தென்னாடு ஐப்பசித் திங்கள் இதழ் - 13

தெ 10 தென்னாடு துலை நல்லோரை ஐப்பசித் திங்கள், 2021 சிவபூமியில் சிவனைத் தேடி கி.மு 300 நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர் கிராமத்தில் குடி கொண்ட வெல்லாவெளி கோயில்தீவு ஆதிகாலச் சிவன் கோயில் "மேதிதோய் குளங்களெல்லாம் வீரப்போர் வரால்மீன் பாயும் ஓதிதோய் மலர்களெல்லாம் ஒலிப்பக மாதர் கண்கள் நீதிதோய் வன்னிமைக்கு நிகரில்நா தனைநா டென்பர் வீதிதோய் வெல்லவூராம் விழுமிய சரிதம் கேளீர்." மண்டூர் மு. சோமசுந்தரம்பிள்ளைபுலவர்-(1964) மட்டக்களப்பு படுவான்கரைப் பிரதேசங்களில், பண்டைய வரலாறுகளுடனும், பல தொல்லியல் எச்சங்களுடனும், நாட்டார் கலைவடிவங்கள், நாட்டுப்புறவழிபாடுகள், என்பவற்றுடன், இயற்கை எழில் பொழியும் வாவி ஆறைத் தொட்ட ஆறும், சதுப்பு நிலங்களும், மேய்ச்சல் நிலங்களும் மலைப்பாறைகளும் ஆயிரம் விழுதுகள் தாங்கிய ஆலமரமும், காடுகளும், வயல் வெளிகளும், எருமைகளும், பசுக்களும், கோயில்களும், குடியிருப்புக்களும் ஒருமித்து மருதம், முல்லை, குறிஞ்சியெனற் மூவகை நில அமைப்புக்களை, இயற்கையாகக் காட்டி நிற்கும் அழகிய, இடம் வெல்லாவெளிப் பிரதேசமாகும். வெல்லாவெளி இப்பிரதேசம் மட்டு மாநகரின் தெற்கு நோக்கி சுமார் 33 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. களுவாஞ்சிக்குடியிலிருந்து பட்டிருப்பு பாலத்தினை ஊடறுத்து கோயில் பேரைதீவு ஊரின் ஊடாகச் சென்றடையலாம். வெல்லாவெளிப் பிரதேசம் அம்மன்குளம், நாதனை, கோயில்தீவு, குளத்துவட்டை என்னும் நான்கு சிறுசிறு குடிசனங்களைக் கொண்டதாக காணப்படுகின்றது. இதில் கோயில் தீவில் இருந்த சிவனாலயமே மிகப்புராதனமானது. போர்த்துக்கீசர் காலத்தில் அழிக்கப்பட்டு, இறந்த நிலையில் ஓர் சில சுவடுகளைத் தாங்கி நிற்கும் கோயிலாகத் திகழ்கின்றது. திருத்தலவூரின் வரலாறு வெல்லாவெளி பிரதேசத்தின் சரித்திரத்தை அறிந்துகொள்வதற்கு மட்டக்களப்பு ‘பூர்வ சரித்திரம்' எனும் நூலும், நகரம் எழுதிய கல் என்று, இக்கிராமவாசிகளால் அழைக்கப்படும் குடைவரைக் கல்வெட்டும் முதன்மையும் முக்கியத்துவமும் பெறுகின்றது. குறிப்பிட்ட காலம் முதல் அப்பெயரே இப்பிரதேசத்திற்கு நடைமுறையில் வந்தது. ஒரு சமூகத்தின் பண்டைய இருப்பை அறிய உதவும் தொல்லியல் சான்றுகளில் கல்வெட்டும் ஒன்றாகும். வெல்லாவெளியின் மலையொன்றிலும், பெருங்கற்பாறை யொன்றிலுள்ள குகையொன்றிலும் இரு சாசனங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அவற்றின் ஒன்றிலே ‘பறுமகன் ஸமுத' என்று எழுதப்பட்டுள்ளது. இதை ஆராய்ந்த வரலாற்றுப் பெருந்தகை சி.