தென்னாடு மார்கழித் திங்கள் இதழ் - 15

தெ 10 தென்னாடு சிலை நல்லோரை மார்கழித் திங்கள், 2021 தேடி - சிவபூமியில் சிவனைத் திருகோணமலை திருக்கரசையில் நாகர் அமைத்த, திருக்கரசையம்பதி திருமங்கலாய் சிவன்கோயில் திருகோணமலை கிழக்கிலங்கையில் சைவப்பூமியின் மகுடமாகப் போற்றப்படும் திருகோணமலை மாவட்டம், பாரததேசத்து புராண இதிகாசக் கதை வரலாறுகளிலும், தேவாரப்பாடல் களிலும், குளக்கோட்டன், கஜபாகு ஆகிய மாமன்னர்களின் திருப்பணிகளிலும் புகழ்ந்து பேசப்படும் புண்ணிய பூமியாகும். 'தமிழ்விரகர்' என்று சிறப்பிக்கப்படும் திருஞானசம்பந்தக் குரவரால் "குரைகடலோத நித்திலம் கொழிக்கும்" என்றும், "குடிதனை நெருக்கி பெருக்கமாய் தோன்றும்” என்றும், "கோயிலும் சுனையும் கடலுடன் சூழ்ந்த" என்றும் கோணமாமலையான் பள்ளி கொள்ளும் திருவூர் என்றும் சைவ உலகிற்கு அறிமுகம் செய்து வைத்த பேறுபெற்றேகிய சுவாமிமலை திருகோணமலையாகும். திருகோணமலை மாவட்டம் மிகக் குறுகிய நிலப்பரப்பைக் கொண்டது. ஐரோப்பியர் ஆவணங்களின்படி, அது நான்கு வன்னிப் பிரிவுகளாக நிர்வாக ரீதியில் இயங்கிவந்தாலும், இந் நான்கு பிரிவுகளும் பற்றுக்கள், தேசங்கள் என்று சுட்டப்பட்டு வந்துள்ளன. அவை திருகோணமலைப்பற்று, கட்டுக்குளப்பற்று, கொட்டியாரப்பற்று, தம்பலகாமப்பற்று என்பனவாகும். இப்பற்றுக்களில் சைவமும் தமிழம் தளைத்தோங்கும் முகமாக பத்துக்கு மேற்பட்ட சிவன் கோயில்கள் காணப்படுகின்றமையே இத்தேசத்தைச் சிவபூமி என்று போற்றுவதற்குத் தக்க சான்றாகும். அதேவேளை தேசத்துக் கோயிலின் உற்பத்தி மரபொன்று திருக் கோணேசுவரம், வெருகல் சித்திர வேலாயுதர் கோயில் என்பவற்றோடும் தொடங்குவதும் கவனிக்கத்தக்கது. திருவூர்ச் சிறப்பு திருக்கோணேச்சரத்தை அதிகார மையமாகக் கொண்டு விளங்கியது கொட்டியாபுரப்பற்று ஆகும். இப்பற்று மகாவலி ஆற்றினாலும், அதனால் வளம் பெற்ற இயற்கையான காடு களாலும், வன விலங்குகளாலும் சூழப்பெற்ற பிரதேசமாகும். இப்பிரதேசத்தில் சிவன்கோயில்கள் பல இருந்ததாகவும், அகத்திய மாமுனிவர் நிலைப்படுத்திய சிவலிங்கம் இருந்ததாகவும், தவம், பூசை, தைத்த திங்களில் புண்ணிய தீர்த்தமாடுதல், ஆடிமறைமதியில் தீர்த்தமாடி வழிபடுதல் மற்றும் தமிழ்க் குறுநில மன்னர்கள், குறிப்பாக மணிணாகன் பரம்பரை இருந்ததாகவும், அங்கு கிடைத்துள்ள கல்வெட்டுச் சாசனங்களும், பல தொல்பொருட்சின்னங்களும், தற்போது பதிப்புவடிவில் இருக்கின்ற திருக்கரைசைப்புராண இலக்கிய மும் பல வரலாற்றுச் செய்திகளைத் தந்து கொண்டிருக்கின்றன. திருகோணமலையின் கொட்டியாபுரப்பற்றிலுள்ள கிளிவெட்டியிலிருந்து சுமார் 8 கிலோமீற்றர் தூரத்தில் நடுவனத்தில் குடிகளின் புழக்கம் இன்றி அமைதியான சூழலில் திருமங்கலாய் சிவன் கோயில் அமைந்துள்ளது. கங்குவேலிச் சிவன் கோயிலின் வரலாற்றில் இக்கோயிலுக்குச் செல்லும் காட்டுவழிப்பாதையொன்றும் கூறப்பட்டுள்ளது. தேவாரப்பாடல் பெற்ற திருக்கோணேசுவரம், திருக்கேதீச்சு வரம் ஆகிய தலங்களுக்கு முன்பே திருமங்கலாயின் திருக்கரசை எனும் இடத்திலுள்ள சிவாலயங்கள் சுமார் 2000 வருடங்களுக்கு முற்பட்ட தொல் பொருட்சின்னங்களைக் கொண்டமைந்தது என்று பேராசிரியர் சி. பத்மநாதன் அவர்கள் ‘இலங்கைத் தமிழர் வரலாறு