தென்னாடு மார்கழித் திங்கள் இதழ் - 15

உள்ளே சென்றோம். சுவாமிகள் மௌனமாக இருந்தார்கள். அவர் முன்னிலையில் பத்துப் பன்னிரண்டு பேர்கள் கண்மூடித் தியானத்திலிருந்தார்கள். நாமும் சென்று வீழ்ந்து வணங்கி எழுந்தபோது சுவாமிகள் கைதூக்கி ஆசி வழங்கினார்கள். நாமும் சிறிது நேரம் தியானத்தில் அமர்ந்தோம். ரமணமாமுனிவர் திருச்சமூகத்தில் இருக்கும்போது ஏற்பட்ட ஒரு உள்ளுணர்வு, சுவாமிகளுடைய திருச்சமூகத்திலும் ஏற்பட்டது. ஓம் சித்தானைக்குட்டி குருவே நமா சிலை நல்லோரை மார்கழித் திங்கள், 2021 07 ஈழத்து சித்தர்கள்: தவத்திரு சித்தானைக்குட்டி சுவாமிகள் (சித்தானைக் குட்டி சுவாமிகள் சென்ற திங்கள்த் தொடர்ச்சி) சுவாமிகளின் முழுப்பெயரையும் விலாசத்தையும் அவை குறிப்பனவாக இருந்தன. இப்போது அவ்வீடு அழிந்து போனமையினால் அவ்வாசகங்களைக் காணமுடியவில்லை. அதை ஒருமுறையேனும் பார்த்தவர்களுடைய உள்ளத்தில் அது நீங்கா இடம்பெற்றிருக்கும் என்பதில் யாதோர் சந்தேகமும் இல்லை. 1949ஆம் வருடம் சித்திரைத் திங்கள் என்று நினைவு. காலஞ்சென்ற கவிஞர் பரமஹம்சதாசனாருடன் விபுலானந்த சுவாமிகளைத் தந்த காரைதீவுக்குச் சென்றிருந்தேன். கண்ணகி அம்மன் கோயில் வழிபாட்டை முடித்து விட்டு ஆசிரியர் தங்கராஜா அவர்கள் இல்லத்தில் தங்கியிருந்தோம். அங்கு சித்தானைக் குட்டி சுவாமிகளைப் பற்றிய பேச்சு வந்தது. என்னுடன் கூட இருந்தவர்கள் அத்தனைபேரும் சுவாமிகளைப் பலமுறை வழிபட்டவர்கள். நான் ஒருவன் மாத்திரமே அப்பாக்கியத்தைப் பெறாதவனாக இருந்தேன். சுவாமி களுடைய பேச்சு வந்ததும் உடனேயே நான் சென்று வழிபாடு செய்ய வேண்டுமெனப் பெரிதும் விரும்பினேன். அங்கிருந்த வர்கள், பலமுறை அருள் பெற்றவர்களான படியினால் போலும் அவ்வளவு ஆர்வம் காட்டவில்லை. அவர்கள் அடுத்தநாள் காலையில் போகலாம் என்றார்கள். நானோ உடனே போக வேண்டும் என்று பிடிவாதமாக நின்றேன். ஆ என்பது ஆனைமுகன், ஆறுமுகன் இருவரையும் சி என்பது சிவத்தையும் குறிக்கின்றன. ஆனைக்குட்டிச் சித்தரின் ஞானப் புதல்வ தானைக்குட்டிச் சுவாமிகள். ஆகவே ஆ.சி.என்பது ஆனைக்குட்டிச் சுவாமிகளைக் குறிக்கும் என்பர். இன்னும் ஆதிசிவனையும் ஆனைசிவனையும் குறிக்கும் என்றும் கூறுவர். பெரிய ஆனைக்குட்டியின் குட்டி சித்தானை, ஆனைக்குட்டி சுவாமிகளின் ஞானப்புதல்வன் என்பதையே சித்தானை என்னும் சொல் குறிக்கிறது. சித்தானை என்ற பெயரை குருநாதராகிய பெரிய ஆனைக்குட்டி சுவாமிகளே தமது சீடருக்குச் சூட்டினார்கள். எனது ஆர்வத்தைக் கண்டு, சுவாமிகளிடம் என்னை அழைத்துச் சென்றனர். நாங்கள் நால்வர் சென்றதாக நினைவு. நாங்கள் சுவாமிகளிடம் சென்ற போது நன்றாக இருட்டிவிட்டது. சுவாமிகள் குடியிருந்த வீட்டின் முன்பக்கச் சுவரில் கறுப்பு எழுத்துகளினால் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது. கண்டி என்ற சொல் இன்று பட்டினத்தைக் குறிக்கின்றது. முன்னொருகாலம் கண்டி இராச்சியத்தைக் குறித்தது. அதற்கு முன்பு மாகாணத்தையும் குறித்து நின்றது. வெகுகாலத்திற்கு முன்பு இலங்கையைக் கண்டி என்றே அழைத்து வந்தார்கள். இன்றும் இந்தியாவிலுள்ளவர்கள் இலங்கையைக் கொழும்பு என்று அழைப்பதைப் பார்க்கிறோம். "கண்டிக் கதிர்காம வேலோனே" என்ற பாடலில் கண்டி என்பது இலங்கையையே குறிக்கின்றது. 