தென்னாடு ஆனித் திங்கள் இதழ் - 09

தெ 06 (யோகர் சுவாமிகள் கடந்த மாத தொடர்ச்சி) ஒரு முறை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூ ரியில் சொற்பொழிவு ஆற்றுவதற்காக பல்கலைச் செல்வர் வைத்தியர். தெ.பொ. மீனாட்சி சுந்தரனார், வைத்தியர்.டி.எம். பி. மகாதேவன், நான் ஆகிய மூவரும் சென்றி ருந்தோம். அமைச்சர் நடேசன் அவர்கள் வீட்டில் தங்கி இருந்தோம் திரு. தெ.பொ. மீயும் நானும் சுவாமிகளிடம் செல்லும் வாய்ப்பை முன்னரே பெற்றிருந்தோம். திரு. மகாதேவ னுக்கு இது புதிய அனுபவம். நான்கு நாட்களும் சொற்பொழிவுகள் முடிந்தவுடன் சுவாமிகளிடம் சென்று ஒருமணி நேரம் தங்கி அவர்களின் அருள் பெற்றுத் திரும்புவது வழக்கம். முதல் மூன்று நாட்களிலும் பல திருவிளையாடல்களை சுவாமிகள் செய்தருளினார்கள். திரு. மகாதேவன் ஏதாவது பலகாரம் செய்து சுவாமிகளுக்கு அதை நிவேதனமாகப் படைத்து விட்டு அவர் உண்ட மிகுதியை நாங்கள் உண்ண வேண்டுமென்று விரும்பினார். அமைச்சர் நடேசனாரிடம் இதைச் சொல்ல அவர் சமையற்காரனை அழைத்து, “ஏழு அல்லது எட்டு மணிக்கு குளித்துச் சுத்தமாக இடியப்பமும் சொதியும் தயார் செய்து வை" என்று உத்தரவிட்டார். மகாதேவனிடம் திரும்பி, "உங்கள் ஆசைக்காக இதனைச் செய்யச் சொல்லி விட்டேன். சுவாமிகள் எதையும் வாயிற் போட்டு நானறியேன். இருந்தாலும் இப்பலகாரத்தை எடுத்துக் கொண்டு சென்று உங்கள் விருப்பத்தை விண்ணப்பம் செய்யுங்கள். சுவாமிகள் மறுத்துவிட்டால் அதற்காக வருந்தவேண்டாம்" என்று கூறினார் நடேசனார். திடீரென்று ஓர் அற்புதம் நிகழ்ந்தது. நான்கு மணிக்கு அமைச்சர் உட்பட நாங்கள் நால்வரும் கல்லூரிக்குப் புறப்படத் தயாராக இருந்தோம். சமையற்காரனுக்கு திடீரென்று காக்கைவலி வந்துவிட்டது. அவனை மருத்துவமனை அனுப்பிவிட்டு நாங்கள் சொற்பொழிவுக்குச் சென்று விட்டோம். எங்களுக்கே உணவில் லாத போது சுவாமிகளுக்கு நிவேதனம் கொண்டு செல்வதென்பது நடக்காமல் போய்விட்டது. எங்களுக்குக் கொடுத்துவைக்கவில்லை என்ற மனவருத்தத்துடன் பத்துமணியளவில் நாங்கள் மூவரும் சுவாமிகளிடம் சென்று வீழ்ந்து வணங்கிவிட்டு நின்றோம். திடீ ரென்று சுவாமிகள் "அடே மகாதேவா! யோகனுக் குச் சாப்பாடு போடவேண்டுமென்று நினைத்தாயல்லவா? கவலைப்படாதே என்று கூறிவிட்டு மூவரையும் அமருமாறு செய்தார்கள். திடீரென்று குடிசையில் ஒரு மூலையைச் சுட்டிக் காட்டி, "டேய் பொடியா! அங்கே இடியப்பமும் சொதியும் இருக்கிறது. நான்கு இலைகள் இருக்கின்றன எடுத்துப் போடு" என்றார்கள். சுவாமிகளுக்குப் படைக்கப்பட்ட இலையில் இருந்த இடியப்பத்தை நன்கு பிசைந்து கடுகளவு தம்முடைய திருவாயில் போட்டுக் கொண்டு எஞ்சியவற்றை உருண்டைகளாக உருட்டி எம்மூவர் இலைகளிலும் போட்டு உண்ணுமாறு பணித்தார்கள். இவை முடித்த பிறகு திடீரென்று, "டேய் மகாதேவா! நீ என்ன செய்யப் போகிறாய் நாளைக்கு?” என்றார்கள். அவர் தெ. பொ.