பத்மநாதன் அவர்களும், இந்திய நாட்டைச் சேர்ந்த வரலாற்றுப் பேராசிரியர்களும் இலங்கைப் பிராமிச் சாசனங்களில் கையாளப்படும் இச்சொல், தமிழ் சொல்லின் மாற்று வடிவம் என்று குறிப்பிடுவதோடு, போட்டபள்ளம் என்றும் அழைத்து வருகின்றனர். இலங்கையில் உள்ள பண்டைய சிவாலயங்கள் தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்டு வரும் திரு.என்.கே.எஸ் திருச்செல்வம் அவர்கள் வெல்லாவெளி கோயில் தீவு சிவன் கோயில் பற்றி,ஞாயிறு தினக்குரல் பத்திரிகையில் (29.04.2012, 05.05.2012) எழுதியதன் சில முக்கிய பகுதிகள் வருமாறு. ''பல நூறு வருடங்களுக்கு முற்பட்டுச் சிறப்புடன் விளங்கிய சிவன் கோயில் இங்கு அமைந்திருந்ததாகக் கூறப்படுகின்றது. இராசமலை எனப்படும் றஜகலப் பகுதியிலிருந்து கிழக்கு நோக்கி ஓடும் சிற்றாறுகள் இரண்டும் ஒன்று சேர்ந்து நாதனை ஆறு என்ற பெயரில் மட்டக்களப்பு வாவியில் கலக்கும் சங்கமத்திற்கு சற்றுத் தூரமாக இச்சிவன் கோயில் அமைந்திருந்தது. இற்றைக்கு 2100 வருடங்களுக்கு முன்னர் வெல்லாவெளியிலே தமிழ்மொழி நிலவியமைக்கு, அது ஆதாரமாகின்றது என்று மிகப்பழங்காலத்தில் இங்கு சிவ வழிபாடு நிலவியுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த கொங்கண முனிவர் இலங்கைக்கு தலயாத்திரை குறிப்பிடுகின்றனர். இருப்பினும் இக்கல்வெட்டின் காலம் கி.மு 300 வருடங்களுக்கு முற்பட்டது என பேராசிரியர் வரும் போது தான் கொண்டு வந்த இலிங்கங்களில் ஒன்றை சி.பத்மநாதன் அவர்கள் "இலங்கைத் தமிழர் வரலாறு” என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். ஆக வெல்லாவெளிப்பிரதேசம் ஈழத்தமிழரின் ஆதிக்குடியிருப்பை ஆணித்தரமாக உறுதிப்படுத்தியுள்ளமையை கவனிக்கமுடிகின்றது. திருத்தல வரலாறும், புராணக்கதைகளும் கோயில்தீவு என்பது வெல்லாவெளிப் பிரதேசத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள கிராமமாகும். இங்குதான் போர்த்துக்கீசரால் அழிக்கப்பட்ட புராதன சிவனாலயம் அமைந்திருந்தது. நாதனைக்குப் பிற்பட்ட குடியேற்ற கிராமமாக கோயில் தீவு அமைந்திருந்தாலும் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய சிறப்புக்களோடு விளங்கி இன்று மறைந்துவிட்ட சிவனாலயமாகிவிட்டது. ஆனால் இன்றும் இக்கோயில் அமைந்திருந்த காணியை கோயில்வளவு என்றே அழைக்கின்றனர். இக்கோயிலில் அருள்புரிந்த மூலமூர்த்தி சோமசுந்தரர் எனும் பெயரால் போற்றப்பட்டுள்ளார். ஊரின் கிழக்குப் புறமாக உச்சந்தீவு என்னும் வயல்பரப்பைத் தொட்டதாக அமையும், வாவித் தொடுகையை, இத்தலத்தின் தீர்த்தமாகக் கொண்டுள்ளனர். இன்றும், “உச்சந்தீவு