இலண்டன் சைவ மாநாடு (சிறப்புமலர்)

7வது சைவ மாநாடு இலண்டன் 20K04 சைவரும் ஆலய வழிபாடும் திருமதி. தனபாக்கியம் குணபாலசிங்கம், இலண்டன் என வலியுறுத்தியுள்ளது. இக்கருத்தினைக் பிறவிகளில் மனிதப் பட்டாலே இறப்பு, பிறப்பு வட்டத்திலிருந்து விடுபடுவர் பிறவியே மேலானது. மனித னாக ஒருவன் பிறப்பெடுத்தி ருந்தால் அதுவே கடலைக் கையால் நீந்திக் கரையேறியது போலாகும் என்பர் அருணந்தி சிவாசாரியார். அதாவது இறைவன் உயிர் களின் வினைக்கீடாக உயிர்களுடன் கூட்டுகின்ற நால்வகைத் தோற்றத்து (முட்டை, வியர்வை, வித்து, கருப்பை) எழுவகைப் பிறப்பில் (மிருகம், பறவை. ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம், மானுடர், தேவர்) எண் பத்து நான்கு நூறாயிரவுரு பேதங்களில் மானுடப் பிறவி எடுத்தலே மிக அருமையானதாகும். ஏனெனில் மனம், வாக்குக், காயங்களால் இறைவனை வழிபடவல்லவன் மனிதனே ஆவன். இந்த மானுடப் பிறவி எடுத்தாலும் சைவ வழிபாட்டு நெறியில் பொருந்துதல் என்பது இன்னும் மிக அரிதாம். ஏனெனில் இந்நெறியிலேதான் உயிரை அனாதியே பீடித்துள்ள இருள்மலங்களைத் தேயவைத்து, இறப்புப் பிறப்பெனும் வட்டத்திற் சுழல விடாமல், விடுதலையடைவதற்குரிய வழிகளும், சாத னைகளும் அருளாளர்களால் வகுத்துக் கூறப்பட்டுள் ளன. அதாவது சைவத்திலேதான் சீவனைச் சிவமாக்கும் நெறிகள் கூறப்பட்டுள்ளன. இவ்வாறு உயிர் ஈடேற்றம் பெற ஆலயவழிபாடு அவசியமென சைவம் காலந் தோறும் வலியுறுத்தி வருகின்றது. ஏனெனில் இறைவ னையும், உயிர்களையும் ஒன்றுக்கொன்று ஈர்த்திழுக் கின்ற அருட்கூடங்களாக ஆலயங்கள் அமைந்துள்ளன. ஆலயங்களில் பரம்பொருளைப் பாவனை செய்து வைக் கப்படுகின்ற உருவத்திருமேனிகள் அருட் சக்தி நிறைந் தவை. அவற்றை நாள்தோறும் கடவுளாகவே கருதி வழிபடும் உயிரானது, காலப்போக்கில் எங்கும், எதிலும் ஊடுருவியுள்ள கடவுளை எல்லாப் பொருள்களிலும் காணும் பக்குவத்தைப் பெறுகின்றது. அதனாலேதான் சைவர்கள் உருவத்திருமேனிகளை வடிக்கும் பொழுது, ஐந்து குணங்களைக் (ஒலி, தொடு தல், உருவம், சுவை, மணம்) கொண்ட கல்களில் வடிப்பதன் அவசி யத்தை உணர்ந்திருந்தனர். தமிழ், சைவம் என்ற இரண்டும் ஒன்றாகவே தோன்றி, இணைபிரியாது வளர்ந்து வருகின்றன. இந்தி யாவிலே இவையிரண்டும் மிகப்பழமை வாய்ந்தவை என ஆய்வுகள் தெரிவித்துள்ளன. எமக்குக் கிடைத்த தமிழ் இலக்கியங்கள் தமிழரின் வழிபாட்டு நெறிகளைப் பல வகையாக விபரித்துள்ளன. இவற்றுள் திருக்குறள் வாழ்த்துப்பா எனும் பகுதியில் இறைவனின் பெருமை யையும், உயிர்களின் சிறுமையையும் எடுத்துக் கூறி, மானுடர் மனம், வாக்குக்காயங்களால் இறைவனை வழி 126 "கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை (குறள் 1-9) பிறவிப் பெருங்கட னீந்துவர் நீந்தா ரிறைவ னடிசேரா தார்" (குறள் 