இலண்டன் சைவ மாநாடு (சிறப்புமலர்)

7வது சைவ மாநாடு அழைத்து வர ஆணையிட்டான் அமைச்சரை அனுப்பி, நாவுக்கரசர் கேட்டார்: "நீங்கள் யார்? யாரோ அரசன்?" என்று எதிர்த்து அறைகூவினார்: 'நாம் ஆர்க்கும் குடி அல்லோம் நமனை அஞ்சோம் நரகத்தில் இடர் படோம் நடலை யில்லோம் ஏமாப்போம், பிணி அறியோம் பணிவோம், அல்லோம் இன்பமே, எந்நாளும் துன்பமில்லை." அன்றே அரசனுக்கு எதிராக புரட்சிக் கொடியை உயர்த்திய உத்தமன் அவர். உண்மையும் கருணையும் ஒன்று சேர்ந்து நடத்திய புரட்சி இது. சமணர்கள் மேலும் இழைத்த தீங்குகளை; இன் னல்களை "அஞ்சுவது யாது ஒன்றும் இல்லை”, “அஞ்ச வருவதும் இல்லை” என்ற மனத்திண்மையோடு ஆண்ட வன் அருளால் அஞ்சா நெஞ்சத்தினர் ஆனார். சீர்காழி சென்ற நாவுக்கரசர் 'ஞானக் குழந்தை' யாம் ஞானசம்பந்தரைச் சந்தித்தார். அவர் அன்போடு தழுவி 'அப்பர்' எனப் பெயர் சூட்டினார். சம்பந்தரோடு திருமறைக்காடு சென்றார் அப்பர். பல்லாண்டுகளாக மூடிக்கிடந்த கோயில் கதவுகள் திறக்க, அருள் செய்ய வேண்டுகிறார்: "பண்ணின் நேர்மொழியாள் உமைப் பங்கரோ மண்ணினார் வலம்செய்ய மறைக் காடரோ கண்ணினால் உமைக் காணக் கதவினை திண்ணமாகத் திறந்து அருள்செய் மினே." "நான் உன்னைக் கண்டு களிக்க வேண்டாமா? கதவுகள் திறக்க அருள் செய்க" என்கிறார் அவர். கதவு கள் திறந்தன. எல்லையிலாக் களிப்பெய்தினார். திருவையாற்றில் திருக்கயிலாயக் காட்சி கண்டு பரவச மிகுதியால் பாடினார்: "கண்டேன் அவர்திருப்பாதம், கண்டறியாதன கண்டேன்" இதே நிலையில்தான் ஆனந்தக் கூத்தாடுகின்றார்: "ஓசை ஒலியெல்லாம் ஆனாய் நீயே உலகுக்கு ஒருவனாய் நின்றாய் நீயே வாச மலரெலாம் ஆனாய் நீயே மலையான் மருமகனாய் நின்றாய் நீயே பேசப் பெரிதும் இனியாய் நீயே பிறனாய் அடியேன்மேல் வைத்தாய் நீயே தேச விளக்கெலாம் ஆனாய் நீயே திருவையாறு அகலாத செம்பொற் சோதி" இலண்டன் 2004 அனைத்தும் நீ! உலகுக்கு ஒளி நீ! திருவை யாற்றில் நீங்காத வீசும் செம்பொன் ஒளி நீ! என்று நெஞ்சம் நெகிழ்கின்றார். இறுதியாக திருப்புகலூரில், "புண்ணியா உன் அடிக்கே போது நின்றேன். என்ற இன்ப நிலை எய்தி, இறைவன் திருவடி நிழலை அடைந்தார். சுந்தரமூர்த்தி நாயனார் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் காலத்தில் சமணமும், பௌத்தமும் தமிழகத்தை அடக்கி வைத்தி ருந்தன. இருவரும் வாழ்க்கை முழுவதும் பேராடி வெற்றி பெற்றனர். அவர்கள் ஆற்றிய அரும்பணிக்கும், தமிழுக் கும் இசைக்குச் செய்த தொண்டிற்கும் புகழுரை சூட்டு