தென்னாடு மார்கழித் திங்கள் இதழ் - 15

சிலை நல்லோரை மார்கழித் திங்கள், 2021 தெ 08 தீவினை நீக்கும் திருவாதிரை நன்னாள் பெருக்க இயலாமல், மலட்டுத்தன்மை கொள்வதும், எம் முன்னைத் தீவினைப் பயன்கள் என்று நாம் எண்ணினால், அத்தீவினைப் பலன்கள் நீக்கி விட நல்வினை தரவல்ல நாதனாகிய இறைவனை, ஆதிரைக்கு முன்னரான பத்து நாட்கள் விரதமிருந்து செந் தமிழால் வழிபடுதல் உத்தமமாகும்! இதன் காரணத்தாலே தான் திரு சிவ செந்தமிழாதன் வெம்பாவைப் பாடல்களும், சிவனின் சிவத்திரு விழாக்களும் விரதங்களும் நிறைந்துள்ளன. சைவத் தமிழர்களின் வாழ்வியல், பண்ணெடுங்காலமாக பண்பட்டு, செம்மையுற்று, பயணிக்கிறது! சிறந்தே பிறந்த சைவமும் தமிழும், தோன்றிய காலத்தை வரலாற்று ஆய்வாளர்களும், அறிஞர்களும் சரிபடக் கணிக்க இயலாமல் தடுமாறி நிற்பதைக் காண்கின்றோம்! இந்த அறியமுடியாத ஆதியைக் கொண்ட பண்பாட்டின் ஆதியாக சித்தருள் முதற்சித்தராக, பிறப்பும் இறப்பும் அற்ற ஒரு பொருளாக 'சிவம்' எம்முள்ளும் எமக்கு வெளியேயும் பேரண்டத்திலும் வியாபித்து விரிகின்றது! வெளியே விரியும் சிவத்தை உள்ளே ஒடுக்கும் ஆற்றல் பெற்றவர்களே யோகிகளும் சித்தர்களுமாவார்! அவர்கள் சிற்றின்ப இச்சைகளை நீக்கி பேரின்ப அனுபவங்களோடு வாழும் பெரியவர்கள் அவர்கள் வழியில் சிவத்தை எம்முள்ளே தேடும் முயற்சியே, "ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கும்” விரதங்களாகும்! பலநூறு விரதங்கள் வருடத்தின் ஒவ்வொரு திங்களிலும் வந்தாலும், மார்களித்திங்களில் நாம் தவமியற்ற புண்ணிய காலமாக கொள்ளும். திருவெம்பாவை விரதமும், ஆதிரை நன்னாள் விழாவும் மகத்துவம் மிக்கது! "ஆரார் வந்தார் அமரர் குழாத்தில் அணியுடை ஆதிரைநாள் நாராயணனொடு நான்முகன் அங்கி இரவியும் இந்திரனும் தேரார் வீதியில் தேவர் குழாங்கள் திசையனைத்தும் நிறைந்து பாரார் தொல்புகழ் பாடியும் ஆடியும் பல்லாண்டு கூறுதுமே!" என்கின்றார் சேந்தனார். தேவர்களுக்கெல்லாம் மனிதர்கள் விழாக்கொள்ளுவதும், வேள்வி செய்தலும் இயல்பு! அவ்வாறே தேவர்கள் எல்லோருக்கும் தம் பரம்பொருளாகிய சிவனின் விழாவைக் கொண்டாடி மகிழும் திறனும் வாய்த்தது! தேவர்க்கும் தேவனாகிய இறைவனின் ஆதிரை நன்னாள் காண, எல்லாத் தேவர்களும் அவன் புகழ் பாடி கூத்தும் ஆடி, விரைந்து வந்தனர் என்பதில் இருந்தே நாம் உணர்ந்து தெளிவோம். எம்வாழ்வியலோடு ஒன்றித்த எந்த விரதங்களும் கொண்டிராத தெளிவான, பத்தி இலக்கிய ஆதாரங்களை திருவாதிரை விரதம். கொண்டிருக்கும் பாங்கு