தென்னாடு கார்த்திகை திங்கள் இதழ் - 14

தென்னாடு நளி நல்லோரை கார்த்திகைத் திங்கள், 2021 தெ 08 கார்த்திகை நிறைமதி கார்த்திகை விண்மீனில் வரும் கார்த்திகைத் தீபம் பழந்தமிழர் பண்பாட்டுத் திருவிழா ஓம்நம சிவாய கார்த்திகைத் தீபம் அல்லது கார்த்திகை விளக்கீடு என்பது கார்த்திகை மாத நிறைமதியும், கார்த்திகை விண்மீனும் (நட்சத்திரமும்) சேர்ந்த திருக்கார்த்திகை நாளில் சைவத் தமிழர்கள் தமது இல்லங்களிலும் கோயில்களிலும் தீபங்களை ஏற்றி மகிழ்ச்சியாகக் கொண்டாடும் ஒரு தீபத் திருநாள் ஆகும். தமிழர்கள் எந்த விழாக் கொண்டாடாவிடினும் கண்டிப்பாகக் கொண்டாட வேண்டிய விழாக்களில் கார்த்திகைத் தீபம் முக்கியமானதொன்றாகும். கார்த்திகைத் தீபத் திருவிழா பழந்தமிழ் இலக்கியங்களில் பல்வேறு இடங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. "கார்த்திகை விளக்கீடு” என்ற சொல்லை முதலில் தமிழிலக்கியத்தில் பயன்படுத்தியவர் சம்பந்தர். மயிலையில் பூம்பாவையை உயிர்ப்பித்த பதிகத்தைப் பாடும் போது, விளக்கீடு காணாமல் போதியோ பூம்பாவாய் என்று பாடுகின்றார் அவர். பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான களவழி நாற்பது இதைக் “கார்த்திகைச் சாறு' (சாறு ஸ்ரீவிழா) என்று பாடியிருக்கிறது. திருவண்ணாமலை உச்சியில் கார்த்திகை விளக்கீடு கொண்டாடப்பட்டது பற்றி பற்றி சீவக சிந்தாமணி "குன்றில் கார்த்திகை விளக்கீட்டென்ன" என்று பாடுகிறது. இன்னும் தொல்காப்பியத்தில் வருகின்ற “வேலி நோக்கிய விளக்கு நிலையும்" (பொருளதிகாரம் புறத்திணையியல், 35) என்ற வரிகளுக்கு கார்த்திகை விளக்கு என்று விளக்கம் சொல்கிறார் நச்சினார்க்கினியர். இதெல்லாம் கார்த்திகை விளக்கீட்டின் பழைமையையும் புகழை விளக்கப் போதுமானவை. மழைகால் நீங்கிய மாக விசும்பில் குறுமுயல் மறுநிறம் கிளர, மதி நிறைந்து, அறுமீன் சேரும் அகல்இருள் நடுநாள்: மறுகுவிளக் குறுத்து, மாலை தூக்கிப், பழவிறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய 141-10 அகநானூற்றின் 141ஆம் பாடலில், கணவனைப் பிரிந்திருக்கும் தலைவி வானை நோக்குகிறாள். வானத்தில் மழையைக் காணவில்லை. முயல் என்று நாமெல்லாம் சொல்லும் களங்கம் நிலவில் பளிச்சிட்டுத் தெரிய, நிறைமதியில் கார்த்திகை நாண்மீன்கள் ஆறும் நெருங்குகிறது. எல்லோரும் விளக்கேற்றி வைத்து மாலை தூக்கி தோரணம் கட்டுகிறார்கள். என்னோடு இப்பொழுதைக் கொண்டாடவாவது அவர் வரவேண்டுமே" என்று பெருமூச்செறிகிறாள். முத்தொள்ளாயிரம் என்னும் நூலில், குடத்து விளக்கேபோல் கொம்பன்னார் காமம் புறப்படா பூந்தார் வழுதி - புறப்படின் ஆபுகும் மாலை அணிமலையில் தீயே போல் நாடறி கௌவை தரும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. சீவக சிந்தாமணி ஆசிரியர் திருத்தக்க