தென்னாடு ஆனித் திங்கள் இதழ் - 09

ஆடவை நல்லோரை ஆனித் திங்கள், 2021 அமைவிடம்: (நாகப்பட்டினம் மாவட்டம் - தமிழ்நாடு) மயிலாடுதுறை - மணல்மேடு சாலையில் அமைந்துள்ள பட்டவர்த்தி என்ற சிற்றூரில் இருந்து வடகிழக்கே சுமார் 2 கி.மி தொலைவில் இத்தலம் உள்ளது. வைத்தீசுவரர் கோயில் - திருப்பனந்தாள் சாலையில், "தலைஞாயிறு" என்று கைகாட்டி உள்ள இடத்தில், வலதுபுறம் பிரிந்து செல்லும் சாலையில் சென்றால், இத்தலத்தை அடையலாம். வைத்தீசு வரர் கோயிலில் இருந்து சுமார் 8 கி.மி. தொலைவில் உள்ளது. ஈசனைத் தேடிய தென்னாட்டுப் பயணம்- அருள்மிகு கோல்வளைநாயகி உடனுறை குற்றம் பொறுத்த நாத சுவாமி திருக்கோயில் - திருக்கருப்பறியலூர் திருத்தலச் சிறப்பு இத்திருத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார். இத்தல விநாயகர் சித்தி விநாயகர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். சீர்காழி சட்டைநாதர் கோயில் அமைப்பை போலவே, இக்கோயிலும் மலைக்கோயில் அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. எனவே இத்தலத்தை "மேலைக்காழி" என்பர். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவபுரங்களில் இது, 27 வது சிவபுரம் ஆகும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களும், குழந்தை பிறந்து, இறந்து விடும் தோசம் உள்ளவர்களும், ஆண் மகவு வேண்டுபவர்களும், பெண் மகவு வேண்டுபவர்களும், இத்தல இறைவனிடம் வேண்டிக்கொள்கின்றனர். இத்தலத்தில் செய்யும் அறச்செயல்கள் ஒன்றுக்கு பத்தாக பெருகும் என்பது தொன் நம்பிக்கை. 72 முனிவர்கள் இங்கு வழிபாடு செய்து முத்தி பெற்றுள்ளனர். இத்தலத்தில் வந்து வழிபடுபவர்கள், அடுத்த பிறவியில் தாயின் கருவில் தங்கமாட்டார்கள், அதாவது அவர்களுக்கு, அடுத்த பிறவி கிடையாது, சிவனின் பாதத்தில் சேர்ந்துவிடுவார்கள் என்பது தொன் நம்பிக்கை. எனவே தான் இத்திருத்தலம் "கருப்பறியலூர்' என வழங்கப்படுகிறது. ஒரு முறை இந்திரன், இறைவன் என்று அறியாமல் அவர் மீது வச்சிரம் எறிந்த, குற்றத்தைப் பொறுத்தருளியமையால் குற்றம்பொறுத்த நாதர் ஆனார் என்பது தொன்நம்பிக்கை. இங்கு சோழர் காலக் கல்வெட்டுகள் உள்ளன. பாதுப்பீடை சூரிய தோசம்) நீக்கும் கழுவாய்த் தலம். தேவாரப் பாடல் பெற்ற காவிரி வடகரை சிவபுரங்களில் 27வது திருக்கோயில் கொகுடிக்கோயில் கொகுடி முல்லையைத் தலக்கொடியாக கொண்டதால், இப்பெயர் பெற்றது. (கருப்பறியலூர் என்பது ஊரின் பெயர், கோயிலின் பெயர் கொகுடிக்கோயில் இறைவன் திருப்பெயர் : குற்றம் பொறுத்தநாதர் (அபராதசமேசுவரர் ) இறைவியார் திருப்பெயர் : கோல்வளை