அதன் வரலாற்றுக் தொன்மையை எமக்கு எடுத்தியம்புகின்றது! சங்கப்பாடல்கள் 'தை நீராடல்' என்று பதிவு செய்தாலும் கூட, அது மார்கழித் திங்களில் நிறைமதியில் ஆரம்பிக்கும் நீராட்டு மறு திங்களாகிய தைத்திங்கள் நிறைமதி வரை தொடர்ந்திருக்க வேண்டும் என்றும், அது ஒரு திங்களில் இருந்து மறு திங்கள் நிறைமதி வரை நீண்ட பெருவிழா என்றும் சைவ சமய ஆய்வாளர்கள் கூறுவர். அது நிற்கவும். திருவாதவூரடிகள் (மணிவாசகசுவாமிகள்) 'திருவெம்பாவை’ என்றும், அப்பர் பெருமானோ, ஆரூர் திருப்பதிகமாகவும் திருவாதிரைப் பெருவிழாவை வரலாற்றுச் சான்றுகளோடு முன்வைக்கின்றார்!. "குணங்கள் பேசிக் கூடிப் பாடித் தொண்டர்கள், பிணங்கித் தம்மிற் பித்தரைப்போல பிதற்றுவார், வணங்கி நின்று வானவர் வந்து வைகலும், அணங்கன் ஆகும் ஆதிரை நாளால் அதுவண்ணம்” தென்னாடு சிதம்பரம் நடராசர் என்று அப்பர் பெருமான் பத்துப்பாடல்கள் மூலம் ஆதிரை நாளின் சிறப்பு எங்கனம் இருந்தது என்பதை மனமுருகி எம் மனக்கண்களுக்குள் திரையெழுப்பிக் காட்டுவார்! வேதமுதல்வனாகிய இறைவனிடத்தில் ஞானம் பெற்ற, திருஞானசம்பந்தர். "ஊர்திரை வேலையுலாவும் உயர்மயிலைக் கூர்தரு வேல் வல்லார் கொற்றங்கொள் சேரிதனில் கார்தரு சோலைக் கபாலீச்சரம் அமர்ந்தான் ஆதிரைநாள் காணாதே போதியோ பூம்பாய்" தன் திருவாய் மலர்ந்து அருளி, சாம்பலில் இருந்து பூம்பாவைக்கு உயிர்கொடுத்த வரலாற்றை உயர்வோடு பேசுகையில் அங்கும் ஆதிரை நாளுக்கான சான்றும், அதன் மகத்துவமும் எம் கண்களுக்கு முன்னே விரிகின்றது! சிவனுக்குரிய நாண்மீனான திருவாதிரை, ஆதிமுதல் நாண்மீன் என்று வானியல் ஆய்வாளர் சொல்லுவார்கள், அந்த நாண்மீன் மார்கழி நாளில் கூடும் போது ஆதிரை நாள் நீராட்டு, அண்டத்தின் இயக்கத்துக்கு அடிநாதமாக விளங்கும் நடராசருக்கு இடம்பெறுதல் தனிச்சிறப்பேயாகும், ஈழத்திலும், காரைநகர் சிவாலயமாகிய ஈழத்துச் சிதம்பரம் முதலாய கோயில்கள் தோறும் பல்லாயிரம் அடியவர்கள் ஆனந்தக் கண்ணீர் சொரிய அந்த நீராடல் இடம்பெறும் பத்துநாட்கள் விரதமாக கொள்ளப்படுகின்ற இத்திருவாதிரை விரதம், நிறைவில் விழாக்கோலம் பூண்டு, இறைவர்க்கு திருமுழுக்கு இடம்பெறும் பாங்கு அருட்சிறப்பு மிக்கது! வரலாற்றுச் சான்றுகளதும், இலக்கிய ஆதாரங்களதும் அடிப்படையில், சைவத்தமிழர்களின் ஆதி விரதமாக இருக்கின்ற ஆதிரை விரதம், குறிப்பாக பெண்கள் போற்றி வழிபட்டதையும், பத்து நாட்கள் அவர்கள் விரதமிருந்து அதிகாலையில் துயில் நீங்கி, பனி, குளிரினை