தென்னாடு ஐப்பசித் திங்கள் இதழ் - 13

இத்தலத்தில் உள்ள இறைவன் இறைவியை வழிபட்டுத் தேவாரப் பதிகங்களைப் பாடி வந்தால், முப்பிறப்பிலும் பெறுவார். திருத்தல அமைவிடம்: (நாகப்பட்டினம் மாவட்டம் - தமிழ்நாடு) இத்தலமான அருள்மிகு மயிலம்மை உடனுறை மயிலைநாதர் திருக்கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்தில், மாயவரம் என அழைக்கப்பட்ட மயிலாடுதுறையில் உள்ளது. இவ்வூர் சிதம்பரத்தில் இருந்து 42 கி. மி தொலைவிலும், கும்பகோணத்தில் இருந்து 35கி. மி தொலைவிலும் அமைந்துள்ளது. இந்த சிறப்புமிகு மயிலாடுதுறையில் இருந்து, ஒன்பான்கோள்த்(நவகிரக) தலங்கள் சென்று வருவது சுலபம். துலை நல்லோரை ஐப்பசித் திங்கள், 2021 ஈசனைத் தேடிய தென்னாட்டுப் பயணம் அருள்மிகு மயிலம்மை உடனுறை மயிலைநாதர் (மயூரநாதசுவாமி] திருக்கோயில் - மயிலாடுதுறை தேவாரப் பாடல் பெற்ற சிவபுரங்களில் 156வது திருக்கோயில் திருத்தலச் சிறப்பு இத்தல இறைவன் தான்தோன்றி இறைவனாகத் திகழ்கின்றார். மயிலாடுதுறையில், திருவாவடுதுறை ஆதீனத்திற்குச் சொந்தமான ஐயாறப்பர் கோயிலில் நிகழும் எழுதலத் (சபஸ்த்தான) திருவிழாவில் பங்குபற்றும் ஏழுசிவன் கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாம். பங்குபற்றும் மற்றைய கோயில்கள்: அறம் வளர்த்த நாயகி உடனுறை ஐயாறப்பர் கோயில் உறைநாடு சாந்தநாயகி உடனுறை புனுகீசுவரர் கோயில் மூவாயிலூர் மங்களநாயகி, எழில் நாயகி உடனுறை வழித்துணைநாதர்( மார்க்க சகாய சுவாமி) கோயில் சூலம் பேட்டை அறம் வளர்த்த நாயகி உடனுறை அழகியநாதர் கோயில் துலாக் கட்டம் காசி விசாலாச்சி உடனுறை காசி விசுவநாதர் கோயில் சித்தர்காடு திரிபுரசுந்தரி உடனுறை பிரம்மபுரீசுவரர் கோயில் என்பனவாம். இத்தலத்தின் தீர்த்தமான காவேரித்துறையில் துலாநீராடல் என்பது சிறப்புக்குரியது. ஐப்பசித் திங்கள் முதலாம் நாள் தொடங்கும் இத்துலாநீராடல் தொடர்ந்து முப்பது நாட்கள் நிகழ்ந்து நிறைவுறும். அவ்வது சமயம் அடியார்கள் யாவரும் காவேரித் தீர்த்தத்தில் துலாநீராடி தங்கள் ஏழுபிறப்பிலும், இப்பிறப்பில் செய்திட்ட தீமைகளை இறையருளால் அழித்து, நற்பயனை அடைவர் என்பது நம்பிக்கை. ஆதலால், இத்தலத்தின் சிறப்பிற்குரிய நிகழ்வாக துலாநீராடல் நிகழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறான துலாநீராடலிற் பங்கு பற்றி தங்களது பாவத்தினைத் தீர்த்தற் பொருட்டு, வடபுலத்திலிருந்து, நாதசர்மா என்பவரும், அவரது மனையாள் அனவித்தி யாம்பிகை என்பவரும், மயிலாடுதுறைக்கு வந்து கோயிலை அடைந்தனர். அவ்வது சமயம் அன்றுடன் துலாநீராடல் நிறைவடைந்துவிட்டது. அச்செய்தியை அறிந்திட்ட அவ்விணையர் மிகுந்த துயருற்று, தங்களது தீதிற்குக் கழுவாய் ஏதுமற்றுப் போய்விட்டே, என மனத்துயருற்று வருந்தினர். அன்று இரவாகிவிட்டபடியினாலே கோயிலிலேயே தங்கிவிட்டு மறுநாள் காலை தங்களது ஊருக்குப் புறப்பட்டுச் செல்லலாம் என