தென்னாடு புரட்டாசித் திங்கள் இதழ் - 12

ஆனைக்குட்டி என்பது வளர்ப்புத் தந்தையார் வைத்த பெயராகும். பாரங்கள் நிறைந்த அழுக்குத் துணி மூட்டைகளை இலகுவில் தூக்கிச் சுமந்து செல்வதால், செல்லமாக இப் பெயரைச் சூட்டினாரோ தெரியவில்லை. ஒருமுறை "அம்மா, அம்மா,பாம்பு, பாம்பு” என்று சத்தமிட்டான் சிறுவன். இச்சத்தத்தைக் கேட்ட வளர்ப்புத் தாயார் ஓடோடியும் வந்தார்."எங்கேடா மகனே பாம்பு?" என்றார்கள். ஆனால் ஆனைக்குட்டியோ கெக்காளம் கொட்டிச் சிரிக்கலானான். இந்தப் பரிகசிப்பு தாய்க்கு மிகுந்த கோபத்தை உண்டாக்கியது. இரண்டாம் முறையும் அப்படியே பலத்த சத்தமிட்டு அழைத்தான். வீட்டிலிருந்த சில ஆண்கள் மாத்திரம் ஓடிச் தென்னாடு கன்னி நல்லோரை புரட்டாசித் திங்கள், 2021 07 ஈழத்து சித்தர்கள்: சித்தர் பெரியானைக்குட்டி சுவாமிகள் கொழும்பு முகத்துவாரத்தில் இருக்கும் பெரியானைக் குட்டிச் சுவாமிகளுடைய சமாதிக்குச் சென்ற போது வாய்விட்டுச் சொல்ல முடியாத ஆனந்தமான அமைதியை அனுபவிக்க முடிந்தது. மகான்கள் பூத உடலோடு வாழுங் காலங்களில் அவர்களது திருச்சமூகம் எவ்வாறு ஆத்மீக அலையால் சூழப்பட்டிருக்குமோ அவ்விதமே அவர்கள் சமாதிகளிலும் ஆத்மீக அலை ஒன்று குழ்ந்திருப்பதைச் சாதகர்கள் இலகுவாக அறிந்து கொள்ளலாம். கண்டியில் பெரியானைக் குட்டி சுவாமிகள் பெரியானைக்குட்டி சுவாமிகள் முற்பகுதியில் கண்டியில் வாழ்ந்து வந்ததாக அறியக்கிடக்கின்றது. கண்டியில் சுவாமிகளைத் தரிசித்து உரையாடிய பெருமக்கள் சிலர் தாம் சுவாமிகளுடன் தொடர்பு கொண்டுள்ளதாகக் கூறியுள்ளார்கள். பெரியானைக்குட்டி சுவாமிகள் நவநாத சித்தருடன், மீண்டும் இலங்கைக்கு வருமுன்பே இளம் வயதில் கண்டியில் வாழ்ந்ததாகத் தகவல்கள் கிடைக்கின்றன. இளம் வயதில் சுவாமிகள் கண்டியில் வாழ்ந்து, இந்தியா சென்று பின்பு நவநாத சித்தருடன் வந்திருக்கிறார்கள். இவர் சிறு பையனாகக் கண்டிக் கடைவீதியிலே சுற்றித் திரிந்தார். கண்டித் தெப்பக்குளத்திற்குப் பக்கத்திலே ஒரு சலவைத் தொழிலாளி வசித்து வந்தார். அவர் ஒருநாள் இந்தப் பையனைத் தமது வீட்டிற்கு வருமாறு அழைத்தார். பையனுடைய நல்ல குணங்களை அறிந்த அத்தொழிலாளி தனது சொந்தப்பிள்ளையைப் போலவே அன்பு செய்து வளர்த்து வந்தார். பையனும் வளர்ப்புத் தந்தைக்கு வேண்டிய உதவிகளைத் தாமாகவே உணர்ந்து செய்து வந்தார். மூட்டைகளைச் சுமந்து கொண்டு குளத்திற்குச் செல்லுதல், துணிகளைப் பால்போல் நிறமாகும் வண்ணம் துவைத்தல், தோய்த்த அழுக்குத்துணி துணிகளைக் காயவிடுதல், காய்ந்த துணிகளை மாராப்பாய்க் கட்டி வீட்டுக்குக் கொண்டு செல்லுதல் போன்ற தொழில்கள் அத்தனையையும் மகிழ்வுடன் செய்தார். ஓய்வு நேரங்களில் ஓடி ஆடி விளையாடவும் தவறவில்லை. சிறு வயதிலே உடைகளின் அழுக்கைப் போக்குவதில் வல்லவனான சிறுவன், பெரிய ஆனைக்குட்டி சுவாமிகள் ஆனதும் எத்தனையோ உயிர்களின் மன அழுக்கைப் போக்கி உள்ளார். மும்மல அழுக்கை நீக்கி எத்தனையோ சீடர்களை ஆட்கொண்டார்கள். சென்று பாம்பு எங்கே என்று விசாரித்தனர். அவர்களையும் ஆனைக்குட்டி