தென்னாடு ஆனித் திங்கள் இதழ் - 09

கெ Tactic 04 தென்னாடு செந்தமிழாகம சிவமடம், கொக்குவில், யாழ்ப்பாணம். www.thennadu.org சிவத்திரு. சிவ செந்தமிழாதன், தலைவர் - சைவ மாணவர் சபை, (பதிவு-HA/4/JA/343) 0715588737, aathan@thennadu.org தொண்டராய் தோன்றுவோம்! மண்ணில் நல்ல வண்ணம் வாழ்வதற்கு, தடையாய் இன்று எம்மை ஆட்கொள்ள ஆயிரம் புறவிசைகள் அருகிலேயே இருக்கின்றன! வளரும் புதிய தலைமுறையை, நன்னெறியில் நின்று விடுத்தும், அவர்கள் செயலாற்றலைத் தடுத்தும், கட்டிப்போடவும், அவர்கள் சிந்தனைகளுக்குள்ளே, விடத்தை விதைக்கவும், விரும்பத்தகாத சில மாற்றங்களை காலம் தன்னுள் வருவித்துக் கொண்டுள்ளது! உலகமே, தன்னை முடக்கிக்கொண்டு, கிடக்கும் இந்த காலத்தில், இணைய வெளியில் நடக்கும் அபத்தமான விடயங்களைக் கண்டும் காணாமலும் கடந்து விட முடியவில்லை! சமுகமுற்றடக்கத்தால், சமயம் வளரவில்லை, தமிழ் தளைக்கவில்லை, அரங்கங்கள் திறக்கவில்லை, விழாக்களும், பொது நிகழ்வுகளும் சிறக்கவில்லை என்று, வருந்தி இருந்தோர்க்கு வரமாய் வந்த, இணைய நிகழ்நிலை மேடைகளும், செயலிகளும், எந்த எதிர்பார்ப்புகளுக்கு வரமாய் வந்தனவோ, அவற்றுக்கே சாபமாகவும் முடிந்து விடும் என்பதை முன்னறிவிப்பு செய்வதில் தயக்கமில்லை! சில சமூக வலைத்தலங்களிலே, இணைய நிகழ்நிலை மேடைகளை இயக்க தெரிந்தவர்கள், அந்த ஒரே தகுதியை வைத்து கொண்டு, சமய அரங்கங்களையும், பட்டிமண்டபங்களையும். “செய்து காட்டுகின் றோம் பாருங்கள்...” என்று திடீரென முளைத்திருப்பது, இளைய தலைமுறைக்கு தவறான வழிகாட்டலை கொடுக்கிறது! வளர்ந்து வரும் புதிய ஆற்றலாளர்களும் அந்த வலையில் சிக்குண்டு கிடப்பதை எண்ணிக்கவலை மிகக்கொள்கிறோம்! புதிய முகங்களுக்கு வாய்ப்புக்கொடுக்கின்றோம், இணையம் அனைவருக்குமானது என்று தம்பட்டம் அடித்துக்கொண்டு, நம் சமயத்தினை எதிர் காலம் குறித்த கேள்விக்கு உள்ளாக்குகின்றனர். புதிய முகங்களுக்கு வாய்ப்பு கொடுப்பது வரவேற்கத்தக்கது. எனினும், அதற்கு முன்னர் பயிற்சி கொடுப்பது சாலச்சிறந்தது! அண்மையில் இணையப் பொதுவெளியில், இப்படி அரங்கேறிய, சிறுபிள்ளைத்தனமொன்றில், ஆண்டாளின் அன்பு சிறந்ததா? மணிவாசகரின் அன்பு சிறந்ததா? என்று ஒரு பட்டிமண்டபத்தை இளையவர்களை வைத்து போட்டியாக நிகழ்த்தி முடிந்திருந்தனர்! தலைப்பை கண்டவுடன், இவர்களை எண்ணி கவலை கொள்வதா?... இல்லையேல் கழிவிரக்கமடைவதா என்று தெரியாத மனநிலை விரிந்தது! அதன் பின்னர், இன்னுமொரு சமூகவலைத்தளப் பொது