இலண்டன் சைவ மாநாடு (சிறப்புமலர்)

7வது சைவ மாநாடு இலண்டன் 2004 சைவத்தின் மேன்மை கலாநிதி இரத்தினம் நித்தியானந்தன், இலண்டன் சைவத்தின் மேல் சமயம் வேறில்லை. அதில்சார் சிவமாம் தெய்வத்தின் மேல் வேறு தெய்வமில்லை என்பார்கள். நம் சமயம் எந்தவொரு தனிமனிதராலும் தோற்றுவிக்கப்பட்டதில்லை. பல்லாயிரம் ஆண்டு களுக்கு முன்பே மிகச் செப்பமான திருந்திய வாழ்க்கை வாழ்ந்த நம் முன்னோர்கள் தாம் தாம் கண்டு தெளிந்த வாழ்க்கை உண்மைகளையே சிறந்த கோட்பாடுகளாகக் கொண்டு நம் சமயத்தைப் படைத்துக் கொண்டனர். சமயம் என்ற சொல்லிற்குப் பக்குவப்படுதல் என்பது தான் பொருள். ஒவ்வொரு மனிதனும் இந்த உலகத்தில் வாழ்வாங்கு முறைப்படி வாழ்வதையே உயர்ந்த சமயமா கக் கொண்டிருந்தனர். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் எண்ணில் நல்லகதிக்கு யாதும்ஓர் குறைவில்லை..." என்பார் ஞானசம்பந்தப் பெருமான். *நன்றுநம்வினை நாள்தொறும் போய் அறும் என்றும் இன்பம் தழைக்க இருக்கலாம்..." "இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை... என்பன அப்பர் பெருமான் வாக்கு. இறைவன் எங்கும் நிறைந்திருப்பவன். அவனுக்கு உருவம் கிடையாது. ஆனால் அவனை எந்த உருவத் திலும் வணங்கலாம். எங்கும் எல்லாப் பொருள்களிலும் நிறைந்திருக்கும் கடவுளை எப்படி வணங்கினாலும் சரிதானே என்பது எவ்வளவு சரியான தருக்கமாக அமைந்திருக்கின்றது. கடவுள் மனிதனுக்கு நேரடியாகக் காட்சியளிக்க மாட்டார். காரணம், கடவுள் அவ்வாறு தோன்றினால் அவரை நேரே காணும் வல்லமை நமக்குக் கிடையாது. பல்லாயிரம் கோடி கல் தொலைவிலுள்ள சூரியனை நம் கண்கள் இங்கிருந்தே நேரடியாகக் காண முடியாமல் போகும்போது, நேரடியாக அருகில் சென்று காணமுடியுமா? இதனைத்தான் சத்தாகிய கடவுள் நம் எதிர்வரின் யாவும் சூனியமாகிவிடும் என்று சிவஞான போதம் ஏழாம் சூத்திரம் கூறுகின்றது. கடவுளாகிய பரம்பொருள் முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பரம்பொருளாய் ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதியாக உள்ளது. இதற்குப் பிறப்பும் இல்லை; இறப்பும் இல்லை. வினை வசத்தால் சிக்கியுள்ள நாம்தான் வினையைப் போக்கிக் கொள்ள இறைவன் அருளால் பிறந்துள்ளோம். மாசு மறுவற்றவனாகிய பரம் பொருளாகிய இறைவன் எதற்காக மண்ணுலகில் பிறக்க வேண்டும்? இவையெல்லாம் சைவ சமயத்தின் அடிப் படை வேர்கள். சைவசமய அன்பர்கள் பூசித்து வணங்கும் சிவனடி யார்கள் எங்கும் எவ்விடத்தும் தங்களைக் கடவுள் என்று கூறிக் கொண்டதில்லை. "நாயிற்கடையாய் கிடந்த அடியேன்” என்று மணி வாசகப் பெருந்தகை சொன்னதைப் போலத்தான் எல்லா அடியார்களும் தங்களைப் புழு என்றும் ஒன்றுக்கும் உதவாதவன் என்றும் உணர்ந்து சொல்லிச் சென்றுள் ளார்கள். மனிதனைப் பற்றிச் சைவசித்தாந்தம் சொல் லும்போது "சில்வாழ்நாள் பல்பிணிச் சிற்றறிவினோர்" என்று உரைக்கும். எவ்வளவு பெரிய அறிவாளி என்று நாம் ஒருவரைக் கண்டாலும் அவர் நூறு நோபல் பரிசு பெற்றவராய் இருந்தாலும் அவர் சைவசமய மெய்ப் பொருட் கோட்பாட்டின்படிச் சிற்றறிவினர் வகையில் சேர்ந்தவரே."