தென்னாடு கார்த்திகை திங்கள் இதழ் - 14

நளி நல்லோரை கார்த்திகைத் திங்கள், 2021 கச்சன் சிவனைப் பூசித்த திருத்தலம் திருக்கச்சூர் ஒன்றாய் அரும்பி, பலவாய் விரிந்து, பாரிடை ஐந்தாக பரந்தவன் ஈசன். அவன் உறையும் சீர்மிகு பதிகளில் பாடல்பெற்ற தொண்டை நாட்டில் அமைந்துள்ள தலங்களில் 259 திருத்தலம் திருக்கச்சூர் ஆகும். மூர்த்தி, தல, தீர்த்தச் சிறப்புடன் இயற்கை எழில் கொஞ்சும் சிவத்தலமான இத்தலத்திற்கு வந்து வழிபடுவோர், வாழ்நாளில் என்றும் உணவு கிடைத்து, பசிப்பிணி நீங்கி, அன்னம் பாலிக்கும் தில்லை சிற்றம்பலத்தவனின் நல்லருள் பெற்று வாழ்வார்கள் என்பது ஐதிகம். அமைவிடம்: (செங்கல்பட்டு - தமிழ்நாடு) சென்னை - செங்கல்பட்டு புகையிரத வழியில் உள்ள சிங்கப்பெருமாள் கோவில் புகையிரத நிலையத்தில் இருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் இந்த சிவபுரங்களில் உள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் சிங்கப்பெருமாள்கோவில் சென்று அங்கிருந்து திருப்பெரும்புதூர் (ஸ்ரீபெரும்புதூர்) செல்லும் சாலையில் சென்றால் திருக்கச்சூர் கோவிலை அடையலாம். இந்தக்கோவில் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி ஈசனைத் தேடிய தென்னாட்டுப் பயணம் அருள்மிகு அஞ்சனாட்சி அம்மை உடனுறை விருந்திட்ட ஈசுவரர் (கச்சபேசுவர்) திருக்கோயில் - திருக்கச்சூர் (தேவாரப் பாடல்பெற்ற 274 சிவபுரங்களில் 259வது திருக்கோயில் திருக்கச்சூர்) சிவ மகாவிஷ்ணு சிலனை பூக் சிவ வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும். இங்கிருந்து சற்று தொலைவில் உள்ள மலையடிவாரத்தில் மருந்தீசர் கோயில் என்ற மற்றொரு சிவன்கோவிலும் உள்ளது. இறைவன் திருப்பெயர்: விருந்திட்ட வரதர், கச்சபேசுவர், அமுதத்தியாதர், கச்சூரெம்மான், விருந்திட்ட ஈச்வரர் (விருந்திட்டவீசர்) - (சுயம்பு இலிங்கம்) இறைவி திருப்பெயர்: அஞ்சனாட்சி அம்மை, கன்னி உமையான் கோவில்மரம் : கல்லாலமரம், வேர்ப்பலா, ஆல் திருக்குளம் : ஆமைக்குளம் வழிபட்டோர்: திருமால், சுந்தரமூர்த்தி நாயனார்,, திருநாவுக்கரசர் புராணபெயர்: நடனவினாத நல்லூர், ஆதிகாஞ்சி, ஆலக்கோயில் பாமாலை: சுந்தரமூர்த்தி நாயனார், திருநாவுக்கரசர், சேக்கிழார் பெருமான் நாயன்மார்களால் பாடப்பட்ட திருப்பதிகங்கள் சுந்தர மூர்த்தி நாயனாரால் பாடப்பட்டத் திருப்பதிகம் "முதுவாய் ஓரி கதற முதுகாட் டெரிகொண் டாடல் முயல்வானே மதுவார் கொன்றைப் புதுவீ சூடும் மலையான் மகள்தன் மணவாளா கதுவாய்த் தலையிற் பலிநீ கொள்ளக் கண்டால் அடியார் கவலாரே அதுவே ஆமா றிதுவோ கச்சூர் ஆலக் கோயில் அம்மானே.' திருநாவுக்கரசரால் பாடப்பட்டத் திருப்பதிகம் "எச்சில் இளமர் ஏம நல்லூர் இலம்பையங் கோட்டூர் இறையான் சேரி அச்சிறு பாக்க மளப்பூர் அம்பர் ஆவடு தண்டுறை அழுந்தூர் ஆறை கச்சினங் கற்குடி கச்சூர் ஆலக் கோயில் கரவீரங் காட்டுப் பள்ளி கச்சிப் பலதளியும் ஏகம் பத்துங் கயிலாய நாதனையே காண லாமே." திருத்தலச் சிறப்பு தென்னாடு முன்னொரு நாளில் அமரர்களும் அவுணர்களும் அமுதம் வேண்டி அரங்கன் துணையோடு மந்தார மலையை மத்தாயும், வாசுகியை கயிராயும் கொண்டு பாற்கடலை கடைந்திட்ட போது மந்தாரமலையை தாங்குகின்ற வல்லமையைப் பெறவும், கடையும் போது அமுதம் திரண்டு வருவதற்காகவும் கச்சப்ப வடிவிலான (ஆமை வடிவம்) திருமால் இறைவனை வழிபட்டு உய்ந்தமையால், புராணச்சிறப்பு மிக்க இப்பதி திருக்கச்சூர் எனபெயர் பெற்றது. இது காஞ்சிபுரம் மாவட்டத்தில் செங்கற்பட்டு வட்டத்தில் அமைந்துள்ளது. இங்கே சண்டேசுவரர் நான்கு முகத்துடன் காட்சி தருகிறார். அந்தணர் வேடத்தில் வந்து இறைவன், சுந்தரரின் பசி தீர்த்தமை மற்றும் திருமால் கச்சப (ஆமை) வடிவில் இருந்து வழிபட்டமை ஆகியன இத்தலத்தில் நிகழ்ந்தன என்பதும் தொன்நம்பிக்கை. அப்பர் பிரான் அம்பலத்துறை அமுதன் எழுந்தருளுகின்ற சிவாலயங்களை போற்றிப் பாடுகையில் திருக்கச்சூரையும் இணைத்துப் பாடி இறைவனை பணிந்துள்ளார். "எச்சில் இளமர் ஏம நல்லூர் இலம்பைங் கோட்டூர் இறையான் சேரி" மருந்தாக அமைந்து மருள் நீக்கும் மகேசன் திருக்கழுகுன்றத்தில் இருந்து திருக்கச்சூரை நோக்கி வரும் சுந்தரமூர்த்தி நாயனாரின் பால் அருள்புரிந்த அருட்தலமாயும் கச்சூர் மிளிர்கிறது. ஆலக்கோயில் அமுதனை தொழுது மதிற்புறத்தில் பசியால் துவண்ட வண்ணம் முகம் மிகவாடியிருந்த சுந்தரரின் பால் தாயினும் நல்ல தலைவனான ஈசன் மனம் வெதும்புகிறார். இக்காட்சியை பெரியபுராணத்தில் சேக்கிழார் செவ்வனே அரை ஓவியமாக தீட்டியிருக்கிறார் பாருங்கள். "வன்கொண்டர் பசி தீர்க்க மலையின் மேல் மருந்து ஆனார் மின்தங்கு வெண்தலையோடு ஒழிந்து ஒரு வெற்றோடு ஏந்தி அன்று அங்கு வாழ் வாழ்வார் ஓர் அந்தணராய் புறப்பட்டுச் சென்று அன்பர் முகம் நோக்கிக் அருள் கவறச் செப்புவார்” வெதுப்பிய வேதமுதல்வன் தூக்கியதிருவடிகள் நோவ சுந்தரர் பொருட்டு, ஆட லான் அந்தணணாகி திருக்கச்சூரில் அங்கமும் வேதமும் அரன்மேல் அன்புபூண்ட அடியவர்களின் வீடு தோறும் சென்று அடிசில் பெற்று சுந்தரர் வயிற்றுப்பிணியை நீக்கி