இலண்டன் சைவ மாநாடு (சிறப்புமலர்)

7வது சைவ மாநாடு "சிவ சிவ எனச் சிவகதி தானே" – திருமந்திரம் நாயன்மார்கள் நமச்சிவாயத்தின் உறுதுணை கொண்டு நன்நெறி எய்தினர். பற்றற்ற நிலை வந்தது - இதயம் இறைவன் இருப்பிடம் ஆயிற்று. உள்ளத்தில் உத்தமன் குடி கொண்டான். "உள்ளம் பெருங் கோயில் ஊனுடம்பு ஓர் ஆலயம்" எனத் திருமூலர் சொன்னது போல், அப்பர் அழகாகக் கூறுகிறார் "நெஞ்சமே உமக்கே யிடமாக வைத்தேன் நினையா தொருபோதும் இருந் தறியேன்" மேலும் இயம்புகிறார்; "காயமே கோயிலாக கடிமனம் அடிமையாக வாய்மையே தூய்மையாக மனமணி இலிங்கமாக நேயமே நெய்யும் பாலா நிறைய நீர் அமைய ஆட்டி பூசனை ஈசவார்க்குப் போற்றிவிக் காட்டினோமே" இந்த நிலை எப்படி வந்தது என்றால், தன் னையே முழுதும் இறைவனுக்கு அர்ப்பணித்து விட்டார்கள். இதனால் உடல், பொருள், ஆவி அனைத்தையும் ஆண்டவன் ஆட்கொண்டான். "அங்கத்தை மண்ணுக் காக்கி ஆர்வத்தை உனக்கே தந்து பங்கத்தைப் போக மாற்றிப் பாவித்தேன் பரமா நின்னை சங்கொத்த மேனிச் செல்வா சாதல்நாள் நாயேன் உன்னை எங்குற்றாய் என்ற போதால் இங்குற்றேன் என்கண் டாயே" என்று அப்பர் அடிகள் பாடுகிறார். அதன் பயன் என்ன என்பதை அறிவுறுத்துகிறார். அல்லல் என் செய்யும் அருவினை என் செயும் தொல்லை வல்வினைத் சொந்தந்தான் என்செயும் தில்லை மாநகர் சிற்றம்பல வாணர்க்கு எல்லையில்லதோர் அடிமை பூண்டே னுக்குகே". மணிவாசகத்தால் திருவாதவூரரும் இதைத்தான்: "அன்றே என்றன் ஆவியும் உடலும் உடைமை எல்லாமும் குன்றே அனையாய் என்னை ஆட் கொண்டே போதே கொண்டிலையோ இன்றோர் இடையூறு எனக்குண்டோ என்தோள் முக்கண் எம்மானே நன்றே செய்வாய், பிழை செய்வாய் நானோ இதற்கு நாயகமே. மணிவாசகர் தீஞ்சுவையோடு பாடுகிறார். 98 இலண்டன் 2004 ஏன்? கம்பன் கவினுறச் சொல்கிறானே தொடக கத்திலேயே கடவுள் வணக்கமாக: *உலகம் யாவையும் தாம் உளவாக்கலும் நிலை பெறுத்தலும், நீக்கலும், நீங்கலா அலகிலா விளையாட்டு டையார் - அவர் தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே!" நாம் இந்த உயர்நிலை எய்த, தேவராத்தை ஊன்றிப் படித்தல் வேண்டும்; உள்ளம் உருகப் பாட வேண்டும்; இனிய தேவாரத்தை இசையோடு பாட வேண்டும். இசைக்கு இசைவான் இறைவன். இசையின் வடிவம் இறை. இலங்கை வேந்தன் பெருமை "ஓசை ஒலி எல்லாம் ஆனாய் நீயே" என்கிறார் நாவுக்கரசு பெருமான். "ஏழிசையாய், இசைப்பயனாய், இன்னமுதாய், என் தோழனுமாய்" என்பது