தீர்த்தக் கரையும், சோமசுந்தரர் இறக்கத்தடியும்" என்று இக்கிராமவாசிகள் அழைத்தும் வருகின்றனர். இத்திருக்கோயிலின் வரலாற்றினை நோக்கும் போது, போர்த்துக்கீசரால் அழிக்கப்பட்ட இச் சிவனாலயம் குறித்த இருப்பிடச்சான்றைத்தவிர, வேறு எந்த இலக்கியச்சான்றுகளும் கையில் இன்று வரை கிட்டவில்லை. ஆதலால் தொல்லியல் நோக்கிலேயே, இக்கோயிலின் இருப்பைத் தேட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் போர்த்துக்கீசரால் அழிக்கப்பட்ட சிவனாலயத்தின், கருங்கல்லினால் செதுக்கப்பட்ட கதவு நிலைகள், வெல்லாவெளிப்பிள்ளையார் கோயிலில் பொருத்தப்பட்டு இருப்பதனை அவதானிக்கலாம். அத்துடன் பரந்தபீடக்கல், ஆசனக்கல், கோயில் வளவின் தென்கிழக்கு மூலையில் அழிபாடுற்றுக் கிடக்கும் பெரிய மரக்கொட்டு பதித்து சுற்றிவரச் சதுர அமைப்பில் கட்டப்பட்டிருந்த தீர்த்தக்கிணறு, அண்மையில் இவ்விடத்தில் தொலைத்தொடர்பு கோபுரம் நிறுவுவதற்காக நிலத்தை அகழ்ந்த போது, நிலத்தின் அடியில் இருந்து கிடைத்த சிதைந்த பல கற்துண்டங்கள் என்பன கோயில்தீவில் ஒரு சிவனாலயம் இருந்தமைக்கான தடயங்களாக எடுத்துக் கொள்ளமுடியும். இச்சிவனாலயத்தோடு தொடர்புடைய செவிவழிக்கதை யொன்றும், இவ்வூர் மக்களிடையே காலம்காலமாக நிலவி வருகின்றது. போர்த்துக்கீசர் கோயில்களைக் கொள்ளை யிட்டும், அழித்தும் வந்த போது இவ்வாலயத்தின் சைவப்புலவர் சுந்தரமூர்த்தி துஷ்யந்த் கலைமாணி முதுகலைமாணி, பிரான்சு 'வெல்லா வெளிக்கிராமத்தின் வரலாறும் தொல்லியல் எச்சங்களை ஆவணப்படுத்தலும்' என்ற கட்டுரையில் இக் கோயிலின் வரலாற்றை ஆழப்பதிவு செய்துள்ளார். தற்போது இவைகளெல்லாம் இக்கோயிலைப் பற்றி அறிந்து கொள்ளக் கூடிய இலக்கிய ஆதாரங்களாகும். மட்டக்களப்பு பூர்வ சரித்திரத்தை மூலமாகக் கொண்டு ஆராயும் பொழுது கி.பி 11ஆம் நூற்றாண்டில் “நாதனை” எனும் பெயரால் அழைக்கப்பட்டமை பதிவாகியுள்ளது. மட்டக்களப்பின் ஆட்சியாளனாக இருந்த மதிசுதன் வரலாற்றில் இவ்விடயம் வருகின்றது. கி.பி 13ஆம் கிழக்கிலங்கையில் கலிங்கமாகோனின் செல்வாக்கு மோலோங்கிய காலகட்டத்தில் கொக்கட்டிச்சோலை, மண்முனை, ஆரையம்பதி, கோயில்போரைதீவு, திருக்கோயில் ஆகிய இடங்களில் அமைந்துள்ள கோயில்களில் வீராகமச் நூற்றாண்டில் மாகோன் ஆட்சிக் காலத்தில் (1215 - 1255) உருவாக்கப்பட்ட நாடுகாடுப்பற்றின் வடக்கு எல்லையாக நாதனை குறிப்பிடப்பட்டுள்ளது. போர்த்துக்கீசர் காலத்தில் முதன் முதலில் தயாரிக்கப்பட்ட தோம்பு எனப்படும், காணிப்பதிவேட்டில் நாதனை, வேலா வெளிக்கண்டம் என்று