தென்னாடு ஆவணித் திங்கள் இதழ் - 11

மடங்கல் நல்லோரை ஆவணித் திங்கள், 2021 அன்றும் இன்றும் மானிப்பாயில் மதமாற்றத்தினை தடுக்கும் காப்பு அரண்... (04ஆம் பக்கத் தொடர்ச்சி) அவரைத் தொடர்ந்து 1915 தொடக்கம் 1916 வரை பொறுப்பினை திரு. டீ. பி. ஹட்சன் பரமசாமி (Hudson Paramasamy - M.A FRHS) அவர்கள் பணிபுரிந்தார். அவரது காலத்திலேயே தான் பழைய மாணவர் சங்கம் உருவாக்கப்பட்டது. கல்லூரியின் அடுத்த அதிபர் திரு. ஜே. ஹ. குரோசெட் (Crosette - M.A FRHS) அவர்கள் 1917 தொடக்கம் 1920 வரையான காலப்பகுதியில் கடமையாற்றினார். இவர் இந்துக் கல்லூரியின் தரமானது, பட்டினத்துப் பெரும் கல்லூரிகளுடன் ஒப்பிடக் கூடியதாய் உயர்த்தப்பட வேண்டும் என்று எண்ணி பெரிய விளையாட்டு மைதானத்தினை உருவாக்கினார். பல வகுப்பறைகளையும் இலக்கிய மன்றம், சாரணர் இயக்கம் என்பவற்றினையும் ஏற்படுத்தினார். இவரது காலத்திலே தான் இக்கல்லூரியின் முதற் சஞ்சிகை வெளிவந்தது. இவரது காலம் மானிப்பாய் இந்துக் கல்லூரியின் மேன்மைக்கு வித்திட்ட காலம் எனலாம். இவரின் சேவையைத் தொடர்ந்து 1920 ஆம் வருடம் அமரர் எம். சிவபாதசுந்தரம் (B.A) அவர்கள் இக்கல்லூ ரியின் அதிபர் பதவியை அலங்கரித்தார். இக்காலப் பகுதியில் தமிழும் சைவமும் முதலிடம் பெற்றது. 1921-1922 வரையான காலப் பகுதியில் அடுத்த அதிபராக சுவாமி வியுலானந்தர் (B.Sc) அவர்கள் பணியாற்றினார். இக்காலப் பகுதியில் பொதுப் பரீட்சை, விளையாட்டுத் துறை, சமயத்துறையில் இக்கல்லூரி பெருமை பெற்றது. இதன் பின் திரு. வி. வீரசிங்கம் (B.A.J.P, M.B.E) அவர்கள் 1922 - 1951 வரையான காலப் பகுதியில் அதிபராக சேவையாற்றினார். இக்காலம் மானிப்பாய் இந்துக் கல்லூரியின் பொற்காலம். இவரின் தலைமையில் சலியாத உழைப்போடு ஆசிரியர்களும் மாணவர்களும் சேர்ந்து கைகோர்த்து நின்றதால் கல்லூரி பல மகத்தான சாதனைகளையும் வெற்றியையும் பெற்று வீறுநடை போட்டது. இவருடைய காலத்தில் 1923இல் இலச்சினை (Crest) வடிவமைக்கப்பட்டது. இது நான்கு பிரிவுகளைக் கொண்டது. மத்தியில் இலங்கைப் படம் உண்டு இந்நான்கு பிரிவுகளாவன ஓலைச்சுவடிகலையையும் ஒம்-ஆன்மாவையும் தாமரை- இதயத்தையும் கை - வலிமையையும் குறிக்கும் தென்னாடு இவற்றின் ஒன்றிய செயற்பாட்டின் மூலம் இலங்கை ஒளி பெறுகின்றது என்பது இவ் இலச்சினையின் அர்த்தமாகும். விளையாட்டுத் துறையில் திரு. வி. வீரசிங்கத்தின் காலம் உன்னத காலமாக விளங்கியது. 1924ல் நான்கு இல்லங்கள் அமைக்கப்பட்டு, அவற்றிக்கு சமயக்குரவர் நால்வரின் பெயர்களை சூட்டி இல்ல விளையாட்டு போட்டிகள் நடாத்தப்பட்டன. இவரது காலத்தில் (1944இல்) தான் மானிப்பாய் இந்துக் கல்லூரியில் பெண் மாணவிகளும் அனுமதிக்கப்பட்டனர். இவரது காலத்தில் தான், வாகீசர் ஊர்வலம் சிறப்புப் பெற்றது. அதாவது வாகீசர் (அப்பர் சுவாமிகள் குருபூசை தினத்தன்று வாகீசரின் திருஉருவப்படம் ஊர்வலமாக சங்கரப் பிள்ளை வீதி, யாழ் வீதி, மூத்த நயினார் வீதியூடாக பாடசாலை வந்தடையும். இதில் என்ன சிறப்பு என்றால், இது பாடசாலையுடன் சம்பந்தப்பட்ட நிகழ்வு மாத்திரமன்று. மானிப்பாய் முழுவதும் கொண்டாடும் பெருவிழா. திருஉருவப்படம் செல்லும் வழியிலுள்ள அத்தனை வீடுகளிலும் பந்தர் இட்டு, நிறைகுடம் வைத்துக் கொண்டாடும் அற்புதத் திருவிழா, ஊரையும் பள்ளியையும் இணைத்த பெரும்பாலம். இவரைத் தொடர்ந்து திரு. சி. நவரட்னம் (B.Sc) அவர்கள் 1951 - 1955 வரையான காலப் பகுதியில் அதிபரானார். நான்கு ஆண்டுகள் கடமையாற்றினாலும், இவர் காலத்திலேயே பெண்கள் கல்லூரிக்கெனப் புறம்பாக கட்டிடம் அமைக்கப்பட்டது. கல்லூரிக்கு மேற்குப் புறமாக அமைந்த 14 பரப்புக் காணி வாங்கப்பட்டு, விளையாட்டு மைதானம் பெரிதாக்கப்பட்டது. 