'கந்த' என்ற சிங்களச் சொல் மலையைக் "ஸ்ரீஆ.சி.சித்தானைக்குட்டி சுவாமிகள் கண்டி, இந்தியா இராமநாதபுரம் சமஸ்தானம், காரைதீவு, குறிப்பது. கந்த என்ற சொல்லே கண்டி என மருவி நின்றது மட்டக்களப்பு, சிலோன்." எனவும் கூறுவர். முன்னேசுவரம் கோயிலில் இருந்து சாதனை புரிந்த சித்தானைக்குட்டி சுவாமிகளுக்குக் குருநாதன் பேரொளியாகக் காட்சி கொடுத்தான். குருநாதருடைய சமாதி கைகூடிவிட்டது என்பதை உணர்ந்த சுவாமிகள் குருநாதனுடைய சமாதியில் 40 நாட்கள் இருந்தார்கள். குருநாதனுடைய கட்டளையை எதிர்பார்த்து 40 நாட்கள் கடுந்தவம் ஆற்றினார்கள். நாற்பதாம் நாள் கனவில் நவநாதசித்தரின் சமாதிக்குச்செல் என்ற கட்டளை பிறந்தது. சுவாமிகள் உடனேயே புறப்பட்டு விட்டார்கள். அதனால் அடிக்கடி சுவாமிகளுடைய அருளைப் பெற்று, எமது உள்ளுணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று அந்த நேரத்தில் ஒரு எண்ணம் எழுந்தது. அந்த எண்ணம் தோன்றியவாறே மறைந்தும் விட்டது. சுவாமிகள் சரியாக மூன்று வருடங்களில் சமாதி அடைந்து விட்டார்கள் என்பதைக் கேள்வியுற்ற போதுதான் எனது சோம்பலை நினைந்து வருந்தினேன். உரிய சந்தர்ப்பத்தை இழந்து விட்டேனே என்று இன்றும் நினைந்து வருந்துகின்றேன். அதற்குப் பரிகாரமாகவே சுவாமிகளுடைய திருச்சரிதத்தை எழுதும் வாய்ப்புக்கிடைத்துள்ளது என்று அதனை நினைந்து நினைந்து உள்ளம் உருகுகின்றேன். சித்தானைப் பெயர் தரும் கருத்து. சுவரில் எழுதிய வசனங்களின் காரண கருத்தை விளங்கிக்கொள்ள ஆசைப்பட்டேன். பலரும் பலவிதமாக உரைத்தனர். இந்த விலாசத்தை யாரோ ஒரு மகான்தான் எழுதிச் சென்றுள்ளார் என ஒரு அன்பர் கூறினார். சித்தானைக் குட்டிசுவாமிகள் சொல்லச் சொல்ல எழுதப்பட்ட வாக்கியங்கள் அல்ல. வந்தவருடைய உள்ளுணர்வில் தோன்றியவாறே எழுதிச் சென்றுள்ளாராம். இதனைப்பற்றிச் சுவாமிகளிடம் ஒரு அன்பர் வினவியபோது எழுதிய வனிடம்தான் பொருள் கேட்க வேண்டுமென்று கூறி னார்களாம். தென்னாடு சுவாமியவர்கள் யார்? ஏன் இங்குற்றார்? என்ன செய்து கொண்டிருக்கிறார்? என்பன போன்ற வினாக்களுக்குச் சரியான விடையாக அமைந்திருப்பவையே அந்த வாசகங்கள் என்பது ஆசிரியர் எதிர்மன்னசிங்கம் அவர்களுடைய அபிப்பிராயமாகும். ஆசிரியர் எதிர்மன்னசிங்கம் அவர்கள் 1930-ஆம் வருடம் மார்கழித் திங்களில் தொடங்கி, 1940- ஆம் வருடம் மார்கழித் திங்கள் வரை உள்ள பத்து வருட காலமும் சுவாமிகளோடு நெருங்கிப் பழகி, உடன் உறைந்து பல உண்மைகளை அனுபவத்தில் பெற்றுக்கொண்ட பாக்கியசாலி ஆவர். கையிலோ பணம் இல்லை. கால்நடையாகவே பிரயா ணத்தை ஆரம்பித்தார்கள். வழிநடந்த அலுப்பு ஒருபக்கம் பசி இன்னொரு பக்கம் கண்வருத்தம் பிறிதோர் பக்கம். இந்த நிலையில் ஒரு கடைப் பக்கத்தில் அமர்ந்திருந்தார். அக்கடை