பதிவு செய்யப்பட்டதனைத் தொடர்ந்து, அதன் பெறுமதியான பொருட்களையும், சிலைகளையும், கிடாரம் ஒன்றில் இட்டு சிவன் கோயிலுக்கு நேராக உள்ள நாதனை ஆறு எனும் பூவல் ஆற்றில் போட்டதாகவும் அதையாரும் செல்வாக்கும், வீரசைவபத்தி மரபுகளும், கோயில் தொண்டூழியமுறைகளும், குடிவழக்கு மரபுகளும் செல்வாக்குப் பெற்றிருந்தன. இன்றளவும் கொக்கட்டிச்சோலை சிவன்கோயில் வீரசைவமரபுகளைத் தழுவியே நடைபெற்று பின் வந்த ஒல்லாந்தரும், ஆங்கிலேயரும் தங்களது ஆவணப் எடுக்கக் கூடாது என்ற காரணத்தினால், அவற்றைப் பூதம் வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் மாகோன் பதிவேட்டில் வேலாவெளியை, வெல்லாவெளி எனக் காவல் செய்வதாக வதந்தியும் பரப்பப்பட்டதனால், அவ் காலத்திற்குட்பட்ட வெல்லாவெளி கோயில்தீவு சிவன் கோயிலிலும், வீரசைவநெறி தழைத்தோங்கியிருக்க வேண்டும். இதனை தற்கால வெல்லாவெளி கிராம மக்களின் சமயப்பண்பாட்டு அம்சங்களினூடாக அவதானித்துக் கொள்ளலாம். ஆற்றில் எவரும் துணிந்து இறங்குவதில்லை என்றும் கூறப்பட்டு வருகின்றது. இவ்விடத்தை இன்று கிடாரம் GIRUKU இப்பகுதியில் வைத்து, எழுந்தருளச் செய்து வழிபட்டு வந்ததாகவும், இப்பகுதியில் வாழ்ந்த ஆதி வேடர் குலத்தவரால் தொடர்ந்து, இந்த இலிங்கம் பூசிக்கப்பட்டுவந்ததாகவும் கூறப்படுகின்றது. கி.பி 10 ஆம் நூற்றாண்டு தொடக்கம் 13 ஆம் நூற்றாண்டு வரையான காலங்களில் சிறப்புற்றிருந்த கோயில்களில் இதுவும் ஒன்று. பூபால கோத்திர வன்னிமைகளின் ஆட்சிக்குட்பட்டிருந்த இப்பகுதியில், அவர்களாலும் இக்கோயில் பராமரிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகின்றது. மட்டக்களப்புப் பதியிலிருந்த ஏராளமான இந்துக் கோயில்கள் ஐரோப்பியர் காலத்தில் அழிக்கப்பட்டன. இவற்றில் கோயில்தீவு சிவன் கோயில் ஒன்றாகும்.” இதேபோல் இக் கோயிலின் இருப்பு தொடர்பான தேடல்களை வெல்லாவெளியைச் சேர்ந்த கவிக்கோ வெல்லவூர்க் கோபால் அவர்கள் ‘வெல்லா வெளிவரலாறும் பண்பாடும்' என்ற நூலில் பதிவு செய்துள்ளார். மற்றும் கிழக்கு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இளம் வரலாற்றுத்துறை விரிவுரையாளர் நிலாந்தி பொன்னுத்துரை அவர்களும் எது எவ்வாறாயினும் சிதைந்த சிவனாலயங்களை மீள கட்டியெடுப்பது சிவபுண்ணியமாகும். புராதன சோமசுந்தரப் பெருமானின் திருவருள் மீண்டும் வெல்லாவெளி மண்ணின் கோயில்தீவில் நிலைகொள்ள, இப்பிரதேசத்தாரின் மனத்திலும் வாக்கிலும், செயலிலும் அப்பொருமானின் திருவருள் கைகூட வேண்டும். ஊர் பரந்த உலகின் முதல் ஆகிய ஓர் ஊர் இது - என்னப் பேர் பரந்த பிரமாபுரம் மேவிய பெம்மான் - இவன் அன்றே ! - சம்பந்தர் தேவாரம்.