எண்ணம் கொண்டிருந்தனர். பின்னர் இறைச் சிந்தையுடனேயே நித்திரைக்குச் சென்றனர். தென்னாடு அன்று இரவு நாதசர்மாவின் கனவிலே சிவபெருமான் தோன்றி, இன்று கதிரவன் தோன்றும் முன் நீங்கள் நீராடலாம். கதிரவன் தோன்றிய பின்பே துலாத் திங்கள் நிறைவுறும். ஆகவே நீங்கள் இத்தீர்த்தத்தில் நீராடி உங்களது தீமைகளை நீக்கிக் கொள்ளலாம் எனக் கூறினார். கனவிலிருந்து மீண்ட நாதசர்மா இறைவனைத் தொழுது வணங்கி, தனது மனைவியுடன் அன்று கதிரவன் தோன்றும் முன் நீராடினர். இதனால் அவர்கள் முன்பு, எழுமையில் செய்த தீமைகள் எல்லாம் அழிந்தன. இன்றளவும் இம்முழுக்கானது கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனை முடவன் முழுக்கு என்று மக்கள் அழைக்கின்றனர். மயிலாடுதுறைப்பதியிலே வாழத்தலைப்பட்ட நாதசர்மாவும் அவரது மனைவியும் பல நற்பணிகளை மேற்கொண்டு, தொழுது வாழ்ந்து, வீடுபேற்றை அடைந்தனர். இதனால் இறைவனது அருள்கிட்டி, அவர்கள் இருவரும் நாதலிங்கம், அனவித்தியாலிங்கம் எனவும் திருக்கோயிலில் விளங்குகின்றனர். இவ் இலிங்கத் திருமேனிக்கு இன்றளவும் சேலை கட்டியே வழிபாடு நிகழ்த்தப்படுவது குறிப்பிடத்தக்கது. இத்தலத்திற்கு முதலாம் பரந்தக சோழன், கண்டராதித்திய சோழன், சுந்தர சோழன், முதலாம் குலோத்துங்கன், இரண்டாம் இராசாதிராசன், மூன்றாம் குலோத்துங்கன், மூன்றாம் இராசராசன், சடையவர்மன் சுந்தர பாண்டியன் முதலானோர் திருப்பணிகளைச் செய்துள்ளனர். பல கல்வெட்டுக்கள் இக்கோயிலில் இருந்த போதும் படியெடுக்கப்பட்ட கல்வெட்டுக்களாகப் பதினாறு கல்வெட்டுக்களேயுள்ளன. இப்பதினாறு கல்வெட்டுக்களிலும் பல கொடைச் செய்திகள் விளக்கப்பட்டனவாக உள்ளன. இத்தலத்தின் இறைவன் திருப்பெயர் 'திருமயிலாடுதுறை உடையார்' என தமிழிலேயே பதியப் பெற்றுள்ளமை குறிப்பிடதக்கதாகும். இப்பதினாறு கல்வெட்டுக்களிலும் ஐந்து கல்வெட்டுக்களே, இக்கோயில் குறித்த செய்திகளைத் தெரிவிப்பதாக இருக்க. மற்றைய பதினொறு கல்வெட்டுக் களும் அருகிலுள்ள ஐயாறப்பர் கோயில் பற்றிய செய்திகளைக் கூறுவனவாக உள்ளன. இக்கோயிலானது மயிலாடுதுறை உடையார் கோயிலுக்கு தென்மேற்குத் திசையில் உள்ளதாகும். மேலும் இக்கோயிலே, மயிலாடுதுறை உடையார் கோயில் உள்ளிட்ட ஏழு கோயில்களுக்கும் தலைமைக் கோயிலாக அமைகின்றது. துலா நீராட்டின் போதும், பெருந்திருவிழாவின் போதும், ஐயாறப்பர் கோயில் தலைமையிலே, மயிலாடுதுறை உடையார் கோயில் உட்பட்ட ஏழு கோயில்களின் திரு மேனிகளும் எழுந்தருளுவர் என்பது குறிப்பிடதக்கதாகும். இக்கோயில், ஜயங்கொண்ட சோழவளநாட்டுத் திருவழுந் தூர் நாட்டு குலோத்துங்க சோழன் குத்தாலமாகிய திருவை யாறுடையார் என்றிருப்பதாகக் குறிக்கப்பெறுகின்றது. இத்தலத்தின் பெருமைகளை பல சான்றோர்கள் போற்றிப் பாடியுள்ளனர். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், அருணகிரிநாதர், வள்ளலார், மகாவித்வான், ஆதியப்ப நாவலர், வேதநாயகம் பிள்ளை, உ.