கிழக்கிலங்கையில் நாகரும் தமிழும்' என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். திருக்கோயில்ச் சிறப்பு இந்த சிவன்கோயில் பற்றி திருமலைப்பிரதேசத்தைச் சேர்ந்த இருவர் சிறு கட்டுரையாக்கம் ஒன்றைச் செய்துள்ளனர். அவர்களில் பண்டிதர் இ. வடிவேல் எழுதிய 'திருகோணமலை மாவட்ட திருத்தலங்கள்' என்ற நூலில் திருமங்கலாய் சிவன் கோயில் பற்றி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். "தற்போது இந்த ஆலயம் அழிந்த நிலையில் இருக்கின்றது. கருப்பக்கிருகம் சிதைந்துவிட்டது. அர்த்தமண்டபம் சிதைத்த நிலையில் பாதுகாக்கப்பட்டிருக்கின்றது. மகாமண்டபமும், மற்றும் ஆலயக்கட்டிடங்களும் அத்திவாரமட்டத்தில் சிதைந்து மண்ணில் மறைந்து கிடக்கின்றன." மேலும் அவர் இங்குள்ள திருமங்கலாய் சிவனின் பெயர் கந்தலிங்கேசுவரர் என்றும் மகாவலி ஆற்றில் ஆடிமறை மதியிலும், தைத் திங்களிலும் தீர்த்தமாடி வழிபட்டு, திருக்கரைசைப்புராணப்படிப்பும் நடைபெற்று வந்ததென்றும், மகாவலி ஆற்றின் பெருக்கால் இக்கோயில் அழிந்து காடாகி மூடிவிட்டது என்றும், இங்குள்ள திருவுருவங்கள் மூதூ ரிலுள்ள பிள்ளையார் கோயிலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மற்றவர் திருமலையைச் சேர்ந்த வைத்திய கலாநிதி அ. ஸதீஸ்குமார். அவர்கள் அகில இலங்கை இந்துமாமன் றத்தின் வைரவிழா மலரில், பண்டிதர் இ.வடிவேல் ஐயாவின் குறிப்புக்களை ஆதாரம் காட்டி இக்கோயில் ஆய்வு செய்யப் பட வேண்டும். மீள்வழிபாடு செய்யும் பொருட்டு புதுப்பிக்கப் பட வேண்டும் என்ற ஆவலை முன்வைத்திருந்தார். இத்தலத்தைப் பற்றிய ஓர் புதிய அத்தியாய வரலாற்றைத் தொல்லியல் ஆய்வுகள் மூலம் பேராசிரியர் சி. பத்மநாதன் அவர்கள்" இலங்கைத் தமிழர் வரவாறு- கிழக்கிலங்கையில் நாகரும் தமிழும்" என்ற நூலில் 'திருக்கரசையில் நாகர் திருக்கூரகை ணிதிேல St B அமைத்த கோயில்' என்ற தலைப்பில் தன் ஆய்வு அனுபவ ஆக்கத்தினை எழுதியுள்ளார். இதுவரைகாலம் இத்தலம் பற்றிய தொல்லியல் ஆய்வுகள் முன்னெடுக்கப்படவில்லை என்ற ஆதங்கம் இவருடைய ஆய்வுகளினாலும், பேராசிரியர் தமிழர்மீதும் சைவத்தின் மீதும் கொண்ட பேரார்வத்தாலும் தீர்த்து வைக்கப்பட்டுள்ளது. இலங்கையின் பழமைக் குடிகள் என்று கூறப்படும் நாகர் வம்சத்தினர் வாழ்ந்த இடமாக திருக்கரசை விளங்கியுள்ளது. அதுமட்டுமன்றி அவர்கள் மிகுந்த பலமும் வளமும், சமயப்பற்றும் கொண்டவர்களாக பல தலைமுறைகளாக ஆட்சிபுரிந்துள்ளார்கள் என்பது அங்கு கிடைத்துள்ள ஏராளமான தொல்பொருட்சின்னங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. திருக்கரசையில் சிவன்கோயில் உருவாக்கப்படுவதற்கு முன்பு, நாகவழிபாட்டுத் தலம் ஒன்று இருந்தமையை அங்கு கிடைத்துள்ள நாகவழிபாட்டுச் சின்னங்கள் மூலமாக அறியமுடிகின்றது. இதே போல நாகர்கள் ஆட்சிபுரிந்த அம்பாறை (காரைதீவு), கந்தரோடை, மாவிட்டபுரம் போன்ற இடங்களில் காணப்படும் நாகச்சின்னாங்களும் இதற்குத் தக்க சான்றுகளாகும். திருக்கரசையில் கிடைத்துள்ள வெள்ளை நிறமான அரைவட்டக் கல்லில் ‘மணிணாகன் பள்ளி' என்ற பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. “அது கி.