இலண்டன் சைவ மாநாடு (சிறப்புமலர்)

7வது சைவ மாநாடு இலண்டன் 2004 உணர்ந்து, பாடல், ஆடல், பல்லியம் இசைத்தல் என்பனவற்றை, வழிபாட்டிற்கென்று முறைமைப்படுத்தி வைத்தார்கள் என்பது தெளிவு, இறைவனே இசையை விரும்பினான் என்பதற்குப் பெரிய புராணமே சான்று. "பெருகிய சிறப்பின்-மிக்க அர்ச்சனை பாட்டேயாகும். ஆதலால் மண்மேல் நம்மைச் சொற்றமிழ் பாடுக" என்று தூமறைபாடும் வாயினன் ஆகிய இறைவன், சுந்தர மூர்த்தி நாயனாரை நோக்கிச் சொன்னதாக வரலாறு. ஆகவே இறைவனைப் போற்றிப் பாடுவதன் மூலம் அவனை வழிபடலாம் என்பது சான்றோர் துணிபு. நாவலர் சைவ வினாவிடைகள் யாழ்ப்பாணத்து ஆறுமுக நாவலர் அவர்கள் எழுதிய சைவ வினாவிடைகள் பெருமைக்குரிய நூல்கள். முதலாவது சைவ வினாவிடையில் ஒரு கேள்வி வருகிறது. "சைவ சமயிகள் ஓத வேண்டிய வேதங்கள் எவை" என்பது அந்தக் கேள்வி. அக் கேள்விக்கு விடையாக அவர் கூறுவது” "தேவராம், திருவாசகம் என்ற இரண்டுமாம்." என்பது. ஆனால் அதே ஆறுமுக நாவலரின் இரண்டாம் சைவவினா விடை யில் "எந்தத் தோத்திரங்களை எப்படிப் பாட வேண்டும்” என்று கேட்டுவிட்டு, அதற்கு விடையாக, "தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரிய புராணம் என்னும் அருட்பாக்களை, மனங்கசிந்துருகக், கண்ணீர்வர, உரோமம் சிலிர்ப்பப் பண்ணோடு பாட வேண்டும்" என்று கூறுகின்றார். ஆறுமுகநாவலரின் விடையை நோக்கும் போது பன்னிரு திருமுறைகளில் அடங்காத பாடல்களை, ஆறுமுகநாவலர் தோத்திரங் களாக ஏற்றுக்கொள்ளவில்லை என்று எண்ணத் தோன்றுகின்றது, அப்படிப் பார்த்தால், புராணம் என்ற வகையில் சேக்கிழாரின் பெரிய புராணப் பாடல் அல்லாத பாடல் எதையும் ஆறுமுக நாவலர் ஏற்றுக் கொள்ளவில்லை. அந்த நிலையில், திருவிளை யாடற் கந்தபுராணம் புராணம், ஆகியவற்றில் உள்ள பாடல்களை, பஞ்சபுராணப் பாடல்களாக ஏற்றுப் பாடும் நிலை எப்போது ஏற்பட்டது, யாரால் ஏற்படுத் தப்பட்டது என்பது புரியவில்லை; சிந்திக்க வேண் டிய ஒன்று. "பஞ்சபுராணம்” என்ற சொற்றொடரின்படி ஐந்து பாடல்கள் இருப்பது தான் பொருத்தம். அப்படியிருக்க, பஞ்சபுராணம் பாடும்போது, ஆறு பாடல்களைப் பாடும் பழக்கம் எப்போது ஏற்பட்டது என்பதும் புரியவில்லை. அதாவது ஆறாவது பாடலா கப் பாடப்படும் திருப்புகழ், எப்போது, பஞ்சபுராணம் என்ற கட்டமைப்புக்குள் நுழைந்தது என்பதை ஆராய்வது பயனுள்ள முயற்சி. எத்துணைப்பத்திமை நிறைந்திருந்தாலும், சிவவழிபாட்டிற்குரிய பஞ்ச புராணக் கட்டமைப்புக்குள் முருகவழிபாட்டிற்குரிய அருணகிரிநாதரின் "திருப்புகழ்” நுழைந்ததைப் புரிந்து கொள்ள முடியவில்லை. பன்னிருதிருமுறைகளுள் அடங்கியுள்ள திருமூலரின் திருமந்திரப்பாடல் எதுவும், பஞ்ச புராணத்தில் இடம்பெறாமல், பன்னிரு திருமுறை களில் அடங்காத, திருப்புகழ், திருவிளையாடற் புரா ணப் பாடல்கள், கந்தபுராணப் பாடல்கள் என்பன நுழைந்திருப்பது ஆச்சரியமாகவும், அபச்சாரமாகவும் தோன்றுகின்றது; ஆராய்ச்சி வேண்டும். தெரிந்தோ தெரியாமலோ நடந்துவிட்ட தவறுகள் போதாவென்று. வேறு பல சில்லறைப் பாடல்களும் பஞ்சபுராணம் என்ற பெயரில் இப்போது இலண்டன் கோவில்களில் அரங்கேற முயலுகின்றன. கோவில்கள் நடத்துவோரும். கோவிலில் பஞ்ச புராணம் பாட ஆசைப்படுவோரும் விழிப்பாக இருக்க வேண்டிய காலகட்டம் இது. கண்ட பாட்டுக்குக் கொண்டை முடிக்கும் பழக்கம் தவிர்க்கப்படல் வேண்டும். பெண்களும் பஞ்ச புராணமும் கவனயீனத்தாலும், அறிவீனத்தாலும், காழ்ப்பு ணர்வினாலும் அழிந்தவையும் அழிக்கப்பட்டவையும் போக எண்ணாயிரத்து இருநூற்றைம்பது தேவாரப் பாடல்கள் இப்போது வாழ்கின்றன. எண்ணாயி ரத்துக்கு மேற்பட்ட தேவாரங்கள் இருந்தும், எண்பது தேவாரங்கள் தானும் நம்மிற் பலருக்குத் தெரியாது. தெரிந்த ஒரு சில தேவாரங்களையே திரும்பத் திரும்பப் பாடிக்கொண்டிருப்பதை விட்டு விட்டுப் புதிய தேவாரங்களைப் புழக்கத்துக்குக் கொண்டுவர வேண்டியது தமிழர் கடன். தேவாரங்கள் தமிழரின் மந்திரங்கள் மட்டுமல்ல; தமிழரின் இலக்கியச் செல் வங்களும் கூட; இங்கும், தொய்வில்லாத விழிப்பு ணர்வு அவசியமாகிறது. "பெண்ணிற் பெருந்தக்க யாவுள வள்ளுவரால் போற்றப்பட்டு, "இல்லாளகத்திருக்க இல்லாத தொன்றில்லை" என்று அவ்வையாரால் புகழப்பட்ட பெண்கள் பஞ்சபுராணம் பாடலாமா என்ற சர்ச்சை இலண்டன் வாழ் ஈழத்தமிழரைக் கலக்கிக் குழப்புகின்றது. பாடலாம் என்றும் பாடலாகாது என்றும் பேசப்படுகின்றது. சில ஆனால் கோவில்களில், பெண்கள் பஞ்சபுராணம் பாடும் நிலைமை தொடர்கின்றது. நாயன்மார் காலத்திலோ, அதன் பின்னரோ, சிவன் கோவில்களில், பாடவல்ல மகளிர் பஞ்சபுராணம் பாடினார்களா என்றால், பாடினார்கள் என்பதே மறுமொழி. 113 என்று "பிங்கல நிகண்டு" என்று ஒரு சொற்றொகுதி உண்டு. அந்த நூல் ஆலயத்தில் சேவை செய்யும் பெண்களைப் "பண்மகள்", "பாடினி", "மாதங்கி " என்றெல்லாம் குறிப்பிடுகின்றது. இவர்களுக்கு, "பதியிலார்". "மாணிக்கத்தார்" என்ற பெயர்களும்