கிறார் சுந்தரமூர்த்திநாயனார்: "நாவின்மிசை அரையன்னொடு தமிழ்ஞான சம்பந்தன் யார்சிவன் அடியார்களுக்கு அடியன் அடித்தொண்டன் தேவன் திருக்கேதாரத்தை ஊரன்உரை செய்த பாவின் தமிழ்வல்லார் பரலோகத்(து) இருப்பாரே." தமிழில் வல்ல நாவுக்கரசரும், ஞானசம்பந்த ரும் சிறந்த சிவனடியார்கள் அவர்கள் மட்டுமின்றி அனைத்து சிவனடியார்களுக்கும் சிறியேன் தொண்டன். ஆரூரன் என்ற பெயர் கொண்ட சுந்தரன். சிவபெரு மானின் திருத்தலமாகிய திருக்கேதாரத்தைப் பாடியுள் ளான். அந்த அருமையான தமிழ்ப் பாடல்களைப் புனைந் தவர்கள் வானுலகில் இறைவன் திருவடி நிழலில் இன்புற்று இருக்கிறார்கள். ட "அருளாளர் பாடல்களை ஆரூரார் புகழ்வது அவ ருக்கு அடியேன் யான்" என்று உரைப்பது அவரின் உயர் பண்பு. திருநாவலூரின் அருகில் புத்தூர் சடங்கவி சிவாச் சாரியார் மகளுக்கும் நம்பி ஆரூரருக்கும் திருமணம் நடைபெறும் நேரம் சிவபெருமான் தோன்றினார். அந்தணர் வேடத்தில் அடித்துக் கூறினார்; வழக்காடு மன்றத்தில் வழக்கு "இந்த நம்பி ஆரூரன் எனக்கு அடிமை; ஆதலின் இவன் எனக்குத் தொண்டு செய்ய வேண்டும்." இம்மொழி கேட்டு சினமுற்று ஆரூரன் மறுமொழி அளித்தார்: 101 "அந்தணர், அந்தணருக்கு அடிமையாவது எங் கும் இல்லையே! நீர் பித்தரோ'
7 வது சைவ மாநாடு அழைத்து வர ஆணையிட்டான் அமைச்சரை அனுப்பி நாவுக்கரசர் கேட்டார் : நீங்கள் யார் ? யாரோ அரசன் ? என்று எதிர்த்து அறைகூவினார் : ' நாம் ஆர்க்கும் குடி அல்லோம் நமனை அஞ்சோம் நரகத்தில் இடர் படோம் நடலை யில்லோம் ஏமாப்போம் பிணி அறியோம் பணிவோம் அல்லோம் இன்பமே எந்நாளும் துன்பமில்லை . அன்றே அரசனுக்கு எதிராக புரட்சிக் கொடியை உயர்த்திய உத்தமன் அவர் . உண்மையும் கருணையும் ஒன்று சேர்ந்து நடத்திய புரட்சி இது . சமணர்கள் மேலும் இழைத்த தீங்குகளை ; இன் னல்களை அஞ்சுவது யாது ஒன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை என்ற மனத்திண்மையோடு ஆண்ட வன் அருளால் அஞ்சா நெஞ்சத்தினர் ஆனார் . சீர்காழி சென்ற நாவுக்கரசர் ' ஞானக் குழந்தை ' யாம் ஞானசம்பந்தரைச் சந்தித்தார் . அவர் அன்போடு தழுவி ' அப்பர் ' எனப் பெயர் சூட்டினார் . சம்பந்தரோடு திருமறைக்காடு சென்றார் அப்பர் . பல்லாண்டுகளாக மூடிக்கிடந்த கோயில் கதவுகள் திறக்க அருள் செய்ய வேண்டுகிறார் : பண்ணின் நேர்மொழியாள் உமைப் பங்கரோ மண்ணினார் வலம்செய்ய மறைக் காடரோ கண்ணினால் உமைக் காணக் கதவினை திண்ணமாகத் திறந்து அருள்செய் மினே . நான் உன்னைக் கண்டு களிக்க வேண்டாமா ? கதவுகள் திறக்க