தென்னாடு ஆடித் திங்கள் இதழ் - 10

தெ 04 தென்னாடு வாழிற்சிழாகள் சிாடககுவின்வாணன்ட wwwthaழை சிவத்திரு. சிவ செந்தமிழாதன், தலைவர் - சைவ மாணவர் சபை, (பதிவு-HA/4/JA/343) |0715588737, aathan@thennadu.org பண்பாடு பாயுமா? உலக மொழிகளில் தமிழை 'முந்து தமிழ்' என்று சிறப்புச் சொல்லி அழைக்கின்றனர். அது, கண்ணுதற் பெருங்கடவுளே, கழகமோடு அமர்ந்து ஆய்ந்தறிந்த மொழி. எனவே காலத்தால் ஞாலத்தில் மூத்த மொழி, அதாவது முன்னரே வந்த மொழி என்பதாலே தான் ‘முந்து தமிழ்’ என்கின்ற னர். ஒரு மொழி இவ்வளவு சிறப்புப் பெறுகிறது என்றால், அந்த மொழியைச் சுமந்து பெற்றிருக்க கூடிய பண்பாடு, அதனிலும் மூத்ததாக, சிறப்பு வாய்ந்ததாக நேர்த்தியாக இருக்க வேண்டும்! அந்த நேர்த்தியும் அழகும் காலகாலமாகத் தொடர்ந்து வந்திருக்க வேண்டும். அந்தப் பண்பாடு, விழாக்களையும் சடங்குகளையும், நடைமுறை களையும் ஏன், அறிவியலையும் தன்னகத்தே கொண்டிருக்க வேண்டும்! அத்தகு பெரும் பொருண்மையும், அழகும் வாய்ந்த பண்பாடே, தமிழர் பண்பாடு! இது தலைமுறை தாண்டி நிலைக்க வேண்டி, நாம், பண்பாடு அறிந்து ஒழுகுவதும், அதன் அழகியல் கோலங்களைக் கடத்துவதும் நமக்குரிய பெருங்கடமையாகும். ஆனால் சமூக முற்றடக்கமும், இப்பெருந்தொற்றும், ஆண்டுகள் தாண்டி தொடருமேயானால், அந்தப் பண்பாட்டுக்கு கடத்துகையின் உச்சந்தலையில் விழுந்த அடியாகவே அது அமைந்து விடும்! கூடி வாழ்வதும், சேர்ந்து உழைப்பதும், கலையின்பத்தை ஒன்றாக அனுபவித்து மகிழ்வதும் தமிழரின் கூட்டு வாழ்வியக்கம் எனலாம்! கடந்த தினங்களில் நாம் எந்த ஆர்ப்பாட்டமும் இன்றிக் கடந்துவந்த, 'ஆடிப் பிறப்பு' என்பது, தமிழரின் கூட்டுவாழ்வின் ஒரு மகத்தான பிரதிபலிப்பு என்பதை, அடுத்த தலைமுறைக்கு எப்படிச் சொல்லப்போகின்றோம்? அந்த விளக்கத்தை வரும் தலைமுறை ஏற்றுக் கொள்ள எதைச் சான்றுகாட்டப் போகின்றோம்? இப்படி பல கேள்விகளால், வரலாற்றைத் தக்கவைக்க இயலாமல் போய்விடுமோ என்று மனது அவதிமிகவுறுகிறது! நிலத்தை உழும் காலம் தான் ஆடி! விவசாய நிலத்தை தயார்படுத்துவதற்காக, விவசாய எல்லோரும் கூடி, ஒருவருக்கு ஒருவர் உதவியாய், ஒருவர் நிலத்தில் ஒருவர் உழைத்துக் கொடுப்பார்கள். அதற்க்கு அதிக உடற்சக்தி தேவை! அதை கொடுக்க. உளுந்தை அரைத்து, கூழாக்கி, நிறையுணவாய், சோர்வைப் போக்கும் வெல்லத்தைச் சேர்த்து செய்த கொழுக்கட்டையும் எல்லோரும் கூடி உண்டு களைப்பை போக்கி மகிழ்வார்கள். ஆடி பிறந்து விட்டாலே இதுதான் ஊர்முழுவதும் விழாவாய் நடக்கும்! களைப்பு