தென்னாடு ஆடித் திங்கள் இதழ் - 10

தெ 02 தென்னாடு கடக நல்லோரை ஆடித் திங்கள், 2021 சைவத்தின் திருவாய் வந்த திருவாதவூரடிகள் அடிமையானால் இவ்வுலகம் ஏசாது என்ன செய்யும் சிற்றறிவில் சிக்குண்ட உலகம் அல்லவா இது. ஆதியும் அந்தமும் இல்லா, இறைவனால் திருத்தொண்டர்கள் சிறப்பு பெற்ற வரலாறு, பெரியபுராணம் எங்கும் நிறைந்து நீள்கிறது. அவன் திருவருட்கருணையாலும், தொண்டர்களின் தூ ய அன்பினாலும், ஒரு மிகப் பெரிய பத்தி மரபு சைவத்தின் அரணாக அமைந்து சிறந்தது. இறைவனின் பேரின்ப ஆற்றில் மிதந்து முத்தியின்பம் அடைந்து தொண்டர்கள் வானுறையும் கடவுளர்களாக மாறிப்போயினர். ஆனால் இந்த சிவத்திரு. என்று அந்த ஆனந்த பரவசத்தை அவரே பதிவு வழமையில் இருந்து மாறாக, ஒரு அடியவரால் செந்தமிழாதன் செய்கின்றார். அறிவில் உயர்ந்தவர்! அந்த அறிவால் இறைவனே தனித்தன்மை வாய்ந்த சிறப்புப் பெற்றான் என்றால் அது திருவாதவூரடிகளையே சாரும்! 'விடையேறியோர் தூவெண் மதி சூடிய' இறைவனை 'பரியேறிய நாதனாக', பத்தர்களுக்குக் காட்சி தர வைத்த பெரும்பேறு பெற்றவரே, திருவாதவூரடிகளென்னும் மணிவாசகர்! புத்தி விரியவில்லை மாறாக மனம் விரிந்தது! விரிந்த மனத்தை இறைவனின் அருட்பார்வையைக் கொண்டு நெக்குருகச் செய்தார்! அந்த உருகிய உள்ளொளி பரப்பிய மனத்தால் பத்தி எனும் வலை பின்னி, சைவமாகிய பெருங்கடலில் விரித்து வைத்தார்! எப்படி விரிக்கும் வலையில் மீன்கள் தாமாக வந்து சிக்கிக் கொள்ளுமோ அப்படி இறைவனும், திருவாசக வலையில் விரும்பிச் சிக்கிக் கொண்டான்! பெரியபுராணத்தில் எந்தக் குறிப்புக்களும் இல்லாத மணிவாசகரை, காலம் சைவத்தின் கைகளில் சான்றுகளோடு சேர்ப்பித்தது! சைவத்தின் மாண்பு அத்தனைக்கும் சாரமாய் அமைந்த தனிப்பெரும் நூலாகிய திருவாசகத்தை அருளிய மாணிவாசகரிடத்திலே, இறைவனே விரும்பி, திருக்கோவையும் கேட்டு பெற்றுக் கொண்டான் என்கில், இதை விட மணிவாசகர் சிறப்பை வார்த்தைகளில் சொல்லிவிடத்தான் இயலுமா? "மணிவாசகந்தரு மந்திரமோதினால் பிணி மூப்பில்லாப் பிரம மாகுதும்" என்கிறார், யாழ்ப்பாணத்து யோகர் சுவாமிகள். திருவாசகமே, பிணி மூப்பைக் கெடுக்கும் பெருவாசகம்! அதுவே மறைமொழியாகிய மந்திரம்! மந்திரம் யாது செய்யும்? இறைவனை அழைக்கும்! நிலையின்பம் கொடுக்கும். திருவாசகமோ எம்மை இறைவனுக்குள் இரண்டறக்கலக்க ஆதியும் அந்தமும் ஆயினார்க்கு ஆடப்பொற் சுண்ணம் இடித்துநாமே தெ வைக்கும். வேதங்களதும், உபநிடதங்களதும், தெளிந்த தெளிவாய், பிரம்மமாகிய இறைவனை அனுபவிக்கும் சூக்குமப் பாதையாய் எம் கண்முன் விரிகிறது திருவாசகம். இதனாலே தான், தாயுமான