தென்னாடு ஐப்பசித் திங்கள் இதழ் - 13

தெ 02 சிவ வழிபாட்டின் இன்னோர் பெருங்கூறு சத்தி வழிபாடு என்றே கூறலாம். எல்லாம் வல்ல சிவப்பெரும் பொருளை மாதொருபாகனாகவே சைவம் வழிபடுகின்றது. சிவ சத்தி இணைப்பின் தன்மையே, அணு முதல் அண்டம் வரையான அனைத்தும் என்பது சைவத்தின் பேருண்மை. 'சத்தி சிவன்தன் விளையாட்டுத் தாரணி சத்தி சிவமும்ஆம் சிவன் சத்தியுமாகும் சத்தி சிவம்அன்றித் தாபரம் வேறில்லை சத்தி தான்என்றும் அமைந்து உருஆகுமே" இது திருமூலரின் ஓர் பாடல், சிவ சத்தியின் விளையாட்டே இந்த உலகம், அண்டம், உயிர்கள் என்றும் சத்தியுள் சிவமும் சிவத்துள் சத்தியும் அடங்கும் என்றும், அந்த சத்தியானது பல்வேறு வடிவங்களைப் பெற்று அருள் புரியும் என்றும், பறைசாற்றிப் போகின்றார் திருமூலர். இப்படிப்பட்ட சத்தியை நோக்கி வழிபாடு இயற்றும் நாட்களே 'ஒன்பானிரவு நோன்பு' ஆகும். இதை நவராத்திரி என்றும் அழைப்பார். தமிழர் தம் மெய்யியலில் பெண்சார் வழிபாடு தவிர்க்கவோ, மறுக்கவோ முடியாத விடயம். சங்ககாலக் கொற்றவை, தவ்வை வழிபாடு முதற்கொண்டு கிராமியத் தெய்வப்பெண் வழிபாடு வரை நீளுகின்றது. குறிப்பாக ஈழத்திலும் நாக அம்மன், நாகபூசனி போன்ற பெண் தெய்வ வழிபாடுகள் சிறப்புற்றுத் திகழ்கின்றன. அத்தகு பெண் தெய்வ வழிபாட்டின் நீட்சியே சத்தி வழிபாடு எனவும் கொள்ளலாம். சத்தியை நோக்கி இயற்றப்படும் நோன்புகளில் மிகவும் சிறப்பு வாய்ந்தது ஒன்பான் இரவு விரதம் ஆகும். மனிதனுக்கு அவசியமான ஆற்றலின் வடிவமாய் விளங்குகின்ற சத்தியைப் போற்றும் நோன்பாக இந்நோன்புகடைப்பிடிக்கப்படுகின்றது. புரட்டாசித் திங்கள் மறைமதி நாளுக்கு அடுத்த நாள் முதல் ஆரம்பமாகி ஒன்பது நாட்கள் வரை நோற்கப்படும் நோன்பாக இது திகழ்கின்றது. ஒன்பது வகையான கூலங்களை (தானியங்கள்) முளைக்கவிட்டு, நிறைகுடம் வைத்து அதை இறைவியாகக் கருதி வழிபடுவர். குறிப்பாக அபிராமி அந்தாதி, சகலகாலாவல்லிமாலை போன்ற தீந்தமிழ்ப்பாடல்களினால் இக்காலத்தில் மிகவும் பத்தியுடன் இறைவியை வழிபடுவர் வெண்தாமரைக்கு அன்றி நின்பதம்தாங்க என்வெள்ளை உள்ளத் தண்தாமரைக்குத் தகாதுகொலோ? சகம்ஏழும் அளித்து உண்டான் உறங்க ஒழித்தான் பித்தாக உண்டாக்கும்வண்ணம் கண்டான் சுவைகொள் கரும்பே சகலகலாவல்லியே எனத்தொடங்கும் குமர குருபரரின் கலைமகள் மீதான பாடலும், சைவத்தையும் தமிழையும் மீட்கப்பிறந்த தமிழ்ஞான சம்பந்தர் தனது மூன்று வயதில் அம்மையே அப்பா என்று அழைத்ததும், தென்னாடு உடைய ஈசன் இறைவியுடன் காட்சி நல்கினார். மாதொரு பாகனாகிய ஈசனின் இடப்பாகத்தில் திடமாய் உறைந்த இறைவியுடன் ஈசனைக் கண்ட அக்குழந்தை அழுகையைத்தணித்து, சிரித்தது. தாயன்பு சொட்ட அக்குழந்தைக்குப் பாலூட்டினாள் இறைவி. பேரறிவு பெற்ற அக்குழந்தை தனது வாயினால், தேன் சொட்டும் தமிழில் திருமுறையை ஓத ஆரம்பித்தது. தமிழ் மறையின் முதலாம் திருமுறையின் முதல்ப்பாடலின் முதல்வரி 'தோடுடைய' என்று