மறக்க, விளையாட்டுகளிலும் ஈடுபடுவர். இந்தப் பண்பாடு பிற்காலங்களில் ஒரு நாளாய், ஆடி முதல் நாளாய் சுருங்கியது. இன்று ஊர் கூடமுடிய காரணத்தால், அதுவும் மெல்ல மறந்து போகிறது. முன்னரெல்லாம் ஆடிக் கூழ் குடித்து, ஆடிப்படிய இளையவர்கள் இன்று, கைப்பேசிகளுக்குள்ளும், கணணிகளுக்குள்ளும் முடங்கிக் கிடந்து, சினிமா மோகத்தால் திரைநாயகர்களை வியந்து போற்றும் அவலநிலையை எப்படிச் சொல்வது? இரண்டு ஆண்டுகளாய் தொடரும், பெருந்தொதொற்றால், எம் பண்பாடு தொலைந்து போகாமல் பாதுகாக்க இளையவர்கள் முன் வரவேண்டும்! தம்மை மூடியிருக்கும், பொய்மாயப் பெருந்திரைகளை கிழித்து, புத்தொளி வீசும், புதிய சிந்தனைகளால், எம் பழைமையைக் காத்திட அணிஅணியாய் இளையவர்கள் எழுந்தால், எந்த அந்நிய விசையும் எம்மை எதுவும் செய்யாது என்பதை உணர்வோம்! சங்குப்பிட்டி பாலத்தின் அருகிலே வளர்ந்த அரசமரத்தடியில், பிள்ளையாரை வைத்து, இப்போது சில இளையவர்கள் பொங்கலிடு வதையும் காண்கின்றோம்! இது மகிழ்ச்சி தரும் மாற்றமேயாகும்! இந்த மாற்றம், எதிர்காலத்திலும் தொடர வேண்டும், அது செம்மலை நீராவியடி பிள்ளையார் கோயில் தொடக்கம், பூசை வழிபாடுகளின்றி எல்லைக் கிராமங்கள் தோறும் புதர் மண்டிக் கிடக்கும், பூர்வீகத் தமிழர்களின் சைவ ஆலயங்களில் எல்லாம் தேவார பாராயணமும், சிவத்தொண்டும் இடம்பெற வேண்டும். வேண்டும் அடியவர்களுக்கு அருளோடு அமுதும் அளித்து அரவணைக்கும் ஆதுரசாலைகளும் அந்த ஆலயங்கள் தோறும் நிறுவப்பட வேண்டும்! அதன் மூலம் மதமாற்றமும் மனமாற்றமும் சைவத்தமிழர் களிடையே ஏற்படுவதை தடுக்க வேண்டும்! பண்பாடு அடுத்த தலைமுறையை நோக்கியும் பெருவெள்ளமாய் பாயவேண்டும்! இதற்கெல்லாம் இறையருள் துணை செய்ய வேண்டும்! 'மட்டிட்ட புன்னையங் கானன் மடமயிலைக் கட்டிட்டங் கொண்டான் கபாலீச் சரமமர்ந்தான் ஒட்டிட்ட பண்பி னுருத்திர பல்கணத்தார்க் கட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்' திருச்சிற்றம்பலம் தென்னாடு கடக நல்லோரை ஆடித் திங்கள், 2021 சைவத்தின் தலைமைப்பீடமான இலங்கையின் முதலாவது இந்துக் கல்லூரி யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி இக்கல்லூரி. OLLEGE “கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக" பத்தொன்பதாம் நூற்றாண்டிலே ஆங்கில மொழி மூலமான மேல்நாட்டுக் கல்விமுறை கிறித்தவ மிசனரிமாரால் அறிமுகம் செய்யப்பட்டது. யாழ்ப்பாணத்தில் மிசனரிமார் பெருமளவு பாடசாலைகளை நிறுவிக் கல்வி புகட்டியபோதும் அவர்களது பிரதான நோக்கம் கிறித்தவ சமயத்தினைப் பரப்புவதாகவே இருந்தது. இதனால் பெருமளவு சைவ மாணவர்கள் மதம் மாறும் நிலை காணப்பட்டது. இதனால் சமூகப் பெரியோர் பலர் சைவத்தையும் தமிழையும் முக்கியத்துவப்படுத்திப் பாடசாலைகளைத் தோற்றுவித்தனர். ஆயினும் ஆங்கிலப் பாடசாலை களை நிறுவும் முயற்சி கைகூடவில்லை. 