பி 2 ஆம் நூற்றாண்டுக்கு உரியது என்றும், நாகர் திருக்கரசையில் அமைத்த சிவன் கோயிலுக்குரியது என்றும் கொள்ளலாம்” என்று பேராசிரியர் குறிப்படுகின்றார். இங்கு ‘மணிணாகன்’ என்ற பெயர் சைவசமயக் கடவுளின் பெயராகவும், அதேவேளை நாக மன்னர்களுக்குச் சூட்டப்பட்ட பெயராகவும் இருந்துள்ளது. இதற்குச் சான்றாக அக்காட்டினுள் மறைந்து கிடக்கின்ற கோயிலின் இடிபாடுகளுடைய பல வகையான தூண்கள் காணப்படுகின்றன. அவற்றின் சில தூண்களில் சிவனின் திரிசூலக் குறி பொறிக்கப்பட்டுள்ளது. மற்றும் இன்னுமோர் துணொன்றில் மூன்று நாக மன்னர்களின் பட்டப் பெயர்கள் "வேள்ணாகனின் மகன் வேள் கண்ணன், வேள் கண்ணனின் மகன் வேள் நாகன்” என்று குறிப்பிடப்படுவதில் இருந்து நாகமன்னர்களுக்கும் சைவத்துக்கும் இடையில் தொடர்புகள் இருப்பதை அறிந்து கொள்வதோடு திருக்கரசையில் உருவான சிவன் கோயில் அவர்களால் உருவாக்கப்பட்டு வழிபடப்பட்டு வந்துள்ளது என்பதையும் உணர முடிகின்றது. இவ்விபரங்களை பேராசிரியர் தனது நூலில் இவ்வாறு குறிப்பிடுகின்றார். "சிவாலயம் அமைக்கப்படுவதற்கு முன்பு திருக்கரசை நாக வழிபாட்டுத் தலமாக விளங்கியதென்று கொள்ளமுடி கின்றது. நாக வழிபாட்டுச் சின்னங்களான கற்கள் சிலவும் இங்கு கிடைத்துள்ளன. ஆதியில் நாகவழிபாட்டினரான நாகர் காலப்போக்கில் சைவசமயத்தைப் பின்பற்ற முற்பட்டமைக்கும் இங்குள்ள தொல்லியற்சான்றுகள் ஆதாரமாகும். இருப்பினும் சைவசமயக் கடவுளரை அவர்கள் மணிணாகன் என்ற பெயராற் குறிப்பிட்டமை இவற்றினாற் புலனாகின்றது. இது பொது வழமையாகிவிட்டது என்பதை யாழ்ப்பாணத்திலும் வன்னியிலு முள்ள கல்வெட்டுப் பொறித்த பல சின்னங்கள் மூலமாக அறியமுடிகின்றது" இங்கு கிடைத்துள்ள தொல்பொருட் சின்னங்கள் எல்லாம் ஏறத்தாள 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டது எனக் கூறும் பேராசிரியர், தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட, குறிப்பாக 'மணிணாகன்' என்னும் பெயர் பொறிக்கப்பட்ட நந்தியின் கல்லுருவம் அங்கு இருந்ததாகவும், அது தற்போது அங்கில்லை என்றும் குறிப்பிடும் அவர், மற்றும் அங்கு கிடைத்துள்ள சிவலிங்க வடிவம் மிகவும் தொன்மையானது அதன் நடுப்பகுதியில் "மணிணாகன்" என்ற பெயர் பொறிக்கப்பட்டிருப்பதையும் அவதானித்து, "தென்னாசியா விலே கிடைக்கின்ற மிகவும் புராதனமான சிவலிங்கங்களில் இதுவும் ஒன்றாகும்" என்கின்றார். ஆகவே இங்குள்ள நந்தியும் சிவலிங்கமும் ஒருகாலத்தவை ஆகையால் அவ்விரண்டும் ஒரே கோயிலுக்குரியவை என்றும், தனது நூலில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். "கோயிலின் உடையாரையும், நந்தியினையும் மணிணாகன் என்று பெயரிட்டுள்ளமை புதுமையானது. இது தென்னிந் Extasone சைவப்புலவர் சுந்தரமூர்த்தி துஷ்யந்த் கலைபாணி முதுகலைமாணி, பிரான்சு G73 Smok má (megrond) Put ada makani தியப் பண்பாட்டு மரபிலும் ஈழத்து சைவசமய வரலாற்றிலும் இதுவரை வெளிவரதை விடயமாகும்." திருக்கோயில் வரலாறு திருகோணமலையின் தலச்சிறப்பினை எடுத்தோதும் புராணங்களில் தட்சிணகைலாச புராணம், திருக்கரசை புராணம், திருகோணாசல புராணம் ஆகிய மூன்றும் தனிச்சிறப்புப் பெற்றவை. இவற்றுள் திருக்கரசை