7 வது சைவ மாநாடு இலண்டன் 2004 உணர்ந்து பாடல் ஆடல் பல்லியம் இசைத்தல் என்பனவற்றை வழிபாட்டிற்கென்று முறைமைப்படுத்தி வைத்தார்கள் என்பது தெளிவு இறைவனே இசையை விரும்பினான் என்பதற்குப் பெரிய புராணமே சான்று . பெருகிய சிறப்பின் - மிக்க அர்ச்சனை பாட்டேயாகும் . ஆதலால் மண்மேல் நம்மைச் சொற்றமிழ் பாடுக என்று தூமறைபாடும் வாயினன் ஆகிய இறைவன் சுந்தர மூர்த்தி நாயனாரை நோக்கிச் சொன்னதாக வரலாறு . ஆகவே இறைவனைப் போற்றிப் பாடுவதன் மூலம் அவனை வழிபடலாம் என்பது சான்றோர் துணிபு . நாவலர் சைவ வினாவிடைகள் யாழ்ப்பாணத்து ஆறுமுக நாவலர் அவர்கள் எழுதிய சைவ வினாவிடைகள் பெருமைக்குரிய நூல்கள் . முதலாவது சைவ வினாவிடையில் ஒரு கேள்வி வருகிறது . சைவ சமயிகள் ஓத வேண்டிய வேதங்கள் எவை என்பது அந்தக் கேள்வி . அக் கேள்விக்கு விடையாக அவர் கூறுவது தேவராம் திருவாசகம் என்ற இரண்டுமாம் . என்பது . ஆனால் அதே ஆறுமுக நாவலரின் இரண்டாம் சைவவினா விடை யில் எந்தத் தோத்திரங்களை எப்படிப் பாட வேண்டும் என்று கேட்டுவிட்டு அதற்கு விடையாக தேவாரம் திருவாசகம் திருவிசைப்பா திருப்பல்லாண்டு பெரிய புராணம் என்னும் அருட்பாக்களை மனங்கசிந்துருகக் கண்ணீர்வர உரோமம் சிலிர்ப்பப் பண்ணோடு பாட வேண்டும் என்று கூறுகின்றார் . ஆறுமுகநாவலரின் விடையை நோக்கும் போது பன்னிரு திருமுறைகளில் அடங்காத பாடல்களை ஆறுமுகநாவலர் தோத்திரங் களாக ஏற்றுக்கொள்ளவில்லை என்று எண்ணத் தோன்றுகின்றது அப்படிப் பார்த்தால் புராணம் என்ற வகையில் சேக்கிழாரின் பெரிய புராணப் பாடல் அல்லாத பாடல் எதையும் ஆறுமுக நாவலர் ஏற்றுக் கொள்ளவில்லை . அந்த நிலையில் திருவிளை யாடற் கந்தபுராணம் புராணம் ஆகியவற்றில் உள்ள பாடல்களை பஞ்சபுராணப் பாடல்களாக ஏற்றுப் பாடும் நிலை எப்போது ஏற்பட்டது யாரால் ஏற்படுத் தப்பட்டது என்பது புரியவில்லை ; சிந்திக்க வேண் டிய ஒன்று . பஞ்சபுராணம் என்ற சொற்றொடரின்படி ஐந்து பாடல்கள் இருப்பது தான் பொருத்தம் . அப்படியிருக்க பஞ்சபுராணம் பாடும்போது ஆறு பாடல்களைப் பாடும் பழக்கம் எப்போது ஏற்பட்டது என்பதும் புரியவில்லை . அதாவது ஆறாவது பாடலா கப் பாடப்படும் திருப்புகழ் எப்போது பஞ்சபுராணம் என்ற கட்டமைப்புக்குள் நுழைந்தது என்பதை ஆராய்வது பயனுள்ள முயற்சி . எத்துணைப்பத்திமை நிறைந்திருந்தாலும் சிவவழிபாட்டிற்குரிய பஞ்ச