அருள்கிறார். அந்தணனாய் வந்து அமுதிட்ட அங்கணன் மீது நெகிழ்வுற்றவராய் உண்டு முடித்தபின் சுயஉணர்வு கைவரப் பெற்ற சுந்தரர் அடியவர்களைத் தேடி நிதர்சனத்தை அறிந்து இறையுணர்வு நீக்கி, இறையுணர்வு பெருகிடசெய்திட்ட ஈசனை போற்றி, "முதுவாய் ஓரி கதற முதுகாட் பெரிகொண் டாடல் முயல்வானே” என துவங்கும் பதிகம் பாடிப்பரவி நிற்கிறார். இவ் வற்புறுத்தல் இன்றும் இச்சிவாலய திருவிழாவின் 94ம் நாள் கிரியையாக இடம்பெறுகின்றமை குறிப்பிடதக்கது. திருக்கோயில் அமைப்பு திருக்கச்சூர் ஆலயத்தின் சிறப்பம்சங்களாக கருவறை ஆனது அகழி வடிவில் அமைக்கப்பட்டிருப்பதோடு, இறைவன் தான்தோன்றியாக அருள்புரிவதுமாகும். பலவித கலைநயங்கள் நிறைந்த தூண்கள் மனதை மயக்க வல்லன. கழுவாய்(பிரதோச) நாட்களில் கச்சப் தீர்த்தத்தில் நீராடி சிவசிந்தனையோடு அங்கு எழுந்தருளும் ஈசனை வணங்கினால் அனைத்து தோசங்களும் அகன்று விடுவதோடு செல்வம், கல்வி, இன்பம் முதலியவை கிட்டும் என்பது காலம் காலமாய் நம்பப்படுகிறது. கச்சப்ப வடிவிலான திருமாலுக்கு அருளிய இறைவன், அவருக்காய் இத்தலத்தில் திருத்தாண்டவம் (அஜபா நடனம் ) ஆடி அருள் நல்கியுள்ளமையால், இத்தலம் உபவிடங்கத் தலங்களில் ஒன்றாயும் கருதப்படுகிறது. திருக்கச்சூர் தலம் ஆலக்கோயில் என்ற பெயருடனும் அழைக்கப்படுகிறது. இக்கோயிலின் மூலவர் கச்சபேசுவரராக An 03 தெ இருந்தாலும், இக்கோயில் தியாககேசப் பெருமான் திருக்கோயில் என்றே அழைக்கப்படுகிறது. தொண்டை நாட்டிலுள்ள பாடல் பெற்ற சிவத்தலங்களில் தியாககேசப் பெருமான் சந்நிதி உள்ள கோயில்களில் இத்தலக் கோயிலும் ஒன்றாகும். கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ள இந்த கோயி லிற்கு கோபுரமில்லை. கோயிலுக்கு எதிரில் ஒரு பெரிய குளம் இருக்கிறது. இது கூர்ம (ஆமை) தீர்த்தம் என்று வழங்கப்படுகிறது. திருமால் ஆமை வடிவம் எடுத்தபோது இக்குளத்தை உருவாக்கியதாக கருதப்படுகிறது. இக்குளத்திற்கு அருகில் தான் சுந்தரர் பசிக் களைப்பால் படுத்திருந்த 16 கால் மண்டபம் இருக்கிறது. மண்டபத் தூண்களில் அழகிய சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. "விடையுங் கொடியுஞ் சடையும் உடையாய் மின்னோர் உருவத் தெளியானே கடையும் புடைசூழ் மணிமண் டடமுங் கன்னி மாங் கலந்தெங்கும் கிழக்கிலுள்ள நுழைவாயில் வழியாக உள்ளே சென்றவுடன் கிழக்கு வெளிவீதியில் கொடிமரம், நந்தி, பலிபீடம் ஆகியவை அமைந்துள்ளன. தெற்கு வெளிவீதியில் 27 தூண்களை உடைய நட்சத்திர மண்டபம் உள்ளது. நட்சத்திர மண்டபத்தைக் கடந்து நேரே