தென்னாடு ஐப்பசித் திங்கள் இதழ் - 13

தெ 04 தென்னாடு மாந்தமிழாம் கொக்குனிதப்பானன் சிவத்திரு. சிவ செந்தமிழாதன், தலைவர் - சைவ மாணவர் சபை, (பதிவு-HA/4/JA/343) 0715588737, aathan@thennadu.org பெண்ணின் பெருந்தக்க யாவுள? ஓயாமல் சுழலும் இந்த உலகம், உயிர்மை காயாமலும் சுழல்கிறது. பச்சையும், உயிர்ப்பும், உயிர்ப்பின் ஒலியும், இடைவெளி இல்லாமல் உலகம் எங்கும் ஒலித்துக் கொண்டே இருக்கின்றது. எங்கள் பால்வீதியில், இந்தப் பூமியில் மட்டும் தான் இத்தகு சிறப்பு நிகழ்கின்றது என்றால் அதன் பெரும்பங்கு உரிமையும் பெண்ணையே சாரும்! அற்புதமான ஒரு உயிரியை இந்த உலகுக்கு தன் கருவில் வைத்து சுமந்து தரவல்ல அதி உன்னதமான ஆற்றலைப் பெற்றவளே பெண்! இதனாலே தான் பெண்ணின் பெருந்தக்க யாவுள? என்றார் வள்ளுவர்! மாறு உயர் சைவநெறி தளைக்க வந்த, எம் நாயன்மார்களும் பெண்களின் பெருமையை உணர்ந்தவர்களே! 'சத்தி சிவமாக’ இறைவனைப் பாடி மகிழ்ந்தனர்! தாயுமானவனான இறைவன், தன் இடப்பாகத்தில் சரிநிகர் பங்கை பெண்ணுக்குத் தந்து, உயர்ந்த தத்துவத்தை உலகுக்கு உணர்த்தினான்! அருளே வடிவான திருஞானசம்பந்தப்பிள்ளை தன் திருப்பாடல்களிலே, உமையம்மைக்கு முதலிடம் தந்து இறைவனை விழிக்கும் பாங்கை, அவர் தேவாரப்பாடல்களெங்கும் நாம் கண்டு மகிழலாம்! "தோடுடைய செவியன்" என்று தொடங்கியதும், "வண்டார்குழல் அரிவையொடு பிரியாவகை பாகம் கொண்டான்'' என்றும், ''உண்ணாமுலை யுமையாளொடுமுடனாகிய ஒருவன்" என்றும் "வேயுறு தோளி பங்கன்” என்றும் பலவாறு தனது பாடல்களில் பெண்ணாகிய உமைக்கு முதலிடம் தந்து நிறைவார்! இத்தகு பாடல்களைத் தாண்டி, காரைக்கால் அம்மையாரையும், திலகவதியாரையும், மங்கையற்கரசியாரையும், சைவ உலகம் தன் தலைமைப் பீடத்தில் வைத்தே போற்றியது எனலாம். பெண்ணாய் பிறந்தால் முத்தி கிட்டாது என்று சமணமும், பெண் துறவிகளைச் சேர்த்தால் தம் நெறியின் வாழ்நாள் குறையும் என்று பௌத்தமும், முத்திக்கு முட்டுக்கட்டை போட, முத்தி கொடுப்பவளாகவே பெண்ணை உயர்வுபடுத்தும் சைவத்தின் நெறியை சார்ந்தோர் அறிவர். நிற்க இன்று நாம் வாழும் சமூகத்தில் பெண்ணடிமைத்தனம் பற்றியும் ஆணாதிக்கம் பற்றியும் சில தேவையற்ற கருத்துப் பகிர்வுகளைக் காண்கின்றோம். இரு பெண்கள் திருமணம் செய்துகொள்ளும் அதிமேதாவித்தனங்களையும், அது அவர் அவர் சுய விருப்பு என்று ஆலவட்டம் பிடிக்கும் சில புதுமைப் புரச்சியாளர்களையும் நாம் காண்கின்றோம். நியதிகளை தகர்த்து புதுமை புனைய முற்பட்டு, அவதியும் அல்லலும் கொண்டு, எதை நாகரிக வளர்ச்சி என்று கருதுகிறார்களோ, அதனாலையே நாகரீகமற்ற காலத்தை நோக்கி பயணப்படப் போகின்றனர். 