பரிகசித்து அனுப்பினான். மூன்றாந் தடவையும் உரக்கக்கூவி அழைத்தான். ஒருவரும் ஏன் என்று கேட்கவில்லை. சில மணித்தியாலங்கள் சென்றன. கொல்லைப்பக்கம் சென்ற ஆனைக்குட்டியைக் காணவில்லையே என்று தேடிச் சென்றனர். அங்கே ஆனையைக் காணாமல் திகைத்தனர். ஆனால் அவர் மலங்கழித்த இடத்தில் தங்கக் குவியலாய் இருப்பதைக் கண்டனர். தங்கத்தை எடுத்து பாதுகாப்பாக வைத்து விட்டு, குடும்பம் முழுவதுமே ஆனைக்குட்டியைத் தேடுதலில் ஈடுபட்டது. கண்டி வீதியெல்லாம் தேடினர். கண்டுபிடிக்க முடியவில்லை. ஈற்றில், கண்டி அருள்மிகு கதிரேசன் கோயில் படியில் படுத்திருக்கக் கண்டனர். அவரை வீட்டுக்குத் திரும்பி வருமாறு பல படியாகக் கெஞ்சி அழைத்தனர். அவரோ, நீங்கள் யாரோ, நான் யாரோ, என்ற எண்ணம் உடையவர் போல மௌனமாய் இருந்துவிட்டார். இந்தப் புதினத்தைக் கண்ணுற்ற கோயில் குருக்கள், சலவைத் தொழிலாளரைப் பார்த்து, இந்தப் பையனுக்கு மூளைக்கோளாறு ஏற்பட்டுள்ளது போல் தெரிகிறது. ஆகவே அவரைத் தொந்தரவு செய்யாமல் வீட்டுக்குத் திரும்பிப் போகும்படி கட்டளையிட்டார். வந்தவர்களும் அவரைவிட்டு நீங்கி, வீடு சென்றனர். கதிரேசப் பெருமானே குருக்கள் நாவினின்று இவ்வார்த்தைகளைக் கூறியுள்ளார். இப்படிக் கூறியிருக்கா விட்டால் அவர்கள் அவ்விடத்தை விட்டுச் சென்றிருக்கவே மாட்டார்கள். Sofas முகத்துவாரம் ஸ்ரீ அருணாசலேஸ்வரர் தேவஸ்தானம் பெரியானைக்குட்டி சுவாமியார் மகர சமாத இச்சந்தர்ப்பத்திலே சீவன் முத்தர்களைப் பற்றிக் கைவல்யத்திலேவரும் செய்யுள் ஒன்று நினைவுகூரத்தக்கதாகும். காமமாதிகள் வந்தாலும் கணத்திற்போம் மனதிற்பற்றார் தாமரைஇலைத் தண்ணீர்போல் சகத்தொடுங் கூடிவாழ்வார் பாமரர்எனக் காண்பிப்பார் பண்டிதத் திறமைகாட்டார் ஊமருமாவார் உள்ளத்துவகையாம் சீவன் முத்தர். நான் என்ற அகந்தை அற்றுப் போகவும், ஆண்டவன் சாதனைப்படுத்தவுமே மகான்கள் இத்தகைய செயல்களில் படைப்பில் எவ்வித உயர்வு தாழ்வும் கருதக்கூடாது என்பதைச் பரமகம்சர் அதிகாலையில் எழுந்து சென்று புலையர் ஈடுபட்டு நடிப்பார்கள். அந்தணராகப் பிறந்த இராமகிருஷ்ண சேரியைக் கூட்டி மெழுகி வைத்துவிட்டு விடியுமுன் வீடு திரும்பிவிடுவாராம். பெரியானை கண்டியில் இருக்கும்வரை தம்மை மற்றையோருக்குக் காட்டிக் கொள்ளாது வாழ்ந்தாலும் கண்டியைவிட்டுப் புறப்படும்போது உயர்ந்த நிலையிலேயே சென்றுள்ளார். மகான்கள் பிறந்த இடத்திலோ அன்றி வளர்ந்த இடத்திலோ சந்நியாசி ஆவது இல்லை. காரணம் அந்த இடத்து மக்கள் அவர்களை அவர்களது பூர்வ ஆச்சிரமம் கொண்டே தான் மதிப்பர். அவர்களது வளர்ச்சியையும் உள்ளுணர்வையும் சத்தியையும் உணர்ந்து கொள்வதில்லை. கள்வன் ஒருவன் சந்நியாசியாகிவிட்டால் எவ்வளவு உயர்ந்த நிலையில் இருந்தாலும் கள்வன் என்ற பெயரை மறக்கமாட்டார்கள். இந்தியாவில் சித்துக்கள் ஆனைக்குட்டி சுவாமிகள் இந்தியா சென்று சேர்ந்தார். சாதாரண ஆனைக்குட்டியல்ல. சீவன் முத்தி நிலையடைந்த ஆனைக்குட்டி ஆவார். நவநாதசித்தரும் ஆனைக்குட்டி சுவாமிகளும் ஒருமுறை பல சாதுக்களோடு ஒரு புகையிரத