நாயகி (விசித்திர வலையாம்பிகை ) கோயில்மரம் : கொடிகுமுல்லை திருக்குளம் : சூரிய திருக்குளம், பொற்றாமரை, இந்திர தீர்த்தம் தென்னாடு வழிபட்டோர் : இந்திரன், கதிரவன், விசித்திராங்கன் என்ற மன்னன், அனுமன், இராவணன் பாமாலை: திருஞானசம்பந்தர், சுந்தரர் சுந்தரர் பாடிய பதிகம் சிம்மாந்து சிம்புளித்துச் சிந்தையினில் வைத்துகந்து திறம்பா வண்ணங் கைம்மாவின் உரிவைபோர்த் துமைவெருவக் கண்டானைக் கருப்ப றியலூர்க் கொய்ம்மாவின் மலர்ச்சோலைக் குயில்பாட மயிலாடுங் கொகுடிக் கோயில் எம்மானை மனத்தினால் நினைந்தபோ தவர்நமக் கினிய வாறே. சுந்தரர் தனது பதிகத்தில், இக்கோயிலை கொகுடிக்கோயில் என்று ஒவ்வொரு பாடலிலும் குறிப்பிட்டுள்ளார். தனது பதிகத்தின் முடிவில், அவரது பதிகத்தை தினமும் பாடுவர்களுக்கு அவர்கள் செய்த வினையாவும் வாடுவது மிகவும் எளிது என்று குறிப்பிடுகின்றார். திருத்தல வரலாறு இந்தத் தலத்திலுள்ள இறைவன் அனுமனால் பூசிக்கப்பட்டவர். யுத்தத்தில் இராவணனைக் கொன்றார், இராமர். அந்த தோசத்தை நீக்க இராமேசுவரத்தில் சிவபூசை செய்ய நினைத்தார். அனுமனிடம் இரண்டு நாழிகைகளுக்குள் சிவலிங்கம் கொண்டு வருமாறு கட்டளையிட்டார். இராமரின் கட்டளையை ஏற்ற அனுமன் வடதிசை நோக்கிச் சென்றார். ஆனால், அனுமன் வரத் தாமதமானது. இராமர் மணலால் இலிங்கம் அமைத்து வழிபட்டார். அவரது தோசமும் நீங்கியது. தான் வருவதற்குள் இராமர் மணலால் இலிங்கம் அமைத்து வழிபட்டதை அறிந்த அனுமன் வருந்தினான். அந்த இலிங்கத்தை தன் வாலால் கட்டி இழுத்தார், முடியவில்லை. இப்படிச் செய்ததால், அனுமனுக்கு சிவ அபராதம் விதிக்கப்பட்டது. இராவணனின் மகன் மேகநாதன். இந்திரனை போரில் வென்றதால் இவனுக்கு " இந்திரஜித் " என்ற பெயர் ஏற்பட்டது. ஒரு முறை மேகநாதன் வானத்தில் பறக்கும் விமானம் மூலம் தலத்தின் மீது தேவார முதலிகளால் பாடப்பட்ட பதிகங்கள் பறந்து கொண்டிருந்தான். வழியில் விமானம் தடைப்பட்டு நின்றது. கீழே பார்த்தபோது சிவாலயத்தின் மீது பறந்ததை உணர்ந்தான். இதனால் இந்த தடை ஏற்பட்டது, என திருஞானசம்பந்தர் பாடிய பதிகம் சுற்றமொடு பற்றுஅவை துயக்குஅற அறுத்துக் குற்றம்இல் குணங்களொடு கூடும் அடியார்கள் மற்று அவரை வானவர்தம் வான்உலகம் ஏற்றக் கற்றவன் இருப்பது கருப்பறிய லூரே. அறிந்தான். இதனால் வருந்திய மேகநாதன், இத்தல தீர்த்தத்தில் நீராடி இறைவனை பூசித்தான். இவனது கவலை நீங்கி விமானம் மறுபடியும் பறந்தது. இப்படிப்பட்ட அற்புத இலிங்கத்தை இலங்கைக்கு கொண்டு செல்ல முயன்றான். அது முடியாமல் போனதால் மயங்கி விழுந்தான். இந்த செய்தியை கேட்ட இராவணன் இத்தல சிவனின் திருவடியில் விழுந்து, தன் மகனின் குற்றத்தை பொறுத்து அருளுமாறு வேண்டினான். இறைவனும் அருள் செய்தார். 