1954ஆம் வருடம் மேலும் 13 பரப்புக் காணி பழைய மாணவர் சங்கத்தால் வாங்கப்பட்டது. 7 அறைகள் கொண்ட செல்லமுத்து மண்டபம், வாகீசர் மண்டபம் என்பன கட்டப்பட்டன. மேலும் பட்டம்மாளின் இசைக் கச்சேரி மூலம் கிடைத்த பணம் கொண்டு, உயிரியல் ஆய்வுகூடம் கட்டப்பட்டது. இது திரு. வி. வீரசிங்கம் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. பல்கலைக் கழகங்களுக்குச் செல்லும் இரு மாணவர்களுக்கான மகாதேவா புலமைப் பரிசில் இக்காலத்திலேயே வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து திரு. கே. முத்துவேற்பிள்ளை (B.Sc.Dip.in.Edu) 1955 - 1972 வரை பணிபுரிந்தார். இவர் காலத்திலேயே பல புதிய கட்டிடங்கள் எழும்பின. ஏறக்குறைய 16 பரப்புக் காணி கல்லூரிக்கு கிழக்குப் புறமாக வாங்கப்பட்டு, பெண்கள் பகுதி பெரிதாக்கப்பட்டது. 1959இல் பேராசிரியர் சின்னத்தம்பி (பழைய மாணவர்) நவீன வசதி கொண்ட நூல் நிலையத்தை அமைத்துக் கொடுத்தார். ஆரம்பப் பாடசாலைக்கென மஸ்கன் நிறுவனம் (Mascon Ltd) ஒரு கட்டிடம் அமைத்தது. வாகீசர் மண்டபமும் மூத்ததம்பி கட்டிடத் தொகுதியும் முத்துவேற்பிள்ளை மண்டபத்தில் இணைந்தது. திரு. சிவதாசன் அவர்களின் மறைவையொட்டி அவர் நினைவாக அவர் பெயரில் பார்ப்போர் கூடம் நிறுவப்பட்டது. 1963இல் பெண்கள் பிரிவு தனிப்படுத்தப்பட்டது. இவ்வளவும் அதிபர் முத்துவேற்பிள்ளையின் விடா முயற்சியும் அயராத ஊக்கமும் என்றால் மிகையாகாது. இவரது காலத்தில் வைத்தியத்துறை, பொறியியற்துறைக்கு பெருமளவு மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர். பல காலமாகக் கல்லூரி மட்டத்தில் நடந்த நாடகப் போட்டி இவர் காலத்திலேதான் நாடக விழாவாக்கப்பட்டு, பொதுமக்கள் பார்வைக்கு வசதி செய்யப்பட்டது. இதனால் நிறுவுனர் தினவிழா மூன்று நான் விரிவுபடுத்தப்பட்டது. 1972இல் திரு. எம். பேராயிரவர் (B.A) அவர்கள் அதிபர் பதவியேற்றார். இவர் காலத்தில் (1973இல்) மாணவர் விடுதி அமைக்கப்பட்டு 30க்கு மேற்பட்ட மாணவர்கள் இங்கு தங்கியிருந்தனர். மரவேலை, உலோக வேலைக்கு ஒரு கட்டிடத் தொகுதி அமைக்கப்பட்டது. இவரது காலத்தில் உயர்தர வகுப்புகளுக்கு வணிகத்துறை ஒரு பகுதியாக்கப்பட்டு அதற்கெனத்திறமை வாய்ந்த ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். 1959ஆம் வருடம் புதுடெல்லியிலும் 1963இல் இந்தோனேசியாவிலும் நடந்த சர்வதேச் கல்வி மாநாட்டில் இலங்கைப் பிரதிநிதியாகக் கலந்து கொண்டதன் மூலம் MAN FAY HINDU COLLEGE E- Bry aa. எமது கல்லூரிக்கும் நாட்டிற்கும் பெருமை தேடித் தந்தார். 04.04.1979இல் கல்லூரி நிறுவுனர் வே. சங்கரவேற்பிள்ளை அவர்களின் சிலையை நிறுவி தன் நன்னிலையைக் கல்லூ ரித் தாய்க்கு சமர்ப்பித்து 30.06.1979இல் தனது அதிபர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார். 