சுவாமிகள் திருவாசகத்தை 'வேதபாராயணப்பனுவல்' என்று போற்றுகின்றார்! இதன் பொருளே சிவன் தான்! இதன் தொடக்கமும் முடிவும் சிவனே தான்! இதையே மணிவாசகரும் பொருள்கேட்டவர்களுக்கு, தில்லையம்பலத்துள் புகுந்து இறைவனோடு கலந்து, செம்பொருள் காட்டி தானே விளக்கமாயும் அமைந்தார்! “பேசப்பட்டேன் நின் அடியாரில் திருநீறே பூசப்பட்டேன் பூதலரால் உன் அடியான் என்று ஏசப்பட்டேன் இனிப்படுகின்றதுஅமையாததால் ஆசைப்பட்டேன் ஆட்பட்டேன் உன் அடியேன்" பத்தி வலையில் விழுந்த இறைவன் மீனைப் போன்றவனா? இல்லவே இல்லை, அவன் தித்திக்கும் தேனைப் போன்றவன்! அனைத்திற்கும் முன்னரே தோன்றிய பழையவன் ! அடிமுடியறியமுடியாத அற்புதன்! சொற்பதங்களைக் கடந்து சிற்றறிவுக்கு எட்டாதவன்! ஆனால் மணிவாசகரைத் தேடிவந்தான்! "பரமன் காண்க பழையோன் காண்க பிரமன்மால் காணாப் பெரியோன் காண்க அற்புதன் காண்க அநேகன் காண்க சொற்பதம் கடந்த தொல்லோன் காண்க சித்தமும் செல்லா சேட்சியன் காண்க பத்தி வலையில் படுவோன் காண்க என்று திருவண்டப் பகுதியில் மணிவாசகர் உருகிப் பாடுகின்றார்! இறைவன் மணிவாசகரை, தேடிவந்தான். பின்னர் தன்னை மணிவாசகரைத் தேட வைத்தான்! அந்தத் தேடலின் பயன், இறைவனையே சிக்கிக் கொள்ளச் செய்யும் பத்தி வலையாகிய திருவாசகம் எமக்குக் கிடைத்தது! ஆண்டாண்டுகளாய் கடந்தும் இன்றும் எம் கைகளில் அருள் குறையாது வழியும் ஆனந்தப் பெருக்காய் அது நிறைகின்றது! அதைப் பெற மணிவாசகர் பட்டபாடுகள் ஒன்றிரண்டு இல்லை! இறைவன் ஒரு காதலைனைப் போல அவரோடு விளையாடினானன்! பேரின்பத்தின் சாரலை அவருக்கு தூவினான்! ஆனால் அதை நிலைக்கச் செய்யவில்லை! சிற்றனிபம் நிலைத்தால் தானே அது பேரின்பம்! சிலநொடிகளில் மறைந்து போவதும் மறைத்து போகக்கூடிய போகங்களால் வந்து சேர்வதுமாகிய சிற்றின்ப அனுபவமே பேரின்பத்தின் அளவுகோல்! அற்பமானுடர் எல்லோரும் அளவுகோலை எண்ணியே ஆயுள் அழிக்கின்றோம்! ஆனால் மணிவாசகர் அந்த அளவுகோலைப் பற்றி அளவில்லாப் பேரின்பக் கடலாகிய ஆண்டவனைத் தேடினார்.! குருந்தமர நிழலில் குருவாய் வந்து, நயனதீட்சையும், திருவடிதீட்சையும், உபதேச தீட்சையும் தந்து பேரின்ப வழிக்கு திறவுகோல் தந்த குருநாதரைப் பிரிய மனமின்றிப் பிரிந்து, பாண்டிநாடு போகின்றார்! நரிகளைப் பரிகளாக்கி, தானே அதன் தலைவனுமாகிக் கையில் கோலுடன் வந்தது சிவனே என்று தெளிகின்றார்! ஆனால் மன்னனின் அறியாமையை எண்ணியும் ஆண்டவனின் பேரருளை எண்ணியும் 'கடை நாயேனாகிய‘ தனக்காக இறைவன் வந்தானே என்று கலக்கம் மிகக் கொள்கின்றார் பின்னரும், திருப்பெருந்துறையில் மீளவும் சென்று