1886இல் தில்லையில் வரம் வேண்டிப் பெற்ற பெரியவர் முத்துக்குமாரர் சிதம்பரப்பிள்ளை எனும் பேராசானால், நகராக்கிரம விதாலயம் (Town High School) என்னும் பெயரில் ஆங்கிலப் பாடசாலை யாழ்ப்பாண நகரில் தொடங்கப்பட்டது. இதுவே யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் தொடக்கம் ஆகும். சிதம்பரப்பிள்ளை அவர்கள் பல நூல்களை எழுதிய கல்விமான். யாழ்ப்பாணம் மத்திய கல்லூ ரியின் தலைமையாசிரியராகப் பல ஆண்டுகள் பதவி வகித்தவர். மிசனரிமாரிடம் கல்வி கற்கும் காலத்தில் வில்லியம் நெவின்ஸ் எனும் பெயரையும் பெற்றவர். அக்காலத்தில் மிசனரிப் பாடசாலையாக இருந்த மத்திய கல்லூரியின் தலைமையாசிரியர் பதவியி லிருந்து விலகிய கையோடு அவர் மிசனரிமாரின் தொடர்புகள் இல்லாமல் சுதேசப் பாடசாலையாக நகராக்கிரம விதாலயத்தைத் தொடங்கினார். சிதம்பரப்பிள்ளை அவர்கள் பாடசாலையைத் தொடர்ந்து நடத்துவதில் சிரமங்களை எதிர்கொண்ட மையால் வேறு ஒருவரிடம் ஒப்படைக்க நினைத்தார். அக்காலத்தில் சமூகப் பணிகளிலும் சைவ சமயப் பணிகளிலும் முன்னின்று உழைத்த சின்னத்துரை நாகலிங்கம் அவர்களிடம் பாடசாலையை 1889இல் ஒப்படைத்தார். நாகலிங்கம் பாடசாலையை சைவர்கள் அதிகம் வசித்த வண்பண்ணைக்கு இடம் மாற்றினார். திங்கள் ஒரு பள்ளி அக்காலத்தில் பாடசாலை நாகலிங்கம் நகரப் பாடசாலை என அழைக்கப்படலானது. பாடசாலையைத் தொடர்ந்து முன்னேற்றும் முயற்சியில் நாகலிங்கம் 1890இல் பாடசாலையைச் சைவ பரிபாலன சபையாரிடம் ஒப்படைத்தார். சைவ சமயத்துக்கு முக்கியத்துவம் வழங்கும் வகையில் பாடசாலையின் பெயர் மீண்டும் மாற்றப்பட்டு, The Hindu High School என அழைக்கப்படலானது. அவ்வகையில் 1890 இந்துக் கல்லூரி வரலாற்றின் முக்கிய மைல்கல் ஆகியது. சைவ பரிபாலன சபையின் கீழ் பாடசாலையின் முதல் முகாமையாளராக நாகலிங்கம் தெரிவானார். கோட்மன் அப்பாப்பிள்ளை அவர்கள் தொடர்ந்தும் தலைமை ஆசிரியராக இருந்தார். பாடசாலைக்கான காணியை வாங்கிப் பாடசாலையை நிலை பெறச் செய்வதற்கு முத்துக்குமாரு செட்டியார், பசுபதிச் செட்டியார் அரும்பணி ஆற்றினார். ஆரம்பத்தில் மோசமான நிலையில் இருந்த பாடசாலையைச் சிறப்பாக முன்னெடுக்கும் முயற்சியில் நெவின்ஸ் செல்லத்துரை