தென்னாடு ஆடித் திங்கள் இதழ் - 10

கடக நல்லோரை ஆடித் திங்கள், 2021 தென்னாடு சைவத்தின் தலைமைப்பீடமான இலங்கையின் முதலாவது இந்துக் கல்லூரி (04ஆம் பக்கத் தொடர்ச்சி) 1888 அவருக்குப் பின்னர் 1914-24 காலத்தில் அருணாசலம் சபாபதி அவர்கள் முகாமையாளராகப் பணியாற்றினார். நாகலிங்கம், பசுபதி, சபாபதி, காசிப்பிள்ளை ஆகியோர் 1890இல் பாடசாலையைச் சைவ பரிபாலன சபை பொறுப்பேற்ற போது இருந்த முகாமைத்துவக் குழுவில் இருந்தவர்கள். இவர்களுடன் முதலாவது அதிபராகி முக்கிய பணியாற்றிய செல்லத்துரையையும் இணைத்து இந்த ஐவர் பெயரிலேயே கல்லூரியின் விளையாட்டு இல்லங்கள் பெயர் சூட்டப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. தில்லையில் வரம் வேண்டிப் பெற்ற பெரியவர் முத்துக்குமாரர் சிதம்பரப்பிள்ளை, சிதம்பரப்பிள்ளை யின் மகன் செல்லத்துரை, மற்றும் சின்னத்துரை நாகலிங்கம், விசுவலிங்கம் காசிப்பிள்ளை, அருணாசலம் சபாபதி என்று எல்லாம் சிவபெயர்களாகவே இருக்கின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது. 1892 முதல் 1909 வரையும் பின்னர், 1914 முதல் 1926 வரையுமாக சுமார் 30 ஆண்டுகள் செல்லத்துரை பாடசாலையின் அதிபராகப் பணியாற்றினார். 1933 முதல் 1952 வரையான 20 ஆண்டுகள் குமாரசுவாமி அவர்கள் அதிபராகப் பணியாற்றினார். அவ்வகையில் இவ்விரு அதிபர்களும் எமது கல்லூரி தனிப்பெருங் கழகமாக வளரப் பெரும் பங்களிப்புச் செய்தனர். குமாரசுவாமி பாடசாலையின் அதிபரான முதலாவது பழைய மாணவன் என்பதும் பெண்களையும் பாடசாலைக்கு இணைத்துப் பின்னர் இந்து மகளிர் கல்லூரி உருவாகக் காரணமான இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரது பெயரே எம் கல்லூரியின் பிரதான மண்டபத்துக்குச் சூட்டப்பட்டுள்ளது. 1902 இல் “யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் இயக்குனர் சபை” (Board of Directors of Jaffna Hindu College) எனும் அமைப்பு உருவாக்கப்பட்டு நிர்வாகத்தைப் பொறுப்பேற்றது. அந்த வருடத்திலேயே, இப்போதும் பயன்பாட்டில் இருக்கும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (The Jaffna Hindu College) எனும் பெயர் பயன்பாட்டுக்கு வந்தது. இந்த இயக்குனர் சபையால் மேலும் பல கிளைப் பாடசாலைகள் உருவாக்கப்பட்டு, நிர்வகிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். இக்கிளைகளும் இப்போது பெரும் பாடசாலைகளாக வளர்ச்சியடைந்துள்ளன. கொக்குவில் இந்துக் கல்லூரி, சாவகச்சேரி இந்துக் கல்லூரி, உரும்பிராய் இந்துக் கல்லூரி, காரைநகர் இந்துக் கல்லூரி, வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி, யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி போன்றவை அத்தகைய பாடசாலைகள் ஆகும். 