குருநாதன் திருத்தாள்களிலேயே, பத்தி பெருகப் பணிசெய்து பேரின்ப அனுபவம் பெறுகின்றார்! "இருந்து என்னை ஆண்டுகொள் விற்றுக்கொள் ஒற்றிவை என்னின் அல்லால் விருந்தினேனை விட்டிடுதி கண்டாய்" என்றும் தெ சேற்றிதழ்க் கமலங்கள் மலரும் தண்வயல் சூழ் திருப்பெருந்துறை உறை சிவபெருமான் Jug உலக பாசங்கள் எல்லாம் அறுந்தது! இனி உன் அடியே அன்றி வேறேதும் துணையில்லை! கன்றிலா எண்ணிப் பசு கசிந்து அழைப்பது போல உன்னடியையே விரும்பி அழைப்பேனே என்று புலம்பிப் பாடுகின்றார்! "உற்றாரையான் வேண்டேன் ஊர் வேண்டேன் போர் வேண்டேன் கற்றாரை யான் வேண்டேன்" என்று தன் பற்றற்ற பக்குவ நிலையை இறைவனுக்கு உணர்த்தி இறைஞ்சுகின்றார்! பின்னர் அங்கிருந்தும் நீங்கி, நடுநாட்டை அடைந்து, திருமுதுகுன்றம், திருவெண்ணெய் நல்லூர் முதலிய தலங்களை வணங்கி, திருவண்ணாமலையை அடைந்து, அங்கும் பேரானந்த அனுபவமாகிய, குருந்த மரக்காட்சியை வேண்டிக் கண்டு வணங்கி ஆனந்த வெள்ளத்தில் தத்தளித்தார்! எங்கெல்லாம் யாத்திரை போனாரோ, அந்த அந்த ஊர்களில் வேரோடிப் போயிருந்த நாட்டுப்புறப் பாடல்களின் சாயலிலேயே இறைவனைப் பாடி ஆனந்தமடைந்தார். திருவாதவூரடிகள்! திருவண்ணாமலையில், தன்னையும் பெண்ணாகக் கருதி 'திருவம்மானை' பாடினார்! அதிகாலை துயிலெழுப்பி சிவபூசைக்கு அழைக்கும் 'திருவெம்பாவை பாடினார்! இவ்வாறு வரலாற்றையும் ஆவணப்படுத்தி, திருவண்ணாமலையில் இருந்து இறைவன், ஆணைப்பெட்டி யே தில்லையை சென்றடைந்தார்! தில்லையில் எம்பெருமானின் திருவருள் வான் கருணையே, மணிவாசகருக்காக காத்திருந்தது! மண்ணும் மக்களும் பத்தி மரபும் பயனுற மணிவாசகர் புரிந்த பணி தில்லையில் இறைவனாலேயே எழுதப்பட்டது. "கண்ணப்பன் ஒப்பதுஆர் அன்பு இன்மை கண்டபின் என்னப்பன் என் ஒப்பில் என்னையும் ஆட்கொண்டருவி வண்ணப் பணிந்து என்னை வாவென்ற வான்கருணைச் சுண்ணப் பொன்நீற்றற்கே செய்றூதாய் கோத்தும்பீ" என்று மணிவாசகரே, இறைவனின் வான் கருணைச் சிறப்பை எண்ணி எண்ணிச் சிறுமியரை போல், திருக்கோத்தும்பி பாடி ஆடி மகிழ்ந்தார்! தில்லையில் தான் பெற்ற ஞானத் தெளிவால் புத்தமார்க்கத் துறவிகளை வாதில் வென்று, சைவத்தின் மாண்பை உலகத்தார்க்கு உணர்த்தியது மட்டுமன்றி ஈழநாட்டு அரசனின் ஊமைப் பெண்ணையும் பேசவைத்தார்! இறைவனோ, அவ்விடம் விட்டு அகன்று, அருகிலிருக்கும் குளத்தில் தோன்றும் சோதியில் கலந்து தன்னையடையுமாறு, மாணவர்களுக்குப் பணித்து, மணிவாசகரை தில்லைக்கு வருமாறு திருவருள் கூர்ந்து கூறி மறைகின்றான்! சோதியும் தோன்றியது, சீடர்கள் எல்லோரும் அதில் கலந்து மகிழ்ந்தனர்! மணிவாசகரோ, கொன்றைமரநிழலில் ஞானயோகத்தில் அமர்ந்திருந்து