'பண்பாடு' என்பது பல்லாயிரம் ஆண்டுகளாகப் பண்பட்டு வந்த ஒழுக்கமும், அதுசார்ந்து வரும் விழுமியங்களுமேயாகும். இன்றைய, பெண்விடுதலைப் போராளிகள் என்று தம்மைத் தாமே அடையாளப்படுத்திக் கொள்பவர்களது கருத்துக்கள், அரைவேக்காட்டுத்தனமானவை என்பதை அறிதல் நன்று. இந்தப் புரட்டாசித் திங்கள் வளர்பிறையில், பெண்ணுக்கு, பெண்ணாகிய பெரும் சத்திக்கு 'ஒன்பானிரவாக' (நவராத்திரி) விழாக்கொண்டோம்! பெண் எனும் பெரும் சத்தி, ஆண் எனும் துணை கொண்டே அகிலத்தைப் படைக்க வேண்டும். அதுவே நியதி. அதுவே ஒழுக்கமுமாகும். அந்த அற ஒழுக்கத்தையே 'கற்பு' என்று தமிழ் சான்று பகர்கின்றது. அந்தக் கற்பு மனத்தாலும், உடலாலும், செய்கையாளும் ஒருவனையே சார்ந்து தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும், அப்படி நிலை நிறுத்திய மாதர்களே, வானுறையும் கடவுளர்களாயினர். ஆன்றோர் ஏற்றுக் கொண்ட அறத்தின் வழி பயணப்படுவதே ஆண் பெண் இருவருக்குமுரிய நல்லொழுக்கமாகும். அந்த அறத்தின் மூலமே பழந்தமிழர் பண்பாடு என்பதை சங்கப்பாடல்களில் கற்றோர் அறிவர். பின்வந்த பாரதியும், அதனை இன்னும் எளிமைப்படுத்தி, "காதலன் ஒருவனை கைப்பிடித்தே - அவன் காரியம் யாவினும் கைகொடுத்து, மாதர் அறங்கள் பழமையைக் காட்டிலும் மாட்சி பெறச் செய்து வாழ்வோமடி" என்று தன் 'விடுதலைக்கும்மியிலே' பதிவு செய்கின்றார். பெண் விடுதலைக் கவிஞரின் இந்த வரிகளை இன்று புடம்போட்டு பார்க்குமளவில் நவீன போலிப் புரச்சியாளர்கள் இல்லை என்பது தான் உண்மை. "தெய்வந் தொழுஅள் கொழுநற்றொழுவாளைத், தெய்வந்தொழுதகைமை திண்ணியதால், தெய்வமாய் மண்ணக மாதர் கணியாய கண்ணகி விண்ணகமாதர்க்கு விருந்து" என்று அடிக்கோடிடுகிறது சிலப்பதிகாரம். 'கற்பு' என்பதே தேவையற்ற சொல் என்று, வாதிடும் கருஞ்சட்டைக்காரர்களுக்கும், கவலைக்குரிய சில பெண்ணியவாதிகளுக்கும், வள்ளுவன் மிகத்தெளிவாகச் சொல்லுகின்றான், பெண் தன் கற்பொழுக்கத்தைக் காத்து நிற்பாளாக இருந்தால் மட்டுமே, அந்தப் பெண்ணிலும் பெரியது என்று இந்த உலகினில் எதுவும் இல்லை என்று! "பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பெனும் திண்மை உண்டாகப் பெறின்" திருச்சிற்றம்பலம் தென்னாடு துலை நல்லோரை ஐப்பசித் திங்கள், 2021 யாழ்ப்பாணம் நாச்சிமார் கோயிலடியைச் சேர்ந்த இறைநெறி எழுத்தாளரும், வில்லிசைக் கலைஞரும், ஓதுவாருமான யாழ். இந்துவின் பழைய மாணவன் சிவநெறிக் கலாநிதி இராசையா ஸ்ரீதரன் அவர்களின் வாழ்க்கைப் பயணம் ஈழமணித் திருநாட்டின் முடி போல விளங்குகின்ற காலக்கிரமத்தில் தனது கல் யாழ்ப்பாணக் குடாநாட்டிலே வண்பண்ணை நாச்சிமார் லூரி வாழ்க்கையை முடித்துப் கோயிலடியில் வாழ்ந்தவர் தான் வேலாயுதம் இராசையா பின் பொது