புராணம் திருமங்கலாய் சிவன் மீது பாடப்பட்ட தலமாபுராணமாகும். இதன் நூலாசிரியர் பற்றியும் இது உருவான காலம் பற்றியும் உறுதியாகக் கூறுவதற்கு ஆதாரங்கள் இதுவரை கிடைக்க வில்லை. இன்றும் இப்புராணம் கொட்டியாபுரப்பற்றிலுள்ள பல சைவக்கோயில்களில் பாராயணம் செய்யப்பட்டும் வருகின்றது. இந்நூல் திருமங்கலாய் சிவன் கோயில் வரலாற்று டனும், அதன் அருகாமையில் உள்ள அகத்தியர் நிலைப்படுத் திய கோயிலுடனும் தொடர்புபட்டது. இப்புராணத்தில் நான்கு சருக்கங்கள் உள்ளன. கங்கை, தாபனம், பூசை ஆகிய சருக்கங்களிலே சூரியகுலத்தில் உதித்த அயோத்திபுர அரன் சிங்கபுயன் ஈழத்தீவை வந்தடைபோது, அக்காலத்தில் திருமங்கலாயில் இருந்தவாறு ஆட்சி புரிந்த எழில்வேந்தன் எனும் மன்னனின் மகளாகிய திருமங்கை என்பவளை சிங்கபுயன் மணம் முடித்து, இவ்விடத்தையும் ஆட்சிபுரிந்து, இங்கு ஒரு சிவன் கோயிலும் கட்டி பூசை புரிந்து வழிபட்டனர். அதனால் திருமங்கலாய் சிவன் கோயில் என வழங்கப்பட லானது. பின்பு அகத்திய முனிவர் அமைத்த கோயிலையும் புதுப்பித்து பூசை புரிந்ததாக கூறப்படுகின்றது. ஆகவே ஆரம்ப காலத்தில் திருக்கரைசயம் பதியில் இரு சிவன்கோயில்கள் மன்னர் ஆதரவுகளுடன், பூசை வழிபாடு களுடன், சிறப்புடன் நல்நிலையில் இருந்துள்ளதை அங்கு கிடைத்துள்ள தொல்லியல் கூன்றுகளும், திருக்கரசை புராணமும் எடுத்துக் கூறுகின்றன. இவ்விரு சிவன்கோயில் களும் ஈழத்தின் பழமையானவையாகக் கொள்ளப்படுகின்றன. தற்போது இவ்வாலயத்தின் முழுமையை எம் கண்ணால் கண்டு தரிசிக்க முடியாத அவல நிலைக்குள்ளாகியுள்ளோம். இக்கோயில்கள் முற்றாகச் சிதைவடைந்து அதன் ஏராளமான பாகங்கள் காடாலும் புற்களாலும், மண்ணலும் மூடப்பட்டு மெல்ல மெல்ல இறந்து கொண்டு வருவதை சைவர்கள் யாவரும் உணர வேண்டும். மீண்டும் உயிர்ப்புடன் இக்கோயில்கள் புதுப்பிக்கப்பட்டு தமிழ் வேதாகம மந்திரப் பாடல்களோடும் பூசை வழிபாடுகளோடும் சுவாமிமலையில் தளைத்தோங்க திருமலைச் சைவச்சான்றோர்கள், இளைஞர்கள் முன்வரல் வேண்டும். இந்நிலையில், திருமலை -உவர்மலை விவேகானந்தா கல்லூரியில், சிவத்திரு. திருவம்பலம் தென்னவன் ( கொக்குவில் தென்னாடு செந்தமிழாகம சிவமடத்தினுடைய நிறுவுனர்) அவர்களின் நிதி அன்பளிப்பிலே, 'ஈழத்து உத்தரகோசமங்கை' என்றழைக்கப்படும் அருள்மிகு உவர்மலை மங்களநாதர் திருக்கோயில் (உலகின் முதலாவது சிவன் கோயில் என்று எல்லோராலும் அறியப்பட்ட, தென்னிந்தியா வில் இராமநாதபுரத்திலுள்ள உத்தரகோசமங்கையை ஒத்த அமைப்பை உடையது.) கட்டப்பட்டு, சென்ற கார்த்திகைத் திங்கள் 13ம் நாள் (நவம்பர் 27), சிவத்திரு. குருநாதன் உமையொருசிவம் நிகரிலரசு ஐயா அவர்களினால், திருக்குடமுழுக்குச் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது ஆகும். இதில் முக்கியமானது, மங்களநாதர் குடமுழுக்கின் போது, மாணவர்கள்,ஆசிரியர்கள் என 128 பேர் நுழைவு தீக்கை தீக்கை) பெற்றிருந்தனர். இது திருமலை மண்ணில் சைவத்தமிழ் வாசம் இன்னும் வீசுகின்றது என்பதை பறைசாற்றுகின்றது. "மேரு நடுநாடி மிக்கிடை, பிங்கலை கூறுமிவ் வானின் இலங்கைக் குறியுறுஞ் சாரும் திலை வனத்து தண்மா மலையத் தூடு ஏறுஞ் சுழமுனை இவை சிவபூமியே" (திருமந்திரம். 2701ஆம் பாடல்) திருச்சிற்றம்பலம்
