இலண்டன் சைவ மாநாடு (சிறப்புமலர்)

7வது சைவ மாநாடு இலண்டன் 2004 வேதச் சிறப்பு: மேற்கூறிப்போந்த வரலாற்றால் இந்திய நாட்டின் ஒருகால கட்டம் தனித்தமிழ்க் காலமாய் இருந்தமை புலனாதலால், அந் நிலைமை எத்தகைய சூழ்நிலையால் மாறி ஆரியம் இந்திய நாட்டுத் தெய்வ மொழி யாகும் நிலைமை உண்டாயிற்று என் பதை இன்று நாம் அறிந்து கூற இயலாது. ஆரியர்க்கும், தமிழர்க்குமிடையில் போராட்டம் இருந்தமைக்கு ஆரிய வேதத்திலேயே சான்றுகள் உள்ளன. அதனால் ஆரியம், இந்திய நாட்டின் தெய்வ மொழியாகும் நிலைமை எளிதில் பெற்றுவிட்டதாகச் சொல்ல இயலாது. ஆகவே, பல போராட்டங்களில் எவ்வ கையிலோ ஆரியர் "தங்கள் வேதமே வேதம்; தங்கள் மொழியே தெய்வமொழி" என நிலைநாட்டுவதில் வெற்றி பெற்றவ ராயினர். அது வழியாக அவர்கள் தங் களை "நிலத்தேவர்" (பூசுரர்) என்றும் சொல்லிக் கொண்டனர். ஆகவே, இன்று திருக்கோயில்களில் தமிழ் அருச்சனைக்கு இடம் அளிப்பது, தமிழுக்கு மறுவாழ்வு அளிப்பதாகுமேயல்லாது, படைப்புக் காலத்திலிருந்தே இயல்பாக அமைந்த ஒரு நிலைமைக்குச் சிதைவு செய்வதாக ஆகாது. தமிழின் சிறப்பு: ஆரியம் வராத காலத்தில் தமிழ் சிறப் புற்று விளங்கியிருக்கலாம். ஆரியம் வந்த பின் இந்திய நாட்டில் வேறு எந்த ஒரு மொழியும் ஆரியத்தோடு ஒத்த பெருமை யைப் பெறவில்லை என்று ஒரு புது நியாயத்தைச் சிலர் முன்மொழியலாம். அதனை வேறு சிலர் வலியுறுத்தவும் செய் பலாம். அதனை நடுநிலையாளர்கள் ஏலார், ஏனெனில் "ஆரியத்திற்கு நிக ராகா-என்னும் கூற்று ஏனைய மொழி 49 களுக்குப் பொருந்தலாம்; தமிழிற்கு அது பொருந்தாது" எனத் தமிழ்ச் சான்றோர் கள் மறுத்துள்ளனர். எடுத்துக்காட்டு: "கண்ணு தற்பெருங் கடவுளுங் கழகமோ டமர்ந்து பண்ணு றத்தெரிந் தாய்ந்தவிப் பசுந்தமி ழேனை மண்ணி டைச்சில விலக்கண வரம்பிலா மொழிபோல் எண்ணிடைப்படக் கிடந்ததா வெண்ணவும் படுமோ". (பரஞ்சோதி திருவிளையாடல். நாட்டுப் படலம்-57) "வடமொழியைப் பாணினிக்கு வகுத்தருளி அதற்கிணையாத் தொடர்புடைய தென்மொழியை உலகமெலாம் தொழுதேத்துங் குடமுனிக்கு வலியுறுத்தார் கொல்லேற்றுப் பாகரெனிற் கடல்வரைப்பின் இதன்பெருமை யாவரே கணித்தறிவார்!" "இருமொழிக்குங் கண்ணுதலார் முதற்குரவர், இயல்வாய்ப்ப இருமொழியும் வழிப்படுத்தார் முனிவேந்தர், இசைபரப்பும் இருமொழியும் ஆன்றவரே தழீஇயினார் என்றால் இவ் இருமொழியும் நிகரென்னும் இதற்கையம் உளதேயோ!" (காஞ்சிப்புராணம். தழுவக் குழைந்த படலம். 248, 249) "தமிழ், இலக்கண இலக்கிய வளம் உடையதாய் இருக்கலாம்; ஆயினும் தெய் வமொழியாகச் சொல்ல இயலுமோ?" என யாரேனும் வினவினால் அதற்கும் பரஞ்சோதி முனிவர் தக்க விடை கூறி யுள்ளார். "தொண்டர் நாதனைத் தூதிடை விடுத்ததும் முதலை உண்ட பாலனை யழைத்ததும் எலும்புபெண் ணுருவாக் கண்ட தும்மறைக் கதவினைத் திறந்ததுங் கன்னித் தண்ட மிழ்ச்சொலோ மறுபுலச் சொற்களோ சாற்றீர்." (திருவிளையாடல் புராணம். நாட்டுப் படலம்-58) திருமுறை கண்ட புராணமும் திரு நெறித் தமிழின் தெய்வத் தன்மையை, "எரியினிடை வேவாது; ஆற்றெதிரே ஓடும்; என்புக்கும் உயிர்கொடுக்கும்; இடுநஞ்சு ஆற்றும்; கரியை வளைவிக்கும்; கல் மிதக்கப் பண்ணும் கராமதலை கரையில் உறக் காற்றுங் காணே." எனக் கூறுகின்றது.
