இலண்டன் சைவ மாநாடு (சிறப்புமலர்)

7வது சைவ மாநாடு இலண்டன் 2004 செயல்படுத்தியது. 11ம் 12ம் திகதிகளில் ஜுலை 1998ல் முதலாவது சைவ மாநாடு சிறப்பாக நடாத்தப்பெற்றதுடன், இவ்வாண்டு ஏழாவது சைவ மாநாடும் சிறப்பாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. இவ்விடத்தில் இந்த சைவ மாநாட்டின் தன்மைப் பண்புபற்றிச் சில வார்த்தைகள் குறிப்பிடுதல் அவசியமாகிறது. இம்மாநாடு சைவ சமய ஆராய்ச்சி மாநாடு அல்ல.சமய ஆராய்ச்சியை மேற்கொள்வது இம்மாநாட்டின் நோக்கமுமல்ல. இதுவரையில் அவ்வாறு நடாத்தப்படவுமில்லை. எம்மவருக்கு சமய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எமது மாநாட்டின் நோக்கமாகும். இந்நாட்டில் எமது குழந்தைகளுக்கு பாடசாலைகளில் எமது சமயத்தைப் படிக்க வாய்ப்பு இல்லை. வாரவிடுமுறைகளில் நடைபெறும் தமிழ்ப் பாடசாலைகளிலும் எமது சைவ சமயத்தைப் போதிப்பதில் ஆவல் கொண்டவை அல்ல. கோயில்களிலும் சமயத்தைக் கற்பிப்பதில் பல வசதிக் குறைவுகள் உள்ளன. இவை பற்றியெல்லாம் சிந்தித்து இயன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளத் தேவையான தூண்டல்களையும் இம்மாநாடுகள் செயல்படுத்தியுள்ளன. மாநாடுகளில் தெரிவிக்கப்பட்ட பல நல்ல கருத்துக்கள் நடைமுறையில் முழுமையாகச் செயற்படுத் தப் படவில்லையாயினும் மக்கள் மனதில் இவை பற்றி அலசி ஆராயப்பட வழிவகுத்தமை இம்மாநாடுகளே. அதுமட்டுமன்றி, எமது மக்கள், 'இந்து', 'சைவம்' என்ற சொற்களுக்கான அர்த்தங் களைப் புரியத் தொடங்கியுள்ளனர். நாம் இந்து கலாசார வழிவந்த சைவர்களே. எமது தாய்நாட்டிலேயே, கோயில் திருவிழாக்களின் போது சமயச் சொற்பொழிவுகள், கதாப்பிரசங்கள் நடைபெறும்போது ஒரு குறிப்பிட்ட மக்கள் கூட்டத்தையும், நாதஸ்வரக் கச்சேரிகள் என்றால் இன்னும் சற்று அதிகமாகவும், 'சின்னமேளம்', 'சதிர்க்கச்சேரி ' நடை பெற்றால் கூட்டம் அலைமோதியதையும் நாம் அறிவோமல்லவா? இங்கும் வீட்டிலிருந்து கொண்டு, தொலைக்காட்சியில் திரைப்படங்களையும், சின்னத்திரை தொடர் நாடகங் களையும் பார்க்க நிறைய வசதிகள் இருக்கும்போது இம்மாநாட்டுக்கு வருபவர்களின் எண் ணிக்கை குறைவாகவே இருக்கிறது. இம்மாநாடுகளில் கலந்துகொண்டு தமது சிந்தனை களைப் பெருக்கித் தமது பிள்ளைகளுக்கும் சமய அறிவை ஊட்ட வேண்டும், பிள்ளைகளும் எமது சமயத்தைப் பேணவேண்டும் என்ற சிந்தனையும் உணர்வும் உள்ளவர்கள்தான் இம்மாநாட்டுக்கு வருகிறார்கள், வருவார்கள் என்பது அறிஞர்கள் கருத்து. இம்மாநாட்டுக்கு வருபவர்கள் எண்ணிக்கை அதிகமானால் இன்னும் நல்லது. "சைவமும் தமிழும் எமது இரு கண்கள்" என்கிறோம். ஆனால் இக்காலத்தில் இங்கு இது எவ்வளவு தூரம் உண்மையாகிறது என்பதை சிந்திக்க வேண்டும். கடந்த இருபது வருடங்களுக்குள் எமது மக்கள் வாழும் மேற்குலக நாடுகளில் எத்தனை கலப்பு இனத் திருமணங்கள்? எமது சமயத்தை, கலைகளை ஆங்கிலத்திலும், பிரெஞ்,ஜேர்மன், டச், இத்தாலிய இன்னும் எத்தனை மொழிகளில் கற்கவேண்டிய சூழ்நிலைகள், இவை ஏன்? இவற்றிற்கான காரணம் என்ன? எமது முன்னோர்கள், எமது தாய்நாட்டில் சகோதர மொழி பேசும் மக்களுடன் சகோதர சமயத்தைச் சார்ந்த மக்களுடன் வாழ்ந்து எமது தனித்துவத்தைக் காப்பாற்ற வழிசமைக்கத் தவறியமையே காரணம். ஆகவே நாமும் எமது வருங்கால சந்ததியும் பல இன, மொழி, மதம் நிலவும் சூழ்நிலைகளில் வாழ்ந்தாலும், நாம் வாழும் நாட்டுச் சூழலுக்கு ஏற்ப 8