1-10) எனும் குறள்களில் காணலாம். இதனை நன்கு கருத்திற் கொண்டவர்களாக சைவர்கள் ஆலய வழிபாட்டினை மிக அவசியமெனக் கொண்டனர். இதனை அப்பர் பெருமான், திருக்கோயில் இல்லாத திருவில் ஊரும் திருவெண்ணீ றணியாத திருவில் ஊரும் பருக்கோடிப் பத்திமையால் பாடா ஊரும் பாங்கினொடு பாதளிகள் இல்லா ஊரும் அருப்போடு மலர்பறித்திட்டுண்ணா ஊரும் அவையெல்லாம் ஊரல்ல அடவி காடே. என்றும், திருநாமம் அஞ்செழுத்தும் செப்பா ராகில் தீவண்ணர் திறம் ஒருகால் பேசார் ஆகில் ஒருகாலுந் திருக்கோயில் சூழார் ஆகில் உண்பதன்முன் மலர்பறித்திட் டுண்ணார் ஆகில் அருநோய்கள் கெடவெண்ணீ ரணியார் ஆகில் அளியற்றார் பிறந்தவா றேதோ என்னில் பெருநோய்கள் மிகநலியப் பெயர்த்துஞ் செத்துப் பிறப்பதற்கே தொழிலாகி இருக்கின்றாரே. என்றும் கூறியருளினார். பாசக் கயிறாகப் பக்தி அமைகிறது! இந்த இறைவழிபாட்டு நெறியில் முதற்படியானது சரியை நெறி என்பதாகும். ஓருயிர் இறைவன் மீது அயராத நம்பிக்கை, அன்பு, பயம் முதலான உணர்ச்சிக் கூட்டங்களுடன் கூடிய பக்தியை முதலில் பெறுதல் அவசியம். அதன்பின் மெய்வெளிப்பாடுகளும் அவரவர் தரத்திற்கேற்ப வெளிப்படும். இந்நிலையில் இறைவ னையும், பக்தனையும் பிணைக்கும் பாசக்கயிறாக பக்தி அமைகின்றது. சைவத்தின் உயிர்நாடியான பக்தியே உயிரின் ஈடேற்றத்திற்கு முதற்படியாகின்றது. இப்பக்தி நிலையில் உயிர் மனம், புத்தி, சித்தம், அகங்காரம்
7 வது சைவ மாநாடு இலண்டன் 20K04 சைவரும் ஆலய வழிபாடும் திருமதி . தனபாக்கியம் குணபாலசிங்கம் இலண்டன் என வலியுறுத்தியுள்ளது . இக்கருத்தினைக் பிறவிகளில் மனிதப் பட்டாலே இறப்பு பிறப்பு வட்டத்திலிருந்து விடுபடுவர் பிறவியே மேலானது . மனித னாக ஒருவன் பிறப்பெடுத்தி ருந்தால் அதுவே கடலைக் கையால் நீந்திக் கரையேறியது போலாகும் என்பர் அருணந்தி சிவாசாரியார் . அதாவது இறைவன் உயிர் களின் வினைக்கீடாக உயிர்களுடன் கூட்டுகின்ற நால்வகைத் தோற்றத்து ( முட்டை வியர்வை வித்து கருப்பை ) எழுவகைப் பிறப்பில் ( மிருகம் பறவை . ஊர்வன நீர்வாழ்வன தாவரம் மானுடர் தேவர் ) எண் பத்து நான்கு நூறாயிரவுரு பேதங்களில் மானுடப் பிறவி எடுத்தலே மிக அருமையானதாகும் . ஏனெனில் மனம் வாக்குக் காயங்களால் இறைவனை வழிபடவல்லவன் மனிதனே ஆவன் . இந்த மானுடப் பிறவி எடுத்தாலும் சைவ வழிபாட்டு நெறியில் பொருந்துதல் என்பது இன்னும் மிக அரிதாம் . ஏனெனில் இந்நெறியிலேதான் உயிரை அனாதியே பீடித்துள்ள இருள்மலங்களைத் தேயவைத்து இறப்புப் பிறப்பெனும் வட்டத்திற் சுழல விடாமல் விடுதலையடைவதற்குரிய வழிகளும் சாத னைகளும் அருளாளர்களால் வகுத்துக் கூறப்பட்டுள் ளன . அதாவது சைவத்திலேதான் சீவனைச் சிவமாக்கும் நெறிகள் கூறப்பட்டுள்ளன . இவ்வாறு உயிர் ஈடேற்றம் பெற ஆலயவழிபாடு அவசியமென