இலண்டன் சைவ மாநாடு (சிறப்புமலர்)

7வது சைவ மாநாடு இலண்டன் 2004 வேதாந்தமும் சித்தாந்தமும் சித்தாந்த வித்யாநிதி சு. சண்முகவேல் தூத்துக்குடி-தமிழ்நாடு இந்த இரண்டு சொற்களுக்குப் பொருள் காணு முன் அவை எந்த வகைச் சொற்கள் என்பதை முதலில் தெரிந்து கொள்ளுவது அவசியம். எந்த மொழியில் தத்துவ ஆராய்ச்சி செய்தாலும், அந்த மொழியின் கூறு பாடுகளைத் தெரிந்தபின்தான் அவற்றின் பொருள் விளக்கத்திற்குள் நுழைய வேண்டும். ஒரு சொல் இலக்கியச்சொல்லா, சமயச் சொல்லா, தத்துவச் சொல்லா, தர்க்கச்சொல்லா என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். வேதாந்தம் என்பது தத்துவச்சொல். சித்தாந்தம் என்பது தர்க்கச் சொல். வேதாந்தம் என்றால் வேதத்தின் இறுதிப்பகுதி என்றுதான் பொருள். சம்ஹிதை, பிராமணம், ஆரண்யகம், உப நிஷத் என்ற நான்கு பிரிவு களை வேதம் உடையதால் நான்காவது பகுதியாகிய பநிடதம் 'வேதாந்தம்" என்று அழைக்கப்படுகிறது. "சித்தாந்தம்" என்றால் தர்க்கசாத்திரத்தில் கூறப் ம் ஐந்து வகை அணுகுமுறையாகிய விஷயம், சம்சயம், பூர்வபட்சம், சித்தாந்தம், சங்கதி என்பனவற்றுள் நான் காவது நிலை சித்தாந்தம் என்பது. இவற்றை விளக்க வந்த சிவஞான முனிவர். 1. தன்னால் கூறப்படும் பொருளும், 2. அதன்கண் ஐயப்பாடும், 3. அதற்குப் பிறர் கூறும் பக்கமும், 4. அதனை மறுத்துரைக்கும் சித்தாந்தத் துணிபும். 5.இயைபும் என இவற்றின் நிலைக்களம் அதிகரணம் எனப்படும் என்று கூறுவார். எனவே ஒரு கொள்கையை வரையறுத்துக் கூறும் முன்னோடிச் சான்றோர் எடுத்துக் கொண்ட முடிவு, தர்க்கசாத்திர மரபில் சித்தாந்தம் என்று கூறப் படும். இந்த மரபின்படிதான் மார்க்ஸீய சித்தாந்தம், கம்யூனிச சித்தாந்தம், மாவோ சித்தாந்தம், இந்துத் துவ சித்தாந்தம் என்ற சொற்கள் வழக்கில் வந்தன. முன்பு சிவபெருமான் சிவாகமங்களில் வகுத்துச் சொன்ன முடிவு "சைவ சித்தாந்தம்" என்று சமய உலகில் கொள்ளப்பட்டது. சிவஞான சித்தியார் 267 பாடலின் "சிவாகமங்கள் சித்தாந்தம் ஆகும்” என்ற வரிகள் இக்கருத்தை மெய்ப் பிக்கின்றன. தாமரைக்குப் பங்கஜம் என்பது ஒரு பெயர். "சேற்றில் தோன்றுவது" என்ற காரணம்பற்றி அது அவ்வாறு அழைக்கப்பட்டது. சேற்றில் தோன்றுவன பல இருந்தாலும் பங்கஜம் என்பது தாமரைக்கே 106 உரியதாகிவிட்டது. இதற்குக் "காரண இடுகுறி” என்று தமிழ் இலக்கணம் கூறும். இதே போல் தான் எல்லோ ருடைய முடிவுகளும் சித்தாந்தம் என்று கூறப்பட்டாலும் சிவபெருமான் முடிவே சித்தாந்தம் என்று வழக்கில் வந்தது. "இரத்நத்திரயம்” என்ற நூலின் ஆசிரியராகிய ஸ்ரீகண்டாசாரியார் இவ்வாறு கூறுவார். சிவாகமத்தைக் கற்பதற்கு துணைபுரியும் அட்டப் பிரகரணம் என்ற எட்டு நூல்களுள் இதுவும் ஒன்று. "சித்தாந்தம் என்னும் சொல்லானது