சென்றால் தியாககேசப் பெருமான் சந்நிதி உள்ளது. இவர் உபயவிடங்கர் எனப்படுகிறார். நட்சத்திர மண்டபத்தில் உள்ள ஒரு தூ ணில் ஆமை உருவில் திருமால் சிவலிங்கத்தை வழிபடும் சிற்பம் ஒன்று உள்ளது. மண்டபத்தில் உள்ள தெற்கு வாயில் வழியே உள்ளே சென்றால் இறைவி அஞ்சனாட்சி அம்மையின் சந்நிதி உள்ளது. நான்கு திருக்கரங்களுடன் நின்ற நிலையில் அம்மை அருள்பாலிக்கிறாள். வலம் வருவதற்கு வசதியாக அம்மன் சந்நிதி ஒரு தனிக் கோயிலாகவே உள்ளது. அம்மை சந்நிதி முன் உள்ள மண்டபத்திலிருந்து மற்றொரு கிழக்கு நோக்கிய வாயில் வழியாக உள்ளே சென்றால் கருவறையில் கிழக்கு நோக்கிய சந்நிதியில் இறைவன் கச்சபேசுவரர் காட்சி தருகிறார். திருமாலுக்கு அருளிய இவர், ஓர் தான்தோன்றி இலிங்கமாவார். கருவறை சுற்றில் தென்கிழக்கில் வடக்கு நோக்கிய நால்வர் சந்நிதியைக் காணலாம். கருவறை சுற்று வலம் வரும்போது வடக்குச் சுற்றின் வடகிழக்கு மூலையில் நடராசர் சந்நிதி அமைந்துள்ளது. கருவறை கோட்ட புடையும் பொழிலும் புனலுந் தழுவிப் பூமேல் திருமாமகன் புல்கி அமையங் கழசிப் பழக் கச்சூர் ஆலக் கோயில் அம்மானே." திருச்சிற்றம்பலம் ஆலவாய் அமுதன் மூர்த்திகளாக விநாயகர், தட்சினாமூர்த்தி, திருமால், நான்முகன், மலைமகள் ஆகியோர் உள்ளனர். வடக்கு வெளி வீதியில் கிழக்கு நோக்கிய முருகன் சந்நிதியும், விருந்திட்ட ஈசுவரர் சந்நிதியும் அமைந்திருக்கின்றன. விருந்திட்ட ஈசுவரர் சந்நிதிக்கு அருகே வடக்கு நோக்கிய சுந்தரர் சந்நிதியும் அமைந்துள்ளது. வடக்கு வெளி வீதியில் தெற்கு நோக்கிய பைரவர் சந்நிதியும் இருக்கிறது. இத்தலத்திலுள்ள இந்த பைரவர் சந்நிதி மிகவும் சிறப்பு வாய்ந்தது. இத்தலம் ஒரு திருப்புகழ் வைப்புத் தலம். இங்கு முருகப் பெருமான் ஒரு முகமும், நான்கு திருக்கரங்களும் கொண்டு இரு தேவியருடன் எழுந்தருளியுள்ளார். இத்தலமரமான ஆலமரம் மகம் விண்மீனுக்குரிய மரமாகும், ஆகவே மகம் விண்மீனில் பிறந்தவர்கள் இத்தல இறைவனை வழிபடுவது மிகவும் விசேடமானதாகும். அது மட்டுமன்றி இத்தலம் ஆலக்கோயில், மருந்தீசர் கோயில் என இரண்டாகவும் பிரித்து போற்றப்படுகின்றன. திருக்கச்சூர் கோயிலின் இணைக்கோயிலான மலைக்கோயில், ஆலக்கோயிலில் இருந்து சுமார் 1 கி.மி. தொலைவில் அமைந்துள்ளது. இக்கோயிலில் குடிகொண்டிருக்கும் இறைவன் மருந்தீசுவரர் என்றும் இறைவி இருள்நீக்கிய அம்மை என்றும் அழைக்கப்படுகின்றனர். நாமும் திருக்கச்சூர் மேவும் கச்சபேசுவரையும் மருந்துக்கோயில் மருந்தீசனையும் அவர்களருலாலே அவர் தாள் பணிந்து உய்வடைவோம்.