மீயும், தானும் மறுநாள் காலை விமானத்தில் சென்னை செல்லப் போவதாகக் கூறினார்கள். நான் கொழும்பு செல்லப் போவதாகக் கூறினேன். சுவாமிகள் சிரித்துக் கொண்டே, "அடே பொடியா, இவர்கள் இருவரும் பறவை மாதிரி கைகளை இறக்கையாக பரப்பிக் கொண்டு பறக்கப் போகிறார்கள் தெரியுமா?" என்றார்கள். எங்கள் வயிற்றில் புளியைக் தென்னாடு கரைத்து விட்டது. இவர்களைப் போக வேண்டா மென்று சுவாமிகள் கூறுகின்றார்களா என்ற சந்தேகம். கையை விரித்துப் பறக்கவில்லையோ!" என்றார்கள். மகாதேவன் அவர்கள் கண்ணீர் ததும்ப விழுந்து வணங்கிவிட்டு, தான் அவசரப்பட்ட காரணம் கூறினார். அன்று சென்னை போயிருந்தால் நான் இரவுடில்லி சென்று விமானம் மூலம் கவாய்த் தீவில் உள்ள ஆனலுலுவுக்குச் செல்ல வேண்டும். மறுநாள் அங்கு நடைபெறப் போகும் அகில உலக வேதாந்த மகாநாட்டிற்கு நான் தலைமை வகிக்க வேண்டும். அதற்கு எல்லாம் கெட்டுவிட்டது” என்று வருந்தினார். அதைக் கேட்ட சுவாமிகள், "கவலைவேண்டாம். சுவாமிகளின் எதிரே வருகின்ற பெரியவர் கள் பிரதம மந்திரியிலிருந்து சாதாரண மனிதர் வரை யாரும் பேசுவதில்லை. தொடக்கத்தி லிருந்தே அவர்கள் எதிரே பேசும் உரிமையை எனக்கு வழங்கியிருந்தார்கள். நான் பேசாது இருந்தாற்கூட, "டேய் பொடியா! ஏன் சும்மா இருக்கிறாய்? ஏதாவது சொல்” என்றார்கள். அந்த உரிமையை வைத்துக் கொண்டு, "இப்பொழுது இவர்கள் பயணத்தை நிறுத்தி விடட்டுமா?" என்று கேட்டேன். சுவாமிகள் சிரித்துக் கொண்டு "அவர்கள் போவதை யோகன் ஏன் நிறுத்த வேண்டும். பறவை போலப் பறப்பார்கள்” என்று கூறினார்கள். சுவாமிகளை விட்டு வரும்போது நடுநிசி ஆகிவிட்டது. நடந்தவற்றைக் கூறியவுடன் அமைச்சர் நடேசனார், இவர்களைப் போகவேண்டாமென்று எவ்வளவோ கூறிப் பார்த்தார். இருவரும் கேட்பதாக இல்லை. வேறு வழியில்லாமல் மறுநாள் காலை ஏழேகால் மணிக்கு இவர்கள் இருவரையும் வழியனுப்ப அமைச்சரும் நானும் சென்றோம். இருவரும் விமானத்தில் ஏறி அமர்ந்து விட்டனர். ஓடு பாதையின் தொடக்கத்திற்குச் சென்ற விமானம் பல முறை விசிறிகளையும் சுழலவிட்டுக் கொண்டிருந்ததைக் காணமுடிந் தது. அது 'டக்கோட்டா’ விமானம். சிறிது நேரத்தில் ஒலிபெருக்கியில் பின்வருமாறு பேசப்பட்டது. "விமானம் பழுதடைந்து விட்டதால் இன்று சென்னை வாய்ப்பு இல்லை. நாளை இதே நேரத்திற்கு இதே பயணச்சீட்டுகளுடன் பயணிகள் வரலாம்" விமானத்தைக் கட்டி இழுத்துக் கொண்டு வந்தார்கள். தெ.பொ. மீயும், மகாதேவனும் கீழிறங்கி னார்கள். அமைச்சர் நடேசனுக்கு பெரிய ஆனந்தம், மகாதேவனுக்கு வருத்தம். வழக்கம்போல் அன்று மாலை சுவாமிகளைக் காணச் சென்றோம். சுவாமிகள் சிரித்துக் கொண்டே, "என்னடா மகாதேவா! இறக் ஈழத்து சித்தர்கள்: தவத்திரு யோகர் சுவாமிகள் பேச்சை இழந்த பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தர் அவர்களை மீண்டும் பேசவைத்த அற்புதம்| மகனே.இம் மகாநாட்டை பதினைந்து நாள் தள்ளிப் போட்டு விட்டார்கள். நீ அமைதி யாகச் சென்று தலைமை ஏற்று நடத்தலாம்" என்று கூறினார்கள். சுவாமிகளிடம் விடை பெற்று வந்து நடேசன் வீட்டில் தங்கியபோது மகாதேவன் கூறிய வார்த்தைகள் துயரத்தை எடுத்துக் காட்டின. "இந்த மாநாடுகள், ஒரு வருடத்திற்கு முன்பே அட்டவணை போட்டுத் தயாரிக் கப்பட்டவையாகும். உலகம் முழுவதிலிருந் தும் பலர் வருவார்கள். ஆகையால் இரண்டுநாள் முன்னர் அதை மாற்றுவது கொழும்புத்துறையில் COL சுவாமியின் குடில் ஆடவை நல்லோரை ஆனித் திங்கள், 2021 chord) எழுதிக்காட்டினேன். அவர் குறையை சோதனை செய்துவிட்டு இன்று மாலை உங்களுடன் ஒருவரை அனுப்புகிறேன். கொழும்பில் சென்று சில சோதனைகள் நடத்திய பிறகு மருத்துவம் செய்யலாம் என்று கூறினார். HEKAM இயலாத விடயம்” என்று கூறி வருந்தினார். மறுநாள் அவர்கள் இருவரும் சென்னை சென்றனர். நான் கொழும்பு சென்று பதினைந்து நாட்கள் தங்கிவிட்டு, சென்னை வந்து