தென்னாடு மார்கழித் திங்கள் இதழ் - 15

தெ 02 சிறப்பார்ந்த முறையில் கொண்டாடப்பட்டது கார்த்திகைத் தீபத்திருநாள் அயன் மாற்கு அரியோய் நீ" என்ற செந்தமிழ்ச் செம்மறை வாக்கின் பொருளை உணர்த்தி திருவிளையாடல் புரிந்த இறைவன், ஆதியும் அந்தமுமற்ற தனிப் பெரும் சோதியாக மாறுபாடுற்று நின்ற அயன், அரி மத்தியில் விரிந்து கிளர்ந்த நாளே திருக்கார்த்திகைத் தீபத் திருநாள் ஆகும். சைவத்தமிழ் விழாக்களில் தவிர்க்க இயலாத ஒன்று தான் கார்த்திகை விளக்கீடு. கார்த்திகை விளக்கீடு என்பது கார்த்திகை திங்கள் நிறைமதி நாளும் சகடு (கார்த்திகை) விண்மீனும் சேர்ந்த திருக்கார்த்திகை நாளில் தமிழர் தமது இல்லங்களிலும் கோயில்களிலும் பிரகாசமான தீபங்களை ஏற்றி மகிழ்ச்சியாகக் கொண்டாடும் ஒரு தீபத்திருநாள் ஆகும். தமிழ்நாட்டில் பெரு மழை பொழிந்து இயற்கை கருக்கொள்ளும் காலம் கார்த்திகை திங்கள். நெருப்புப்பூ என்றும், கார்த்திகைப்பூ என்றும் வழங்கப்படும் காந்தள் பூ மிகுதியாக மலரும் காலம் கார்த்திகை திங்கள். சகடு (கார்த்திகை) எனப்படும் விண்மீன் கூட்டம் கீழ்வானில் மாலையில் தோன்றும் காலமும் கார்த்திகை திங்களே என்பது இதன் இரட்டிப்புச் சிறப்பு. தென்னாடு தீத்துகளாக, சோதிப் பிழம்பாக இறைவன் வெளிப்பட்டு நின்ற நாள் சிவன் கோயில்களில் மட்டு மன்றி, முருகன் மற்றும் திருமால் கோயில்களிலும் செம்மையாகக் கொண்டா டப்படுகின்றது. குமராலய தீபம்: இவ் விழா முருகன் கோயில் களில் கொண்டாடப்படும். கார்த்திகை திங்களில் ஆரல் (கார்த்திகை) விண்மீன் கூடிவரும் நாள். திருமால் ஆலய தீபம்: இத்திருநாள் திருமால் கோயில்களில் கொண்டாடப்படும். கார்த்திகை திங்களில் சகடு (ரோகினி) விண்மீன் கூடிவரும் நாள். சர்வாலய தீபம்: இவ்விழா ஏனைய சைவ கோயில்களில் வீடுகளிலும் கொண்டாடப்படும். கார்த்திகை திங்களில் நிறைமதி நன்னாளில் இது கொண்டாடப்படும். இதன் முதல் நாளான அடுப்பு (பரணி) விண்மீன் நாளில் சைவ சமயிகள் பகலில் மட்டும் ஒருபொழுது உண்டு கார்த்திகையன்று அதிகாலையில் நீராடி இறைவனை வழிபட்டு நீர் மட்டும் அருந்தி இரவு கோயிலுக்குச் சென்று வழிபாடு இயற்றுவர். மறுநாட்காலையில் காலைக்கடன்களை முடித்து நீராடி பாரணை அருந்தி விரதத்தை நிறைவு செய்வர். பன்னிரண்டு ஆண்டுகள் இவ்விரதம் இருப்பவர்கள் வேண்டும் வரங்களைப் பெறலாம் என்பது நம்பிக்கை. "...