ஒரு சிங்களவருடையது. சுவாமிகள் ஒரு திருடராய் இருக்கக்கூடுமென்று கடைக்காரர் சந்தேகித்தார். அதை உணர்ந்த சுவாமிகள் அவ்விடத்தை விட்டு நீங்கினார்கள். இந்த நிலையில் சாராயம் குடிக்க வேண்டும் என்ற ஒரு ஆசை பிறந்தது. ஆசை வளர்ந்து கொண்டே வந்தது. குருநாதனைக் கருத்தில் நினைந்தார். கோபித்தார். சாராயம் குடிக்க ஒரு வழி ஏற்படாதா என்று தமக்குள்ளேயே கர்ச்சித்தார். திடீரென வழியை உற்று நோக்கினார். கைக்குட்டை ஒன்றில் முடிந்தபடி 10 ரூபா கிடந்தது. குனிந்து எடுத்தார். குருநாதனைக் கோபித்தது பற்றி மன்னிப்பும் கேட்டுக் கொண்டார். அவ்வழியிலே பெண்கள் பலர் தண்ணீர் எடுப்பதற்காகப் போவதும் வருவதுமாக இருந் தார்கள். இடைவிடாது பலர் நடமாடித் திரிந்தனர். இத்தனை பேருடைய கண்ணிலும் சிக்காது அந்தப் பத்து ரூபா சுவாமி களுடைய கண்ணிலே தென்பட்டதுதான் அற்புதத்திலும் அற்புதமாகும். அப்பணத்தைக் கையில் எடுத்ததும் நடை வேகம் அதிகரித்தது. சாராயத் தவறணை ஒன்று கண்ணுக்குத் தென்பட்டது. அங்கு சென்றார். போதிய அளவு சாராயம் குடித்தார். புதிய தென்பு ஏற்பட்டு விட்டது. மேலும் வேகமாக நடக்கத் தொடங்கினார். நேரம் இருண்டு கொண்டு வந்தது. எதிரே ஒரு P.W.D. ஓவசியர் வீடு தென்பட்டது. அங்கே போனார். அவர் ஒரு யாழ்ப்பாணத்தவர். சுவாமிகளை அன்புடன் வரவேற்று உபசரித்து அன்றிரவு தங்குவதற்கேற்ற வசதிகள் எல்லாம் செய்து கொடுத்தார். சுவாமிகளுடைய கண்ணுக்கு மருந்து கட்டி அது மாறும் வரைக்கும் தம்மோடே வைத்துக் கொண்டார். சுவாமிகளுக்கு நல்ல சுகம் வரும்வரை ஊணும் உடையும் கொடுத்துப் பராமரித்தார். கண்ணோய் நன்றாக மாறியபின் நாவலப்பிட்டிக்குச் சென்றார். அங்கிருந்து குயீன்ஸ்பரி போய்ச் சேர்ந்தார். தெ குயீன்ஸ்பரியில் சித்தானைசுவாமிகள் நவநாதசித்தர் சமாதியாவதற்கு முன்பு பெருமாள் அம்மையாரிடம் சித்தானைக்குட்டி சுவாமிகள் இங்கு வரக்கூடும் என்று கூறியிருந்தார்கள். அம்மையார் சுவாமிகளைப்பற்றி அறிய ஆவல் கொண்டு அவர் எப்படி இருப்பார் என்று கேட்டார். அதற்கு நவநாதசித்தர், “அவர் ஒரு காலை நொண்டிக் கொள்வார். அம்மா தர்மம் என்று கேட்பார், அவர்தான் எல்லாச் செல்வங்களும் நிறைந்த கப்பல். ஆனால் பெண்ணுக்கும் கேட்பார். தம்மை மறைத்துக் கொள்வதற்காகவே அங்ஙனம் பேசுவார். நீங்கள் மாத்திரம் அதிலே மயங்கி ஏமாந்துவிடக் கூடாது. அவரைப் பார்த்த உடனேயே உங்கள் உள்ளத்திலே இவர்தான் சித்தானைக்குட்டி சுவாமிகள் என்று தெரிந்து கொள்வீர்கள்" என்றார். இந்தக் குறிப்புகள் எல்லாம் அம்மையாரின் மனத்திலே ஓர் உருவத்தைக் கொடுத்துப் பதிந்து கொண்டன. குயீன்ஸ்பரி சென்று சேர்ந்த சுவாமிகள் நேராக நவநாத சித்தரின் சமாதிக்குச் சென்றார்கள். முருகப்பெருமானுக்கு வணக்கம் செலுத்தியபின் சித்தருடைய சமாதிக்கு முன்பு வந்து தியானத்தில் அமர்ந்தார்கள். பக்கத்திலே ஓம் என்ற ஒலியுடன் அருவி நீர் சலசலத்து ஓடிக்கொண்டிருந்தது. இயற்கை அன்னையின் அரவணைப்பிலே தியானம் உடனே கைகூடிற்று. பல மணித்தியாலங்கள் சுவாமிகள் தம்மை மறந்து ஆனந்த நிலையிலே காணப்பட்டார்கள். தோட்டத்து மக்களில் சிலர் சுவாமிகளைச் சுற்றி வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றார்கள். சுவாமிகள் கண்விழித்தார்கள். 