ஆரம்பிக்கின்றது. ஈசனின் பாகமாய் அமர்ந்த சத்தியின் தோட்டில் இருந்து ஆரம்பிக்கும் திருமுறை தீந்தமிழ்ப்பாக்களாக நீண்டு செல்கின்றது. அத்தகு பெருமையுடையவள் சத்தி. திருமுறையின் ஆரம்பத்திற்காக தனது தோட்டையே கொடுத்தாள் சத்தி. "தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடிக் காடுடையசுட லைப்பொடிபூசிஎன் உள்ளங்கவர் கள்வன் ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்தஅருள் செய்த பீடுடையபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே” திருக்கடவூரில் தனது அடியவனின் அன்புக்காய் ஈசன் கூற்றுவனை உதைத்துத்தள்ளிய போது, கூற்றுவன் மீது விழுந்தது ஈசனின் இடக்காலே. இடப்பாகம் அமர்ந்த சத்தியே உதைத்துத் தள்ளினாள் என்றும் சொல்லலாம். அதே திருக்கடவூரில் மீண்டும் ஒரு அதிசயம் நடந்தது. அன்று ஒரு மறைமதி நாள். அபிராமிப்பட்டர் எனும் அடியவர் அன்று அக்கோயிலில் தியானத்தில் ஆழ்ந்திருந்தார். இவர் அபிராமியின் மீது கொண்ட அளவு கடந்த பத்தியினால் மனத்திலே இறைவியை ஒளி வடிவில் கண்டு பேரானந்தத்தில் ஆழ்ந்திருந்தார். இந்த முத்தி நிலையில் பித்தர் (பைத்தியம்) போலவும் பேதையர் (அறிவில்லாதவர்) போலவும் உலகப் பற்றின்றி எந்த நேரமும், கடவுளுடன் ஒன்றி இருந்த பட்டரை யாரும் புரிந்து கொள்ளவில்லை. ஏதோ மனப்பைத்தியம் பிடித்து அலைபவர் என்றே எண்ணித் தூற்றினார்கள். போக்கன், அறிவற்றவன் என்றே மக்கள் கணித்து விட்டார்கள் . தென்னாடு சத்தி வழிபாடு அக்காலத்தில் தஞ்சையை தலைநகரமாக கொண்டு, மராட்டிய பரம்பரையை சேர்ந்த, சரபோசி என்ற மன்னர் ஆண்டு வந்தார். அவர் தெய்வ பத்தியும், இறைப்பற்றும் உடையவர். அவர் அதே மறைமதி தினத்தில் அமுதகும்ப நாதரையும் அபிராமி அன்னையையும் வழிபட வேண்டும் என்ற விருப்புடன் திருக்கடவூரை அடைந்தார். ''உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம், உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம் போது, மலர்க்கமலை வெல்த துதிக்கின்ற மின் கொடி, மென் கடிக் குங்குமத் தோயமென்ன விதிக்கின்ற மேனி அபிராமி எந்தன் விழுத்துணையே” எனத்தொடங்கும் அபிராமி அந்தாதியும், "மூவுலகும் இடறியற்றும் அடலவுணர் உயிரொழிய முனிவு கூர்ந்த பூவையுறழ் திருமேனி அருட்கடவுள் கூட கவனிக்காது, பட்டர் இருப்பதை கண்டு மன்னர் வியந்தார். பட்டரின் இறையுடன் ஒன்றி நின்ற தோற்றமும், ஒளி வீசும் முகமும், தியான நிலையில் ஆழ்ந்திருந்த கண்களும் அரசனை கவர்ந்தன. அருகிலிருந்தவர் ‘பத்தர்' என்றனர் பலர் 'பித்தர்' என்று தூற்றினர். பட்டரை தூற்றி திரிந்தவர்கள் மன்னரிடம், "மன்னா! உங்களுக்கு தர வேண்டிய மரியாதையை தராமல் கண்மூடி இருக்கிறார் பட்டர். எந்நேரமும் இப்படித் தான் இருப்பார். இவர் ஒரு பைத்தியம்” என்று குறை கூறினர். அதைக் கேட்ட மன்னர் உள்ளே சென்று அம்பிகையை வழிபட்ட பின்னர். திரும்பி வரும்போது பட்டரோடு கதைத்தே தீர வேண்டும் என்ற