03 "சிவனை நோக்கி தவமிருந்தால் அந்த அபராதம் நீங்கும்" என இராமர் அனுமனுக்கு யோசனை கூறினார். அனுமனும் அவ்வாறே செய்தான். அவன் முன்னால் சிவன் தோன்றி "அனுமனே..நீதலைஞாயிறு சென்று வழிபாடு செய்தால் இந்த தோசம் விலகும்" என அருள்பாலித்தார். அனுமனும் அவ்வாறே இங்கு வந்து வழிபட்டு தோசம் நீங்கப் பெற்றார். அதன் பிறகு சிவனின் கருணைக்கு வியந்து, இந்தத் தலத்தின் வட கிழக்கில் தன் பெயரால் ஒரு இலிங்கம் அமைத்து, வழிபாடு செய்தார். இன்று, அந்தத் தலம் 'திருக்குரக்கா' என அழைக்கப்படுகிறது. தெ எனவே இத்தல இறைவன் "குற்றம் பொறுத்த நாதர்" எனும் கதையும் உண்டு. விசித்திராங்கன் என்ற மன்னன் தன் மனைவி சுசீலையுடன் குழந்தை பாக்கியம் வேண்டி இங்கு வந்து வழிபாடு செய்து, இறைவன் அருளால் குழந்தை பெற்றான். இதனால் மகிழ்ந்த மன்னன் இந்தத் தலத்தை அழகுறக் கட்டினான் என்பது வரலாறு. சிவத்திரு குமரேசன் சிலருக்குக் கருவிலே சிசு கலைவது உண்டு. இராஜசிம்மன் சிலருக்கு குழந்தைப் பிறந்தவுடன் இறந்துவிடும். சில குடும்பங்களில் விபத்துகளினால் துர்மரணம் நிகழ்வதும் உண்டு. இவை அனைத்தும் ‘ஆலாள' என்ற தோசத்தினால் ஏற்படுகின்றன. இங்குள்ள இறைவனை வந்து வழிபட்டால் மேற்படி தோசம் நீங்கும் என்பது நம்பிக்கை! கதிரவன் இந்தத் திருத்தலத்தை வழிபட்டதால் 'தலைஞாயிறு' என்று அழைக்கப்படுகிறது. தான் பெற்ற சாபத்தில் இருந்து விடுபடப் பல சிவத்தலங்களில் சூரியன் வழிபட்டான். அவ்வாறு வழிபட்ட தலங்கள் அனைத்தும் பாதுப்பீடை கழுவாய்த் தலங்களாக போற்றப்படுகின்றன. அந்த வகையில், திருக்கருப்பறியலூர் தலமும், பாதுப்பீடை கழுவாய்த் தலமாக விளங்குகிறது. இந்த தோசம் உள்ளவர்கள் இந்தத் தலத்துக்கு வந்து இறைவனை வழிபடுவதன் மூலம் தோசம் நீங்கப் பெறலாம். 40 இந்தத் திருத்தலத்தில் செய்யும் அறச்செயல்கள் ஒன்றுக்குப் பத்தாக பெருகும்" என்பதை நான்முகன் வசிட்டருக்குக் கூறினார். அதனால் வசிட்டர் இங்கு, இலிங்கம் அமைத்து வழிபட்டு, மெஞ்ஞானம் பெற்றார் என்கிறது தலபுராணம். கோயில் அமைப்பு தருமபுர ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இவ்வாலயம், கிழக்கு நோக்கிய மூன்று நிலை இராசகோபுரத்துடன் அமைப்பில் காணப்படுகிறது. அமைந்துள்ளது. உள்மண்டபம் வெளவால், நெற்றி