வெளியில், “சிறந்த தலைவராவதா உங்கள் கனவு....?" என்ற கேள்வியோடு இணைய வழி பயிற்சி மூலம் தலைவராகிவிடத்துடிப்போர்க்கு வாய்பளித்து சான்றிதழும் நல்கும் அபத்தத்தைக் கண்டு கலங்கினோம்! தொண்டிலும், உயர்ந்த இறை அன்பிலும், எது சிறந்தது என்று கேள்வி கேட்டு, அதை வாதாப் பொருளாக்கி, எதிர்காலத்து இளையவரை, தூ யமனத்தோடு தொண்டாற்றவிடாது தடுக்கும் செயலை என்னவென்று சொல்வது? எல்லா ஏற்றத்தாழ்வுகளைக் கடந்து, “ ஓடும் செம்பொன்னும் “ ஒன்றாக தெரியும் மனநிலை வாய்த்து தொண்டு செய்தால், இறையின்பம் பெறலாம் என்று வழிப்படுத்துவோர் முன்வராது போனால் இந்தப் பருவகால அபத்தம், விதைக்கும் விதைகளை நாளை அறுபடை செய்யும் போது கேடே விளைந்து கிடைக்கும்! தலைவர்களுள் யார் சிறந்தவர் என்று கேளுங்கள் தவறில்லை! ஆனால், தொண்டர்கள் எல்லோரும் சிறந்தவர்களே... போற்றி வணங்குங்கள் என்று, பெரியபுராணத்தை எமக்கு நல்கிய தெய்வச் சேக்கிழாரின் குருபூசையையும் அண்மையில் தான் கடந்து வந்தோம்! நாட்டின் தலைமைப் பொறுப்பில் இருந்து நீங்கி தொண்டர் தம் பெருமையை நாளைய தலைமுறை அறிந்து ஒழுக வேண்டும் என்று, அயராது பணிசெய்து தெய்வ நிலையடைந்த அவரின் சிந்தனைகள் அறியாது, இன்று அரங்கேறும் இத்தகு விடயங்களில் இருந்து, இளையவர்கள் தள்ளி இருப்பதே சிறந்தது! கடந்த மே மாதம் இருபத்தி எட்டாந் திகதி, கலாநிதி. செஞ்சொற்செல்வர். ஆறுதிருமுருகன் அவர்களின், மணிவிழாவை, இணைய நிகழ்நிலையூடாகவே ஆர்வலர்கள் கூடி நடத்தியிருந்தனர். நாட்டில் நிலவும் முற்றடக்கத்தை தாண்டி, உணர்வுபூர்வமான நிகழ்வாக பல நூற்றுக் கணக்கானவர்கள், இணைந்து இடர்காலத்திலும் அதனை ஒழுங்கமைத்தற்கு, அவர் ஆற்றிய தொண்டே காரணம் எனலாம்! தொண்டு செய்யாதவன், தலைமைப் பொறுப்பை ஏற்க தகுதியற்றவன் என்பதை உணர வேண்டும்! எதிர்மறையான புறவிசைகளைப் புறம் தள்ளி விரிந்த மனதோடு தொண்டராய் தோன்றுவோம்! 'ஆரம் கண்டிகை ஆடையும் கந்தையே பாரம் ஈசன் பணி அல்லது ஒன்று இலார் ஈர அன்பினர் யாதும் குறைவு இலார் வீரம் எண்ணல் விளம்பும் தகையதோ' திருச்சிற்றம்பலம் தென்னாடு ஆடவை நல்லோரை ஆனித் திங்கள், 2021 கிராமச் சிறார்களுக்கு சைவத்தினையும் தமிழினையும் விதைக்கும் கொக்குவில் ஸ்ரீ இராமகிருஷ்ண வித்தியாசாலை - “வாழக் கல்" திங்கள் ஒரு பள்ளி யா/கொக்குவில் ஸ்ரீ இராமகிருஷ்ண வித்தியாசாலை යා/කොකුවිට ශ්‍රී රාමකීර්ණ විද්‍යාලය J/KOKUVIL SRI RAMAKRISHNA VIDYASALAI "எண்ணிய எண்ணியாங் கெய்துவர் எண்ணியர் திண்ணியராகப் பெறின்" கொக்குவில் கிராமத்து