தெ 10 தென்னாடு துலை நல்லோரை ஐப்பசித் திங்கள் 2021 சிவபூமியில் சிவனைத் தேடி கி.மு 300 நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர் கிராமத்தில் குடி கொண்ட வெல்லாவெளி கோயில்தீவு ஆதிகாலச் சிவன் கோயில் மேதிதோய் குளங்களெல்லாம் வீரப்போர் வரால்மீன் பாயும் ஓதிதோய் மலர்களெல்லாம் ஒலிப்பக மாதர் கண்கள் நீதிதோய் வன்னிமைக்கு நிகரில்நா தனைநா டென்பர் வீதிதோய் வெல்லவூராம் விழுமிய சரிதம் கேளீர் . மண்டூர் மு . சோமசுந்தரம்பிள்ளைபுலவர்- ( 1964 ) மட்டக்களப்பு படுவான்கரைப் பிரதேசங்களில் பண்டைய வரலாறுகளுடனும் பல தொல்லியல் எச்சங்களுடனும் நாட்டார் கலைவடிவங்கள் நாட்டுப்புறவழிபாடுகள் என்பவற்றுடன் இயற்கை எழில் பொழியும் வாவி ஆறைத் தொட்ட ஆறும் சதுப்பு நிலங்களும் மேய்ச்சல் நிலங்களும் மலைப்பாறைகளும் ஆயிரம் விழுதுகள் தாங்கிய ஆலமரமும் காடுகளும் வயல் வெளிகளும் எருமைகளும் பசுக்களும் கோயில்களும் குடியிருப்புக்களும் ஒருமித்து மருதம் முல்லை குறிஞ்சியெனற் மூவகை நில அமைப்புக்களை இயற்கையாகக் காட்டி நிற்கும் அழகிய இடம் வெல்லாவெளிப் பிரதேசமாகும் . வெல்லாவெளி இப்பிரதேசம் மட்டு மாநகரின் தெற்கு நோக்கி சுமார் 33 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது . களுவாஞ்சிக்குடியிலிருந்து பட்டிருப்பு பாலத்தினை ஊடறுத்து கோயில் பேரைதீவு ஊரின் ஊடாகச் சென்றடையலாம் . வெல்லாவெளிப் பிரதேசம் அம்மன்குளம் நாதனை கோயில்தீவு குளத்துவட்டை என்னும் நான்கு சிறுசிறு குடிசனங்களைக் கொண்டதாக காணப்படுகின்றது . இதில் கோயில் தீவில் இருந்த சிவனாலயமே மிகப்புராதனமானது . போர்த்துக்கீசர் காலத்தில் அழிக்கப்பட்டு இறந்த நிலையில் ஓர் சில சுவடுகளைத் தாங்கி நிற்கும் கோயிலாகத் திகழ்கின்றது . திருத்தலவூரின் வரலாறு வெல்லாவெளி பிரதேசத்தின் சரித்திரத்தை அறிந்துகொள்வதற்கு மட்டக்களப்பு பூர்வ சரித்திரம் ' எனும் நூலும் நகரம் எழுதிய கல் என்று இக்கிராமவாசிகளால் அழைக்கப்படும் குடைவரைக் கல்வெட்டும் முதன்மையும் முக்கியத்துவமும் பெறுகின்றது . குறிப்பிட்ட காலம் முதல் அப்பெயரே இப்பிரதேசத்திற்கு நடைமுறையில் வந்தது . ஒரு சமூகத்தின் பண்டைய இருப்பை அறிய உதவும் தொல்லியல் சான்றுகளில் கல்வெட்டும் ஒன்றாகும் . வெல்லாவெளியின் மலையொன்றிலும் பெருங்கற்பாறை யொன்றிலுள்ள குகையொன்றிலும் இரு சாசனங்கள் பொறிக்கப்பட்டுள்ளன . அவற்றின் ஒன்றிலே பறுமகன் ஸமுத ' என்று எழுதப்பட்டுள்ளது . இதை ஆராய்ந்த வரலாற்றுப் பெருந்தகை சி.