இலண்டன் சைவ மாநாடு (சிறப்புமலர்)

7வது சைவ மாநாடு இலண்டன் 2004 வழக்கு திருவெண்ணெய்நல்லூர் வழக்காடு மன்றத்திற்குச் சென்றது. இந்த வழக்கைச் சுவைபடத் தீட்டியுள்ளார் சேக்கிழார் பெருமான். வழக்கு மன்றத்தில் இருந்த பஞ்சாயத்தார்கள், "மறையவர் அடிமை ஆதல் இந்த நிலத்தில் இல்லை என ஏன் சொன்னாய்?” என்று எடுத்த எடுப்பிலேயே கேட்டார்கள். பின்னர்தான் நீதிபதிகளாகவே மாறி மிக ஆணித்தரமாக, அந்தணரை நோக்கி வினா எழுப்பி னார்கள். *ஆட்சியில் ஆவணத்தில், அன்றிமற்று அயலார் தங்கள் காட்சியில் மூன்றில் ஒன்று காட்டுவாய்" உலகில் எங்குமே இல்லாத ஒரு வழக்கத்தைக் கூறும் முதியவர், ஆட்சியில், பழக்கவழக்கத்தின் அடிப் படையில் இதுபோன்று உள்ளது என்று எடுத்துக்காட்ட இயலாது. காட்டமுடியாததைக் கேட்டு, கிழவரை வேத னைப்படுத்துவது அல்ல இந்த வினாவின் நோக்கம். மரபு எழுதப்பட்ட சட்டத்தைக் காட்டிலும் மதிப்பு வாய்ந்தது. அதை எந்த நீதிமன்றமும் ஏற்றுக் கொள்ளும். ஆகவேதான் அதை முதலில் கேட்டனர். பின்னர் ஆவ ணத்திற்கு வந்தார்கள். ஆவணம் ஆதாரமான எழுத்து மூலம். கிழவர் அதைக் காட்டினார். அந்த ஆவணம் உண் மையானது என்று வழக்காடு மன்றம் ஏற்றுக் கொண் டது. அதன் அடிப்படையில் தீர்ப்பை வழங்கினார்கள். நான்மறை முனிவனார்க்கு நம்பியாரூரர்! தோற்றீர்! பான்மையின் ஏவல் செய்தல் கடன்' இறைவன் ஏன் இவ்வாறு செய்தான்? இல்லற வாழ்க்கையில் திளைத்து இறைவனை மறந்துவிடக் கூடாது. தேன் சொட்டும் பாடல்களை சுந்தரர் தம்மீது பாடவேண்டும்; அவற்றைக் கேட்டு அனுபவிக்க வேண் டும்; தமிழும், பக்தியும், பண்ணும், பண்பாடும் மேலும் உரம்பெற வேண்டும். இந்த ஆசைதான் ஆண்டவருக்கு சுந்தரர் இறைவனை "பித்தனோ?” என்று அழைத் தார். அதற்காக "பித்தா என்று தொடங்கும் பாடலைப் பாடுக" என்று பணித்தான் பரமன். இந்தப் பாட்டை கற் றவரும் மற்றவரும் பாடிப்பாடி களிக்கிறார்கள் இன்றும்: "பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா எத்தான் மறவாதே! நினைக்கின்றேன் மனத்துன்னை வைத்தாய்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூர் அருள்துறையுள் அத்தா உனக்கு ஆளாய்இனி அல்லேன் எனலாமே" திருவொற்றியூரில் சுந்தரர் அவ்வூர் கோயிலில் திருத்தொண்டு புரிந்து கொண்டிருக்கும் சங்கிலியாரைக் கண்டார். அந்தத் தையலிடத்தில் மையல் கொண்டு தமக்கு அவளை மணம் செய்விக்குமாறு இறைவனை வேண்டினார். தன்னைப் பிரியாமலிருந்தால் திருமணத் திற்கு ஒப்புக்கொள்வதாக சங்கிலியார் நிபந்தனை விதித் தார். அதை ஏற்றுக்கொண்டு சுந்தரர் திருமணம் செய்து, இனிய இல்லற வாழ்க்கையில் சிலகாலம் ஈடுபட்டிருந் தார். இறைவனைப் பற்றியவருக்கு இந்த இன்பம் எவ் வாறு நீடிக்கும்? திருவாரூர் பெருமான் நினைவுக்கு வந் தது. "மீளா அடிமை" என ஆண்டவனுக்குக் கொடுத்த வாக்குறுதியை மீறியதால் இரு கண்களையும் இழந்தார், வாழ்வு இருண்டது. ஈசனின் திருவிளையாடல்களில் இதுவும் ஒன்றே. சுந்தரருக்கு வழித்துணையாக ஒரு கோலைக் கொடுத்தார் அந்த