நிலையத்தில் புகையிரதம் ஏறினர். இதைக் கண்ணுற்ற புகையிரத நிலைய அதிபர் ஆனைக்குட்டியையும், நவநாத சித்தரையும் தவிர மற்றைய சாதுக்களையெல்லாம் இறங்குமாறு கட்டளையிட்டார். மற்றைய சாதுக்களோடு இவர்களும் இறங்கினர். தெ பொறியியலாளர் எல்லாம் வந்து பார்த்து முயன்றனர். எதுவும் கைகூடவில்லை. இயந்திரத்தில் எவ்வித கோளாறும் இல்லை. அப்படியானால் ஏன் ஓட மறுக்கிறது என்ற பிரச்சினையில் ஆழ்ந்தனர். ஏறிய சாதுக்களை இறக்கிவிட்டதுதான் காரணமாய் இருக்கலாம் எனப் பிரயாணி ஒருவர் கூறினார். புகையிரத நிலைய அதிபரும் அதனை அரைகுறையாக ஏற்றுக் கொண்டார். அந்தக் காலத்தில் பெரிய பொறியியலாளர் ஒரு வெள்ளையர். அவரும் இன்னும் சில உயர்தர உத்தியோகத்தரும் சேர்ந்து சாதுக்களைத் தேடிப் புறப்பட்டனர். சாதுக்களைக் காட்டி லே கண்டனர். வீழ்ந்து வணங்கி தமது பிழைகளைப் பொறுக்கு மாறு வேண்டிப் புகையிரதத்தை ஓடச் செய்வதற்கு அருள்புரியுமாறு கேட்டு நின்றனர். "சுவாமிகள் எதைச் செய்ய வேண்டுமென்று விரும்புகிறீர்களோ அதை நாங்கள் தவறாமல் நிறைவேற்றி வைப்போம்" என இரந்து கேட்டனர். "நாங்கள் பரதேசிகள், உழைப்புப் பிழைப்பு அற்றவர்கள். எங்களிடம் எப்பொழுதுமே பணம் இருக்காது. உங்களைப் போன்ற இல்லறத்தார்கள் தான் உண்ண உணவும் உடுக்க உடையுந் தந்து காப்பாற்ற வேண்டும். 'துறந்தார்க்குந் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை' என்றுதானே வள்ளுவர் கூறியிருக்கின்றார். ஆகையால் எங்களைப்போன்ற சாதுக்களிடம் இருந்து எப்பொழுதேனும் இரெயில் கட்டணம் அறவிடக்கூடாது. இதற்குச் சம்மதமானால், இதனை எழுதிக் கையொப்பம் இட்டுத் தாருங்கள். அதன் பின்பு புகையிரதம் ஓடுவதற்கு வழி பார்ப்போம்" என்று கூறினார்கள். இது அந்த வெள்ளைக்காரருக்குப் பெரிய வியப்பாக இருந்தது. தாமே சுவாமிகள் கூறியவாறு எழுதிக் கையொப்பமிட்டுச் சுவாமிகளிடம் கொடுத்தார்கள். சுவாமிகள் மகிழ்வோடு பெற்றுக் கொண்டார்கள். சுவாமிகள் அந்த வெள்ளைக்காரரிடமிருந்தே ஒரு சிகரெற்றை வாங்கிப் பற்றவைத்தார். புகையை இழுத்து வெளியே ஊதினார். என்ன ஆச்சரியம்! 4, 5 மணித்தியாலங்களாக அசையாது நின்ற புகையிரதம் தானாகவே நகரத் தொடங்கியது. இத்தகைய அற்புதங்கள் நிகழ்த்திய மகான்களை யார் நினைக்கின்றார்கள்? கொழும்பு மாநகரில் ஆனைக்குட்டி சுவாமிகள் கொழும்புக் கோட்டைப் புகையிரத நிலையத்துக்கும் மருதானைப் புகையிரத நிலையத்திற்கும் இடையில் கப்பித்தாவத்தை என்றொரு இடம் உள்ளது. அந்த இடத்தில் இன்றும் ஒரு கோயில் இருப்பதை யாரும் அவதானிக்கலாம். அங்கே ஈனமுத்து என்றொருவர் வசித்து வந்தார். அந்தக் காலத்தில் றிக்சோ இழுக்கும் கூட்டத்தினருக்கு இந்த ஈனமுத்து தலைவர். றிக்சோ இழுப்பவர்கள் நாளாந்தம் தமது உழைப்பிற்கேற்ப ஈனமுத்துவுக்குக் கமிஷன் கொடுப்பார்கள். அதைக் கொண்டே அவர் வாழ்க்கை நடைபெற்றது. கமிஷனில் அரைவாசிக்கு மேல் தனது கள்ளுச் சாராயத்திற்காகச் செலவு செய்வார். தினமும் எந்த நேரமும் குடிபோதையில் மூழ்கி இருப்பவர்களைத் 'தினவெறியர்' என்று அழைப்பார்கள். இந்த