வாழ்க்கையில் அவர்கள். இவர் மதவடி ஒழுங்கையில் வசித்த, நாகமணி பங்கேற்று சிவப்பணி ஆற்றத் அப்பாத்துரை பொன்னம்மா தம்பதியினரின் மூத்த தொடங்கினார். பின்னர் மகள் இரத்தினம்மா என்பவரை மணந்து, இல்லறத்தை உபதபாலதிபராக இருந்த நல்லறமாக நடத்தி வந்தார். நாச்சிமார் கோயிலடி தந்தையாருடன் சேர்ந்து சிறிது உப தபாலதிபராகவும் கடமையாற்றி வந்த இவர், காலம் கடமையாற்றினார். அதன் பிறகு நாச்சிமார் கோயி லடியில் இருந்த காலத்தில் 1974 ஆம் வருடம் ஸ்ரீதரனின் கல்விச் சிறப்பையும் புலமை யையும் கண்டு, யாழ்ப்பாணம் ஸ்ரீசுப்பிரமணிய புத்தகசாலை அதிபர் ஆ. சுப்பிரமணியம் என்பவர் தம்முடைய அச்சகத்தில் சரவை ஒப்பு நோக்குநராக அவரை நியமனம் செய்தார். "அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது" என்ற வள்ளுவப் பெருந்தகையின் குறட்பாவுக்கமைய தம்முடைய குடும்ப வாழ்க்கையைச் சிறப்பாக நடத்தி வந்தார். இந்தத் தம்பதியினருக்கு இறையருள் நலத்தால் நன்மக்கட்பேறு வாய்க்கப் பெற்று, 1950ம் வருடம் தைத் திங்கள் 2 ஆம் நாள் (15.01.1950) கலையம்சம் பொருந்திய ஓர் ஆண்மகவு பிறந்தது. அழகு மிளிரும் ஒளி பொருந்திய முகத்துடன் விளங்கிய, இக்குழந்தை யின் தோற்றத்தைக் கண்ட பெற்றோர் ஸ்ரீதரன் என்று பெயர் வைத்து, பரிவோடும் பாசத்தோடும் பக்குவமாக அப்பொழுது அங்கே புத்தகம் அச்சிட்ட மூதறிஞர் க.சி.குலரத்தினம் ஆசிரியருடைய அறிமுகம் ஸ்ரீதரனுக் குக் கிடைக்கவே, அவருடைய நூலாக்கத் திறமையின் பால் இவருக்கும் ஆர்வம் ஏற்பட்டது. அச்சூழலில் கம்பராமாயணம், இந்துசமயம் ஆகியவற்றில் இவர் பரந்த விரிவான அறிவைப் பெற்றுக் கொண்டார். ஸ்ரீதரன் அவர்கள் ஸ்ரீ சுப்பிரமணிய அச்சகத்தில் ஒப்புநோக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, வேறு பல ஆக்கத்திறனான பயிற்சியிலும் சிறந்து விளங்கினார். சில விடயங்களை ஒப்புநோக்கும் போது பல்வேறு பிழைகளையும் சுட்டிக்காட்டி, நூலாசிரியரே வியக்கும் வகையில் சிறப்பான ஒரு விடயதாரியாக இவர் விளங்கியமை குறிப்பிடத்தக்கது. அதன் பயனாகத் தாமும் புத்தகம் எழுதி வெளியிடவேண்டும் என்னும் ஆசையினால் உந்தப்பட்டார். மூதறிஞர் க.சி.குலரத்தினம், சொக்கன் ஆசிரியர் முதலானோர் தங்களுடைய நூல்களை ஸ்ரீதரன் பிழைதிருத்தம் பார்த்த போது, எந்தவித பிழையும் இல்லாமலும் விடயப் பிழைகள் சிறந்த முறையில் திருத்தஞ் செய்யப்பட்டிருப்பதையும் கண்டு ஆச்சரியப் பட்டனர். தாங்கள் எழுதிய நூல் நல்ல முறையில் பிழையில்லாமல் அச்சுவாகனம் ஏறியமையால், தங்கள் முகவுரையிலும் சிறந்த முறையில் கடமையாற்றிய ஸ்ரீதரனுடைய நூலாக்கப் பணியை வியந்து பாராட்டிப் போற்றியுள்ளனர். வளர்த்து வந்தனர். ஸ்ரீ என்றால் அருள் என்று