தேவர் “குன்றிற் கார்த்திகை விளக்கீட்டென்ன” என்றும் பொய்கையார், கார் நாற்பதில் "கார்த்திகைச் சாற்றிற் கழி விளக்கைப் போன்றனவே" என்றும் கார்த்திகை தீபத்தைப் போற்றுவர். கார்த்திகை மாதத்தில் நிறைமதிக்கு அடுத்த நாள், அல்லது அதற்கு முன் பின்னான நாள், கார்த்திகை நாண்மீனாக இருந்து வருகிறது. அதனால் தான் இந்த மாதம் கார்த்திகை என்று பெயர் பெறுகிறது. கார் என்றால் இருள் என்றும் பொருள் படும். அதாவது மழை கூடிய மாதமாகும். இந்தக் கார்த்திகைத் திங்களில் வரும் கார்த்திகையில் விளக்கேற்றி வழிபாடுகளை நிகழ்த்துகிறோம். வீட்டுச்சுவர், மதில், திண்ணை என்பவற்றில் அகல் (சுட்டி) விளக்கேற்றியும், வீட்டு வாசல்கள், ஆலய முன்றல்களில் சொக்கப்பனை (சொக்கர் பாவனை) எரித்தும், வீட்டு வளவு முழுவதும் தற்காலிக ஈர்க்கு விளக்குகளை நட்டு ஒளிமயமாகக் கொண்டாடுகிறோம். மாலும் அயனும் தங்களுள் யார் பெரியவர் என்ற அகந்தையினால் எல்லாம்வல்ல பரம்பொருளின் அடி நுனியை தேடி கண்டுபிடிக்க முடியாமல் போனதை இதனை திருவாசகத்தில் மணிவாசகர் "மாலறியா நான்முகனும் காணா மலையினை” என்று விபரிக்கின்றார். இறுதியில் அவர்கள் சிவபெருமா முழுமுதற் கடவுள் என்பதை உணர்ந்தனர். அதன் பின்னர் எல்லாம் வல்ல சிவபரம்பொருள் சோதி வடிவில் அவர்களுக்கு காட்சியளித்த நாளே கார்த்திகை நிறைமதி திதியுடன் கூடிய கார்த்திகை நாண்மீனாகும். இது சிவன் மற்றும் முருகன் கோயில்களில் நிறைமதித் திதி கார்த்திகை நாண்மீனிலும், திருமால் பத்தர்கள் சகடு நாண்மீன் (இரோகிணி) அன்றும் வீடுகள் மற்றும் இடங்களில் நிறைமதித் திதியிலும் கொண்டாடப்படும். அண்ணாமலையாரின் கார்த்திகைத் தீபம் இத்தினத்தன்று அதிகாலையில் அண்ணாமலையார் சன்னதியில் ஒரு தீபம் ஏற்றி, அதன் மூலம் மேலும் ஐந்து தீபங்கள் ஏற்றி பூசைசெய்வர். பின்பு அந்த தீபங்களை ஒன்றாக்கி அண்ணாமலையார் அருகில் வைத்து விடுவர். இதனை, 'ஏகன் அநேகனாகி அநேகன் ஏகனாகுதல்’ தத்துவம் என்கிறார்கள். பரம்பொருளான சிவனே, பல வடிவங்களாக அருளுகிறார் என்பதே இந்நிகழ்ச்சியின் உட்கருத்தாகும். இதனையே சாத்திர நூலாகிய சிவஞான சித்தியார் பின்வருமாறு கூறுகிறது. யாதொரு தெய்வம் கண்டீர் அத்தெய்வமாகி ஆங்கே மாதொரு பாகனார் தாம் வருவார் பரணி தீபம் திருவிழாவின் பத்தாம் நாளாகிய கார்த்திகை மாத நிறைமதி திதியில் அடுப்பு அல்லது பரணி நாண்மீன் அன்று அதிகாலை 4.00 மணிக்கு, மூலவர் கருவறைமுன் மிகப்பெரிய கற்பூரக் கட்டியில் சோதி ஒளி ஏற்றி, தீபாராதனை காட்டி, அதில் ஒற்றை தீபம் ஏற்றுவார்கள். இந்த ஒற்றை நORAA அண்ணாமகலார் FRECCOTTON P நெய்த்தீபத்தால் நந்திமுன் வைக்கப்படும் ஐந்து பெரிய அகல் விளக்குகளை ஏற்றுவார்கள். அதன்பின் உண்ணாமுலை அம்மன் சந்நிதியிலும் ஐந்து பெரிய