1979 - 1983வரை கல்லூரி அதிபராக திரு. எஸ். டீ. சாறி (B.Sc) அவர்கள் கடமையாற்றினார். இக்காலத்திலேயே தான் மஸ்கன் தொழினுட்பக் கட்டிடம் நிறுவப்பட்டது. பாடசாலைக் கட்டிடத் தொகுதியில் இரண்டு மாடிகள் பூரணப்படுத்தப்பட்டன. கல்லூரியின் அலுவலகத்திற்கென அதிபர் வீரசிங்கம் நினைவாக இரு மாடிக் கட்டிடம் நிறுவப்பட்டது. கொழும்பு மஸ்கன் நிறுவனமும், அஸ்பெஸ்டஸ் சீமேந்து நிறுவனமும் இணைந்து "மஸ்கன் தொழினுட்பக் கூடம்” ஒன்றினை அமைத்துப் பாடசாலைக்கு உதவியுள்ளமை வரப்பிரசாதமாகும். 1983ல் திரு.வி.சுந்தரலிங்கம் (B.Sc.Dip.in.Edu) அவர்கள் குறுகிய கால வேளையில் கல்லூரியின் பதில் அதிபராகச் சிறப்பாகக் கடமையாற்றியுள்ளார். திரு. எஸ். வி. மகேசவேலு (M.A.Dip.in.Edu) 1983 - 1989 வரை அதிபர் பணியை வகித்தார். இவர் காலத்தில் தான் முறைசாராக் கல்வி அங்குரார்ப்பணம் செய்யப்பட்டு வெற்றிகரமாக பட வரைஞர், ஆங்கிலத் தட்டச்சு, சுருக்கெழுத்துப் பயிற்சி தெறிகள் இயங்கிக் கொண்டிருந்தன. சாறியின் மேல்மாடிக் கட்டிடம் இவர் காலத்திலேயே பூர்த்தியடைந்துள்ளது. கல்லூரியின் பவளவிழா 1986ஆம் வருடம் அதிபர் மகேசவேலு அவர்கள் அதிபராக இருந்த காலத்திலேயே கொண்டாடப்பட்டது. 1989 - 1996வரையான காலப் பகுதியில் திரு. சி. கேசவராயன் (B.A.Dip.in.Edu, M.A.Ed) அவர்கள் அதிபராகக் கடமை புரிந்தார். மானிப்பாய் இந்துக் 05 தெ கல்லூரியின் வரலாற்றிலேயே கொத்தணி அதிபராகக் கடமையாற்றிய பெருமை இவரையே சாரும். இவருடைய காலத்தில் பாடசாலைக் சுற்று மதில் கட்டப்பட்டது. பாடசாலையில் பாண்ட் வாத்தியக்குழு இவராலேயே முதன்முதலில் ஏற்படுத்தப்பட்டது. திரு.கு.சண்முகநாதன் (SLPS1-B.A.Dip.in.Edu, MA.Edu) அவர்கள் அதிபராகக் கடமை புரிந்தார். இவர் சமய தத்துவங்களில் மிகுந்த நம்பிக்கை கொண்டவர். கணினிக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து கணினி அறையை அமைத்துக் கொடுத்தார். இவரால் பாடசாலை முகப்பில் சரஸ்வதி உருவச்சிலை அமைத்தது குறிப்பிடத்தக்கது. நவீன நூல் நிலையம் ஒன்றும் இவரது காலத்தில் அமைக்கப்பட்டது. மேலும் பு.வு.ணு உதவியுடன் தொடர் மலசலகூடத்தினை ஏற்படுத்திக் கொடுத்தவராவார். 2003-2005 வரையான காலப் பகுதியில் திரு.க. ஜெகநாதன் (SP.Trd.Sc.SLTS 1) அவர்கள் பதில் அதிபராகக் கடமைபுரிந்தார். இவர் பல்வேறு இடர்ப்பாடுகள் மத்தியிலும் குறுகிய கால சேவையில் பாடசாலைக்குச் சிறப்பாகப் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 2005 முதல் 2015 வரை திரு.ச.சிவநேஸ்வரன் அவர்கள் (SLPS1,B.Com(Hons), Dip.in.Edu, M.Ed) எமது கல்லூரியின் அதிபர் பதவியை அலங்கரித்துக் கொண்டிருந்தார். கல்லூரியின் முன்னேற்றத்திற்கும், அபிவிருத்திக்கும் தனது அறிவைச் சிறந்த முறையில் பயன்படுத்தி இன்று கல்லூரி புத்தெழில் பெற்று ஓங்கி நிற்க இவர் முக்கிய காரணமாவார். இவர் பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர் சங்கம் என்பவற்றுடன் இணைந்து கல்வி, விளையாட்டு மற்றும் ஏனைய செயற்பாடுகளுக்கும் தேவையான நிதியையும், உதவியையும் பெற்றுக் கட்டிடங்கள், நவீன கற்றல் வசதிகளை உருவாக்கி ஆசிரியர் - மாணவர்களது கற்பித்தல் - கற்றல் செயற்பாட்டிற்கு உறுதுணையாக இருந்து வந்தவர். அதிபர் சிவநேஸ்வரன் அவர்களது காலம் மீண்டும் மானி அன்னைக்கு உன்னதமான பொற்காலம் என்றே கூற வேன்டும். சகல துறைகளிலும் அன்னையானவள் புதியதோர் பாதை நோக்கி வீறுநடை போட்டுக் கொண்டிருக்க செய்தவர். மாணவர்கள் தொகை 450இலிருந்து 1000க்கு மேலாக அதிகரித்துவிட்டது. பாடசாலைக் கட்டிடங்களில் துரித முன்னேற்றம் ஏற்பட்டது. இவருடைய காலத்தில் தான் சு.