7 வது சைவ மாநாடு இலண்டன் 2004 வேதச் சிறப்பு : மேற்கூறிப்போந்த வரலாற்றால் இந்திய நாட்டின் ஒருகால கட்டம் தனித்தமிழ்க் காலமாய் இருந்தமை புலனாதலால் அந் நிலைமை எத்தகைய சூழ்நிலையால் மாறி ஆரியம் இந்திய நாட்டுத் தெய்வ மொழி யாகும் நிலைமை உண்டாயிற்று என் பதை இன்று நாம் அறிந்து கூற இயலாது . ஆரியர்க்கும் தமிழர்க்குமிடையில் போராட்டம் இருந்தமைக்கு ஆரிய வேதத்திலேயே சான்றுகள் உள்ளன . அதனால் ஆரியம் இந்திய நாட்டின் தெய்வ மொழியாகும் நிலைமை எளிதில் பெற்றுவிட்டதாகச் சொல்ல இயலாது . ஆகவே பல போராட்டங்களில் எவ்வ கையிலோ ஆரியர் தங்கள் வேதமே வேதம் ; தங்கள் மொழியே தெய்வமொழி என நிலைநாட்டுவதில் வெற்றி பெற்றவ ராயினர் . அது வழியாக அவர்கள் தங் களை நிலத்தேவர் ( பூசுரர் ) என்றும் சொல்லிக் கொண்டனர் . ஆகவே இன்று திருக்கோயில்களில் தமிழ் அருச்சனைக்கு இடம் அளிப்பது தமிழுக்கு மறுவாழ்வு அளிப்பதாகுமேயல்லாது படைப்புக் காலத்திலிருந்தே இயல்பாக அமைந்த ஒரு நிலைமைக்குச் சிதைவு செய்வதாக ஆகாது . தமிழின் சிறப்பு : ஆரியம் வராத காலத்தில் தமிழ் சிறப் புற்று விளங்கியிருக்கலாம் . ஆரியம் வந்த பின் இந்திய நாட்டில் வேறு எந்த ஒரு மொழியும் ஆரியத்தோடு ஒத்த பெருமை யைப் பெறவில்லை என்று ஒரு புது நியாயத்தைச் சிலர் முன்மொழியலாம் . அதனை வேறு சிலர் வலியுறுத்தவும் செய் பலாம் . அதனை நடுநிலையாளர்கள் ஏலார் ஏனெனில் ஆரியத்திற்கு நிக ராகா - என்னும் கூற்று ஏனைய மொழி 49 களுக்குப் பொருந்தலாம் ; தமிழிற்கு அது பொருந்தாது எனத் தமிழ்ச் சான்றோர் கள் மறுத்துள்ளனர் . எடுத்துக்காட்டு : கண்ணு தற்பெருங் கடவுளுங் கழகமோ டமர்ந்து பண்ணு றத்தெரிந் தாய்ந்தவிப் பசுந்தமி ழேனை மண்ணி டைச்சில விலக்கண வரம்பிலா மொழிபோல் எண்ணிடைப்படக் கிடந்ததா வெண்ணவும் படுமோ . ( பரஞ்சோதி திருவிளையாடல் . நாட்டுப் படலம் -57 ) வடமொழியைப் பாணினிக்கு வகுத்தருளி அதற்கிணையாத் தொடர்புடைய தென்மொழியை உலகமெலாம் தொழுதேத்துங் குடமுனிக்கு வலியுறுத்தார் கொல்லேற்றுப் பாகரெனிற் கடல்வரைப்பின் இதன்பெருமை யாவரே கணித்தறிவார் ! இருமொழிக்குங் கண்ணுதலார் முதற்குரவர் இயல்வாய்ப்ப இருமொழியும் வழிப்படுத்தார் முனிவேந்தர் இசைபரப்பும் இருமொழியும் ஆன்றவரே தழீஇயினார் என்றால் இவ் இருமொழியும் நிகரென்னும் இதற்கையம் உளதேயோ ! ( காஞ்சிப்புராணம் . தழுவக் குழைந்த படலம் . 248 249 ) தமிழ் இலக்கண இலக்கிய வளம் உடையதாய் இருக்கலாம் ; ஆயினும் தெய் வமொழியாகச் சொல்ல இயலுமோ ? என யாரேனும் வினவினால் அதற்கும் பரஞ்சோதி முனிவர் தக்க விடை கூறி யுள்ளார் . தொண்டர் நாதனைத் தூதிடை விடுத்ததும் முதலை உண்ட பாலனை யழைத்ததும் எலும்புபெண் ணுருவாக் கண்ட தும்மறைக் கதவினைத் திறந்ததுங் கன்னித் தண்ட மிழ்ச்சொலோ மறுபுலச் சொற்களோ சாற்றீர் . ( திருவிளையாடல் புராணம் . நாட்டுப் படலம் -58 ) திருமுறை கண்ட புராணமும் திரு நெறித் தமிழின் தெய்வத் தன்மையை எரியினிடை வேவாது ; ஆற்றெதிரே ஓடும் ; என்புக்கும் உயிர்கொடுக்கும் ; இடுநஞ்சு ஆற்றும் ; கரியை வளைவிக்கும் ; கல் மிதக்கப் பண்ணும் கராமதலை கரையில் உறக் காற்றுங் காணே . எனக் கூறுகின்றது .