தோழியரை பொருட்படுத்தாது, தம் அழைத்துக்கொண்டு நீராடச் சென்று, பின் இறைவனின் புகழைப்பாடி உய்வு கொண்டனர். உடன் "மாதர்கொள் மாதரெல்லாம் மார்கழித் திங்கள் தன்னில் ஆதிரை முன் ஈரைந்தே ஆகிய தினங்களில் தம்மில் மேதகு மனைகள் தோறும் அழைத்திருள் விடிவதான போதிவர் தம்மிற் கூடிப் புனற்றடம் ஆடல் செய்வர்” என்று திருவாதவூரடிகள் புராணத்திலே கடவுள் மாமுனிவரும் ன்று கின்றார்! திருவெம்பாவை நோன்பு என்பது, மகளிரின் ஆரோக்கியம் சார்ந்தும், அதிகாலை துயிலெழும்பி கோயில் செல்கின்ற, மனப்பாங்கினூடாக ஒரு புத்துணர்வான நாளை உருவாக்கும், குளிர்ந்த நீரில் நீராடுவது, அவர்களின் கருவளத்தை காக்கின்ற செயற்பாடாகவும். அமைந்து விளங்குகின்றது! இவ்விரதம் சிவனுக்குரியதாக இருந்தாலும், சிவன் தன் பெருங் கருணையினால், அது மகளிர்க்கும், உலகின் பிற உயிர்களுக்குமானதாக செய்தருளினார்! நோய்கள் உடலை ஆட்கொள்வதும் தன் பரம்பரையைப் சத்திவடிவமாகிய திருமாலின் மீது ஆண்டாள் பாடிய பாவைப்பாடல்களும், மக்களுக்கான பாடல்களாக, எளிமைப்படுத்தப்பட்ட பாடல்களாக அமைந்து சிறக்கின்றது! "நாயிற்யடைப்பட்ட நம்மையுமோர் பொருட்படுத்துத் தாயிற் பெரிதுந் தயவுடைய தம்பெருமான் மாயப் பிறப்பறுத்துத் தாண்டானென் வல்வினையின் வாயிற் பொடியட்டிப் பூவல்லி கொய்யாமோ” என்கின்றார் திருவாதவூரடிகள்! நாயினும் கடைப்பட்ட எம்மீதும், இறைவன் தாயினைப்போல தயவு கொண்டு, இந்த மாயப்பிறவியில் இருந்து நாம் விடுபட்டு வல்வினைகள் நீங்குவதற்காகவே அருளினான், அவன் புகழ்பாடியவாறே பூக்களை கொய்யுங்கள் என்று அவர் அறிவுறுத்துகின்றார்! ஆதிரையின் முதல்வன் என்றும், ஆதிரையான் என்றும் சிவனுக்குத் தனிச்சிறப்பான பெயர்கள் உண்டு! இந்த ஆதிரை நன்னாளும், மார்கழியில் வருவதனால், மார்கழியின் வைகறைப்பொழுதில் நாமும், தேவர்கள் தம் நாளின் வைகறைப்பொழுதாகிய மார்கழி முழுவதும் இறைவழிபாடு இயற்றும் செய்தி காலம் தோறும் கடத்தப்பட்டு, வழிபடப்பட்டு, கையளிக்கப்பட்ட செய்தியாகும்! தென்னகத்தின் சிதம்பரத்திலும், திருவாரூரிலும் நடராசருக்கு செய்யப்படும் வழிபாடுகளையும், திருத்தேரில் நடராசர் வீதியுலா வருவதையும் கண்கொள்ளாக் காட்சி என்று பலரும் வியந்து போற்றுவர்! தாருகா வனத்து முனிவர்கள் மாயையால் சிக்குண்டு, தமக்கு ஆதாரமான சிவனை மதிக்காது சிவனை விட தாம் உயர்ந்தவர்கள் என்றும், தம் வேத வேள்வியே சிறந்தது என்று எண்ணி, ஒரு பெரு வேள்வி செய்து, மத யானை ஒன்றை சிவனை அழிக்க