சோதியுட் கலக்கும் பேற்றினை இழந்து, சைவத்தின் தெளிவு தொண்டு! அது உயர்ந்த ஞானமார்க்கத்தோடு சேரும் போது, அறிவால், கல்வியால் பெற்ற புறப்பொருட்கள் எல்லாம் சிறு புல்லென தெரிந்து இறைவன் தானே சென்று மணிவாசகரை ஆட்கொண்டது நம்மை நீங்கும். அந்த இயல்பு வாய்க்கப் பெற்றதும், இப்பெரிய குருநாதரைத் தேடி உத்தரகோசமங்கைக்கு சென்றார்! அங்கே, மட்டுமன்றி தானே திருவாகத்தையும் கேட்டு எழுதிக் 'கடையவனேனைக் கருணையினால் கலந்து ஆண்டு கொண்ட விடையவனே விட்டிடுதி கண்டாய்" என்றும், சைவசமய மார்க்கத்திற்குப் பெரும் பணியாற்ற இறைவனின் பெருங்கருணை வந்து வாய்க்கிறது. அரிமர்த்தன பாண்டியனின், முதல் அமைச்சராக, அந்நாட்டின் உயரிய பட்டமாகிய 'தென்னவன் பிரமராயன்' எனும் பெருமையோடு, அரசவையில் வீற்றிருந்த, திருவாதவூரடிகள், குருந்த மரநிழலில் குருவாகிய இறைவனைக் கண்டதும், அந்த நொடியில், அறிவால் வாய்த்த அத்தனையையும் துறந்தார்! கொண்டான்! அது மட்டுமா! 'திருக்கோவையும் பாடுக' என்று தமிழை விரும்பிக் கேட்டான்! எவ்வளவு சிறப்பு? எஎவ்வளவு கருணை? மணிவாசகரின் திருவாசகம் சைவத்தின் ஒப்பற்ற ஊற்று! அருள் வழியும் அமுதசுரபி! சான்றோரும் மேலைநாட்டு அறிஞரும் அருமருந்தாகப் போற்றிய அமுதம்! நாமும் எம் தலைமுறைக்கு மணிவாசகராகிய திருவாத வூரடிகளை சிவனே பொருளாய் அமைந்த திருவாசகத்தையும் கடத்தி மகிழ்வோமாக! தன் பதவி துறந்தார், பணியை மறந்தார், தன்னை மறந்தார், பரமனின் பாதங்களை தன் தலைமேல் தாங்கும் பேறுபெற்றார்! என்னைக் கைவிட்டுவிடாதே, என்று இறைவனிடத்தில் ஐம்பது பாடல்களால் உலகை நீத்தலின் பொருட்டு விண்ணப்பிக்கின்றார்! இறைவனோ, திருப்பெருந்துறையில் உள்ளம் கசிந்து உடலும் என்பும் உருகி நின்று ஞானத்தின் மணிவாசகர் காணத் தவறிய கோலத்தைக் காட்டி, "போதலர்ந் தேன் சொரியும் தெளிவை, நான் மறையின் முடிவை, சிற்றறிவு உணரமுடியாத எண்சித்திகளையும் மணிவாசகர் பெறும் வகையில் அருளி சிவனை உற்றறியும் உள்ளன்பு பெற்றார்! ஒரு காதலி காதலனைத் தேடி பிரிவு ஆற்றாமல் புலம்பும் நிலையைப் போலானார். இவ்வுலகத்தவர் இவரை பித்தன் என்றனர்! பெரும் சுகபோக அரசபணி துறந்து, பிச்சை தேவருக்கே மறைந்தார்! அதன் பின்னரும், அற்புதமான மனம் உருகும் திருவாசகப் பதிகங்களை மணிவாசகர் நெக்குருகிப் பாடினார்! அங்கிருந்து சோழவளநாடு சென்று திருவாருரில் சிவானந்த முதிர்வால், இறைவனைத் திருப்புலம்பல் செய்து பாடுகின்றார்! வாதவூர் எங்கோமான் வாசகத்தை ஓதிப் பிறவிப் பிணி நீக்கிப் பேரின்ப வெள்ளச் செறிவுக்குள் செல்வர் சிறந்து" திருச்சிற்றம்பலம்
