தென்னாடு ஆனித் திங்கள் இதழ் - 09

ஆடவை நல்லோரை ஆனித் திங்கள், 2021 காடவர் கோமான் கட்டிய கைலாசநாதர் கோயில் உலகின் இறைவன் இல்லாத இடமே இல்லை. அவனே நீக்கமற நிலையாக இருந்து உலகை இயக்கிக் கொண்டிருக்கிறான். அவனின் அருளாற்றலாம், நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உயிர்கள் மலத் தொடர்புகளிலிருந்து நீங்கி, ஈடேற்றம் அடைவதற்காக, இறை அருளை வாரிப்பொழிகிறது. நமக்காக ஒரு உலகை உருவாக்கி, அதில் அவனும் நம்முடனே தோன்றாத் துணையாக இருந்து, வழி நடத்துகிறான். அப்படிப்பட்ட பரம்பொருளை பல்வேறு விதமாக நாம் வணங்கிக் கொண்ருக்கிறோம். குறிப்பாக இறைவனுக்கென்றுத் தனியாக கோயில் அமைத்து, அங்கு சென்று வழிபாடு செய்கின்றோம். "கோயிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்பது முதுமொழி. எனவே கோயிலேன்பது வெறுமனவே பத்திச் செய்வதற்கான இடம் என்பதை தாண்டி கலைகளை வளர்க்கும் இடமாகவும் இருக்கிறது. சிவத்திரு. பா.சிவமாதவன் புதுக்கோட்டை கோயிலை அமைப்பதற்கு பல்வேறு சாத்திர விதிகள் இருக்கின்றன. ஆகம அடிப்படையில் கோயில்களை தமிழர்கள் கட்டியெழுப்பியிருக்கின்றனர். சாதாரணமாக ஒரு சிறிய கோயிலாக அமைப்பதற்கே, நிறைய செலவுகளும் ஆகிறது, பணியாட்களும் தேவைப்படுகிறார்கள். ஆனால் ஒரே ஆளாக ஒருவர், ஒரு கோயிலும் கட்டியிருக்கிறார். அந்த கோயிலுக்கு வருவதற்காக இறைவன் வேறொரு கோயில் குடமுழுக்ககை தள்ளி வைக்கச் சொல்கிறார். இறைவனே விரும்புகிறான் என்றால், அது எப்பேற்பட்ட கோயிலாக இருக்க வேண்டும். அந்த கோயில் எங்குள்ளது, அதை கட்டியெழுப்பியவர், யார்? என்பதை அறிய நமக்கு சேக்கிழார் பெருமான் உதவி செய்கிறார். இந்த அரும்பணியை செய்தவர் ‘பூசலார்’ எனும் அடியவர் ஆவார். அவரைப் பற்றி தெய்வச் சேக்கிழார் பெருமான் பின்வருமாறு குறிப்பிடுகிறார். "அடுப்பது சிவன்பாலன் பர்க் கம்பணி செய்தலன்றே கொடுப்பதெவ் வகையுந்தேடி யவர்கொளக் கொடுத்துக் கங்கை மடுப்பொதி வேணியையர் மகிழ்ந்துறை வதற்கோர் கோயில் எடுப்பது மனத்துட் கொண்டா ரிருநிதி யின்மை யெண்ணார்." (பெரியபுராணம்: 4174) அதாவது, சிவன்பால் அன்பு பூண்டவர்களுக்கு எவ்வகையாலும் தேடிக்கொடுப்பார். அடியார்க்கு, ஒரு ஆசை,சிவபெருமானுக்கு அற்புதமான கோயில் அமைக்க எண்ணினார். ஆனால் அவரிடம் அதற்கான நிதி இல்லை. அடியார், எங்கெல்லாம் பொருள் கிடைக்கும் என்று - தென்னாடு அடியார் பெருமையின் ஆவண ஊற்று பெரியபுராணம் மறவாமையால் அமைத்த மனக்கோயில் பூசலார் நாயனார் தேடுகிறார். ஆனால் எதுவும் கிடைக்கவில்லை, வருந்துகிறார். உடனே அவர் மனக்கோயில் கட்ட தீர்மானிக்கிறார். புறச்செல்வம் அவருக்கு புறமாக சென்றது. அகச்செல்வம் அடியாரின் அகத்தே நிறைந்தது, என்கிறார். ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துச் செய்கிறார். அடிமுதல் உபான மாதி யாகிய படைக ளெல்லாம் வடிவுறுந் தொழில்கள் முற்ற மனத்தினால் வகுத்து மான முடிவுறு சிகரந் தானும் முன்னிய முழத்திற் கொண்டு நெடிதுநாள் கூடக் கோயில் நிரம்பிட நினைவால் செய்தார் - (பெரியபுராணம்) (தெ அடியார், கோயில் கட்ட ஆகின்ற காலமளவும், மனதிற்குள்ளாகவே ஆலயத்தை முழுவதும் செய்து முடித்து, குடமுழுக்கிற்கான நாளையும் குறிக்கிறார். அதே நாளில் காடவர் கோமானாகிய பல்லவ அரசன், சிவனுக்கு அழகான கற்றளி அமைத்து குடமுழுக்கு நடத்த ஏற்பாடு செய்கிறார். இறைவன், அதற்கு முன்னாள் இரவு மன்னனின் கனவில் பின்வருமாறு கூறுகிறார். இது எப்படி சாத்தியம் என்றால், "நின்றாலும் இருந்தாலும் கிடந்தாலும் நடந்தாலும் மென்றாலும் துயின்றாலும் விழித்தாலும் இமைத்தாலும் மன்நாடும் மலர்ப்பாதம் ஒருகாலும் மறவாமை குன்றாத உணர்வுடையார் தொண்டராம் குணம்மிக்கார்." (பெரியபுராணம்: 4153) 09 "நின்றவூர்ப் பூசல் அன்பால் நெடிதுநாள் நினைந்து செய்த நன்றுநீடு ஆலயத்து நாளைநாம் புகுவோம் நீயிநுகு ஒன்றிய செயலை நாளை யொழிந்துபின் கொள்வா யென்று கொன்றைவார் சடையார் தொண்டர் கோயில்கொண்டருளப் போந்தார்.” (பெரியபுராணம்:4180) இறைவன் இல்லாத இடமென்பது கிடையாது. ஒரே நேரத்தில் பல இடங்களில் தோன்றியருளும் ஆற்றலுடையவன். ஆனால் மன்னனிடம், நான் என்னுடைய அடியார் அன்பால் செய்த கோயிலுக்குப் போகின்றேன், எனச் சொல்கிறான் என்றால் பூசலாரின் அன்பு எப்படியிருந்திருக்கும். தொண்டரின் அன்பையும், அரும்பெரும் செயலையும் உலகம் அறியும் பொருட்டு எங்குமுள்ள பரமன், அங்கு செல்வேன் என்கிறார். மன்னன், உடனே நின்றவூருக்கு ஓடோடி வந்து பூசலார் அமைத்த ஆலயத்தைத் தேடுகிறார். அங்குள்ள மறையோர்களிடம். பூசலார் அமைத்த ஆலயம் எங்குள்ளது என்கிறார். அவர்கள் ‘பூசலார், என்பவர் இருக்கிறார். ஆனால் கோயில் எதுவும் கட்டவில்லை' என்கிறார். அடியாரிடம் சேர்ந்து, மன்னன் பூசலாரை வணங்கி, நீர் அமைத்த ஆலயத்தை காண இறைச்சொல்லைக் கேட்டு வந்தேன் என்றான். அதற்கு பூசலார், "மன்னவன் உரைப்பக் கேட்ட அன்பர்தாம் மருண்டு நோக்கி என்னையோர் பொருளாக் கொண்டே எம்பிரான் அருள்செய் தாரேல் முன்வரு நிதியி லாமை மனத்தினால் முயன்று கோயில் இன்னதாம் என்று சிந்தித்து எடுத்தவா றெடுத்துச் சொன்னார்" (பெரியபுராணம்:4185) அதாவது, அதைக் கேட்டு