தெ 10 தென்னாடு சிலை நல்லோரை மார்கழித் திங்கள் 2021 தேடி - சிவபூமியில் சிவனைத் திருகோணமலை திருக்கரசையில் நாகர் அமைத்த திருக்கரசையம்பதி திருமங்கலாய் சிவன்கோயில் திருகோணமலை கிழக்கிலங்கையில் சைவப்பூமியின் மகுடமாகப் போற்றப்படும் திருகோணமலை மாவட்டம் பாரததேசத்து புராண இதிகாசக் கதை வரலாறுகளிலும் தேவாரப்பாடல் களிலும் குளக்கோட்டன் கஜபாகு ஆகிய மாமன்னர்களின் திருப்பணிகளிலும் புகழ்ந்து பேசப்படும் புண்ணிய பூமியாகும் . ' தமிழ்விரகர் ' என்று சிறப்பிக்கப்படும் திருஞானசம்பந்தக் குரவரால் குரைகடலோத நித்திலம் கொழிக்கும் என்றும் குடிதனை நெருக்கி பெருக்கமாய் தோன்றும் என்றும் கோயிலும் சுனையும் கடலுடன் சூழ்ந்த என்றும் கோணமாமலையான் பள்ளி கொள்ளும் திருவூர் என்றும் சைவ உலகிற்கு அறிமுகம் செய்து வைத்த பேறுபெற்றேகிய சுவாமிமலை திருகோணமலையாகும் . திருகோணமலை மாவட்டம் மிகக் குறுகிய நிலப்பரப்பைக் கொண்டது . ஐரோப்பியர் ஆவணங்களின்படி அது நான்கு வன்னிப் பிரிவுகளாக நிர்வாக ரீதியில் இயங்கிவந்தாலும் இந் நான்கு பிரிவுகளும் பற்றுக்கள் தேசங்கள் என்று சுட்டப்பட்டு வந்துள்ளன . அவை திருகோணமலைப்பற்று கட்டுக்குளப்பற்று கொட்டியாரப்பற்று தம்பலகாமப்பற்று என்பனவாகும் . இப்பற்றுக்களில் சைவமும் தமிழம் தளைத்தோங்கும் முகமாக பத்துக்கு மேற்பட்ட சிவன் கோயில்கள் காணப்படுகின்றமையே இத்தேசத்தைச் சிவபூமி என்று போற்றுவதற்குத் தக்க சான்றாகும் . அதேவேளை தேசத்துக் கோயிலின் உற்பத்தி மரபொன்று திருக் கோணேசுவரம் வெருகல் சித்திர வேலாயுதர் கோயில் என்பவற்றோடும் தொடங்குவதும் கவனிக்கத்தக்கது . திருவூர்ச் சிறப்பு திருக்கோணேச்சரத்தை அதிகார மையமாகக் கொண்டு விளங்கியது கொட்டியாபுரப்பற்று ஆகும் . இப்பற்று மகாவலி ஆற்றினாலும் அதனால் வளம் பெற்ற இயற்கையான காடு களாலும் வன விலங்குகளாலும் சூழப்பெற்ற பிரதேசமாகும் . இப்பிரதேசத்தில் சிவன்கோயில்கள் பல இருந்ததாகவும் அகத்திய மாமுனிவர் நிலைப்படுத்திய சிவலிங்கம் இருந்ததாகவும் தவம் பூசை தைத்த திங்களில் புண்ணிய தீர்த்தமாடுதல் ஆடிமறைமதியில் தீர்த்தமாடி வழிபடுதல் மற்றும் தமிழ்க் குறுநில மன்னர்கள் குறிப்பாக மணிணாகன் பரம்பரை இருந்ததாகவும் அங்கு கிடைத்துள்ள கல்வெட்டுச் சாசனங்களும் பல தொல்பொருட்சின்னங்களும் தற்போது பதிப்புவடிவில் இருக்கின்ற திருக்கரைசைப்புராண இலக்கிய மும் பல வரலாற்றுச் செய்திகளைத் தந்து கொண்டிருக்கின்றன . திருகோணமலையின் கொட்டியாபுரப்பற்றிலுள்ள கிளிவெட்டியிலிருந்து சுமார் 8 கிலோமீற்றர் தூரத்தில் நடுவனத்தில் குடிகளின் புழக்கம் இன்றி அமைதியான சூழலில் திருமங்கலாய் சிவன் கோயில் அமைந்துள்ளது . கங்குவேலிச் சிவன் கோயிலின் வரலாற்றில் இக்கோயிலுக்குச் செல்லும் காட்டுவழிப்பாதையொன்றும் கூறப்பட்டுள்ளது . தேவாரப்பாடல் பெற்ற திருக்கோணேசுவரம் திருக்கேதீச்சு வரம் ஆகிய தலங்களுக்கு முன்பே திருமங்கலாயின் திருக்கரசை எனும் இடத்திலுள்ள சிவாலயங்கள் சுமார் 2000 வருடங்களுக்கு முற்பட்ட தொல் பொருட்சின்னங்களைக் கொண்டமைந்தது என்று பேராசிரியர் சி . பத்மநாதன் அவர்கள் இலங்கைத் தமிழர் வரலாறு