அறிதோறும் அறியாமை" என்பது நமக்கு மட்டு மல்ல, எந்த அறிஞருக்கும் பொருந்துவதாகும். இவ் வுலகில் கருத்தாங்கி உருப்பெற்றுப் பிறந்த எவ ருக்கும் அறியும் எல்லையும் செயற்படும் எல்லையும் உண்டு. இந்த அடிப்படையை விளங்கிக் கொண் டால் யாரையும் நாம் கடவுள் என்று சொல்லத் துணிய மாட்டோம். வைணவ சமயத்தில் சொல்லப்படும் அவதாரக் கருத்தைக்கூட நம் சைவசமயவாணர்கள் ஏற்ப தில்லை. செத்துப் பிறக்கின்ற தெய்வம் உண்மையில் பெருந்ெ தய்வமாக இருக்க முடியாது. அவற்றைச் சிறுதெய்வம் என்றுதான் சொல்ல வேண்டும். கையில் காசு இல்லாதவர்கள் கடன் வாங்கட்டும். தமிழர்கள் சமயம் பற்றிய சிந்தனையில் யாரிடத்தும் கடன் கேட்க அவர்களே யாருக்கும் கற்றுத் தரும் தகுதி படைத்தவர்கள். வேண்டாம். மும்மல அழுக்கைப் போக்க வேண்டும் "செத்துப்பிறக்கின்ற சிறுதெய்வம் சேர்வோம் அல்லோம்" என்பது நம் முன்னோர் வாக்கு. மனிதர்கள் எல்லோரும் மந்திரத்தால் மாங்காய் பறிக்கவே ஆசைப்படுகின்றனர். ஆனால் சைவ சமயக் கோட்பாட்டின்படி அதற்கு வாய்ப்பே இல்லை. அழுக் கேறிய துணியைத் துணி வெளுப்பவன் மேலும் அழுக் குமண் ஏற்றி வெளுத்துத் தூய்மை செய்வது போல் இறைவன், உயிர்களைப் பற்றிக்கிடக்கும் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மல அழுக்குகளைப் போக்க 119 ...
7 வது சைவ மாநாடு இலண்டன் 2004 சைவத்தின் மேன்மை கலாநிதி இரத்தினம் நித்தியானந்தன் இலண்டன் சைவத்தின் மேல் சமயம் வேறில்லை . அதில்சார் சிவமாம் தெய்வத்தின் மேல் வேறு தெய்வமில்லை என்பார்கள் . நம் சமயம் எந்தவொரு தனிமனிதராலும் தோற்றுவிக்கப்பட்டதில்லை . பல்லாயிரம் ஆண்டு களுக்கு முன்பே மிகச் செப்பமான திருந்திய வாழ்க்கை வாழ்ந்த நம் முன்னோர்கள் தாம் தாம் கண்டு தெளிந்த வாழ்க்கை உண்மைகளையே சிறந்த கோட்பாடுகளாகக் கொண்டு நம் சமயத்தைப் படைத்துக் கொண்டனர் . சமயம் என்ற சொல்லிற்குப் பக்குவப்படுதல் என்பது தான் பொருள் . ஒவ்வொரு மனிதனும் இந்த உலகத்தில் வாழ்வாங்கு முறைப்படி வாழ்வதையே உயர்ந்த சமயமா கக் கொண்டிருந்தனர் . மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் எண்ணில் நல்லகதிக்கு யாதும்ஓர் குறைவில்லை ... என்பார் ஞானசம்பந்தப் பெருமான் . * நன்றுநம்வினை நாள்தொறும் போய் அறும் என்றும் இன்பம் தழைக்க இருக்கலாம் ... இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை ... என்பன அப்பர் பெருமான் வாக்கு . இறைவன் எங்கும் நிறைந்திருப்பவன் . அவனுக்கு உருவம் கிடையாது . ஆனால் அவனை எந்த உருவத் திலும் வணங்கலாம் . எங்கும் எல்லாப் பொருள்களிலும் நிறைந்திருக்கும் கடவுளை எப்படி வணங்கினாலும் சரிதானே என்பது எவ்வளவு சரியான தருக்கமாக அமைந்திருக்கின்றது . கடவுள் மனிதனுக்கு நேரடியாகக் காட்சியளிக்க