ஏவியதாகவும், அந்த மதயானையைக் கொன்று அதன் தேலினைசிவன்தன்போர்வையாக்கியதாகவும், இறுதியில் முயலகன் என்ற கணத்தை ஏவியதாகவும் அதனை எம்பெருமான் தன் காலடியில் போட்டு இடக்காலைத் தூக்கி நடனம் ஆடியதாகவும், அந்த நடனத் திருகாட்சியே, திருவாதிரை அருட்காட்சி என்றும், சமயவாதிகள் பழம்செய்தியொன்றையும் பகிர்வார்! ஆணவத்தின் வடிவமாகிய, அறியாமையின் உருவமாகிய முயலகனை அறிவுப் பிழம்பாகிய சிவபெருமான் தன் காலடியில் மிதிப்பதாகக் காட்டுவது அருட்குறிப்பேயாகும். அத்துடன் முயலகன் என்பது ஒருவித வலிப்பு நோயையும் குறிக்கும் சொல்லாகிறது எனவே எல்லா நோய்துன்பங்களில் இருந்தும் நம்மைக் காத்து நிற்பான் இறைவன் என்பதை திருவாதிரை அருட்காட்சி உணர்த்துகின்றது! திருவாதிரை விரதம் என்பது ஆரோக்கியத்தை அடிப்படையாகக் கொண்டது! உள்ளத்துத் துய்மையையும் உடல்த்தூ ய்மையையும் வலியுறுத்துவது! அதனால் தான் உடலை தூய்மை செய்யும் நீராடலையும், உள்ளத்தை தூய்மை செய்யும் இறை வழிபாட்டையும் மலர்பறிக்கும் போதே இறைவனின் புகழைப்பாட வேண்டும் என்ற சிந்தனையும் சிறந்தது எனலாம் திருவாதிரை நாளில் இறை அழுதாக, உழுந்திலே செய்த களியை அடியவர்களுக்கு வழங்குவார். 'திருவாதிரைக்கு ஒரு வாய்க்களி' என்ற சொல்லாடல் தமிழகத்தில் இருப்பதைக் காண்கின்றோம்! உடலுக்கு சத்தியை வழங்கவல்ல உழுந்திலே களிசெய்து அதனை, உட்கொள்வது, நோயெதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் செயலேயாகும்! எனவே, சமயமும் வாழ்வும், சேர்ந்து தவமாக வரும் திருவாதிரை விரதத்தின் தனிச்சிறப்பை நாம் உணர்தல் நன்று. மற்றய தேவர்களுக்கும், கடவுளர்களுக்கும் கைக்கொள்ளும் எல்லா விரதங்களினதும் ஒருமித்த பலனை தந்து, எம் முன்வினைகளை நீக்கி பிறப்பிலாப் பெருவாழ்வை தரும் சிறப்பு இவ்விரதத்திற்கு உண்டு! விஞ்ஞானம் ஏற்றுக்கொள்ளும், அண்டத்தின் பெருவெடிப்பு நிகழ்ந்து பூமண்டலமும், பால் வீதிகளும் தோன்றிய போதே, திருவாதிரை நாண்மீன் கூட்டமும் தோன்றியது என்பர் ஆதியில் தோன்றியதாலேயே ‘ஆதிரை’ என்ற பெயர் பெற்றதாகவும், அதனாலையே சிவனுக்குரிய தானது என்றும் கூறுவார்கள்! உலகம் தோன்றியபோது தோன்றிய நாண்மீன் தொகுதி என்றும் அது தோன்றிய உலகில் உயிர்ப்பின் ஓசையே கேட்காத காலம் என்றும் கொள்ளலாம். அதன் காரணத்தாலும் ஆதிமுதல்வனாகிய சிவனுக்கு இவ் நாண்மீனை உரியதாக்கினர். எனவே உயிர்கள் எல்லாவற்றிற்கும் மூலமும் முதலுமான, சிவனை நினைந்து கைக்கொள்ளும் ஆதிரைநாள் விரதம் இருந்து தீவினைகளைக் களைவோமாக! திருச்சிற்றம்பலம்