சுந்தரமூர்த்தியார் வாக்கு. ஆகவேதான்; நாளும், இன்னிசையால் தமிழ் வளர்க்கும் ஞான சம்பந்தன்" என்று பெருமை கொண்டார். ஏன்? இறைவனுக்குத் தகுதி கூறுமிடத்து: "எம் இறை வீணை வாசிக்குமே" என்று பெருமிதம் கொள்கிறான் யாழின் அரசன் இலங்கை வேந்தன். இசையாய் ஒலிநயம் எழுகிறது. ஒலிநயம் சிறந்தால் உயிர்ப் பண்பாகச் சிறப்புறும் கவிதை. "கவிதை என்பது இசை போன்று கேட்க உகந்தது. செவிகட்குத் தக்க விருந்தளிப்பதாக அஃது இருத்தல் வேண்டும். ஆதலின் கவிதையை மதிப்பிடும் போது, செவிகட்கு இன்றியமையாமை அளிக்கவேண்டும். அவ்வாறு நோக்கினால் கவிதை உரத்துப் படிக்கப் பெற வேண்டும். அவ்வாறு படிக்கப் பெறுங்கால் இனிய உணர்வினை நெஞ்சில் விளைப்பது எதுவோ அதுவே உயர் கவிதை" என்பார் அறிஞர் பி.எச்.பி. லயோன். "ஆளுடைய பிள்ளையார் அமுதப் பாடல்கள், பண் கலந்து, நயம் செறிந்து, தாள அறுதிக்கேற்ற யாப்பு அமைத்து சிறக்கும் பாடல்கள் ஆதலின் இவற்றது ஒலிநய ஒழுங்கு உலகத்தாரால் உணரப்பட்டவொன் றாகும். பல்வேறு வகையான சந்த அமைப்புடன் கூடிய கலி விருத்தங்கள் இப்பாடல்கள். அச்சந்தங் களைக் கொண்ட இச்செந்தமிழ்க் கவிதைகள் 'பண்பொலிந்த அமைப்பு' (Musical thought) உடையவை" என்கிறார் செஞ்சொற் கொண்டல் சிங்காரவேலன்.
7 வது சைவ மாநாடு சிவ சிவ எனச் சிவகதி தானே திருமந்திரம் நாயன்மார்கள் நமச்சிவாயத்தின் உறுதுணை கொண்டு நன்நெறி எய்தினர் . பற்றற்ற நிலை வந்தது - இதயம் இறைவன் இருப்பிடம் ஆயிற்று . உள்ளத்தில் உத்தமன் குடி கொண்டான் . உள்ளம் பெருங் கோயில் ஊனுடம்பு ஓர் ஆலயம் எனத் திருமூலர் சொன்னது போல் அப்பர் அழகாகக் கூறுகிறார் நெஞ்சமே உமக்கே யிடமாக வைத்தேன் நினையா தொருபோதும் இருந் தறியேன் மேலும் இயம்புகிறார் ; காயமே கோயிலாக கடிமனம் அடிமையாக வாய்மையே தூய்மையாக மனமணி இலிங்கமாக நேயமே நெய்யும் பாலா நிறைய நீர் அமைய ஆட்டி பூசனை ஈசவார்க்குப் போற்றிவிக் காட்டினோமே இந்த நிலை எப்படி வந்தது என்றால் தன் னையே முழுதும் இறைவனுக்கு அர்ப்பணித்து விட்டார்கள் . இதனால் உடல் பொருள் ஆவி அனைத்தையும் ஆண்டவன் ஆட்கொண்டான் . அங்கத்தை மண்ணுக் காக்கி ஆர்வத்தை உனக்கே தந்து பங்கத்தைப் போக மாற்றிப் பாவித்தேன் பரமா நின்னை சங்கொத்த மேனிச் செல்வா சாதல்நாள் நாயேன் உன்னை எங்குற்றாய் என்ற போதால் இங்குற்றேன் என்கண் டாயே என்று அப்பர் அடிகள் பாடுகிறார் . அதன் பயன் என்ன என்பதை அறிவுறுத்துகிறார் . அல்லல் என் செய்யும் அருவினை என் செயும் தொல்லை