ஒருமாதம் கழிந்தபின் வைத்தியர் மகாதேவனைச் சந்தித்தேன். நாத்தழுதழுக்க, சுவாமிகள் அவர்கள் எவ்வளவு பெரிய சித்தர் என்பதை அனுபவித்து விட்டேன். அங்கே விமானம் தடைப்பட்ட நேரத்தில் சென்னை யில் என் வீட்டிற்கு ஒரு அதே தந்தி வந்திருந்தது. பதினைந்து நாட்கள் மகாநாடு பல்வேறு காரணங்களால் தள்ளிவைக்கப் பட்டதென்றும், பதினாறாவது நாள் விழாத் தொடங்குமென்றும் தந்தியில் அறிவித்து இருந்தார்கள். அப்படியே பதினாறாவதுநாள் தொடங்கிய விழாவில் தலைமையேற்று என்பணி முடித்து வந்துவிட்டேன்” என்று கூறினார்கள். யோகர் சுவாமிகள் என்ற சித்தரிடம் நாங்கள் அனுபவித்த இந்த நிகழ்ச்சி அவர் யாரென்பதை எடுத்துக்காட்ட உதவும். மேலே கூறிய இரண்டு நிகழ்ச்சிகளிலும் உடனிருந்து சுவாமிகளின் யோகசித்தியையும், பத்தர்களுக்கு அருளுகின்ற திறத்தையும் என்னால் காண முடிந்தது. இனி நான் சொல்லப்போகும் நிகழ்ச்சி எனக்கு நேரடியாக நேர்ந்த அனுபவமாகும். சுவாமிகள் இருக்கும் காலத்திலேயே இதுபற்றி எழுதவேண்டு மென்று ஈழகேசரி, தினகரன் போன்ற பத்திரிகைகள் வேண்டியும், மகானின் உத்தர வில்லாமல் அதைச் செய்ய முடியாதென்று கூறிவிட்டேன். இப்போது அதனை எழுதுவதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. முதலாவது அப்பெருமகனார் முத்தியடைந்து விட்டார். இரண்டாவது என்னுடைய வயதும் எண்பதைக் கடந்து விட்ட காரணத்தால், பின்னர் வரும் சமுதாயம் எத்தகைய அருளாளர்களை இந்தத் தமிழினம் பெற்றிருந்தது என்பதை அறிந்துகொள்ள ஒரு வாய்ப்பாக இருக்கும் ஆதலால் தான் இதனை விரிவாக எழுத முற்பட்டேன். 1955 வாக்கில் யாழ்ப்பாணத்தை அடுத்துள்ள கரணவாய் தெற்கு என்ற ஊரில் பத்துநாட்கள் தொடர்ந்து சொற்பொழிவு செய்வதாக ஒப்புக் கொண்டு சென்றேன். மலாய்நாட்டு ஓய்வூதியம் பெறும் முருகப்பு என்பவர் வீட்டில் தங்கியிருந்தேன். பகல் முழுவதும் வேலையில்லை ஆதலாலும், இரவு ஒரு மணிக்கு சொற்பொழிவு தொடங்குவதாலும் அன்பர்கள் சிலர் எனக்காக ஒரு காரைக் கொடுத்து பகலில் எங்குவேண்டுமானாலும் போய் வர ஏற்பாடு செய்தார்கள். முதல்நாள் சொற்பொழிவு முடிந்து வழக்கம் போல் சுவாமிகளிடம் சென்று வணங்கி வழிபட்டு இரவு மீண்டு விட்டேன். மறுநாள் பொழுது விடிந்தவுடன் பல்தேய்த்துக் கொண்டு நின்றேன். நண்பர் முருகப்பு வாலாயமாகக் கேட்கின்ற "நன்கு உறங்கினீர்களோ ஐயா” என்ற கேள்வியைக் கேட்டார். அவருக்கு பதில்கூறத் தொடங்கி னேன். ஆனால் வாயிலிருந்து ஒரு சொல்லும் வரவில்லை. காற்றுத்தான் வெளிவந்தது. எவ்வளவு முயன்றும் ஒரு எழுத்தைக்கூட உச்சரிக்க முடியவில்லை. அதிர்ந்துபோன நான் என்னசெய்வது என்றறியாமல் திகைத்தேன். ஒன்பது மணியளவில் காரை நானே ஓட்டிச்சென்று சாவகச்சேரியில் ஓய்வுபெற்றிருந்த தொண்டை, காது, மூக்குநோய் நிபுண வைத்தியரைக் காணச்சென்று என் குறையை அவரிடம் எழுதிக் காட்டினேன். அவரிடம் எழுதிக் காட்டும் பொழுது குரல் நாண் முடக்கம் என்பதை ஆங்கிலத்தில் (Paralysis of Vocal அவருடைய வாக்கை ஏற்றுக்கொண்டு மாலை கொழும்பு போவதற்குத் தயாராக காரில் ஏறி அமர்ந்தேன். கண்ணீர் மாலை மாலையாக வந்தது. காரணம் என் பிழைப்பே வாயின் மூலம்தான் நடைபெற்றது. கல்லூ ரிப் பேராசிரியர், தொடர்ந்து சொற்பொழிவு செய்பவர் என்ற இரண்டும் போய் விட்டனவே. என்னுடைய பெரிய குடும்பம் என்னாவது என்ற கவலை மனம் முழுவதையும் சூழ்ந்து கொண்டது. இந்த நிலையில் காரை ஆயத்தப்படுத்த சாவியைச் செருகிய