எண்ணத்தில், "பட்டரே, இன்று என்ன நாள் ?” என்று கேட்டார். கண் மூடிய நிலையில், அன்னையைத் தன் மனக்கண்ணில் கண்டு களித்துக் கொண்டிருந்த பட்டர் சற்றும் தாமதியாது, நிறைமதி என்றார். மன்னர் கோயிலை அடைந்தபோது, மக்கள், பூசகர், அடியவர் எல்லோரும் இறைவனை விடுத்து, மன்னனை வணங்கினர். ஆனால் அபிராமிப் பட்டர், அபிராமி அம்மையை நினைந்து, தியானத்தில் மூழ்கி, இந்த உலக நினைவுகள் ஏதுமின்றி, அமர்ந்து இருந்தார். மன்னர் வருவதைக் "நிச்சயம் வரும்” என்று கண்மூடிய நிலையில் பதில் சொல்லி மன்னருக்கு அவமானமாய்ப் போய் விட்டது. பைத்தியக்காரன் என்று மக்கள் சொன்ன பிறகும் இவரோடு கதைத்து, இப்படி அவமானப்பட்டு விட்டோமே என்று கோபம் பொங்கி வந்தது. கோபத்தை அடக்கிய வண்ணம் "அப்படியென்றால் இன்று இரவு நிலவு வருமா?” என்று அடுத்த கேள்வியை மன்னர் கேட்டார். மன்னர் கேட்க, அகன்மார்பில் பொலிந்து தோன்றித் தேவர் உலகினும் விளங்கும் புகழ்க் கொல்லா புரத்தினிது சேர்ந்து வைகும் பாவையிரு தாழ்தொழுது பழமறைதேர் குறுமுனிவன் பழிச்சுகின்றான்" தோடுடைய இறைவி துலை நல்லோரை ஐப்பசித் திங்கள், 202 எனத் தொடங்கும் அகத்தியரின் அலைமகள் மீதான பாடலும், இக்காலத்தில் பாடப்படும் பாடல்களாகக் காணப்படுகின்றன. இவை தவிர திருமுறைப்பாடல்கள் மற்றும் திருப்புகழ் போன்றவையும், இக் காலத்தில் சிறப்பாக பாடப்படுகின்றன. ஒன்பானிரவு வெறும் நோன்பாக மட்டுமல்ல, ஒரு வாழ்வியல் சடங்காக எம் மண்ணுடனும் மக்களுடனும் பின்னிப்பிணைந்துள்ளது. ஏடு தொடக்குதலில் இருந்து ஏர் உழுதல் வரை இக்காலத்தில் இடம்பெறும் சிறப்பு வாய்ந்த விடயங்களாகக் காணப்படுகின்றன. கிராமங்கள் மற்றும் பாடசாலைகள் தோறும், இக்காலத்தில் கலைவிழா, மற்றும் அவை சார்ந்த விழாக்கள் இடம்பெற்று மாணவர்கள் மற்றும் மக்களிடையே சைவம் மற்றும் கலை சார்ந்த விடயங்கள் தெளிவுபடுத்தப்படுகின்றன. ஒன்பானிரவு நோன்பு காலப்பகுதி என்றாலே பெரும்பாலான பாடசாலைகளும், கிராமங்களும், கிராம மன்றங்களும், விளையாட்டுக் கழகங்களும் களைகட்டி விடும். திருமுறை முற்றோதல், சைவ சொற்பொழிவுகள் என பலதரப்பட்ட நிகழ்ச்சிகளும் செழிப்புற நடைபெறும். சைவம் கூறும் சிவத்தின் இன்னோர் பாதியாகிய சத்தியை வெவ்வேறு வடிவங்களில் வைத்து வழிபடும் உன்னத காலமே இந்த ஒன்பானிரவு வழிபாடு என்றும் சொல்லிப் போகலாம். சிவத்திரு யாழவன் சிவவேதன் ஆனால் தற்போது பரவி வரும் தீநுண்மிப்பரவல் காரணமாக இந்நோன்பும் பாரிய அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளது. கலைவிழாக்கள், பாடசாலை நிகழ்வுகள், சைவம் சார் விழிப்புணர்வுகளை நடத்தமுடியா சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்றே சொல்லலாம். இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் எனில் ஒன்பானிரவு தன் சிறப்பை சற்று இழந்து விட்டது என்றே சொல்லலாம். இதுவும் கடந்து போகும் என்று மனதை தேற்றி நகர வேண்டியது