ஈனமுத்துவும் அத்தகையவரில் ஒருவரே, ஆனால் இந்தக் குடிகாரனுக்குச் சாதுக்கள் சாமிகள் என்றால் ஒரு தனிமதிப்பு. சாதுக்களிடம் பத்தி செலுத்துவதும் அவர் செய்த பூர்வ புண்ணியம் போலும். எறும்பூரக் கல்லும் குழியும் என்பது பழமொழி. தினமும் சுவாமிகளுடைய தரிசனைக்காக வரும் ஏழைகளின் தொகை கூடிக்கொண்டே வந்தது. அதனால் ஈனமுத்துவின் பணச் சுவாமிகள் இருவரும் செல்லலாம் எனப் புகையிரத நிலைய அதிபர் கூறினார். எமது சகோதரங்களுக்கு இடம் இல்லையென்றால் நாமும் போகவில்லை என்று சாதுக்கள் எல்லாரும் ஒன்று சேர்ந்து நடந்து போய் பக்கத்திலுள்ள ஒரு காட்டில் தங்கினர். காட்டில் நெருப்பு மூட்டி சுற்றிவர இருந்து குளிர் காய்ந்தனர். சேமிப்பும் காலியானது. ஈனமுத்துவின் சொந்தச் செலவிற்கே தட்டுப்பாடு ஏற்பட்டது. இளையான்குடிமாற நாயனாரின் பத்தியை சிவபெருமான் துலக்கியது போல ஈனமுத்தரை ஆனைக்குட்டி சுவாமிகள் துலக்கியிருக்கலாம். கைப்பொருள் இல்லாத காலத்திலும் இளையான்குடிமாற நாயனார் அடியார்களை அன்போடு உபசரிப்பார் என்பதை உலகுக்குக் காட்டவே சிவபெருமான் குபேரனாக வாழ்ந்த மாறனாரை கோவணாண்டியாக்கினார். வீட்டில் ஒரு பொருளும் இல்லாத நேரத்திலே அதுவும் நடுச்சாமத்தில் மழை சோனாவாரியாகப் பெய்யும் சமயத்தில் சிவபெருமானே சிவனடியாராக வந்து மாறனாரிடம் பசியாற்றுமாறு கேட்டார். மாறனார் கொடுத்துப் பழகியவர் அல்லவா? வயலில் விதைத்த நெல்மணிகளை வாரிவந்து வறுத்துக் ஆண்டவன் ஆனைக்குட்டியைப் பலப்பல சாதனைகளில் ஈடுபடுத்தி உள்ளுணர்வை உயரச் செய்து கொண்டிருந்தான். ஆனைக்குட்டி தினமும் கடைவீதிக்குச் சென்று, எச்சில் புகையிரத இயந்திரம் வேலை செய்து கொண்டே நிற்கிறது. ஆனால் நகர மறுத்து விட்டது. சாரதி தன்னாலான மட்டும் முயன்றார். ஓடாமல் நிற்பதற்குரிய காரணத்தை இலைகளைப் பொறுக்கி, அவற்றிலுள்ள மீதி உணவுகளைச் அவரால் கண்டு கொள்ள முடியவில்லை. பெரிய பெரிய குற்றி அன்னமிட்டுச் சிவபிரானாகிய அடியாரையே திகைக்க வைத்துவிட்டார். இத்தகையதொரு நிலைதான் ஈனமுத்துவுக்கும் ஏற்பட்டது. சாப்பிட்டுவிட்டு கோயில் படிக்கே திரும்பி வந்துவிடுவார். உலக மக்கள் தம்மை நெருங்காதவாறு மகான்கள் தம்மை மறைத்தே வாழ்ந்து வந்தனர். எச்சில் இலையோடு தினமும் உட்கார்ந்து இருக்கும் ஒருவரை யார்தான் அண்டுவார்கள். அப்படிப்பட்ட ஒருவரோடு பேச்சுக் கொடுத்தாலே தமக்குக் கௌரவம் இல்லை என்று நினைக்கலாமல்லவா? இத்தகைய ஈனமுத்துவிடம் தான் பெரிய ஆனைக்குட்டி சுவாமிகள் பல இடங்களிலும் சுற்றித் திரிந்துவிட்டுக் கடைசியில் வந்து சேர்ந்தார்கள். சுவாமிகள் ஒரு சீவன் முத்தர். விருப்பு வெறுப்பற்றவர். ஈனமுத்து தான் உண்பதையும் தான் குடிப்பதையும் சுவாமிகளுக்குக் கொடுப்பார். கொடுப்பது எதுவானாலும் அதனை சுவாமிகள் வாங்கி உண்டு விடுவார். சுவாமிகளைத் தரிசிக்க வருப எத்தனை பேரானாலும் கடன் வாங்கியும் அத்தனை பேரையும் ஈனமுத்து உபசரிப்பார். திருச்சிற்றம்பலம் ஆக்கம் : ஆத்மசோதி முத்தையா சுவாமிகள் தொகுப்பு : சிவத்திரு.வடிவேலு கங்காளன்