பொருள். நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வந்த ஸ்ரீதரனை, ஸ்ரீ என்று அன்பாக, ஆசையோடு அழைத்து மகிழ்ந்த பெற்றோர், இவருடைய கல்வியறிவு சிறக்கக் கருதி, யாழ் பெரியபுலம் பாடசாலையில் சேர்த்தனர். அங்கு தமது ஆரம்பக் கல்வியைப் பெற்றுக் கொண்ட பிறவிச் சைவராகியா இவர், 1959 இல் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் சேர்ந்து தமது மேற்படிப்பைத் தொடர்ந்தார். பின்பு 1964 இல் க.பொ.த சாதாரண தர தேர்வில் சித்தியெய்திய இவர், 1965 ஆம் வருடம் உயர்தர வகுப்பிற் சேர்ந்தார். |அக்கல்லூரியின் பிரார்த்தனை நிகழ்விலும், உயர்தர வகுப்பில் பேச்சுப் போட்டி, பண்ணிசைப் போட்டி முதலானவற்றிலும் பங்குபற்றி பரிசில்கள் பெற்று, நற்பெயரைத் தட்டிக் கொண்டார். அப்போது கல்லூ ரியில் கற்பித்த ஆசிரியர்களான ஏரம்பமூர்த்தி, குமாரசாமி, மகாதேவா சிவராமலிங்கம்பிள்ளை, சொக்கலிங்கம், ஆசைப்பிள்ளை, சிவசுப்பிரமணியம், முத்துக்குமாரசாமி, சோமசுந்தரம், மயில் வாகனம், சுப்பையா பிள்ளை ஆகியோரிடம் கல்வி கற்கும் நல்ல வாய்ப்பினைப் பெற்றுக் கொண்டதால், இவர் கலைமகள் அருளால் கல்வியில் மேம்பாட்டுடன் திகழ்ந்தார். குறிப்பாக சிவராமலிங்கம்பிள்ளை, சொக்கலிங்கம் (சொக்கன்) ஆகியோர் இவருடைய கல்விச்சிறப்பைக் கண்ணுற்று, சைவப்புலவர் பண்டிதர் தேர்வுகளில் பங்கேற்றுப் பட்டம் பெறுமாறு ஊக்குவித்தனர். அதன்பயனாக 1972 இல், சைவப்புலவர் பரீட்சையிற் சித்தி பெற்று, சித்தாந்த பாலபண்டிதர் பரீட்சைக்குத் தோற்றி நூன சித்தியும் பெற்று சிறந்து விளங்கினார். சிவத்திரு. ஆறுமுகம் சசிநாத் கலைமாணி தென்னாடு சிவமடம் 1975 முதல் 85 வரையில் ஸ்ரீ சுப்பிரமணிய புத்தகசாலையிலும், அச்சுக் கூடத்திலும் சிறப்பான பணி செய்த ஸ்ரீதரன் பின்னர் 1985 ஆம் வருடம் காலச்சூழலில் உதயன் நாளிதழ் ஆரம்பமாகவே அதில் சேர்ந்து பத்திரிகையாளராகவும் மிளிர்ந்தார். இப்படியிருக்கும் நாளில் 1983 இல் ஆனைப்பந்தியைச் சேர்ந்த மயில்வாகனம் வாலாம்பிகை தம்பதியினரின் மகளான சத்தியபாமாவைத் திருமணஞ் செய்து கொண்டார். அவர் ஒரு வயலின் ஆசிரியை. இல்லறமான நல்லற வாழ்வில் இவருக்கு 1986 ஆம் வருடம் ஓர் ஆண்குழந்தை பிறந்தது. இவர் தமது மகனுக்கு நிதர்சன் என்று பெயர் சூட்டினார். 1989 ஆம் வருடம் ஒரு பெண் குழந்தை பிறந்தது. மகளுக்கு குவலயா என்று பெயரிட்டனர். இவருடைய வாழ்க்கையிலே துன்ப நிகழ்வாக ஒரு சம்பவம் 2004 ஆம் வருடம் நிகழ்ந்தது. அதாவது விதி செய்த சதியாலே பெண் மகவான குவலயாவின் பருவச்சடங்கு நடைபெற்று, இரண்டாம் திங்கள் வேம்படி மகளிர் கல்லூரியில் கற்று கொண்டிருந்த போது நோய்வாய்ப்பட்டு இறக்க நேரிட்டது. (05ஆம் பக்கம் பார்க்க)