ஏ.ஆறுமுகம் விளையாட்டரங்கு, துரைராஜா திறந்தவெளி அரங்கு, மித்திரன் அரங்கு, சிவதாசன் அரங்கு, பிரார்த்தனைமண்டபம் (1990-91இல் ஆரம்பிக்கப்பட்ட கனடா பழைய மாணவர் சங்கம்). முதலியார் மகேசன் மண்டபம் போன்றவை அமைக்கப் பெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது. மருத்துவ, பொறியியல், வர்த்தக, கலைத்துறை போன்றவற்றிற்கான பல்கலைக்கழக அனுமதியை பெருமளவு மாணவர்கள் பெற்றனர். க.பொ.த. சாதாரணம் 65மூ சித்தி வீச்சினையும், க.பொ.த. உயர்தரம் 75% சித்தி வீச்சினையும் பெற்று பரீட்சையில் உயர் வளர்ச்சி பெற்றனர். இவை எல்லாவற்றிற்கும் மேலாக 2007ல் உதைபந்தாட்டத்தில் தேசிய மட்டத்தில் தடம் பதித்து மூன்றாம் இடத்தைப் பெற்றமையும், 2009ல் தங்கப் பதக்கம் பெற்றமையும் அதிபர் சிவநேஸ்வரன் அவர்கள் காலத்திற்குரியதே. இதனூடாக யாழ்ப்பாண பாடசாலை உதைபந்தாட்ட வரலாற்றில் கடந்த 50 வருடகாலப் பகுதியில் தேசிய மட்ட வெற்றியைப் பெற்று சாதனை படைத்துள்ளது. இப்பெருமை நூற்றாண்டு விழாக் காலப் பகுதியில் பெற்றமை கல்லூரிச் சமூகத்தால் மறக்க முடியாத மகிழ்வான நினைவுப் பதிவாகும். மாணவர்களின் ஒழுக்க விழுமியங்களில் அதிக அக்கறை கொண்ட இவர் சகல மாணவர்களும் எல்லாத்துறைகளிலும் சிறந்து விளங்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். பாடசாலைக் கவின் நிலையைக் சிறப்பாக்குவதில் ஆர்வம் கொண்ட இவர், தாய் தன் பிள்ளைகளை நேசிப்பது போல மனதில் பசுமையை ஏற்படுத்தக் கூடிய பூஞ்சோலையை வளர்த்து எம் தாயை அலங்கரிப்பதில் ஆர்வம் கொண்டவர். இவரது காலப்பகுதியில் பாடசாலையில் காலடி வைக்கும் போது "வாடிய பயிரைக் கண்டு உள்ளம் வாடிய இராமலிங்க அடிகளார்”இங்கே ஊடுருவி நிற்கின்றாரோ என்று எண்ணத் தோன்றும். இவரைத் தொடர்ந்து, 20.05.2018 வரை பிரதி அதிபர் மே.இந்திரபாலா அவர்களும், இவரைத் தொடர்ந்து, 22.09.2020 வரை சி.இந்திரகுமார் அவர்களும், இவரைத் தொடர்ந்து, 23.09.2020 தொடக்கம் இன்று வரை அதிபர் செ.இளங்கோ அவர்களும் பாடசாலை வளர்ச்சியிலும் மாணவர்களின் முன்னேற்றத்திலும் உயர்வை காண அரும்பாடுபட்டு, மானி மண்ணின் மகிமையை உலகரியச் செய்துள்ளனர். பாலாவியின் கரைமேல் செத்தாரின் எலும்பு அணிபவனான திருக்கேதீச்சரத்தானின் பெருந்திருவிழாவின் தேர்த திருவிழாவின் முன்னைநாள் திருவிழா மானி அன்னைக்கு உரியதாகும். அதற்கு, ஊர்கூடி உவந்து அளிக்கும் பண்டங்கள் கொண்டு, 'அரோகரா ‘ என்ற சத்தம் வானைப்பிளக்க புறப்பட்டு, கேதீச்சரநாதனிடத்தில் அன்னதானத்தை அமர்க்களமாக நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். இன்று மானி அன்னையானவள் கல்வி, ஒழுக்கம், விளையாட்டு, பசுமையான சுற்றுச்சூழல் எனப் பல அணிகலன்களைத் தாங்கி ஒரு மாதிரிப் பாடசாலையாகப் பரிணமித்து நிற்கின்றாள். இவ் அன்னையின் எழுச்சி அடுத்த நூற்றாண்டு கல்விப் பயணத்தில் மாணவர்களை வளப்படுத்தி மானிப்பாய் இந்துக் கல்லூ ரியை மீண்டும் மலர்ச்சியடைய வைப்பதுடன், யாழ்ப்பாணக் கல்விப் பரப்பிற்கு வழிகாட்டும் ஒளியாகவும் திகழ்வாள். திருச்சசிற்றம்பலம்