பத்மநாதன் அவர்களும் இந்திய நாட்டைச் சேர்ந்த வரலாற்றுப் பேராசிரியர்களும் இலங்கைப் பிராமிச் சாசனங்களில் கையாளப்படும் இச்சொல் தமிழ் சொல்லின் மாற்று வடிவம் என்று குறிப்பிடுவதோடு போட்டபள்ளம் என்றும் அழைத்து வருகின்றனர் . இலங்கையில் உள்ள பண்டைய சிவாலயங்கள் தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்டு வரும் திரு.என்.கே.எஸ் திருச்செல்வம் அவர்கள் வெல்லாவெளி கோயில் தீவு சிவன் கோயில் பற்றி ஞாயிறு தினக்குரல் பத்திரிகையில் ( 29.04.2012 05.05.2012 ) எழுதியதன் சில முக்கிய பகுதிகள் வருமாறு . ' ' பல நூறு வருடங்களுக்கு முற்பட்டுச் சிறப்புடன் விளங்கிய சிவன் கோயில் இங்கு அமைந்திருந்ததாகக் கூறப்படுகின்றது . இராசமலை எனப்படும் றஜகலப் பகுதியிலிருந்து கிழக்கு நோக்கி ஓடும் சிற்றாறுகள் இரண்டும் ஒன்று சேர்ந்து நாதனை ஆறு என்ற பெயரில் மட்டக்களப்பு வாவியில் கலக்கும் சங்கமத்திற்கு சற்றுத் தூரமாக இச்சிவன் கோயில் அமைந்திருந்தது . இற்றைக்கு 2100 வருடங்களுக்கு முன்னர் வெல்லாவெளியிலே தமிழ்மொழி நிலவியமைக்கு அது ஆதாரமாகின்றது என்று மிகப்பழங்காலத்தில் இங்கு சிவ வழிபாடு நிலவியுள்ளது . இந்தியாவைச் சேர்ந்த கொங்கண முனிவர் இலங்கைக்கு தலயாத்திரை குறிப்பிடுகின்றனர் . இருப்பினும் இக்கல்வெட்டின் காலம் கி.மு 300 வருடங்களுக்கு முற்பட்டது என பேராசிரியர் வரும் போது தான் கொண்டு வந்த இலிங்கங்களில் ஒன்றை சி.பத்மநாதன் அவர்கள் இலங்கைத் தமிழர் வரலாறு என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார் . ஆக வெல்லாவெளிப்பிரதேசம் ஈழத்தமிழரின் ஆதிக்குடியிருப்பை ஆணித்தரமாக உறுதிப்படுத்தியுள்ளமையை கவனிக்கமுடிகின்றது . திருத்தல வரலாறும் புராணக்கதைகளும் கோயில்தீவு என்பது வெல்லாவெளிப் பிரதேசத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள கிராமமாகும் . இங்குதான் போர்த்துக்கீசரால் அழிக்கப்பட்ட புராதன சிவனாலயம் அமைந்திருந்தது . நாதனைக்குப் பிற்பட்ட குடியேற்ற கிராமமாக கோயில் தீவு அமைந்திருந்தாலும் மூர்த்தி தலம் தீர்த்தம் ஆகிய சிறப்புக்களோடு விளங்கி இன்று மறைந்துவிட்ட சிவனாலயமாகிவிட்டது . ஆனால் இன்றும் இக்கோயில் அமைந்திருந்த காணியை கோயில்வளவு என்றே அழைக்கின்றனர் . இக்கோயிலில் அருள்புரிந்த மூலமூர்த்தி சோமசுந்தரர் எனும் பெயரால் போற்றப்பட்டுள்ளார் . ஊரின் கிழக்குப் புறமாக உச்சந்தீவு என்னும் வயல்பரப்பைத் தொட்டதாக அமையும் வாவித் தொடுகையை இத்தலத்தின் தீர்த்தமாகக் கொண்டுள்ளனர் . இன்றும் உச்சந்தீவு