மாக விசும்பின் குறுமுயல் மறுநிறம் கிளர மதிநிறைந்து அறுமீன் சேரும் அகலிருள் நடுநாள் மறுகு விளக்குஉறுத்து மாலை தூக்கிப் பழவிறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய விழவுஉடன் அயர...." என்ற அக நானூற்றுப்பாடலும், சிலை நல்லோரை மார்கழித் திங்கள், 2021 பிரசங்கங்களையும், நூற்பதிப்பையும் தன்னுடைய ஆயுதமாக ஏந்தி சைவத்தையும் தமிழையும் காத்தவர் இவர் என்றால் சற்றும் மிகையில்லை. இப்பிரசங்கங்களின் விளைவாகப் பெரும் சமய விழிப்புணர்வு ஏற்பட்டது. இத்துடன் மட்டும் தன் பணியை வரையறுத்து விடாது பாடசாலை நிர்மாணிப்பு, சமூக சேவை எனப் பலவகையில் பணியாற்றிய இவரின் நினைவு “நல்லை நகர் ஆறுமுகநாவலர் பிறந்தில ரேற் சொல்லு தமிழெங்கே" நாள் 27.11.2021 அன்று இலங்கை முழுவதிலும் பல்வேறு அமைப்புக்களால் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. திருச்சிற்றம்பலம் "ஆர்த்தெழுந்த ஞாட்பினுள் ஆளாள் எதிர்ந்தோடித் தாக்கி எறிதர வீழ்தரும் ஒண்குருதி கார்த்திகைச் சாற்றின் கழிவிளக்கைப் போன்றவே போர்க்கொடித் தானைப் பொருபுனல்நீர் நாடன் ஆர்த்துஅமர் இட்ட களத்து.” என்ற களவழி நாற்பதின் வரிகளும் கார்த்திகைப் பெருவிழாவைச் சான்று படுத்திப் போகின்றன. கார்த்திகை என்றாலே கண் முன் விரிந்து போகின்றவை சொக்கப்பனை எரிப்பும், திருவண்ணாமலைத் தீபமும் தான். அண்ணாமலையில் தீபத் திருநாளன்று அதிகாலையில் மலையடிவாரத்தில் ஏற்றப்படுவதைப் பரணி தீபம் என்றும் மாலையில் மலையுச்சியில் ஏற்றப்படுவதை மகாதீபம் என்றும் குறிப்பிடுகிறார்கள். இத்தீபம் சிவன் சோதிப்பிழம்பாக, நெருப்பு மலையாக நின்றார் என்ற தத்துவத்தின் அடிப்படை யில் ஏற்றப்படுகிறது. இத்தீபம் ஏற்றும் மலையானது 2668 அடி உயரம் கொண்டது. இம்மலை மீது செம்பு, இரும்பு கொண்டு தயாரிக்கப்பட்ட கொப்பரையில் தீபம் ஏற்றுவர். இக்கொப்பரையை பொது வருடம் 1668-இல் பிரதானி வேங்கடபதி ஐயர் என்பவர் வெண்கல கொப்பரையாகச் செய்து கொடுத்தார். பின்பு பொது வருடம் 1991-இல் இரும்பினால் உருவாக்கப்பட்ட கொப்பரை தற்போது உள்ளது இக்கொப்பரையை மலை மீது ஏற்றுபவர் மீனவர் ஆவர். இத்தீபம், சுமார் 3 கிலோவுக்கும் மேற்பட்ட நெய்யும், 1000 மீட்டர் துணியும் பயன்படுத்தி ஏற்றப்படுகிறது. ஏனைய கோயில்களில் சொக்கப்பனை எரித்தல் என்ற முறையில் தீபத்திருநாள் கொண்டாடப்படுகின்றது. அந்த வகையில் இம்முறையும் இவ்விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு அண்ணாமலை மற்றும் ஏனைய தீபம் மற்றும் திருமால் ஆலய தீபங்களும் சிறப்பாகக் கோயில்களிலும் வழிபாடுகள் இடம்பெற்றன. குமாராலாய கொண்டாடப் பட்டன. "வேண்டத்தக்கது அறிவோய் நீ வேண்ட முழுதும் தருவோய் நீ வேண்டும் அயன் மாற்கு அரியோய் நீ வேண்டி என்னைப் பணி கொண்டாய் வேண்டி நீ யாது அருள் செய்தாய் யானும் அதுவே வேண்டின் அல்லால் வேண்டும் பரிசு ஒன்று உண்டு என்னில் அதுவும் உன்தன் விருப்பு அன்றே." என்ற பாடலில் மணிவாசகர் குறித்துப் போகும் "வேண்டும் நாவலர் நினைவு தினம் மார்கழியில் ஓர் எபருஞ்சிவ வழிபாடு · திருவெம்பாவை விரதம் பொது வருடம், 1847-டிசெம்பர் 31 ஆம் நாள் வண்ணார்பண்ணை வைத்தீசுவரன் கோயிலில், பற்றி எரியத் தொடங்கிய நெருப்பொன்று பல்லாண்டுகள் சைவத்துக்கும் தமிழுக்குமாக எரிந்து அணைந்தது. அது வேறு யாருமல்ல, சைவமும் தமிழும் தனது இரு கண்கள் என்று கூறி அவற்றைப் பேணி வளர்த்த ஆறுமுக நாவலர் தான். சிவத்திரு யாழவன் சிவவேதன் "வளைக்கை மடநல்லார் மாமயிலை வண்மறுகில் துளக்கில் கபாலீச் சரத்தான்றொல் கார்த்திகைநாள் தளத்தேந் திளமுலையார் தையலார் கொண்டாடும் விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்." என்று தமிழ்ஞானசம்பந்தரும் இவ்விழாவை செம்மாந்த முறையில் சிறப்பித்து பதிகம் பாடியுள்ளார். உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவனை, அலகு இல் சோதியனை, அம்பலத்துள் ஆடுபவனை நாமும் சோதியாய்ப் போற்றி, வாழ்த்தி வணங்கிப் பேரின்பம் அடைவோம். "ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி” திருச்சிற்றம்பலம் ஆதியும் அந்தமுமில்லாப் பெருஞ் சோதியாம் ஈசனின் எல்லையிலாப் பெரும் புகழையும், பேரருளையும் பாடிப் பணிந் துய்யும் காலமே திருவெம்பாவை நோன்பு காலம். அதிகாலையில் எழுந்து நீராடி, புதுப்பூக்களாலும், பசும் இலைகளாலும் இறைவனைப் பூசித்து மனம், மொழி, மெய் எனும் மூன்றையும் இறைவன் திருத்தாளில் சமர்ப்பித்து, தேன் சொட்டும் திருவெம்பா வைப் பதிகத்தால் இறைவனை வணங்கின், அழிவில்லா ஆனந்தத்தை சுவைக்கலாம். இம்முறை கீழறை வருடம் கார்த்திகை 25ஆம் நாளில் (டிசம்பர் 11) திருவெம்பாவை நோன்பு ஆரம்பித்தது. தமிழ் நாட்டின் பெரும்பாலான கோயில் களில் இவ்விழா பெருஞ்சிவ விழாவாகக் கொண்டாடப்படும். உண்ணாமுலை அம்மையுடன் அண்ணாமலை ஐயன் உறையும் திருஅண்ணாமலையில் வைத்து, வாதவூர்ப் பெருமானார் தீந்தமிழினால் தேன் சொட்டும் இயம்பிச்சென்ற திருப்பாடற் தொகுப்பே திருவெம்பாவை ஆகும். இந்தப் பாடல் தொகுப்பின் பெயரால் இவ்விரதம் அழைக்கப்படுவது 144447 தெய்வத்தமிழினதும், அதன் செம்மாந்த புலமையினதும் பெருமையே. தில்லை உட்பட பல கோயில்களிலும் தமிழ் நாட்டின் திருவண்ணாமலை, ஈழத்தின் பல கோயில்களிலும் இவ்விழா செம்மைமிகு முறையில் கொண்டாடப்படும். தீந்தமிழால் தண்பாண்டி நாட்டானைத் தொழுது இறைஞ்சி அவனடி அடைவோம். திருச்சிற்றம்பலம்