ஆனைக்குட்டி என்பது வளர்ப்புத் தந்தையார் வைத்த பெயராகும் . பாரங்கள் நிறைந்த அழுக்குத் துணி மூட்டைகளை இலகுவில் தூக்கிச் சுமந்து செல்வதால் செல்லமாக இப் பெயரைச் சூட்டினாரோ தெரியவில்லை . ஒருமுறை அம்மா அம்மா பாம்பு பாம்பு என்று சத்தமிட்டான் சிறுவன் . இச்சத்தத்தைக் கேட்ட வளர்ப்புத் தாயார் ஓடோடியும் வந்தார் . எங்கேடா மகனே பாம்பு ? என்றார்கள் . ஆனால் ஆனைக்குட்டியோ கெக்காளம் கொட்டிச் சிரிக்கலானான் . இந்தப் பரிகசிப்பு தாய்க்கு மிகுந்த கோபத்தை உண்டாக்கியது . இரண்டாம் முறையும் அப்படியே பலத்த சத்தமிட்டு அழைத்தான் . வீட்டிலிருந்த சில ஆண்கள் மாத்திரம் ஓடிச் தென்னாடு கன்னி நல்லோரை புரட்டாசித் திங்கள் 2021 07 ஈழத்து சித்தர்கள் : சித்தர் பெரியானைக்குட்டி சுவாமிகள் கொழும்பு முகத்துவாரத்தில் இருக்கும் பெரியானைக் குட்டிச் சுவாமிகளுடைய சமாதிக்குச் சென்ற போது வாய்விட்டுச் சொல்ல முடியாத ஆனந்தமான அமைதியை அனுபவிக்க முடிந்தது . மகான்கள் பூத உடலோடு வாழுங் காலங்களில் அவர்களது திருச்சமூகம் எவ்வாறு ஆத்மீக அலையால் சூழப்பட்டிருக்குமோ அவ்விதமே அவர்கள் சமாதிகளிலும் ஆத்மீக அலை ஒன்று குழ்ந்திருப்பதைச் சாதகர்கள் இலகுவாக அறிந்து கொள்ளலாம் . கண்டியில் பெரியானைக் குட்டி சுவாமிகள் பெரியானைக்குட்டி சுவாமிகள் முற்பகுதியில் கண்டியில் வாழ்ந்து வந்ததாக அறியக்கிடக்கின்றது . கண்டியில் சுவாமிகளைத் தரிசித்து உரையாடிய பெருமக்கள் சிலர் தாம் சுவாமிகளுடன் தொடர்பு கொண்டுள்ளதாகக் கூறியுள்ளார்கள் . பெரியானைக்குட்டி சுவாமிகள் நவநாத சித்தருடன் மீண்டும் இலங்கைக்கு வருமுன்பே இளம் வயதில் கண்டியில் வாழ்ந்ததாகத் தகவல்கள் கிடைக்கின்றன . இளம் வயதில் சுவாமிகள் கண்டியில் வாழ்ந்து இந்தியா சென்று பின்பு நவநாத சித்தருடன் வந்திருக்கிறார்கள் . இவர் சிறு பையனாகக் கண்டிக் கடைவீதியிலே சுற்றித் திரிந்தார் . கண்டித் தெப்பக்குளத்திற்குப் பக்கத்திலே ஒரு சலவைத் தொழிலாளி வசித்து வந்தார் . அவர் ஒருநாள் இந்தப் பையனைத் தமது வீட்டிற்கு வருமாறு அழைத்தார் . பையனுடைய நல்ல குணங்களை அறிந்த அத்தொழிலாளி தனது சொந்தப்பிள்ளையைப் போலவே அன்பு செய்து வளர்த்து வந்தார் . பையனும் வளர்ப்புத் தந்தைக்கு வேண்டிய உதவிகளைத் தாமாகவே உணர்ந்து செய்து வந்தார் . மூட்டைகளைச் சுமந்து கொண்டு குளத்திற்குச் செல்லுதல் துணிகளைப் பால்போல் நிறமாகும் வண்ணம் துவைத்தல் தோய்த்த அழுக்குத்துணி துணிகளைக் காயவிடுதல் காய்ந்த துணிகளை மாராப்பாய்க் கட்டி வீட்டுக்குக் கொண்டு செல்லுதல் போன்ற தொழில்கள் அத்தனையையும் மகிழ்வுடன் செய்தார் . ஓய்வு நேரங்களில் ஓடி ஆடி விளையாடவும் தவறவில்லை . சிறு வயதிலே உடைகளின் அழுக்கைப் போக்குவதில் வல்லவனான சிறுவன் பெரிய ஆனைக்குட்டி சுவாமிகள் ஆனதும் எத்தனையோ உயிர்களின் மன அழுக்கைப் போக்கி உள்ளார் . மும்மல அழுக்கை நீக்கி எத்தனையோ சீடர்களை ஆட்கொண்டார்கள் . சென்று பாம்பு எங்கே என்று விசாரித்தனர் . அவர்களையும் ஆனைக்குட்டி பரிகசித்து அனுப்பினான் . மூன்றாந் தடவையும் உரக்கக்கூவி