இலண்டன் சைவ மாநாடு (சிறப்புமலர்)

7வது சைவ மாநாடு இலண்டன் 2004 இனிச் சிவபெருமான் தானே செய்த அகப்பொருள் இலக்கண நூல் நக்கீரரது உரையுடன் இன்றும் பயிலப்பட்டு வரு கின்றது. "நன்பாட்டுப் புலவனாய்ச் சங்கம் ஏறி நற்கனகக் கிழிதருமிக்கு அருளினோன் காண் என அப்பர் அருளிச்செய்த - சிவ பெருமான் "தருமி" என்னும் அடியவருக் காகப் பாடிக் கொடுத்த "கொங்குதேர் வாழ்க்கை” என்னும் அகப் பொருட் பாடல் "குறுந்தொகை" என்னும் தொகை நூலின் முதற்பாட்டாக மிளிர்கின்றது. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு சீகாளத்திப் புராணம், "மறைமுதற் கிளந்த வாயான் மதிமுகிழ் முடித்த வேணி இறைவர்தம் பெயரை நாட்டி இலக்கணம் செய்யப் பெற்றே அறைகடல் வரைப்பில் பாடை அனைத்தும் வென்று ஆரியத்தோடு உறழ்தரு தமிழ்த்தெய் வத்தை உள்நினைந்து ஏத்தல் செய்வாம்." எனக் கூறிற்று. "" மதுரை ஆலவாய்ப் பெருமான் பாண பத்திரருக்குப் பாடிக் கொடுத்த திருமுகப் பாசுரம் பதினொன்றாந் திருமுறையின் முதற் பாடலாக இருந்து அணிசெய் கின்றது. தில்லைக் கூத்தப் பெருமான் பெத்தான் சாம்பனுக்குத் தீக்கை முறையால் முத்தி கொடுக்கும்படி தமிழில் எழுதி விடுத்த சீட்டுக்கவி சந்தானாசாரியரது வரலாற் றின் இடையில் இடம்பெற்று விளங்கு கின்றது. சேரமான் பெருமாள் நாயனார் அரு ளிச் செய்த ஞான உலாவாகிய ஆதியுலா அந்நாயனாரால் திருக்கயிலையில் சிவ பெருமான் திருமுன்பில் கூடியிருந்த சிவ கணப் பேரவையில் அரங்கேற்றப் பெற் றது. 50 இன்னோரன்ன பல நிகழ்ச்சிகளால் தமிழ் மொழியின் தெய்விகத் தன்மை தெற்றென விளங்கும். ஆகவே, "திருக்கோ யில்களில் தமிழ் அருச்சனையை அனும் திக்க முடியாது" எனக் கூறுவதற்குக் கார ணம் எதுவும் இல்லை. திருஞானசம்பந்தர் தமது திருவாய்த் திருப்பதிகத் திருக்கடைக் காப்பில், "போயநீர் வளங்கொளும் பொருபுனற் புகலியான் பாயகேள்வி ஞானசம் பந்தன்நல்ல பண்பினால் ஆயசொல்லின் மாலைகொண்டு ஆலவாயில் அண்ணலைத் தீயதீர எண்ணுவார்கள் சிந்தையாவர் தேவரே" எனச் "சிவபெருமானைத் தமது பாடல் வழி யாகத் தியானிப்பவர் உள்ளங்களில் அப்பெருமான் இனிது விளங்கி நிற்பான்' என அருளிச் செய்தார். "சலம்பூவொடு தூபம் மறந் தறியேன் தமிழோடு இசை பாடல் மறந்தறியேன்...' என்று அப்பர், தாமே தமிழ்ப் பாட லால் இறைவனை வழிபட்டதாகக் கூறி யுள்ளார். சுந்தரர், "நல்லிசை ஞானசம்பந்தனும் நாவினுக் கரையனும் பாடிய நற்றமிழ் மாலை சொல்லிய வேசொல்லி ஏத்துகப் பானை..." திருமுறை 7-67.5 எனச் சம்பந்தர், அப்பர் பாடல்களைக் கொண்டு துதிப்பதைச் சிவபெருமான் மிகவும் விரும்புவான் என அருளிச் செய் தார். பேரூர் ஆதீன முதல்வர் சாந்தலிங்க அடிகள் தமது வைராக்கிய சாதகத்தில், ஒழித் திடும்பவப் பகைவிரைந்து உள்ளமே ஓதுமூ,துணர்வோர்முற் பழிச்சு பாடலை அரற்கு அவை விடர்க்கு இளம் பாவையர் உரைபோலும்! கழித்தி டேல்உப சாரம்என்று இதனை நீ கட்டுரை எனக் கொள்வாய்; விழித்து மாரனை எரித்த தே அருள்பெறும் விருப்பினர் விருப்பு ஈதே. (பாடல்-49)