தெ 04 தென்னாடு மாந்தமிழாம் கொக்குனிதப்பானன் சிவத்திரு . சிவ செந்தமிழாதன் தலைவர் - சைவ மாணவர் சபை ( பதிவு- HA / 4 / JA / 343 ) 0715588737 aathan@thennadu.org பெண்ணின் பெருந்தக்க யாவுள ? ஓயாமல் சுழலும் இந்த உலகம் உயிர்மை காயாமலும் சுழல்கிறது . பச்சையும் உயிர்ப்பும் உயிர்ப்பின் ஒலியும் இடைவெளி இல்லாமல் உலகம் எங்கும் ஒலித்துக் கொண்டே இருக்கின்றது . எங்கள் பால்வீதியில் இந்தப் பூமியில் மட்டும் தான் இத்தகு சிறப்பு நிகழ்கின்றது என்றால் அதன் பெரும்பங்கு உரிமையும் பெண்ணையே சாரும் ! அற்புதமான ஒரு உயிரியை இந்த உலகுக்கு தன் கருவில் வைத்து சுமந்து தரவல்ல அதி உன்னதமான ஆற்றலைப் பெற்றவளே பெண் ! இதனாலே தான் பெண்ணின் பெருந்தக்க யாவுள ? என்றார் வள்ளுவர் ! மாறு உயர் சைவநெறி தளைக்க வந்த எம் நாயன்மார்களும் பெண்களின் பெருமையை உணர்ந்தவர்களே ! ' சத்தி சிவமாக இறைவனைப் பாடி மகிழ்ந்தனர் ! தாயுமானவனான இறைவன் தன் இடப்பாகத்தில் சரிநிகர் பங்கை பெண்ணுக்குத் தந்து உயர்ந்த தத்துவத்தை உலகுக்கு உணர்த்தினான் ! அருளே வடிவான திருஞானசம்பந்தப்பிள்ளை தன் திருப்பாடல்களிலே உமையம்மைக்கு முதலிடம் தந்து இறைவனை விழிக்கும் பாங்கை அவர் தேவாரப்பாடல்களெங்கும் நாம் கண்டு மகிழலாம் ! தோடுடைய செவியன் என்று தொடங்கியதும் வண்டார்குழல் அரிவையொடு பிரியாவகை பாகம் கொண்டான் ' ' என்றும் ' ' உண்ணாமுலை யுமையாளொடுமுடனாகிய ஒருவன் என்றும் வேயுறு தோளி பங்கன் என்றும் பலவாறு தனது பாடல்களில் பெண்ணாகிய உமைக்கு முதலிடம் தந்து நிறைவார் ! இத்தகு பாடல்களைத் தாண்டி காரைக்கால் அம்மையாரையும் திலகவதியாரையும் மங்கையற்கரசியாரையும் சைவ உலகம் தன் தலைமைப் பீடத்தில் வைத்தே போற்றியது எனலாம் . பெண்ணாய் பிறந்தால் முத்தி கிட்டாது என்று சமணமும் பெண் துறவிகளைச் சேர்த்தால் தம் நெறியின் வாழ்நாள் குறையும் என்று பௌத்தமும் முத்திக்கு முட்டுக்கட்டை போட முத்தி கொடுப்பவளாகவே பெண்ணை உயர்வுபடுத்தும் சைவத்தின் நெறியை சார்ந்தோர் அறிவர் . நிற்க இன்று நாம் வாழும் சமூகத்தில் பெண்ணடிமைத்தனம் பற்றியும் ஆணாதிக்கம் பற்றியும் சில தேவையற்ற கருத்துப் பகிர்வுகளைக் காண்கின்றோம் . இரு பெண்கள் திருமணம் செய்துகொள்ளும் அதிமேதாவித்தனங்களையும் அது அவர் அவர் சுய விருப்பு என்று ஆலவட்டம் பிடிக்கும் சில புதுமைப் புரச்சியாளர்களையும் நாம் காண்கின்றோம் . நியதிகளை தகர்த்து புதுமை புனைய முற்பட்டு அவதியும் அல்லலும் கொண்டு எதை நாகரிக வளர்ச்சி என்று கருதுகிறார்களோ அதனாலையே நாகரீகமற்ற காலத்தை நோக்கி பயணப்படப் போகின்றனர் . ' பண்பாடு ' என்பது பல்லாயிரம் ஆண்டுகளாகப் பண்பட்டு