சிலை நல்லோரை மார்கழித் திங்கள் 2021 தெ 08 தீவினை நீக்கும் திருவாதிரை நன்னாள் பெருக்க இயலாமல் மலட்டுத்தன்மை கொள்வதும் எம் முன்னைத் தீவினைப் பயன்கள் என்று நாம் எண்ணினால் அத்தீவினைப் பலன்கள் நீக்கி விட நல்வினை தரவல்ல நாதனாகிய இறைவனை ஆதிரைக்கு முன்னரான பத்து நாட்கள் விரதமிருந்து செந் தமிழால் வழிபடுதல் உத்தமமாகும் ! இதன் காரணத்தாலே தான் திரு சிவ செந்தமிழாதன் வெம்பாவைப் பாடல்களும் சிவனின் சிவத்திரு விழாக்களும் விரதங்களும் நிறைந்துள்ளன . சைவத் தமிழர்களின் வாழ்வியல் பண்ணெடுங்காலமாக பண்பட்டு செம்மையுற்று பயணிக்கிறது ! சிறந்தே பிறந்த சைவமும் தமிழும் தோன்றிய காலத்தை வரலாற்று ஆய்வாளர்களும் அறிஞர்களும் சரிபடக் கணிக்க இயலாமல் தடுமாறி நிற்பதைக் காண்கின்றோம் ! இந்த அறியமுடியாத ஆதியைக் கொண்ட பண்பாட்டின் ஆதியாக சித்தருள் முதற்சித்தராக பிறப்பும் இறப்பும் அற்ற ஒரு பொருளாக ' சிவம் ' எம்முள்ளும் எமக்கு வெளியேயும் பேரண்டத்திலும் வியாபித்து விரிகின்றது ! வெளியே விரியும் சிவத்தை உள்ளே ஒடுக்கும் ஆற்றல் பெற்றவர்களே யோகிகளும் சித்தர்களுமாவார் ! அவர்கள் சிற்றின்ப இச்சைகளை நீக்கி பேரின்ப அனுபவங்களோடு வாழும் பெரியவர்கள் அவர்கள் வழியில் சிவத்தை எம்முள்ளே தேடும் முயற்சியே ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கும் விரதங்களாகும் ! பலநூறு விரதங்கள் வருடத்தின் ஒவ்வொரு திங்களிலும் வந்தாலும் மார்களித்திங்களில் நாம் தவமியற்ற புண்ணிய காலமாக கொள்ளும் . திருவெம்பாவை விரதமும் ஆதிரை நன்னாள் விழாவும் மகத்துவம் மிக்கது ! ஆரார் வந்தார் அமரர் குழாத்தில் அணியுடை ஆதிரைநாள் நாராயணனொடு நான்முகன் அங்கி இரவியும் இந்திரனும் தேரார் வீதியில் தேவர் குழாங்கள் திசையனைத்தும் நிறைந்து பாரார் தொல்புகழ் பாடியும் ஆடியும் பல்லாண்டு கூறுதுமே ! என்கின்றார் சேந்தனார் . தேவர்களுக்கெல்லாம் மனிதர்கள் விழாக்கொள்ளுவதும் வேள்வி செய்தலும் இயல்பு ! அவ்வாறே தேவர்கள் எல்லோருக்கும் தம் பரம்பொருளாகிய சிவனின் விழாவைக் கொண்டாடி மகிழும் திறனும் வாய்த்தது ! தேவர்க்கும் தேவனாகிய இறைவனின் ஆதிரை நன்னாள் காண எல்லாத் தேவர்களும் அவன் புகழ் பாடி கூத்தும் ஆடி விரைந்து வந்தனர் என்பதில் இருந்தே நாம் உணர்ந்து தெளிவோம் . எம்வாழ்வியலோடு ஒன்றித்த எந்த விரதங்களும் கொண்டிராத தெளிவான பத்தி இலக்கிய ஆதாரங்களை திருவாதிரை விரதம் . கொண்டிருக்கும் பாங்கு