'நவநாதா' என்று சொல்லிக்கொண்டே எழுந்தார்கள். ‘நவநாதா' என்ற ஒலியைக் கேட்டதும் சூழ நின்றவர்கள் எல்லோரும் மந்திரத்தால் கட்டுப்பட்டவர் போலாயினர். இன்றும் அத்தோட்டத்து மக்களுடைய நாவிலே நவநாதருடைய திருப்பெயர் ஒலித்துக் கொண்டே இருப்பதைக் காணலாம். 'எதற்குக் கட்டுப்படாதவர்களும் நவநாதருடைய நாமத்தைக் கேட்டவுடன் அதற்குக் கட்டுப்பட்டு விடுவார்கள்.' சுற்றி நின்ற தொழிலாளர்களில் ஒருவர் சாமி கங்காணி அம்மா உங்களைச் சாப்பாட்டிற்கு அழைப்பதற்குக் காத்துக் கொண்டிருப்பார்கள். கெதியாகப் போங்கள் என்று கூறியதோடு, தானே கூட்டிச் சென்று வீட்டில் விடுவதாகவும் கூறினார். தொழிலாளி தூரத்தில் நின்றே வீட்டைக் காட்டிவிட்டுத் தன்பாட்டில் போய்விட்டார். பெருமாள் அம்மாவின் வீடடைந்த சுவாமிகள் “அம்மா தர்மம்” என்று குரல் கொடுத்தார்கள். வீட்டினுள் இருந்த அம்மையாரின் காதில் இச்சத்தம் கணீரென்று விழுந்தது. எப்பொழுதோ கேட்டகுரல் மாதிரி ஒரு பிரமை. அம்மையார் சத்தம் கேட்டதும் கதவைத் திறந்து வெளியே வந்தார்கள். சுவாமிகளின் திருத்தோற்றத்தைக் கண்டதுமே ஆளைப் புரிந்து கொண்டார்கள். சுவாமிகளின் வருகைக்காக இங்கு எவ்வளவு காலம் காத்துக் கிடக்கிறேன். உள்ளே வாருங்கள் சுவாமி என்று அழைத்து சுவாமிகளின் பாதம் விளக்கி பூ எடுத்து அர்ச்சித்து யான் செய்த தவம் இன்றுதான் பலித்தது. நவநாதப் பெருமானின் வார்த்தை இன்றுதான் கைகூடியது என்றெல்லாம் கூறினார்கள். சுவாமிகளுடைய பசியைப் போக்கி சுவாமிகளுக்கு வேண்டிய உபசரணைகளை எல்லாம் குறைவறச் செய்து வந்தார்கள். அம்மையாரின் பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் எல்லாருமே சுவாமிகளிடம் பெரிய வாரப்பாடுடையவர்களாக விளங்கினார்கள். சுவாமிகளுக்கு என்னென்ன தேவையோ அத்தனையையும் அக்குடும்பத்தினர் மனமுவந்து நிறைவேற்றினர். சுவாமிகள் நவநாதருடைய சமாதியிலும், நவநாத சுவாமிகள் தவம் செய்த வனத்திலும் மாறிமாறி நிட்டை கூடி இருந்தார்கள். நவநாதசித்தருடைய சமாதி முருகன் சந்நிதியிலும் பெரிய ஆனையின் சமாதி விநாயகப் பெருமான் சந்நிதியிலும் அமைந்துள்ளதைச் சித்தானைக்குட்டி சுவாமிகள் எண்ணி எண்ணி உள்ளம் பூரித்தார்கள். வடக்கே கடையிற் குருநாதனும் மேற்கே ஆனைகுரு நாதனும் தெற்கே நவநாதசித்தரும் சமாதியில் நிலைபெற்றி ருப்பதை எண்ணி எண்ணித் தம்மைப் பற்றிக் குருநாதன் கூறிய தீர்க்கதரிசனத்தையும் எண்ணி எண்ணி மகிழ்ந்தார்கள். குருநாதன் கூறிய சமாதிநிலை தமக்குக் கைகூடும் நாள் எந்நாளோ என்று ஏங்கினார்கள். (சித்தனைக்குட்டிச் சுவாமி மீண்டும் வருவார்.) திருச்சிற்றம்பலம் ஆக்கம் : ஆத்மஜோதி முத்தையா சுவாமிகள் தொகுப்பு : சிவத்திரு.வடிவேலு கங்காளன்