அவர்களைப் பாடசாலையின் அதிபராக அழைத்தவரும் பசுபதிச் செட்டியாரே. செல்லத்துரை பாடசாலையை முதலில் ஆரம்பித்த சிதம்பரப்பிள்ளையின் மகன் என்பது குறிப்பிடத் தக்கது. சிதம்பரப்பிள்ளை செல்லத்துரை (நெவின்ஸ் செல்லத்துரை) 18.02.1892இல் பாடசாலையின் அதிபரானார். இவர் காலத்தில் பாடசாலை பெரு வளர்ச்சி கண்டது. அக்காலத்தில் பாடசாலையை மக்கள் ‘செல்லத்துரை பாடசாலை' எனவும் அழைத்த னர். 1893இல் கல்கத்தா பல்கலைக் கழகத்தினால் உயர் பாடசாலையாக (High School) அங்கீகரிக்கப் பட்டது. 1895இல் கல்கத்தா பல்கலைக் கழகத்தினால் கல்லூரி என்ற அங்கீகாரமும் வழங்கப்பட்டது. பாடசாலையின் பெயர் "இந்துக் கல்லூரி, யாழ்ப்பாணம்" என மாற்றப்பட்டது. 1895இல் கல்லூரியின் பிரதான கட்டிடமும் திறந்து வைக்கப்பட்டது. 1897இல் நாகலிங்கம் காலமாகியதைத் தொடர்ந்து விசுவலிங்கம் காசிப்பிள்ளை பாடசாலையின் முகாமையாளராகி, 1914 வரை பணியாற்றினார். (05ஆம் பக்கம் பார்க்க) இப்பகுதியில் உங்கள் பாடசாலையின் வரலாறு இடம்பெறவேண்டுமாயின் இரண்டு பக்கங்களுக்கு மேற்படாமல் எழுதி எமக்கு அனுப்பி வையுங்கள். தென்னாடு செந்தமிழாகம சிவமடம் குளங்கரை வீதி, கொக்குவில் கிழக்கு, கொக்குவில், யாழ்ப்பாணம். மின்னஞ்சல் : thennavan@thennadu.org
தெ 04 தென்னாடு வாழிற்சிழாகள் சிாடககுவின்வாணன்ட wwwtha ழை சிவத்திரு . சிவ செந்தமிழாதன் தலைவர் - சைவ மாணவர் சபை ( பதிவு- HA / 4 / JA / 343 ) | 0715588737 aathan@thennadu.org பண்பாடு பாயுமா ? உலக மொழிகளில் தமிழை ' முந்து தமிழ் ' என்று சிறப்புச் சொல்லி அழைக்கின்றனர் . அது கண்ணுதற் பெருங்கடவுளே கழகமோடு அமர்ந்து ஆய்ந்தறிந்த மொழி . எனவே காலத்தால் ஞாலத்தில் மூத்த மொழி அதாவது முன்னரே வந்த மொழி என்பதாலே தான் முந்து தமிழ் என்கின்ற னர் . ஒரு மொழி இவ்வளவு சிறப்புப் பெறுகிறது என்றால் அந்த மொழியைச் சுமந்து பெற்றிருக்க கூடிய பண்பாடு அதனிலும் மூத்ததாக சிறப்பு வாய்ந்ததாக நேர்த்தியாக இருக்க வேண்டும் ! அந்த நேர்த்தியும் அழகும் காலகாலமாகத் தொடர்ந்து வந்திருக்க வேண்டும் . அந்தப் பண்பாடு விழாக்களையும் சடங்குகளையும் நடைமுறை களையும் ஏன் அறிவியலையும் தன்னகத்தே கொண்டிருக்க வேண்டும் ! அத்தகு பெரும் பொருண்மையும் அழகும் வாய்ந்த பண்பாடே தமிழர் பண்பாடு ! இது தலைமுறை தாண்டி நிலைக்க வேண்டி நாம் பண்பாடு அறிந்து ஒழுகுவதும் அதன் அழகியல் கோலங்களைக் கடத்துவதும் நமக்குரிய பெருங்கடமையாகும் . ஆனால் சமூக முற்றடக்கமும் இப்பெருந்தொற்றும் ஆண்டுகள் தாண்டி