வந்த ஒழுக்கமும் அதுசார்ந்து வரும் விழுமியங்களுமேயாகும் . இன்றைய பெண்விடுதலைப் போராளிகள் என்று தம்மைத் தாமே அடையாளப்படுத்திக் கொள்பவர்களது கருத்துக்கள் அரைவேக்காட்டுத்தனமானவை என்பதை அறிதல் நன்று . இந்தப் புரட்டாசித் திங்கள் வளர்பிறையில் பெண்ணுக்கு பெண்ணாகிய பெரும் சத்திக்கு ' ஒன்பானிரவாக ' ( நவராத்திரி ) விழாக்கொண்டோம் ! பெண் எனும் பெரும் சத்தி ஆண் எனும் துணை கொண்டே அகிலத்தைப் படைக்க வேண்டும் . அதுவே நியதி . அதுவே ஒழுக்கமுமாகும் . அந்த அற ஒழுக்கத்தையே ' கற்பு ' என்று தமிழ் சான்று பகர்கின்றது . அந்தக் கற்பு மனத்தாலும் உடலாலும் செய்கையாளும் ஒருவனையே சார்ந்து தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் அப்படி நிலை நிறுத்திய மாதர்களே வானுறையும் கடவுளர்களாயினர் . ஆன்றோர் ஏற்றுக் கொண்ட அறத்தின் வழி பயணப்படுவதே ஆண் பெண் இருவருக்குமுரிய நல்லொழுக்கமாகும் . அந்த அறத்தின் மூலமே பழந்தமிழர் பண்பாடு என்பதை சங்கப்பாடல்களில் கற்றோர் அறிவர் . பின்வந்த பாரதியும் அதனை இன்னும் எளிமைப்படுத்தி காதலன் ஒருவனை கைப்பிடித்தே - அவன் காரியம் யாவினும் கைகொடுத்து மாதர் அறங்கள் பழமையைக் காட்டிலும் மாட்சி பெறச் செய்து வாழ்வோமடி என்று தன் ' விடுதலைக்கும்மியிலே ' பதிவு செய்கின்றார் . பெண் விடுதலைக் கவிஞரின் இந்த வரிகளை இன்று புடம்போட்டு பார்க்குமளவில் நவீன போலிப் புரச்சியாளர்கள் இல்லை என்பது தான் உண்மை . தெய்வந் தொழுஅள் கொழுநற்றொழுவாளைத் தெய்வந்தொழுதகைமை திண்ணியதால் தெய்வமாய் மண்ணக மாதர் கணியாய கண்ணகி விண்ணகமாதர்க்கு விருந்து என்று அடிக்கோடிடுகிறது சிலப்பதிகாரம் . ' கற்பு ' என்பதே தேவையற்ற சொல் என்று வாதிடும் கருஞ்சட்டைக்காரர்களுக்கும் கவலைக்குரிய சில பெண்ணியவாதிகளுக்கும் வள்ளுவன் மிகத்தெளிவாகச் சொல்லுகின்றான் பெண் தன் கற்பொழுக்கத்தைக் காத்து நிற்பாளாக இருந்தால் மட்டுமே அந்தப் பெண்ணிலும் பெரியது என்று இந்த உலகினில் எதுவும் இல்லை என்று ! பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பெனும் திண்மை உண்டாகப் பெறின் திருச்சிற்றம்பலம் தென்னாடு துலை நல்லோரை ஐப்பசித் திங்கள் 2021 யாழ்ப்பாணம் நாச்சிமார் கோயிலடியைச் சேர்ந்த இறைநெறி எழுத்தாளரும் வில்லிசைக் கலைஞரும் ஓதுவாருமான யாழ் . இந்துவின் பழைய மாணவன் சிவநெறிக் கலாநிதி இராசையா ஸ்ரீதரன் அவர்களின் வாழ்க்கைப் பயணம் ஈழமணித் திருநாட்டின் முடி போல விளங்குகின்ற காலக்கிரமத்தில் தனது கல் யாழ்ப்பாணக் குடாநாட்டிலே வண்பண்ணை நாச்சிமார் லூரி வாழ்க்கையை முடித்துப் கோயிலடியில் வாழ்ந்தவர் தான் வேலாயுதம் இராசையா பின் பொது வாழ்க்கையில் அவர்கள் . இவர் மதவடி