நளி நல்லோரை கார்த்திகைத் திங்கள் 2021 கச்சன் சிவனைப் பூசித்த திருத்தலம் திருக்கச்சூர் ஒன்றாய் அரும்பி பலவாய் விரிந்து பாரிடை ஐந்தாக பரந்தவன் ஈசன் . அவன் உறையும் சீர்மிகு பதிகளில் பாடல்பெற்ற தொண்டை நாட்டில் அமைந்துள்ள தலங்களில் 259 திருத்தலம் திருக்கச்சூர் ஆகும் . மூர்த்தி தல தீர்த்தச் சிறப்புடன் இயற்கை எழில் கொஞ்சும் சிவத்தலமான இத்தலத்திற்கு வந்து வழிபடுவோர் வாழ்நாளில் என்றும் உணவு கிடைத்து பசிப்பிணி நீங்கி அன்னம் பாலிக்கும் தில்லை சிற்றம்பலத்தவனின் நல்லருள் பெற்று வாழ்வார்கள் என்பது ஐதிகம் . அமைவிடம் : ( செங்கல்பட்டு - தமிழ்நாடு ) சென்னை - செங்கல்பட்டு புகையிரத வழியில் உள்ள சிங்கப்பெருமாள் கோவில் புகையிரத நிலையத்தில் இருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் இந்த சிவபுரங்களில் உள்ளது . தேசிய நெடுஞ்சாலையில் சிங்கப்பெருமாள்கோவில் சென்று அங்கிருந்து திருப்பெரும்புதூர் ( ஸ்ரீபெரும்புதூர் ) செல்லும் சாலையில் சென்றால் திருக்கச்சூர் கோவிலை அடையலாம் . இந்தக்கோவில் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி ஈசனைத் தேடிய தென்னாட்டுப் பயணம் அருள்மிகு அஞ்சனாட்சி அம்மை உடனுறை விருந்திட்ட ஈசுவரர் ( கச்சபேசுவர் ) திருக்கோயில் - திருக்கச்சூர் ( தேவாரப் பாடல்பெற்ற 274 சிவபுரங்களில் 259 வது திருக்கோயில் திருக்கச்சூர் ) சிவ மகாவிஷ்ணு சிலனை பூக் சிவ வரையிலும் மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும் . இங்கிருந்து சற்று தொலைவில் உள்ள மலையடிவாரத்தில் மருந்தீசர் கோயில் என்ற மற்றொரு சிவன்கோவிலும் உள்ளது . இறைவன் திருப்பெயர் : விருந்திட்ட வரதர் கச்சபேசுவர் அமுதத்தியாதர் கச்சூரெம்மான் விருந்திட்ட ஈச்வரர் ( விருந்திட்டவீசர் ) - ( சுயம்பு இலிங்கம் ) இறைவி திருப்பெயர் : அஞ்சனாட்சி அம்மை கன்னி உமையான் கோவில்மரம் : கல்லாலமரம் வேர்ப்பலா ஆல் திருக்குளம் : ஆமைக்குளம் வழிபட்டோர் : திருமால் சுந்தரமூர்த்தி நாயனார் திருநாவுக்கரசர் புராணபெயர் : நடனவினாத நல்லூர் ஆதிகாஞ்சி ஆலக்கோயில் பாமாலை : சுந்தரமூர்த்தி நாயனார் திருநாவுக்கரசர் சேக்கிழார் பெருமான் நாயன்மார்களால் பாடப்பட்ட திருப்பதிகங்கள் சுந்தர மூர்த்தி நாயனாரால் பாடப்பட்டத் திருப்பதிகம் முதுவாய் ஓரி கதற முதுகாட் டெரிகொண் டாடல் முயல்வானே மதுவார் கொன்றைப் புதுவீ சூடும் மலையான் மகள்தன் மணவாளா கதுவாய்த் தலையிற் பலிநீ கொள்ளக் கண்டால் அடியார் கவலாரே அதுவே ஆமா