நிலையில் அந்த மருத்துவ நிபுணர் வெளியே வந்து காரின் கதவைப் பிடித்துக் கொண்டு, "அ. ச. ஐயா! யோகருடைய சீடர்தானே தாங்கள். அவரைப் போய்ப் பாருங்களேன்” என்றார். அந்த விநாடிவரை சுவாமிகளின் நினைவே என்மனத்தில் தோன்றவில்லை. அவர் கூறியவுடன் சுவாமிகளிடம் செல்லப்புறப்பட்டேன். அக்காலத்தில் பகலில் யாரும் சுவாமிகளிடம் செல்வதில்லை, அவருடைய தியானம் முதலியவற்றிற்கு இடையூறாக யாரும் போவதில்லை. மாலை ஆறுமணிக்கு மேற்தான் செல்வார்கள். அனைவருக்கும் தெரிந்த இந்தச் செய்தி எனக்கும் தெரிந்திருந்தது. எனவே, ஒரு விநாடி சிந்தித்து உடனடியாக சுவாமிகளிடம் போவதே சரி என்ற முடிவிற்கு வந்தேன். நேரே வண்டியை ஓட்டிச் சென்று ஆச்சிரமத்தின் பக்கத்தில் நிறுத்திவிட்டு எதிரே உள்ள கேணியில் கைகால்களைச் சுத்தம் செய்து மகானின் குடிலுக்குள் நுழைந்தேன். அடக்கமுடியாத அழுகையும், கண்ணீரும் என்னை ஆட்கொண்டிருந்தன. விழுந்து வணங்கிய நான் எழுந்திருக்க விரும்பவில்லை. ஓரிரு நிமிடங்கள் கழித்து, "ஏண்டா பொடியா. அந்த மருத்துவர் என்ன முருகன் என்ற நினைப்பா? எதற்காக அவரிடம் போனாய்?" என்று திட்டியதோடல்லாமல் என்னுடைய அறியாமை பற்றியும் வெகுவாக ஏசினார்கள், கடைசியில் "பொடியா இங்கே உட்கார்" என்று நான் வழக்கமாக அமரும் இடத்தைக் காட்டினார்கள். அப்பொழுது இருந்த மனநிலையில் சுவாமிகள் பேசியது எதுவும் என் மனத்திற் படியவில்லை. ஏதேதோ பேசிவிட்டு அரைமணி கழித்து அவர்கள் சொல்லிய வார்த்தைகளை ஏறத்தாழ அப்படியே கீழே தந்துள்ளேன். ஒரு சில சொற்கள் முன்பின்னாக இருக்கலாம். இத்தனை ஆண்டுகள் கழித்தும் அச் சொற்களை மறக்கமுடியவில்லை. காரணம் என்னுடைய வாழ்க்கையில் ஒரு மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்திய சொற்களவை. "பொடியா! வழக்கம்போல் மாலையில் பிரசங்கம் செய்துவிட்டு இங்கே வா” என்று கூறிய சொற்கள் ஒருபெரிய அதிர்ச்சியைத் தந்தன. அப்படியானால் நான் பேசமுடியும் என்பதைச் சுவாமிகள் குறிப்பாக உணர்த்தி விட்டார்கள். எழுந்து விழுந்து வணங்கி விட்டு 'உத்தரவுப் படியே செய்கிறேன்' என்றேன். அந்த இரண்டு வார்த்தைகள்தான் அப்பொழுது புதிதாகப் பிறந்த என் வாயிலிருந்து வந்த முதலிரண்டு சொற்கள் ஆகும். என்னை மறந்து, அந்த பெருமானாரின் எதிரே நிற்கும்போது திடீரென்று சுவாமிகள் பின்வருமாறு கூறினார்கள். "பொடியா, சேக்கிழாரையும் கம்பனையும் நாங்கள்தானே வெட்டிப் புதைக்கணும். கவலையில்லாமல் போய் வா" என்றார்கள். இதன் பொருள் என்ன என்பதைப் பின்னர் விளக்குகிறேன். வெளியில் வந்து காரை ஓட்டிக் கொண்டு சுவாமிகளிடம் என்னைப் போகுமாறு பணித்த அந்த மருத்துவப் பெருந்தகையைக் காணச் சென்றேன். தெருவிலிருந்தபடியே “டாக்டர்...." என்று பெருங்குரலெடுத்துக் கூவினேன். அந்த முதியவர் வீட்டினிலிருந்து வெளியே வந்து நடுத்தெருவில் சாட்டாங்கமாக விழுந்து என்னை வணங்கினார். சற்றும் எதிர்பாராத இதனைக் கண்ட நான் பெரிதும் அதிர்ச்சியடைந்து. 'இவ்வளவு முதியவராகிய தாங்கள் என்னைக் கும்பிடலாமா? இது முறையன்று' என்று கூறினேன். என்னுடைய இரண்டு கைகளையும் பிடித்துக் கொண்ட அவர் உள்ளே அழைத்துச் சென்றார். அதே நேரம் அவரின் பணியாளர் இரண்டு விமான டிக்கட்டுகளைக் கொண்டு வந்து அவரிடம் தந்தார். ஏதோ அவருக்கு அந்த டிக்கட்டு என்று நினைத்தேன். (08ஆம் பக்கம் பார்க்க)