அகல் விளக்கில் தீபம் ஏற்றுவார்கள். இந்த பரணிதீபம் காலையில் நடக்கும். பரணி தீபம் ஏற்றப்பட்ட பிறகு, அதைக் கொண்டு ஐந்துமுக தீபம் ஏற்றப்படுகிறது. பரணி தீபத்தினை இறுதியாக பைரவர் சன்னதியில் வைக்கின்றனர். ஐந்து மடக்குகளும் (அகல் விளக்குகளும்) படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற ஐந்தொழில் புரியும் இறைவனின் ஐந்து திருமுகங்களைக் குறிக்கும். மகாதீபம் மகா தீபம் கார்த்திகைத் தீப திருவிழா நாளின் மாலையில், அண்ணாமலை மலையின் மீது ஏற்றப்படுகிறது. இம்மலை 2,668 அடி உயரமானதாகும். மாலை நேரத்தில் ஐந்து மூர்த்திகள் தீப மண்டபத்தில் எழுந்தருளுகின்றனர். அவர்களைத் தொடர்ந்து வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே காட்சிதருகின்ற மாதொருபாகனார் உற்வசக் கோலத்தில் தீப மண்டபத்திற்கு எடுத்து வரப்படுவார். அவர் முன்பு அகண்ட தீபம் ஏற்றப்படுகிறது. இத்தீபம் ஏற்றப்படுகின்ற அதே நேரத்தில், மலையில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. அண்ணா மலையெம் அண்ணா போற்றி கண்ணா ரமுதக் கடலே போற்றி - திருவாசகம் கார்த்திகை தீபத்தன்று மலைவலம்ஃகிரிவலம் வருதல் மிகவும் சிறப்பானது. அந்நாளில் வலம் வருதல் பாவவீடு நிச்சயம் பெற்றுத்தரும் மற்றும் ஊழ்வினைகளைப் போக்கும் என்பது நம்பிக்கை. சொக்கப்பனை ஃ சொக்கர் பாவனை சொக்கப்பனை கொளுத்துதல் என்பது சிவன்கோயில் மற்றும் முருகன் கோயில்களில் கார்த்திகை தீபத் திருவிழாவின் பொழுது நடைபெறும் நிகழ்வாகும். பனைமரத்தினை வெட்டி அதன் மரம் அல்லது சிலாகையை கோயிலின் முன்முற்றத்தில் நட்டு, அதில் சில அடி உயரத்திற்குப் பனை ஓலைகளைக் கூம்பு போன்று அமைத்து, அதில் எண்ணெய் இட்டு எரிக்கப்படும். இது சொக்கப்பனை அல்லது சொக்கர் பாவனை என்று அறியப்படுகிறது. கார்த்திகை தீபத்தன்று சிவன்கோயில் கோபுர உச்சியில் தீபம் ஏற்றி பின்னர் ஐந்து மூர்த்திகளுக்கு வழிபாடு நடத்தப்படுகிறது. அதன் பின் ஐந்து மூர்த்திகளையும் சொக்கப்பனை வைத்திருக்கும் இடத்திற்கு எடுத்து வந்து, மூர்த்திகளுக்குத் தீபாராதனை காட்டப்பெற்று, அந்தத் தீபச்சுடரால் சொக்கப்பனையைக் கொளுத்துகின்றார்கள். அனைத்து சைவத் தமிழர்களும் கண்டிப்பாக கொண்டாடவேண்டிய ஓர் பழந்தமிழ்ப் பண்பாட்டுத் திருவிழாவே கார்த்திகை நிறைமதியுடன் கூடிய கார்த்திகைத் தீபத்திருநாள் ஆகும். ஜம்பூதநாதர் போற்றி பாரிடை ஐந்தாய் பரந்தாய் போற்றி நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி தீயிடை மூன்றாய் திகழ்ந்தாய் போற்றி வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி அருக்கனில் சோதி அமைத்தாய் போற்றி வெண்மதி தண்ணொளி தந்தாய் போற்றி உயிருக்குள் உயிராய் நின்றாய் போற்றி ஆதியும் அந்தமும் இல்லாய் போற்றி ஓம் ஐம்பூதநாதரே போற்றி போற்றி தென்னவன் பார்த்தீபன்
தென்னாடு நளி நல்லோரை கார்த்திகைத் திங்கள் 2021 தெ 08 கார்த்திகை நிறைமதி கார்த்திகை விண்மீனில் வரும் கார்த்திகைத் தீபம் பழந்தமிழர் பண்பாட்டுத் திருவிழா ஓம்நம சிவாய கார்த்திகைத் தீபம் அல்லது கார்த்திகை விளக்கீடு என்பது கார்த்திகை மாத நிறைமதியும் கார்த்திகை விண்மீனும் ( நட்சத்திரமும் ) சேர்ந்த திருக்கார்த்திகை நாளில் சைவத் தமிழர்கள் தமது இல்லங்களிலும் கோயில்களிலும் தீபங்களை ஏற்றி மகிழ்ச்சியாகக் கொண்டாடும் ஒரு தீபத் திருநாள் ஆகும் . தமிழர்கள் எந்த விழாக் கொண்டாடாவிடினும் கண்டிப்பாகக் கொண்டாட வேண்டிய விழாக்களில் கார்த்திகைத் தீபம் முக்கியமானதொன்றாகும் . கார்த்திகைத் தீபத் திருவிழா பழந்தமிழ் இலக்கியங்களில் பல்வேறு இடங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது . கார்த்திகை விளக்கீடு என்ற சொல்லை முதலில் தமிழிலக்கியத்தில் பயன்படுத்தியவர் சம்பந்தர் . மயிலையில் பூம்பாவையை உயிர்ப்பித்த பதிகத்தைப் பாடும் போது விளக்கீடு காணாமல் போதியோ பூம்பாவாய் என்று பாடுகின்றார் அவர் . பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான களவழி நாற்பது இதைக் கார்த்திகைச் சாறு ' ( சாறு ஸ்ரீவிழா ) என்று பாடியிருக்கிறது . திருவண்ணாமலை உச்சியில் கார்த்திகை விளக்கீடு கொண்டாடப்பட்டது பற்றி பற்றி சீவக சிந்தாமணி குன்றில் கார்த்திகை விளக்கீட்டென்ன என்று பாடுகிறது . இன்னும் தொல்காப்பியத்தில் வருகின்ற வேலி நோக்கிய விளக்கு நிலையும் ( பொருளதிகாரம் புறத்திணையியல் 35 ) என்ற வரிகளுக்கு கார்த்திகை விளக்கு என்று விளக்கம் சொல்கிறார் நச்சினார்க்கினியர் . இதெல்லாம் கார்த்திகை விளக்கீட்டின் பழைமையையும் புகழை விளக்கப் போதுமானவை . மழைகால் நீங்கிய மாக விசும்பில் குறுமுயல் மறுநிறம் கிளர மதி நிறைந்து அறுமீன் சேரும் அகல்இருள் நடுநாள் : மறுகுவிளக் குறுத்து மாலை தூக்கிப் பழவிறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய 141-10 அகநானூற்றின் 141 ஆம் பாடலில் கணவனைப் பிரிந்திருக்கும் தலைவி வானை நோக்குகிறாள் . வானத்தில் மழையைக் காணவில்லை . முயல் என்று நாமெல்லாம் சொல்லும் களங்கம் நிலவில் பளிச்சிட்டுத் தெரிய நிறைமதியில் கார்த்திகை நாண்மீன்கள் ஆறும் நெருங்குகிறது . எல்லோரும் விளக்கேற்றி வைத்து மாலை தூக்கி தோரணம் கட்டுகிறார்கள் . என்னோடு இப்பொழுதைக் கொண்டாடவாவது அவர் வரவேண்டுமே என்று பெருமூச்செறிகிறாள் . முத்தொள்ளாயிரம் என்னும் நூலில் குடத்து விளக்கேபோல் கொம்பன்னார் காமம் புறப்படா பூந்தார் வழுதி - புறப்படின் ஆபுகும் மாலை அணிமலையில் தீயே போல் நாடறி கௌவை தரும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது . சீவக சிந்தாமணி ஆசிரியர் திருத்தக்க