ஏழைச் சிறார்களுக்கு கல்வி வசதியளித்து, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்பாடடையச் செய்யவேண்டும் என்ற பெரு நோக்கோடும், சைவமும் தமிழும் தழைத்தோங்கும் வகையிலும், பாடசாலை ஒன்றைக் கட்ட வேண்டும் என்ற, பேரார்வம் தபாலதிபர் சிவத்திரு. இராசையா தம்பித்துரை அவர்களிடம் இருந்தது. சதாகாலமும், பாடசாலையின் வளர்ச்சியைப் பற்றிய சிந்தனையுடன் செயற்பட்ட சிவத்திரு. இராசையா தம்பித்துரை அவர்கள், கொக்குவில் மக்களிடமிருந்தும் கொழும்பிலுள்ள நலன்விரும்பிகளிடமிருந்தும் பணம் திரட்டியதுடன், மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் பணம் திரட்டி, பாடசாலை அமைப்ப தற்கென 81/2 (எட்டரை) பரப்புக் காணியைக் கொள்வனவு செய்து, 84'× 25' அளவிலான கட்டிடம் அமைக்கப்பட்டது. மேலும் சிறுகச் சிறுகச் சேமித்து, பாடசாலையின் வளர்ச்சி இன்று, 02 ஏக்கர் 01 றூட் 3.36 பேச் நிலப்பரப்பைக் கொண்டதாக அமைந் துள்ளது. சுவாமி விபுலானந்தர் கிழக்கிலங்கையில் இராம கிருஷ்ண மிசன் சார்பில், பல பாடசாலைகளைக் கட்டிக் கொண்டிருந்த காலத்தில், கொழும்பு இராமகிருஷ்ண மிசன் பத்தராக விளங்கிய சிவத்திரு. இராசையா தம்பித் துரை அவர்கள், அப்பொழுது இராமகிருஷ்ண மிசனின் அறங்காவலராக இருந்த சுவாமி அசங்கானந்தர், சுவாமி நிசங்கானந்தர், சுவாமி கேதீஸ்வரானந்தர் ஆகியோரு டன் நெருங்கிய நட்புக் கொண்டிருந்தமையால், இங்கு தங்கிச் செல்வது வழக்கமாகும். சுவாமி அசங்கானந்தர், சுவாமி நிசங்கானந்தர், சுவாமி கேதீஸ்வரானந்தர், சுவாமி வீரேஸ்வரானந்த, சுவாமி சித்தானந்த, சுவாமி அபிநாசநந்த (கல்கத்தா), சுவாமி இரங்கானந்த, சுவாமி தென்ஜம்பவானந்தா, சுவாமி பவனந்தா(சிங்கப்பூர்) சுவாமி அவ்வாகநந்தா, சுவாமி ஆத்மகானந்தஜி, தவத்திரு குன்றக்குடி அடிகளார், சுவாமி ஜெகானந்தா, சுவாமி விரிபாக்சானந்த, சுவாமி கிருபானந்த வாரியார், எனப் பல தவசீலரின் புண்ணிய பாதக்கமலங்கள் பதித்து அருளாசி வழங்கிய புண்ணிய பாடசாலையாக, எமது பாடசாலை விளங்குகின்றது. இன்றும், முன்னர் சின்மயா மிசனின் வதிவிட ஆச்சாரியாராக வகித்து, தற்காலத்தில் சைவத்தைத் தழைத்தோங்கச் செய்யும் பணியில் முக்கிய இடம் கொள்ளும்,தவத்திரு. வேலன் சுவாமிகள், நல்லை ஆதீனக் குரு முதல்வர் தவத்திரு. சோமசுந்தர ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் ஆகியோரின் அருளாசி பெற்ற பாடசாலையாக எம் வித்தியாசாலை விளங்குகின்றது. மேலும் பைரவப் பெருமான் எமது