றிதுவோ கச்சூர் ஆலக் கோயில் அம்மானே . ' திருநாவுக்கரசரால் பாடப்பட்டத் திருப்பதிகம் எச்சில் இளமர் ஏம நல்லூர் இலம்பையங் கோட்டூர் இறையான் சேரி அச்சிறு பாக்க மளப்பூர் அம்பர் ஆவடு தண்டுறை அழுந்தூர் ஆறை கச்சினங் கற்குடி கச்சூர் ஆலக் கோயில் கரவீரங் காட்டுப் பள்ளி கச்சிப் பலதளியும் ஏகம் பத்துங் கயிலாய நாதனையே காண லாமே . திருத்தலச் சிறப்பு தென்னாடு முன்னொரு நாளில் அமரர்களும் அவுணர்களும் அமுதம் வேண்டி அரங்கன் துணையோடு மந்தார மலையை மத்தாயும் வாசுகியை கயிராயும் கொண்டு பாற்கடலை கடைந்திட்ட போது மந்தாரமலையை தாங்குகின்ற வல்லமையைப் பெறவும் கடையும் போது அமுதம் திரண்டு வருவதற்காகவும் கச்சப்ப வடிவிலான ( ஆமை வடிவம் ) திருமால் இறைவனை வழிபட்டு உய்ந்தமையால் புராணச்சிறப்பு மிக்க இப்பதி திருக்கச்சூர் எனபெயர் பெற்றது . இது காஞ்சிபுரம் மாவட்டத்தில் செங்கற்பட்டு வட்டத்தில் அமைந்துள்ளது . இங்கே சண்டேசுவரர் நான்கு முகத்துடன் காட்சி தருகிறார் . அந்தணர் வேடத்தில் வந்து இறைவன் சுந்தரரின் பசி தீர்த்தமை மற்றும் திருமால் கச்சப ( ஆமை ) வடிவில் இருந்து வழிபட்டமை ஆகியன இத்தலத்தில் நிகழ்ந்தன என்பதும் தொன்நம்பிக்கை . அப்பர் பிரான் அம்பலத்துறை அமுதன் எழுந்தருளுகின்ற சிவாலயங்களை போற்றிப் பாடுகையில் திருக்கச்சூரையும் இணைத்துப் பாடி இறைவனை பணிந்துள்ளார் . எச்சில் இளமர் ஏம நல்லூர் இலம்பைங் கோட்டூர் இறையான் சேரி மருந்தாக அமைந்து மருள் நீக்கும் மகேசன் திருக்கழுகுன்றத்தில் இருந்து திருக்கச்சூரை நோக்கி வரும் சுந்தரமூர்த்தி நாயனாரின் பால் அருள்புரிந்த அருட்தலமாயும் கச்சூர் மிளிர்கிறது . ஆலக்கோயில் அமுதனை தொழுது மதிற்புறத்தில் பசியால் துவண்ட வண்ணம் முகம் மிகவாடியிருந்த சுந்தரரின் பால் தாயினும் நல்ல தலைவனான ஈசன் மனம் வெதும்புகிறார் . இக்காட்சியை பெரியபுராணத்தில் சேக்கிழார் செவ்வனே அரை ஓவியமாக தீட்டியிருக்கிறார் பாருங்கள் . வன்கொண்டர் பசி தீர்க்க மலையின் மேல் மருந்து ஆனார் மின்தங்கு வெண்தலையோடு ஒழிந்து ஒரு வெற்றோடு ஏந்தி அன்று அங்கு வாழ் வாழ்வார் ஓர் அந்தணராய் புறப்பட்டுச் சென்று அன்பர் முகம் நோக்கிக் அருள் கவறச் செப்புவார் வெதுப்பிய வேதமுதல்வன் தூக்கியதிருவடிகள் நோவ சுந்தரர் பொருட்டு ஆட லான் அந்தணணாகி திருக்கச்சூரில் அங்கமும் வேதமும் அரன்மேல் அன்புபூண்ட அடியவர்களின் வீடு தோறும் சென்று அடிசில் பெற்று சுந்தரர் வயிற்றுப்பிணியை நீக்கி அருள்கிறார் . அந்தணனாய் வந்து அமுதிட்ட அங்கணன் மீது