தென்னாடு ஐப்பசித் திங்கள் இதழ் - 13

தென்னாடு துலை நல்லோரை ஐப்பசித் திங்கள், 2021 அடியார் பெருமையின் ஆவண ஊற்று - பெரியபுராணம்: பத்தராய் பணிவார்கள் - தொகையடியார்கள் உலகெலாம் உணர்ந்து ஓதுதற்கு அரியவனாக திகழக் கூடிய இறைவன். உயிர்கள் உய்யும் பொருட்டு, பல்வேறு நிலைகளில் இறங்கி வந்து, அருள்செய்து கொண்டிருக்கி றான். தனி முதலாக விளங்கக் கூடிய தாயுமானவன் தம் அடியார் புகழ் உலகெலாம் அறிந்து, உயர்நிலை அடைய எண்ணி ஆலால சுந்தரரை இங்கு அவதரிக்கச் செய்தார், என்பது திண்ணம். "பக்தி” என வருதல் கூடாது, "பத்தி” என்றே வரல் வேண்டும். தொல்காப்பியரின் காலத்திற்குப் பிறகு சங்ககாலம் தொட்டுத்தோன்றிய பிற்காலத் தமிழ் இலக்கியங்களில் வடமொழிச் சொற்கள் கலந்து வரவே, அவை தொல்காப்பிய விதிக்கு புறம்பானவை என்று சொற்களை மாற்றி ஏற்றுக்கொள்ளப்பட்டதாகச் செய்திகள் இருக்கிறது. இதனை குறிப்பிடுவதற்கான காரணம், நம்மில் சிலர் திருமுறைப் பாடுகையில், அப்படியே பாடாமல் சொற்களை மாற்றிப் பாடுகின்றோம். அருளாளர்களின் வாக்கை மாற்றுவதற்கு அறுபத்துமூன்று நாயன்மார் கள் தவிர்த்து, ஒன்பது தொகையடியார்களையும் சிறப்பாக நமக்கு ஒருபோதும் உரிமையில்லை. அந்தத் தவற்றை நாம் சைவம் கொண்டாடுகிறது. செய்யக் கூடாது. திருமுறை ஆசிரியர்கள் தெளிவாகவே பாடுகின்றனர். தொகையடியார்கள் 1. தில்லைவாழ் அந்தணர்கள் 2. பொய்யடிமை இல்லாத புலவர்கள் 3. பத்தராய்ப் பணிவார்கள் 4. பரமனையே பாடுவார்கள் சிவத்திரு. பா. சிவமாதவன் புதுக்கோட்டை 5. சித்தத்தை சிவன்பாலே வைத்தார்கள் 6. திருவாரூர் பிறந்தார்கள் 7. முப்போதும் திருமேனி தீண்டுவோர் 8. முழநீறு பூசிய முனிவர்கள் 9. அப்பாலும் அடிச்சார்ந்தார் ஒன்றுக்கு மேற்பட்ட ஒரு கூட்டத்தினர் அல்லது குழுவினைத் தொகுத்துச் சுட்டுவதைத் தொகை அடியார்கள் என்பர். இவர் இன்னார் என்று குறிப்பிட்டுச் சொல்ல இயலாத வேறு பலரையும், தம் காலத்து முன்பும், பின்பும் வாழ்ந்தவர்களையும், வரவிருப்பவர்களையும் போற்றும் நோக்கில் தொகையடியார் வணக்கத்தைச் சுந்தரர் மேற்கொண்டுள்ளார். அப்பேற்பட்ட தொகையடியார்களில் “பத்தராய் பணிவார்கள்" பற்றிய செய்திகளைக் காண்போம். சுந்தரமூர்த்தி பொருமான் "பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன்” எனக் குறிப்பிடுகிறார். இந்த இடத்தில் நாம் ஒன்றைக் கவனிக்க வேண்டும். நாம் தற்பொழுது “ பக்தி” என்ற சொல்லை அதிகமாகப் பயன்படுத்தி வருகிறோம். “பக்தர்” என்றும் குறிப்பிடுகின்றோம் ஆனால் இது பிழை என்பதை தொல்காப்பியர் நமக்கு