தெ 06 ( யோகர் சுவாமிகள் கடந்த மாத தொடர்ச்சி ) ஒரு முறை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூ ரியில் சொற்பொழிவு ஆற்றுவதற்காக பல்கலைச் செல்வர் வைத்தியர் . தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் வைத்தியர்.டி.எம் . பி . மகாதேவன் நான் ஆகிய மூவரும் சென்றி ருந்தோம் . அமைச்சர் நடேசன் அவர்கள் வீட்டில் தங்கி இருந்தோம் திரு . தெ.பொ. மீயும் நானும் சுவாமிகளிடம் செல்லும் வாய்ப்பை முன்னரே பெற்றிருந்தோம் . திரு . மகாதேவ னுக்கு இது புதிய அனுபவம் . நான்கு நாட்களும் சொற்பொழிவுகள் முடிந்தவுடன் சுவாமிகளிடம் சென்று ஒருமணி நேரம் தங்கி அவர்களின் அருள் பெற்றுத் திரும்புவது வழக்கம் . முதல் மூன்று நாட்களிலும் பல திருவிளையாடல்களை சுவாமிகள் செய்தருளினார்கள் . திரு . மகாதேவன் ஏதாவது பலகாரம் செய்து சுவாமிகளுக்கு அதை நிவேதனமாகப் படைத்து விட்டு அவர் உண்ட மிகுதியை நாங்கள் உண்ண வேண்டுமென்று விரும்பினார் . அமைச்சர் நடேசனாரிடம் இதைச் சொல்ல அவர் சமையற்காரனை அழைத்து ஏழு அல்லது எட்டு மணிக்கு குளித்துச் சுத்தமாக இடியப்பமும் சொதியும் தயார் செய்து வை என்று உத்தரவிட்டார் . மகாதேவனிடம் திரும்பி உங்கள் ஆசைக்காக இதனைச் செய்யச் சொல்லி விட்டேன் . சுவாமிகள் எதையும் வாயிற் போட்டு நானறியேன் . இருந்தாலும் இப்பலகாரத்தை எடுத்துக் கொண்டு சென்று உங்கள் விருப்பத்தை விண்ணப்பம் செய்யுங்கள் . சுவாமிகள் மறுத்துவிட்டால் அதற்காக வருந்தவேண்டாம் என்று கூறினார் நடேசனார் . திடீரென்று ஓர் அற்புதம் நிகழ்ந்தது . நான்கு மணிக்கு அமைச்சர் உட்பட நாங்கள் நால்வரும் கல்லூரிக்குப் புறப்படத் தயாராக இருந்தோம் . சமையற்காரனுக்கு திடீரென்று காக்கைவலி வந்துவிட்டது . அவனை மருத்துவமனை அனுப்பிவிட்டு நாங்கள் சொற்பொழிவுக்குச் சென்று விட்டோம் . எங்களுக்கே உணவில் லாத போது சுவாமிகளுக்கு நிவேதனம் கொண்டு செல்வதென்பது நடக்காமல் போய்விட்டது . எங்களுக்குக் கொடுத்துவைக்கவில்லை என்ற மனவருத்தத்துடன் பத்துமணியளவில் நாங்கள் மூவரும் சுவாமிகளிடம் சென்று வீழ்ந்து வணங்கிவிட்டு நின்றோம் . திடீ ரென்று சுவாமிகள் அடே மகாதேவா ! யோகனுக் குச் சாப்பாடு போடவேண்டுமென்று நினைத்தாயல்லவா ? கவலைப்படாதே என்று கூறிவிட்டு மூவரையும் அமருமாறு செய்தார்கள் . திடீரென்று குடிசையில் ஒரு மூலையைச் சுட்டிக் காட்டி டேய் பொடியா ! அங்கே இடியப்பமும் சொதியும் இருக்கிறது . நான்கு இலைகள் இருக்கின்றன எடுத்துப் போடு என்றார்கள் . சுவாமிகளுக்குப் படைக்கப்பட்ட இலையில் இருந்த இடியப்பத்தை நன்கு பிசைந்து கடுகளவு தம்முடைய திருவாயில் போட்டுக் கொண்டு எஞ்சியவற்றை உருண்டைகளாக உருட்டி எம்மூவர் இலைகளிலும் போட்டு உண்ணுமாறு பணித்தார்கள் . இவை முடித்த பிறகு திடீரென்று டேய் மகாதேவா ! நீ என்ன செய்யப் போகிறாய் நாளைக்கு ? என்றார்கள் . அவர் தெ . பொ.