மண்டப இந்தக் கோயில் கிழக்கு நோக்கிய மூன்று நிலை இராசகோபுரத்துடன் அமைந்துள்ளது. உள் மண்டபம், வௌவால் நெற்றி மண்டப அமைப்பில் அமைந்திருக்கிறது. மூலவர் குற்றம்பொறுத்த நாதர் சுயம்பு மூர்த்தியாகக் கிழக்கு நோக்கியும், தாயார் கோல்வளை நாயகி தெற்கு நோக்கியும் பத்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். கருவறை சுற்றுப் பிராகாரத்தில் விநாயகர், இலிங்கோற்பவர், மலைமகள் மற்றும் நான்முகன் ஆகியோர் காணப்படுகின்றனர். குற்றம் பொறுத்தநாதர் வெளிப் பிராகாரத்தில் சீர்காழியில் இருப்பதுபோல உயர்ந்த தனிக்கோயிலாக சட்டைநாதர் திருமுன் உள்ளது. மேலேறிச் சென்று, தோணியப்பரைத் வணங்கி, அதற்கும் மேலே சென்று, சட்டைநாதரைத் வணங்க செங்குத்தான மரப்படிகளை ஏற வேண்டும். தோணியப்பர் திருமுன்னை, இத்தலத்தில் கர்ப்பஞானேசுவரர் உடனுறை கர்ப்பஞானபர மேசுவரி திருமுன் என்றழைக்கின்றனர். கோயில் மரமான கொகுடிமுல்லை, இலிங்கோற்பவருக்கு எதிரில் காணப்படுகிறது. விபரங்களை பெற்றுக்கொள்ள ஈசனைத் தேடிய தென்னாட்டுப் கோயில் செல்வதற்கான உதவி மற்றும் மேலதிக பயண கட்டுரை ஆசிரியரைத் தொடர்பு கொள்ளலாம். சிவத்திரு.குமரேசன் இராஜசிம்மன் உதவிப் பேராசிரியர் SRM கலை மற்றும் அறிவியல் கல்லூரி 919003296221 - easanaithedi.in.
ஆடவை நல்லோரை ஆனித் திங்கள் 2021 அமைவிடம் : ( நாகப்பட்டினம் மாவட்டம் - தமிழ்நாடு ) மயிலாடுதுறை - மணல்மேடு சாலையில் அமைந்துள்ள பட்டவர்த்தி என்ற சிற்றூரில் இருந்து வடகிழக்கே சுமார் 2 கி.மி தொலைவில் இத்தலம் உள்ளது . வைத்தீசுவரர் கோயில் - திருப்பனந்தாள் சாலையில் தலைஞாயிறு என்று கைகாட்டி உள்ள இடத்தில் வலதுபுறம் பிரிந்து செல்லும் சாலையில் சென்றால் இத்தலத்தை அடையலாம் . வைத்தீசு வரர் கோயிலில் இருந்து சுமார் 8 கி.மி. தொலைவில் உள்ளது . ஈசனைத் தேடிய தென்னாட்டுப் பயணம் அருள்மிகு கோல்வளைநாயகி உடனுறை குற்றம் பொறுத்த நாத சுவாமி திருக்கோயில் - திருக்கருப்பறியலூர் திருத்தலச் சிறப்பு இத்திருத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார் . இத்தல விநாயகர் சித்தி விநாயகர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார் . சீர்காழி சட்டைநாதர் கோயில் அமைப்பை போலவே இக்கோயிலும் மலைக்கோயில் அமைப்பில் கட்டப்பட்டுள்ளது . எனவே இத்தலத்தை மேலைக்காழி என்பர் . சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவபுரங்களில் இது 27 வது சிவபுரம் ஆகும் . குழந்தை பாக்கியம் இல்லாதவர்களும் குழந்தை பிறந்து இறந்து விடும் தோசம் உள்ளவர்களும் ஆண் மகவு வேண்டுபவர்களும் பெண் மகவு வேண்டுபவர்களும் இத்தல இறைவனிடம் வேண்டிக்கொள்கின்றனர் . இத்தலத்தில் செய்யும் அறச்செயல்கள் ஒன்றுக்கு பத்தாக பெருகும் என்பது தொன் நம்பிக்கை . 