தொடருமேயானால் அந்தப் பண்பாட்டுக்கு கடத்துகையின் உச்சந்தலையில் விழுந்த அடியாகவே அது அமைந்து விடும் ! கூடி வாழ்வதும் சேர்ந்து உழைப்பதும் கலையின்பத்தை ஒன்றாக அனுபவித்து மகிழ்வதும் தமிழரின் கூட்டு வாழ்வியக்கம் எனலாம் ! கடந்த தினங்களில் நாம் எந்த ஆர்ப்பாட்டமும் இன்றிக் கடந்துவந்த ' ஆடிப் பிறப்பு ' என்பது தமிழரின் கூட்டுவாழ்வின் ஒரு மகத்தான பிரதிபலிப்பு என்பதை அடுத்த தலைமுறைக்கு எப்படிச் சொல்லப்போகின்றோம் ? அந்த விளக்கத்தை வரும் தலைமுறை ஏற்றுக் கொள்ள எதைச் சான்றுகாட்டப் போகின்றோம் ? இப்படி பல கேள்விகளால் வரலாற்றைத் தக்கவைக்க இயலாமல் போய்விடுமோ என்று மனது அவதிமிகவுறுகிறது ! நிலத்தை உழும் காலம் தான் ஆடி ! விவசாய நிலத்தை தயார்படுத்துவதற்காக விவசாய எல்லோரும் கூடி ஒருவருக்கு ஒருவர் உதவியாய் ஒருவர் நிலத்தில் ஒருவர் உழைத்துக் கொடுப்பார்கள் . அதற்க்கு அதிக உடற்சக்தி தேவை ! அதை கொடுக்க . உளுந்தை அரைத்து கூழாக்கி நிறையுணவாய் சோர்வைப் போக்கும் வெல்லத்தைச் சேர்த்து செய்த கொழுக்கட்டையும் எல்லோரும் கூடி உண்டு களைப்பை போக்கி மகிழ்வார்கள் . ஆடி பிறந்து விட்டாலே இதுதான் ஊர்முழுவதும் விழாவாய் நடக்கும் ! களைப்பு மறக்க விளையாட்டுகளிலும் ஈடுபடுவர் . இந்தப் பண்பாடு பிற்காலங்களில் ஒரு நாளாய் ஆடி முதல் நாளாய் சுருங்கியது . இன்று ஊர் கூடமுடிய காரணத்தால் அதுவும் மெல்ல மறந்து போகிறது . முன்னரெல்லாம் ஆடிக் கூழ் குடித்து ஆடிப்படிய இளையவர்கள் இன்று கைப்பேசிகளுக்குள்ளும் கணணிகளுக்குள்ளும் முடங்கிக் கிடந்து சினிமா மோகத்தால் திரைநாயகர்களை வியந்து போற்றும் அவலநிலையை எப்படிச் சொல்வது ? இரண்டு ஆண்டுகளாய் தொடரும் பெருந்தொதொற்றால் எம் பண்பாடு தொலைந்து போகாமல் பாதுகாக்க இளையவர்கள் முன் வரவேண்டும் ! தம்மை மூடியிருக்கும் பொய்மாயப் பெருந்திரைகளை கிழித்து புத்தொளி வீசும் புதிய சிந்தனைகளால் எம் பழைமையைக் காத்திட அணிஅணியாய் இளையவர்கள் எழுந்தால் எந்த அந்நிய விசையும் எம்மை எதுவும் செய்யாது என்பதை உணர்வோம் ! சங்குப்பிட்டி பாலத்தின் அருகிலே வளர்ந்த அரசமரத்தடியில் பிள்ளையாரை வைத்து இப்போது சில இளையவர்கள் பொங்கலிடு வதையும் காண்கின்றோம் ! இது மகிழ்ச்சி தரும் மாற்றமேயாகும் ! இந்த மாற்றம் எதிர்காலத்திலும் தொடர வேண்டும் அது செம்மலை நீராவியடி பிள்ளையார் கோயில் தொடக்கம் பூசை வழிபாடுகளின்றி எல்லைக் கிராமங்கள் தோறும் புதர் மண்டிக் கிடக்கும் பூர்வீகத் தமிழர்களின் சைவ ஆலயங்களில் எல்லாம் தேவார