பூசலார் வியப்படைகிறார். ஏனெனில் இவையெல்லாம் அவருக்கும், இறைவனுக்குமே தெரியும். என்கிறார். இதில் வரும் "என்னையே பொருளாக் கொண்டே எம்பிரான் அருள் செய்தாரேல்” என்ற வரிகள் பூசலாருக்கும், இறைவருக்குமான உறவைக்காட்டுகிறது, அன்பின் ஆழத்தை விவரிக்கிறது. இதே போன்று திருவாசகத்திலும் ஒரு வரி வரும். "நாயேனைத் தன்னடிகள் பாடுவித்த நாயகனை" என்பதாகும். நடந்ததையெல்லாம் கேட்ட மன்னனும் அடியாரை வீழ்ந்து வணங்கி விட்டு, இருப்பிடம் செல்கிறார். பூசலாரும் நினைத்த படியே குடமுழுக்கும் நடத்தி, தொடர் பூசனை நடத்தி இறைநிழல் அடைகிறார். "நினைப்பவர் மனம் கோயிலாய்க் கொண்டவன்" என்ற அப்பர் பெருமானின் தேவார வரிகள் பூசலாரின் நினைவை நமக்கு பறைசாற்றுவதாக அமைகிறது. எனவே நாமும் இறைவனை அன்பால் நினைப்போம். புறத்தில் அமைக்கமுடியாவிடினும் அகத்திலாவது அரனுக்கு திருக்கோயில் அமைப்போம். பூசலார் பற்றி, ஒண்பொருளை உணர்ந்திருந்தார்.. புற நிதியும் அதன் ஆலயம் அமையத்தேவையான பொருட்கள், வேலை செய்யும் பயனும் வழியடைத்து போயின பின்.. அகநிதியும் பணியாட்கள் என மனத்தினுள்ளே தேடி, நல்ல நாளாகப்பார்த்து, சிவாகமங்களில் கூறப்பட்டுள்ளவாறு அவனருளால் அற்புதமாய் மலர்ந்திடவும்..வாரா கோயில் திருப்பணியைத் தொடங்கிறார். அதுவும் இரவு, வழியருள்வான் சேவடியில் சேர்ந்திடவே பகல் பாராது அப்பணியைச் செய்கிறார். ஒரு ஐந்து நிமிடம் மனதை கட்டுக்குள் வைக்க நாமெல்லாம் படாத பாடுபடுகின்றோம். அதற்கு பயிற்சியும் எடுக்கிறொம். பூசலாரோ இரவும், பகலும் மாறா சிந்தனையோடு மகாதேவனுக்கு கோயில் செய்கிறார். திருநின்ற ஊரினிலே சைவநெறிநின்ற அடியவராம்.. மறையவராம் பூசலார் எனும் பெரியவராம்.. பெருங்கோவில் அமைத்திடவே ஒரு வாயில் வேண்டுமெனஓயாதே நினைத்திருந்தார் ஒரு வழியும் உய்வழியும் ஒற்றுமையாய் தோன்றியதே... மனமொன்ற அருளொன்ற அரனும் உள் ஒன்ற அற்புதமாய் ஆலயமும் அரிதழகாய் வடித்தவுடன்.. பரஞ்சோதி கோவிலுக்கு பெருஞ்சாந்தி நாள் குறிப்பார்.. அந்நாளில் ஒரு மன்னன் எடுத்த பெரு ஆலயமும் நிறைவுபெற.. நின்மலனும் அவன் கனவில் செப்பிடுவார் தப்பாமல்.. "என் ஆளால் செய்த பெருங்கோயில்.. யான் புகு நாள் இது என்ன.." மன்னவனும் அக்கணமே அடியாரின் இடம் சேர்ந்து, குணக்குன்றாய் நின்றவரின் மனக்கோயில் காண்கின்றார்.. வானோரும், ஏனோரும் மலர்மாரி பொழிகின்றார்.. மாறும் மனம் கொண்டு தேறும் வகை சொன்ன நேசமிகு பூசலார் திருவடிகள் போற்றி! போற்றி! பூசலார் நாயனார் குருபூசை: துலை நல்லோரை ஐப்பசித் திங்கள் பனை நாண்மீன் (அனுசம்) திருச்சிற்றம்பலம்