உரைக்கின்றார். அதாவது, மொழி இடையில் ஒரு மெய் தன்னோடும் பிற மெய்யோடும் சேர்ந்து வருவதை “மெய்மயக்கம்” என்று தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார். க,ச,த,ப எனும் நான்கு மெய்களும் தம்மொடு தாம் மட்டுமே மயங்கி வரும். இதனை உடனிலை மெய்மயக்கம் என்று நன்னூலார் குறிப்பிடுவார். இவ்விதிகள், தமிழ் மொழியின் அமைப்பை தொல்காப்பியர் காலத்திற்குப் பின்பும் பன்னெடுங்காலமாகச் சிதைந்து AIA E விடாது காத்து வந்துள்ளன. தமிழில் பிறமொழிச் சொற்கள் குறிப்பாக வடமொழிச் சொற்கள் வந்து கலக்கும் போது அவற்றை ஏற்றுக்கொள்ள இவ்விதிகள் இடம் தரவில்லை. சான்றாக க,ச,த, ப ஆகிய மெய்களை அடுத்து அம்மெய்களே வர வேண்டும். "பத்தனாய்ப் பாடமாட்டேன்”- அப்பர் "பத்தர் சூழப் பராபரன்”- மாணிவாசகர். "பத்தினி பத்தர்கள்"-திருமூலர் இனி பத்தர்களைப் பற்றி நம்பியாண்டார் நம்பிகள் கூறியதைப் பார்ப்போம். "அரசினை ஆருர் அமரர் பிரானை அடிபணிந்திட்டு உரைசெய்த வாய்தடு மாறி உரோம புளகம் வந்து கரசர ணாதி அவயங் கம்பித்துக் கண்ணாருவி சொரிதரும் அங்கத்தி னோர்பத்தர் என்று தொகுத்தவரே.'' (திருத்தொண்டர் திருவந்தாதி) அதாவது உடல் நிலத்திற்படிய வீழ்ந்து இறைவனது திருவடியை வணங்குதல், அன்பினால் நாக்குழற பெருமானது புகழ்தனை எடுத்தோதுதல், உடம்பெங்கும் மயிர்க்கூச் செறிதல் கைகால் முதலிய உறுப்புக்கள் தேயவும் அன்பினால் நடுங்கல் கண்களிலிருந்து அன்பினால் கண்ணீர் சொரிதல் போன்றவை பத்தர்களின் பண்பு எனக் குறிப்பிடுகிறார். மேலும் பத்தியின் சிறப்பை மணிவாசகர் இரண்டே வரிகளில் குறிப்பிடுகிறார். திருவண்டப்பகுதியில் வருகின்ற “சித்தமும் செல்லாச் சேட்சியன் காண்க பத்தி வலையிற் பாடுவோன் காண்க" மிகவும் அற்புதமான வரிகள் இவை. சித்தத்தால் எட்ட முடியாதவனே ஆயினும் அன்பர்களின் பத்தி என்ற வலையில் தானே வந்து அகப்பட்டுக்கொள்வான் என்கிறார். தன்முயற்சியால் தேடிச் செல்வதை சித்தமும் செல்லா என்ற தொடர் குறிக்கின்றது. இறைவனை ஒருபோதும் தேடி பிடிக்க முடியாதல்லவா அவன் அருளால் தான் அவனை வணங்க முடியுமென திருவாசகம் தெளிவுபடுத்துகிறது. பத்தி வலை விரிய விரிய கருணையாளன் தானே அன்பிருப்பதால் அகப்படுகிறான். மேலும் பத்தராய்ப் F 10 09 தொ ************* பணிவார்கள் புராணத்தில் தெய்வச் சேக்கிழார் பெருமான் குறிப்பிடுகையில், ஈசனுக்கு அன்பு கொண்டவராக இருந்தால், அவர்களைப் பார்த்ததும் எப்பேற்பட்ட சிறப்புடையவர்கள் என கூறி, மிகவும் விருப்பம் கொண்டு (குதூகலம்), ஆசையினாலே தாய்ப்பசுவிடம் கன்று போவது போல், அடியாரிடம் சென்று