தெ 02 தென்னாடு கடக நல்லோரை ஆடித் திங்கள் 2021 சைவத்தின் திருவாய் வந்த திருவாதவூரடிகள் அடிமையானால் இவ்வுலகம் ஏசாது என்ன செய்யும் சிற்றறிவில் சிக்குண்ட உலகம் அல்லவா இது . ஆதியும் அந்தமும் இல்லா இறைவனால் திருத்தொண்டர்கள் சிறப்பு பெற்ற வரலாறு பெரியபுராணம் எங்கும் நிறைந்து நீள்கிறது . அவன் திருவருட்கருணையாலும் தொண்டர்களின் தூ அன்பினாலும் ஒரு மிகப் பெரிய பத்தி மரபு சைவத்தின் அரணாக அமைந்து சிறந்தது . இறைவனின் பேரின்ப ஆற்றில் மிதந்து முத்தியின்பம் அடைந்து தொண்டர்கள் வானுறையும் கடவுளர்களாக மாறிப்போயினர் . ஆனால் இந்த சிவத்திரு . என்று அந்த ஆனந்த பரவசத்தை அவரே பதிவு வழமையில் இருந்து மாறாக ஒரு அடியவரால் செந்தமிழாதன் செய்கின்றார் . அறிவில் உயர்ந்தவர் ! அந்த அறிவால் இறைவனே தனித்தன்மை வாய்ந்த சிறப்புப் பெற்றான் என்றால் அது திருவாதவூரடிகளையே சாரும் ! ' விடையேறியோர் தூவெண் மதி சூடிய ' இறைவனை ' பரியேறிய நாதனாக ' பத்தர்களுக்குக் காட்சி தர வைத்த பெரும்பேறு பெற்றவரே திருவாதவூரடிகளென்னும் மணிவாசகர் ! புத்தி விரியவில்லை மாறாக மனம் விரிந்தது ! விரிந்த மனத்தை இறைவனின் அருட்பார்வையைக் கொண்டு நெக்குருகச் செய்தார் ! அந்த உருகிய உள்ளொளி பரப்பிய மனத்தால் பத்தி எனும் வலை பின்னி சைவமாகிய பெருங்கடலில் விரித்து வைத்தார் ! எப்படி விரிக்கும் வலையில் மீன்கள் தாமாக வந்து சிக்கிக் கொள்ளுமோ அப்படி இறைவனும் திருவாசக வலையில் விரும்பிச் சிக்கிக் கொண்டான் ! பெரியபுராணத்தில் எந்தக் குறிப்புக்களும் இல்லாத மணிவாசகரை காலம் சைவத்தின் கைகளில் சான்றுகளோடு சேர்ப்பித்தது ! சைவத்தின் மாண்பு அத்தனைக்கும் சாரமாய் அமைந்த தனிப்பெரும் நூலாகிய திருவாசகத்தை அருளிய மாணிவாசகரிடத்திலே இறைவனே விரும்பி திருக்கோவையும் கேட்டு பெற்றுக் கொண்டான் என்கில் இதை விட மணிவாசகர் சிறப்பை வார்த்தைகளில் சொல்லிவிடத்தான் இயலுமா ? மணிவாசகந்தரு மந்திரமோதினால் பிணி மூப்பில்லாப் பிரம மாகுதும் என்கிறார் யாழ்ப்பாணத்து யோகர் சுவாமிகள் . திருவாசகமே பிணி மூப்பைக் கெடுக்கும் பெருவாசகம் ! அதுவே மறைமொழியாகிய மந்திரம் ! மந்திரம் யாது செய்யும் ? இறைவனை அழைக்கும் ! நிலையின்பம் கொடுக்கும் . திருவாசகமோ எம்மை இறைவனுக்குள் இரண்டறக்கலக்க ஆதியும் அந்தமும் ஆயினார்க்கு ஆடப்பொற் சுண்ணம் இடித்துநாமே தெ வைக்கும் . வேதங்களதும் உபநிடதங்களதும் தெளிந்த தெளிவாய் பிரம்மமாகிய இறைவனை அனுபவிக்கும் சூக்குமப் பாதையாய் எம் கண்முன் விரிகிறது திருவாசகம் . இதனாலே தான் தாயுமான சுவாமிகள் திருவாசகத்தை ' வேதபாராயணப்பனுவல் ' என்று போற்றுகின்றார் ! இதன் பொருளே சிவன் தான் ! இதன் தொடக்கமும் முடிவும் சிவனே தான் ! இதையே மணிவாசகரும் பொருள்கேட்டவர்களுக்கு தில்லையம்பலத்துள் புகுந்து இறைவனோடு கலந்து செம்பொருள் காட்டி தானே விளக்கமாயும் அமைந்தார் ! பேசப்பட்டேன் நின் அடியாரில் திருநீறே பூசப்பட்டேன் பூதலரால் உன் அடியான் என்று ஏசப்பட்டேன் இனிப்படுகின்றதுஅமையாததால் ஆசைப்பட்டேன் ஆட்பட்டேன் உன் அடியேன் பத்தி வலையில் விழுந்த இறைவன் மீனைப் போன்றவனா ? இல்லவே இல்லை அவன் தித்திக்கும் தேனைப் போன்றவன் ! அனைத்திற்கும் முன்னரே தோன்றிய பழையவன் ! அடிமுடியறியமுடியாத அற்புதன் ! சொற்பதங்களைக் கடந்து சிற்றறிவுக்கு எட்டாதவன் ! ஆனால் மணிவாசகரைத் தேடிவந்தான் ! பரமன் காண்க பழையோன் காண்க பிரமன்மால் காணாப் பெரியோன் காண்க அற்புதன் காண்க அநேகன் காண்க சொற்பதம் கடந்த தொல்லோன் காண்க சித்தமும் செல்லா சேட்சியன் காண்க பத்தி வலையில் படுவோன் காண்க என்று திருவண்டப் பகுதியில் மணிவாசகர் உருகிப் பாடுகின்றார் ! இறைவன் மணிவாசகரை தேடிவந்தான் . பின்னர் தன்னை மணிவாசகரைத் தேட வைத்தான் ! அந்தத் தேடலின் பயன் இறைவனையே சிக்கிக் கொள்ளச் செய்யும் பத்தி வலையாகிய திருவாசகம் எமக்குக் கிடைத்தது ! ஆண்டாண்டுகளாய் கடந்தும் இன்றும் எம் கைகளில் அருள் குறையாது வழியும் ஆனந்தப் பெருக்காய் அது நிறைகின்றது ! அதைப் பெற மணிவாசகர் பட்டபாடுகள் ஒன்றிரண்டு இல்லை ! இறைவன் ஒரு காதலைனைப் போல அவரோடு விளையாடினானன் ! பேரின்பத்தின் சாரலை அவருக்கு தூவினான் ! ஆனால் அதை நிலைக்கச் செய்யவில்லை ! சிற்றனிபம் நிலைத்தால் தானே அது பேரின்பம் ! சிலநொடிகளில் மறைந்து போவதும் மறைத்து போகக்கூடிய போகங்களால் வந்து சேர்வதுமாகிய சிற்றின்ப அனுபவமே பேரின்பத்தின் அளவுகோல் ! அற்பமானுடர் எல்லோரும் அளவுகோலை எண்ணியே ஆயுள் அழிக்கின்றோம் ! ஆனால் மணிவாசகர் அந்த அளவுகோலைப் பற்றி அளவில்லாப் பேரின்பக் கடலாகிய ஆண்டவனைத் தேடினார் . ! குருந்தமர நிழலில் குருவாய் வந்து நயனதீட்சையும் திருவடிதீட்சையும் உபதேச தீட்சையும் தந்து பேரின்ப வழிக்கு திறவுகோல் தந்த குருநாதரைப் பிரிய மனமின்றிப் பிரிந்து பாண்டிநாடு போகின்றார் ! நரிகளைப் பரிகளாக்கி தானே அதன் தலைவனுமாகிக் கையில் கோலுடன் வந்தது சிவனே என்று தெளிகின்றார் ! ஆனால் மன்னனின் அறியாமையை எண்ணியும் ஆண்டவனின் பேரருளை எண்ணியும் ' கடை நாயேனாகிய தனக்காக இறைவன் வந்தானே என்று கலக்கம் மிகக் கொள்கின்றார் பின்னரும் திருப்பெருந்துறையில் மீளவும் சென்று குருநாதன் திருத்தாள்களிலேயே