சைவம் காலந் தோறும் வலியுறுத்தி வருகின்றது . ஏனெனில் இறைவ னையும் உயிர்களையும் ஒன்றுக்கொன்று ஈர்த்திழுக் கின்ற அருட்கூடங்களாக ஆலயங்கள் அமைந்துள்ளன . ஆலயங்களில் பரம்பொருளைப் பாவனை செய்து வைக் கப்படுகின்ற உருவத்திருமேனிகள் அருட் சக்தி நிறைந் தவை . அவற்றை நாள்தோறும் கடவுளாகவே கருதி வழிபடும் உயிரானது காலப்போக்கில் எங்கும் எதிலும் ஊடுருவியுள்ள கடவுளை எல்லாப் பொருள்களிலும் காணும் பக்குவத்தைப் பெறுகின்றது . அதனாலேதான் சைவர்கள் உருவத்திருமேனிகளை வடிக்கும் பொழுது ஐந்து குணங்களைக் ( ஒலி தொடு தல் உருவம் சுவை மணம் ) கொண்ட கல்களில் வடிப்பதன் அவசி யத்தை உணர்ந்திருந்தனர் . தமிழ் சைவம் என்ற இரண்டும் ஒன்றாகவே தோன்றி இணைபிரியாது வளர்ந்து வருகின்றன . இந்தி யாவிலே இவையிரண்டும் மிகப்பழமை வாய்ந்தவை என ஆய்வுகள் தெரிவித்துள்ளன . எமக்குக் கிடைத்த தமிழ் இலக்கியங்கள் தமிழரின் வழிபாட்டு நெறிகளைப் பல வகையாக விபரித்துள்ளன . இவற்றுள் திருக்குறள் வாழ்த்துப்பா எனும் பகுதியில் இறைவனின் பெருமை யையும் உயிர்களின் சிறுமையையும் எடுத்துக் கூறி மானுடர் மனம் வாக்குக்காயங்களால் இறைவனை வழி 126 கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை ( குறள் 1-9 ) பிறவிப் பெருங்கட னீந்துவர் நீந்தா ரிறைவ னடிசேரா தார் ( குறள் 1-10 ) எனும் குறள்களில் காணலாம் . இதனை நன்கு கருத்திற் கொண்டவர்களாக சைவர்கள் ஆலய வழிபாட்டினை மிக அவசியமெனக் கொண்டனர் . இதனை அப்பர் பெருமான் திருக்கோயில் இல்லாத திருவில் ஊரும் திருவெண்ணீ றணியாத திருவில் ஊரும் பருக்கோடிப் பத்திமையால் பாடா ஊரும் பாங்கினொடு பாதளிகள் இல்லா ஊரும் அருப்போடு மலர்பறித்திட்டுண்ணா ஊரும் அவையெல்லாம் ஊரல்ல அடவி காடே . என்றும் திருநாமம் அஞ்செழுத்தும் செப்பா ராகில் தீவண்ணர் திறம் ஒருகால் பேசார் ஆகில் ஒருகாலுந் திருக்கோயில் சூழார் ஆகில் உண்பதன்முன் மலர்பறித்திட் டுண்ணார் ஆகில் அருநோய்கள் கெடவெண்ணீ ரணியார் ஆகில் அளியற்றார் பிறந்தவா றேதோ என்னில் பெருநோய்கள் மிகநலியப் பெயர்த்துஞ் செத்துப் பிறப்பதற்கே தொழிலாகி இருக்கின்றாரே . என்றும் கூறியருளினார் . பாசக் கயிறாகப் பக்தி அமைகிறது ! இந்த இறைவழிபாட்டு நெறியில் முதற்படியானது சரியை நெறி என்பதாகும் . ஓருயிர் இறைவன் மீது அயராத நம்பிக்கை அன்பு பயம் முதலான உணர்ச்சிக் கூட்டங்களுடன் கூடிய பக்தியை முதலில் பெறுதல் அவசியம் . அதன்பின் மெய்வெளிப்பாடுகளும் அவரவர் தரத்திற்கேற்ப வெளிப்படும் . இந்நிலையில் இறைவ னையும் பக்தனையும் பிணைக்கும் பாசக்கயிறாக பக்தி அமைகின்றது . சைவத்தின் உயிர்நாடியான பக்தியே உயிரின் ஈடேற்றத்திற்கு முதற்படியாகின்றது . இப்பக்தி நிலையில் உயிர் மனம் புத்தி சித்தம் அகங்காரம்