வே.சா. மாரிமுத்தாப் முத்துசாமி தீட்சிதர், மகாகவி காளமேகப் புலவர், பிள்ளை, முத்துத்தாண்டவராயர், அருணாசலகவிராயர், கோபாலகிருஷ்ண பாரதி, புலவர் இராமையர், துரைசாமி பிள்ளை, கிருஷ்ணசாமி ஐயர், சிதம்பர சுவாமிகள் ஆகியோரால் போற்றப்பட்டத் தலம். பொன்னியின் செல்வன், சிவகாமி சபதம், பார்த்திபன் கனவு போன்ற வரலாற்று சிறப்பு மிக்க நூல்களிலும், தனது கல்கி பத்திரிகையிலும் இவ்வூரின் சிறப்புகளைப் பற்றிக் கூறியுள்ளார் திரு கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்கள். இவர் இவ்வூரில் வாழ்ந்த பெருமை கொண்டவர். திரு.உ..வே. சாமிநாதய்யர் அவர்களும் இவ்வூரில் வாழ்ந்தவர். மகா வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களின் மாணவராக திருவாவடுதுறையிலும், மயிலாடுதுறையிலும் வாழ்ந்தவர். இவர் இல்லையென்றால் தமிழில் தோன்றிய காவியங்களை நம்மால் கண்டு படித்திருக்க முடியாது. அக்கால சுவடிகளைக் கண்டறிந்து, சேகரித்து, ஐம்பெரும் காப்பியங்களை தொகுத்து, அச்சில் ஏற்றியவர் இவர். இத்தலத்து சித்தராகப் போற்றப்பட்டவர் நல்லத்துக்குடி கிருஷ்ணசுவாமி ஐயர். இத்தலத்து இறைவி மயிலம்மையைப் போற்றி, 100 பாடல் தொகுப்புகளைக் கொண்ட அபயாம்பிகை சதகம், இவரால் பாடப்பட்டது. இறைவன் திருப்பெயர்: மயிலைநாதர், வள்ளலார், திருமயிலாடுதுறை உடையார் இறைவி திருப்பெயர்: அஞ்சொல் நாயகி, மயிலம்மை கோயிற் திருக்குளம் : காவிரித் திருக்குளம், இடபத் திருக்குளம், அகத்தியத் திருக்குளம் கோயில் மரம் : மாமரம், வன்னி வழிபட்டோர் : கங்கை, கௌரி, இந்திரன், நான்முகன்,வியாழன், அகத்தியர், நாதசர்மா - அனவித்தை, திலீபன், எழுமங்கயர், எண்திசைக்காவலர் மற்றும் பலவகையான விலங்குகளும், தேவர்களும் வழிபாடு செய்துள்ளனர். பாமாலை: திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், அருணகிநாதர் தலத்தின் மீது தேவார முதலிகளால் பாடப்பட்ட திருப்பதிகங்கள் திருஞானசம்பந்தர் பாடியத் திருப்பதிகம் "கரவுஇன் றிநன்மா மலர்கொண்டு இரவும் பகலும் தொழுவார்கள் சிரம்ஒன் றியசெஞ் சடையான் வாழ் வரவா மயிலாடு துறையே!! * திருநாவுக்கரசர் பாடியத் திருப்பதிகம் "நிலைமை சொல்லு நெஞ்சே தவம் என் செய்தாய் கலைகளாய வல்லான் கயிலாய நன் மலையன் மாமயிலாடுதுறையன் நம் தலையின் மேலும் மனத்துள்ளும் தங்கவே" 03 க தெ CO திருத்தல வரலாறு தச்சன் நடத்திய யாகத்தில் சிவனின் சொல் மறுத்து, அம்மை கலந்து கொள்கின்றாள். அந்த யாகத்தினைத் தடுத்தற் பொருட்டு, சிவன் வீரபத்திரரை ஏவி அந்த யாகத்தினை அளித்தார். யாகத்தில் அழியாது தப்பிய மயிலுக்கு, அம்மை அடைக்கலம் கொடுத்துக் காத்தார். தனது சொற்படி நடவாமையால் சிவன் அம்மையை மயில்வடிவு பெறக் கடவினார். மயில் வடிவம் பெற்ற அம்மை மயிலாடுதுறை அடைந்து, இத்தலத்திலே தவம் நோற்றாள். அம்மையின் தவத்தால் அகம் குளிர்ந்த