கிழக்கிலங்கையில் நாகரும் தமிழும் ' என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார் . திருக்கோயில்ச் சிறப்பு இந்த சிவன்கோயில் பற்றி திருமலைப்பிரதேசத்தைச் சேர்ந்த இருவர் சிறு கட்டுரையாக்கம் ஒன்றைச் செய்துள்ளனர் . அவர்களில் பண்டிதர் . வடிவேல் எழுதிய ' திருகோணமலை மாவட்ட திருத்தலங்கள் ' என்ற நூலில் திருமங்கலாய் சிவன் கோயில் பற்றி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் . தற்போது இந்த ஆலயம் அழிந்த நிலையில் இருக்கின்றது . கருப்பக்கிருகம் சிதைந்துவிட்டது . அர்த்தமண்டபம் சிதைத்த நிலையில் பாதுகாக்கப்பட்டிருக்கின்றது . மகாமண்டபமும் மற்றும் ஆலயக்கட்டிடங்களும் அத்திவாரமட்டத்தில் சிதைந்து மண்ணில் மறைந்து கிடக்கின்றன . மேலும் அவர் இங்குள்ள திருமங்கலாய் சிவனின் பெயர் கந்தலிங்கேசுவரர் என்றும் மகாவலி ஆற்றில் ஆடிமறை மதியிலும் தைத் திங்களிலும் தீர்த்தமாடி வழிபட்டு திருக்கரைசைப்புராணப்படிப்பும் நடைபெற்று வந்ததென்றும் மகாவலி ஆற்றின் பெருக்கால் இக்கோயில் அழிந்து காடாகி மூடிவிட்டது என்றும் இங்குள்ள திருவுருவங்கள் மூதூ ரிலுள்ள பிள்ளையார் கோயிலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார் . மற்றவர் திருமலையைச் சேர்ந்த வைத்திய கலாநிதி . ஸதீஸ்குமார் . அவர்கள் அகில இலங்கை இந்துமாமன் றத்தின் வைரவிழா மலரில் பண்டிதர் இ.வடிவேல் ஐயாவின் குறிப்புக்களை ஆதாரம் காட்டி இக்கோயில் ஆய்வு செய்யப் பட வேண்டும் . மீள்வழிபாடு செய்யும் பொருட்டு புதுப்பிக்கப் பட வேண்டும் என்ற ஆவலை முன்வைத்திருந்தார் . இத்தலத்தைப் பற்றிய ஓர் புதிய அத்தியாய வரலாற்றைத் தொல்லியல் ஆய்வுகள் மூலம் பேராசிரியர் சி . பத்மநாதன் அவர்கள் இலங்கைத் தமிழர் வரவாறு- கிழக்கிலங்கையில் நாகரும் தமிழும் என்ற நூலில் ' திருக்கரசையில் நாகர் திருக்கூரகை ணிதிேல St B அமைத்த கோயில் ' என்ற தலைப்பில் தன் ஆய்வு அனுபவ ஆக்கத்தினை எழுதியுள்ளார் . இதுவரைகாலம் இத்தலம் பற்றிய தொல்லியல் ஆய்வுகள் முன்னெடுக்கப்படவில்லை என்ற ஆதங்கம் இவருடைய ஆய்வுகளினாலும் பேராசிரியர் தமிழர்மீதும் சைவத்தின் மீதும் கொண்ட பேரார்வத்தாலும் தீர்த்து வைக்கப்பட்டுள்ளது . இலங்கையின் பழமைக் குடிகள் என்று கூறப்படும் நாகர் வம்சத்தினர் வாழ்ந்த இடமாக திருக்கரசை விளங்கியுள்ளது . அதுமட்டுமன்றி அவர்கள் மிகுந்த பலமும் வளமும் சமயப்பற்றும் கொண்டவர்களாக பல தலைமுறைகளாக ஆட்சிபுரிந்துள்ளார்கள் என்பது அங்கு கிடைத்துள்ள ஏராளமான தொல்பொருட்சின்னங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது . திருக்கரசையில் சிவன்கோயில் உருவாக்கப்படுவதற்கு முன்பு நாகவழிபாட்டுத் தலம் ஒன்று இருந்தமையை அங்கு கிடைத்துள்ள நாகவழிபாட்டுச் சின்னங்கள் மூலமாக அறியமுடிகின்றது . இதே போல நாகர்கள் ஆட்சிபுரிந்த அம்பாறை ( காரைதீவு ) கந்தரோடை மாவிட்டபுரம் போன்ற இடங்களில் காணப்படும் நாகச்சின்னாங்களும் இதற்குத் தக்க சான்றுகளாகும் . திருக்கரசையில் கிடைத்துள்ள வெள்ளை நிறமான அரைவட்டக் கல்லில் மணிணாகன் பள்ளி ' என்ற பெயர் பொறிக்கப்பட்டுள்ளது . அது கி.