தான். இருப்பினும் வீடுகளில் சத்தியை நினைத்து வழிபடுவோம். சகலகலாவல்லிமாலை, அபிராமி அந்தாதி, மற்றும் திருமுறைகள் போன்றவற்றால், எல்லாம் வல்ல இறைவியை வழிபடுவோம். தீ நுண்மியால் வெளிப்புற உலகை தான் கட்டுப்படுத்தமுடியுமே தவிர எம் உட்புற பத்தியையோ, இறை உணர்வையோ, அதனால் ஒன்றும் செய்ய முடியாது. அடுத்த முறையாவது இவ்வழிபாட்டை சிறப்புடன் வழிபட எல்லாம் வல்ல இறைவியையும் இறைவனையும் பிரார்த்திப்போம். சிவத்துள் சத்தியும் சத்தியுள் சிவமும் இரண்டற நின்ற பேரெழில் போற்றி வழிபடுவோம். திருச்சிற்றம்பலம் விடுகின்றார் பட்டர். "வராவிட்டால் உனக்கு மரண தண்டனை” இது அரச கட்டளை என்று கோபத்தில் கூறி விட்டு மன்னர் சென்று விடுகிற மெல்ல மெல்ல கண் விழித்து தன்னிலை அடைந்த பட்டர், நடந்ததை அறிந்து சூழ்நிலையின் தீவிரத்தைப் புரிந்து கொண்டு, அன்னையிடம் ஓடினார். தாயே! உன்னையே எண்ணி எண்ணி பித்தாகிப் போன உன் மகனுக்கு நீ தரும் பரிசு இதுதானா? பிள்ளையைக் காக்க வேண்டியது தாயின் கடமை. இன்றிரவு வானில் முழுநிலவு வர வேண்டும். வராவிட்டால் என் உயிர் பிரியும் என்று கூறி, கோயில் திருச்சுற்றில் குழிவெட்டி நெருப்பு மூட்டினார். மேல் விட்டத்திலிருந்து நூறு ஆரங்கள் கொண்ட உறியைத் தொங்கவிட்டு, அதில் ஏறி அமர்ந்தார். 'உதிக்கின்ற செங்கதிர், என்று அன்னையைத் தியானித்து அந்தாதி பாடத் தொடங்கினார். ஒவ்வொரு பாடல் முடிந்ததும் ஒவ்வொரு கயிறாக அறுத்துக்கொண்டே வந்தார். மாலையும் வந்தது. பொழுது சாய்ந்தது பட்டர் பல பாடல்கள் பாடியும் அம்பிகையின் அருள் கிடைக்கவில்லை. பட்டரின் நம்பிக்கை குறையவில்லை! மறைமதி நாள் ஆகையால் வானம் இருண்டு கிடந்தது. அபிராமி அந்தாதியின் எழுபத்து ஒன்பதாவது பாடலை பட்டர் பாடத்தொடங்குகின்றார். "விழிக்கே அருள் உண்டு, அபிராம வல்லிக்கு வேதம் சொன்ன வழிக்கே வழிபட நெஞ்சு உண்டு எமக்கு அவ்வழி கிடைக்க, பழிக்கே சுழன்று, வெம் பாவங்களே செய்து, பாழ் நரகக் குழிக்கே அழுந்தும் கயவர் தம்மோடு, என்ன கூட்டு இனியே?" என்ற பாடலைப் பாடி முடித்ததும், அன்னை அபிராமி அவரது மனதில் பெருங்காட்சி கொடுத்தாள். எந்தத் தோட்டை திருமுறைக்காகக் காட்டி ஆரம்பித்து வைத்தாளோ, அதே தோட்டை எடுத்து வானில் வீசி எறிகின்றாள். திருமுறையை ஆரம்பித்து வைத்த அந்தத் தோடு, நிறைமதியாக வானில் மின்னியது. அவள் பட்டரிடம் "நீ வாய் தவறி மன்னனிடம் கூறிய சொல்லையும் உண்மை என நிரூபித்தேன். நீ தொடங்கிய அந்தாதியை தொடர்ந்து பாடு", என்றாள். அன்னை அருள்பெற்ற அபிராமிப்பட்டர் மகிழ்ச்சி அடைந்து, முழுப்பாடலையும் பாடி முடித்தார். இது தான் இறைவியின் அருள். தந்தை எம் மீது கோபமாக உள்ளபோது கூட தாய் எமக்காக பரிந்து பேசுவாள். அத்தகு தாயின் வழிபாட்டுக்கு உரிய காலமாகிய ஒன்பானிரவு காலத்தில் திருமுறைகளையும் அபிராமி அந்தாதியையும் ஓதி அம்மை உடனுறை அப்பனை வழிபடுவோம். ஓம் சகலகலா வல்லியே!. திருச்சிற்றம்பலம்