சிவனார் மயில்வடிலேயே அம்மையைக் காண வந்தார். சிவன் தனது நடனக் காட்சியை அம்மைக்கு காட்ட, அம்மை தனது உண்மை வடிவத்தினைப் பெற்றாள். இந்நடனத்தினை மயிலதாண்டவம் (மயூரதாண்டவம்) என்பார். இத்தலத்தில், இறைவனின் இலிங்கத்திருமேனியின் முன்பு மயில்வடிவவில் அம்மை வழிபடுவதாகக் கருவறை அமைத்துள்ளது. அனைவரும் தாம் செய்த பாவங்களைக் கங்கையில் நீராடி போக்கிக் கொண்டனர். இதனால் அப்பாவங்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து கங்கையின் உருவையே மாற்றிவிட்டன. கங்கை தன் நிலையை இறைவனிடம் தெரிவிக்க, கங்கை தனது பழைய உருவம் கிடைக்க வேண்டுமென்றால் ஐப்பசித் திங்கள் கடைசி நாள் காவிரி இடபத் திருக்குளத்தில் மூழ்கி எழவேண்டும் எனக் கூறினார். கங்கை காசியில் இருந்து மயிலாடுதுறை நோக்கி வந்தது. அந்த நாள் ஐப்பசித் திங்கள் 30ம் நாள், கங்கையைத் தேடி காசி விசுவநாதர், விசாலாச்சி, துண்டி விநாயகர், காலபைரவர் ஆகியோரும் திருமயிலாடுதுறைக்கே வந்துவிட்டனர். அன்று வந்தவர்கள், இன்றுவரை மயிலாடு துறையிலேயே திருச்சிற்றம்பலம் தங்கி பத்தர்களுக்கு அருள்புரிந்து வருகின்றனர். திருவையாறில் இருந்து ஐயாறப்பரும் இங்கு வந்து அருள் புரிகிறார். கங்கையே நீராடி பாவம் தீர்த்தத்தால், காசிக்கு ஒப்பனை தீர்த்தத்தலமாக இத்தலம் விளங்குகின்றது. திருக்கோயில் அமைப்பு திருக்கோயிலின் இராசகோபுரம் ஒன்பது நிலைகளை உடையதாக உயர்ந்து காணப்படுகின்றது. இதன் உட்புறம், இடது பக்கமாக கோயிற் திருக்குளம் அமைந்துள்ளது. அதில் நீராடிச் செல்ல, அடுத்துள்ள திருச்சுற்றுக் கோபுரம் மூன்று நிலைகளை உடையதாக விளங்குகின்றது. அடுத்து இடப்புறம் பிள்ளையார் கோயிலும் அதனைக் கடந்தவுடன், சுப்பிரமணியர் கோயிலும் காணப்படுகின்றன. அடுத்துள்ள திருமதிலைக் கடந்தவுடன் வலப்புறமாக அதிகார நந்தியுள்ளது. திருச்சுற்றில் வியாக்கிய பாதர், பதஞ்சலி வியாக்கிய பாதர், சேக்கிழார், ஞானசம்பந்தர், அப்பர், பிள்ளையார், எழுநங்கையர், 63 நாயன்மார்களின் செப்புத் திருமேனியால் நூற்றுவலிங்கம், இத்திரலிங்கம், அனல்லிங்கம் முதலான இலிங்கங்களும் காணப்படுகின்றன. மூலவராக மயிலைநாதர் (வள்ளலார்), தேவகோட்டத்தில் பிள்ளையார், நடராசர், தென்முகக் கடவுள், அண்ணாமலையார், நான்முகன், மலைமகள் முதலான திருமுன்களும் உள்ளன. "ஆயிரம் ஆனாலும், மாயூரம் ஆகாது” என்ற பழமொழி, மயிலைப் போன்ற அழகான பறவை உலகில் இல்லை என்ற கருத்தை வெளிப்படுத்தும் நோக்கில் சொல்லப்பட்ட பழமொழி. எனவே நாமும் திருமயிலாடுதுறையில் வீற்றிருக்கின்ற, அருள்மிகு மயிலம்மை உடனுறை மயிலைநாதரை வணங்கி, முப்பிறப்பிலும் இப்பிறப்பில் செய்த பாவங்களை நீக்கி, நல்வாழ்வு பெற்றுச் சீராய் வாழ்வோமாக. சிவத்திரு. கலாநிதி. தென்னாடு அரங்கன் தென்னாடு - செந்தமிழாகம சிவமடம் கொக்குவில், யாழ்ப்பாணம். +94 21 2229722 | arangan@thennadu.org