பி 2 ஆம் நூற்றாண்டுக்கு உரியது என்றும் நாகர் திருக்கரசையில் அமைத்த சிவன் கோயிலுக்குரியது என்றும் கொள்ளலாம் என்று பேராசிரியர் குறிப்படுகின்றார் . இங்கு மணிணாகன் என்ற பெயர் சைவசமயக் கடவுளின் பெயராகவும் அதேவேளை நாக மன்னர்களுக்குச் சூட்டப்பட்ட பெயராகவும் இருந்துள்ளது . இதற்குச் சான்றாக அக்காட்டினுள் மறைந்து கிடக்கின்ற கோயிலின் இடிபாடுகளுடைய பல வகையான தூண்கள் காணப்படுகின்றன . அவற்றின் சில தூண்களில் சிவனின் திரிசூலக் குறி பொறிக்கப்பட்டுள்ளது . மற்றும் இன்னுமோர் துணொன்றில் மூன்று நாக மன்னர்களின் பட்டப் பெயர்கள் வேள்ணாகனின் மகன் வேள் கண்ணன் வேள் கண்ணனின் மகன் வேள் நாகன் என்று குறிப்பிடப்படுவதில் இருந்து நாகமன்னர்களுக்கும் சைவத்துக்கும் இடையில் தொடர்புகள் இருப்பதை அறிந்து கொள்வதோடு திருக்கரசையில் உருவான சிவன் கோயில் அவர்களால் உருவாக்கப்பட்டு வழிபடப்பட்டு வந்துள்ளது என்பதையும் உணர முடிகின்றது . இவ்விபரங்களை பேராசிரியர் தனது நூலில் இவ்வாறு குறிப்பிடுகின்றார் . சிவாலயம் அமைக்கப்படுவதற்கு முன்பு திருக்கரசை நாக வழிபாட்டுத் தலமாக விளங்கியதென்று கொள்ளமுடி கின்றது . நாக வழிபாட்டுச் சின்னங்களான கற்கள் சிலவும் இங்கு கிடைத்துள்ளன . ஆதியில் நாகவழிபாட்டினரான நாகர் காலப்போக்கில் சைவசமயத்தைப் பின்பற்ற முற்பட்டமைக்கும் இங்குள்ள தொல்லியற்சான்றுகள் ஆதாரமாகும் . இருப்பினும் சைவசமயக் கடவுளரை அவர்கள் மணிணாகன் என்ற பெயராற் குறிப்பிட்டமை இவற்றினாற் புலனாகின்றது . இது பொது வழமையாகிவிட்டது என்பதை யாழ்ப்பாணத்திலும் வன்னியிலு முள்ள கல்வெட்டுப் பொறித்த பல சின்னங்கள் மூலமாக அறியமுடிகின்றது இங்கு கிடைத்துள்ள தொல்பொருட் சின்னங்கள் எல்லாம் ஏறத்தாள 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டது எனக் கூறும் பேராசிரியர் தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட குறிப்பாக ' மணிணாகன் ' என்னும் பெயர் பொறிக்கப்பட்ட நந்தியின் கல்லுருவம் அங்கு இருந்ததாகவும் அது தற்போது அங்கில்லை என்றும் குறிப்பிடும் அவர் மற்றும் அங்கு கிடைத்துள்ள சிவலிங்க வடிவம் மிகவும் தொன்மையானது அதன் நடுப்பகுதியில் மணிணாகன் என்ற பெயர் பொறிக்கப்பட்டிருப்பதையும் அவதானித்து தென்னாசியா விலே கிடைக்கின்ற மிகவும் புராதனமான சிவலிங்கங்களில் இதுவும் ஒன்றாகும் என்கின்றார் . ஆகவே இங்குள்ள நந்தியும் சிவலிங்கமும் ஒருகாலத்தவை ஆகையால் அவ்விரண்டும் ஒரே கோயிலுக்குரியவை என்றும் தனது நூலில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் . கோயிலின் உடையாரையும் நந்தியினையும் மணிணாகன் என்று பெயரிட்டுள்ளமை புதுமையானது . இது தென்னிந் Extasone சைவப்புலவர் சுந்தரமூர்த்தி துஷ்யந்த் கலைபாணி முதுகலைமாணி பிரான்சு G73 Smok ( megrond ) Put ada makani தியப் பண்பாட்டு மரபிலும் ஈழத்து சைவசமய வரலாற்றிலும் இதுவரை வெளிவரதை விடயமாகும் . திருக்கோயில் வரலாறு திருகோணமலையின் தலச்சிறப்பினை எடுத்தோதும் புராணங்களில் தட்சிணகைலாச புராணம் திருக்கரசை புராணம் திருகோணாசல புராணம் ஆகிய மூன்றும் தனிச்சிறப்புப் பெற்றவை . இவற்றுள் திருக்கரசை புராணம் திருமங்கலாய் சிவன் மீது பாடப்பட்ட