அதன் வரலாற்றுக் தொன்மையை எமக்கு எடுத்தியம்புகின்றது ! சங்கப்பாடல்கள் ' தை நீராடல் ' என்று பதிவு செய்தாலும் கூட அது மார்கழித் திங்களில் நிறைமதியில் ஆரம்பிக்கும் நீராட்டு மறு திங்களாகிய தைத்திங்கள் நிறைமதி வரை தொடர்ந்திருக்க வேண்டும் என்றும் அது ஒரு திங்களில் இருந்து மறு திங்கள் நிறைமதி வரை நீண்ட பெருவிழா என்றும் சைவ சமய ஆய்வாளர்கள் கூறுவர் . அது நிற்கவும் . திருவாதவூரடிகள் ( மணிவாசகசுவாமிகள் ) ' திருவெம்பாவை என்றும் அப்பர் பெருமானோ ஆரூர் திருப்பதிகமாகவும் திருவாதிரைப் பெருவிழாவை வரலாற்றுச் சான்றுகளோடு முன்வைக்கின்றார் !. குணங்கள் பேசிக் கூடிப் பாடித் தொண்டர்கள் பிணங்கித் தம்மிற் பித்தரைப்போல பிதற்றுவார் வணங்கி நின்று வானவர் வந்து வைகலும் அணங்கன் ஆகும் ஆதிரை நாளால் அதுவண்ணம் தென்னாடு சிதம்பரம் நடராசர் என்று அப்பர் பெருமான் பத்துப்பாடல்கள் மூலம் ஆதிரை நாளின் சிறப்பு எங்கனம் இருந்தது என்பதை மனமுருகி எம் மனக்கண்களுக்குள் திரையெழுப்பிக் காட்டுவார் ! வேதமுதல்வனாகிய இறைவனிடத்தில் ஞானம் பெற்ற திருஞானசம்பந்தர் . ஊர்திரை வேலையுலாவும் உயர்மயிலைக் கூர்தரு வேல் வல்லார் கொற்றங்கொள் சேரிதனில் கார்தரு சோலைக் கபாலீச்சரம் அமர்ந்தான் ஆதிரைநாள் காணாதே போதியோ பூம்பாய் தன் திருவாய் மலர்ந்து அருளி சாம்பலில் இருந்து பூம்பாவைக்கு உயிர்கொடுத்த வரலாற்றை உயர்வோடு பேசுகையில் அங்கும் ஆதிரை நாளுக்கான சான்றும் அதன் மகத்துவமும் எம் கண்களுக்கு முன்னே விரிகின்றது ! சிவனுக்குரிய நாண்மீனான திருவாதிரை ஆதிமுதல் நாண்மீன் என்று வானியல் ஆய்வாளர் சொல்லுவார்கள் அந்த நாண்மீன் மார்கழி நாளில் கூடும் போது ஆதிரை நாள் நீராட்டு அண்டத்தின் இயக்கத்துக்கு அடிநாதமாக விளங்கும் நடராசருக்கு இடம்பெறுதல் தனிச்சிறப்பேயாகும் ஈழத்திலும் காரைநகர் சிவாலயமாகிய ஈழத்துச் சிதம்பரம் முதலாய கோயில்கள் தோறும் பல்லாயிரம் அடியவர்கள் ஆனந்தக் கண்ணீர் சொரிய அந்த நீராடல் இடம்பெறும் பத்துநாட்கள் விரதமாக கொள்ளப்படுகின்ற இத்திருவாதிரை விரதம் நிறைவில் விழாக்கோலம் பூண்டு இறைவர்க்கு திருமுழுக்கு இடம்பெறும் பாங்கு அருட்சிறப்பு மிக்கது ! வரலாற்றுச் சான்றுகளதும் இலக்கிய ஆதாரங்களதும் அடிப்படையில் சைவத்தமிழர்களின் ஆதி விரதமாக இருக்கின்ற ஆதிரை விரதம் குறிப்பாக பெண்கள் போற்றி வழிபட்டதையும் பத்து நாட்கள் அவர்கள் விரதமிருந்து அதிகாலையில் துயில் நீங்கி பனி குளிரினை தோழியரை