72 முனிவர்கள் இங்கு வழிபாடு செய்து முத்தி பெற்றுள்ளனர் . இத்தலத்தில் வந்து வழிபடுபவர்கள் அடுத்த பிறவியில் தாயின் கருவில் தங்கமாட்டார்கள் அதாவது அவர்களுக்கு அடுத்த பிறவி கிடையாது சிவனின் பாதத்தில் சேர்ந்துவிடுவார்கள் என்பது தொன் நம்பிக்கை . எனவே தான் இத்திருத்தலம் கருப்பறியலூர் ' என வழங்கப்படுகிறது . ஒரு முறை இந்திரன் இறைவன் என்று அறியாமல் அவர் மீது வச்சிரம் எறிந்த குற்றத்தைப் பொறுத்தருளியமையால் குற்றம்பொறுத்த நாதர் ஆனார் என்பது தொன்நம்பிக்கை . இங்கு சோழர் காலக் கல்வெட்டுகள் உள்ளன . பாதுப்பீடை சூரிய தோசம் ) நீக்கும் கழுவாய்த் தலம் . தேவாரப் பாடல் பெற்ற காவிரி வடகரை சிவபுரங்களில் 27 வது திருக்கோயில் கொகுடிக்கோயில் கொகுடி முல்லையைத் தலக்கொடியாக கொண்டதால் இப்பெயர் பெற்றது . ( கருப்பறியலூர் என்பது ஊரின் பெயர் கோயிலின் பெயர் கொகுடிக்கோயில் இறைவன் திருப்பெயர் : குற்றம் பொறுத்தநாதர் ( அபராதசமேசுவரர் ) இறைவியார் திருப்பெயர் : கோல்வளை நாயகி ( விசித்திர வலையாம்பிகை ) கோயில்மரம் : கொடிகுமுல்லை திருக்குளம் : சூரிய திருக்குளம் பொற்றாமரை இந்திர தீர்த்தம் தென்னாடு வழிபட்டோர் : இந்திரன் கதிரவன் விசித்திராங்கன் என்ற மன்னன் அனுமன் இராவணன் பாமாலை : திருஞானசம்பந்தர் சுந்தரர் சுந்தரர் பாடிய பதிகம் சிம்மாந்து சிம்புளித்துச் சிந்தையினில் வைத்துகந்து திறம்பா வண்ணங் கைம்மாவின் உரிவைபோர்த் துமைவெருவக் கண்டானைக் கருப்ப றியலூர்க் கொய்ம்மாவின் மலர்ச்சோலைக் குயில்பாட மயிலாடுங் கொகுடிக் கோயில் எம்மானை மனத்தினால் நினைந்தபோ தவர்நமக் கினிய வாறே . சுந்தரர் தனது பதிகத்தில் இக்கோயிலை கொகுடிக்கோயில் என்று ஒவ்வொரு பாடலிலும் குறிப்பிட்டுள்ளார் . தனது பதிகத்தின் முடிவில் அவரது பதிகத்தை தினமும் பாடுவர்களுக்கு அவர்கள் செய்த வினையாவும் வாடுவது மிகவும் எளிது என்று குறிப்பிடுகின்றார் . திருத்தல வரலாறு இந்தத் தலத்திலுள்ள இறைவன் அனுமனால் பூசிக்கப்பட்டவர் . யுத்தத்தில் இராவணனைக் கொன்றார் இராமர் . அந்த தோசத்தை நீக்க இராமேசுவரத்தில் சிவபூசை செய்ய நினைத்தார் . அனுமனிடம் இரண்டு நாழிகைகளுக்குள் சிவலிங்கம் கொண்டு வருமாறு கட்டளையிட்டார் . இராமரின் கட்டளையை ஏற்ற அனுமன் வடதிசை