உள்ளே சென்றோம் . சுவாமிகள் மௌனமாக இருந்தார்கள் . அவர் முன்னிலையில் பத்துப் பன்னிரண்டு பேர்கள் கண்மூடித் தியானத்திலிருந்தார்கள் . நாமும் சென்று வீழ்ந்து வணங்கி எழுந்தபோது சுவாமிகள் கைதூக்கி ஆசி வழங்கினார்கள் . நாமும் சிறிது நேரம் தியானத்தில் அமர்ந்தோம் . ரமணமாமுனிவர் திருச்சமூகத்தில் இருக்கும்போது ஏற்பட்ட ஒரு உள்ளுணர்வு சுவாமிகளுடைய திருச்சமூகத்திலும் ஏற்பட்டது . ஓம் சித்தானைக்குட்டி குருவே நமா சிலை நல்லோரை மார்கழித் திங்கள் 2021 07 ஈழத்து சித்தர்கள் : தவத்திரு சித்தானைக்குட்டி சுவாமிகள் ( சித்தானைக் குட்டி சுவாமிகள் சென்ற திங்கள்த் தொடர்ச்சி ) சுவாமிகளின் முழுப்பெயரையும் விலாசத்தையும் அவை குறிப்பனவாக இருந்தன . இப்போது அவ்வீடு அழிந்து போனமையினால் அவ்வாசகங்களைக் காணமுடியவில்லை . அதை ஒருமுறையேனும் பார்த்தவர்களுடைய உள்ளத்தில் அது நீங்கா இடம்பெற்றிருக்கும் என்பதில் யாதோர் சந்தேகமும் இல்லை . 1949 ஆம் வருடம் சித்திரைத் திங்கள் என்று நினைவு . காலஞ்சென்ற கவிஞர் பரமஹம்சதாசனாருடன் விபுலானந்த சுவாமிகளைத் தந்த காரைதீவுக்குச் சென்றிருந்தேன் . கண்ணகி அம்மன் கோயில் வழிபாட்டை முடித்து விட்டு ஆசிரியர் தங்கராஜா அவர்கள் இல்லத்தில் தங்கியிருந்தோம் . அங்கு சித்தானைக் குட்டி சுவாமிகளைப் பற்றிய பேச்சு வந்தது . என்னுடன் கூட இருந்தவர்கள் அத்தனைபேரும் சுவாமிகளைப் பலமுறை வழிபட்டவர்கள் . நான் ஒருவன் மாத்திரமே அப்பாக்கியத்தைப் பெறாதவனாக இருந்தேன் . சுவாமி களுடைய பேச்சு வந்ததும் உடனேயே நான் சென்று வழிபாடு செய்ய வேண்டுமெனப் பெரிதும் விரும்பினேன் . அங்கிருந்த வர்கள் பலமுறை அருள் பெற்றவர்களான படியினால் போலும் அவ்வளவு ஆர்வம் காட்டவில்லை . அவர்கள் அடுத்தநாள் காலையில் போகலாம் என்றார்கள் . நானோ உடனே போக வேண்டும் என்று பிடிவாதமாக நின்றேன் . என்பது ஆனைமுகன் ஆறுமுகன் இருவரையும் சி என்பது சிவத்தையும் குறிக்கின்றன . ஆனைக்குட்டிச் சித்தரின் ஞானப் புதல்வ தானைக்குட்டிச் சுவாமிகள் . ஆகவே ஆ.சி.என்பது ஆனைக்குட்டிச் சுவாமிகளைக் குறிக்கும் என்பர் . இன்னும் ஆதிசிவனையும் ஆனைசிவனையும் குறிக்கும் என்றும் கூறுவர் . பெரிய ஆனைக்குட்டியின் குட்டி சித்தானை ஆனைக்குட்டி சுவாமிகளின் ஞானப்புதல்வன் என்பதையே சித்தானை என்னும் சொல் குறிக்கிறது . சித்தானை என்ற பெயரை குருநாதராகிய பெரிய ஆனைக்குட்டி சுவாமிகளே தமது சீடருக்குச் சூட்டினார்கள் . எனது ஆர்வத்தைக் கண்டு சுவாமிகளிடம் என்னை அழைத்துச் சென்றனர் . நாங்கள் நால்வர் சென்றதாக நினைவு . நாங்கள் சுவாமிகளிடம் சென்ற போது நன்றாக இருட்டிவிட்டது . சுவாமிகள் குடியிருந்த வீட்டின் முன்பக்கச் சுவரில் கறுப்பு எழுத்துகளினால் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது . கண்டி என்ற சொல் இன்று பட்டினத்தைக் குறிக்கின்றது . முன்னொருகாலம் கண்டி இராச்சியத்தைக் குறித்தது . அதற்கு முன்பு மாகாணத்தையும் குறித்து நின்றது . வெகுகாலத்திற்கு முன்பு இலங்கையைக் கண்டி என்றே அழைத்து வந்தார்கள் . இன்றும் இந்தியாவிலுள்ளவர்கள் இலங்கையைக் கொழும்பு என்று அழைப்பதைப் பார்க்கிறோம் . கண்டிக் கதிர்காம வேலோனே என்ற பாடலில் கண்டி என்பது இலங்கையையே குறிக்கின்றது . ' கந்த ' என்ற சிங்களச் சொல் மலையைக் ஸ்ரீஆ.