புராணக் கட்டமைப்புக்குள் முருகவழிபாட்டிற்குரிய அருணகிரிநாதரின் திருப்புகழ் நுழைந்ததைப் புரிந்து கொள்ள முடியவில்லை . பன்னிருதிருமுறைகளுள் அடங்கியுள்ள திருமூலரின் திருமந்திரப்பாடல் எதுவும் பஞ்ச புராணத்தில் இடம்பெறாமல் பன்னிரு திருமுறை களில் அடங்காத திருப்புகழ் திருவிளையாடற் புரா ணப் பாடல்கள் கந்தபுராணப் பாடல்கள் என்பன நுழைந்திருப்பது ஆச்சரியமாகவும் அபச்சாரமாகவும் தோன்றுகின்றது ; ஆராய்ச்சி வேண்டும் . தெரிந்தோ தெரியாமலோ நடந்துவிட்ட தவறுகள் போதாவென்று . வேறு பல சில்லறைப் பாடல்களும் பஞ்சபுராணம் என்ற பெயரில் இப்போது இலண்டன் கோவில்களில் அரங்கேற முயலுகின்றன . கோவில்கள் நடத்துவோரும் . கோவிலில் பஞ்ச புராணம் பாட ஆசைப்படுவோரும் விழிப்பாக இருக்க வேண்டிய காலகட்டம் இது . கண்ட பாட்டுக்குக் கொண்டை முடிக்கும் பழக்கம் தவிர்க்கப்படல் வேண்டும் . பெண்களும் பஞ்ச புராணமும் கவனயீனத்தாலும் அறிவீனத்தாலும் காழ்ப்பு ணர்வினாலும் அழிந்தவையும் அழிக்கப்பட்டவையும் போக எண்ணாயிரத்து இருநூற்றைம்பது தேவாரப் பாடல்கள் இப்போது வாழ்கின்றன . எண்ணாயி ரத்துக்கு மேற்பட்ட தேவாரங்கள் இருந்தும் எண்பது தேவாரங்கள் தானும் நம்மிற் பலருக்குத் தெரியாது . தெரிந்த ஒரு சில தேவாரங்களையே திரும்பத் திரும்பப் பாடிக்கொண்டிருப்பதை விட்டு விட்டுப் புதிய தேவாரங்களைப் புழக்கத்துக்குக் கொண்டுவர வேண்டியது தமிழர் கடன் . தேவாரங்கள் தமிழரின் மந்திரங்கள் மட்டுமல்ல ; தமிழரின் இலக்கியச் செல் வங்களும் கூட ; இங்கும் தொய்வில்லாத விழிப்பு ணர்வு அவசியமாகிறது . பெண்ணிற் பெருந்தக்க யாவுள வள்ளுவரால் போற்றப்பட்டு இல்லாளகத்திருக்க இல்லாத தொன்றில்லை என்று அவ்வையாரால் புகழப்பட்ட பெண்கள் பஞ்சபுராணம் பாடலாமா என்ற சர்ச்சை இலண்டன் வாழ் ஈழத்தமிழரைக் கலக்கிக் குழப்புகின்றது . பாடலாம் என்றும் பாடலாகாது என்றும் பேசப்படுகின்றது . சில ஆனால் கோவில்களில் பெண்கள் பஞ்சபுராணம் பாடும் நிலைமை தொடர்கின்றது . நாயன்மார் காலத்திலோ அதன் பின்னரோ சிவன் கோவில்களில் பாடவல்ல மகளிர் பஞ்சபுராணம் பாடினார்களா என்றால் பாடினார்கள் என்பதே மறுமொழி . 113 என்று பிங்கல நிகண்டு என்று ஒரு சொற்றொகுதி உண்டு . அந்த நூல் ஆலயத்தில் சேவை செய்யும் பெண்களைப் பண்மகள் பாடினி மாதங்கி என்றெல்லாம் குறிப்பிடுகின்றது . இவர்களுக்கு பதியிலார் . மாணிக்கத்தார் என்ற பெயர்களும்