மீயும் தானும் மறுநாள் காலை விமானத்தில் சென்னை செல்லப் போவதாகக் கூறினார்கள் . நான் கொழும்பு செல்லப் போவதாகக் கூறினேன் . சுவாமிகள் சிரித்துக் கொண்டே அடே பொடியா இவர்கள் இருவரும் பறவை மாதிரி கைகளை இறக்கையாக பரப்பிக் கொண்டு பறக்கப் போகிறார்கள் தெரியுமா ? என்றார்கள் . எங்கள் வயிற்றில் புளியைக் தென்னாடு கரைத்து விட்டது . இவர்களைப் போக வேண்டா மென்று சுவாமிகள் கூறுகின்றார்களா என்ற சந்தேகம் . கையை விரித்துப் பறக்கவில்லையோ ! என்றார்கள் . மகாதேவன் அவர்கள் கண்ணீர் ததும்ப விழுந்து வணங்கிவிட்டு தான் அவசரப்பட்ட காரணம் கூறினார் . அன்று சென்னை போயிருந்தால் நான் இரவுடில்லி சென்று விமானம் மூலம் கவாய்த் தீவில் உள்ள ஆனலுலுவுக்குச் செல்ல வேண்டும் . மறுநாள் அங்கு நடைபெறப் போகும் அகில உலக வேதாந்த மகாநாட்டிற்கு நான் தலைமை வகிக்க வேண்டும் . அதற்கு எல்லாம் கெட்டுவிட்டது என்று வருந்தினார் . அதைக் கேட்ட சுவாமிகள் கவலைவேண்டாம் . சுவாமிகளின் எதிரே வருகின்ற பெரியவர் கள் பிரதம மந்திரியிலிருந்து சாதாரண மனிதர் வரை யாரும் பேசுவதில்லை . தொடக்கத்தி லிருந்தே அவர்கள் எதிரே பேசும் உரிமையை எனக்கு வழங்கியிருந்தார்கள் . நான் பேசாது இருந்தாற்கூட டேய் பொடியா ! ஏன் சும்மா இருக்கிறாய் ? ஏதாவது சொல் என்றார்கள் . அந்த உரிமையை வைத்துக் கொண்டு இப்பொழுது இவர்கள் பயணத்தை நிறுத்தி விடட்டுமா ? என்று கேட்டேன் . சுவாமிகள் சிரித்துக் கொண்டு அவர்கள் போவதை யோகன் ஏன் நிறுத்த வேண்டும் . பறவை போலப் பறப்பார்கள் என்று கூறினார்கள் . சுவாமிகளை விட்டு வரும்போது நடுநிசி ஆகிவிட்டது . நடந்தவற்றைக் கூறியவுடன் அமைச்சர் நடேசனார் இவர்களைப் போகவேண்டாமென்று எவ்வளவோ கூறிப் பார்த்தார் . இருவரும் கேட்பதாக இல்லை . வேறு வழியில்லாமல் மறுநாள் காலை ஏழேகால் மணிக்கு இவர்கள் இருவரையும் வழியனுப்ப அமைச்சரும் நானும் சென்றோம் . இருவரும் விமானத்தில் ஏறி அமர்ந்து விட்டனர் . ஓடு பாதையின் தொடக்கத்திற்குச் சென்ற விமானம் பல முறை விசிறிகளையும் சுழலவிட்டுக் கொண்டிருந்ததைக் காணமுடிந் தது . அது ' டக்கோட்டா விமானம் . சிறிது நேரத்தில் ஒலிபெருக்கியில் பின்வருமாறு பேசப்பட்டது . விமானம் பழுதடைந்து விட்டதால் இன்று சென்னை வாய்ப்பு இல்லை . நாளை இதே நேரத்திற்கு இதே பயணச்சீட்டுகளுடன் பயணிகள் வரலாம் விமானத்தைக் கட்டி இழுத்துக் கொண்டு வந்தார்கள் . தெ.பொ. மீயும் மகாதேவனும் கீழிறங்கி னார்கள் . அமைச்சர் நடேசனுக்கு பெரிய ஆனந்தம் மகாதேவனுக்கு வருத்தம் . வழக்கம்போல் அன்று மாலை சுவாமிகளைக் காணச் சென்றோம் . சுவாமிகள் சிரித்துக் கொண்டே என்னடா மகாதேவா ! இறக் ஈழத்து சித்தர்கள் : தவத்திரு யோகர் சுவாமிகள் பேச்சை இழந்த பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தர் அவர்களை மீண்டும் பேசவைத்த அற்புதம் | மகனே.இம் மகாநாட்டை பதினைந்து நாள் தள்ளிப் போட்டு விட்டார்கள் . நீ அமைதி யாகச் சென்று தலைமை ஏற்று நடத்தலாம் என்று கூறினார்கள் . சுவாமிகளிடம் விடை பெற்று வந்து நடேசன் வீட்டில் தங்கியபோது மகாதேவன் கூறிய வார்த்தைகள் துயரத்தை எடுத்துக் காட்டின . இந்த மாநாடுகள் ஒரு வருடத்திற்கு முன்பே அட்டவணை போட்டுத் தயாரிக் கப்பட்டவையாகும் . உலகம் முழுவதிலிருந் தும் பலர் வருவார்கள் . ஆகையால் இரண்டுநாள் முன்னர் அதை மாற்றுவது கொழும்புத்துறையில் COL சுவாமியின் குடில் ஆடவை நல்லோரை ஆனித் திங்கள் 2021 chord ) எழுதிக்காட்டினேன் . அவர் குறையை சோதனை செய்துவிட்டு இன்று மாலை உங்களுடன் ஒருவரை அனுப்புகிறேன் . கொழும்பில் சென்று சில சோதனைகள் நடத்திய பிறகு மருத்துவம் செய்யலாம் என்று கூறினார் . HEKAM இயலாத விடயம் என்று கூறி வருந்தினார் . மறுநாள் அவர்கள் இருவரும் சென்னை சென்றனர் . நான் கொழும்பு சென்று பதினைந்து நாட்கள் தங்கிவிட்டு சென்னை வந்து