நெகிழ்வுற்றவராய் உண்டு முடித்தபின் சுயஉணர்வு கைவரப் பெற்ற சுந்தரர் அடியவர்களைத் தேடி நிதர்சனத்தை அறிந்து இறையுணர்வு நீக்கி இறையுணர்வு பெருகிடசெய்திட்ட ஈசனை போற்றி முதுவாய் ஓரி கதற முதுகாட் பெரிகொண் டாடல் முயல்வானே என துவங்கும் பதிகம் பாடிப்பரவி நிற்கிறார் . இவ் வற்புறுத்தல் இன்றும் இச்சிவாலய திருவிழாவின் 94 ம் நாள் கிரியையாக இடம்பெறுகின்றமை குறிப்பிடதக்கது . திருக்கோயில் அமைப்பு திருக்கச்சூர் ஆலயத்தின் சிறப்பம்சங்களாக கருவறை ஆனது அகழி வடிவில் அமைக்கப்பட்டிருப்பதோடு இறைவன் தான்தோன்றியாக அருள்புரிவதுமாகும் . பலவித கலைநயங்கள் நிறைந்த தூண்கள் மனதை மயக்க வல்லன . கழுவாய் ( பிரதோச ) நாட்களில் கச்சப் தீர்த்தத்தில் நீராடி சிவசிந்தனையோடு அங்கு எழுந்தருளும் ஈசனை வணங்கினால் அனைத்து தோசங்களும் அகன்று விடுவதோடு செல்வம் கல்வி இன்பம் முதலியவை கிட்டும் என்பது காலம் காலமாய் நம்பப்படுகிறது . கச்சப்ப வடிவிலான திருமாலுக்கு அருளிய இறைவன் அவருக்காய் இத்தலத்தில் திருத்தாண்டவம் ( அஜபா நடனம் ) ஆடி அருள் நல்கியுள்ளமையால் இத்தலம் உபவிடங்கத் தலங்களில் ஒன்றாயும் கருதப்படுகிறது . திருக்கச்சூர் தலம் ஆலக்கோயில் என்ற பெயருடனும் அழைக்கப்படுகிறது . இக்கோயிலின் மூலவர் கச்சபேசுவரராக An 03 தெ இருந்தாலும் இக்கோயில் தியாககேசப் பெருமான் திருக்கோயில் என்றே அழைக்கப்படுகிறது . தொண்டை நாட்டிலுள்ள பாடல் பெற்ற சிவத்தலங்களில் தியாககேசப் பெருமான் சந்நிதி உள்ள கோயில்களில் இத்தலக் கோயிலும் ஒன்றாகும் . கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ள இந்த கோயி லிற்கு கோபுரமில்லை . கோயிலுக்கு எதிரில் ஒரு பெரிய குளம் இருக்கிறது . இது கூர்ம ( ஆமை ) தீர்த்தம் என்று வழங்கப்படுகிறது . திருமால் ஆமை வடிவம் எடுத்தபோது இக்குளத்தை உருவாக்கியதாக கருதப்படுகிறது . இக்குளத்திற்கு அருகில் தான் சுந்தரர் பசிக் களைப்பால் படுத்திருந்த 16 கால் மண்டபம் இருக்கிறது . மண்டபத் தூண்களில் அழகிய சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன . விடையுங் கொடியுஞ் சடையும் உடையாய் மின்னோர் உருவத் தெளியானே கடையும் புடைசூழ் மணிமண் டடமுங் கன்னி மாங் கலந்தெங்கும் கிழக்கிலுள்ள நுழைவாயில் வழியாக உள்ளே சென்றவுடன் கிழக்கு வெளிவீதியில் கொடிமரம் நந்தி பலிபீடம் ஆகியவை அமைந்துள்ளன . தெற்கு வெளிவீதியில் 27 தூண்களை உடைய நட்சத்திர மண்டபம் உள்ளது . நட்சத்திர மண்டபத்தைக் கடந்து நேரே சென்றால் தியாககேசப் பெருமான் சந்நிதி