பணிவான இனிய மொழிகளை பேசுவார்கள் என்கிறார். அப்பாடல், "ஈசருக்கே யன்பானார் யாவரையுந் தாங்கண்டால் கூசிமிகக் குதுகுதுத்துக் கொண்டாடிய மனமகிழ்வுற்று ஆசையினால் ஆவின்பின் கன்றணைந்தாற் போலணைந்து பேசுவன பணிந்தமொழி இனியனவே பேசுவார்." திருச்சிற்றம்பலம் (பெரியபுராணம்) நாம் எல்லாம் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்பதை மிகச் சிறப்பாக இப்பாடல் விளக்குகின்றது. இறைவனை எந்த நேரத்திலும் நினைக்க வேண்டும். எந்த செயலையும் அவன் நினைப்போடு செய்ய வேண்டுமென்பதை பின்வரும் பெரியபுராணப்பாடல் வழிகாட்டும். "நின்றாலும் இருந்தாலும் கிடந்தாலும் நடந்தாலும் மென்றாலுந் துயின்றாலும் விழித்தாலும் இமைத்தாலும் மன்றாடு மலர்ப்பாதம் ஒருகாலு மறவாமை குன்றாத உணர்வுடையார் தொண்டராம் குணமிக்கார் (பெரியபுராணம்) இதனையே திருஞானசம்பந்தப் பெருமானும் திருவாவடுதுறைப் பதிகத்தின் ஒன்பதாவது பாடலில், "உண்ணினும் பசிப்பினும் உறங்கினும் நின், ஒண்மலர் அடியலால் உரையாது என்நா” எனக் குறிப்பிடுகிறார். நிறைவாக நாம் எப்படி இறைவனிடம் அன்பு செலுத்த வேண்டும், அடியார்களை எப்படி பார்க்க வேண்டும் என்பதை பத்தராய்ப் பணிவார்கள் மூலம் அறிய முடிகிறது. எனவே நாம் உண்மையான பத்தி செய்வோமேயானால், முத்தி நிச்சயம் கிட்டும்.
தென்னாடு துலை நல்லோரை ஐப்பசித் திங்கள் 2021 அடியார் பெருமையின் ஆவண ஊற்று - பெரியபுராணம் : பத்தராய் பணிவார்கள் - தொகையடியார்கள் உலகெலாம் உணர்ந்து ஓதுதற்கு அரியவனாக திகழக் கூடிய இறைவன் . உயிர்கள் உய்யும் பொருட்டு பல்வேறு நிலைகளில் இறங்கி வந்து அருள்செய்து கொண்டிருக்கி றான் . தனி முதலாக விளங்கக் கூடிய தாயுமானவன் தம் அடியார் புகழ் உலகெலாம் அறிந்து உயர்நிலை அடைய எண்ணி ஆலால சுந்தரரை இங்கு அவதரிக்கச் செய்தார் என்பது திண்ணம் . பக்தி என வருதல் கூடாது பத்தி என்றே வரல் வேண்டும் . தொல்காப்பியரின் காலத்திற்குப் பிறகு சங்ககாலம் தொட்டுத்தோன்றிய பிற்காலத் தமிழ் இலக்கியங்களில் வடமொழிச் சொற்கள் கலந்து வரவே அவை தொல்காப்பிய விதிக்கு புறம்பானவை என்று சொற்களை மாற்றி ஏற்றுக்கொள்ளப்பட்டதாகச் செய்திகள் இருக்கிறது . இதனை குறிப்பிடுவதற்கான காரணம் நம்மில் சிலர் திருமுறைப் பாடுகையில் அப்படியே பாடாமல் சொற்களை மாற்றிப் பாடுகின்றோம் . அருளாளர்களின் வாக்கை மாற்றுவதற்கு அறுபத்துமூன்று நாயன்மார் கள் தவிர்த்து ஒன்பது தொகையடியார்களையும் சிறப்பாக நமக்கு ஒருபோதும் உரிமையில்லை . அந்தத் தவற்றை நாம் சைவம் கொண்டாடுகிறது . செய்யக் கூடாது . திருமுறை