பாராயணமும் சிவத்தொண்டும் இடம்பெற வேண்டும் . வேண்டும் அடியவர்களுக்கு அருளோடு அமுதும் அளித்து அரவணைக்கும் ஆதுரசாலைகளும் அந்த ஆலயங்கள் தோறும் நிறுவப்பட வேண்டும் ! அதன் மூலம் மதமாற்றமும் மனமாற்றமும் சைவத்தமிழர் களிடையே ஏற்படுவதை தடுக்க வேண்டும் ! பண்பாடு அடுத்த தலைமுறையை நோக்கியும் பெருவெள்ளமாய் பாயவேண்டும் ! இதற்கெல்லாம் இறையருள் துணை செய்ய வேண்டும் ! ' மட்டிட்ட புன்னையங் கானன் மடமயிலைக் கட்டிட்டங் கொண்டான் கபாலீச் சரமமர்ந்தான் ஒட்டிட்ட பண்பி னுருத்திர பல்கணத்தார்க் கட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய் ' திருச்சிற்றம்பலம் தென்னாடு கடக நல்லோரை ஆடித் திங்கள் 2021 சைவத்தின் தலைமைப்பீடமான இலங்கையின் முதலாவது இந்துக் கல்லூரி யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி இக்கல்லூரி . OLLEGE கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக பத்தொன்பதாம் நூற்றாண்டிலே ஆங்கில மொழி மூலமான மேல்நாட்டுக் கல்விமுறை கிறித்தவ மிசனரிமாரால் அறிமுகம் செய்யப்பட்டது . யாழ்ப்பாணத்தில் மிசனரிமார் பெருமளவு பாடசாலைகளை நிறுவிக் கல்வி புகட்டியபோதும் அவர்களது பிரதான நோக்கம் கிறித்தவ சமயத்தினைப் பரப்புவதாகவே இருந்தது . இதனால் பெருமளவு சைவ மாணவர்கள் மதம் மாறும் நிலை காணப்பட்டது . இதனால் சமூகப் பெரியோர் பலர் சைவத்தையும் தமிழையும் முக்கியத்துவப்படுத்திப் பாடசாலைகளைத் தோற்றுவித்தனர் . ஆயினும் ஆங்கிலப் பாடசாலை களை நிறுவும் முயற்சி கைகூடவில்லை . 1886 இல் தில்லையில் வரம் வேண்டிப் பெற்ற பெரியவர் முத்துக்குமாரர் சிதம்பரப்பிள்ளை எனும் பேராசானால் நகராக்கிரம விதாலயம் ( Town High School ) என்னும் பெயரில் ஆங்கிலப் பாடசாலை யாழ்ப்பாண நகரில் தொடங்கப்பட்டது . இதுவே யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் தொடக்கம் ஆகும் . சிதம்பரப்பிள்ளை அவர்கள் பல நூல்களை எழுதிய கல்விமான் . யாழ்ப்பாணம் மத்திய கல்லூ ரியின் தலைமையாசிரியராகப் பல ஆண்டுகள் பதவி வகித்தவர் . மிசனரிமாரிடம் கல்வி கற்கும் காலத்தில் வில்லியம் நெவின்ஸ் எனும் பெயரையும் பெற்றவர் . அக்காலத்தில் மிசனரிப் பாடசாலையாக இருந்த மத்திய கல்லூரியின் தலைமையாசிரியர் பதவியி லிருந்து விலகிய கையோடு அவர் மிசனரிமாரின் தொடர்புகள் இல்லாமல் சுதேசப் பாடசாலையாக நகராக்கிரம விதாலயத்தைத் தொடங்கினார் . சிதம்பரப்பிள்ளை அவர்கள் பாடசாலையைத் தொடர்ந்து நடத்துவதில் சிரமங்களை எதிர்கொண்ட மையால் வேறு ஒருவரிடம் ஒப்படைக்க