வல்வினைத் சொந்தந்தான் என்செயும் தில்லை மாநகர் சிற்றம்பல வாணர்க்கு எல்லையில்லதோர் அடிமை பூண்டே னுக்குகே . மணிவாசகத்தால் திருவாதவூரரும் இதைத்தான் : அன்றே என்றன் ஆவியும் உடலும் உடைமை எல்லாமும் குன்றே அனையாய் என்னை ஆட் கொண்டே போதே கொண்டிலையோ இன்றோர் இடையூறு எனக்குண்டோ என்தோள் முக்கண் எம்மானே நன்றே செய்வாய் பிழை செய்வாய் நானோ இதற்கு நாயகமே . மணிவாசகர் தீஞ்சுவையோடு பாடுகிறார் . 98 இலண்டன் 2004 ஏன் ? கம்பன் கவினுறச் சொல்கிறானே தொடக கத்திலேயே கடவுள் வணக்கமாக : * உலகம் யாவையும் தாம் உளவாக்கலும் நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா அலகிலா விளையாட்டு டையார் - அவர் தலைவர் ; அன்னவர்க்கே சரண் நாங்களே ! நாம் இந்த உயர்நிலை எய்த தேவராத்தை ஊன்றிப் படித்தல் வேண்டும் ; உள்ளம் உருகப் பாட வேண்டும் ; இனிய தேவாரத்தை இசையோடு பாட வேண்டும் . இசைக்கு இசைவான் இறைவன் . இசையின் வடிவம் இறை . இலங்கை வேந்தன் பெருமை ஓசை ஒலி எல்லாம் ஆனாய் நீயே என்கிறார் நாவுக்கரசு பெருமான் . ஏழிசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய் என் தோழனுமாய் என்பது சுந்தரமூர்த்தியார் வாக்கு . ஆகவேதான் ; நாளும் இன்னிசையால் தமிழ் வளர்க்கும் ஞான சம்பந்தன் என்று பெருமை கொண்டார் . ஏன் ? இறைவனுக்குத் தகுதி கூறுமிடத்து : எம் இறை வீணை வாசிக்குமே என்று பெருமிதம் கொள்கிறான் யாழின் அரசன் இலங்கை வேந்தன் . இசையாய் ஒலிநயம் எழுகிறது . ஒலிநயம் சிறந்தால் உயிர்ப் பண்பாகச் சிறப்புறும் கவிதை . கவிதை என்பது இசை போன்று கேட்க உகந்தது . செவிகட்குத் தக்க விருந்தளிப்பதாக அஃது இருத்தல் வேண்டும் . ஆதலின் கவிதையை மதிப்பிடும் போது செவிகட்கு இன்றியமையாமை அளிக்கவேண்டும் . அவ்வாறு நோக்கினால் கவிதை உரத்துப் படிக்கப் பெற வேண்டும் . அவ்வாறு படிக்கப் பெறுங்கால் இனிய உணர்வினை நெஞ்சில் விளைப்பது எதுவோ அதுவே உயர் கவிதை என்பார் அறிஞர் பி.எச்.பி. லயோன் . ஆளுடைய பிள்ளையார் அமுதப் பாடல்கள் பண் கலந்து நயம் செறிந்து தாள அறுதிக்கேற்ற யாப்பு அமைத்து சிறக்கும் பாடல்கள் ஆதலின் இவற்றது ஒலிநய ஒழுங்கு உலகத்தாரால் உணரப்பட்டவொன் றாகும் . பல்வேறு வகையான சந்த அமைப்புடன் கூடிய கலி விருத்தங்கள் இப்பாடல்கள் . அச்சந்தங் களைக் கொண்ட இச்செந்தமிழ்க் கவிதைகள் ' பண்பொலிந்த அமைப்பு ' ( Musical thought ) உடையவை என்கிறார் செஞ்சொற் கொண்டல் சிங்காரவேலன் .