மாட்டார் . காரணம் கடவுள் அவ்வாறு தோன்றினால் அவரை நேரே காணும் வல்லமை நமக்குக் கிடையாது . பல்லாயிரம் கோடி கல் தொலைவிலுள்ள சூரியனை நம் கண்கள் இங்கிருந்தே நேரடியாகக் காண முடியாமல் போகும்போது நேரடியாக அருகில் சென்று காணமுடியுமா ? இதனைத்தான் சத்தாகிய கடவுள் நம் எதிர்வரின் யாவும் சூனியமாகிவிடும் என்று சிவஞான போதம் ஏழாம் சூத்திரம் கூறுகின்றது . கடவுளாகிய பரம்பொருள் முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பரம்பொருளாய் ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதியாக உள்ளது . இதற்குப் பிறப்பும் இல்லை ; இறப்பும் இல்லை . வினை வசத்தால் சிக்கியுள்ள நாம்தான் வினையைப் போக்கிக் கொள்ள இறைவன் அருளால் பிறந்துள்ளோம் . மாசு மறுவற்றவனாகிய பரம் பொருளாகிய இறைவன் எதற்காக மண்ணுலகில் பிறக்க வேண்டும் ? இவையெல்லாம் சைவ சமயத்தின் அடிப் படை வேர்கள் . சைவசமய அன்பர்கள் பூசித்து வணங்கும் சிவனடி யார்கள் எங்கும் எவ்விடத்தும் தங்களைக் கடவுள் என்று கூறிக் கொண்டதில்லை . நாயிற்கடையாய் கிடந்த அடியேன் என்று மணி வாசகப் பெருந்தகை சொன்னதைப் போலத்தான் எல்லா அடியார்களும் தங்களைப் புழு என்றும் ஒன்றுக்கும் உதவாதவன் என்றும் உணர்ந்து சொல்லிச் சென்றுள் ளார்கள் . மனிதனைப் பற்றிச் சைவசித்தாந்தம் சொல் லும்போது சில்வாழ்நாள் பல்பிணிச் சிற்றறிவினோர் என்று உரைக்கும் . எவ்வளவு பெரிய அறிவாளி என்று நாம் ஒருவரைக் கண்டாலும் அவர் நூறு நோபல் பரிசு பெற்றவராய் இருந்தாலும் அவர் சைவசமய மெய்ப் பொருட் கோட்பாட்டின்படிச் சிற்றறிவினர் வகையில் சேர்ந்தவரே . அறிதோறும் அறியாமை என்பது நமக்கு மட்டு மல்ல எந்த அறிஞருக்கும் பொருந்துவதாகும் . இவ் வுலகில் கருத்தாங்கி உருப்பெற்றுப் பிறந்த எவ ருக்கும் அறியும் எல்லையும் செயற்படும் எல்லையும் உண்டு . இந்த அடிப்படையை விளங்கிக் கொண் டால் யாரையும் நாம் கடவுள் என்று சொல்லத் துணிய மாட்டோம் . வைணவ சமயத்தில் சொல்லப்படும் அவதாரக் கருத்தைக்கூட நம் சைவசமயவாணர்கள் ஏற்ப தில்லை . செத்துப் பிறக்கின்ற தெய்வம் உண்மையில் பெருந்ெ தய்வமாக இருக்க முடியாது . அவற்றைச் சிறுதெய்வம் என்றுதான் சொல்ல வேண்டும் . கையில் காசு இல்லாதவர்கள் கடன் வாங்கட்டும் . தமிழர்கள் சமயம் பற்றிய சிந்தனையில் யாரிடத்தும் கடன் கேட்க அவர்களே யாருக்கும் கற்றுத் தரும் தகுதி படைத்தவர்கள் . வேண்டாம் . மும்மல அழுக்கைப் போக்க வேண்டும் செத்துப்பிறக்கின்ற சிறுதெய்வம் சேர்வோம் அல்லோம் என்பது நம் முன்னோர் வாக்கு . மனிதர்கள் எல்லோரும் மந்திரத்தால் மாங்காய் பறிக்கவே ஆசைப்படுகின்றனர் . ஆனால் சைவ சமயக் கோட்பாட்டின்படி அதற்கு வாய்ப்பே இல்லை . அழுக் கேறிய துணியைத் துணி வெளுப்பவன் மேலும் அழுக் குமண் ஏற்றி வெளுத்துத் தூய்மை செய்வது போல் இறைவன் உயிர்களைப் பற்றிக்கிடக்கும் ஆணவம் கன்மம் மாயை ஆகிய மும்மல அழுக்குகளைப் போக்க 119 ...