இத்தலத்தில் உள்ள இறைவன் இறைவியை வழிபட்டுத் தேவாரப் பதிகங்களைப் பாடி வந்தால் முப்பிறப்பிலும் பெறுவார் . திருத்தல அமைவிடம் : ( நாகப்பட்டினம் மாவட்டம் - தமிழ்நாடு ) இத்தலமான அருள்மிகு மயிலம்மை உடனுறை மயிலைநாதர் திருக்கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மாயவரம் என அழைக்கப்பட்ட மயிலாடுதுறையில் உள்ளது . இவ்வூர் சிதம்பரத்தில் இருந்து 42 கி . மி தொலைவிலும் கும்பகோணத்தில் இருந்து 35 கி . மி தொலைவிலும் அமைந்துள்ளது . இந்த சிறப்புமிகு மயிலாடுதுறையில் இருந்து ஒன்பான்கோள்த் ( நவகிரக ) தலங்கள் சென்று வருவது சுலபம் . துலை நல்லோரை ஐப்பசித் திங்கள் 2021 ஈசனைத் தேடிய தென்னாட்டுப் பயணம் அருள்மிகு மயிலம்மை உடனுறை மயிலைநாதர் ( மயூரநாதசுவாமி ] திருக்கோயில் - மயிலாடுதுறை தேவாரப் பாடல் பெற்ற சிவபுரங்களில் 156 வது திருக்கோயில் திருத்தலச் சிறப்பு இத்தல இறைவன் தான்தோன்றி இறைவனாகத் திகழ்கின்றார் . மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்திற்குச் சொந்தமான ஐயாறப்பர் கோயிலில் நிகழும் எழுதலத் ( சபஸ்த்தான ) திருவிழாவில் பங்குபற்றும் ஏழுசிவன் கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாம் . பங்குபற்றும் மற்றைய கோயில்கள் : அறம் வளர்த்த நாயகி உடனுறை ஐயாறப்பர் கோயில் உறைநாடு சாந்தநாயகி உடனுறை புனுகீசுவரர் கோயில் மூவாயிலூர் மங்களநாயகி எழில் நாயகி உடனுறை வழித்துணைநாதர் ( மார்க்க சகாய சுவாமி ) கோயில் சூலம் பேட்டை அறம் வளர்த்த நாயகி உடனுறை அழகியநாதர் கோயில் துலாக் கட்டம் காசி விசாலாச்சி உடனுறை காசி விசுவநாதர் கோயில் சித்தர்காடு திரிபுரசுந்தரி உடனுறை பிரம்மபுரீசுவரர் கோயில் என்பனவாம் . இத்தலத்தின் தீர்த்தமான காவேரித்துறையில் துலாநீராடல் என்பது சிறப்புக்குரியது . ஐப்பசித் திங்கள் முதலாம் நாள் தொடங்கும் இத்துலாநீராடல் தொடர்ந்து முப்பது நாட்கள் நிகழ்ந்து நிறைவுறும் . அவ்வது சமயம் அடியார்கள் யாவரும் காவேரித் தீர்த்தத்தில் துலாநீராடி தங்கள் ஏழுபிறப்பிலும் இப்பிறப்பில் செய்திட்ட தீமைகளை இறையருளால் அழித்து நற்பயனை அடைவர் என்பது நம்பிக்கை . ஆதலால் இத்தலத்தின் சிறப்பிற்குரிய நிகழ்வாக துலாநீராடல் நிகழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது . இவ்வாறான துலாநீராடலிற் பங்கு பற்றி தங்களது பாவத்தினைத் தீர்த்தற் பொருட்டு வடபுலத்திலிருந்து நாதசர்மா என்பவரும் அவரது மனையாள் அனவித்தி யாம்பிகை என்பவரும் மயிலாடுதுறைக்கு வந்து கோயிலை அடைந்தனர் . அவ்வது சமயம் அன்றுடன் துலாநீராடல் நிறைவடைந்துவிட்டது . அச்செய்தியை அறிந்திட்ட அவ்விணையர் மிகுந்த துயருற்று தங்களது தீதிற்குக் கழுவாய் ஏதுமற்றுப் போய்விட்டே என மனத்துயருற்று வருந்தினர் . அன்று இரவாகிவிட்டபடியினாலே கோயிலிலேயே தங்கிவிட்டு மறுநாள் காலை தங்களது ஊருக்குப் புறப்பட்டுச் செல்லலாம் என