வித்தியாசாலை வளாகத்தில் வீற்றிருந்து, எமக்கெல்லாம் அருளாசி வழங்கிக் கொண்டிருக்கின் றார். வருடந்தோறும் பைர வப் பெருமானுக்கு ஆசி ரிய சமூகத்தினால் தைப் பொங்கல் விழா நடாத்தப் படுவதுடன், சிவத்திரு. தம்பி கணேசன் அவர்களின் பங்களிப்பில் வருடாந்த பொங்கல் விழாவும் மேற் கொள்ளப்படுகின்றது. அத்துடன் பகவான் ஸ்ரீஇராமகிருஷ்ண பரம கம்சரின் நினைவு விழா வும், வித்திட்டவர், சிவத் திரு. இராசையா தம்பித் துரை அவர்களின் நினைவு தினமும் வருடாந்தம், அவரின் மைத்துனர் சிவத்திரு.சி.அருமைத்துரை அவர்களின் பங்களிப்பில் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. நிறுவுனர். சிவத்திரு. இராசையா தம்பிதுரை அவர்களின் உதவியுடன் சுவாமி விபுலானந்தரிடம் தொடர்ச்சியாக கோரிக்கை வைத்ததன் காரணமாக, சுவாமி விபுலானந்தர், சிவத்திரு. இராசையா தம்பித்துரை அவர்கள் அமைத்த பாடசாலையை இராமகிருஷ்ண மிசன் பாடசாலை யாக ஏற்றுக்கொண்டார். அந்த வகையில் யா/ கொக்குவில் ஸ்ரீ இராமகிருஷ்ண வித்தியாசாலை 1938ஆம் ஆண்டு மார்ச் மாதம் 7ஆம் திகதி, முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரால் திறந்து வைக்கப்பட்டு, 21-04-1938 இல் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாராலேயே முப்பது மாணவர்களுக்கு ஏடுதொடக்குதலும் செய்து வைக் கப்பட்டது. ஆரம்ப காலத்தில் துறவிகள் தங்கிச் செல்வதற்காக ஆச்சிரம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. சுவாமி விபுலானந்தர் யாழ்ப்பாணம் வரும்போதெல்லாம், பாடசாலைச் சூழலை இயற்கையுடன் ஒன்றித்து அமைக்க விரும்பிய சிவத்திரு. இராசையா தம்பித் துரை அவர்கள், பாடசாலைச் சூழலைச் சுற்றிலும் மகிழ மரம், வாகை மரம், சமணடலை, தேக்கு, கூழாம் மரம் ஆகிய பயன்தரு பெரு தருக்களை நாட்டி நீரூற்றி வளர்த்து வந்தார். இன்று அம்மரங்கள் வானளாவ வளர்ந்து காட்சியளிப்பதைக் காணலாம். பாடசாலை வளாகத்தில் நுழைவோர் அனைவரையும், இதமான தென்றல் காற்று வரவேற்று, உபசரிக்கும் பாங்கு மகத்தானது. எமது வித்தியாசாலையின் அமைதியானதும் வளமானதுமான சூழலில் மாணவர்களும் ஆசிரியர்களும் கல்விச் செயற்பாட்டில் மகிழ்வுடன் ஈடுபடுகின்றனர். (05ஆம் பக்கம் பார்க்க) இப்பகுதியில் உங்கள் பாடசாலையின் வரலாறு இடம்பெறவேண்டுமாயின் இரண்டு பக்கங்களுக்கு மேற்படாமல் எழுதி எமக்கு அனுப்பி வையுங்கள். தென்னாடு செந்தமிழாகம சிவமடம் குளங்கரை வீதி, கொக்குவில் கிழக்கு, கொக்குவில், யாழ்ப்பாணம். மின்னஞ்சல் : thennavan@thennadu.org