நினைத்தார் . அக்காலத்தில் சமூகப் பணிகளிலும் சைவ சமயப் பணிகளிலும் முன்னின்று உழைத்த சின்னத்துரை நாகலிங்கம் அவர்களிடம் பாடசாலையை 1889 இல் ஒப்படைத்தார் . நாகலிங்கம் பாடசாலையை சைவர்கள் அதிகம் வசித்த வண்பண்ணைக்கு இடம் மாற்றினார் . திங்கள் ஒரு பள்ளி அக்காலத்தில் பாடசாலை நாகலிங்கம் நகரப் பாடசாலை என அழைக்கப்படலானது . பாடசாலையைத் தொடர்ந்து முன்னேற்றும் முயற்சியில் நாகலிங்கம் 1890 இல் பாடசாலையைச் சைவ பரிபாலன சபையாரிடம் ஒப்படைத்தார் . சைவ சமயத்துக்கு முக்கியத்துவம் வழங்கும் வகையில் பாடசாலையின் பெயர் மீண்டும் மாற்றப்பட்டு The Hindu High School என அழைக்கப்படலானது . அவ்வகையில் 1890 இந்துக் கல்லூரி வரலாற்றின் முக்கிய மைல்கல் ஆகியது . சைவ பரிபாலன சபையின் கீழ் பாடசாலையின் முதல் முகாமையாளராக நாகலிங்கம் தெரிவானார் . கோட்மன் அப்பாப்பிள்ளை அவர்கள் தொடர்ந்தும் தலைமை ஆசிரியராக இருந்தார் . பாடசாலைக்கான காணியை வாங்கிப் பாடசாலையை நிலை பெறச் செய்வதற்கு முத்துக்குமாரு செட்டியார் பசுபதிச் செட்டியார் அரும்பணி ஆற்றினார் . ஆரம்பத்தில் மோசமான நிலையில் இருந்த பாடசாலையைச் சிறப்பாக முன்னெடுக்கும் முயற்சியில் நெவின்ஸ் செல்லத்துரை அவர்களைப் பாடசாலையின் அதிபராக அழைத்தவரும் பசுபதிச் செட்டியாரே . செல்லத்துரை பாடசாலையை முதலில் ஆரம்பித்த சிதம்பரப்பிள்ளையின் மகன் என்பது குறிப்பிடத் தக்கது . சிதம்பரப்பிள்ளை செல்லத்துரை ( நெவின்ஸ் செல்லத்துரை ) 18.02.1892 இல் பாடசாலையின் அதிபரானார் . இவர் காலத்தில் பாடசாலை பெரு வளர்ச்சி கண்டது . அக்காலத்தில் பாடசாலையை மக்கள் செல்லத்துரை பாடசாலை ' எனவும் அழைத்த னர் . 1893 இல் கல்கத்தா பல்கலைக் கழகத்தினால் உயர் பாடசாலையாக ( High School ) அங்கீகரிக்கப் பட்டது . 1895 இல் கல்கத்தா பல்கலைக் கழகத்தினால் கல்லூரி என்ற அங்கீகாரமும் வழங்கப்பட்டது . பாடசாலையின் பெயர் இந்துக் கல்லூரி யாழ்ப்பாணம் என மாற்றப்பட்டது . 1895 இல் கல்லூரியின் பிரதான கட்டிடமும் திறந்து வைக்கப்பட்டது . 1897 இல் நாகலிங்கம் காலமாகியதைத் தொடர்ந்து விசுவலிங்கம் காசிப்பிள்ளை பாடசாலையின் முகாமையாளராகி 1914 வரை பணியாற்றினார் . ( 05 ஆம் பக்கம் பார்க்க ) இப்பகுதியில் உங்கள் பாடசாலையின் வரலாறு இடம்பெறவேண்டுமாயின் இரண்டு பக்கங்களுக்கு மேற்படாமல் எழுதி எமக்கு அனுப்பி வையுங்கள் . தென்னாடு செந்தமிழாகம சிவமடம் குளங்கரை வீதி கொக்குவில் கிழக்கு கொக்குவில் யாழ்ப்பாணம் . மின்னஞ்சல் : thennavan@thennadu.org