மடங்கல் நல்லோரை ஆவணித் திங்கள் 2021 அன்றும் இன்றும் மானிப்பாயில் மதமாற்றத்தினை தடுக்கும் காப்பு அரண் ... ( 04 ஆம் பக்கத் தொடர்ச்சி ) அவரைத் தொடர்ந்து 1915 தொடக்கம் 1916 வரை பொறுப்பினை திரு . டீ . பி . ஹட்சன் பரமசாமி ( Hudson Paramasamy - M.A FRHS ) அவர்கள் பணிபுரிந்தார் . அவரது காலத்திலேயே தான் பழைய மாணவர் சங்கம் உருவாக்கப்பட்டது . கல்லூரியின் அடுத்த அதிபர் திரு . ஜே . . குரோசெட் ( Crosette - M.A FRHS ) அவர்கள் 1917 தொடக்கம் 1920 வரையான காலப்பகுதியில் கடமையாற்றினார் . இவர் இந்துக் கல்லூரியின் தரமானது பட்டினத்துப் பெரும் கல்லூரிகளுடன் ஒப்பிடக் கூடியதாய் உயர்த்தப்பட வேண்டும் என்று எண்ணி பெரிய விளையாட்டு மைதானத்தினை உருவாக்கினார் . பல வகுப்பறைகளையும் இலக்கிய மன்றம் சாரணர் இயக்கம் என்பவற்றினையும் ஏற்படுத்தினார் . இவரது காலத்திலே தான் இக்கல்லூரியின் முதற் சஞ்சிகை வெளிவந்தது . இவரது காலம் மானிப்பாய் இந்துக் கல்லூரியின் மேன்மைக்கு வித்திட்ட காலம் எனலாம் . இவரின் சேவையைத் தொடர்ந்து 1920 ஆம் வருடம் அமரர் எம் . சிவபாதசுந்தரம் ( B.A ) அவர்கள் இக்கல்லூ ரியின் அதிபர் பதவியை அலங்கரித்தார் . இக்காலப் பகுதியில் தமிழும் சைவமும் முதலிடம் பெற்றது . 1921-1922 வரையான காலப் பகுதியில் அடுத்த அதிபராக சுவாமி வியுலானந்தர் ( B.Sc ) அவர்கள் பணியாற்றினார் . இக்காலப் பகுதியில் பொதுப் பரீட்சை விளையாட்டுத் துறை சமயத்துறையில் இக்கல்லூரி பெருமை பெற்றது . இதன் பின் திரு . வி . வீரசிங்கம் ( B.A.J.P M.B.E ) அவர்கள் 1922 - 1951 வரையான காலப் பகுதியில் அதிபராக சேவையாற்றினார் . இக்காலம் மானிப்பாய் இந்துக் கல்லூரியின் பொற்காலம் . இவரின் தலைமையில் சலியாத உழைப்போடு ஆசிரியர்களும் மாணவர்களும் சேர்ந்து கைகோர்த்து நின்றதால் கல்லூரி பல மகத்தான சாதனைகளையும் வெற்றியையும் பெற்று வீறுநடை போட்டது . இவருடைய காலத்தில் 1923 இல் இலச்சினை ( Crest ) வடிவமைக்கப்பட்டது . இது நான்கு பிரிவுகளைக் கொண்டது . மத்தியில் இலங்கைப் படம் உண்டு இந்நான்கு பிரிவுகளாவன ஓலைச்சுவடிகலையையும் ஒம் - ஆன்மாவையும் தாமரை- இதயத்தையும் கை - வலிமையையும் குறிக்கும் தென்னாடு இவற்றின் ஒன்றிய செயற்பாட்டின் மூலம் இலங்கை ஒளி பெறுகின்றது என்பது இவ் இலச்சினையின் அர்த்தமாகும் . விளையாட்டுத் துறையில் திரு . வி . வீரசிங்கத்தின் காலம் உன்னத காலமாக விளங்கியது . 1924 ல் நான்கு இல்லங்கள் அமைக்கப்பட்டு அவற்றிக்கு சமயக்குரவர் நால்வரின் பெயர்களை சூட்டி இல்ல விளையாட்டு போட்டிகள் நடாத்தப்பட்டன . இவரது காலத்தில் ( 1944 இல் ) தான் மானிப்பாய் இந்துக் கல்லூரியில் பெண் மாணவிகளும் அனுமதிக்கப்பட்டனர் . இவரது காலத்தில் தான் வாகீசர் ஊர்வலம் சிறப்புப் பெற்றது . அதாவது வாகீசர் ( அப்பர் சுவாமிகள் குருபூசை தினத்தன்று வாகீசரின் திருஉருவப்படம் ஊர்வலமாக சங்கரப் பிள்ளை வீதி யாழ் வீதி மூத்த நயினார் வீதியூடாக பாடசாலை வந்தடையும் . இதில் என்ன சிறப்பு என்றால் இது பாடசாலையுடன் சம்பந்தப்பட்ட நிகழ்வு மாத்திரமன்று . மானிப்பாய் முழுவதும் கொண்டாடும் பெருவிழா . திருஉருவப்படம் செல்லும் வழியிலுள்ள அத்தனை வீடுகளிலும் பந்தர் இட்டு நிறைகுடம் வைத்துக் கொண்டாடும் அற்புதத் திருவிழா ஊரையும் பள்ளியையும் இணைத்த பெரும்பாலம் . இவரைத் தொடர்ந்து திரு . சி . நவரட்னம் ( B.Sc ) அவர்கள் 1951 - 1955 வரையான காலப் பகுதியில் அதிபரானார் . நான்கு ஆண்டுகள் கடமையாற்றினாலும் இவர் காலத்திலேயே பெண்கள் கல்லூரிக்கெனப் புறம்பாக கட்டிடம் அமைக்கப்பட்டது . கல்லூரிக்கு மேற்குப் புறமாக அமைந்த 14 பரப்புக் காணி வாங்கப்பட்டு விளையாட்டு மைதானம் பெரிதாக்கப்பட்டது . 