இலண்டன் சைவ மாநாடு (சிறப்புமலர்)

7வது சைவ மாநாடு இலண்டன் 2004 அடுத்த சந்ததியின் சைவ வழிபாடு சின்னத்துரை பத்மமோகன், இலண்டன் மனித குலம் இருபத்தொன்றாம் நூற்றாண் டில் காலடி எடுத்து வைத்துள்ளது. அடுத்துவரும் ஆயிரம், ஆயிரம் ஆண்டுகளையும் வரவேற்கவும், அந்த ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளில் மனிதகுல மேம்பாட்டிற்க்கான செயற்திட்டங்களை வகுப்பதில் மேற்கு நாடுகள் ஈடு பட்டுள்ளன. மூன்றாம் உலகின் மனிதனான தமிழன், இக்காலப் பரப்பில் எங்கும் காலூன்றி நிற்கின்றான். கோயிலில்லா இடத்தில் குடியிருக்க வேண்டாம் என்றனர் அன்று; இன்றோ நாமிருக்கும் இடமெல்லாம் கோயில்கள் போட்டி போட்டுக்கொண்டு அமைக்கப் பட்டு வருகின்றன; முளைக்கின்றன. இக்கோயில்களை தொடர்ந்து நாம் எமது மன அமைதிக்காகவும் இறை வழிபாட்டிற்காகவும் பாவித்து, வளர்த்து வருவோமாயின் இப்படிக் கோயில்கள் உண்டாகுவதும், உண்டாக்கிக் கொண்டு இருப்பவர்களுக்கும் புண்ணியம் உண்டாகும். இதனை நாம் வேறு ஒரு கோணத்தில் இருந்து பார்ப் போமாயின், தொடர்ந்து இக்கோயில்கள் மனித வழி பாட்டிற்காக இருக்க வேண்டுமாயின் எமது வருங்கால சந்ததியினருக்கு இவற்றின் மகிமையினை எடுத்துக் காட்டவேண்டும், சொல்லவேண்டும். நாம் விசேட தினங்களில் ஆவது, நாம் போகும் போது எமது குழந்தை களையும், அல்லது தெரிந்த இளைஞர்களையும் அழைத்துச் சென்று கோயில் வழிபாட்டு முறைகளை எடுத்துச் சொல்ல வேண்டும்; அவற்றின் நன்மை, தீமைகளை எடுத்துக்காட்ட வேண்டும். அப்போதுதான் எமது சமுதாயம் தொடர்ந்தும் கோயிலுக்குப் போகும் பணியை நடைமுறைக்குக் கொண்டுவரும். அது மட்டு மல்ல இக்கோயில்கள் தொடர்ந்து மக்களுக்குச் சேவை செய்ய வேண்டுமாயின், வளர்ந்து வரும் சமுதாயத்தை தட்டிக் கொடுக்க வேண்டும். இசை ஒரு சக்தி. மகா முனிவராகிய பரதர் நாட்டி யத்தின் சாரம் இசை என்று கூறுகின்றார். இலங்கை, இந்தியத் தத்துவ ஞானியர்களும், கவிஞர்களும், ஆசிரியர்களும், குருமார்களும் சங்கீதத்தை சிறந்த கருவியாகக் கையாண்டு வந்துள்ளார்கள். மனித உள்ளத்தில் உணரும் ஆழ்ந்த உணர்ச் சிகளை பரம்பொருளுக்கு அறிவிக்க இசையொன்றி னால் தான் இயலும். மொழி புகமுடியாத இடங்களில் எல்லாம் இசைபுகும். கோயில்களில் அமைதியான (மக்கள் நடமாட்டம் குறை வான) சூழலில் இதனை உண ரமுடியும். இதனால் இசை என் பதினை ஆன்மாவின் பேச்சு என்று சொல்லலாம். ஆலயங்களில் ஒவ்வொரு நாளும் பூசை நடை பெறும் போதும், நல்விழாக்களின் போதும், சுவாமி வீதி வலம் சுற்றி வரும் போதும் ஆடல் பாடல்கள் நடைபெறு கின்றன. தேவாரம், பக்திப் பாடல்கள் படிக்கப்படு கின்றன. இவற்றில் எமது வருங்காலத் தூண்களாகிய குழந்தைகளைச் சேர்த்து அவர்கள் படிப்பதற்கு நாம் வழி கொடுத்தல் மிகவும் வரவேற்கத்தக்கது. எமது அடுத்த சந்ததியினரை முன்னுக்கு கொண்டுவர உதவும் முதற்படி இதுவேயாகும். சமயத்துடன் தமிழ் மொழியினையும் ஊட்டுங்கள் பஞ்சபுராணம் பாடுதல் கோயில் வழிபாட்டில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சியாகும். இதில் தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரிய புராணம் ஆகிய ஐந்து நூல்களில் இருந்து ஒவ்வொரு பாடல்களைப் பாடுவார்கள். இதற்குப் பக்கவாத்தியம் வைத்துக் கொள்ளும் பழக்கம் உண்டு. எமது குழந்தை களுக்கு (வருங்கால சந்ததியினருக்கு) இதனை ஒவ் வொரு பெற்றோரும் ஊக்கத்துடன் படித்துக் கொடுத் தால் அவர்கள் உங்களுடன் கோயிலுக்கு செல்லும் வேளைகளில், படித்துப் பழகி தன்னம்பிக்கையினை வளர்த்துக் கொள்ள முடியும். திருக்கோயில்களில் பழங்காலங்களில் இருந்தே ஆடற்கலையும், பாடற்கலையும் இணைந்தே வளர்க்கப் பட்டு வந்துள்ளன. குறிப்பாக ஆலயங்களில் ஆடலும், றோரின்) கடைமையாகும். பாடலும் சிறப்புற்று விளங்கி உள்ளன என்பதனை நாம் அறிவோம். சமயத்துடன் எமது தமிழ் மொழியினையும் சேர்த்து ஊட்ட வேண்டும். புலம்பெயர்ந்து வாழும் எம்மவருக்கு மிகவும் வசதியாக இப்போது பல கோயில்களும், பலப்பல தமிழ்ப்பாடசாலைகளும் இருக்கின்றனவே, அவற்றினை நல்லமுறையில் பிரயோசனப்படுத்துவது எமது (பெற் நாம் ஆலய வழிபாடு செய்வதும் மூர்த்திகளுக்கு நிவேதனமும், காணிக்கையும் செலுத்துவதும் எல்லாவற் றையும் படைத்த பரம்பொருளுக்கு நன்றி செலுத்து வதற்கு அறிகுறியாக செயற்படுபவை. 128 ஆலயம் என்பதில் "ஆ" என்பது பசுவையும், "லயம்" என்பது லயிப்பதையும் குறிக்கும். பசு என்பது ஆன்மா. ஆன்மா தன் மும்மலங்களை நீக்கி இறை வனிடம் ஒடுங்குவதற்குரிய இடமாக அமைவது ஆலயம். உடம்பினை இருப்பிடமாகக் கொண்டு உயிர் விளங்குகிறது. இதைப் போன்று கோயிலை இருப் பிடமாகக் கொண்டு தெய்வங்கள் விளங்குகின்றன.
7 வது சைவ மாநாடு இலண்டன் 2004 அடுத்த சந்ததியின் சைவ வழிபாடு சின்னத்துரை பத்மமோகன் இலண்டன் மனித குலம் இருபத்தொன்றாம் நூற்றாண் டில் காலடி எடுத்து வைத்துள்ளது . அடுத்துவரும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளையும் வரவேற்கவும் அந்த ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளில் மனிதகுல மேம்பாட்டிற்க்கான செயற்திட்டங்களை வகுப்பதில் மேற்கு நாடுகள் ஈடு பட்டுள்ளன . மூன்றாம் உலகின் மனிதனான தமிழன் இக்காலப் பரப்பில் எங்கும் காலூன்றி நிற்கின்றான் . கோயிலில்லா இடத்தில் குடியிருக்க வேண்டாம் என்றனர் அன்று ; இன்றோ நாமிருக்கும் இடமெல்லாம் கோயில்கள் போட்டி போட்டுக்கொண்டு அமைக்கப் பட்டு வருகின்றன ; முளைக்கின்றன . இக்கோயில்களை தொடர்ந்து நாம் எமது மன அமைதிக்காகவும் இறை வழிபாட்டிற்காகவும் பாவித்து வளர்த்து வருவோமாயின் இப்படிக் கோயில்கள் உண்டாகுவதும் உண்டாக்கிக் கொண்டு இருப்பவர்களுக்கும் புண்ணியம் உண்டாகும் . இதனை நாம் வேறு ஒரு கோணத்தில் இருந்து பார்ப் போமாயின் தொடர்ந்து இக்கோயில்கள் மனித வழி பாட்டிற்காக இருக்க வேண்டுமாயின் எமது வருங்கால சந்ததியினருக்கு இவற்றின் மகிமையினை எடுத்துக் காட்டவேண்டும் சொல்லவேண்டும் . நாம் விசேட தினங்களில் ஆவது நாம் போகும் போது எமது குழந்தை களையும் அல்லது தெரிந்த இளைஞர்களையும் அழைத்துச் சென்று கோயில் வழிபாட்டு முறைகளை எடுத்துச் சொல்ல வேண்டும் ; அவற்றின் நன்மை தீமைகளை எடுத்துக்காட்ட வேண்டும் . அப்போதுதான் எமது