தெ 02 சிவ வழிபாட்டின் இன்னோர் பெருங்கூறு சத்தி வழிபாடு என்றே கூறலாம் . எல்லாம் வல்ல சிவப்பெரும் பொருளை மாதொருபாகனாகவே சைவம் வழிபடுகின்றது . சிவ சத்தி இணைப்பின் தன்மையே அணு முதல் அண்டம் வரையான அனைத்தும் என்பது சைவத்தின் பேருண்மை . ' சத்தி சிவன்தன் விளையாட்டுத் தாரணி சத்தி சிவமும்ஆம் சிவன் சத்தியுமாகும் சத்தி சிவம்அன்றித் தாபரம் வேறில்லை சத்தி தான்என்றும் அமைந்து உருஆகுமே இது திருமூலரின் ஓர் பாடல் சிவ சத்தியின் விளையாட்டே இந்த உலகம் அண்டம் உயிர்கள் என்றும் சத்தியுள் சிவமும் சிவத்துள் சத்தியும் அடங்கும் என்றும் அந்த சத்தியானது பல்வேறு வடிவங்களைப் பெற்று அருள் புரியும் என்றும் பறைசாற்றிப் போகின்றார் திருமூலர் . இப்படிப்பட்ட சத்தியை நோக்கி வழிபாடு இயற்றும் நாட்களே ' ஒன்பானிரவு நோன்பு ' ஆகும் . இதை நவராத்திரி என்றும் அழைப்பார் . தமிழர் தம் மெய்யியலில் பெண்சார் வழிபாடு தவிர்க்கவோ மறுக்கவோ முடியாத விடயம் . சங்ககாலக் கொற்றவை தவ்வை வழிபாடு முதற்கொண்டு கிராமியத் தெய்வப்பெண் வழிபாடு வரை நீளுகின்றது . குறிப்பாக ஈழத்திலும் நாக அம்மன் நாகபூசனி போன்ற பெண் தெய்வ வழிபாடுகள் சிறப்புற்றுத் திகழ்கின்றன . அத்தகு பெண் தெய்வ வழிபாட்டின் நீட்சியே சத்தி வழிபாடு எனவும் கொள்ளலாம் . சத்தியை நோக்கி இயற்றப்படும் நோன்புகளில் மிகவும் சிறப்பு வாய்ந்தது ஒன்பான் இரவு விரதம் ஆகும் . மனிதனுக்கு அவசியமான ஆற்றலின் வடிவமாய் விளங்குகின்ற சத்தியைப் போற்றும் நோன்பாக இந்நோன்புகடைப்பிடிக்கப்படுகின்றது . புரட்டாசித் திங்கள் மறைமதி நாளுக்கு அடுத்த நாள் முதல் ஆரம்பமாகி ஒன்பது நாட்கள் வரை நோற்கப்படும் நோன்பாக இது திகழ்கின்றது . ஒன்பது வகையான கூலங்களை ( தானியங்கள் ) முளைக்கவிட்டு நிறைகுடம் வைத்து அதை இறைவியாகக் கருதி வழிபடுவர் . குறிப்பாக அபிராமி அந்தாதி சகலகாலாவல்லிமாலை போன்ற தீந்தமிழ்ப்பாடல்களினால் இக்காலத்தில் மிகவும் பத்தியுடன் இறைவியை வழிபடுவர் வெண்தாமரைக்கு அன்றி நின்பதம்தாங்க என்வெள்ளை உள்ளத் தண்தாமரைக்குத் தகாதுகொலோ ? சகம்ஏழும் அளித்து உண்டான் உறங்க ஒழித்தான் பித்தாக உண்டாக்கும்வண்ணம் கண்டான் சுவைகொள் கரும்பே சகலகலாவல்லியே எனத்தொடங்கும் குமர குருபரரின் கலைமகள் மீதான பாடலும் சைவத்தையும் தமிழையும் மீட்கப்பிறந்த தமிழ்ஞான சம்பந்தர் தனது மூன்று வயதில் அம்மையே அப்பா என்று அழைத்ததும் தென்னாடு உடைய ஈசன் இறைவியுடன் காட்சி நல்கினார் . மாதொரு பாகனாகிய ஈசனின் இடப்பாகத்தில் திடமாய் உறைந்த இறைவியுடன் ஈசனைக் கண்ட அக்குழந்தை அழுகையைத்தணித்து சிரித்தது . தாயன்பு சொட்ட அக்குழந்தைக்குப் பாலூட்டினாள் இறைவி . பேரறிவு பெற்ற அக்குழந்தை தனது வாயினால் தேன் சொட்டும் தமிழில் திருமுறையை ஓத ஆரம்பித்தது . தமிழ் மறையின் முதலாம் திருமுறையின் முதல்ப்பாடலின் முதல்வரி ' தோடுடைய ' என்று ஆரம்பிக்கின்றது . ஈசனின் பாகமாய் அமர்ந்த சத்தியின் தோட்டில் இருந்து ஆரம்பிக்கும் திருமுறை தீந்தமிழ்ப்பாக்களாக நீண்டு செல்கின்றது . அத்தகு பெருமையுடையவள் சத்தி . திருமுறையின் ஆரம்பத்திற்காக தனது தோட்டையே கொடுத்தாள் சத்தி . தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடிக் காடுடையசுட லைப்பொடிபூசிஎன் உள்ளங்கவர் கள்வன் ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்தஅருள் செய்த பீடுடையபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே திருக்கடவூரில் தனது அடியவனின் அன்புக்காய் ஈசன் கூற்றுவனை உதைத்துத்தள்ளிய போது கூற்றுவன் மீது விழுந்தது ஈசனின் இடக்காலே . இடப்பாகம் அமர்ந்த சத்தியே உதைத்துத் தள்ளினாள் என்றும் சொல்லலாம் . அதே திருக்கடவூரில் மீண்டும் ஒரு அதிசயம் நடந்தது . அன்று ஒரு மறைமதி நாள் . அபிராமிப்பட்டர் எனும் அடியவர் அன்று அக்கோயிலில் தியானத்தில் ஆழ்ந்திருந்தார் . இவர் அபிராமியின் மீது கொண்ட அளவு கடந்த பத்தியினால் மனத்திலே இறைவியை ஒளி வடிவில் கண்டு பேரானந்தத்தில் ஆழ்ந்திருந்தார் . இந்த முத்தி நிலையில் பித்தர் ( பைத்தியம் ) போலவும் பேதையர் ( அறிவில்லாதவர் ) போலவும் உலகப் பற்றின்றி எந்த நேரமும் கடவுளுடன் ஒன்றி இருந்த பட்டரை யாரும் புரிந்து கொள்ளவில்லை . ஏதோ மனப்பைத்தியம் பிடித்து அலைபவர் என்றே எண்ணித் தூற்றினார்கள் . போக்கன் அறிவற்றவன் என்றே மக்கள் கணித்து விட்டார்கள் . தென்னாடு சத்தி வழிபாடு அக்காலத்தில் தஞ்சையை தலைநகரமாக கொண்டு மராட்டிய பரம்பரையை சேர்ந்த சரபோசி என்ற மன்னர் ஆண்டு வந்தார் . அவர் தெய்வ பத்தியும் இறைப்பற்றும் உடையவர் . அவர் அதே மறைமதி தினத்தில் அமுதகும்ப நாதரையும் அபிராமி அன்னையையும் வழிபட வேண்டும் என்ற விருப்புடன் திருக்கடவூரை அடைந்தார் . ' ' உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம் உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம் போது மலர்க்கமலை வெல்த துதிக்கின்ற மின் கொடி மென் கடிக் குங்குமத் தோயமென்ன விதிக்கின்ற மேனி அபிராமி எந்தன் விழுத்துணையே எனத்தொடங்கும் அபிராமி அந்தாதியும் மூவுலகும் இடறியற்றும் அடலவுணர் உயிரொழிய முனிவு கூர்ந்த பூவையுறழ் திருமேனி அருட்கடவுள் கூட கவனிக்காது பட்டர் இருப்பதை கண்டு மன்னர் வியந்தார் . பட்டரின் இறையுடன் ஒன்றி நின்ற தோற்றமும் ஒளி வீசும் முகமும் தியான நிலையில் ஆழ்ந்திருந்த கண்களும் அரசனை கவர்ந்தன . அருகிலிருந்தவர் பத்தர் ' என்றனர் பலர் ' பித்தர் ' என்று தூற்றினர் . பட்டரை தூற்றி திரிந்தவர்கள் மன்னரிடம் மன்னா ! உங்களுக்கு தர வேண்டிய மரியாதையை தராமல் கண்மூடி இருக்கிறார் பட்டர் . எந்நேரமும் இப்படித் தான் இருப்பார் . இவர் ஒரு பைத்தியம் என்று குறை கூறினர் . அதைக் கேட்ட மன்னர் உள்ளே சென்று அம்பிகையை வழிபட்ட பின்னர் . திரும்பி வரும்போது பட்டரோடு கதைத்தே தீர வேண்டும் என்ற