ஆடவை நல்லோரை ஆனித் திங்கள் 2021 காடவர் கோமான் கட்டிய கைலாசநாதர் கோயில் உலகின் இறைவன் இல்லாத இடமே இல்லை . அவனே நீக்கமற நிலையாக இருந்து உலகை இயக்கிக் கொண்டிருக்கிறான் . அவனின் அருளாற்றலாம் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் . உயிர்கள் மலத் தொடர்புகளிலிருந்து நீங்கி ஈடேற்றம் அடைவதற்காக இறை அருளை வாரிப்பொழிகிறது . நமக்காக ஒரு உலகை உருவாக்கி அதில் அவனும் நம்முடனே தோன்றாத் துணையாக இருந்து வழி நடத்துகிறான் . அப்படிப்பட்ட பரம்பொருளை பல்வேறு விதமாக நாம் வணங்கிக் கொண்ருக்கிறோம் . குறிப்பாக இறைவனுக்கென்றுத் தனியாக கோயில் அமைத்து அங்கு சென்று வழிபாடு செய்கின்றோம் . கோயிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது முதுமொழி . எனவே கோயிலேன்பது வெறுமனவே பத்திச் செய்வதற்கான இடம் என்பதை தாண்டி கலைகளை வளர்க்கும் இடமாகவும் இருக்கிறது . சிவத்திரு . பா.சிவமாதவன் புதுக்கோட்டை கோயிலை அமைப்பதற்கு பல்வேறு சாத்திர விதிகள் இருக்கின்றன . ஆகம அடிப்படையில் கோயில்களை தமிழர்கள் கட்டியெழுப்பியிருக்கின்றனர் . சாதாரணமாக ஒரு சிறிய கோயிலாக அமைப்பதற்கே நிறைய செலவுகளும் ஆகிறது பணியாட்களும் தேவைப்படுகிறார்கள் . ஆனால் ஒரே ஆளாக ஒருவர் ஒரு கோயிலும் கட்டியிருக்கிறார் . அந்த கோயிலுக்கு வருவதற்காக இறைவன் வேறொரு கோயில் குடமுழுக்ககை தள்ளி வைக்கச் சொல்கிறார் . இறைவனே விரும்புகிறான் என்றால் அது எப்பேற்பட்ட கோயிலாக இருக்க வேண்டும் . அந்த கோயில் எங்குள்ளது அதை கட்டியெழுப்பியவர் யார் ? என்பதை அறிய நமக்கு சேக்கிழார் பெருமான் உதவி செய்கிறார் . இந்த அரும்பணியை செய்தவர் பூசலார் எனும் அடியவர் ஆவார் . அவரைப் பற்றி தெய்வச் சேக்கிழார் பெருமான் பின்வருமாறு குறிப்பிடுகிறார் . அடுப்பது சிவன்பாலன் பர்க் கம்பணி செய்தலன்றே கொடுப்பதெவ் வகையுந்தேடி யவர்கொளக் கொடுத்துக் கங்கை மடுப்பொதி வேணியையர் மகிழ்ந்துறை வதற்கோர் கோயில் எடுப்பது மனத்துட் கொண்டா ரிருநிதி யின்மை யெண்ணார் . ( பெரியபுராணம் : 4174 ) அதாவது சிவன்பால் அன்பு பூண்டவர்களுக்கு எவ்வகையாலும் தேடிக்கொடுப்பார் . அடியார்க்கு ஒரு ஆசை சிவபெருமானுக்கு அற்புதமான கோயில் அமைக்க எண்ணினார் . ஆனால் அவரிடம் அதற்கான நிதி இல்லை . அடியார் எங்கெல்லாம் பொருள் கிடைக்கும் என்று - தென்னாடு அடியார் பெருமையின் ஆவண ஊற்று பெரியபுராணம் மறவாமையால் அமைத்த மனக்கோயில் பூசலார் நாயனார் தேடுகிறார் . ஆனால் எதுவும் கிடைக்கவில்லை வருந்துகிறார் . உடனே அவர் மனக்கோயில் கட்ட தீர்மானிக்கிறார் . புறச்செல்வம் அவருக்கு புறமாக சென்றது . அகச்செல்வம் அடியாரின் அகத்தே நிறைந்தது என்கிறார் . ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துச் செய்கிறார் . அடிமுதல் உபான மாதி யாகிய படைக ளெல்லாம் வடிவுறுந் தொழில்கள் முற்ற மனத்தினால் வகுத்து மான முடிவுறு சிகரந் தானும் முன்னிய முழத்திற் கொண்டு நெடிதுநாள் கூடக் கோயில் நிரம்பிட நினைவால் செய்தார் - ( பெரியபுராணம் ) ( தெ அடியார் கோயில் கட்ட ஆகின்ற காலமளவும் மனதிற்குள்ளாகவே ஆலயத்தை முழுவதும் செய்து முடித்து குடமுழுக்கிற்கான நாளையும் குறிக்கிறார் . அதே நாளில் காடவர் கோமானாகிய பல்லவ அரசன் சிவனுக்கு அழகான கற்றளி அமைத்து குடமுழுக்கு நடத்த ஏற்பாடு செய்கிறார் . இறைவன் அதற்கு முன்னாள் இரவு மன்னனின் கனவில் பின்வருமாறு கூறுகிறார் . இது எப்படி சாத்தியம் என்றால் நின்றாலும் இருந்தாலும் கிடந்தாலும் நடந்தாலும் மென்றாலும் துயின்றாலும் விழித்தாலும் இமைத்தாலும் மன்நாடும் மலர்ப்பாதம் ஒருகாலும் மறவாமை குன்றாத உணர்வுடையார் தொண்டராம் குணம்மிக்கார் . ( பெரியபுராணம் : 4153 ) 09 நின்றவூர்ப் பூசல் அன்பால் நெடிதுநாள் நினைந்து செய்த நன்றுநீடு ஆலயத்து நாளைநாம் புகுவோம் நீயிநுகு ஒன்றிய செயலை நாளை யொழிந்துபின் கொள்வா யென்று கொன்றைவார் சடையார் தொண்டர் கோயில்கொண்டருளப் போந்தார் . ( பெரியபுராணம் : 4180 ) இறைவன் இல்லாத இடமென்பது கிடையாது . ஒரே நேரத்தில் பல இடங்களில் தோன்றியருளும் ஆற்றலுடையவன் . ஆனால் மன்னனிடம் நான் என்னுடைய அடியார் அன்பால் செய்த கோயிலுக்குப் போகின்றேன் எனச் சொல்கிறான் என்றால் பூசலாரின் அன்பு எப்படியிருந்திருக்கும் . தொண்டரின் அன்பையும் அரும்பெரும் செயலையும் உலகம் அறியும் பொருட்டு எங்குமுள்ள பரமன் அங்கு செல்வேன் என்கிறார் . மன்னன் உடனே நின்றவூருக்கு ஓடோடி வந்து பூசலார் அமைத்த ஆலயத்தைத் தேடுகிறார் . அங்குள்ள மறையோர்களிடம் . பூசலார் அமைத்த ஆலயம் எங்குள்ளது என்கிறார் . அவர்கள் பூசலார் என்பவர் இருக்கிறார் . ஆனால் கோயில் எதுவும் கட்டவில்லை ' என்கிறார் . அடியாரிடம் சேர்ந்து மன்னன் பூசலாரை வணங்கி நீர் அமைத்த ஆலயத்தை காண இறைச்சொல்லைக் கேட்டு வந்தேன் என்றான் . அதற்கு பூசலார் மன்னவன் உரைப்பக் கேட்ட அன்பர்தாம் மருண்டு நோக்கி என்னையோர் பொருளாக் கொண்டே எம்பிரான் அருள்செய் தாரேல் முன்வரு நிதியி லாமை மனத்தினால் முயன்று கோயில் இன்னதாம் என்று சிந்தித்து எடுத்தவா றெடுத்துச் சொன்னார் ( பெரியபுராணம் : 4185 ) அதாவது அதைக் கேட்டு