7 வது சைவ மாநாடு இலண்டன் 2004 இனிச் சிவபெருமான் தானே செய்த அகப்பொருள் இலக்கண நூல் நக்கீரரது உரையுடன் இன்றும் பயிலப்பட்டு வரு கின்றது . நன்பாட்டுப் புலவனாய்ச் சங்கம் ஏறி நற்கனகக் கிழிதருமிக்கு அருளினோன் காண் என அப்பர் அருளிச்செய்த - சிவ பெருமான் தருமி என்னும் அடியவருக் காகப் பாடிக் கொடுத்த கொங்குதேர் வாழ்க்கை என்னும் அகப் பொருட் பாடல் குறுந்தொகை என்னும் தொகை நூலின் முதற்பாட்டாக மிளிர்கின்றது . இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு சீகாளத்திப் புராணம் மறைமுதற் கிளந்த வாயான் மதிமுகிழ் முடித்த வேணி இறைவர்தம் பெயரை நாட்டி இலக்கணம் செய்யப் பெற்றே அறைகடல் வரைப்பில் பாடை அனைத்தும் வென்று ஆரியத்தோடு உறழ்தரு தமிழ்த்தெய் வத்தை உள்நினைந்து ஏத்தல் செய்வாம் . எனக் கூறிற்று . மதுரை ஆலவாய்ப் பெருமான் பாண பத்திரருக்குப் பாடிக் கொடுத்த திருமுகப் பாசுரம் பதினொன்றாந் திருமுறையின் முதற் பாடலாக இருந்து அணிசெய் கின்றது . தில்லைக் கூத்தப் பெருமான் பெத்தான் சாம்பனுக்குத் தீக்கை முறையால் முத்தி கொடுக்கும்படி தமிழில் எழுதி விடுத்த சீட்டுக்கவி சந்தானாசாரியரது வரலாற் றின் இடையில் இடம்பெற்று விளங்கு கின்றது . சேரமான் பெருமாள் நாயனார் அரு ளிச் செய்த ஞான உலாவாகிய ஆதியுலா அந்நாயனாரால் திருக்கயிலையில் சிவ பெருமான் திருமுன்பில் கூடியிருந்த சிவ கணப் பேரவையில் அரங்கேற்றப் பெற் றது . 50 இன்னோரன்ன பல நிகழ்ச்சிகளால் தமிழ் மொழியின் தெய்விகத் தன்மை தெற்றென விளங்கும் . ஆகவே திருக்கோ யில்களில் தமிழ் அருச்சனையை அனும் திக்க முடியாது எனக் கூறுவதற்குக் கார ணம் எதுவும் இல்லை . திருஞானசம்பந்தர் தமது திருவாய்த் திருப்பதிகத் திருக்கடைக் காப்பில் போயநீர் வளங்கொளும் பொருபுனற் புகலியான் பாயகேள்வி ஞானசம் பந்தன்நல்ல பண்பினால் ஆயசொல்லின் மாலைகொண்டு ஆலவாயில் அண்ணலைத் தீயதீர எண்ணுவார்கள் சிந்தையாவர் தேவரே எனச் சிவபெருமானைத் தமது பாடல் வழி யாகத் தியானிப்பவர் உள்ளங்களில் அப்பெருமான் இனிது விளங்கி நிற்பான் ' என அருளிச் செய்தார் . சலம்பூவொடு தூபம் மறந் தறியேன் தமிழோடு இசை பாடல் மறந்தறியேன் ... ' என்று அப்பர் தாமே தமிழ்ப் பாட லால் இறைவனை வழிபட்டதாகக் கூறி யுள்ளார் . சுந்தரர் நல்லிசை ஞானசம்பந்தனும் நாவினுக் கரையனும் பாடிய நற்றமிழ் மாலை சொல்லிய வேசொல்லி ஏத்துகப் பானை ... திருமுறை 7-67.5 எனச் சம்பந்தர் அப்பர் பாடல்களைக் கொண்டு துதிப்பதைச் சிவபெருமான் மிகவும் விரும்புவான் என அருளிச் செய் தார் . பேரூர் ஆதீன முதல்வர் சாந்தலிங்க அடிகள் தமது வைராக்கிய சாதகத்தில் ஒழித் திடும்பவப் பகைவிரைந்து உள்ளமே ஓதுமூ துணர்வோர்முற் பழிச்சு பாடலை அரற்கு அவை விடர்க்கு இளம் பாவையர் உரைபோலும் ! கழித்தி டேல்உப சாரம்என்று இதனை நீ கட்டுரை எனக் கொள்வாய் ; விழித்து மாரனை எரித்த தே அருள்பெறும் விருப்பினர் விருப்பு ஈதே . ( பாடல் -49 )