பத்தி பெருகப் பணிசெய்து பேரின்ப அனுபவம் பெறுகின்றார் ! இருந்து என்னை ஆண்டுகொள் விற்றுக்கொள் ஒற்றிவை என்னின் அல்லால் விருந்தினேனை விட்டிடுதி கண்டாய் என்றும் தெ சேற்றிதழ்க் கமலங்கள் மலரும் தண்வயல் சூழ் திருப்பெருந்துறை உறை சிவபெருமான் Jug உலக பாசங்கள் எல்லாம் அறுந்தது ! இனி உன் அடியே அன்றி வேறேதும் துணையில்லை ! கன்றிலா எண்ணிப் பசு கசிந்து அழைப்பது போல உன்னடியையே விரும்பி அழைப்பேனே என்று புலம்பிப் பாடுகின்றார் ! உற்றாரையான் வேண்டேன் ஊர் வேண்டேன் போர் வேண்டேன் கற்றாரை யான் வேண்டேன் என்று தன் பற்றற்ற பக்குவ நிலையை இறைவனுக்கு உணர்த்தி இறைஞ்சுகின்றார் ! பின்னர் அங்கிருந்தும் நீங்கி நடுநாட்டை அடைந்து திருமுதுகுன்றம் திருவெண்ணெய் நல்லூர் முதலிய தலங்களை வணங்கி திருவண்ணாமலையை அடைந்து அங்கும் பேரானந்த அனுபவமாகிய குருந்த மரக்காட்சியை வேண்டிக் கண்டு வணங்கி ஆனந்த வெள்ளத்தில் தத்தளித்தார் ! எங்கெல்லாம் யாத்திரை போனாரோ அந்த அந்த ஊர்களில் வேரோடிப் போயிருந்த நாட்டுப்புறப் பாடல்களின் சாயலிலேயே இறைவனைப் பாடி ஆனந்தமடைந்தார் . திருவாதவூரடிகள் ! திருவண்ணாமலையில் தன்னையும் பெண்ணாகக் கருதி ' திருவம்மானை ' பாடினார் ! அதிகாலை துயிலெழுப்பி சிவபூசைக்கு அழைக்கும் ' திருவெம்பாவை பாடினார் ! இவ்வாறு வரலாற்றையும் ஆவணப்படுத்தி திருவண்ணாமலையில் இருந்து இறைவன் ஆணைப்பெட்டி யே தில்லையை சென்றடைந்தார் ! தில்லையில் எம்பெருமானின் திருவருள் வான் கருணையே மணிவாசகருக்காக காத்திருந்தது ! மண்ணும் மக்களும் பத்தி மரபும் பயனுற மணிவாசகர் புரிந்த பணி தில்லையில் இறைவனாலேயே எழுதப்பட்டது . கண்ணப்பன் ஒப்பதுஆர் அன்பு இன்மை கண்டபின் என்னப்பன் என் ஒப்பில் என்னையும் ஆட்கொண்டருவி வண்ணப் பணிந்து என்னை வாவென்ற வான்கருணைச் சுண்ணப் பொன்நீற்றற்கே செய்றூதாய் கோத்தும்பீ என்று மணிவாசகரே இறைவனின் வான் கருணைச் சிறப்பை எண்ணி எண்ணிச் சிறுமியரை போல் திருக்கோத்தும்பி பாடி ஆடி மகிழ்ந்தார் ! தில்லையில் தான் பெற்ற ஞானத் தெளிவால் புத்தமார்க்கத் துறவிகளை வாதில் வென்று சைவத்தின் மாண்பை உலகத்தார்க்கு உணர்த்தியது மட்டுமன்றி ஈழநாட்டு அரசனின் ஊமைப் பெண்ணையும் பேசவைத்தார் ! இறைவனோ அவ்விடம் விட்டு அகன்று அருகிலிருக்கும் குளத்தில் தோன்றும் சோதியில் கலந்து தன்னையடையுமாறு மாணவர்களுக்குப் பணித்து மணிவாசகரை தில்லைக்கு வருமாறு திருவருள் கூர்ந்து கூறி மறைகின்றான் ! சோதியும் தோன்றியது சீடர்கள் எல்லோரும் அதில் கலந்து மகிழ்ந்தனர் ! மணிவாசகரோ கொன்றைமரநிழலில் ஞானயோகத்தில் அமர்ந்திருந்து