ஒருமாதம் கழிந்தபின் வைத்தியர் மகாதேவனைச் சந்தித்தேன் . நாத்தழுதழுக்க சுவாமிகள் அவர்கள் எவ்வளவு பெரிய சித்தர் என்பதை அனுபவித்து விட்டேன் . அங்கே விமானம் தடைப்பட்ட நேரத்தில் சென்னை யில் என் வீட்டிற்கு ஒரு அதே தந்தி வந்திருந்தது . பதினைந்து நாட்கள் மகாநாடு பல்வேறு காரணங்களால் தள்ளிவைக்கப் பட்டதென்றும் பதினாறாவது நாள் விழாத் தொடங்குமென்றும் தந்தியில் அறிவித்து இருந்தார்கள் . அப்படியே பதினாறாவதுநாள் தொடங்கிய விழாவில் தலைமையேற்று என்பணி முடித்து வந்துவிட்டேன் என்று கூறினார்கள் . யோகர் சுவாமிகள் என்ற சித்தரிடம் நாங்கள் அனுபவித்த இந்த நிகழ்ச்சி அவர் யாரென்பதை எடுத்துக்காட்ட உதவும் . மேலே கூறிய இரண்டு நிகழ்ச்சிகளிலும் உடனிருந்து சுவாமிகளின் யோகசித்தியையும் பத்தர்களுக்கு அருளுகின்ற திறத்தையும் என்னால் காண முடிந்தது . இனி நான் சொல்லப்போகும் நிகழ்ச்சி எனக்கு நேரடியாக நேர்ந்த அனுபவமாகும் . சுவாமிகள் இருக்கும் காலத்திலேயே இதுபற்றி எழுதவேண்டு மென்று ஈழகேசரி தினகரன் போன்ற பத்திரிகைகள் வேண்டியும் மகானின் உத்தர வில்லாமல் அதைச் செய்ய முடியாதென்று கூறிவிட்டேன் . இப்போது அதனை எழுதுவதற்கு இரண்டு காரணங்கள் உண்டு . முதலாவது அப்பெருமகனார் முத்தியடைந்து விட்டார் . இரண்டாவது என்னுடைய வயதும் எண்பதைக் கடந்து விட்ட காரணத்தால் பின்னர் வரும் சமுதாயம் எத்தகைய அருளாளர்களை இந்தத் தமிழினம் பெற்றிருந்தது என்பதை அறிந்துகொள்ள ஒரு வாய்ப்பாக இருக்கும் ஆதலால் தான் இதனை விரிவாக எழுத முற்பட்டேன் . 1955 வாக்கில் யாழ்ப்பாணத்தை அடுத்துள்ள கரணவாய் தெற்கு என்ற ஊரில் பத்துநாட்கள் தொடர்ந்து சொற்பொழிவு செய்வதாக ஒப்புக் கொண்டு சென்றேன் . மலாய்நாட்டு ஓய்வூதியம் பெறும் முருகப்பு என்பவர் வீட்டில் தங்கியிருந்தேன் . பகல் முழுவதும் வேலையில்லை ஆதலாலும் இரவு ஒரு மணிக்கு சொற்பொழிவு தொடங்குவதாலும் அன்பர்கள் சிலர் எனக்காக ஒரு காரைக் கொடுத்து பகலில் எங்குவேண்டுமானாலும் போய் வர ஏற்பாடு செய்தார்கள் . முதல்நாள் சொற்பொழிவு முடிந்து வழக்கம் போல் சுவாமிகளிடம் சென்று வணங்கி வழிபட்டு இரவு மீண்டு விட்டேன் . மறுநாள் பொழுது விடிந்தவுடன் பல்தேய்த்துக் கொண்டு நின்றேன் . நண்பர் முருகப்பு வாலாயமாகக் கேட்கின்ற நன்கு உறங்கினீர்களோ ஐயா என்ற கேள்வியைக் கேட்டார் . அவருக்கு பதில்கூறத் தொடங்கி னேன் . ஆனால் வாயிலிருந்து ஒரு சொல்லும் வரவில்லை . காற்றுத்தான் வெளிவந்தது . எவ்வளவு முயன்றும் ஒரு எழுத்தைக்கூட உச்சரிக்க முடியவில்லை . அதிர்ந்துபோன நான் என்னசெய்வது என்றறியாமல் திகைத்தேன் . ஒன்பது மணியளவில் காரை நானே ஓட்டிச்சென்று சாவகச்சேரியில் ஓய்வுபெற்றிருந்த தொண்டை காது மூக்குநோய் நிபுண வைத்தியரைக் காணச்சென்று என் குறையை அவரிடம் எழுதிக் காட்டினேன் . அவரிடம் எழுதிக் காட்டும் பொழுது குரல் நாண் முடக்கம் என்பதை ஆங்கிலத்தில் ( Paralysis of Vocal அவருடைய வாக்கை ஏற்றுக்கொண்டு மாலை கொழும்பு போவதற்குத் தயாராக காரில் ஏறி அமர்ந்தேன் . கண்ணீர் மாலை மாலையாக வந்தது . காரணம் என் பிழைப்பே வாயின் மூலம்தான் நடைபெற்றது . கல்லூ ரிப் பேராசிரியர் தொடர்ந்து சொற்பொழிவு செய்பவர் என்ற இரண்டும் போய் விட்டனவே . என்னுடைய பெரிய குடும்பம் என்னாவது என்ற கவலை மனம் முழுவதையும் சூழ்ந்து கொண்டது . இந்த நிலையில் காரை ஆயத்தப்படுத்த சாவியைச் செருகிய