சி.சித்தானைக்குட்டி சுவாமிகள் கண்டி இந்தியா இராமநாதபுரம் சமஸ்தானம் காரைதீவு குறிப்பது . கந்த என்ற சொல்லே கண்டி என மருவி நின்றது மட்டக்களப்பு சிலோன் . எனவும் கூறுவர் . முன்னேசுவரம் கோயிலில் இருந்து சாதனை புரிந்த சித்தானைக்குட்டி சுவாமிகளுக்குக் குருநாதன் பேரொளியாகக் காட்சி கொடுத்தான் . குருநாதருடைய சமாதி கைகூடிவிட்டது என்பதை உணர்ந்த சுவாமிகள் குருநாதனுடைய சமாதியில் 40 நாட்கள் இருந்தார்கள் . குருநாதனுடைய கட்டளையை எதிர்பார்த்து 40 நாட்கள் கடுந்தவம் ஆற்றினார்கள் . நாற்பதாம் நாள் கனவில் நவநாதசித்தரின் சமாதிக்குச்செல் என்ற கட்டளை பிறந்தது . சுவாமிகள் உடனேயே புறப்பட்டு விட்டார்கள் . அதனால் அடிக்கடி சுவாமிகளுடைய அருளைப் பெற்று எமது உள்ளுணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று அந்த நேரத்தில் ஒரு எண்ணம் எழுந்தது . அந்த எண்ணம் தோன்றியவாறே மறைந்தும் விட்டது . சுவாமிகள் சரியாக மூன்று வருடங்களில் சமாதி அடைந்து விட்டார்கள் என்பதைக் கேள்வியுற்ற போதுதான் எனது சோம்பலை நினைந்து வருந்தினேன் . உரிய சந்தர்ப்பத்தை இழந்து விட்டேனே என்று இன்றும் நினைந்து வருந்துகின்றேன் . அதற்குப் பரிகாரமாகவே சுவாமிகளுடைய திருச்சரிதத்தை எழுதும் வாய்ப்புக்கிடைத்துள்ளது என்று அதனை நினைந்து நினைந்து உள்ளம் உருகுகின்றேன் . சித்தானைப் பெயர் தரும் கருத்து . சுவரில் எழுதிய வசனங்களின் காரண கருத்தை விளங்கிக்கொள்ள ஆசைப்பட்டேன் . பலரும் பலவிதமாக உரைத்தனர் . இந்த விலாசத்தை யாரோ ஒரு மகான்தான் எழுதிச் சென்றுள்ளார் என ஒரு அன்பர் கூறினார் . சித்தானைக் குட்டிசுவாமிகள் சொல்லச் சொல்ல எழுதப்பட்ட வாக்கியங்கள் அல்ல . வந்தவருடைய உள்ளுணர்வில் தோன்றியவாறே எழுதிச் சென்றுள்ளாராம் . இதனைப்பற்றிச் சுவாமிகளிடம் ஒரு அன்பர் வினவியபோது எழுதிய வனிடம்தான் பொருள் கேட்க வேண்டுமென்று கூறி னார்களாம் . தென்னாடு சுவாமியவர்கள் யார் ? ஏன் இங்குற்றார் ? என்ன செய்து கொண்டிருக்கிறார் ? என்பன போன்ற வினாக்களுக்குச் சரியான விடையாக அமைந்திருப்பவையே அந்த வாசகங்கள் என்பது ஆசிரியர் எதிர்மன்னசிங்கம் அவர்களுடைய அபிப்பிராயமாகும் . ஆசிரியர் எதிர்மன்னசிங்கம் அவர்கள் 1930 - ஆம் வருடம் மார்கழித் திங்களில் தொடங்கி 1940 ஆம் வருடம் மார்கழித் திங்கள் வரை உள்ள பத்து வருட காலமும் சுவாமிகளோடு நெருங்கிப் பழகி உடன் உறைந்து பல உண்மைகளை அனுபவத்தில் பெற்றுக்கொண்ட பாக்கியசாலி ஆவர் . கையிலோ பணம் இல்லை . கால்நடையாகவே பிரயா ணத்தை ஆரம்பித்தார்கள் . வழிநடந்த அலுப்பு ஒருபக்கம் பசி இன்னொரு பக்கம் கண்வருத்தம் பிறிதோர் பக்கம் . இந்த நிலையில் ஒரு கடைப் பக்கத்தில் அமர்ந்திருந்தார் . அக்கடை ஒரு