தேவர் குன்றிற் கார்த்திகை விளக்கீட்டென்ன என்றும் பொய்கையார் கார் நாற்பதில் கார்த்திகைச் சாற்றிற் கழி விளக்கைப் போன்றனவே என்றும் கார்த்திகை தீபத்தைப் போற்றுவர் . கார்த்திகை மாதத்தில் நிறைமதிக்கு அடுத்த நாள் அல்லது அதற்கு முன் பின்னான நாள் கார்த்திகை நாண்மீனாக இருந்து வருகிறது . அதனால் தான் இந்த மாதம் கார்த்திகை என்று பெயர் பெறுகிறது . கார் என்றால் இருள் என்றும் பொருள் படும் . அதாவது மழை கூடிய மாதமாகும் . இந்தக் கார்த்திகைத் திங்களில் வரும் கார்த்திகையில் விளக்கேற்றி வழிபாடுகளை நிகழ்த்துகிறோம் . வீட்டுச்சுவர் மதில் திண்ணை என்பவற்றில் அகல் ( சுட்டி ) விளக்கேற்றியும் வீட்டு வாசல்கள் ஆலய முன்றல்களில் சொக்கப்பனை ( சொக்கர் பாவனை ) எரித்தும் வீட்டு வளவு முழுவதும் தற்காலிக ஈர்க்கு விளக்குகளை நட்டு ஒளிமயமாகக் கொண்டாடுகிறோம் . மாலும் அயனும் தங்களுள் யார் பெரியவர் என்ற அகந்தையினால் எல்லாம்வல்ல பரம்பொருளின் அடி நுனியை தேடி கண்டுபிடிக்க முடியாமல் போனதை இதனை திருவாசகத்தில் மணிவாசகர் மாலறியா நான்முகனும் காணா மலையினை என்று விபரிக்கின்றார் . இறுதியில் அவர்கள் சிவபெருமா முழுமுதற் கடவுள் என்பதை உணர்ந்தனர் . அதன் பின்னர் எல்லாம் வல்ல சிவபரம்பொருள் சோதி வடிவில் அவர்களுக்கு காட்சியளித்த நாளே கார்த்திகை நிறைமதி திதியுடன் கூடிய கார்த்திகை நாண்மீனாகும் . இது சிவன் மற்றும் முருகன் கோயில்களில் நிறைமதித் திதி கார்த்திகை நாண்மீனிலும் திருமால் பத்தர்கள் சகடு நாண்மீன் ( இரோகிணி ) அன்றும் வீடுகள் மற்றும் இடங்களில் நிறைமதித் திதியிலும் கொண்டாடப்படும் . அண்ணாமலையாரின் கார்த்திகைத் தீபம் இத்தினத்தன்று அதிகாலையில் அண்ணாமலையார் சன்னதியில் ஒரு தீபம் ஏற்றி அதன் மூலம் மேலும் ஐந்து தீபங்கள் ஏற்றி பூசைசெய்வர் . பின்பு அந்த தீபங்களை ஒன்றாக்கி அண்ணாமலையார் அருகில் வைத்து விடுவர் . இதனை ' ஏகன் அநேகனாகி அநேகன் ஏகனாகுதல் தத்துவம் என்கிறார்கள் . பரம்பொருளான சிவனே பல வடிவங்களாக அருளுகிறார் என்பதே இந்நிகழ்ச்சியின் உட்கருத்தாகும் . இதனையே சாத்திர நூலாகிய சிவஞான சித்தியார் பின்வருமாறு கூறுகிறது . யாதொரு தெய்வம் கண்டீர் அத்தெய்வமாகி ஆங்கே மாதொரு பாகனார் தாம் வருவார் பரணி தீபம் திருவிழாவின் பத்தாம் நாளாகிய கார்த்திகை மாத நிறைமதி திதியில் அடுப்பு அல்லது பரணி நாண்மீன் அன்று அதிகாலை 4.00 மணிக்கு மூலவர் கருவறைமுன் மிகப்பெரிய கற்பூரக் கட்டியில் சோதி ஒளி ஏற்றி தீபாராதனை காட்டி அதில் ஒற்றை தீபம் ஏற்றுவார்கள் . இந்த ஒற்றை ORAA அண்ணாமகலார் FRECCOTTON P நெய்த்தீபத்தால் நந்திமுன் வைக்கப்படும் ஐந்து பெரிய அகல் விளக்குகளை ஏற்றுவார்கள் . அதன்பின் உண்ணாமுலை அம்மன் சந்நிதியிலும் ஐந்து பெரிய