1960 டிசம்பரில் அரசாங்கம் பாடசாலைகளைப் பொறுப்பேற்ற காலம் வரை இந்த இயக்குனர் சபையே கல்லூரியை நிர்வகித்தது. அரசாங்கம் பாடசாலையைப் பொறுப்பேற்றபோது இயக்குனர் சபை ஆரம்பத்தில் திட்டமிட்ட வகையில், ஆரம்பித்த தேவை மற்றும் நோக்கங்களுடன் கல்லூரி தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என இணக்கம் காணப்பட்டது. 1903இல் இந்து இளைஞர் கழகம் தொடங்கப்பட்டது. 1907இல் இலக்கியச் சங்கம் தொடங்கப்பட்டு வாராந்த PA கூட்டங்கள் நடைபெறத் தொடங்கியது. 1916இல் சாரணர் துருப்பு உருவாக்கப்பட்டது. 1943இல் மாணவர் முதல்வர் சபை தொடங்கப்பட்டது. 1965இல் தமிழ்ப் பேரவையும், 1975இல் சதுரங்கக் கழகமும் உருவாகின. தமிழ்ச் சங்கம் 1989இல் தொடங்கப்பட்டது. 1981இல் பரியோவான் முதலுதவிப் படையும், 1989இல் செஞ்சிலுவைச் சங்கமும் உருவாகின. 1991 இல் இன்ரறக்ற் கழகம், லியோ கழகம் ஆகியனவும் 1992இல் சேவைக்கழகமும் தொடங்கப்பட்டன. இத்தகைய கழகங்கள், சங்கங்களில் சேர்ந்து இணைப் பாடவிதானச் செயற்பாடுகளில் ஈடுபடும் மாணவர்கள் கல்வியிலும் தலைமைத்துவத்திலும் பாடசாலைக்கு வெளியேயும் மிளிர்பவர்களாக உள்ளனர். 1899இல் துடுப்பாட்டக் கழகமும் (cricket club) 1904இல் உதைபந்தாட்டக் கழகமும் தொடங்கப்பட்டன. ஆரம்பத்தில் பாடசாலைக்கெனத் தனியான மைதானம் இருக்கவில்லை. காக்கைவெளி போன்ற இடங்களில் விளையாட்டுப் போட்டிகள் நடந்துள்ளன. குத்தகைக்குப் பெற்று முற்றவெளி மைதானத்தை மாணவர் பயன்படுத்தி வந்தனர். 1933இல் இல்ல விளையாட்டுப் போட்டிகள் தொடங்கப்பட்டன. 1938-06-25 அன்று கல்லூரியின் விளையாட்டு மைதானம் சிறிய அளவில் திறக்கப்பட்டது. 1954 இல் இந்து ஆரம்ப பாடசாலை புதிய இடத்துக்கு நகர்த்தப்பட்ட பின் அக்காணியையும் இணைத்து மைதானம் விரிவாகியது. இதன் பின்னர் 1992 முதல் அயற் காணிகளை இணைத்து மைதானத்தை விரிவாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 2001இல் குமாரசுவாமி மண்டபத்துக்கு அருகே கூடைப் பந்தாட்ட மைதானம் அமைக்கப்பட்டது. கல்லூரியின் நூலக வரலாறு 1887இல் தொடங்குகிறது. 05 கொ 1887இல் நாகலிங்கத்தால் விக்ரோறியா வாசிகசாலை எனும் நூலகம் தொடங்கப்பட்டது. இது 1895இல் கல்லூரிக்கு மாற்றப்பட்டது. 1910இல் இவ்வாசிகசாலை சைவ பரிபாலன சபையால் பொறுப்பேற்கப்பட்டுப் பின்னர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி வாசிகசாலை ஆனது. 