1954 ஆம் வருடம் மேலும் 13 பரப்புக் காணி பழைய மாணவர் சங்கத்தால் வாங்கப்பட்டது . 7 அறைகள் கொண்ட செல்லமுத்து மண்டபம் வாகீசர் மண்டபம் என்பன கட்டப்பட்டன . மேலும் பட்டம்மாளின் இசைக் கச்சேரி மூலம் கிடைத்த பணம் கொண்டு உயிரியல் ஆய்வுகூடம் கட்டப்பட்டது . இது திரு . வி . வீரசிங்கம் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது . பல்கலைக் கழகங்களுக்குச் செல்லும் இரு மாணவர்களுக்கான மகாதேவா புலமைப் பரிசில் இக்காலத்திலேயே வழங்கப்பட்டது . இதனைத் தொடர்ந்து திரு . கே . முத்துவேற்பிள்ளை ( B.Sc.Dip.in.Edu ) 1955 - 1972 வரை பணிபுரிந்தார் . இவர் காலத்திலேயே பல புதிய கட்டிடங்கள் எழும்பின . ஏறக்குறைய 16 பரப்புக் காணி கல்லூரிக்கு கிழக்குப் புறமாக வாங்கப்பட்டு பெண்கள் பகுதி பெரிதாக்கப்பட்டது . 1959 இல் பேராசிரியர் சின்னத்தம்பி ( பழைய மாணவர் ) நவீன வசதி கொண்ட நூல் நிலையத்தை அமைத்துக் கொடுத்தார் . ஆரம்பப் பாடசாலைக்கென மஸ்கன் நிறுவனம் ( Mascon Ltd ) ஒரு கட்டிடம் அமைத்தது . வாகீசர் மண்டபமும் மூத்ததம்பி கட்டிடத் தொகுதியும் முத்துவேற்பிள்ளை மண்டபத்தில் இணைந்தது . திரு . சிவதாசன் அவர்களின் மறைவையொட்டி அவர் நினைவாக அவர் பெயரில் பார்ப்போர் கூடம் நிறுவப்பட்டது . 1963 இல் பெண்கள் பிரிவு தனிப்படுத்தப்பட்டது . இவ்வளவும் அதிபர் முத்துவேற்பிள்ளையின் விடா முயற்சியும் அயராத ஊக்கமும் என்றால் மிகையாகாது . இவரது காலத்தில் வைத்தியத்துறை பொறியியற்துறைக்கு பெருமளவு மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர் . பல காலமாகக் கல்லூரி மட்டத்தில் நடந்த நாடகப் போட்டி இவர் காலத்திலேதான் நாடக விழாவாக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு வசதி செய்யப்பட்டது . இதனால் நிறுவுனர் தினவிழா மூன்று நான் விரிவுபடுத்தப்பட்டது . 1972 இல் திரு . எம் . பேராயிரவர் ( B.A ) அவர்கள் அதிபர் பதவியேற்றார் . இவர் காலத்தில் ( 1973 இல் ) மாணவர் விடுதி அமைக்கப்பட்டு 30 க்கு மேற்பட்ட மாணவர்கள் இங்கு தங்கியிருந்தனர் . மரவேலை உலோக வேலைக்கு ஒரு கட்டிடத் தொகுதி அமைக்கப்பட்டது . இவரது காலத்தில் உயர்தர வகுப்புகளுக்கு வணிகத்துறை ஒரு பகுதியாக்கப்பட்டு அதற்கெனத்திறமை வாய்ந்த ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர் . 1959 ஆம் வருடம் புதுடெல்லியிலும் 1963 இல் இந்தோனேசியாவிலும் நடந்த சர்வதேச் கல்வி மாநாட்டில் இலங்கைப் பிரதிநிதியாகக் கலந்து கொண்டதன் மூலம் MAN FAY HINDU COLLEGE E- Bry aa . எமது கல்லூரிக்கும் நாட்டிற்கும் பெருமை தேடித் தந்தார் . 04.04.1979 இல் கல்லூரி நிறுவுனர் வே . சங்கரவேற்பிள்ளை அவர்களின் சிலையை நிறுவி தன் நன்னிலையைக் கல்லூ ரித் தாய்க்கு சமர்ப்பித்து 30.06.1979 இல் தனது அதிபர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார் . 