அகல் விளக்கில் தீபம் ஏற்றுவார்கள் . இந்த பரணிதீபம் காலையில் நடக்கும் . பரணி தீபம் ஏற்றப்பட்ட பிறகு அதைக் கொண்டு ஐந்துமுக தீபம் ஏற்றப்படுகிறது . பரணி தீபத்தினை இறுதியாக பைரவர் சன்னதியில் வைக்கின்றனர் . ஐந்து மடக்குகளும் ( அகல் விளக்குகளும் ) படைத்தல் காத்தல் அழித்தல் மறைத்தல் அருளல் என்ற ஐந்தொழில் புரியும் இறைவனின் ஐந்து திருமுகங்களைக் குறிக்கும் . மகாதீபம் மகா தீபம் கார்த்திகைத் தீப திருவிழா நாளின் மாலையில் அண்ணாமலை மலையின் மீது ஏற்றப்படுகிறது . இம்மலை 2 அடி உயரமானதாகும் . மாலை நேரத்தில் ஐந்து மூர்த்திகள் தீப மண்டபத்தில் எழுந்தருளுகின்றனர் . அவர்களைத் தொடர்ந்து வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே காட்சிதருகின்ற மாதொருபாகனார் உற்வசக் கோலத்தில் தீப மண்டபத்திற்கு எடுத்து வரப்படுவார் . அவர் முன்பு அகண்ட தீபம் ஏற்றப்படுகிறது . இத்தீபம் ஏற்றப்படுகின்ற அதே நேரத்தில் மலையில் மகாதீபம் ஏற்றப்படுகிறது . அண்ணா மலையெம் அண்ணா போற்றி கண்ணா ரமுதக் கடலே போற்றி - திருவாசகம் கார்த்திகை தீபத்தன்று மலைவலம்ஃகிரிவலம் வருதல் மிகவும் சிறப்பானது . அந்நாளில் வலம் வருதல் பாவவீடு நிச்சயம் பெற்றுத்தரும் மற்றும் ஊழ்வினைகளைப் போக்கும் என்பது நம்பிக்கை . சொக்கப்பனை சொக்கர் பாவனை சொக்கப்பனை கொளுத்துதல் என்பது சிவன்கோயில் மற்றும் முருகன் கோயில்களில் கார்த்திகை தீபத் திருவிழாவின் பொழுது நடைபெறும் நிகழ்வாகும் . பனைமரத்தினை வெட்டி அதன் மரம் அல்லது சிலாகையை கோயிலின் முன்முற்றத்தில் நட்டு அதில் சில அடி உயரத்திற்குப் பனை ஓலைகளைக் கூம்பு போன்று அமைத்து அதில் எண்ணெய் இட்டு எரிக்கப்படும் . இது சொக்கப்பனை அல்லது சொக்கர் பாவனை என்று அறியப்படுகிறது . கார்த்திகை தீபத்தன்று சிவன்கோயில் கோபுர உச்சியில் தீபம் ஏற்றி பின்னர் ஐந்து மூர்த்திகளுக்கு வழிபாடு நடத்தப்படுகிறது . அதன் பின் ஐந்து மூர்த்திகளையும் சொக்கப்பனை வைத்திருக்கும் இடத்திற்கு எடுத்து வந்து மூர்த்திகளுக்குத் தீபாராதனை காட்டப்பெற்று அந்தத் தீபச்சுடரால் சொக்கப்பனையைக் கொளுத்துகின்றார்கள் . அனைத்து சைவத் தமிழர்களும் கண்டிப்பாக கொண்டாடவேண்டிய ஓர் பழந்தமிழ்ப் பண்பாட்டுத் திருவிழாவே கார்த்திகை நிறைமதியுடன் கூடிய கார்த்திகைத் தீபத்திருநாள் ஆகும் . ஜம்பூதநாதர் போற்றி பாரிடை ஐந்தாய் பரந்தாய் போற்றி நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி தீயிடை மூன்றாய் திகழ்ந்தாய் போற்றி வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி அருக்கனில் சோதி அமைத்தாய் போற்றி வெண்மதி தண்ணொளி தந்தாய் போற்றி உயிருக்குள் உயிராய் நின்றாய் போற்றி ஆதியும் அந்தமும் இல்லாய் போற்றி ஓம் ஐம்பூதநாதரே போற்றி போற்றி தென்னவன் பார்த்தீபன்