1950இல் முழுநேர நூலகர் நியமிக்கப்பட்டார். பஞ்சலிங்கம் அதிபர் காலத்தில் உயர்தர மாணவருக்குத் தனியான நூலகமும் ஏனைய மாணவர்களுக்கு இரண்டு நூலகங்களும் என நூலகம் மூன்று பிரிவுகளாக்கப்பட்டது. பின்னர் இளநிலை நூ லகங்கள் ஒன்றாக்கப்பட்டன. இந்த நூலகம் 2015இல் ஐக்கிய இராச்சியப் பழைய மாணவர் சங்கத்தினால் விரிவாக்கப்பட்டுச் சிவராமலிங்கம் நினைவு நூலகமாகத் திறந்து வைக்கப்பட்டது. கல்லூரி தொடங்கப்பட முன்னரே கல்லூரிக்கென வாங்கப்பட்ட காணியில் வைரவ சூலம் அமைத்து, வழிபாடு நடைபெற்று வந்தது. 1895 அளவில் ஒரு கொட்டில் அமைத்து பூசைசெய்யும் ஒழுங்குகள் ஏற்படுத்தப்பட்டன. 1903இல் அதிபர் செல்லத்துரையின் முயற்சியால் இந்து இளைஞர் கழகம் தொடங்கப்பட்டது. 1923 அளவில் சிவஞான வைரவருக்கென கோயில் அமைக்கப்பட்டது. 1945 இன் பின்னரான காலத்தில் அக்கோயில் மாற்றப்பட்டு இன்னோரிடத்தில் கோயில் அமைக்கப்பட்டது. அக்கோயில் மேற்குநோக்கி அமைந்திருந்தமையால் 1963இல் அது கிழக்கு நோக்கியதாகத் திருத்தியமைக்கப்பட்டது. பின்னர் மீண்டும் பழைய இடத்தில் கோயில் அமைக்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டு இப்போதுள்ள கோயில் 1989-03-10 அன்று முதன்முதலில் குடமுழுக்குக் கண்டது. 2018இல் கல்லூ ரியில் ஞானலிங்கேச்சரர் பீடம், பல அருளாளர்களும் முழங்கிய மிகவும் பழமை வாய்ந்த பிரார்த்தனை மண்டபத்தின் முன்னிருக்கும் மேடையில் அமைக்கப்பட்டு, அங்கே தமிழ்க் கடவுளான சிவன், சிவலிங்க வடிவத்தில் எழுந்தருளப்பட்டு அட்டி வருடம் துலை நல்லோரை ஐப்பசித் திங்கள் 5ம் நாள், கழுவாய் வழிபாட்டு நாளான (பிரதோஷம்) பதின்மும்மைப் பிறைநாள் அன்று திங்கட்கிழமை (22- 10-2018) கடவுள்மங்கல நன்னீராட்டு செய்யப்பட்டு, பின்னர் தமிழ் பூசை முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டு மாணவர்களே தாமாக வழிபடும் பண்பாடு புதுப்பிக்கப்பட்டது. பழைய மாணவர் சங்க அனுசரணையில் “Jaffna Hindu College Calendar, 1910” எனும் ஆண்டுமலர் முதன்முதலாக 1910இல் வெளியானது. கல்லூரியின் ஆரம்ப வரலாறு தொடர்பான பல தகவல்களை இது கொண்டிருக்கிறது. 1911இல் The Jaffna Hindu College Magazine எனும் கல்லூரிச் சஞ்சிகையும் ஆரம்பிக்கப்பட்டது. 1937 இல் இந்து இளைஞன் (Young Hindu) சஞ்சிகை தொடங்கப்பட்டது. இச்சஞ்சிகையே இப்பொழுதும் ஆண்டுமலராகத் தொடர்ந்து வெளியிடப்படுகிறது. எமது கல்லூரியின் முதலாவது நிரந்தர கட்டிடத்துக்கான அடிக்கல் 1891இல் நாட்டப்பட்டு 1895இல் திறக்கப்பட்டது. 1903இல் இலங்கையிலும் மலேசியாவிலும் நிதி திரட்டப்பட்டுக் கட்டிடங்கள் பூர்த்திசெய்யப்பட்டன. 1928இல் புதிய விடுதிக் கட்டிடம் திறக்கப்பட்டது. (06ஆம் பக்கம் பார்க்க)