அருள் செய்க என்கிறார் அவர் . கதவு கள் திறந்தன . எல்லையிலாக் களிப்பெய்தினார் . திருவையாற்றில் திருக்கயிலாயக் காட்சி கண்டு பரவச மிகுதியால் பாடினார் : கண்டேன் அவர்திருப்பாதம் கண்டறியாதன கண்டேன் இதே நிலையில்தான் ஆனந்தக் கூத்தாடுகின்றார் : ஓசை ஒலியெல்லாம் ஆனாய் நீயே உலகுக்கு ஒருவனாய் நின்றாய் நீயே வாச மலரெலாம் ஆனாய் நீயே மலையான் மருமகனாய் நின்றாய் நீயே பேசப் பெரிதும் இனியாய் நீயே பிறனாய் அடியேன்மேல் வைத்தாய் நீயே தேச விளக்கெலாம் ஆனாய் நீயே திருவையாறு அகலாத செம்பொற் சோதி இலண்டன் 2004 அனைத்தும் நீ ! உலகுக்கு ஒளி நீ ! திருவை யாற்றில் நீங்காத வீசும் செம்பொன் ஒளி நீ ! என்று நெஞ்சம் நெகிழ்கின்றார் . இறுதியாக திருப்புகலூரில் புண்ணியா உன் அடிக்கே போது நின்றேன் . என்ற இன்ப நிலை எய்தி இறைவன் திருவடி நிழலை அடைந்தார் . சுந்தரமூர்த்தி நாயனார் திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் காலத்தில் சமணமும் பௌத்தமும் தமிழகத்தை அடக்கி வைத்தி ருந்தன . இருவரும் வாழ்க்கை முழுவதும் பேராடி வெற்றி பெற்றனர் . அவர்கள் ஆற்றிய அரும்பணிக்கும் தமிழுக் கும் இசைக்குச் செய்த தொண்டிற்கும் புகழுரை சூட்டு கிறார் சுந்தரமூர்த்திநாயனார் : நாவின்மிசை அரையன்னொடு தமிழ்ஞான சம்பந்தன் யார்சிவன் அடியார்களுக்கு அடியன் அடித்தொண்டன் தேவன் திருக்கேதாரத்தை ஊரன்உரை செய்த பாவின் தமிழ்வல்லார் பரலோகத் ( து ) இருப்பாரே . தமிழில் வல்ல நாவுக்கரசரும் ஞானசம்பந்த ரும் சிறந்த சிவனடியார்கள் அவர்கள் மட்டுமின்றி அனைத்து சிவனடியார்களுக்கும் சிறியேன் தொண்டன் . ஆரூரன் என்ற பெயர் கொண்ட சுந்தரன் . சிவபெரு மானின் திருத்தலமாகிய திருக்கேதாரத்தைப் பாடியுள் ளான் . அந்த அருமையான தமிழ்ப் பாடல்களைப் புனைந் தவர்கள் வானுலகில் இறைவன் திருவடி நிழலில் இன்புற்று இருக்கிறார்கள் . அருளாளர் பாடல்களை ஆரூரார் புகழ்வது அவ ருக்கு அடியேன் யான் என்று உரைப்பது அவரின் உயர் பண்பு . திருநாவலூரின் அருகில் புத்தூர் சடங்கவி சிவாச் சாரியார் மகளுக்கும் நம்பி ஆரூரருக்கும் திருமணம் நடைபெறும் நேரம் சிவபெருமான் தோன்றினார் . அந்தணர் வேடத்தில் அடித்துக் கூறினார் ; வழக்காடு மன்றத்தில் வழக்கு இந்த நம்பி ஆரூரன் எனக்கு அடிமை ; ஆதலின் இவன் எனக்குத் தொண்டு செய்ய வேண்டும் . இம்மொழி கேட்டு சினமுற்று ஆரூரன் மறுமொழி அளித்தார் : 101 அந்தணர் அந்தணருக்கு அடிமையாவது எங் கும் இல்லையே ! நீர் பித்தரோ '