பொருட்படுத்தாது தம் அழைத்துக்கொண்டு நீராடச் சென்று பின் இறைவனின் புகழைப்பாடி உய்வு கொண்டனர் . உடன் மாதர்கொள் மாதரெல்லாம் மார்கழித் திங்கள் தன்னில் ஆதிரை முன் ஈரைந்தே ஆகிய தினங்களில் தம்மில் மேதகு மனைகள் தோறும் அழைத்திருள் விடிவதான போதிவர் தம்மிற் கூடிப் புனற்றடம் ஆடல் செய்வர் என்று திருவாதவூரடிகள் புராணத்திலே கடவுள் மாமுனிவரும் ன்று கின்றார் ! திருவெம்பாவை நோன்பு என்பது மகளிரின் ஆரோக்கியம் சார்ந்தும் அதிகாலை துயிலெழும்பி கோயில் செல்கின்ற மனப்பாங்கினூடாக ஒரு புத்துணர்வான நாளை உருவாக்கும் குளிர்ந்த நீரில் நீராடுவது அவர்களின் கருவளத்தை காக்கின்ற செயற்பாடாகவும் . அமைந்து விளங்குகின்றது ! இவ்விரதம் சிவனுக்குரியதாக இருந்தாலும் சிவன் தன் பெருங் கருணையினால் அது மகளிர்க்கும் உலகின் பிற உயிர்களுக்குமானதாக செய்தருளினார் ! நோய்கள் உடலை ஆட்கொள்வதும் தன் பரம்பரையைப் சத்திவடிவமாகிய திருமாலின் மீது ஆண்டாள் பாடிய பாவைப்பாடல்களும் மக்களுக்கான பாடல்களாக எளிமைப்படுத்தப்பட்ட பாடல்களாக அமைந்து சிறக்கின்றது ! நாயிற்யடைப்பட்ட நம்மையுமோர் பொருட்படுத்துத் தாயிற் பெரிதுந் தயவுடைய தம்பெருமான் மாயப் பிறப்பறுத்துத் தாண்டானென் வல்வினையின் வாயிற் பொடியட்டிப் பூவல்லி கொய்யாமோ என்கின்றார் திருவாதவூரடிகள் ! நாயினும் கடைப்பட்ட எம்மீதும் இறைவன் தாயினைப்போல தயவு கொண்டு இந்த மாயப்பிறவியில் இருந்து நாம் விடுபட்டு வல்வினைகள் நீங்குவதற்காகவே அருளினான் அவன் புகழ்பாடியவாறே பூக்களை கொய்யுங்கள் என்று அவர் அறிவுறுத்துகின்றார் ! ஆதிரையின் முதல்வன் என்றும் ஆதிரையான் என்றும் சிவனுக்குத் தனிச்சிறப்பான பெயர்கள் உண்டு ! இந்த ஆதிரை நன்னாளும் மார்கழியில் வருவதனால் மார்கழியின் வைகறைப்பொழுதில் நாமும் தேவர்கள் தம் நாளின் வைகறைப்பொழுதாகிய மார்கழி முழுவதும் இறைவழிபாடு இயற்றும் செய்தி காலம் தோறும் கடத்தப்பட்டு வழிபடப்பட்டு கையளிக்கப்பட்ட செய்தியாகும் ! தென்னகத்தின் சிதம்பரத்திலும் திருவாரூரிலும் நடராசருக்கு செய்யப்படும் வழிபாடுகளையும் திருத்தேரில் நடராசர் வீதியுலா வருவதையும் கண்கொள்ளாக் காட்சி என்று பலரும் வியந்து போற்றுவர் ! தாருகா வனத்து முனிவர்கள் மாயையால் சிக்குண்டு தமக்கு ஆதாரமான சிவனை மதிக்காது சிவனை விட தாம் உயர்ந்தவர்கள் என்றும் தம் வேத வேள்வியே சிறந்தது என்று எண்ணி ஒரு பெரு வேள்வி செய்து மத யானை ஒன்றை சிவனை அழிக்க ஏவியதாகவும் அந்த மதயானையைக் கொன்று