7 வது சைவ மாநாடு இலண்டன் 2004 செயல்படுத்தியது . 11 ம் 12 ம் திகதிகளில் ஜுலை 1998 ல் முதலாவது சைவ மாநாடு சிறப்பாக நடாத்தப்பெற்றதுடன் இவ்வாண்டு ஏழாவது சைவ மாநாடும் சிறப்பாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கது . இவ்விடத்தில் இந்த சைவ மாநாட்டின் தன்மைப் பண்புபற்றிச் சில வார்த்தைகள் குறிப்பிடுதல் அவசியமாகிறது . இம்மாநாடு சைவ சமய ஆராய்ச்சி மாநாடு அல்ல.சமய ஆராய்ச்சியை மேற்கொள்வது இம்மாநாட்டின் நோக்கமுமல்ல . இதுவரையில் அவ்வாறு நடாத்தப்படவுமில்லை . எம்மவருக்கு சமய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எமது மாநாட்டின் நோக்கமாகும் . இந்நாட்டில் எமது குழந்தைகளுக்கு பாடசாலைகளில் எமது சமயத்தைப் படிக்க வாய்ப்பு இல்லை . வாரவிடுமுறைகளில் நடைபெறும் தமிழ்ப் பாடசாலைகளிலும் எமது சைவ சமயத்தைப் போதிப்பதில் ஆவல் கொண்டவை அல்ல . கோயில்களிலும் சமயத்தைக் கற்பிப்பதில் பல வசதிக் குறைவுகள் உள்ளன . இவை பற்றியெல்லாம் சிந்தித்து இயன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளத் தேவையான தூண்டல்களையும் இம்மாநாடுகள் செயல்படுத்தியுள்ளன . மாநாடுகளில் தெரிவிக்கப்பட்ட பல நல்ல கருத்துக்கள் நடைமுறையில் முழுமையாகச் செயற்படுத் தப் படவில்லையாயினும் மக்கள் மனதில் இவை பற்றி அலசி ஆராயப்பட வழிவகுத்தமை இம்மாநாடுகளே . அதுமட்டுமன்றி எமது மக்கள் ' இந்து ' ' சைவம் ' என்ற சொற்களுக்கான அர்த்தங் களைப் புரியத் தொடங்கியுள்ளனர் . நாம் இந்து கலாசார வழிவந்த சைவர்களே . எமது தாய்நாட்டிலேயே கோயில் திருவிழாக்களின் போது சமயச் சொற்பொழிவுகள் கதாப்பிரசங்கள் நடைபெறும்போது ஒரு குறிப்பிட்ட மக்கள் கூட்டத்தையும் நாதஸ்வரக் கச்சேரிகள் என்றால் இன்னும் சற்று அதிகமாகவும் ' சின்னமேளம் ' ' சதிர்க்கச்சேரி ' நடை பெற்றால் கூட்டம் அலைமோதியதையும் நாம் அறிவோமல்லவா ? இங்கும் வீட்டிலிருந்து கொண்டு தொலைக்காட்சியில் திரைப்படங்களையும் சின்னத்திரை தொடர் நாடகங் களையும் பார்க்க நிறைய வசதிகள் இருக்கும்போது இம்மாநாட்டுக்கு வருபவர்களின் எண் ணிக்கை குறைவாகவே இருக்கிறது . இம்மாநாடுகளில் கலந்துகொண்டு தமது சிந்தனை களைப் பெருக்கித் தமது பிள்ளைகளுக்கும் சமய அறிவை ஊட்ட வேண்டும் பிள்ளைகளும் எமது சமயத்தைப் பேணவேண்டும் என்ற சிந்தனையும் உணர்வும் உள்ளவர்கள்தான் இம்மாநாட்டுக்கு வருகிறார்கள் வருவார்கள் என்பது அறிஞர்கள் கருத்து . இம்மாநாட்டுக்கு வருபவர்கள் எண்ணிக்கை அதிகமானால் இன்னும் நல்லது . சைவமும் தமிழும் எமது இரு கண்கள் என்கிறோம் . ஆனால் இக்காலத்தில் இங்கு இது எவ்வளவு தூரம் உண்மையாகிறது என்பதை சிந்திக்க வேண்டும் . கடந்த இருபது வருடங்களுக்குள் எமது மக்கள் வாழும் மேற்குலக நாடுகளில் எத்தனை கலப்பு இனத் திருமணங்கள் ? எமது சமயத்தை கலைகளை ஆங்கிலத்திலும் பிரெஞ் ஜேர்மன் டச் இத்தாலிய இன்னும் எத்தனை மொழிகளில் கற்கவேண்டிய சூழ்நிலைகள் இவை ஏன் ? இவற்றிற்கான காரணம் என்ன ? எமது முன்னோர்கள் எமது தாய்நாட்டில் சகோதர மொழி பேசும் மக்களுடன் சகோதர சமயத்தைச் சார்ந்த மக்களுடன் வாழ்ந்து எமது தனித்துவத்தைக் காப்பாற்ற வழிசமைக்கத் தவறியமையே காரணம் . ஆகவே நாமும் எமது வருங்கால சந்ததியும் பல இன மொழி மதம் நிலவும் சூழ்நிலைகளில் வாழ்ந்தாலும் நாம் வாழும் நாட்டுச் சூழலுக்கு ஏற்ப 8