எண்ணத்தில் பட்டரே இன்று என்ன நாள் ? என்று கேட்டார் . கண் மூடிய நிலையில் அன்னையைத் தன் மனக்கண்ணில் கண்டு களித்துக் கொண்டிருந்த பட்டர் சற்றும் தாமதியாது நிறைமதி என்றார் . மன்னர் கோயிலை அடைந்தபோது மக்கள் பூசகர் அடியவர் எல்லோரும் இறைவனை விடுத்து மன்னனை வணங்கினர் . ஆனால் அபிராமிப் பட்டர் அபிராமி அம்மையை நினைந்து தியானத்தில் மூழ்கி இந்த உலக நினைவுகள் ஏதுமின்றி அமர்ந்து இருந்தார் . மன்னர் வருவதைக் நிச்சயம் வரும் என்று கண்மூடிய நிலையில் பதில் சொல்லி மன்னருக்கு அவமானமாய்ப் போய் விட்டது . பைத்தியக்காரன் என்று மக்கள் சொன்ன பிறகும் இவரோடு கதைத்து இப்படி அவமானப்பட்டு விட்டோமே என்று கோபம் பொங்கி வந்தது . கோபத்தை அடக்கிய வண்ணம் அப்படியென்றால் இன்று இரவு நிலவு வருமா ? என்று அடுத்த கேள்வியை மன்னர் கேட்டார் . மன்னர் கேட்க அகன்மார்பில் பொலிந்து தோன்றித் தேவர் உலகினும் விளங்கும் புகழ்க் கொல்லா புரத்தினிது சேர்ந்து வைகும் பாவையிரு தாழ்தொழுது பழமறைதேர் குறுமுனிவன் பழிச்சுகின்றான் தோடுடைய இறைவி துலை நல்லோரை ஐப்பசித் திங்கள் 202 எனத் தொடங்கும் அகத்தியரின் அலைமகள் மீதான பாடலும் இக்காலத்தில் பாடப்படும் பாடல்களாகக் காணப்படுகின்றன . இவை தவிர திருமுறைப்பாடல்கள் மற்றும் திருப்புகழ் போன்றவையும் இக் காலத்தில் சிறப்பாக பாடப்படுகின்றன . ஒன்பானிரவு வெறும் நோன்பாக மட்டுமல்ல ஒரு வாழ்வியல் சடங்காக எம் மண்ணுடனும் மக்களுடனும் பின்னிப்பிணைந்துள்ளது . ஏடு தொடக்குதலில் இருந்து ஏர் உழுதல் வரை இக்காலத்தில் இடம்பெறும் சிறப்பு வாய்ந்த விடயங்களாகக் காணப்படுகின்றன . கிராமங்கள் மற்றும் பாடசாலைகள் தோறும் இக்காலத்தில் கலைவிழா மற்றும் அவை சார்ந்த விழாக்கள் இடம்பெற்று மாணவர்கள் மற்றும் மக்களிடையே சைவம் மற்றும் கலை சார்ந்த விடயங்கள் தெளிவுபடுத்தப்படுகின்றன . ஒன்பானிரவு நோன்பு காலப்பகுதி என்றாலே பெரும்பாலான பாடசாலைகளும் கிராமங்களும் கிராம மன்றங்களும் விளையாட்டுக் கழகங்களும் களைகட்டி விடும் . திருமுறை முற்றோதல் சைவ சொற்பொழிவுகள் என பலதரப்பட்ட நிகழ்ச்சிகளும் செழிப்புற நடைபெறும் . சைவம் கூறும் சிவத்தின் இன்னோர் பாதியாகிய சத்தியை வெவ்வேறு வடிவங்களில் வைத்து வழிபடும் உன்னத காலமே இந்த ஒன்பானிரவு வழிபாடு என்றும் சொல்லிப் போகலாம் . சிவத்திரு யாழவன் சிவவேதன் ஆனால் தற்போது பரவி வரும் தீநுண்மிப்பரவல் காரணமாக இந்நோன்பும் பாரிய அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளது . கலைவிழாக்கள் பாடசாலை நிகழ்வுகள் சைவம் சார் விழிப்புணர்வுகளை நடத்தமுடியா சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்றே சொல்லலாம் . இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் எனில் ஒன்பானிரவு தன் சிறப்பை சற்று இழந்து விட்டது என்றே சொல்லலாம் . இதுவும் கடந்து போகும் என்று மனதை தேற்றி நகர வேண்டியது