ஆசிரியர்கள் தெளிவாகவே பாடுகின்றனர் . தொகையடியார்கள் 1. தில்லைவாழ் அந்தணர்கள் 2. பொய்யடிமை இல்லாத புலவர்கள் 3. பத்தராய்ப் பணிவார்கள் 4. பரமனையே பாடுவார்கள் சிவத்திரு . பா . சிவமாதவன் புதுக்கோட்டை 5. சித்தத்தை சிவன்பாலே வைத்தார்கள் 6. திருவாரூர் பிறந்தார்கள் 7. முப்போதும் திருமேனி தீண்டுவோர் 8. முழநீறு பூசிய முனிவர்கள் 9. அப்பாலும் அடிச்சார்ந்தார் ஒன்றுக்கு மேற்பட்ட ஒரு கூட்டத்தினர் அல்லது குழுவினைத் தொகுத்துச் சுட்டுவதைத் தொகை அடியார்கள் என்பர் . இவர் இன்னார் என்று குறிப்பிட்டுச் சொல்ல இயலாத வேறு பலரையும் தம் காலத்து முன்பும் பின்பும் வாழ்ந்தவர்களையும் வரவிருப்பவர்களையும் போற்றும் நோக்கில் தொகையடியார் வணக்கத்தைச் சுந்தரர் மேற்கொண்டுள்ளார் . அப்பேற்பட்ட தொகையடியார்களில் பத்தராய் பணிவார்கள் பற்றிய செய்திகளைக் காண்போம் . சுந்தரமூர்த்தி பொருமான் பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன் எனக் குறிப்பிடுகிறார் . இந்த இடத்தில் நாம் ஒன்றைக் கவனிக்க வேண்டும் . நாம் தற்பொழுது பக்தி என்ற சொல்லை அதிகமாகப் பயன்படுத்தி வருகிறோம் . பக்தர் என்றும் குறிப்பிடுகின்றோம் ஆனால் இது பிழை என்பதை தொல்காப்பியர் நமக்கு உரைக்கின்றார் . அதாவது மொழி இடையில் ஒரு மெய் தன்னோடும் பிற மெய்யோடும் சேர்ந்து வருவதை மெய்மயக்கம் என்று தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார் . எனும் நான்கு மெய்களும் தம்மொடு தாம் மட்டுமே மயங்கி வரும் . இதனை உடனிலை மெய்மயக்கம் என்று நன்னூலார் குறிப்பிடுவார் . இவ்விதிகள் தமிழ் மொழியின் அமைப்பை தொல்காப்பியர் காலத்திற்குப் பின்பும் பன்னெடுங்காலமாகச் சிதைந்து AIA E விடாது காத்து வந்துள்ளன . தமிழில் பிறமொழிச் சொற்கள் குறிப்பாக வடமொழிச் சொற்கள் வந்து கலக்கும் போது அவற்றை ஏற்றுக்கொள்ள இவ்விதிகள் இடம் தரவில்லை . சான்றாக ஆகிய மெய்களை அடுத்து அம்மெய்களே வர வேண்டும் . பத்தனாய்ப் பாடமாட்டேன் - அப்பர் பத்தர் சூழப் பராபரன் - மாணிவாசகர் . பத்தினி பத்தர்கள் -திருமூலர் இனி பத்தர்களைப் பற்றி நம்பியாண்டார் நம்பிகள் கூறியதைப் பார்ப்போம் . அரசினை ஆருர் அமரர் பிரானை அடிபணிந்திட்டு உரைசெய்த வாய்தடு மாறி உரோம புளகம் வந்து கரசர ணாதி அவயங் கம்பித்துக் கண்ணாருவி சொரிதரும் அங்கத்தி னோர்பத்தர் என்று தொகுத்தவரே . ' ' ( திருத்தொண்டர் திருவந்தாதி ) அதாவது உடல் நிலத்திற்படிய வீழ்ந்து இறைவனது திருவடியை வணங்குதல் அன்பினால் நாக்குழற பெருமானது புகழ்தனை