அதன் தேலினைசிவன்தன்போர்வையாக்கியதாகவும் இறுதியில் முயலகன் என்ற கணத்தை ஏவியதாகவும் அதனை எம்பெருமான் தன் காலடியில் போட்டு இடக்காலைத் தூக்கி நடனம் ஆடியதாகவும் அந்த நடனத் திருகாட்சியே திருவாதிரை அருட்காட்சி என்றும் சமயவாதிகள் பழம்செய்தியொன்றையும் பகிர்வார் ! ஆணவத்தின் வடிவமாகிய அறியாமையின் உருவமாகிய முயலகனை அறிவுப் பிழம்பாகிய சிவபெருமான் தன் காலடியில் மிதிப்பதாகக் காட்டுவது அருட்குறிப்பேயாகும் . அத்துடன் முயலகன் என்பது ஒருவித வலிப்பு நோயையும் குறிக்கும் சொல்லாகிறது எனவே எல்லா நோய்துன்பங்களில் இருந்தும் நம்மைக் காத்து நிற்பான் இறைவன் என்பதை திருவாதிரை அருட்காட்சி உணர்த்துகின்றது ! திருவாதிரை விரதம் என்பது ஆரோக்கியத்தை அடிப்படையாகக் கொண்டது ! உள்ளத்துத் துய்மையையும் உடல்த்தூ ய்மையையும் வலியுறுத்துவது ! அதனால் தான் உடலை தூய்மை செய்யும் நீராடலையும் உள்ளத்தை தூய்மை செய்யும் இறை வழிபாட்டையும் மலர்பறிக்கும் போதே இறைவனின் புகழைப்பாட வேண்டும் என்ற சிந்தனையும் சிறந்தது எனலாம் திருவாதிரை நாளில் இறை அழுதாக உழுந்திலே செய்த களியை அடியவர்களுக்கு வழங்குவார் . ' திருவாதிரைக்கு ஒரு வாய்க்களி ' என்ற சொல்லாடல் தமிழகத்தில் இருப்பதைக் காண்கின்றோம் ! உடலுக்கு சத்தியை வழங்கவல்ல உழுந்திலே களிசெய்து அதனை உட்கொள்வது நோயெதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் செயலேயாகும் ! எனவே சமயமும் வாழ்வும் சேர்ந்து தவமாக வரும் திருவாதிரை விரதத்தின் தனிச்சிறப்பை நாம் உணர்தல் நன்று . மற்றய தேவர்களுக்கும் கடவுளர்களுக்கும் கைக்கொள்ளும் எல்லா விரதங்களினதும் ஒருமித்த பலனை தந்து எம் முன்வினைகளை நீக்கி பிறப்பிலாப் பெருவாழ்வை தரும் சிறப்பு இவ்விரதத்திற்கு உண்டு ! விஞ்ஞானம் ஏற்றுக்கொள்ளும் அண்டத்தின் பெருவெடிப்பு நிகழ்ந்து பூமண்டலமும் பால் வீதிகளும் தோன்றிய போதே திருவாதிரை நாண்மீன் கூட்டமும் தோன்றியது என்பர் ஆதியில் தோன்றியதாலேயே ஆதிரை என்ற பெயர் பெற்றதாகவும் அதனாலையே சிவனுக்குரிய தானது என்றும் கூறுவார்கள் ! உலகம் தோன்றியபோது தோன்றிய நாண்மீன் தொகுதி என்றும் அது தோன்றிய உலகில் உயிர்ப்பின் ஓசையே கேட்காத காலம் என்றும் கொள்ளலாம் . அதன் காரணத்தாலும் ஆதிமுதல்வனாகிய சிவனுக்கு இவ் நாண்மீனை உரியதாக்கினர் . எனவே உயிர்கள் எல்லாவற்றிற்கும் மூலமும் முதலுமான சிவனை நினைந்து கைக்கொள்ளும் ஆதிரைநாள் விரதம் இருந்து தீவினைகளைக் களைவோமாக ! திருச்சிற்றம்பலம்