சிங்களவருடையது . சுவாமிகள் ஒரு திருடராய் இருக்கக்கூடுமென்று கடைக்காரர் சந்தேகித்தார் . அதை உணர்ந்த சுவாமிகள் அவ்விடத்தை விட்டு நீங்கினார்கள் . இந்த நிலையில் சாராயம் குடிக்க வேண்டும் என்ற ஒரு ஆசை பிறந்தது . ஆசை வளர்ந்து கொண்டே வந்தது . குருநாதனைக் கருத்தில் நினைந்தார் . கோபித்தார் . சாராயம் குடிக்க ஒரு வழி ஏற்படாதா என்று தமக்குள்ளேயே கர்ச்சித்தார் . திடீரென வழியை உற்று நோக்கினார் . கைக்குட்டை ஒன்றில் முடிந்தபடி 10 ரூபா கிடந்தது . குனிந்து எடுத்தார் . குருநாதனைக் கோபித்தது பற்றி மன்னிப்பும் கேட்டுக் கொண்டார் . அவ்வழியிலே பெண்கள் பலர் தண்ணீர் எடுப்பதற்காகப் போவதும் வருவதுமாக இருந் தார்கள் . இடைவிடாது பலர் நடமாடித் திரிந்தனர் . இத்தனை பேருடைய கண்ணிலும் சிக்காது அந்தப் பத்து ரூபா சுவாமி களுடைய கண்ணிலே தென்பட்டதுதான் அற்புதத்திலும் அற்புதமாகும் . அப்பணத்தைக் கையில் எடுத்ததும் நடை வேகம் அதிகரித்தது . சாராயத் தவறணை ஒன்று கண்ணுக்குத் தென்பட்டது . அங்கு சென்றார் . போதிய அளவு சாராயம் குடித்தார் . புதிய தென்பு ஏற்பட்டு விட்டது . மேலும் வேகமாக நடக்கத் தொடங்கினார் . நேரம் இருண்டு கொண்டு வந்தது . எதிரே ஒரு P.W.D. ஓவசியர் வீடு தென்பட்டது . அங்கே போனார் . அவர் ஒரு யாழ்ப்பாணத்தவர் . சுவாமிகளை அன்புடன் வரவேற்று உபசரித்து அன்றிரவு தங்குவதற்கேற்ற வசதிகள் எல்லாம் செய்து கொடுத்தார் . சுவாமிகளுடைய கண்ணுக்கு மருந்து கட்டி அது மாறும் வரைக்கும் தம்மோடே வைத்துக் கொண்டார் . சுவாமிகளுக்கு நல்ல சுகம் வரும்வரை ஊணும் உடையும் கொடுத்துப் பராமரித்தார் . கண்ணோய் நன்றாக மாறியபின் நாவலப்பிட்டிக்குச் சென்றார் . அங்கிருந்து குயீன்ஸ்பரி போய்ச் சேர்ந்தார் . தெ குயீன்ஸ்பரியில் சித்தானைசுவாமிகள் நவநாதசித்தர் சமாதியாவதற்கு முன்பு பெருமாள் அம்மையாரிடம் சித்தானைக்குட்டி சுவாமிகள் இங்கு வரக்கூடும் என்று கூறியிருந்தார்கள் . அம்மையார் சுவாமிகளைப்பற்றி அறிய ஆவல் கொண்டு அவர் எப்படி இருப்பார் என்று கேட்டார் . அதற்கு நவநாதசித்தர் அவர் ஒரு காலை நொண்டிக் கொள்வார் . அம்மா தர்மம் என்று கேட்பார் அவர்தான் எல்லாச் செல்வங்களும் நிறைந்த கப்பல் . ஆனால் பெண்ணுக்கும் கேட்பார் . தம்மை மறைத்துக் கொள்வதற்காகவே அங்ஙனம் பேசுவார் . நீங்கள் மாத்திரம் அதிலே மயங்கி ஏமாந்துவிடக் கூடாது . அவரைப் பார்த்த உடனேயே உங்கள் உள்ளத்திலே இவர்தான் சித்தானைக்குட்டி சுவாமிகள் என்று தெரிந்து கொள்வீர்கள் என்றார் . இந்தக் குறிப்புகள் எல்லாம் அம்மையாரின் மனத்திலே ஓர் உருவத்தைக் கொடுத்துப் பதிந்து கொண்டன . குயீன்ஸ்பரி சென்று சேர்ந்த சுவாமிகள் நேராக நவநாத சித்தரின் சமாதிக்குச் சென்றார்கள் . முருகப்பெருமானுக்கு வணக்கம் செலுத்தியபின் சித்தருடைய சமாதிக்கு முன்பு வந்து தியானத்தில் அமர்ந்தார்கள் . பக்கத்திலே ஓம் என்ற ஒலியுடன் அருவி நீர் சலசலத்து ஓடிக்கொண்டிருந்தது . இயற்கை அன்னையின் அரவணைப்பிலே தியானம் உடனே