கடக நல்லோரை ஆடித் திங்கள் 2021 தென்னாடு சைவத்தின் தலைமைப்பீடமான இலங்கையின் முதலாவது இந்துக் கல்லூரி ( 04 ஆம் பக்கத் தொடர்ச்சி ) 1888 அவருக்குப் பின்னர் 1914-24 காலத்தில் அருணாசலம் சபாபதி அவர்கள் முகாமையாளராகப் பணியாற்றினார் . நாகலிங்கம் பசுபதி சபாபதி காசிப்பிள்ளை ஆகியோர் 1890 இல் பாடசாலையைச் சைவ பரிபாலன சபை பொறுப்பேற்ற போது இருந்த முகாமைத்துவக் குழுவில் இருந்தவர்கள் . இவர்களுடன் முதலாவது அதிபராகி முக்கிய பணியாற்றிய செல்லத்துரையையும் இணைத்து இந்த ஐவர் பெயரிலேயே கல்லூரியின் விளையாட்டு இல்லங்கள் பெயர் சூட்டப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது . தில்லையில் வரம் வேண்டிப் பெற்ற பெரியவர் முத்துக்குமாரர் சிதம்பரப்பிள்ளை சிதம்பரப்பிள்ளை யின் மகன் செல்லத்துரை மற்றும் சின்னத்துரை நாகலிங்கம் விசுவலிங்கம் காசிப்பிள்ளை அருணாசலம் சபாபதி என்று எல்லாம் சிவபெயர்களாகவே இருக்கின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது . 1892 முதல் 1909 வரையும் பின்னர் 1914 முதல் 1926 வரையுமாக சுமார் 30 ஆண்டுகள் செல்லத்துரை பாடசாலையின் அதிபராகப் பணியாற்றினார் . 1933 முதல் 1952 வரையான 20 ஆண்டுகள் குமாரசுவாமி அவர்கள் அதிபராகப் பணியாற்றினார் . அவ்வகையில் இவ்விரு அதிபர்களும் எமது கல்லூரி தனிப்பெருங் கழகமாக வளரப் பெரும் பங்களிப்புச் செய்தனர் . குமாரசுவாமி பாடசாலையின் அதிபரான முதலாவது பழைய மாணவன் என்பதும் பெண்களையும் பாடசாலைக்கு இணைத்துப் பின்னர் இந்து மகளிர் கல்லூரி உருவாகக் காரணமான இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது . இவரது பெயரே எம் கல்லூரியின் பிரதான மண்டபத்துக்குச் சூட்டப்பட்டுள்ளது . 1902 இல் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் இயக்குனர் சபை ( Board of Directors of Jaffna Hindu College ) எனும் அமைப்பு உருவாக்கப்பட்டு நிர்வாகத்தைப் பொறுப்பேற்றது . அந்த வருடத்திலேயே இப்போதும் பயன்பாட்டில் இருக்கும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ( The Jaffna Hindu College ) எனும் பெயர் பயன்பாட்டுக்கு வந்தது . இந்த இயக்குனர் சபையால் மேலும் பல கிளைப் பாடசாலைகள் உருவாக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும் . இக்கிளைகளும் இப்போது பெரும் பாடசாலைகளாக வளர்ச்சியடைந்துள்ளன . கொக்குவில் இந்துக் கல்லூரி சாவகச்சேரி இந்துக் கல்லூரி உரும்பிராய் இந்துக் கல்லூரி காரைநகர் இந்துக் கல்லூரி வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி போன்றவை அத்தகைய பாடசாலைகள் ஆகும் . 