எண்ணம் கொண்டிருந்தனர் . பின்னர் இறைச் சிந்தையுடனேயே நித்திரைக்குச் சென்றனர் . தென்னாடு அன்று இரவு நாதசர்மாவின் கனவிலே சிவபெருமான் தோன்றி இன்று கதிரவன் தோன்றும் முன் நீங்கள் நீராடலாம் . கதிரவன் தோன்றிய பின்பே துலாத் திங்கள் நிறைவுறும் . ஆகவே நீங்கள் இத்தீர்த்தத்தில் நீராடி உங்களது தீமைகளை நீக்கிக் கொள்ளலாம் எனக் கூறினார் . கனவிலிருந்து மீண்ட நாதசர்மா இறைவனைத் தொழுது வணங்கி தனது மனைவியுடன் அன்று கதிரவன் தோன்றும் முன் நீராடினர் . இதனால் அவர்கள் முன்பு எழுமையில் செய்த தீமைகள் எல்லாம் அழிந்தன . இன்றளவும் இம்முழுக்கானது கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது . இதனை முடவன் முழுக்கு என்று மக்கள் அழைக்கின்றனர் . மயிலாடுதுறைப்பதியிலே வாழத்தலைப்பட்ட நாதசர்மாவும் அவரது மனைவியும் பல நற்பணிகளை மேற்கொண்டு தொழுது வாழ்ந்து வீடுபேற்றை அடைந்தனர் . இதனால் இறைவனது அருள்கிட்டி அவர்கள் இருவரும் நாதலிங்கம் அனவித்தியாலிங்கம் எனவும் திருக்கோயிலில் விளங்குகின்றனர் . இவ் இலிங்கத் திருமேனிக்கு இன்றளவும் சேலை கட்டியே வழிபாடு நிகழ்த்தப்படுவது குறிப்பிடத்தக்கது . இத்தலத்திற்கு முதலாம் பரந்தக சோழன் கண்டராதித்திய சோழன் சுந்தர சோழன் முதலாம் குலோத்துங்கன் இரண்டாம் இராசாதிராசன் மூன்றாம் குலோத்துங்கன் மூன்றாம் இராசராசன் சடையவர்மன் சுந்தர பாண்டியன் முதலானோர் திருப்பணிகளைச் செய்துள்ளனர் . பல கல்வெட்டுக்கள் இக்கோயிலில் இருந்த போதும் படியெடுக்கப்பட்ட கல்வெட்டுக்களாகப் பதினாறு கல்வெட்டுக்களேயுள்ளன . இப்பதினாறு கல்வெட்டுக்களிலும் பல கொடைச் செய்திகள் விளக்கப்பட்டனவாக உள்ளன . இத்தலத்தின் இறைவன் திருப்பெயர் ' திருமயிலாடுதுறை உடையார் ' என தமிழிலேயே பதியப் பெற்றுள்ளமை குறிப்பிடதக்கதாகும் . இப்பதினாறு கல்வெட்டுக்களிலும் ஐந்து கல்வெட்டுக்களே இக்கோயில் குறித்த செய்திகளைத் தெரிவிப்பதாக இருக்க . மற்றைய பதினொறு கல்வெட்டுக் களும் அருகிலுள்ள ஐயாறப்பர் கோயில் பற்றிய செய்திகளைக் கூறுவனவாக உள்ளன . இக்கோயிலானது மயிலாடுதுறை உடையார் கோயிலுக்கு தென்மேற்குத் திசையில் உள்ளதாகும் . மேலும் இக்கோயிலே மயிலாடுதுறை உடையார் கோயில் உள்ளிட்ட ஏழு கோயில்களுக்கும் தலைமைக் கோயிலாக அமைகின்றது . துலா நீராட்டின் போதும் பெருந்திருவிழாவின் போதும் ஐயாறப்பர் கோயில் தலைமையிலே மயிலாடுதுறை உடையார் கோயில் உட்பட்ட ஏழு கோயில்களின் திரு மேனிகளும் எழுந்தருளுவர் என்பது குறிப்பிடதக்கதாகும் . இக்கோயில் ஜயங்கொண்ட சோழவளநாட்டுத் திருவழுந் தூர் நாட்டு குலோத்துங்க சோழன் குத்தாலமாகிய திருவை யாறுடையார் என்றிருப்பதாகக் குறிக்கப்பெறுகின்றது . இத்தலத்தின் பெருமைகளை பல சான்றோர்கள் போற்றிப் பாடியுள்ளனர் . திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் அருணகிரிநாதர் வள்ளலார் மகாவித்வான் ஆதியப்ப நாவலர் வேதநாயகம் பிள்ளை உ.