கெ Tactic 04 தென்னாடு செந்தமிழாகம சிவமடம் கொக்குவில் யாழ்ப்பாணம் . www.thennadu.org சிவத்திரு . சிவ செந்தமிழாதன் தலைவர் - சைவ மாணவர் சபை ( பதிவு- HA / 4 / JA / 343 ) 0715588737 aathan@thennadu.org தொண்டராய் தோன்றுவோம் ! மண்ணில் நல்ல வண்ணம் வாழ்வதற்கு தடையாய் இன்று எம்மை ஆட்கொள்ள ஆயிரம் புறவிசைகள் அருகிலேயே இருக்கின்றன ! வளரும் புதிய தலைமுறையை நன்னெறியில் நின்று விடுத்தும் அவர்கள் செயலாற்றலைத் தடுத்தும் கட்டிப்போடவும் அவர்கள் சிந்தனைகளுக்குள்ளே விடத்தை விதைக்கவும் விரும்பத்தகாத சில மாற்றங்களை காலம் தன்னுள் வருவித்துக் கொண்டுள்ளது ! உலகமே தன்னை முடக்கிக்கொண்டு கிடக்கும் இந்த காலத்தில் இணைய வெளியில் நடக்கும் அபத்தமான விடயங்களைக் கண்டும் காணாமலும் கடந்து விட முடியவில்லை ! சமுகமுற்றடக்கத்தால் சமயம் வளரவில்லை தமிழ் தளைக்கவில்லை அரங்கங்கள் திறக்கவில்லை விழாக்களும் பொது நிகழ்வுகளும் சிறக்கவில்லை என்று வருந்தி இருந்தோர்க்கு வரமாய் வந்த இணைய நிகழ்நிலை மேடைகளும் செயலிகளும் எந்த எதிர்பார்ப்புகளுக்கு வரமாய் வந்தனவோ அவற்றுக்கே சாபமாகவும் முடிந்து விடும் என்பதை முன்னறிவிப்பு செய்வதில் தயக்கமில்லை ! சில சமூக வலைத்தலங்களிலே இணைய நிகழ்நிலை மேடைகளை இயக்க தெரிந்தவர்கள் அந்த ஒரே தகுதியை வைத்து கொண்டு சமய அரங்கங்களையும் பட்டிமண்டபங்களையும் . செய்து காட்டுகின் றோம் பாருங்கள் ... என்று திடீரென முளைத்திருப்பது இளைய தலைமுறைக்கு தவறான வழிகாட்டலை கொடுக்கிறது ! வளர்ந்து வரும் புதிய ஆற்றலாளர்களும் அந்த வலையில் சிக்குண்டு கிடப்பதை எண்ணிக்கவலை மிகக்கொள்கிறோம் ! புதிய முகங்களுக்கு வாய்ப்புக்கொடுக்கின்றோம் இணையம் அனைவருக்குமானது என்று தம்பட்டம் அடித்துக்கொண்டு நம் சமயத்தினை எதிர் காலம் குறித்த கேள்விக்கு உள்ளாக்குகின்றனர் . புதிய முகங்களுக்கு வாய்ப்பு கொடுப்பது வரவேற்கத்தக்கது . எனினும் அதற்கு முன்னர் பயிற்சி கொடுப்பது சாலச்சிறந்தது ! அண்மையில் இணையப் பொதுவெளியில் இப்படி அரங்கேறிய சிறுபிள்ளைத்தனமொன்றில் ஆண்டாளின் அன்பு சிறந்ததா ? மணிவாசகரின் அன்பு சிறந்ததா ? என்று ஒரு பட்டிமண்டபத்தை இளையவர்களை வைத்து போட்டியாக நிகழ்த்தி முடிந்திருந்தனர் ! தலைப்பை கண்டவுடன் இவர்களை எண்ணி கவலை கொள்வதா ? ... இல்லையேல் கழிவிரக்கமடைவதா என்று தெரியாத மனநிலை விரிந்தது ! அதன் பின்னர் இன்னுமொரு சமூகவலைத்தளப் பொது வெளியில் சிறந்த தலைவராவதா உங்கள் கனவு .... ? என்ற கேள்வியோடு இணைய வழி பயிற்சி மூலம் தலைவராகிவிடத்துடிப்போர்க்கு வாய்பளித்து சான்றிதழும் நல்கும் அபத்தத்தைக் கண்டு கலங்கினோம் ! தொண்டிலும் உயர்ந்த இறை அன்பிலும் எது சிறந்தது என்று கேள்வி கேட்டு அதை வாதாப் பொருளாக்கி எதிர்காலத்து இளையவரை தூ யமனத்தோடு தொண்டாற்றவிடாது தடுக்கும் செயலை என்னவென்று சொல்வது ? எல்லா ஏற்றத்தாழ்வுகளைக் கடந்து ஓடும் செம்பொன்னும் ஒன்றாக தெரியும் மனநிலை வாய்த்து தொண்டு செய்தால் இறையின்பம் பெறலாம் என்று வழிப்படுத்துவோர் முன்வராது போனால் இந்தப் பருவகால அபத்தம் விதைக்கும் விதைகளை நாளை அறுபடை செய்யும் போது கேடே விளைந்து கிடைக்கும் ! தலைவர்களுள் யார் சிறந்தவர் என்று கேளுங்கள் தவறில்லை ! ஆனால் தொண்டர்கள் எல்லோரும் சிறந்தவர்களே ... போற்றி வணங்குங்கள் என்று பெரியபுராணத்தை எமக்கு நல்கிய தெய்வச் சேக்கிழாரின் குருபூசையையும் அண்மையில் தான் கடந்து வந்தோம் ! நாட்டின் தலைமைப் பொறுப்பில் இருந்து நீங்கி தொண்டர் தம் பெருமையை நாளைய தலைமுறை அறிந்து ஒழுக வேண்டும் என்று அயராது பணிசெய்து தெய்வ நிலையடைந்த அவரின் சிந்தனைகள் அறியாது இன்று அரங்கேறும் இத்தகு விடயங்களில் இருந்து இளையவர்கள் தள்ளி இருப்பதே சிறந்தது ! கடந்த மே மாதம் இருபத்தி எட்டாந் திகதி கலாநிதி . செஞ்சொற்செல்வர் . ஆறுதிருமுருகன் அவர்களின் மணிவிழாவை இணைய நிகழ்நிலையூடாகவே ஆர்வலர்கள் கூடி நடத்தியிருந்தனர் . நாட்டில் நிலவும் முற்றடக்கத்தை தாண்டி உணர்வுபூர்வமான நிகழ்வாக பல நூற்றுக் கணக்கானவர்கள் இணைந்து இடர்காலத்திலும் அதனை ஒழுங்கமைத்தற்கு அவர் ஆற்றிய தொண்டே காரணம் எனலாம் ! தொண்டு செய்யாதவன் தலைமைப் பொறுப்பை ஏற்க தகுதியற்றவன் என்பதை உணர வேண்டும் ! எதிர்மறையான புறவிசைகளைப் புறம் தள்ளி விரிந்த மனதோடு தொண்டராய் தோன்றுவோம் ! ' ஆரம் கண்டிகை ஆடையும் கந்தையே பாரம் ஈசன் பணி அல்லது ஒன்று இலார் ஈர அன்பினர் யாதும் குறைவு இலார் வீரம் எண்ணல் விளம்பும் தகையதோ ' திருச்சிற்றம்பலம் தென்னாடு ஆடவை நல்லோரை ஆனித் திங்கள் 2021 கிராமச் சிறார்களுக்கு சைவத்தினையும் தமிழினையும் விதைக்கும் கொக்குவில் ஸ்ரீ இராமகிருஷ்ண வித்தியாசாலை - வாழக் கல் திங்கள் ஒரு பள்ளி யா / கொக்குவில் ஸ்ரீ இராமகிருஷ்ண வித்தியாசாலை යා / කොකුවිට ශ්‍රී රාමකීර්ණ විද්‍යාලය J / KOKUVIL SRI RAMAKRISHNA VIDYASALAI எண்ணிய எண்ணியாங் கெய்துவர் எண்ணியர் திண்ணியராகப் பெறின் கொக்குவில் கிராமத்து ஏழைச் சிறார்களுக்கு