ஒழுங்கையில் வசித்த நாகமணி பங்கேற்று சிவப்பணி ஆற்றத் அப்பாத்துரை பொன்னம்மா தம்பதியினரின் மூத்த தொடங்கினார் . பின்னர் மகள் இரத்தினம்மா என்பவரை மணந்து இல்லறத்தை உபதபாலதிபராக இருந்த நல்லறமாக நடத்தி வந்தார் . நாச்சிமார் கோயிலடி தந்தையாருடன் சேர்ந்து சிறிது உப தபாலதிபராகவும் கடமையாற்றி வந்த இவர் காலம் கடமையாற்றினார் . அதன் பிறகு நாச்சிமார் கோயி லடியில் இருந்த காலத்தில் 1974 ஆம் வருடம் ஸ்ரீதரனின் கல்விச் சிறப்பையும் புலமை யையும் கண்டு யாழ்ப்பாணம் ஸ்ரீசுப்பிரமணிய புத்தகசாலை அதிபர் . சுப்பிரமணியம் என்பவர் தம்முடைய அச்சகத்தில் சரவை ஒப்பு நோக்குநராக அவரை நியமனம் செய்தார் . அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது என்ற வள்ளுவப் பெருந்தகையின் குறட்பாவுக்கமைய தம்முடைய குடும்ப வாழ்க்கையைச் சிறப்பாக நடத்தி வந்தார் . இந்தத் தம்பதியினருக்கு இறையருள் நலத்தால் நன்மக்கட்பேறு வாய்க்கப் பெற்று 1950 ம் வருடம் தைத் திங்கள் 2 ஆம் நாள் ( 15.01.1950 ) கலையம்சம் பொருந்திய ஓர் ஆண்மகவு பிறந்தது . அழகு மிளிரும் ஒளி பொருந்திய முகத்துடன் விளங்கிய இக்குழந்தை யின் தோற்றத்தைக் கண்ட பெற்றோர் ஸ்ரீதரன் என்று பெயர் வைத்து பரிவோடும் பாசத்தோடும் பக்குவமாக அப்பொழுது அங்கே புத்தகம் அச்சிட்ட மூதறிஞர் க.சி.குலரத்தினம் ஆசிரியருடைய அறிமுகம் ஸ்ரீதரனுக் குக் கிடைக்கவே அவருடைய நூலாக்கத் திறமையின் பால் இவருக்கும் ஆர்வம் ஏற்பட்டது . அச்சூழலில் கம்பராமாயணம் இந்துசமயம் ஆகியவற்றில் இவர் பரந்த விரிவான அறிவைப் பெற்றுக் கொண்டார் . ஸ்ரீதரன் அவர்கள் ஸ்ரீ சுப்பிரமணிய அச்சகத்தில் ஒப்புநோக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது வேறு பல ஆக்கத்திறனான பயிற்சியிலும் சிறந்து விளங்கினார் . சில விடயங்களை ஒப்புநோக்கும் போது பல்வேறு பிழைகளையும் சுட்டிக்காட்டி நூலாசிரியரே வியக்கும் வகையில் சிறப்பான ஒரு விடயதாரியாக இவர் விளங்கியமை குறிப்பிடத்தக்கது . அதன் பயனாகத் தாமும் புத்தகம் எழுதி வெளியிடவேண்டும் என்னும் ஆசையினால் உந்தப்பட்டார் . மூதறிஞர் க.சி.குலரத்தினம் சொக்கன் ஆசிரியர் முதலானோர் தங்களுடைய நூல்களை ஸ்ரீதரன் பிழைதிருத்தம் பார்த்த போது எந்தவித பிழையும் இல்லாமலும் விடயப் பிழைகள் சிறந்த முறையில் திருத்தஞ் செய்யப்பட்டிருப்பதையும் கண்டு ஆச்சரியப் பட்டனர் . தாங்கள் எழுதிய நூல் நல்ல முறையில் பிழையில்லாமல் அச்சுவாகனம் ஏறியமையால் தங்கள் முகவுரையிலும் சிறந்த முறையில் கடமையாற்றிய ஸ்ரீதரனுடைய நூலாக்கப் பணியை வியந்து பாராட்டிப் போற்றியுள்ளனர் . வளர்த்து வந்தனர் . ஸ்ரீ என்றால் அருள் என்று