1979 - 1983 வரை கல்லூரி அதிபராக திரு . எஸ் . டீ . சாறி ( B.Sc ) அவர்கள் கடமையாற்றினார் . இக்காலத்திலேயே தான் மஸ்கன் தொழினுட்பக் கட்டிடம் நிறுவப்பட்டது . பாடசாலைக் கட்டிடத் தொகுதியில் இரண்டு மாடிகள் பூரணப்படுத்தப்பட்டன . கல்லூரியின் அலுவலகத்திற்கென அதிபர் வீரசிங்கம் நினைவாக இரு மாடிக் கட்டிடம் நிறுவப்பட்டது . கொழும்பு மஸ்கன் நிறுவனமும் அஸ்பெஸ்டஸ் சீமேந்து நிறுவனமும் இணைந்து மஸ்கன் தொழினுட்பக் கூடம் ஒன்றினை அமைத்துப் பாடசாலைக்கு உதவியுள்ளமை வரப்பிரசாதமாகும் . 1983 ல் திரு.வி.சுந்தரலிங்கம் ( B.Sc.Dip.in.Edu ) அவர்கள் குறுகிய கால வேளையில் கல்லூரியின் பதில் அதிபராகச் சிறப்பாகக் கடமையாற்றியுள்ளார் . திரு . எஸ் . வி . மகேசவேலு ( M.A.Dip.in.Edu ) 1983 - 1989 வரை அதிபர் பணியை வகித்தார் . இவர் காலத்தில் தான் முறைசாராக் கல்வி அங்குரார்ப்பணம் செய்யப்பட்டு வெற்றிகரமாக பட வரைஞர் ஆங்கிலத் தட்டச்சு சுருக்கெழுத்துப் பயிற்சி தெறிகள் இயங்கிக் கொண்டிருந்தன . சாறியின் மேல்மாடிக் கட்டிடம் இவர் காலத்திலேயே பூர்த்தியடைந்துள்ளது . கல்லூரியின் பவளவிழா 1986 ஆம் வருடம் அதிபர் மகேசவேலு அவர்கள் அதிபராக இருந்த காலத்திலேயே கொண்டாடப்பட்டது . 1989 - 1996 வரையான காலப் பகுதியில் திரு . சி . கேசவராயன் ( B.A.Dip.in.Edu M.A.Ed ) அவர்கள் அதிபராகக் கடமை புரிந்தார் . மானிப்பாய் இந்துக் 05 தெ கல்லூரியின் வரலாற்றிலேயே கொத்தணி அதிபராகக் கடமையாற்றிய பெருமை இவரையே சாரும் . இவருடைய காலத்தில் பாடசாலைக் சுற்று மதில் கட்டப்பட்டது . பாடசாலையில் பாண்ட் வாத்தியக்குழு இவராலேயே முதன்முதலில் ஏற்படுத்தப்பட்டது . திரு.கு.சண்முகநாதன் ( SLPS1-B.A.Dip.in.Edu MA.Edu ) அவர்கள் அதிபராகக் கடமை புரிந்தார் . இவர் சமய தத்துவங்களில் மிகுந்த நம்பிக்கை கொண்டவர் . கணினிக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து கணினி அறையை அமைத்துக் கொடுத்தார் . இவரால் பாடசாலை முகப்பில் சரஸ்வதி உருவச்சிலை அமைத்தது குறிப்பிடத்தக்கது . நவீன நூல் நிலையம் ஒன்றும் இவரது காலத்தில் அமைக்கப்பட்டது . மேலும் பு.வு.ணு உதவியுடன் தொடர் மலசலகூடத்தினை ஏற்படுத்திக் கொடுத்தவராவார் . 2003-2005 வரையான காலப் பகுதியில் திரு.க. ஜெகநாதன் ( SP.Trd.Sc.SLTS 1 ) அவர்கள் பதில் அதிபராகக் கடமைபுரிந்தார் . இவர் பல்வேறு இடர்ப்பாடுகள் மத்தியிலும் குறுகிய கால சேவையில் பாடசாலைக்குச் சிறப்பாகப் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது . 2005 முதல் 2015 வரை திரு.ச.சிவநேஸ்வரன் அவர்கள் ( SLPS1 B.Com ( Hons ) Dip.in.Edu M.Ed ) எமது கல்லூரியின் அதிபர் பதவியை அலங்கரித்துக் கொண்டிருந்தார் . கல்லூரியின் முன்னேற்றத்திற்கும் அபிவிருத்திக்கும் தனது அறிவைச் சிறந்த முறையில் பயன்படுத்தி இன்று கல்லூரி புத்தெழில் பெற்று ஓங்கி நிற்க இவர் முக்கிய காரணமாவார் . இவர் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் பழைய மாணவர் சங்கம் என்பவற்றுடன் இணைந்து கல்வி விளையாட்டு மற்றும் ஏனைய செயற்பாடுகளுக்கும் தேவையான நிதியையும் உதவியையும் பெற்றுக் கட்டிடங்கள் நவீன கற்றல் வசதிகளை உருவாக்கி ஆசிரியர் - மாணவர்களது கற்பித்தல் - கற்றல் செயற்பாட்டிற்கு உறுதுணையாக இருந்து வந்தவர் . அதிபர் சிவநேஸ்வரன் அவர்களது காலம் மீண்டும் மானி அன்னைக்கு உன்னதமான பொற்காலம் என்றே கூற வேன்டும் . சகல துறைகளிலும் அன்னையானவள் புதியதோர் பாதை நோக்கி வீறுநடை போட்டுக் கொண்டிருக்க செய்தவர் . மாணவர்கள் தொகை 450 இலிருந்து 1000 க்கு மேலாக அதிகரித்துவிட்டது . பாடசாலைக் கட்டிடங்களில் துரித முன்னேற்றம் ஏற்பட்டது . இவருடைய காலத்தில் தான் சு.