நோக்கிச் சென்றார் . ஆனால் அனுமன் வரத் தாமதமானது . இராமர் மணலால் இலிங்கம் அமைத்து வழிபட்டார் . அவரது தோசமும் நீங்கியது . தான் வருவதற்குள் இராமர் மணலால் இலிங்கம் அமைத்து வழிபட்டதை அறிந்த அனுமன் வருந்தினான் . அந்த இலிங்கத்தை தன் வாலால் கட்டி இழுத்தார் முடியவில்லை . இப்படிச் செய்ததால் அனுமனுக்கு சிவ அபராதம் விதிக்கப்பட்டது . இராவணனின் மகன் மேகநாதன் . இந்திரனை போரில் வென்றதால் இவனுக்கு இந்திரஜித் என்ற பெயர் ஏற்பட்டது . ஒரு முறை மேகநாதன் வானத்தில் பறக்கும் விமானம் மூலம் தலத்தின் மீது தேவார முதலிகளால் பாடப்பட்ட பதிகங்கள் பறந்து கொண்டிருந்தான் . வழியில் விமானம் தடைப்பட்டு நின்றது . கீழே பார்த்தபோது சிவாலயத்தின் மீது பறந்ததை உணர்ந்தான் . இதனால் இந்த தடை ஏற்பட்டது என திருஞானசம்பந்தர் பாடிய பதிகம் சுற்றமொடு பற்றுஅவை துயக்குஅற அறுத்துக் குற்றம்இல் குணங்களொடு கூடும் அடியார்கள் மற்று அவரை வானவர்தம் வான்உலகம் ஏற்றக் கற்றவன் இருப்பது கருப்பறிய லூரே . அறிந்தான் . இதனால் வருந்திய மேகநாதன் இத்தல தீர்த்தத்தில் நீராடி இறைவனை பூசித்தான் . இவனது கவலை நீங்கி விமானம் மறுபடியும் பறந்தது . இப்படிப்பட்ட அற்புத இலிங்கத்தை இலங்கைக்கு கொண்டு செல்ல முயன்றான் . அது முடியாமல் போனதால் மயங்கி விழுந்தான் . இந்த செய்தியை கேட்ட இராவணன் இத்தல சிவனின் திருவடியில் விழுந்து தன் மகனின் குற்றத்தை பொறுத்து அருளுமாறு வேண்டினான் . இறைவனும் அருள் செய்தார் . 03 சிவனை நோக்கி தவமிருந்தால் அந்த அபராதம் நீங்கும் என இராமர் அனுமனுக்கு யோசனை கூறினார் . அனுமனும் அவ்வாறே செய்தான் . அவன் முன்னால் சிவன் தோன்றி அனுமனே..நீதலைஞாயிறு சென்று வழிபாடு செய்தால் இந்த தோசம் விலகும் என அருள்பாலித்தார் . அனுமனும் அவ்வாறே இங்கு வந்து வழிபட்டு தோசம் நீங்கப் பெற்றார் . அதன் பிறகு சிவனின் கருணைக்கு வியந்து இந்தத் தலத்தின் வட கிழக்கில் தன் பெயரால் ஒரு இலிங்கம் அமைத்து வழிபாடு செய்தார் . இன்று அந்தத் தலம் ' திருக்குரக்கா ' என அழைக்கப்படுகிறது . தெ எனவே இத்தல இறைவன் குற்றம் பொறுத்த நாதர் எனும் கதையும் உண்டு . விசித்திராங்கன் என்ற மன்னன் தன் மனைவி சுசீலையுடன் குழந்தை பாக்கியம் வேண்டி இங்கு வந்து வழிபாடு செய்து இறைவன் அருளால் குழந்தை பெற்றான் . இதனால் மகிழ்ந்த மன்னன் இந்தத் தலத்தை அழகுறக் கட்டினான் என்பது வரலாறு . சிவத்திரு குமரேசன் சிலருக்குக் கருவிலே சிசு கலைவது உண்டு . இராஜசிம்மன் சிலருக்கு குழந்தைப் பிறந்தவுடன் இறந்துவிடும் . சில