வே.சா. மாரிமுத்தாப் முத்துசாமி தீட்சிதர் மகாகவி காளமேகப் புலவர் பிள்ளை முத்துத்தாண்டவராயர் அருணாசலகவிராயர் கோபாலகிருஷ்ண பாரதி புலவர் இராமையர் துரைசாமி பிள்ளை கிருஷ்ணசாமி ஐயர் சிதம்பர சுவாமிகள் ஆகியோரால் போற்றப்பட்டத் தலம் . பொன்னியின் செல்வன் சிவகாமி சபதம் பார்த்திபன் கனவு போன்ற வரலாற்று சிறப்பு மிக்க நூல்களிலும் தனது கல்கி பத்திரிகையிலும் இவ்வூரின் சிறப்புகளைப் பற்றிக் கூறியுள்ளார் திரு கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் . இவர் இவ்வூரில் வாழ்ந்த பெருமை கொண்டவர் . திரு.உ..வே . சாமிநாதய்யர் அவர்களும் இவ்வூரில் வாழ்ந்தவர் . மகா வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களின் மாணவராக திருவாவடுதுறையிலும் மயிலாடுதுறையிலும் வாழ்ந்தவர் . இவர் இல்லையென்றால் தமிழில் தோன்றிய காவியங்களை நம்மால் கண்டு படித்திருக்க முடியாது . அக்கால சுவடிகளைக் கண்டறிந்து சேகரித்து ஐம்பெரும் காப்பியங்களை தொகுத்து அச்சில் ஏற்றியவர் இவர் . இத்தலத்து சித்தராகப் போற்றப்பட்டவர் நல்லத்துக்குடி கிருஷ்ணசுவாமி ஐயர் . இத்தலத்து இறைவி மயிலம்மையைப் போற்றி 100 பாடல் தொகுப்புகளைக் கொண்ட அபயாம்பிகை சதகம் இவரால் பாடப்பட்டது . இறைவன் திருப்பெயர் : மயிலைநாதர் வள்ளலார் திருமயிலாடுதுறை உடையார் இறைவி திருப்பெயர் : அஞ்சொல் நாயகி மயிலம்மை கோயிற் திருக்குளம் : காவிரித் திருக்குளம் இடபத் திருக்குளம் அகத்தியத் திருக்குளம் கோயில் மரம் : மாமரம் வன்னி வழிபட்டோர் : கங்கை கௌரி இந்திரன் நான்முகன் வியாழன் அகத்தியர் நாதசர்மா - அனவித்தை திலீபன் எழுமங்கயர் எண்திசைக்காவலர் மற்றும் பலவகையான விலங்குகளும் தேவர்களும் வழிபாடு செய்துள்ளனர் . பாமாலை : திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் அருணகிநாதர் தலத்தின் மீது தேவார முதலிகளால் பாடப்பட்ட திருப்பதிகங்கள் திருஞானசம்பந்தர் பாடியத் திருப்பதிகம் கரவுஇன் றிநன்மா மலர்கொண்டு இரவும் பகலும் தொழுவார்கள் சிரம்ஒன் றியசெஞ் சடையான் வாழ் வரவா மயிலாடு துறையே !! * திருநாவுக்கரசர் பாடியத் திருப்பதிகம் நிலைமை சொல்லு நெஞ்சே தவம் என் செய்தாய் கலைகளாய வல்லான் கயிலாய நன் மலையன் மாமயிலாடுதுறையன் நம் தலையின் மேலும் மனத்துள்ளும் தங்கவே 03 தெ CO திருத்தல வரலாறு தச்சன் நடத்திய யாகத்தில் சிவனின் சொல் மறுத்து அம்மை கலந்து கொள்கின்றாள் . அந்த யாகத்தினைத் தடுத்தற் பொருட்டு சிவன் வீரபத்திரரை ஏவி அந்த யாகத்தினை அளித்தார் . யாகத்தில் அழியாது தப்பிய மயிலுக்கு அம்மை அடைக்கலம் கொடுத்துக் காத்தார் . தனது சொற்படி நடவாமையால் சிவன் அம்மையை மயில்வடிவு பெறக் கடவினார் . மயில் வடிவம் பெற்ற அம்மை மயிலாடுதுறை அடைந்து இத்தலத்திலே தவம் நோற்றாள் . அம்மையின் தவத்தால் அகம் குளிர்ந்த சிவனார் மயில்வடிலேயே