1960 டிசம்பரில் அரசாங்கம் பாடசாலைகளைப் பொறுப்பேற்ற காலம் வரை இந்த இயக்குனர் சபையே கல்லூரியை நிர்வகித்தது . அரசாங்கம் பாடசாலையைப் பொறுப்பேற்றபோது இயக்குனர் சபை ஆரம்பத்தில் திட்டமிட்ட வகையில் ஆரம்பித்த தேவை மற்றும் நோக்கங்களுடன் கல்லூரி தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என இணக்கம் காணப்பட்டது . 1903 இல் இந்து இளைஞர் கழகம் தொடங்கப்பட்டது . 1907 இல் இலக்கியச் சங்கம் தொடங்கப்பட்டு வாராந்த PA கூட்டங்கள் நடைபெறத் தொடங்கியது . 1916 இல் சாரணர் துருப்பு உருவாக்கப்பட்டது . 1943 இல் மாணவர் முதல்வர் சபை தொடங்கப்பட்டது . 1965 இல் தமிழ்ப் பேரவையும் 1975 இல் சதுரங்கக் கழகமும் உருவாகின . தமிழ்ச் சங்கம் 1989 இல் தொடங்கப்பட்டது . 1981 இல் பரியோவான் முதலுதவிப் படையும் 1989 இல் செஞ்சிலுவைச் சங்கமும் உருவாகின . 1991 இல் இன்ரறக்ற் கழகம் லியோ கழகம் ஆகியனவும் 1992 இல் சேவைக்கழகமும் தொடங்கப்பட்டன . இத்தகைய கழகங்கள் சங்கங்களில் சேர்ந்து இணைப் பாடவிதானச் செயற்பாடுகளில் ஈடுபடும் மாணவர்கள் கல்வியிலும் தலைமைத்துவத்திலும் பாடசாலைக்கு வெளியேயும் மிளிர்பவர்களாக உள்ளனர் . 1899 இல் துடுப்பாட்டக் கழகமும் ( cricket club ) 1904 இல் உதைபந்தாட்டக் கழகமும் தொடங்கப்பட்டன . ஆரம்பத்தில் பாடசாலைக்கெனத் தனியான மைதானம் இருக்கவில்லை . காக்கைவெளி போன்ற இடங்களில் விளையாட்டுப் போட்டிகள் நடந்துள்ளன . குத்தகைக்குப் பெற்று முற்றவெளி மைதானத்தை மாணவர் பயன்படுத்தி வந்தனர் . 1933 இல் இல்ல விளையாட்டுப் போட்டிகள் தொடங்கப்பட்டன . 1938-06-25 அன்று கல்லூரியின் விளையாட்டு மைதானம் சிறிய அளவில் திறக்கப்பட்டது . 1954 இல் இந்து ஆரம்ப பாடசாலை புதிய இடத்துக்கு நகர்த்தப்பட்ட பின் அக்காணியையும் இணைத்து மைதானம் விரிவாகியது . இதன் பின்னர் 1992 முதல் அயற் காணிகளை இணைத்து மைதானத்தை விரிவாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன . 2001 இல் குமாரசுவாமி மண்டபத்துக்கு அருகே கூடைப் பந்தாட்ட மைதானம் அமைக்கப்பட்டது . கல்லூரியின் நூலக வரலாறு 1887 இல் தொடங்குகிறது . 05 கொ 1887 இல் நாகலிங்கத்தால் விக்ரோறியா வாசிகசாலை எனும் நூலகம் தொடங்கப்பட்டது . இது 1895 இல் கல்லூரிக்கு மாற்றப்பட்டது . 1910 இல் இவ்வாசிகசாலை சைவ பரிபாலன சபையால் பொறுப்பேற்கப்பட்டுப் பின்னர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி வாசிகசாலை ஆனது . 