கல்வி வசதியளித்து அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்பாடடையச் செய்யவேண்டும் என்ற பெரு நோக்கோடும் சைவமும் தமிழும் தழைத்தோங்கும் வகையிலும் பாடசாலை ஒன்றைக் கட்ட வேண்டும் என்ற பேரார்வம் தபாலதிபர் சிவத்திரு . இராசையா தம்பித்துரை அவர்களிடம் இருந்தது . சதாகாலமும் பாடசாலையின் வளர்ச்சியைப் பற்றிய சிந்தனையுடன் செயற்பட்ட சிவத்திரு . இராசையா தம்பித்துரை அவர்கள் கொக்குவில் மக்களிடமிருந்தும் கொழும்பிலுள்ள நலன்விரும்பிகளிடமிருந்தும் பணம் திரட்டியதுடன் மலேசியா சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் பணம் திரட்டி பாடசாலை அமைப்ப தற்கென 81/2 ( எட்டரை ) பரப்புக் காணியைக் கொள்வனவு செய்து 84 ' × 25 ' அளவிலான கட்டிடம் அமைக்கப்பட்டது . மேலும் சிறுகச் சிறுகச் சேமித்து பாடசாலையின் வளர்ச்சி இன்று 02 ஏக்கர் 01 றூட் 3.36 பேச் நிலப்பரப்பைக் கொண்டதாக அமைந் துள்ளது . சுவாமி விபுலானந்தர் கிழக்கிலங்கையில் இராம கிருஷ்ண மிசன் சார்பில் பல பாடசாலைகளைக் கட்டிக் கொண்டிருந்த காலத்தில் கொழும்பு இராமகிருஷ்ண மிசன் பத்தராக விளங்கிய சிவத்திரு . இராசையா தம்பித் துரை அவர்கள் அப்பொழுது இராமகிருஷ்ண மிசனின் அறங்காவலராக இருந்த சுவாமி அசங்கானந்தர் சுவாமி நிசங்கானந்தர் சுவாமி கேதீஸ்வரானந்தர் ஆகியோரு டன் நெருங்கிய நட்புக் கொண்டிருந்தமையால் இங்கு தங்கிச் செல்வது வழக்கமாகும் . சுவாமி அசங்கானந்தர் சுவாமி நிசங்கானந்தர் சுவாமி கேதீஸ்வரானந்தர் சுவாமி வீரேஸ்வரானந்த சுவாமி சித்தானந்த சுவாமி அபிநாசநந்த ( கல்கத்தா ) சுவாமி இரங்கானந்த சுவாமி தென்ஜம்பவானந்தா சுவாமி பவனந்தா ( சிங்கப்பூர் ) சுவாமி அவ்வாகநந்தா சுவாமி ஆத்மகானந்தஜி தவத்திரு குன்றக்குடி அடிகளார் சுவாமி ஜெகானந்தா சுவாமி விரிபாக்சானந்த சுவாமி கிருபானந்த வாரியார் எனப் பல தவசீலரின் புண்ணிய பாதக்கமலங்கள் பதித்து அருளாசி வழங்கிய புண்ணிய பாடசாலையாக எமது பாடசாலை விளங்குகின்றது . இன்றும் முன்னர் சின்மயா மிசனின் வதிவிட ஆச்சாரியாராக வகித்து தற்காலத்தில் சைவத்தைத் தழைத்தோங்கச் செய்யும் பணியில் முக்கிய இடம் கொள்ளும் தவத்திரு . வேலன் சுவாமிகள் நல்லை ஆதீனக் குரு முதல்வர் தவத்திரு . சோமசுந்தர ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் ஆகியோரின் அருளாசி பெற்ற பாடசாலையாக எம் வித்தியாசாலை விளங்குகின்றது . மேலும் பைரவப் பெருமான் எமது வித்தியாசாலை வளாகத்தில் வீற்றிருந்து எமக்கெல்லாம் அருளாசி