கோதிலா நிறைவு. அதன் 'உறுதுணை' கொண்டு காஞ்சிபுரம் வந்த சுந்தரர் இறை வனைக் கெஞ்சுகிறார். அழுது நெஞ்சுருகப் பாடினார்: 102 "ஆலந்தான் உகந்து அமுது செய்தானை ஆதியை அமரர் தொழுது ஏத்தும் சீலந்தான் பெரிதும் உடையானைச் சிந்திப்பார் அவர் சிந்தை உளானை ஏலவார் குழலாள் உமை நங்கை என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற கால காலனைக் கம்பன் எம்மானைக் காணக்கண் அடியேன் பெற்றவாறே" இடக்கண்ணைப் பெற்றார். திருவாரூரை அடைந்த சுந்தரர் "தன்வாழ்வு இருண்டு விட்டதே ஒளிபெற இயலாதா? மீண்டும் நல் வாழ்வு வாழமுடியாதா?" என்று அந்த ஒப்பிலா நாயகன் மீது செல்லமாகச் சினந்து பாடுகின்றார். “நான் முழு அடிமை. இன்னும் எனக்கு உதவி செய்யாவிடில் நீங் களே நலமொடு வாழ்க!' "மீளா அடிமை உமக்கே ஆளாய்ப்பிறரை வேண்டாதே மாளாத் தீப்போல் உள்ளேகனன்று முகத்தால் மிகவாடி ஆளாய் இருக்கும் அடியார் தங்கள் அல்லல் சொன்னக்கால் வாளாங்கு இருப்பீர் திருவாருரிர் வாழ்ந்து போதீரே" இறைவன் இரக்கம் மிகுந்து இரண்டாவது கண்ணையும் ஈந்தான்; ஒளி பெற்றார் சுந்தரர். இதேபோன்று பார்வையற்ற ஆங்கில அரும் புலவன் மில்ட்டனும் கவிதையின் வாயிலாகக் கண்ணீர் வடிக்கிறார்: "ஒளிஇழந்த வாழ்க்கையை எண்ணி விம்முகிறேன், பரந்த உலகில் பார்வையின்றிப் பாதிவாழ்நாள் பரிதவித்தேன் இனி இருப்பதெல்லாம் மீளாத் துயில் பயனற்ற வாழ்விலும், உயிருள்ளவரை என் ஆண்டானுக்கு அயராது பணி செய்வேன் அதுவே பிறவிக்கடன்"
7 வது சைவ மாநாடு இலண்டன் 2004 வழக்கு திருவெண்ணெய்நல்லூர் வழக்காடு மன்றத்திற்குச் சென்றது . இந்த வழக்கைச் சுவைபடத் தீட்டியுள்ளார் சேக்கிழார் பெருமான் . வழக்கு மன்றத்தில் இருந்த பஞ்சாயத்தார்கள் மறையவர் அடிமை ஆதல் இந்த நிலத்தில் இல்லை என ஏன் சொன்னாய் ? என்று எடுத்த எடுப்பிலேயே கேட்டார்கள் . பின்னர்தான் நீதிபதிகளாகவே மாறி மிக ஆணித்தரமாக அந்தணரை நோக்கி வினா எழுப்பி னார்கள் . * ஆட்சியில் ஆவணத்தில் அன்றிமற்று அயலார் தங்கள் காட்சியில் மூன்றில் ஒன்று காட்டுவாய் உலகில் எங்குமே இல்லாத ஒரு வழக்கத்தைக் கூறும் முதியவர் ஆட்சியில் பழக்கவழக்கத்தின் அடிப் படையில் இதுபோன்று உள்ளது என்று எடுத்துக்காட்ட இயலாது . காட்டமுடியாததைக் கேட்டு கிழவரை வேத னைப்படுத்துவது அல்ல இந்த வினாவின் நோக்கம் . மரபு எழுதப்பட்ட சட்டத்தைக் காட்டிலும் மதிப்பு வாய்ந்தது . அதை எந்த நீதிமன்றமும் ஏற்றுக் கொள்ளும் . ஆகவேதான் அதை முதலில் கேட்டனர் . பின்னர் ஆவ ணத்திற்கு வந்தார்கள் . ஆவணம் ஆதாரமான எழுத்து மூலம் . கிழவர் அதைக் காட்டினார் . அந்த ஆவணம் உண் மையானது என்று வழக்காடு மன்றம் ஏற்றுக் கொண் டது . அதன் அடிப்படையில் தீர்ப்பை வழங்கினார்கள் . நான்மறை முனிவனார்க்கு நம்பியாரூரர் ! தோற்றீர் ! பான்மையின் ஏவல் செய்தல் கடன் ' இறைவன் ஏன் இவ்வாறு செய்தான் ? இல்லற வாழ்க்கையில் திளைத்து இறைவனை மறந்துவிடக் கூடாது . தேன் சொட்டும் பாடல்களை சுந்தரர் தம்மீது