தலமாபுராணமாகும் . இதன் நூலாசிரியர் பற்றியும் இது உருவான காலம் பற்றியும் உறுதியாகக் கூறுவதற்கு ஆதாரங்கள் இதுவரை கிடைக்க வில்லை . இன்றும் இப்புராணம் கொட்டியாபுரப்பற்றிலுள்ள பல சைவக்கோயில்களில் பாராயணம் செய்யப்பட்டும் வருகின்றது . இந்நூல் திருமங்கலாய் சிவன் கோயில் வரலாற்று டனும் அதன் அருகாமையில் உள்ள அகத்தியர் நிலைப்படுத் திய கோயிலுடனும் தொடர்புபட்டது . இப்புராணத்தில் நான்கு சருக்கங்கள் உள்ளன . கங்கை தாபனம் பூசை ஆகிய சருக்கங்களிலே சூரியகுலத்தில் உதித்த அயோத்திபுர அரன் சிங்கபுயன் ஈழத்தீவை வந்தடைபோது அக்காலத்தில் திருமங்கலாயில் இருந்தவாறு ஆட்சி புரிந்த எழில்வேந்தன் எனும் மன்னனின் மகளாகிய திருமங்கை என்பவளை சிங்கபுயன் மணம் முடித்து இவ்விடத்தையும் ஆட்சிபுரிந்து இங்கு ஒரு சிவன் கோயிலும் கட்டி பூசை புரிந்து வழிபட்டனர் . அதனால் திருமங்கலாய் சிவன் கோயில் என வழங்கப்பட லானது . பின்பு அகத்திய முனிவர் அமைத்த கோயிலையும் புதுப்பித்து பூசை புரிந்ததாக கூறப்படுகின்றது . ஆகவே ஆரம்ப காலத்தில் திருக்கரைசயம் பதியில் இரு சிவன்கோயில்கள் மன்னர் ஆதரவுகளுடன் பூசை வழிபாடு களுடன் சிறப்புடன் நல்நிலையில் இருந்துள்ளதை அங்கு கிடைத்துள்ள தொல்லியல் கூன்றுகளும் திருக்கரசை புராணமும் எடுத்துக் கூறுகின்றன . இவ்விரு சிவன்கோயில் களும் ஈழத்தின் பழமையானவையாகக் கொள்ளப்படுகின்றன . தற்போது இவ்வாலயத்தின் முழுமையை எம் கண்ணால் கண்டு தரிசிக்க முடியாத அவல நிலைக்குள்ளாகியுள்ளோம் . இக்கோயில்கள் முற்றாகச் சிதைவடைந்து அதன் ஏராளமான பாகங்கள் காடாலும் புற்களாலும் மண்ணலும் மூடப்பட்டு மெல்ல மெல்ல இறந்து கொண்டு வருவதை சைவர்கள் யாவரும் உணர வேண்டும் . மீண்டும் உயிர்ப்புடன் இக்கோயில்கள் புதுப்பிக்கப்பட்டு தமிழ் வேதாகம மந்திரப் பாடல்களோடும் பூசை வழிபாடுகளோடும் சுவாமிமலையில் தளைத்தோங்க திருமலைச் சைவச்சான்றோர்கள் இளைஞர்கள் முன்வரல் வேண்டும் . இந்நிலையில் திருமலை -உவர்மலை விவேகானந்தா கல்லூரியில் சிவத்திரு . திருவம்பலம் தென்னவன் ( கொக்குவில் தென்னாடு செந்தமிழாகம சிவமடத்தினுடைய நிறுவுனர் ) அவர்களின் நிதி அன்பளிப்பிலே ' ஈழத்து உத்தரகோசமங்கை ' என்றழைக்கப்படும் அருள்மிகு உவர்மலை மங்களநாதர் திருக்கோயில் ( உலகின் முதலாவது சிவன் கோயில் என்று எல்லோராலும் அறியப்பட்ட தென்னிந்தியா வில் இராமநாதபுரத்திலுள்ள உத்தரகோசமங்கையை ஒத்த அமைப்பை உடையது . ) கட்டப்பட்டு சென்ற கார்த்திகைத் திங்கள் 13 ம் நாள் ( நவம்பர் 27 ) சிவத்திரு . குருநாதன் உமையொருசிவம் நிகரிலரசு ஐயா அவர்களினால் திருக்குடமுழுக்குச் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது ஆகும் . இதில் முக்கியமானது மங்களநாதர் குடமுழுக்கின் போது மாணவர்கள் ஆசிரியர்கள் என 128 பேர் நுழைவு தீக்கை தீக்கை ) பெற்றிருந்தனர் . இது திருமலை மண்ணில் சைவத்தமிழ் வாசம் இன்னும் வீசுகின்றது என்பதை பறைசாற்றுகின்றது . மேரு நடுநாடி மிக்கிடை பிங்கலை கூறுமிவ் வானின் இலங்கைக் குறியுறுஞ் சாரும் திலை வனத்து தண்மா மலையத் தூடு ஏறுஞ் சுழமுனை இவை சிவபூமியே ( திருமந்திரம் . 2701 ஆம் பாடல் ) திருச்சிற்றம்பலம்