சோதியுட் கலக்கும் பேற்றினை இழந்து சைவத்தின் தெளிவு தொண்டு ! அது உயர்ந்த ஞானமார்க்கத்தோடு சேரும் போது அறிவால் கல்வியால் பெற்ற புறப்பொருட்கள் எல்லாம் சிறு புல்லென தெரிந்து இறைவன் தானே சென்று மணிவாசகரை ஆட்கொண்டது நம்மை நீங்கும் . அந்த இயல்பு வாய்க்கப் பெற்றதும் இப்பெரிய குருநாதரைத் தேடி உத்தரகோசமங்கைக்கு சென்றார் ! அங்கே மட்டுமன்றி தானே திருவாகத்தையும் கேட்டு எழுதிக் ' கடையவனேனைக் கருணையினால் கலந்து ஆண்டு கொண்ட விடையவனே விட்டிடுதி கண்டாய் என்றும் சைவசமய மார்க்கத்திற்குப் பெரும் பணியாற்ற இறைவனின் பெருங்கருணை வந்து வாய்க்கிறது . அரிமர்த்தன பாண்டியனின் முதல் அமைச்சராக அந்நாட்டின் உயரிய பட்டமாகிய ' தென்னவன் பிரமராயன் ' எனும் பெருமையோடு அரசவையில் வீற்றிருந்த திருவாதவூரடிகள் குருந்த மரநிழலில் குருவாகிய இறைவனைக் கண்டதும் அந்த நொடியில் அறிவால் வாய்த்த அத்தனையையும் துறந்தார் ! கொண்டான் ! அது மட்டுமா ! ' திருக்கோவையும் பாடுக ' என்று தமிழை விரும்பிக் கேட்டான் ! எவ்வளவு சிறப்பு ? எஎவ்வளவு கருணை ? மணிவாசகரின் திருவாசகம் சைவத்தின் ஒப்பற்ற ஊற்று ! அருள் வழியும் அமுதசுரபி ! சான்றோரும் மேலைநாட்டு அறிஞரும் அருமருந்தாகப் போற்றிய அமுதம் ! நாமும் எம் தலைமுறைக்கு மணிவாசகராகிய திருவாத வூரடிகளை சிவனே பொருளாய் அமைந்த திருவாசகத்தையும் கடத்தி மகிழ்வோமாக ! தன் பதவி துறந்தார் பணியை மறந்தார் தன்னை மறந்தார் பரமனின் பாதங்களை தன் தலைமேல் தாங்கும் பேறுபெற்றார் ! என்னைக் கைவிட்டுவிடாதே என்று இறைவனிடத்தில் ஐம்பது பாடல்களால் உலகை நீத்தலின் பொருட்டு விண்ணப்பிக்கின்றார் ! இறைவனோ திருப்பெருந்துறையில் உள்ளம் கசிந்து உடலும் என்பும் உருகி நின்று ஞானத்தின் மணிவாசகர் காணத் தவறிய கோலத்தைக் காட்டி போதலர்ந் தேன் சொரியும் தெளிவை நான் மறையின் முடிவை சிற்றறிவு உணரமுடியாத எண்சித்திகளையும் மணிவாசகர் பெறும் வகையில் அருளி சிவனை உற்றறியும் உள்ளன்பு பெற்றார் ! ஒரு காதலி காதலனைத் தேடி பிரிவு ஆற்றாமல் புலம்பும் நிலையைப் போலானார் . இவ்வுலகத்தவர் இவரை பித்தன் என்றனர் ! பெரும் சுகபோக அரசபணி துறந்து பிச்சை தேவருக்கே மறைந்தார் ! அதன் பின்னரும் அற்புதமான மனம் உருகும் திருவாசகப் பதிகங்களை மணிவாசகர் நெக்குருகிப் பாடினார் ! அங்கிருந்து சோழவளநாடு சென்று திருவாருரில் சிவானந்த முதிர்வால் இறைவனைத் திருப்புலம்பல் செய்து பாடுகின்றார் ! வாதவூர் எங்கோமான் வாசகத்தை ஓதிப் பிறவிப் பிணி நீக்கிப் பேரின்ப வெள்ளச் செறிவுக்குள் செல்வர் சிறந்து திருச்சிற்றம்பலம்