பங்கஜம் முதலிய சொற்களைப்போல, காரண இடுகுறியாய்ப் பரமசிவனால் அருளப்பெற்ற காமிகம் முதலிய 28 ஆகமங்களுக்குப் பிரசித்தமான உரிமையுடையது." வேதத்தின் முடிவு "வேதாந்தம்" என்று அழைக் கப்பட்டது போல ஆகமத்தின் முடிவு "ஆகமாந்தம்" என்ற சமயப் பெயரால் அழைக்கப்படாமல் "சித்தாந்தம்” என்ற தர்க்கப் பெயரால் அழைக்கப்பட்டது. இங்கு ஒரு கேள்வி எழும். வேதாந்தமும் சித்தாந்த மும் முரணான கொள்கைகளை உடையனவா என்பதே அக்கேள்வி! இதற்குச் சைவ ஞானிகள் கூறும் பதில் வேதமோ டாகமம் மெய்யாம் இறைவன் நூல் ஓதும் சிறப்பும் பொதுவும் என்றுள்ளன நாதன் உரை அவை நாடில் இரண்டந்தம் பேதமது என்பர், பெரியோர்க்கு அபேதமே. திருமந்திரம் 2397 "வேதாந்தத் தெளிவாம் சைவசித்தாந்தத் திறன் இங்குத் தெரிக்கல் உற்றாம்" சிவப்பிரகாசம் -7 "வேதாகம ஞான வினோத" கந்தர் அனுபூதி - 26 "வேதாந்த சித்தாந்த சமரச நன்னிலை பெற்ற வித்தகச் சித்தர் கணமே" தாயுமானவர் - சித்தர்கணம் 1. "ஓரும் வேதாந்தம் என்ற உச்சியிற் பழுத்த ஆரா இன்ப அருங்கனி பிழிந்து சாரங்கொண்ட சைவ சித்தாந்தத் தேன் அமுது" - குமரகுருபரர் பண்டார மும்மணிக் கோவை (32-35) இப்படிச் சைவ மெய்ஞ்ஞானிகளே கூறியிருக் கும் போது, எப்படி இந்த வேற்றுமை கற்பிக்கப்பட்டது என்பதை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம். நாம்
7 வது சைவ மாநாடு இலண்டன் 2004 வேதாந்தமும் சித்தாந்தமும் சித்தாந்த வித்யாநிதி சு . சண்முகவேல் தூத்துக்குடி - தமிழ்நாடு இந்த இரண்டு சொற்களுக்குப் பொருள் காணு முன் அவை எந்த வகைச் சொற்கள் என்பதை முதலில் தெரிந்து கொள்ளுவது அவசியம் . எந்த மொழியில் தத்துவ ஆராய்ச்சி செய்தாலும் அந்த மொழியின் கூறு பாடுகளைத் தெரிந்தபின்தான் அவற்றின் பொருள் விளக்கத்திற்குள் நுழைய வேண்டும் . ஒரு சொல் இலக்கியச்சொல்லா சமயச் சொல்லா தத்துவச் சொல்லா தர்க்கச்சொல்லா என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும் . வேதாந்தம் என்பது தத்துவச்சொல் . சித்தாந்தம் என்பது தர்க்கச் சொல் . வேதாந்தம் என்றால் வேதத்தின் இறுதிப்பகுதி என்றுதான் பொருள் . சம்ஹிதை பிராமணம் ஆரண்யகம் உப நிஷத் என்ற நான்கு பிரிவு களை வேதம் உடையதால் நான்காவது பகுதியாகிய பநிடதம் ' வேதாந்தம் என்று அழைக்கப்படுகிறது . சித்தாந்தம் என்றால் தர்க்கசாத்திரத்தில் கூறப் ம் ஐந்து வகை அணுகுமுறையாகிய விஷயம் சம்சயம் பூர்வபட்சம் சித்தாந்தம் சங்கதி என்பனவற்றுள் நான் காவது நிலை சித்தாந்தம் என்பது . இவற்றை விளக்க வந்த சிவஞான முனிவர் . 1. தன்னால் கூறப்படும் பொருளும் 2. அதன்கண் ஐயப்பாடும் 3. அதற்குப் பிறர் கூறும் பக்கமும் 4. அதனை மறுத்துரைக்கும் சித்தாந்தத் துணிபும் . 