தெ 02 சிறப்பார்ந்த முறையில் கொண்டாடப்பட்டது கார்த்திகைத் தீபத்திருநாள் அயன் மாற்கு அரியோய் நீ என்ற செந்தமிழ்ச் செம்மறை வாக்கின் பொருளை உணர்த்தி திருவிளையாடல் புரிந்த இறைவன் ஆதியும் அந்தமுமற்ற தனிப் பெரும் சோதியாக மாறுபாடுற்று நின்ற அயன் அரி மத்தியில் விரிந்து கிளர்ந்த நாளே திருக்கார்த்திகைத் தீபத் திருநாள் ஆகும் . சைவத்தமிழ் விழாக்களில் தவிர்க்க இயலாத ஒன்று தான் கார்த்திகை விளக்கீடு . கார்த்திகை விளக்கீடு என்பது கார்த்திகை திங்கள் நிறைமதி நாளும் சகடு ( கார்த்திகை ) விண்மீனும் சேர்ந்த திருக்கார்த்திகை நாளில் தமிழர் தமது இல்லங்களிலும் கோயில்களிலும் பிரகாசமான தீபங்களை ஏற்றி மகிழ்ச்சியாகக் கொண்டாடும் ஒரு தீபத்திருநாள் ஆகும் . தமிழ்நாட்டில் பெரு மழை பொழிந்து இயற்கை கருக்கொள்ளும் காலம் கார்த்திகை திங்கள் . நெருப்புப்பூ என்றும் கார்த்திகைப்பூ என்றும் வழங்கப்படும் காந்தள் பூ மிகுதியாக மலரும் காலம் கார்த்திகை திங்கள் . சகடு ( கார்த்திகை ) எனப்படும் விண்மீன் கூட்டம் கீழ்வானில் மாலையில் தோன்றும் காலமும் கார்த்திகை திங்களே என்பது இதன் இரட்டிப்புச் சிறப்பு . தென்னாடு தீத்துகளாக சோதிப் பிழம்பாக இறைவன் வெளிப்பட்டு நின்ற நாள் சிவன் கோயில்களில் மட்டு மன்றி முருகன் மற்றும் திருமால் கோயில்களிலும் செம்மையாகக் கொண்டா டப்படுகின்றது . குமராலய தீபம் : இவ் விழா முருகன் கோயில் களில் கொண்டாடப்படும் . கார்த்திகை திங்களில் ஆரல் ( கார்த்திகை ) விண்மீன் கூடிவரும் நாள் . திருமால் ஆலய தீபம் : இத்திருநாள் திருமால் கோயில்களில் கொண்டாடப்படும் . கார்த்திகை திங்களில் சகடு ( ரோகினி ) விண்மீன் கூடிவரும் நாள் . சர்வாலய தீபம் : இவ்விழா ஏனைய சைவ கோயில்களில் வீடுகளிலும் கொண்டாடப்படும் . கார்த்திகை திங்களில் நிறைமதி நன்னாளில் இது கொண்டாடப்படும் . இதன் முதல் நாளான அடுப்பு ( பரணி ) விண்மீன் நாளில் சைவ சமயிகள் பகலில் மட்டும் ஒருபொழுது உண்டு கார்த்திகையன்று அதிகாலையில் நீராடி இறைவனை வழிபட்டு நீர் மட்டும் அருந்தி இரவு கோயிலுக்குச் சென்று வழிபாடு இயற்றுவர் . மறுநாட்காலையில் காலைக்கடன்களை முடித்து நீராடி பாரணை அருந்தி விரதத்தை நிறைவு செய்வர் . பன்னிரண்டு ஆண்டுகள் இவ்விரதம் இருப்பவர்கள் வேண்டும் வரங்களைப் பெறலாம் என்பது நம்பிக்கை . ... மாக விசும்பின் குறுமுயல் மறுநிறம் கிளர மதிநிறைந்து அறுமீன் சேரும் அகலிருள் நடுநாள் மறுகு விளக்குஉறுத்து மாலை தூக்கிப் பழவிறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய விழவுஉடன் அயர .... என்ற அக நானூற்றுப்பாடலும் சிலை நல்லோரை மார்கழித் திங்கள் 2021 பிரசங்கங்களையும் நூற்பதிப்பையும் தன்னுடைய ஆயுதமாக ஏந்தி சைவத்தையும் தமிழையும் காத்தவர் இவர் என்றால் சற்றும் மிகையில்லை . இப்பிரசங்கங்களின் விளைவாகப் பெரும் சமய விழிப்புணர்வு ஏற்பட்டது . இத்துடன் மட்டும் தன் பணியை வரையறுத்து விடாது பாடசாலை நிர்மாணிப்பு சமூக சேவை எனப் பலவகையில் பணியாற்றிய இவரின் நினைவு நல்லை நகர் ஆறுமுகநாவலர் பிறந்தில ரேற் சொல்லு தமிழெங்கே நாள் 27.11.2021 அன்று இலங்கை முழுவதிலும் பல்வேறு அமைப்புக்களால் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது . திருச்சிற்றம்பலம் ஆர்த்தெழுந்த ஞாட்பினுள் ஆளாள் எதிர்ந்தோடித் தாக்கி எறிதர வீழ்தரும் ஒண்குருதி கார்த்திகைச் சாற்றின் கழிவிளக்கைப் போன்றவே போர்க்கொடித் தானைப் பொருபுனல்நீர் நாடன் ஆர்த்துஅமர் இட்ட களத்து . என்ற களவழி நாற்பதின் வரிகளும் கார்த்திகைப் பெருவிழாவைச் சான்று படுத்திப் போகின்றன . கார்த்திகை என்றாலே கண் முன் விரிந்து போகின்றவை சொக்கப்பனை எரிப்பும் திருவண்ணாமலைத் தீபமும் தான் . அண்ணாமலையில் தீபத் திருநாளன்று அதிகாலையில் மலையடிவாரத்தில் ஏற்றப்படுவதைப் பரணி தீபம் என்றும் மாலையில் மலையுச்சியில் ஏற்றப்படுவதை மகாதீபம் என்றும் குறிப்பிடுகிறார்கள் . இத்தீபம் சிவன் சோதிப்பிழம்பாக நெருப்பு மலையாக நின்றார் என்ற தத்துவத்தின் அடிப்படை யில் ஏற்றப்படுகிறது . இத்தீபம் ஏற்றும் மலையானது 2668 அடி உயரம் கொண்டது . இம்மலை மீது செம்பு இரும்பு கொண்டு தயாரிக்கப்பட்ட கொப்பரையில் தீபம் ஏற்றுவர் . இக்கொப்பரையை பொது வருடம் 1668 - இல் பிரதானி வேங்கடபதி ஐயர் என்பவர் வெண்கல கொப்பரையாகச் செய்து கொடுத்தார் . பின்பு பொது வருடம் 1991 - இல் இரும்பினால் உருவாக்கப்பட்ட கொப்பரை தற்போது உள்ளது இக்கொப்பரையை மலை மீது ஏற்றுபவர் மீனவர் ஆவர் . இத்தீபம் சுமார் 3 கிலோவுக்கும் மேற்பட்ட நெய்யும் 1000 மீட்டர் துணியும் பயன்படுத்தி ஏற்றப்படுகிறது . ஏனைய கோயில்களில் சொக்கப்பனை எரித்தல் என்ற முறையில் தீபத்திருநாள் கொண்டாடப்படுகின்றது . அந்த வகையில் இம்முறையும் இவ்விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு அண்ணாமலை மற்றும் ஏனைய தீபம் மற்றும் திருமால் ஆலய தீபங்களும் சிறப்பாகக் கோயில்களிலும் வழிபாடுகள் இடம்பெற்றன . குமாராலாய கொண்டாடப் பட்டன . வேண்டத்தக்கது அறிவோய் நீ வேண்ட முழுதும் தருவோய் நீ வேண்டும் அயன் மாற்கு அரியோய் நீ வேண்டி என்னைப் பணி கொண்டாய் வேண்டி நீ யாது