பூசலார் வியப்படைகிறார் . ஏனெனில் இவையெல்லாம் அவருக்கும் இறைவனுக்குமே தெரியும் . என்கிறார் . இதில் வரும் என்னையே பொருளாக் கொண்டே எம்பிரான் அருள் செய்தாரேல் என்ற வரிகள் பூசலாருக்கும் இறைவருக்குமான உறவைக்காட்டுகிறது அன்பின் ஆழத்தை விவரிக்கிறது . இதே போன்று திருவாசகத்திலும் ஒரு வரி வரும் . நாயேனைத் தன்னடிகள் பாடுவித்த நாயகனை என்பதாகும் . நடந்ததையெல்லாம் கேட்ட மன்னனும் அடியாரை வீழ்ந்து வணங்கி விட்டு இருப்பிடம் செல்கிறார் . பூசலாரும் நினைத்த படியே குடமுழுக்கும் நடத்தி தொடர் பூசனை நடத்தி இறைநிழல் அடைகிறார் . நினைப்பவர் மனம் கோயிலாய்க் கொண்டவன் என்ற அப்பர் பெருமானின் தேவார வரிகள் பூசலாரின் நினைவை நமக்கு பறைசாற்றுவதாக அமைகிறது . எனவே நாமும் இறைவனை அன்பால் நினைப்போம் . புறத்தில் அமைக்கமுடியாவிடினும் அகத்திலாவது அரனுக்கு திருக்கோயில் அமைப்போம் . பூசலார் பற்றி ஒண்பொருளை உணர்ந்திருந்தார் .. புற நிதியும் அதன் ஆலயம் அமையத்தேவையான பொருட்கள் வேலை செய்யும் பயனும் வழியடைத்து போயின பின் .. அகநிதியும் பணியாட்கள் என மனத்தினுள்ளே தேடி நல்ல நாளாகப்பார்த்து சிவாகமங்களில் கூறப்பட்டுள்ளவாறு அவனருளால் அற்புதமாய் மலர்ந்திடவும்..வாரா கோயில் திருப்பணியைத் தொடங்கிறார் . அதுவும் இரவு வழியருள்வான் சேவடியில் சேர்ந்திடவே பகல் பாராது அப்பணியைச் செய்கிறார் . ஒரு ஐந்து நிமிடம் மனதை கட்டுக்குள் வைக்க நாமெல்லாம் படாத பாடுபடுகின்றோம் . அதற்கு பயிற்சியும் எடுக்கிறொம் . பூசலாரோ இரவும் பகலும் மாறா சிந்தனையோடு மகாதேவனுக்கு கோயில் செய்கிறார் . திருநின்ற ஊரினிலே சைவநெறிநின்ற அடியவராம் .. மறையவராம் பூசலார் எனும் பெரியவராம் .. பெருங்கோவில் அமைத்திடவே ஒரு வாயில் வேண்டுமெனஓயாதே நினைத்திருந்தார் ஒரு வழியும் உய்வழியும் ஒற்றுமையாய் தோன்றியதே ... மனமொன்ற அருளொன்ற அரனும் உள் ஒன்ற அற்புதமாய் ஆலயமும் அரிதழகாய் வடித்தவுடன் .. பரஞ்சோதி கோவிலுக்கு பெருஞ்சாந்தி நாள் குறிப்பார் .. அந்நாளில் ஒரு மன்னன் எடுத்த பெரு ஆலயமும் நிறைவுபெற .. நின்மலனும் அவன் கனவில் செப்பிடுவார் தப்பாமல் .. என் ஆளால் செய்த பெருங்கோயில் .. யான் புகு நாள் இது என்ன .. மன்னவனும் அக்கணமே அடியாரின் இடம் சேர்ந்து குணக்குன்றாய் நின்றவரின் மனக்கோயில் காண்கின்றார் .. வானோரும் ஏனோரும் மலர்மாரி பொழிகின்றார் .. மாறும் மனம் கொண்டு தேறும் வகை சொன்ன நேசமிகு பூசலார் திருவடிகள் போற்றி ! போற்றி ! பூசலார் நாயனார் குருபூசை : துலை நல்லோரை ஐப்பசித் திங்கள் பனை நாண்மீன் ( அனுசம் ) திருச்சிற்றம்பலம்