சமுதாயம் தொடர்ந்தும் கோயிலுக்குப் போகும் பணியை நடைமுறைக்குக் கொண்டுவரும் . அது மட்டு மல்ல இக்கோயில்கள் தொடர்ந்து மக்களுக்குச் சேவை செய்ய வேண்டுமாயின் வளர்ந்து வரும் சமுதாயத்தை தட்டிக் கொடுக்க வேண்டும் . இசை ஒரு சக்தி . மகா முனிவராகிய பரதர் நாட்டி யத்தின் சாரம் இசை என்று கூறுகின்றார் . இலங்கை இந்தியத் தத்துவ ஞானியர்களும் கவிஞர்களும் ஆசிரியர்களும் குருமார்களும் சங்கீதத்தை சிறந்த கருவியாகக் கையாண்டு வந்துள்ளார்கள் . மனித உள்ளத்தில் உணரும் ஆழ்ந்த உணர்ச் சிகளை பரம்பொருளுக்கு அறிவிக்க இசையொன்றி னால் தான் இயலும் . மொழி புகமுடியாத இடங்களில் எல்லாம் இசைபுகும் . கோயில்களில் அமைதியான ( மக்கள் நடமாட்டம் குறை வான ) சூழலில் இதனை உண ரமுடியும் . இதனால் இசை என் பதினை ஆன்மாவின் பேச்சு என்று சொல்லலாம் . ஆலயங்களில் ஒவ்வொரு நாளும் பூசை நடை பெறும் போதும் நல்விழாக்களின் போதும் சுவாமி வீதி வலம் சுற்றி வரும் போதும் ஆடல் பாடல்கள் நடைபெறு கின்றன . தேவாரம் பக்திப் பாடல்கள் படிக்கப்படு கின்றன . இவற்றில் எமது வருங்காலத் தூண்களாகிய குழந்தைகளைச் சேர்த்து அவர்கள் படிப்பதற்கு நாம் வழி கொடுத்தல் மிகவும் வரவேற்கத்தக்கது . எமது அடுத்த சந்ததியினரை முன்னுக்கு கொண்டுவர உதவும் முதற்படி இதுவேயாகும் . சமயத்துடன் தமிழ் மொழியினையும் ஊட்டுங்கள் பஞ்சபுராணம் பாடுதல் கோயில் வழிபாட்டில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சியாகும் . இதில் தேவாரம் திருவாசகம் திருவிசைப்பா திருப்பல்லாண்டு பெரிய புராணம் ஆகிய ஐந்து நூல்களில் இருந்து ஒவ்வொரு பாடல்களைப் பாடுவார்கள் . இதற்குப் பக்கவாத்தியம் வைத்துக் கொள்ளும் பழக்கம் உண்டு . எமது குழந்தை களுக்கு ( வருங்கால சந்ததியினருக்கு ) இதனை ஒவ் வொரு பெற்றோரும் ஊக்கத்துடன் படித்துக் கொடுத் தால் அவர்கள் உங்களுடன் கோயிலுக்கு செல்லும் வேளைகளில் படித்துப் பழகி தன்னம்பிக்கையினை வளர்த்துக் கொள்ள முடியும் . திருக்கோயில்களில் பழங்காலங்களில் இருந்தே ஆடற்கலையும் பாடற்கலையும் இணைந்தே வளர்க்கப் பட்டு வந்துள்ளன . குறிப்பாக ஆலயங்களில் ஆடலும் றோரின் ) கடைமையாகும் . பாடலும் சிறப்புற்று விளங்கி உள்ளன என்பதனை நாம் அறிவோம் . சமயத்துடன் எமது தமிழ் மொழியினையும் சேர்த்து ஊட்ட வேண்டும் . புலம்பெயர்ந்து வாழும் எம்மவருக்கு மிகவும் வசதியாக இப்போது பல கோயில்களும் பலப்பல தமிழ்ப்பாடசாலைகளும் இருக்கின்றனவே அவற்றினை நல்லமுறையில் பிரயோசனப்படுத்துவது எமது ( பெற் நாம் ஆலய வழிபாடு செய்வதும் மூர்த்திகளுக்கு நிவேதனமும் காணிக்கையும் செலுத்துவதும் எல்லாவற் றையும் படைத்த பரம்பொருளுக்கு நன்றி செலுத்து வதற்கு அறிகுறியாக செயற்படுபவை . 128 ஆலயம் என்பதில் என்பது பசுவையும் லயம் என்பது லயிப்பதையும் குறிக்கும் . பசு என்பது ஆன்மா . ஆன்மா தன் மும்மலங்களை நீக்கி இறை வனிடம் ஒடுங்குவதற்குரிய இடமாக அமைவது ஆலயம் . உடம்பினை இருப்பிடமாகக் கொண்டு உயிர் விளங்குகிறது . இதைப் போன்று கோயிலை இருப் பிடமாகக் கொண்டு தெய்வங்கள் விளங்குகின்றன .