அதனாலே தான் தம் இன்று ' வள்ளுவன் சேக்கிழாருக்கு தானாய் வாய்த்தது என்பதை விட பணிவாலும் தொண்டை யும் தொண்டரையும் இறைவனுக்கு நிகராக உயர்த்தியதாலும் பெற்ற பேறென்றே கருதலாம் . தெய்வச்சேக்கிழார் என்ற ஒருவர் சைவத் தமிழ் உலகுக்கு கிடைத்திராமல் போயிருந்தால் திருத்தொண்டர் தொகையிலும் திருத்தொண்டர் திருவந்தாதியிலும் இருந்த அடியவர் பெருமை பாசிமூடிய பவளமாயும் மாசியில் மறைந்த மதியாயும் போயிருக்கும் . அதை விரித்திச்சொன்ன தெய்வச்சேக்கிழாரின் திருத்தொண்டர் புராணமே ' தொண்டை ' சாரமாக கொண்ட சைவத்தின் பெரும் எழுச்சிக்குத் துணை நின்றது என்பதே உண்மை ! அறுபத்து மூன்று தனியாடியர்களதும் ஒன்பது தொகையடியார்களதும் அதியுச்சமான இறையன்பை அவர்களின் தொண்டின் பற்றுதலையும் இறைவன் புகழ்பாடுவதையன்றி முத்தியின் மீதும் பற்றற்று இருக்கும் அவர் பான்மையையும் பத்திச்சுவை நனி சொட்டச்சொட்ட எமக்கு அளித்ததாலேயே இன்று இத்தகு பெரும் வரலாற்றைத் தொண்டர்கள் சார்ந்து நாம் எம் கைகளில் வைத்து வணங்குகின்றோம் . சிவத்திரு . செந்தமிழாதன் எப்படி திருநெறிய செந்தமிழ் தந்த மூவர் தேவாரங்களை மருந்தாக மந்திரங்களாக புரிந்து கேட்கப்படும் புண்ணியங்களாக கொள்கிறோமோ அப்படியே தெய்வச்சேக்கிழார் திருவாய் மொழிந்த பெரியபுராணத்தையும் சைவத்தமிழ் உலகம் செப்பேட்டில் பதித்து நடராசர் திருக்கமலங்களில் வைத்து உயர்த்தியது . தோடுசெய்த திருநெறிய செந்தமிழோடொக்கும் என்று வரை தொடர்ந்து செய் பேடு செய்து நடராசர் சந்தியிலேற்றுனர்களிது பாலிசூழ் நடுசெய்ததவ நீடுகுன்றைவள நகரிசெய்ததவ நிகரிலாப் பீடுசெய்ததாகி ரதிகுலத்திலகர் சேக்கிழார் செய்த பெரும் தவம் . என்கிறார் கொற்றவன்குடி - உமாபதிசிவாச்சாரியார் . சேக்கிழாரின் பெருங்குடி செய்த தவம் மட்டுமல்ல சேக்கிழாரை பெற்றதே சைவத்தமிழ் உலகின் மிகப்பெரும் தவப்பயனாகிறது . இன்று வாழும் தலைமுறைக்கு சேக்கிழார் வரலாறு ஒரு மகத்தான வழிகாட்டி ! பணியும் தன்மையும் கீழ்ப்படிந்து ஒழுகும் பாங்கும் இல்லாமல் முறைதவறிப்பயணிக்கும் இளைய தலைமுறைக்கு நல்ல மருந்து . திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரின் வரலாறு பெரியபுராணத்தின் பெரும்பங்காய் நிறைந்து நீள்கிறது . ' பிள்ளை பாதி புராணம் பாதி என்று சான்றோர் வழங்குமளவுக்கு தெய்வச்சேக்கிழார் ஞானசம்பந்தரின் வரலாற்றை அடுத்து வரப்போகும் இளைய சைவத்தமிழ் பிள்ளைகளுக்காக தந்தார் என்பதே உயர்ந்தோர் கொள்கை ! வேதநெறி தளைத்து ஓங்க மிகுசைவத்துறை விளங்க இன்னும் இன்னும் இளைய தொண்டர்கள் தோன்றி வரவேண்டும் என்பதே தெய்வச்சேக்கிழாரின் பெருங்கனவாக பெரியபுராணம் எங்கும் நிறைந்து இருக்கிறது . எந்த அமங்கலச்சொற்களும் இன்றி எந்த அகந்தை விழிப்புக்களும் தெய்வத்திரு சேக்கிழார் திருக்கோயில் குன்றத்தூர் . Cecigerec