தீர்த்தக் கரையும் சோமசுந்தரர் இறக்கத்தடியும் என்று இக்கிராமவாசிகள் அழைத்தும் வருகின்றனர் . இத்திருக்கோயிலின் வரலாற்றினை நோக்கும் போது போர்த்துக்கீசரால் அழிக்கப்பட்ட இச் சிவனாலயம் குறித்த இருப்பிடச்சான்றைத்தவிர வேறு எந்த இலக்கியச்சான்றுகளும் கையில் இன்று வரை கிட்டவில்லை . ஆதலால் தொல்லியல் நோக்கிலேயே இக்கோயிலின் இருப்பைத் தேட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது . அந்த அடிப்படையில் போர்த்துக்கீசரால் அழிக்கப்பட்ட சிவனாலயத்தின் கருங்கல்லினால் செதுக்கப்பட்ட கதவு நிலைகள் வெல்லாவெளிப்பிள்ளையார் கோயிலில் பொருத்தப்பட்டு இருப்பதனை அவதானிக்கலாம் . அத்துடன் பரந்தபீடக்கல் ஆசனக்கல் கோயில் வளவின் தென்கிழக்கு மூலையில் அழிபாடுற்றுக் கிடக்கும் பெரிய மரக்கொட்டு பதித்து சுற்றிவரச் சதுர அமைப்பில் கட்டப்பட்டிருந்த தீர்த்தக்கிணறு அண்மையில் இவ்விடத்தில் தொலைத்தொடர்பு கோபுரம் நிறுவுவதற்காக நிலத்தை அகழ்ந்த போது நிலத்தின் அடியில் இருந்து கிடைத்த சிதைந்த பல கற்துண்டங்கள் என்பன கோயில்தீவில் ஒரு சிவனாலயம் இருந்தமைக்கான தடயங்களாக எடுத்துக் கொள்ளமுடியும் . இச்சிவனாலயத்தோடு தொடர்புடைய செவிவழிக்கதை யொன்றும் இவ்வூர் மக்களிடையே காலம்காலமாக நிலவி வருகின்றது . போர்த்துக்கீசர் கோயில்களைக் கொள்ளை யிட்டும் அழித்தும் வந்த போது இவ்வாலயத்தின் சைவப்புலவர் சுந்தரமூர்த்தி துஷ்யந்த் கலைமாணி முதுகலைமாணி பிரான்சு ' வெல்லா வெளிக்கிராமத்தின் வரலாறும் தொல்லியல் எச்சங்களை ஆவணப்படுத்தலும் ' என்ற கட்டுரையில் இக் கோயிலின் வரலாற்றை ஆழப்பதிவு செய்துள்ளார் . தற்போது இவைகளெல்லாம் இக்கோயிலைப் பற்றி அறிந்து கொள்ளக் கூடிய இலக்கிய ஆதாரங்களாகும் . மட்டக்களப்பு பூர்வ சரித்திரத்தை மூலமாகக் கொண்டு ஆராயும் பொழுது கி.பி 11 ஆம் நூற்றாண்டில் நாதனை எனும் பெயரால் அழைக்கப்பட்டமை பதிவாகியுள்ளது . மட்டக்களப்பின் ஆட்சியாளனாக இருந்த மதிசுதன் வரலாற்றில் இவ்விடயம் வருகின்றது . கி.பி 13 ஆம் கிழக்கிலங்கையில் கலிங்கமாகோனின் செல்வாக்கு மோலோங்கிய காலகட்டத்தில் கொக்கட்டிச்சோலை மண்முனை ஆரையம்பதி கோயில்போரைதீவு திருக்கோயில் ஆகிய இடங்களில் அமைந்துள்ள கோயில்களில் வீராகமச் நூற்றாண்டில் மாகோன் ஆட்சிக் காலத்தில் ( 1215 - 1255 ) உருவாக்கப்பட்ட நாடுகாடுப்பற்றின் வடக்கு எல்லையாக நாதனை குறிப்பிடப்பட்டுள்ளது . போர்த்துக்கீசர் காலத்தில் முதன் முதலில் தயாரிக்கப்பட்ட தோம்பு எனப்படும் காணிப்பதிவேட்டில் நாதனை வேலா வெளிக்கண்டம் என்று பதிவு செய்யப்பட்டதனைத் தொடர்ந்து அதன் பெறுமதியான