அழைத்தான் . ஒருவரும் ஏன் என்று கேட்கவில்லை . சில மணித்தியாலங்கள் சென்றன . கொல்லைப்பக்கம் சென்ற ஆனைக்குட்டியைக் காணவில்லையே என்று தேடிச் சென்றனர் . அங்கே ஆனையைக் காணாமல் திகைத்தனர் . ஆனால் அவர் மலங்கழித்த இடத்தில் தங்கக் குவியலாய் இருப்பதைக் கண்டனர் . தங்கத்தை எடுத்து பாதுகாப்பாக வைத்து விட்டு குடும்பம் முழுவதுமே ஆனைக்குட்டியைத் தேடுதலில் ஈடுபட்டது . கண்டி வீதியெல்லாம் தேடினர் . கண்டுபிடிக்க முடியவில்லை . ஈற்றில் கண்டி அருள்மிகு கதிரேசன் கோயில் படியில் படுத்திருக்கக் கண்டனர் . அவரை வீட்டுக்குத் திரும்பி வருமாறு பல படியாகக் கெஞ்சி அழைத்தனர் . அவரோ நீங்கள் யாரோ நான் யாரோ என்ற எண்ணம் உடையவர் போல மௌனமாய் இருந்துவிட்டார் . இந்தப் புதினத்தைக் கண்ணுற்ற கோயில் குருக்கள் சலவைத் தொழிலாளரைப் பார்த்து இந்தப் பையனுக்கு மூளைக்கோளாறு ஏற்பட்டுள்ளது போல் தெரிகிறது . ஆகவே அவரைத் தொந்தரவு செய்யாமல் வீட்டுக்குத் திரும்பிப் போகும்படி கட்டளையிட்டார் . வந்தவர்களும் அவரைவிட்டு நீங்கி வீடு சென்றனர் . கதிரேசப் பெருமானே குருக்கள் நாவினின்று இவ்வார்த்தைகளைக் கூறியுள்ளார் . இப்படிக் கூறியிருக்கா விட்டால் அவர்கள் அவ்விடத்தை விட்டுச் சென்றிருக்கவே மாட்டார்கள் . Sofas முகத்துவாரம் ஸ்ரீ அருணாசலேஸ்வரர் தேவஸ்தானம் பெரியானைக்குட்டி சுவாமியார் மகர சமாத இச்சந்தர்ப்பத்திலே சீவன் முத்தர்களைப் பற்றிக் கைவல்யத்திலேவரும் செய்யுள் ஒன்று நினைவுகூரத்தக்கதாகும் . காமமாதிகள் வந்தாலும் கணத்திற்போம் மனதிற்பற்றார் தாமரைஇலைத் தண்ணீர்போல் சகத்தொடுங் கூடிவாழ்வார் பாமரர்எனக் காண்பிப்பார் பண்டிதத் திறமைகாட்டார் ஊமருமாவார் உள்ளத்துவகையாம் சீவன் முத்தர் . நான் என்ற அகந்தை அற்றுப் போகவும் ஆண்டவன் சாதனைப்படுத்தவுமே மகான்கள் இத்தகைய செயல்களில் படைப்பில் எவ்வித உயர்வு தாழ்வும் கருதக்கூடாது என்பதைச் பரமகம்சர் அதிகாலையில் எழுந்து சென்று புலையர் ஈடுபட்டு நடிப்பார்கள் . அந்தணராகப் பிறந்த இராமகிருஷ்ண சேரியைக் கூட்டி மெழுகி வைத்துவிட்டு விடியுமுன் வீடு திரும்பிவிடுவாராம் . பெரியானை கண்டியில் இருக்கும்வரை தம்மை மற்றையோருக்குக் காட்டிக் கொள்ளாது வாழ்ந்தாலும் கண்டியைவிட்டுப் புறப்படும்போது உயர்ந்த நிலையிலேயே சென்றுள்ளார் . மகான்கள் பிறந்த இடத்திலோ அன்றி வளர்ந்த இடத்திலோ சந்நியாசி ஆவது இல்லை . காரணம் அந்த இடத்து மக்கள் அவர்களை அவர்களது பூர்வ ஆச்சிரமம் கொண்டே தான் மதிப்பர் . அவர்களது வளர்ச்சியையும் உள்ளுணர்வையும் சத்தியையும் உணர்ந்து கொள்வதில்லை . கள்வன் ஒருவன் சந்நியாசியாகிவிட்டால் எவ்வளவு உயர்ந்த நிலையில் இருந்தாலும் கள்வன் என்ற பெயரை மறக்கமாட்டார்கள் . இந்தியாவில் சித்துக்கள் ஆனைக்குட்டி சுவாமிகள் இந்தியா சென்று சேர்ந்தார் . சாதாரண ஆனைக்குட்டியல்ல . சீவன் முத்தி நிலையடைந்த ஆனைக்குட்டி ஆவார் . நவநாதசித்தரும் ஆனைக்குட்டி சுவாமிகளும் ஒருமுறை பல சாதுக்களோடு ஒரு புகையிரத நிலையத்தில் புகையிரதம் ஏறினர் . இதைக் கண்ணுற்ற