பொருள் . நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வந்த ஸ்ரீதரனை ஸ்ரீ என்று அன்பாக ஆசையோடு அழைத்து மகிழ்ந்த பெற்றோர் இவருடைய கல்வியறிவு சிறக்கக் கருதி யாழ் பெரியபுலம் பாடசாலையில் சேர்த்தனர் . அங்கு தமது ஆரம்பக் கல்வியைப் பெற்றுக் கொண்ட பிறவிச் சைவராகியா இவர் 1959 இல் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் சேர்ந்து தமது மேற்படிப்பைத் தொடர்ந்தார் . பின்பு 1964 இல் க.பொ.த சாதாரண தர தேர்வில் சித்தியெய்திய இவர் 1965 ஆம் வருடம் உயர்தர வகுப்பிற் சேர்ந்தார் . | அக்கல்லூரியின் பிரார்த்தனை நிகழ்விலும் உயர்தர வகுப்பில் பேச்சுப் போட்டி பண்ணிசைப் போட்டி முதலானவற்றிலும் பங்குபற்றி பரிசில்கள் பெற்று நற்பெயரைத் தட்டிக் கொண்டார் . அப்போது கல்லூ ரியில் கற்பித்த ஆசிரியர்களான ஏரம்பமூர்த்தி குமாரசாமி மகாதேவா சிவராமலிங்கம்பிள்ளை சொக்கலிங்கம் ஆசைப்பிள்ளை சிவசுப்பிரமணியம் முத்துக்குமாரசாமி சோமசுந்தரம் மயில் வாகனம் சுப்பையா பிள்ளை ஆகியோரிடம் கல்வி கற்கும் நல்ல வாய்ப்பினைப் பெற்றுக் கொண்டதால் இவர் கலைமகள் அருளால் கல்வியில் மேம்பாட்டுடன் திகழ்ந்தார் . குறிப்பாக சிவராமலிங்கம்பிள்ளை சொக்கலிங்கம் ( சொக்கன் ) ஆகியோர் இவருடைய கல்விச்சிறப்பைக் கண்ணுற்று சைவப்புலவர் பண்டிதர் தேர்வுகளில் பங்கேற்றுப் பட்டம் பெறுமாறு ஊக்குவித்தனர் . அதன்பயனாக 1972 இல் சைவப்புலவர் பரீட்சையிற் சித்தி பெற்று சித்தாந்த பாலபண்டிதர் பரீட்சைக்குத் தோற்றி நூன சித்தியும் பெற்று சிறந்து விளங்கினார் . சிவத்திரு . ஆறுமுகம் சசிநாத் கலைமாணி தென்னாடு சிவமடம் 1975 முதல் 85 வரையில் ஸ்ரீ சுப்பிரமணிய புத்தகசாலையிலும் அச்சுக் கூடத்திலும் சிறப்பான பணி செய்த ஸ்ரீதரன் பின்னர் 1985 ஆம் வருடம் காலச்சூழலில் உதயன் நாளிதழ் ஆரம்பமாகவே அதில் சேர்ந்து பத்திரிகையாளராகவும் மிளிர்ந்தார் . இப்படியிருக்கும் நாளில் 1983 இல் ஆனைப்பந்தியைச் சேர்ந்த மயில்வாகனம் வாலாம்பிகை தம்பதியினரின் மகளான சத்தியபாமாவைத் திருமணஞ் செய்து கொண்டார் . அவர் ஒரு வயலின் ஆசிரியை . இல்லறமான நல்லற வாழ்வில் இவருக்கு 1986 ஆம் வருடம் ஓர் ஆண்குழந்தை பிறந்தது . இவர் தமது மகனுக்கு நிதர்சன் என்று பெயர் சூட்டினார் . 1989 ஆம் வருடம் ஒரு பெண் குழந்தை பிறந்தது . மகளுக்கு குவலயா என்று பெயரிட்டனர் . இவருடைய வாழ்க்கையிலே துன்ப நிகழ்வாக ஒரு சம்பவம் 2004 ஆம் வருடம் நிகழ்ந்தது . அதாவது விதி செய்த சதியாலே பெண் மகவான குவலயாவின் பருவச்சடங்கு நடைபெற்று இரண்டாம் திங்கள் வேம்படி மகளிர் கல்லூரியில் கற்று கொண்டிருந்த போது நோய்வாய்ப்பட்டு இறக்க நேரிட்டது . ( 05 ஆம் பக்கம் பார்க்க )