கைகூடிற்று . பல மணித்தியாலங்கள் சுவாமிகள் தம்மை மறந்து ஆனந்த நிலையிலே காணப்பட்டார்கள் . தோட்டத்து மக்களில் சிலர் சுவாமிகளைச் சுற்றி வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றார்கள் . சுவாமிகள் கண்விழித்தார்கள் . ' நவநாதா ' என்று சொல்லிக்கொண்டே எழுந்தார்கள் . நவநாதா ' என்ற ஒலியைக் கேட்டதும் சூழ நின்றவர்கள் எல்லோரும் மந்திரத்தால் கட்டுப்பட்டவர் போலாயினர் . இன்றும் அத்தோட்டத்து மக்களுடைய நாவிலே நவநாதருடைய திருப்பெயர் ஒலித்துக் கொண்டே இருப்பதைக் காணலாம் . ' எதற்குக் கட்டுப்படாதவர்களும் நவநாதருடைய நாமத்தைக் கேட்டவுடன் அதற்குக் கட்டுப்பட்டு விடுவார்கள் . ' சுற்றி நின்ற தொழிலாளர்களில் ஒருவர் சாமி கங்காணி அம்மா உங்களைச் சாப்பாட்டிற்கு அழைப்பதற்குக் காத்துக் கொண்டிருப்பார்கள் . கெதியாகப் போங்கள் என்று கூறியதோடு தானே கூட்டிச் சென்று வீட்டில் விடுவதாகவும் கூறினார் . தொழிலாளி தூரத்தில் நின்றே வீட்டைக் காட்டிவிட்டுத் தன்பாட்டில் போய்விட்டார் . பெருமாள் அம்மாவின் வீடடைந்த சுவாமிகள் அம்மா தர்மம் என்று குரல் கொடுத்தார்கள் . வீட்டினுள் இருந்த அம்மையாரின் காதில் இச்சத்தம் கணீரென்று விழுந்தது . எப்பொழுதோ கேட்டகுரல் மாதிரி ஒரு பிரமை . அம்மையார் சத்தம் கேட்டதும் கதவைத் திறந்து வெளியே வந்தார்கள் . சுவாமிகளின் திருத்தோற்றத்தைக் கண்டதுமே ஆளைப் புரிந்து கொண்டார்கள் . சுவாமிகளின் வருகைக்காக இங்கு எவ்வளவு காலம் காத்துக் கிடக்கிறேன் . உள்ளே வாருங்கள் சுவாமி என்று அழைத்து சுவாமிகளின் பாதம் விளக்கி பூ எடுத்து அர்ச்சித்து யான் செய்த தவம் இன்றுதான் பலித்தது . நவநாதப் பெருமானின் வார்த்தை இன்றுதான் கைகூடியது என்றெல்லாம் கூறினார்கள் . சுவாமிகளுடைய பசியைப் போக்கி சுவாமிகளுக்கு வேண்டிய உபசரணைகளை எல்லாம் குறைவறச் செய்து வந்தார்கள் . அம்மையாரின் பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் எல்லாருமே சுவாமிகளிடம் பெரிய வாரப்பாடுடையவர்களாக விளங்கினார்கள் . சுவாமிகளுக்கு என்னென்ன தேவையோ அத்தனையையும் அக்குடும்பத்தினர் மனமுவந்து நிறைவேற்றினர் . சுவாமிகள் நவநாதருடைய சமாதியிலும் நவநாத சுவாமிகள் தவம் செய்த வனத்திலும் மாறிமாறி நிட்டை கூடி இருந்தார்கள் . நவநாதசித்தருடைய சமாதி முருகன் சந்நிதியிலும் பெரிய ஆனையின் சமாதி விநாயகப் பெருமான் சந்நிதியிலும் அமைந்துள்ளதைச் சித்தானைக்குட்டி சுவாமிகள் எண்ணி எண்ணி உள்ளம் பூரித்தார்கள் . வடக்கே கடையிற் குருநாதனும் மேற்கே ஆனைகுரு நாதனும் தெற்கே நவநாதசித்தரும் சமாதியில் நிலைபெற்றி ருப்பதை எண்ணி எண்ணித் தம்மைப் பற்றிக் குருநாதன் கூறிய தீர்க்கதரிசனத்தையும் எண்ணி எண்ணி மகிழ்ந்தார்கள் . குருநாதன் கூறிய சமாதிநிலை தமக்குக் கைகூடும் நாள் எந்நாளோ என்று ஏங்கினார்கள் . ( சித்தனைக்குட்டிச் சுவாமி மீண்டும் வருவார் . ) திருச்சிற்றம்பலம் ஆக்கம் : ஆத்மஜோதி முத்தையா சுவாமிகள் தொகுப்பு : சிவத்திரு.வடிவேலு கங்காளன்