குடும்பங்களில் விபத்துகளினால் துர்மரணம் நிகழ்வதும் உண்டு . இவை அனைத்தும் ஆலாள ' என்ற தோசத்தினால் ஏற்படுகின்றன . இங்குள்ள இறைவனை வந்து வழிபட்டால் மேற்படி தோசம் நீங்கும் என்பது நம்பிக்கை ! கதிரவன் இந்தத் திருத்தலத்தை வழிபட்டதால் ' தலைஞாயிறு ' என்று அழைக்கப்படுகிறது . தான் பெற்ற சாபத்தில் இருந்து விடுபடப் பல சிவத்தலங்களில் சூரியன் வழிபட்டான் . அவ்வாறு வழிபட்ட தலங்கள் அனைத்தும் பாதுப்பீடை கழுவாய்த் தலங்களாக போற்றப்படுகின்றன . அந்த வகையில் திருக்கருப்பறியலூர் தலமும் பாதுப்பீடை கழுவாய்த் தலமாக விளங்குகிறது . இந்த தோசம் உள்ளவர்கள் இந்தத் தலத்துக்கு வந்து இறைவனை வழிபடுவதன் மூலம் தோசம் நீங்கப் பெறலாம் . 40 இந்தத் திருத்தலத்தில் செய்யும் அறச்செயல்கள் ஒன்றுக்குப் பத்தாக பெருகும் என்பதை நான்முகன் வசிட்டருக்குக் கூறினார் . அதனால் வசிட்டர் இங்கு இலிங்கம் அமைத்து வழிபட்டு மெஞ்ஞானம் பெற்றார் என்கிறது தலபுராணம் . கோயில் அமைப்பு தருமபுர ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இவ்வாலயம் கிழக்கு நோக்கிய மூன்று நிலை இராசகோபுரத்துடன் அமைப்பில் காணப்படுகிறது . அமைந்துள்ளது . உள்மண்டபம் வெளவால் நெற்றி மண்டப இந்தக் கோயில் கிழக்கு நோக்கிய மூன்று நிலை இராசகோபுரத்துடன் அமைந்துள்ளது . உள் மண்டபம் வௌவால் நெற்றி மண்டப அமைப்பில் அமைந்திருக்கிறது . மூலவர் குற்றம்பொறுத்த நாதர் சுயம்பு மூர்த்தியாகக் கிழக்கு நோக்கியும் தாயார் கோல்வளை நாயகி தெற்கு நோக்கியும் பத்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர் . கருவறை சுற்றுப் பிராகாரத்தில் விநாயகர் இலிங்கோற்பவர் மலைமகள் மற்றும் நான்முகன் ஆகியோர் காணப்படுகின்றனர் . குற்றம் பொறுத்தநாதர் வெளிப் பிராகாரத்தில் சீர்காழியில் இருப்பதுபோல உயர்ந்த தனிக்கோயிலாக சட்டைநாதர் திருமுன் உள்ளது . மேலேறிச் சென்று தோணியப்பரைத் வணங்கி அதற்கும் மேலே சென்று சட்டைநாதரைத் வணங்க செங்குத்தான மரப்படிகளை ஏற வேண்டும் . தோணியப்பர் திருமுன்னை இத்தலத்தில் கர்ப்பஞானேசுவரர் உடனுறை கர்ப்பஞானபர மேசுவரி திருமுன் என்றழைக்கின்றனர் . கோயில் மரமான கொகுடிமுல்லை இலிங்கோற்பவருக்கு எதிரில் காணப்படுகிறது . விபரங்களை பெற்றுக்கொள்ள ஈசனைத் தேடிய தென்னாட்டுப் கோயில் செல்வதற்கான உதவி மற்றும் மேலதிக பயண கட்டுரை ஆசிரியரைத் தொடர்பு கொள்ளலாம் . சிவத்திரு.குமரேசன் இராஜசிம்மன் உதவிப் பேராசிரியர் SRM கலை மற்றும் அறிவியல் கல்லூரி 919003296221 - easanaithedi.in .