பாடவேண்டும் ; அவற்றைக் கேட்டு அனுபவிக்க வேண் டும் ; தமிழும் பக்தியும் பண்ணும் பண்பாடும் மேலும் உரம்பெற வேண்டும் . இந்த ஆசைதான் ஆண்டவருக்கு சுந்தரர் இறைவனை பித்தனோ ? என்று அழைத் தார் . அதற்காக பித்தா என்று தொடங்கும் பாடலைப் பாடுக என்று பணித்தான் பரமன் . இந்தப் பாட்டை கற் றவரும் மற்றவரும் பாடிப்பாடி களிக்கிறார்கள் இன்றும் : பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா எத்தான் மறவாதே ! நினைக்கின்றேன் மனத்துன்னை வைத்தாய்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூர் அருள்துறையுள் அத்தா உனக்கு ஆளாய்இனி அல்லேன் எனலாமே திருவொற்றியூரில் சுந்தரர் அவ்வூர் கோயிலில் திருத்தொண்டு புரிந்து கொண்டிருக்கும் சங்கிலியாரைக் கண்டார் . அந்தத் தையலிடத்தில் மையல் கொண்டு தமக்கு அவளை மணம் செய்விக்குமாறு இறைவனை வேண்டினார் . தன்னைப் பிரியாமலிருந்தால் திருமணத் திற்கு ஒப்புக்கொள்வதாக சங்கிலியார் நிபந்தனை விதித் தார் . அதை ஏற்றுக்கொண்டு சுந்தரர் திருமணம் செய்து இனிய இல்லற வாழ்க்கையில் சிலகாலம் ஈடுபட்டிருந் தார் . இறைவனைப் பற்றியவருக்கு இந்த இன்பம் எவ் வாறு நீடிக்கும் ? திருவாரூர் பெருமான் நினைவுக்கு வந் தது . மீளா அடிமை என ஆண்டவனுக்குக் கொடுத்த வாக்குறுதியை மீறியதால் இரு கண்களையும் இழந்தார் வாழ்வு இருண்டது . ஈசனின் திருவிளையாடல்களில் இதுவும் ஒன்றே . சுந்தரருக்கு வழித்துணையாக ஒரு கோலைக் கொடுத்தார் அந்த கோதிலா நிறைவு . அதன் ' உறுதுணை ' கொண்டு காஞ்சிபுரம் வந்த சுந்தரர் இறை வனைக் கெஞ்சுகிறார் . அழுது நெஞ்சுருகப் பாடினார் : 102 ஆலந்தான் உகந்து அமுது செய்தானை ஆதியை அமரர் தொழுது ஏத்தும் சீலந்தான் பெரிதும் உடையானைச் சிந்திப்பார் அவர் சிந்தை உளானை ஏலவார் குழலாள் உமை நங்கை என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற கால காலனைக் கம்பன் எம்மானைக் காணக்கண் அடியேன் பெற்றவாறே இடக்கண்ணைப் பெற்றார் . திருவாரூரை அடைந்த சுந்தரர் தன்வாழ்வு இருண்டு விட்டதே ஒளிபெற இயலாதா ? மீண்டும் நல் வாழ்வு வாழமுடியாதா ? என்று அந்த ஒப்பிலா நாயகன் மீது செல்லமாகச் சினந்து பாடுகின்றார் . நான் முழு அடிமை . இன்னும் எனக்கு உதவி செய்யாவிடில் நீங் களே நலமொடு வாழ்க ! ' மீளா அடிமை உமக்கே ஆளாய்ப்பிறரை வேண்டாதே மாளாத் தீப்போல் உள்ளேகனன்று முகத்தால் மிகவாடி ஆளாய் இருக்கும் அடியார் தங்கள் அல்லல் சொன்னக்கால் வாளாங்கு இருப்பீர் திருவாருரிர் வாழ்ந்து போதீரே இறைவன் இரக்கம் மிகுந்து இரண்டாவது கண்ணையும் ஈந்தான் ; ஒளி பெற்றார் சுந்தரர் . இதேபோன்று பார்வையற்ற ஆங்கில அரும் புலவன் மில்ட்டனும் கவிதையின் வாயிலாகக் கண்ணீர் வடிக்கிறார் : ஒளிஇழந்த வாழ்க்கையை எண்ணி விம்முகிறேன் பரந்த உலகில் பார்வையின்றிப் பாதிவாழ்நாள் பரிதவித்தேன் இனி இருப்பதெல்லாம் மீளாத் துயில் பயனற்ற வாழ்விலும் உயிருள்ளவரை என் ஆண்டானுக்கு அயராது பணி செய்வேன் அதுவே பிறவிக்கடன்