பொருட்களையும் சிலைகளையும் கிடாரம் ஒன்றில் இட்டு சிவன் கோயிலுக்கு நேராக உள்ள நாதனை ஆறு எனும் பூவல் ஆற்றில் போட்டதாகவும் அதையாரும் செல்வாக்கும் வீரசைவபத்தி மரபுகளும் கோயில் தொண்டூழியமுறைகளும் குடிவழக்கு மரபுகளும் செல்வாக்குப் பெற்றிருந்தன . இன்றளவும் கொக்கட்டிச்சோலை சிவன்கோயில் வீரசைவமரபுகளைத் தழுவியே நடைபெற்று பின் வந்த ஒல்லாந்தரும் ஆங்கிலேயரும் தங்களது ஆவணப் எடுக்கக் கூடாது என்ற காரணத்தினால் அவற்றைப் பூதம் வருகின்றமை குறிப்பிடத்தக்கது . அந்த வகையில் மாகோன் பதிவேட்டில் வேலாவெளியை வெல்லாவெளி எனக் காவல் செய்வதாக வதந்தியும் பரப்பப்பட்டதனால் அவ் காலத்திற்குட்பட்ட வெல்லாவெளி கோயில்தீவு சிவன் கோயிலிலும் வீரசைவநெறி தழைத்தோங்கியிருக்க வேண்டும் . இதனை தற்கால வெல்லாவெளி கிராம மக்களின் சமயப்பண்பாட்டு அம்சங்களினூடாக அவதானித்துக் கொள்ளலாம் . ஆற்றில் எவரும் துணிந்து இறங்குவதில்லை என்றும் கூறப்பட்டு வருகின்றது . இவ்விடத்தை இன்று கிடாரம் GIRUKU இப்பகுதியில் வைத்து எழுந்தருளச் செய்து வழிபட்டு வந்ததாகவும் இப்பகுதியில் வாழ்ந்த ஆதி வேடர் குலத்தவரால் தொடர்ந்து இந்த இலிங்கம் பூசிக்கப்பட்டுவந்ததாகவும் கூறப்படுகின்றது . கி.பி 10 ஆம் நூற்றாண்டு தொடக்கம் 13 ஆம் நூற்றாண்டு வரையான காலங்களில் சிறப்புற்றிருந்த கோயில்களில் இதுவும் ஒன்று . பூபால கோத்திர வன்னிமைகளின் ஆட்சிக்குட்பட்டிருந்த இப்பகுதியில் அவர்களாலும் இக்கோயில் பராமரிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகின்றது . மட்டக்களப்புப் பதியிலிருந்த ஏராளமான இந்துக் கோயில்கள் ஐரோப்பியர் காலத்தில் அழிக்கப்பட்டன . இவற்றில் கோயில்தீவு சிவன் கோயில் ஒன்றாகும் . இதேபோல் இக் கோயிலின் இருப்பு தொடர்பான தேடல்களை வெல்லாவெளியைச் சேர்ந்த கவிக்கோ வெல்லவூர்க் கோபால் அவர்கள் வெல்லா வெளிவரலாறும் பண்பாடும் ' என்ற நூலில் பதிவு செய்துள்ளார் . மற்றும் கிழக்கு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இளம் வரலாற்றுத்துறை விரிவுரையாளர் நிலாந்தி பொன்னுத்துரை அவர்களும் எது எவ்வாறாயினும் சிதைந்த சிவனாலயங்களை மீள கட்டியெடுப்பது சிவபுண்ணியமாகும் . புராதன சோமசுந்தரப் பெருமானின் திருவருள் மீண்டும் வெல்லாவெளி மண்ணின் கோயில்தீவில் நிலைகொள்ள இப்பிரதேசத்தாரின் மனத்திலும் வாக்கிலும் செயலிலும் அப்பொருமானின் திருவருள் கைகூட வேண்டும் . ஊர் பரந்த உலகின் முதல் ஆகிய ஓர் ஊர் இது - என்னப் பேர் பரந்த பிரமாபுரம் மேவிய பெம்மான் - இவன் அன்றே ! - சம்பந்தர் தேவாரம் .