அருள் செய்தாய் யானும் அதுவே வேண்டின் அல்லால் வேண்டும் பரிசு ஒன்று உண்டு என்னில் அதுவும் உன்தன் விருப்பு அன்றே . என்ற பாடலில் மணிவாசகர் குறித்துப் போகும் வேண்டும் நாவலர் நினைவு தினம் மார்கழியில் ஓர் எபருஞ்சிவ வழிபாடு · திருவெம்பாவை விரதம் பொது வருடம் 1847 - டிசெம்பர் 31 ஆம் நாள் வண்ணார்பண்ணை வைத்தீசுவரன் கோயிலில் பற்றி எரியத் தொடங்கிய நெருப்பொன்று பல்லாண்டுகள் சைவத்துக்கும் தமிழுக்குமாக எரிந்து அணைந்தது . அது வேறு யாருமல்ல சைவமும் தமிழும் தனது இரு கண்கள் என்று கூறி அவற்றைப் பேணி வளர்த்த ஆறுமுக நாவலர் தான் . சிவத்திரு யாழவன் சிவவேதன் வளைக்கை மடநல்லார் மாமயிலை வண்மறுகில் துளக்கில் கபாலீச் சரத்தான்றொல் கார்த்திகைநாள் தளத்தேந் திளமுலையார் தையலார் கொண்டாடும் விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய் . என்று தமிழ்ஞானசம்பந்தரும் இவ்விழாவை செம்மாந்த முறையில் சிறப்பித்து பதிகம் பாடியுள்ளார் . உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவனை அலகு இல் சோதியனை அம்பலத்துள் ஆடுபவனை நாமும் சோதியாய்ப் போற்றி வாழ்த்தி வணங்கிப் பேரின்பம் அடைவோம் . ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி திருச்சிற்றம்பலம் ஆதியும் அந்தமுமில்லாப் பெருஞ் சோதியாம் ஈசனின் எல்லையிலாப் பெரும் புகழையும் பேரருளையும் பாடிப் பணிந் துய்யும் காலமே திருவெம்பாவை நோன்பு காலம் . அதிகாலையில் எழுந்து நீராடி புதுப்பூக்களாலும் பசும் இலைகளாலும் இறைவனைப் பூசித்து மனம் மொழி மெய் எனும் மூன்றையும் இறைவன் திருத்தாளில் சமர்ப்பித்து தேன் சொட்டும் திருவெம்பா வைப் பதிகத்தால் இறைவனை வணங்கின் அழிவில்லா ஆனந்தத்தை சுவைக்கலாம் . இம்முறை கீழறை வருடம் கார்த்திகை 25 ஆம் நாளில் ( டிசம்பர் 11 ) திருவெம்பாவை நோன்பு ஆரம்பித்தது . தமிழ் நாட்டின் பெரும்பாலான கோயில் களில் இவ்விழா பெருஞ்சிவ விழாவாகக் கொண்டாடப்படும் . உண்ணாமுலை அம்மையுடன் அண்ணாமலை ஐயன் உறையும் திருஅண்ணாமலையில் வைத்து வாதவூர்ப் பெருமானார் தீந்தமிழினால் தேன் சொட்டும் இயம்பிச்சென்ற திருப்பாடற் தொகுப்பே திருவெம்பாவை ஆகும் . இந்தப் பாடல் தொகுப்பின் பெயரால் இவ்விரதம் அழைக்கப்படுவது 144447 தெய்வத்தமிழினதும் அதன் செம்மாந்த புலமையினதும் பெருமையே . தில்லை உட்பட பல கோயில்களிலும் தமிழ் நாட்டின் திருவண்ணாமலை ஈழத்தின் பல கோயில்களிலும் இவ்விழா செம்மைமிகு முறையில் கொண்டாடப்படும் . தீந்தமிழால் தண்பாண்டி நாட்டானைத் தொழுது இறைஞ்சி அவனடி அடைவோம் . திருச்சிற்றம்பலம்