ஏ.ஆறுமுகம் விளையாட்டரங்கு துரைராஜா திறந்தவெளி அரங்கு மித்திரன் அரங்கு சிவதாசன் அரங்கு பிரார்த்தனைமண்டபம் ( 1990-91இல் ஆரம்பிக்கப்பட்ட கனடா பழைய மாணவர் சங்கம் ) . முதலியார் மகேசன் மண்டபம் போன்றவை அமைக்கப் பெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது . மருத்துவ பொறியியல் வர்த்தக கலைத்துறை போன்றவற்றிற்கான பல்கலைக்கழக அனுமதியை பெருமளவு மாணவர்கள் பெற்றனர் . க.பொ.த. சாதாரணம் 65 மூ சித்தி வீச்சினையும் க.பொ.த. உயர்தரம் 75 % சித்தி வீச்சினையும் பெற்று பரீட்சையில் உயர் வளர்ச்சி பெற்றனர் . இவை எல்லாவற்றிற்கும் மேலாக 2007 ல் உதைபந்தாட்டத்தில் தேசிய மட்டத்தில் தடம் பதித்து மூன்றாம் இடத்தைப் பெற்றமையும் 2009 ல் தங்கப் பதக்கம் பெற்றமையும் அதிபர் சிவநேஸ்வரன் அவர்கள் காலத்திற்குரியதே . இதனூடாக யாழ்ப்பாண பாடசாலை உதைபந்தாட்ட வரலாற்றில் கடந்த 50 வருடகாலப் பகுதியில் தேசிய மட்ட வெற்றியைப் பெற்று சாதனை படைத்துள்ளது . இப்பெருமை நூற்றாண்டு விழாக் காலப் பகுதியில் பெற்றமை கல்லூரிச் சமூகத்தால் மறக்க முடியாத மகிழ்வான நினைவுப் பதிவாகும் . மாணவர்களின் ஒழுக்க விழுமியங்களில் அதிக அக்கறை கொண்ட இவர் சகல மாணவர்களும் எல்லாத்துறைகளிலும் சிறந்து விளங்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் . பாடசாலைக் கவின் நிலையைக் சிறப்பாக்குவதில் ஆர்வம் கொண்ட இவர் தாய் தன் பிள்ளைகளை நேசிப்பது போல மனதில் பசுமையை ஏற்படுத்தக் கூடிய பூஞ்சோலையை வளர்த்து எம் தாயை அலங்கரிப்பதில் ஆர்வம் கொண்டவர் . இவரது காலப்பகுதியில் பாடசாலையில் காலடி வைக்கும் போது வாடிய பயிரைக் கண்டு உள்ளம் வாடிய இராமலிங்க அடிகளார் இங்கே ஊடுருவி நிற்கின்றாரோ என்று எண்ணத் தோன்றும் . இவரைத் தொடர்ந்து 20.05.2018 வரை பிரதி அதிபர் மே.இந்திரபாலா அவர்களும் இவரைத் தொடர்ந்து 22.09.2020 வரை சி.இந்திரகுமார் அவர்களும் இவரைத் தொடர்ந்து 23.09.2020 தொடக்கம் இன்று வரை அதிபர் செ.இளங்கோ அவர்களும் பாடசாலை வளர்ச்சியிலும் மாணவர்களின் முன்னேற்றத்திலும் உயர்வை காண அரும்பாடுபட்டு மானி மண்ணின் மகிமையை உலகரியச் செய்துள்ளனர் . பாலாவியின் கரைமேல் செத்தாரின் எலும்பு அணிபவனான திருக்கேதீச்சரத்தானின் பெருந்திருவிழாவின் தேர்த திருவிழாவின் முன்னைநாள் திருவிழா மானி அன்னைக்கு உரியதாகும் . அதற்கு ஊர்கூடி உவந்து அளிக்கும் பண்டங்கள் கொண்டு ' அரோகரா என்ற சத்தம் வானைப்பிளக்க புறப்பட்டு கேதீச்சரநாதனிடத்தில் அன்னதானத்தை அமர்க்களமாக நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும் . இன்று மானி அன்னையானவள் கல்வி ஒழுக்கம் விளையாட்டு பசுமையான சுற்றுச்சூழல் எனப் பல அணிகலன்களைத் தாங்கி ஒரு மாதிரிப் பாடசாலையாகப் பரிணமித்து நிற்கின்றாள் . இவ் அன்னையின் எழுச்சி அடுத்த நூற்றாண்டு கல்விப் பயணத்தில் மாணவர்களை வளப்படுத்தி மானிப்பாய் இந்துக் கல்லூ ரியை மீண்டும் மலர்ச்சியடைய வைப்பதுடன் யாழ்ப்பாணக் கல்விப் பரப்பிற்கு வழிகாட்டும் ஒளியாகவும் திகழ்வாள் . திருச்சசிற்றம்பலம்