1950 இல் முழுநேர நூலகர் நியமிக்கப்பட்டார் . பஞ்சலிங்கம் அதிபர் காலத்தில் உயர்தர மாணவருக்குத் தனியான நூலகமும் ஏனைய மாணவர்களுக்கு இரண்டு நூலகங்களும் என நூலகம் மூன்று பிரிவுகளாக்கப்பட்டது . பின்னர் இளநிலை நூ லகங்கள் ஒன்றாக்கப்பட்டன . இந்த நூலகம் 2015 இல் ஐக்கிய இராச்சியப் பழைய மாணவர் சங்கத்தினால் விரிவாக்கப்பட்டுச் சிவராமலிங்கம் நினைவு நூலகமாகத் திறந்து வைக்கப்பட்டது . கல்லூரி தொடங்கப்பட முன்னரே கல்லூரிக்கென வாங்கப்பட்ட காணியில் வைரவ சூலம் அமைத்து வழிபாடு நடைபெற்று வந்தது . 1895 அளவில் ஒரு கொட்டில் அமைத்து பூசைசெய்யும் ஒழுங்குகள் ஏற்படுத்தப்பட்டன . 1903 இல் அதிபர் செல்லத்துரையின் முயற்சியால் இந்து இளைஞர் கழகம் தொடங்கப்பட்டது . 1923 அளவில் சிவஞான வைரவருக்கென கோயில் அமைக்கப்பட்டது . 1945 இன் பின்னரான காலத்தில் அக்கோயில் மாற்றப்பட்டு இன்னோரிடத்தில் கோயில் அமைக்கப்பட்டது . அக்கோயில் மேற்குநோக்கி அமைந்திருந்தமையால் 1963 இல் அது கிழக்கு நோக்கியதாகத் திருத்தியமைக்கப்பட்டது . பின்னர் மீண்டும் பழைய இடத்தில் கோயில் அமைக்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டு இப்போதுள்ள கோயில் 1989-03-10 அன்று முதன்முதலில் குடமுழுக்குக் கண்டது . 2018 இல் கல்லூ ரியில் ஞானலிங்கேச்சரர் பீடம் பல அருளாளர்களும் முழங்கிய மிகவும் பழமை வாய்ந்த பிரார்த்தனை மண்டபத்தின் முன்னிருக்கும் மேடையில் அமைக்கப்பட்டு அங்கே தமிழ்க் கடவுளான சிவன் சிவலிங்க வடிவத்தில் எழுந்தருளப்பட்டு அட்டி வருடம் துலை நல்லோரை ஐப்பசித் திங்கள் 5 ம் நாள் கழுவாய் வழிபாட்டு நாளான ( பிரதோஷம் ) பதின்மும்மைப் பிறைநாள் அன்று திங்கட்கிழமை ( 22 10-2018 ) கடவுள்மங்கல நன்னீராட்டு செய்யப்பட்டு பின்னர் தமிழ் பூசை முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டு மாணவர்களே தாமாக வழிபடும் பண்பாடு புதுப்பிக்கப்பட்டது . பழைய மாணவர் சங்க அனுசரணையில் Jaffna Hindu College Calendar 1910 எனும் ஆண்டுமலர் முதன்முதலாக 1910 இல் வெளியானது . கல்லூரியின் ஆரம்ப வரலாறு தொடர்பான பல தகவல்களை இது கொண்டிருக்கிறது . 1911 இல் The Jaffna Hindu College Magazine எனும் கல்லூரிச் சஞ்சிகையும் ஆரம்பிக்கப்பட்டது . 1937 இல் இந்து இளைஞன் ( Young Hindu ) சஞ்சிகை தொடங்கப்பட்டது . இச்சஞ்சிகையே இப்பொழுதும் ஆண்டுமலராகத் தொடர்ந்து வெளியிடப்படுகிறது . எமது கல்லூரியின் முதலாவது நிரந்தர கட்டிடத்துக்கான அடிக்கல் 1891 இல் நாட்டப்பட்டு 1895 இல் திறக்கப்பட்டது . 1903 இல் இலங்கையிலும் மலேசியாவிலும் நிதி திரட்டப்பட்டுக் கட்டிடங்கள் பூர்த்திசெய்யப்பட்டன . 1928 இல் புதிய விடுதிக் கட்டிடம் திறக்கப்பட்டது . ( 06 ஆம் பக்கம் பார்க்க )