வழங்கிக் கொண்டிருக்கின் றார் . வருடந்தோறும் பைர வப் பெருமானுக்கு ஆசி ரிய சமூகத்தினால் தைப் பொங்கல் விழா நடாத்தப் படுவதுடன் சிவத்திரு . தம்பி கணேசன் அவர்களின் பங்களிப்பில் வருடாந்த பொங்கல் விழாவும் மேற் கொள்ளப்படுகின்றது . அத்துடன் பகவான் ஸ்ரீஇராமகிருஷ்ண பரம கம்சரின் நினைவு விழா வும் வித்திட்டவர் சிவத் திரு . இராசையா தம்பித் துரை அவர்களின் நினைவு தினமும் வருடாந்தம் அவரின் மைத்துனர் சிவத்திரு.சி.அருமைத்துரை அவர்களின் பங்களிப்பில் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது . நிறுவுனர் . சிவத்திரு . இராசையா தம்பிதுரை அவர்களின் உதவியுடன் சுவாமி விபுலானந்தரிடம் தொடர்ச்சியாக கோரிக்கை வைத்ததன் காரணமாக சுவாமி விபுலானந்தர் சிவத்திரு . இராசையா தம்பித்துரை அவர்கள் அமைத்த பாடசாலையை இராமகிருஷ்ண மிசன் பாடசாலை யாக ஏற்றுக்கொண்டார் . அந்த வகையில் யா / கொக்குவில் ஸ்ரீ இராமகிருஷ்ண வித்தியாசாலை 1938 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 7 ஆம் திகதி முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரால் திறந்து வைக்கப்பட்டு 21-04-1938 இல் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாராலேயே முப்பது மாணவர்களுக்கு ஏடுதொடக்குதலும் செய்து வைக் கப்பட்டது . ஆரம்ப காலத்தில் துறவிகள் தங்கிச் செல்வதற்காக ஆச்சிரம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது . சுவாமி விபுலானந்தர் யாழ்ப்பாணம் வரும்போதெல்லாம் பாடசாலைச் சூழலை இயற்கையுடன் ஒன்றித்து அமைக்க விரும்பிய சிவத்திரு . இராசையா தம்பித் துரை அவர்கள் பாடசாலைச் சூழலைச் சுற்றிலும் மகிழ மரம் வாகை மரம் சமணடலை தேக்கு கூழாம் மரம் ஆகிய பயன்தரு பெரு தருக்களை நாட்டி நீரூற்றி வளர்த்து வந்தார் . இன்று அம்மரங்கள் வானளாவ வளர்ந்து காட்சியளிப்பதைக் காணலாம் . பாடசாலை வளாகத்தில் நுழைவோர் அனைவரையும் இதமான தென்றல் காற்று வரவேற்று உபசரிக்கும் பாங்கு மகத்தானது . எமது வித்தியாசாலையின் அமைதியானதும் வளமானதுமான சூழலில் மாணவர்களும் ஆசிரியர்களும் கல்விச் செயற்பாட்டில் மகிழ்வுடன் ஈடுபடுகின்றனர் . ( 05 ஆம் பக்கம் பார்க்க ) இப்பகுதியில் உங்கள் பாடசாலையின் வரலாறு இடம்பெறவேண்டுமாயின் இரண்டு பக்கங்களுக்கு மேற்படாமல் எழுதி எமக்கு அனுப்பி வையுங்கள் . தென்னாடு செந்தமிழாகம சிவமடம் குளங்கரை வீதி கொக்குவில் கிழக்கு கொக்குவில் யாழ்ப்பாணம் . மின்னஞ்சல் : thennavan@thennadu.org