எடுத்தோதுதல் உடம்பெங்கும் மயிர்க்கூச் செறிதல் கைகால் முதலிய உறுப்புக்கள் தேயவும் அன்பினால் நடுங்கல் கண்களிலிருந்து அன்பினால் கண்ணீர் சொரிதல் போன்றவை பத்தர்களின் பண்பு எனக் குறிப்பிடுகிறார் . மேலும் பத்தியின் சிறப்பை மணிவாசகர் இரண்டே வரிகளில் குறிப்பிடுகிறார் . திருவண்டப்பகுதியில் வருகின்ற சித்தமும் செல்லாச் சேட்சியன் காண்க பத்தி வலையிற் பாடுவோன் காண்க மிகவும் அற்புதமான வரிகள் இவை . சித்தத்தால் எட்ட முடியாதவனே ஆயினும் அன்பர்களின் பத்தி என்ற வலையில் தானே வந்து அகப்பட்டுக்கொள்வான் என்கிறார் . தன்முயற்சியால் தேடிச் செல்வதை சித்தமும் செல்லா என்ற தொடர் குறிக்கின்றது . இறைவனை ஒருபோதும் தேடி பிடிக்க முடியாதல்லவா அவன் அருளால் தான் அவனை வணங்க முடியுமென திருவாசகம் தெளிவுபடுத்துகிறது . பத்தி வலை விரிய விரிய கருணையாளன் தானே அன்பிருப்பதால் அகப்படுகிறான் . மேலும் பத்தராய்ப் F 10 09 தொ ************* பணிவார்கள் புராணத்தில் தெய்வச் சேக்கிழார் பெருமான் குறிப்பிடுகையில் ஈசனுக்கு அன்பு கொண்டவராக இருந்தால் அவர்களைப் பார்த்ததும் எப்பேற்பட்ட சிறப்புடையவர்கள் என கூறி மிகவும் விருப்பம் கொண்டு ( குதூகலம் ) ஆசையினாலே தாய்ப்பசுவிடம் கன்று போவது போல் அடியாரிடம் சென்று பணிவான இனிய மொழிகளை பேசுவார்கள் என்கிறார் . அப்பாடல் ஈசருக்கே யன்பானார் யாவரையுந் தாங்கண்டால் கூசிமிகக் குதுகுதுத்துக் கொண்டாடிய மனமகிழ்வுற்று ஆசையினால் ஆவின்பின் கன்றணைந்தாற் போலணைந்து பேசுவன பணிந்தமொழி இனியனவே பேசுவார் . திருச்சிற்றம்பலம் ( பெரியபுராணம் ) நாம் எல்லாம் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்பதை மிகச் சிறப்பாக இப்பாடல் விளக்குகின்றது . இறைவனை எந்த நேரத்திலும் நினைக்க வேண்டும் . எந்த செயலையும் அவன் நினைப்போடு செய்ய வேண்டுமென்பதை பின்வரும் பெரியபுராணப்பாடல் வழிகாட்டும் . நின்றாலும் இருந்தாலும் கிடந்தாலும் நடந்தாலும் மென்றாலுந் துயின்றாலும் விழித்தாலும் இமைத்தாலும் மன்றாடு மலர்ப்பாதம் ஒருகாலு மறவாமை குன்றாத உணர்வுடையார் தொண்டராம் குணமிக்கார் ( பெரியபுராணம் ) இதனையே திருஞானசம்பந்தப் பெருமானும் திருவாவடுதுறைப் பதிகத்தின் ஒன்பதாவது பாடலில் உண்ணினும் பசிப்பினும் உறங்கினும் நின் ஒண்மலர் அடியலால் உரையாது என்நா எனக் குறிப்பிடுகிறார் . நிறைவாக நாம் எப்படி இறைவனிடம் அன்பு செலுத்த வேண்டும் அடியார்களை எப்படி பார்க்க வேண்டும் என்பதை பத்தராய்ப் பணிவார்கள் மூலம் அறிய முடிகிறது . எனவே நாம் உண்மையான பத்தி செய்வோமேயானால் முத்தி நிச்சயம் கிட்டும் .