nadgire சிமி இன்றி தெளிந்த நீரில் நிறைந்த மலராக பெரியபுராணத்தை சேக்கிழார் படைத்த போது இயல்பாக ஞானசம்பந்தரின் பெருமையை உரைத்து திருநாவுக்கரசரின் முதுமையின் வாசலின் நின்றும் இறைவனை அணுகும் தன்மையையையும் வியந்தும் வயது முத்திக்கும் தொண்டுக்கும் தடையில்லை என்றும் எமக்கு சான்று தந்தார் . எல்லாவற்றுக்கும் மேலாக வரலாறு நீட்சித்தன்மை வாய்ந்தது . அது தான் புராணம் பாடும் காலத்தோடு முடிவுற்றுப் போகாது தான் வாழ்வதும் நாளை வரலாறாகும் நாளைகளும் நாளை மறுநாள் வரலாறூகும் . என்பதை உணர்ந்தவர் சேக்கிழார் ! சைவத்தின் வேர் தென்பாரதத்தில் இருந்தாலும் சைவத்தின் விழுதுகளாக சிவனையே தொழுது முத்தியின்பம் பெற்றவர்களும் பெறப்போபவர்களும் தமிழக எல்லைகளுக்கு அப்பாலும் இருப்பார்கள் என்பதை ஆய்ந்து தெளிந்தவர் தெய்வச்சேக்கிழார் மூவேந்தர் தமிழ் வழங்கும் நாட்டுக்கு அப்பால் முதல்வனார் அடிசார்ந்த முறைமையோரும் நாவேய்ந்த திருத்தொண்டர் தொகையில் கூறும் நல்ல தொண்டர் காத்து முன்னும் பின்னும் பூவேய்ந்த நெடுஞ்சடைமேல் அடம்பு தும்பை புதிய மதி நதி இதழி பொருந்த வைத்த சே ஏந்து வேல் கெடியான் அடிச்சார்ந்தாரும் செப்பிய அம்பாலும் அடிச்சார்ந்தார் தாமே . என்று அப்பாலும் அடிசார்ந்தார் தமை சுந்தரமூர்த்தி நாயனாரின் திருத்தொண்டர் தொகையின் நீட்சியாக அவர்கள் யார் யார் என்று பாடி எம்மையும் வணங்குமாறு அருளாணைத் தருகின்றார் . திருத்தொண்டர் அறுபத்துமூவரை என்ற மட்டுப்பாடோ வரையறையோ இல்லை . அந்த எண்ணப்பாங்கு யாருக்கும் வரவும் கூடாது என்பதே சைவத்தின் கோட்பாடாகும் . தன் வாழ்நாள் முழுவதும் சைவம் உய்வதற்க்காக திருத்தொண்டர்கள் வரலாற்றைத் தேடிய தெய்வச்சேக்கிழாரின் விருப்பும் அதுவே ஆகும் . இன்று உலகம் இயந்திரமயமாகி சுழல்கிறது . தொண்டு செய்வதற்கும் அதன் மாண்பை மற்றவர்களுக்கு சொல்லவும் யாரும் முன்வருவாருமில்லை . பெரும் தொற்றினைப் போலத்தான் சரியைத்தொண்டின் தார்ப்பரியமும் குறைந்தே போனது . ஆனால் மனிதர்களுக்குச் செய்யும் சேவையே மகத்தான சேவையெனக்கருதி மருத்துவ பணியாளர்களும் சமூகநலன் விரும்பிகளும் அயராது தினமும் உழைக்கின்றனர் . இந்த தொண்டு ஆண்டாண்டாய் தொடர்ந்து வந்த தொண்டு மனப்பாங்கின் தொடர்ச்சியே தான் ! அந்த மனப்பாங்கு வளரக் காரணமாய் அமைந்தவரும் சேக்கிழார் பெருமானே தான் ! அருளாளர்களாய் ஆற்றலாளர்களாய் இந்த மண்ணில் தோன்றி இறைவனின் பெருங்கருணைப் பேறுபெற்று இறையோடு இரண்டறக்கலந்து பேரானந்த நிலை எய்திய திருத்தொண்டர் வரலாற்றை எமக்கு தந்து தெய்வநிலை அடைந்த சேக்கிழாரின் திருப்பாதங்களை நினைந்து வணங்குவோமாக . என்றும் இன்பம் பெருகும் இயம்பினால் ஒன்று காதலித்து உள்ளமும் ஓங்கிட மற்று உளார் அடியார் அலர் வான் புகழ் நின்றது எங்கும் நிலவி உலகலாம் . திருச்சிற்றம்பலம்