புகையிரத நிலைய அதிபர் ஆனைக்குட்டியையும் நவநாத சித்தரையும் தவிர மற்றைய சாதுக்களையெல்லாம் இறங்குமாறு கட்டளையிட்டார் . மற்றைய சாதுக்களோடு இவர்களும் இறங்கினர் . தெ பொறியியலாளர் எல்லாம் வந்து பார்த்து முயன்றனர் . எதுவும் கைகூடவில்லை . இயந்திரத்தில் எவ்வித கோளாறும் இல்லை . அப்படியானால் ஏன் ஓட மறுக்கிறது என்ற பிரச்சினையில் ஆழ்ந்தனர் . ஏறிய சாதுக்களை இறக்கிவிட்டதுதான் காரணமாய் இருக்கலாம் எனப் பிரயாணி ஒருவர் கூறினார் . புகையிரத நிலைய அதிபரும் அதனை அரைகுறையாக ஏற்றுக் கொண்டார் . அந்தக் காலத்தில் பெரிய பொறியியலாளர் ஒரு வெள்ளையர் . அவரும் இன்னும் சில உயர்தர உத்தியோகத்தரும் சேர்ந்து சாதுக்களைத் தேடிப் புறப்பட்டனர் . சாதுக்களைக் காட்டி லே கண்டனர் . வீழ்ந்து வணங்கி தமது பிழைகளைப் பொறுக்கு மாறு வேண்டிப் புகையிரதத்தை ஓடச் செய்வதற்கு அருள்புரியுமாறு கேட்டு நின்றனர் . சுவாமிகள் எதைச் செய்ய வேண்டுமென்று விரும்புகிறீர்களோ அதை நாங்கள் தவறாமல் நிறைவேற்றி வைப்போம் என இரந்து கேட்டனர் . நாங்கள் பரதேசிகள் உழைப்புப் பிழைப்பு அற்றவர்கள் . எங்களிடம் எப்பொழுதுமே பணம் இருக்காது . உங்களைப் போன்ற இல்லறத்தார்கள் தான் உண்ண உணவும் உடுக்க உடையுந் தந்து காப்பாற்ற வேண்டும் . ' துறந்தார்க்குந் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை ' என்றுதானே வள்ளுவர் கூறியிருக்கின்றார் . ஆகையால் எங்களைப்போன்ற சாதுக்களிடம் இருந்து எப்பொழுதேனும் இரெயில் கட்டணம் அறவிடக்கூடாது . இதற்குச் சம்மதமானால் இதனை எழுதிக் கையொப்பம் இட்டுத் தாருங்கள் . அதன் பின்பு புகையிரதம் ஓடுவதற்கு வழி பார்ப்போம் என்று கூறினார்கள் . இது அந்த வெள்ளைக்காரருக்குப் பெரிய வியப்பாக இருந்தது . தாமே சுவாமிகள் கூறியவாறு எழுதிக் கையொப்பமிட்டுச் சுவாமிகளிடம் கொடுத்தார்கள் . சுவாமிகள் மகிழ்வோடு பெற்றுக் கொண்டார்கள் . சுவாமிகள் அந்த வெள்ளைக்காரரிடமிருந்தே ஒரு சிகரெற்றை வாங்கிப் பற்றவைத்தார் . புகையை இழுத்து வெளியே ஊதினார் . என்ன ஆச்சரியம் ! 4 5 மணித்தியாலங்களாக அசையாது நின்ற புகையிரதம் தானாகவே நகரத் தொடங்கியது . இத்தகைய அற்புதங்கள் நிகழ்த்திய மகான்களை யார் நினைக்கின்றார்கள் ? கொழும்பு மாநகரில் ஆனைக்குட்டி சுவாமிகள் கொழும்புக் கோட்டைப் புகையிரத நிலையத்துக்கும் மருதானைப் புகையிரத நிலையத்திற்கும் இடையில் கப்பித்தாவத்தை என்றொரு இடம் உள்ளது . அந்த இடத்தில் இன்றும் ஒரு கோயில் இருப்பதை யாரும் அவதானிக்கலாம் . அங்கே ஈனமுத்து என்றொருவர் வசித்து வந்தார் . அந்தக் காலத்தில் றிக்சோ இழுக்கும் கூட்டத்தினருக்கு இந்த ஈனமுத்து தலைவர் . றிக்சோ இழுப்பவர்கள் நாளாந்தம் தமது உழைப்பிற்கேற்ப ஈனமுத்துவுக்குக் கமிஷன் கொடுப்பார்கள் . அதைக் கொண்டே அவர் வாழ்க்கை நடைபெற்றது . கமிஷனில் அரைவாசிக்கு மேல் தனது கள்ளுச் சாராயத்திற்காகச் செலவு செய்வார் . தினமும் எந்த நேரமும் குடிபோதையில் மூழ்கி இருப்பவர்களைத் ' தினவெறியர் ' என்று அழைப்பார்கள் . இந்த