5.இயைபும் என இவற்றின் நிலைக்களம் அதிகரணம் எனப்படும் என்று கூறுவார் . எனவே ஒரு கொள்கையை வரையறுத்துக் கூறும் முன்னோடிச் சான்றோர் எடுத்துக் கொண்ட முடிவு தர்க்கசாத்திர மரபில் சித்தாந்தம் என்று கூறப் படும் . இந்த மரபின்படிதான் மார்க்ஸீய சித்தாந்தம் கம்யூனிச சித்தாந்தம் மாவோ சித்தாந்தம் இந்துத் துவ சித்தாந்தம் என்ற சொற்கள் வழக்கில் வந்தன . முன்பு சிவபெருமான் சிவாகமங்களில் வகுத்துச் சொன்ன முடிவு சைவ சித்தாந்தம் என்று சமய உலகில் கொள்ளப்பட்டது . சிவஞான சித்தியார் 267 பாடலின் சிவாகமங்கள் சித்தாந்தம் ஆகும் என்ற வரிகள் இக்கருத்தை மெய்ப் பிக்கின்றன . தாமரைக்குப் பங்கஜம் என்பது ஒரு பெயர் . சேற்றில் தோன்றுவது என்ற காரணம்பற்றி அது அவ்வாறு அழைக்கப்பட்டது . சேற்றில் தோன்றுவன பல இருந்தாலும் பங்கஜம் என்பது தாமரைக்கே 106 உரியதாகிவிட்டது . இதற்குக் காரண இடுகுறி என்று தமிழ் இலக்கணம் கூறும் . இதே போல் தான் எல்லோ ருடைய முடிவுகளும் சித்தாந்தம் என்று கூறப்பட்டாலும் சிவபெருமான் முடிவே சித்தாந்தம் என்று வழக்கில் வந்தது . இரத்நத்திரயம் என்ற நூலின் ஆசிரியராகிய ஸ்ரீகண்டாசாரியார் இவ்வாறு கூறுவார் . சிவாகமத்தைக் கற்பதற்கு துணைபுரியும் அட்டப் பிரகரணம் என்ற எட்டு நூல்களுள் இதுவும் ஒன்று . சித்தாந்தம் என்னும் சொல்லானது பங்கஜம் முதலிய சொற்களைப்போல காரண இடுகுறியாய்ப் பரமசிவனால் அருளப்பெற்ற காமிகம் முதலிய 28 ஆகமங்களுக்குப் பிரசித்தமான உரிமையுடையது . வேதத்தின் முடிவு வேதாந்தம் என்று அழைக் கப்பட்டது போல ஆகமத்தின் முடிவு ஆகமாந்தம் என்ற சமயப் பெயரால் அழைக்கப்படாமல் சித்தாந்தம் என்ற தர்க்கப் பெயரால் அழைக்கப்பட்டது . இங்கு ஒரு கேள்வி எழும் . வேதாந்தமும் சித்தாந்த மும் முரணான கொள்கைகளை உடையனவா என்பதே அக்கேள்வி ! இதற்குச் சைவ ஞானிகள் கூறும் பதில் வேதமோ டாகமம் மெய்யாம் இறைவன் நூல் ஓதும் சிறப்பும் பொதுவும் என்றுள்ளன நாதன் உரை அவை நாடில் இரண்டந்தம் பேதமது என்பர் பெரியோர்க்கு அபேதமே . திருமந்திரம் 2397 வேதாந்தத் தெளிவாம் சைவசித்தாந்தத் திறன் இங்குத் தெரிக்கல் உற்றாம் சிவப்பிரகாசம் -7 வேதாகம ஞான வினோத கந்தர் அனுபூதி - 26 வேதாந்த சித்தாந்த சமரச நன்னிலை பெற்ற வித்தகச் சித்தர் கணமே தாயுமானவர் - சித்தர்கணம் 1 . ஓரும் வேதாந்தம் என்ற உச்சியிற் பழுத்த ஆரா இன்ப அருங்கனி பிழிந்து சாரங்கொண்ட சைவ சித்தாந்தத் தேன் அமுது - குமரகுருபரர் பண்டார மும்மணிக் கோவை ( 32-35 ) இப்படிச் சைவ மெய்ஞ்ஞானிகளே கூறியிருக் கும் போது எப்படி இந்த வேற்றுமை கற்பிக்கப்பட்டது என்பதை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம் . நாம்