அம்மையைக் காண வந்தார் . சிவன் தனது நடனக் காட்சியை அம்மைக்கு காட்ட அம்மை தனது உண்மை வடிவத்தினைப் பெற்றாள் . இந்நடனத்தினை மயிலதாண்டவம் ( மயூரதாண்டவம் ) என்பார் . இத்தலத்தில் இறைவனின் இலிங்கத்திருமேனியின் முன்பு மயில்வடிவவில் அம்மை வழிபடுவதாகக் கருவறை அமைத்துள்ளது . அனைவரும் தாம் செய்த பாவங்களைக் கங்கையில் நீராடி போக்கிக் கொண்டனர் . இதனால் அப்பாவங்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து கங்கையின் உருவையே மாற்றிவிட்டன . கங்கை தன் நிலையை இறைவனிடம் தெரிவிக்க கங்கை தனது பழைய உருவம் கிடைக்க வேண்டுமென்றால் ஐப்பசித் திங்கள் கடைசி நாள் காவிரி இடபத் திருக்குளத்தில் மூழ்கி எழவேண்டும் எனக் கூறினார் . கங்கை காசியில் இருந்து மயிலாடுதுறை நோக்கி வந்தது . அந்த நாள் ஐப்பசித் திங்கள் 30 ம் நாள் கங்கையைத் தேடி காசி விசுவநாதர் விசாலாச்சி துண்டி விநாயகர் காலபைரவர் ஆகியோரும் திருமயிலாடுதுறைக்கே வந்துவிட்டனர் . அன்று வந்தவர்கள் இன்றுவரை மயிலாடு துறையிலேயே திருச்சிற்றம்பலம் தங்கி பத்தர்களுக்கு அருள்புரிந்து வருகின்றனர் . திருவையாறில் இருந்து ஐயாறப்பரும் இங்கு வந்து அருள் புரிகிறார் . கங்கையே நீராடி பாவம் தீர்த்தத்தால் காசிக்கு ஒப்பனை தீர்த்தத்தலமாக இத்தலம் விளங்குகின்றது . திருக்கோயில் அமைப்பு திருக்கோயிலின் இராசகோபுரம் ஒன்பது நிலைகளை உடையதாக உயர்ந்து காணப்படுகின்றது . இதன் உட்புறம் இடது பக்கமாக கோயிற் திருக்குளம் அமைந்துள்ளது . அதில் நீராடிச் செல்ல அடுத்துள்ள திருச்சுற்றுக் கோபுரம் மூன்று நிலைகளை உடையதாக விளங்குகின்றது . அடுத்து இடப்புறம் பிள்ளையார் கோயிலும் அதனைக் கடந்தவுடன் சுப்பிரமணியர் கோயிலும் காணப்படுகின்றன . அடுத்துள்ள திருமதிலைக் கடந்தவுடன் வலப்புறமாக அதிகார நந்தியுள்ளது . திருச்சுற்றில் வியாக்கிய பாதர் பதஞ்சலி வியாக்கிய பாதர் சேக்கிழார் ஞானசம்பந்தர் அப்பர் பிள்ளையார் எழுநங்கையர் 63 நாயன்மார்களின் செப்புத் திருமேனியால் நூற்றுவலிங்கம் இத்திரலிங்கம் அனல்லிங்கம் முதலான இலிங்கங்களும் காணப்படுகின்றன . மூலவராக மயிலைநாதர் ( வள்ளலார் ) தேவகோட்டத்தில் பிள்ளையார் நடராசர் தென்முகக் கடவுள் அண்ணாமலையார் நான்முகன் மலைமகள் முதலான திருமுன்களும் உள்ளன . ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது என்ற பழமொழி மயிலைப் போன்ற அழகான பறவை உலகில் இல்லை என்ற கருத்தை வெளிப்படுத்தும் நோக்கில் சொல்லப்பட்ட பழமொழி . எனவே நாமும் திருமயிலாடுதுறையில் வீற்றிருக்கின்ற அருள்மிகு மயிலம்மை உடனுறை மயிலைநாதரை வணங்கி முப்பிறப்பிலும் இப்பிறப்பில் செய்த பாவங்களை நீக்கி நல்வாழ்வு பெற்றுச் சீராய் வாழ்வோமாக . சிவத்திரு . கலாநிதி . தென்னாடு அரங்கன் தென்னாடு - செந்தமிழாகம சிவமடம் கொக்குவில் யாழ்ப்பாணம் . +94 21 2229722 | arangan@thennadu.org