ஈனமுத்துவும் அத்தகையவரில் ஒருவரே ஆனால் இந்தக் குடிகாரனுக்குச் சாதுக்கள் சாமிகள் என்றால் ஒரு தனிமதிப்பு . சாதுக்களிடம் பத்தி செலுத்துவதும் அவர் செய்த பூர்வ புண்ணியம் போலும் . எறும்பூரக் கல்லும் குழியும் என்பது பழமொழி . தினமும் சுவாமிகளுடைய தரிசனைக்காக வரும் ஏழைகளின் தொகை கூடிக்கொண்டே வந்தது . அதனால் ஈனமுத்துவின் பணச் சுவாமிகள் இருவரும் செல்லலாம் எனப் புகையிரத நிலைய அதிபர் கூறினார் . எமது சகோதரங்களுக்கு இடம் இல்லையென்றால் நாமும் போகவில்லை என்று சாதுக்கள் எல்லாரும் ஒன்று சேர்ந்து நடந்து போய் பக்கத்திலுள்ள ஒரு காட்டில் தங்கினர் . காட்டில் நெருப்பு மூட்டி சுற்றிவர இருந்து குளிர் காய்ந்தனர் . சேமிப்பும் காலியானது . ஈனமுத்துவின் சொந்தச் செலவிற்கே தட்டுப்பாடு ஏற்பட்டது . இளையான்குடிமாற நாயனாரின் பத்தியை சிவபெருமான் துலக்கியது போல ஈனமுத்தரை ஆனைக்குட்டி சுவாமிகள் துலக்கியிருக்கலாம் . கைப்பொருள் இல்லாத காலத்திலும் இளையான்குடிமாற நாயனார் அடியார்களை அன்போடு உபசரிப்பார் என்பதை உலகுக்குக் காட்டவே சிவபெருமான் குபேரனாக வாழ்ந்த மாறனாரை கோவணாண்டியாக்கினார் . வீட்டில் ஒரு பொருளும் இல்லாத நேரத்திலே அதுவும் நடுச்சாமத்தில் மழை சோனாவாரியாகப் பெய்யும் சமயத்தில் சிவபெருமானே சிவனடியாராக வந்து மாறனாரிடம் பசியாற்றுமாறு கேட்டார் . மாறனார் கொடுத்துப் பழகியவர் அல்லவா ? வயலில் விதைத்த நெல்மணிகளை வாரிவந்து வறுத்துக் ஆண்டவன் ஆனைக்குட்டியைப் பலப்பல சாதனைகளில் ஈடுபடுத்தி உள்ளுணர்வை உயரச் செய்து கொண்டிருந்தான் . ஆனைக்குட்டி தினமும் கடைவீதிக்குச் சென்று எச்சில் புகையிரத இயந்திரம் வேலை செய்து கொண்டே நிற்கிறது . ஆனால் நகர மறுத்து விட்டது . சாரதி தன்னாலான மட்டும் முயன்றார் . ஓடாமல் நிற்பதற்குரிய காரணத்தை இலைகளைப் பொறுக்கி அவற்றிலுள்ள மீதி உணவுகளைச் அவரால் கண்டு கொள்ள முடியவில்லை . பெரிய பெரிய குற்றி அன்னமிட்டுச் சிவபிரானாகிய அடியாரையே திகைக்க வைத்துவிட்டார் . இத்தகையதொரு நிலைதான் ஈனமுத்துவுக்கும் ஏற்பட்டது . சாப்பிட்டுவிட்டு கோயில் படிக்கே திரும்பி வந்துவிடுவார் . உலக மக்கள் தம்மை நெருங்காதவாறு மகான்கள் தம்மை மறைத்தே வாழ்ந்து வந்தனர் . எச்சில் இலையோடு தினமும் உட்கார்ந்து இருக்கும் ஒருவரை யார்தான் அண்டுவார்கள் . அப்படிப்பட்ட ஒருவரோடு பேச்சுக் கொடுத்தாலே தமக்குக் கௌரவம் இல்லை என்று நினைக்கலாமல்லவா ? இத்தகைய ஈனமுத்துவிடம் தான் பெரிய ஆனைக்குட்டி சுவாமிகள் பல இடங்களிலும் சுற்றித் திரிந்துவிட்டுக் கடைசியில் வந்து சேர்ந்தார்கள் . சுவாமிகள் ஒரு சீவன் முத்தர் . விருப்பு வெறுப்பற்றவர் . ஈனமுத்து தான் உண்பதையும் தான் குடிப்பதையும் சுவாமிகளுக்குக் கொடுப்பார் . கொடுப்பது எதுவானாலும் அதனை சுவாமிகள் வாங்கி உண்டு விடுவார் . சுவாமிகளைத் தரிசிக்க வருப எத்தனை பேரானாலும் கடன் வாங்கியும் அத்தனை பேரையும் ஈனமுத்து உபசரிப்பார் . திருச்சிற்றம்பலம் ஆக்கம் : ஆத்மசோதி முத்தையா சுவாமிகள் தொகுப்பு : சிவத்திரு.வடிவேலு கங்காளன்