உள்ளது . இவர் உபயவிடங்கர் எனப்படுகிறார் . நட்சத்திர மண்டபத்தில் உள்ள ஒரு தூ ணில் ஆமை உருவில் திருமால் சிவலிங்கத்தை வழிபடும் சிற்பம் ஒன்று உள்ளது . மண்டபத்தில் உள்ள தெற்கு வாயில் வழியே உள்ளே சென்றால் இறைவி அஞ்சனாட்சி அம்மையின் சந்நிதி உள்ளது . நான்கு திருக்கரங்களுடன் நின்ற நிலையில் அம்மை அருள்பாலிக்கிறாள் . வலம் வருவதற்கு வசதியாக அம்மன் சந்நிதி ஒரு தனிக் கோயிலாகவே உள்ளது . அம்மை சந்நிதி முன் உள்ள மண்டபத்திலிருந்து மற்றொரு கிழக்கு நோக்கிய வாயில் வழியாக உள்ளே சென்றால் கருவறையில் கிழக்கு நோக்கிய சந்நிதியில் இறைவன் கச்சபேசுவரர் காட்சி தருகிறார் . திருமாலுக்கு அருளிய இவர் ஓர் தான்தோன்றி இலிங்கமாவார் . கருவறை சுற்றில் தென்கிழக்கில் வடக்கு நோக்கிய நால்வர் சந்நிதியைக் காணலாம் . கருவறை சுற்று வலம் வரும்போது வடக்குச் சுற்றின் வடகிழக்கு மூலையில் நடராசர் சந்நிதி அமைந்துள்ளது . கருவறை கோட்ட புடையும் பொழிலும் புனலுந் தழுவிப் பூமேல் திருமாமகன் புல்கி அமையங் கழசிப் பழக் கச்சூர் ஆலக் கோயில் அம்மானே . திருச்சிற்றம்பலம் ஆலவாய் அமுதன் மூர்த்திகளாக விநாயகர் தட்சினாமூர்த்தி திருமால் நான்முகன் மலைமகள் ஆகியோர் உள்ளனர் . வடக்கு வெளி வீதியில் கிழக்கு நோக்கிய முருகன் சந்நிதியும் விருந்திட்ட ஈசுவரர் சந்நிதியும் அமைந்திருக்கின்றன . விருந்திட்ட ஈசுவரர் சந்நிதிக்கு அருகே வடக்கு நோக்கிய சுந்தரர் சந்நிதியும் அமைந்துள்ளது . வடக்கு வெளி வீதியில் தெற்கு நோக்கிய பைரவர் சந்நிதியும் இருக்கிறது . இத்தலத்திலுள்ள இந்த பைரவர் சந்நிதி மிகவும் சிறப்பு வாய்ந்தது . இத்தலம் ஒரு திருப்புகழ் வைப்புத் தலம் . இங்கு முருகப் பெருமான் ஒரு முகமும் நான்கு திருக்கரங்களும் கொண்டு இரு தேவியருடன் எழுந்தருளியுள்ளார் . இத்தலமரமான ஆலமரம் மகம் விண்மீனுக்குரிய மரமாகும் ஆகவே மகம் விண்மீனில் பிறந்தவர்கள் இத்தல இறைவனை வழிபடுவது மிகவும் விசேடமானதாகும் . அது மட்டுமன்றி இத்தலம் ஆலக்கோயில் மருந்தீசர் கோயில் என இரண்டாகவும் பிரித்து போற்றப்படுகின்றன . திருக்கச்சூர் கோயிலின் இணைக்கோயிலான மலைக்கோயில் ஆலக்கோயிலில் இருந்து சுமார் 1 கி.மி. தொலைவில் அமைந்துள்ளது . இக்கோயிலில் குடிகொண்டிருக்கும் இறைவன் மருந்தீசுவரர் என்றும் இறைவி இருள்நீக்கிய அம்மை என்றும் அழைக்கப்படுகின்றனர் . நாமும் திருக்கச்சூர் மேவும் கச்சபேசுவரையும் மருந்துக்கோயில் மருந்தீசனையும் அவர்களருலாலே அவர் தாள் பணிந்து உய்வடைவோம் .