நிலையில் அந்த மருத்துவ நிபுணர் வெளியே வந்து காரின் கதவைப் பிடித்துக் கொண்டு . . ஐயா ! யோகருடைய சீடர்தானே தாங்கள் . அவரைப் போய்ப் பாருங்களேன் என்றார் . அந்த விநாடிவரை சுவாமிகளின் நினைவே என்மனத்தில் தோன்றவில்லை . அவர் கூறியவுடன் சுவாமிகளிடம் செல்லப்புறப்பட்டேன் . அக்காலத்தில் பகலில் யாரும் சுவாமிகளிடம் செல்வதில்லை அவருடைய தியானம் முதலியவற்றிற்கு இடையூறாக யாரும் போவதில்லை . மாலை ஆறுமணிக்கு மேற்தான் செல்வார்கள் . அனைவருக்கும் தெரிந்த இந்தச் செய்தி எனக்கும் தெரிந்திருந்தது . எனவே ஒரு விநாடி சிந்தித்து உடனடியாக சுவாமிகளிடம் போவதே சரி என்ற முடிவிற்கு வந்தேன் . நேரே வண்டியை ஓட்டிச் சென்று ஆச்சிரமத்தின் பக்கத்தில் நிறுத்திவிட்டு எதிரே உள்ள கேணியில் கைகால்களைச் சுத்தம் செய்து மகானின் குடிலுக்குள் நுழைந்தேன் . அடக்கமுடியாத அழுகையும் கண்ணீரும் என்னை ஆட்கொண்டிருந்தன . விழுந்து வணங்கிய நான் எழுந்திருக்க விரும்பவில்லை . ஓரிரு நிமிடங்கள் கழித்து ஏண்டா பொடியா . அந்த மருத்துவர் என்ன முருகன் என்ற நினைப்பா ? எதற்காக அவரிடம் போனாய் ? என்று திட்டியதோடல்லாமல் என்னுடைய அறியாமை பற்றியும் வெகுவாக ஏசினார்கள் கடைசியில் பொடியா இங்கே உட்கார் என்று நான் வழக்கமாக அமரும் இடத்தைக் காட்டினார்கள் . அப்பொழுது இருந்த மனநிலையில் சுவாமிகள் பேசியது எதுவும் என் மனத்திற் படியவில்லை . ஏதேதோ பேசிவிட்டு அரைமணி கழித்து அவர்கள் சொல்லிய வார்த்தைகளை ஏறத்தாழ அப்படியே கீழே தந்துள்ளேன் . ஒரு சில சொற்கள் முன்பின்னாக இருக்கலாம் . இத்தனை ஆண்டுகள் கழித்தும் அச் சொற்களை மறக்கமுடியவில்லை . காரணம் என்னுடைய வாழ்க்கையில் ஒரு மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்திய சொற்களவை . பொடியா ! வழக்கம்போல் மாலையில் பிரசங்கம் செய்துவிட்டு இங்கே வா என்று கூறிய சொற்கள் ஒருபெரிய அதிர்ச்சியைத் தந்தன . அப்படியானால் நான் பேசமுடியும் என்பதைச் சுவாமிகள் குறிப்பாக உணர்த்தி விட்டார்கள் . எழுந்து விழுந்து வணங்கி விட்டு ' உத்தரவுப் படியே செய்கிறேன் ' என்றேன் . அந்த இரண்டு வார்த்தைகள்தான் அப்பொழுது புதிதாகப் பிறந்த என் வாயிலிருந்து வந்த முதலிரண்டு சொற்கள் ஆகும் . என்னை மறந்து அந்த பெருமானாரின் எதிரே நிற்கும்போது திடீரென்று சுவாமிகள் பின்வருமாறு கூறினார்கள் . பொடியா சேக்கிழாரையும் கம்பனையும் நாங்கள்தானே வெட்டிப் புதைக்கணும் . கவலையில்லாமல் போய் வா என்றார்கள் . இதன் பொருள் என்ன என்பதைப் பின்னர் விளக்குகிறேன் . வெளியில் வந்து காரை ஓட்டிக் கொண்டு சுவாமிகளிடம் என்னைப் போகுமாறு பணித்த அந்த மருத்துவப் பெருந்தகையைக் காணச் சென்றேன் . தெருவிலிருந்தபடியே டாக்டர் .... என்று பெருங்குரலெடுத்துக் கூவினேன் . அந்த முதியவர் வீட்டினிலிருந்து வெளியே வந்து நடுத்தெருவில் சாட்டாங்கமாக விழுந்து என்னை வணங்கினார் . சற்றும் எதிர்பாராத இதனைக் கண்ட நான் பெரிதும் அதிர்ச்சியடைந்து . ' இவ்வளவு முதியவராகிய தாங்கள் என்னைக் கும்பிடலாமா ? இது முறையன்று ' என்று கூறினேன் . என்னுடைய இரண்டு கைகளையும் பிடித்துக் கொண்ட அவர் உள்ளே அழைத்துச் சென்றார் . அதே நேரம் அவரின் பணியாளர் இரண்டு விமான டிக்கட்டுகளைக் கொண்டு வந்து அவரிடம் தந்தார் . ஏதோ அவருக்கு அந்த டிக்கட்டு என்று நினைத்தேன் . ( 08 ஆம் பக்கம் பார்க்க )