தான் . இருப்பினும் வீடுகளில் சத்தியை நினைத்து வழிபடுவோம் . சகலகலாவல்லிமாலை அபிராமி அந்தாதி மற்றும் திருமுறைகள் போன்றவற்றால் எல்லாம் வல்ல இறைவியை வழிபடுவோம் . தீ நுண்மியால் வெளிப்புற உலகை தான் கட்டுப்படுத்தமுடியுமே தவிர எம் உட்புற பத்தியையோ இறை உணர்வையோ அதனால் ஒன்றும் செய்ய முடியாது . அடுத்த முறையாவது இவ்வழிபாட்டை சிறப்புடன் வழிபட எல்லாம் வல்ல இறைவியையும் இறைவனையும் பிரார்த்திப்போம் . சிவத்துள் சத்தியும் சத்தியுள் சிவமும் இரண்டற நின்ற பேரெழில் போற்றி வழிபடுவோம் . திருச்சிற்றம்பலம் விடுகின்றார் பட்டர் . வராவிட்டால் உனக்கு மரண தண்டனை இது அரச கட்டளை என்று கோபத்தில் கூறி விட்டு மன்னர் சென்று விடுகிற மெல்ல மெல்ல கண் விழித்து தன்னிலை அடைந்த பட்டர் நடந்ததை அறிந்து சூழ்நிலையின் தீவிரத்தைப் புரிந்து கொண்டு அன்னையிடம் ஓடினார் . தாயே ! உன்னையே எண்ணி எண்ணி பித்தாகிப் போன உன் மகனுக்கு நீ தரும் பரிசு இதுதானா ? பிள்ளையைக் காக்க வேண்டியது தாயின் கடமை . இன்றிரவு வானில் முழுநிலவு வர வேண்டும் . வராவிட்டால் என் உயிர் பிரியும் என்று கூறி கோயில் திருச்சுற்றில் குழிவெட்டி நெருப்பு மூட்டினார் . மேல் விட்டத்திலிருந்து நூறு ஆரங்கள் கொண்ட உறியைத் தொங்கவிட்டு அதில் ஏறி அமர்ந்தார் . ' உதிக்கின்ற செங்கதிர் என்று அன்னையைத் தியானித்து அந்தாதி பாடத் தொடங்கினார் . ஒவ்வொரு பாடல் முடிந்ததும் ஒவ்வொரு கயிறாக அறுத்துக்கொண்டே வந்தார் . மாலையும் வந்தது . பொழுது சாய்ந்தது பட்டர் பல பாடல்கள் பாடியும் அம்பிகையின் அருள் கிடைக்கவில்லை . பட்டரின் நம்பிக்கை குறையவில்லை ! மறைமதி நாள் ஆகையால் வானம் இருண்டு கிடந்தது . அபிராமி அந்தாதியின் எழுபத்து ஒன்பதாவது பாடலை பட்டர் பாடத்தொடங்குகின்றார் . விழிக்கே அருள் உண்டு அபிராம வல்லிக்கு வேதம் சொன்ன வழிக்கே வழிபட நெஞ்சு உண்டு எமக்கு அவ்வழி கிடைக்க பழிக்கே சுழன்று வெம் பாவங்களே செய்து பாழ் நரகக் குழிக்கே அழுந்தும் கயவர் தம்மோடு என்ன கூட்டு இனியே ? என்ற பாடலைப் பாடி முடித்ததும் அன்னை அபிராமி அவரது மனதில் பெருங்காட்சி கொடுத்தாள் . எந்தத் தோட்டை திருமுறைக்காகக் காட்டி ஆரம்பித்து வைத்தாளோ அதே தோட்டை எடுத்து வானில் வீசி எறிகின்றாள் . திருமுறையை ஆரம்பித்து வைத்த அந்தத் தோடு நிறைமதியாக வானில் மின்னியது . அவள் பட்டரிடம் நீ வாய் தவறி மன்னனிடம் கூறிய சொல்லையும் உண்மை என நிரூபித்தேன் . நீ தொடங்கிய அந்தாதியை தொடர்ந்து பாடு என்றாள் . அன்னை அருள்பெற்ற அபிராமிப்பட்டர் மகிழ்ச்சி அடைந்து முழுப்பாடலையும் பாடி முடித்தார் . இது தான் இறைவியின் அருள் . தந்தை எம் மீது கோபமாக உள்ளபோது கூட தாய் எமக்காக பரிந்து பேசுவாள் . அத்தகு தாயின் வழிபாட்டுக்கு உரிய காலமாகிய ஒன்பானிரவு காலத்தில் திருமுறைகளையும் அபிராமி அந்தாதியையும் ஓதி அம்மை உடனுறை அப்பனை வழிபடுவோம் . ஓம் சகலகலா வல்லியே !. திருச்சிற்றம்பலம்