இலண்டன் சைவ மாநாடு (சிறப்புமலர்)

7வது சைவ மாநாடு இலண்டன் 2004 செயல்கள் "அபுத்தி பூர்வகம்" என்றும் சொல்லப்படும். திருக்கோயில்களில் அர்ச்சகர்கள் அன் பர்கட்காக அர்ச்சனை செய்யும்பொழுது முதற்கண் செய்யப்படும் "சங்கல்பம்" என் பது அர்ச்சனை புத்திபூர்வகமாதல் வேண் டும் என்னும் கொள்கை அடிப்படையில் தான் செய்யப்படுகின்றது. ஆயினும், அதனை வடமொழியில் சொல்வதால், அருச்சனையின் பலனைப் பெற வேண் டியவர் தமக்குத் தெரியாத மொழியில் சொல்கின்றார். ஆதலின் அஃது எவ் வாறு புத்தி பூர்வமாக முடியும்? மேலும், "இந்த அருச்சனையை நான் அர்ச்சகர் வழியாகச் செய்கிறேன்" என்கின்ற வாச கத்தின் பொருளே அவருக்குத் தெரியாத பொழுது, அந்த அர்ச்சனை எப்படி அவர் செய்வதாக ஆகும்? ஆகாத பொழுது அதன் பயனை அவர் எப்படி அடைய முடியும்? அருச்சனையை விரும்பிச் செய் கிறவருக்கு அதனை நிஷ்பலத்ததாக அஃ தாவது பயனற்றதாக ஆக்குவதுதான் முறையோ? பொருளைத் தந்தவர்க்குப் பயன் பெறாத நிலையை உண்டாக்குவது நீதிக்குப் புறம்பான செயலுமாம் அன் றோ? ஆயினும் இவ்வாறான செயலே திருக் கோயில்களில் இப்பொழுது அன் றாட நிகழ்ச்சியாக நிகழ்ந்து வருகின்றது. "இதனை மாற்றவும் கூடாது" என்கி றார்கள். அருள்மொழி: "ஆரிய வேதம் தொன்று தொட்டு அருள் மொழியாக வழங்கி வருகின்றது. ஆயினும் திருமுறைகள் பின்பு ஒரு காலத் தில் அருள் மொழிகளாகக் கொள்ளும் நிலைமை ஏற்பட்டது. அவை சிவன் கோயில் அர்ச்சனைக்கு அல்லது விநாய கர், முருகன், உமையம்மை, இலக்குமி, சரசுவதி இவர்களுக்குச் செய்ய விரும்பும் அர்ச்சனைக்கு எப்படிப் பயன்படும்? என்று கேட்கலாம். அஃது உண்மைதான், என்றாலும் விநா யகர் முதலிய கடவுளருக்கும் துதிப் பாடல்கள் தமிழில் இல்லாமற் போக வில்லை; உள்ளன. 52 விநாயகருக்கு உரிய பாடல்கள் பதி னொன்றாந் திருமுறையில் பல உள்ளன. மற்றும் ஒளவையார் பாடிய விநாயக புரா ணப் பாடல்கள் இவைகளும் உள்ளன. முருகனுக்குப் பரிபாடல், திருமுருகாற் றுப் படை, திருப்புகழ், கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, கந்தபுரணம், கந்தர் கலிவெண்பா இவை உள்ளன. தேவியர்கட்குத் திருமந்திரத்தில் பாடல் கள் உள்ளன. அபிராமியந்தாதி உமையம் மைக்கு மிகச் சிறந்ததாகும். திருமால் அர்ச்சனைக்குப் பரிபாடல், திவ்யப் பிரபந்தங்கள் ஏற்கனவேயுள்ளன. இங்கு ஒன்றை அறிதல் வேண்டும். அஃதாவது "போற்றி" என வரும் பாட கள் தாம் அருச்சனைக்கு உரியவை என்று வரையறை செய்தல் கூடாது. "அற்சனை பாட்டேயாகும்" என்னும் சேக்கிழார் வாக்கில் "பாட்டு" என்றது போற்றிப் பாடல்களை மட்டுமே குறித்த தன்று. அகத்தியர் தேவரத் திரட்டில் சம்பந்தர், சுந்தரர் திருப்பதிகங்களுள் போற்றியல் லாத பாடல்களே "அருச்சனை" என்ற தலைப்பில் முன்பே திரட்டப்பட்டுள் ளன். சொல்லும் செயலும்: திருக்கோயில்களில் அர்ச்சகர்கள் தங்க ளுக்குத் தமிழ்ப்பாடல்கள் மனப்பாடம் இல்லை என்று சொல்வார்களாயின், தனி யார் வழிபாடாயினும், திருக்கூட்ட வழி பாடாயினும் அருச்சனை செய்வோர் தமிழ்ப்பாடல்களை முறையாகச்சொல்ல, அர்ச்சகர் பூவும் பச்சிலையும் திருவடி மேல் தூவலாம். எந்த வகையிலோ தமிழில் அருச்சனை செய்ய விரும்புவோருக்கு அவர்கள் விருப் பத்தை நிறைவேற்றி வைத்தல் கோயிலா ருக்கும், அரசாங்கத்தாருக்கும் தருமமும், நீதியுமாகும்.
7 வது சைவ மாநாடு இலண்டன் 2004 செயல்கள் அபுத்தி பூர்வகம் என்றும் சொல்லப்படும் . திருக்கோயில்களில் அர்ச்சகர்கள் அன் பர்கட்காக அர்ச்சனை செய்யும்பொழுது முதற்கண் செய்யப்படும் சங்கல்பம் என் பது அர்ச்சனை புத்திபூர்வகமாதல் வேண் டும் என்னும் கொள்கை அடிப்படையில் தான் செய்யப்படுகின்றது . ஆயினும் அதனை வடமொழியில் சொல்வதால் அருச்சனையின் பலனைப் பெற வேண் டியவர் தமக்குத் தெரியாத மொழியில் சொல்கின்றார் . ஆதலின் அஃது எவ் வாறு புத்தி பூர்வமாக முடியும் ? மேலும் இந்த அருச்சனையை நான் அர்ச்சகர் வழியாகச் செய்கிறேன் என்கின்ற வாச கத்தின் பொருளே அவருக்குத் தெரியாத பொழுது அந்த அர்ச்சனை எப்படி அவர் செய்வதாக ஆகும் ? ஆகாத பொழுது அதன் பயனை அவர் எப்படி அடைய முடியும் ? அருச்சனையை விரும்பிச் செய் கிறவருக்கு அதனை நிஷ்பலத்ததாக அஃ தாவது பயனற்றதாக ஆக்குவதுதான் முறையோ ? பொருளைத் தந்தவர்க்குப் பயன் பெறாத நிலையை உண்டாக்குவது நீதிக்குப் புறம்பான செயலுமாம் அன் றோ ? ஆயினும் இவ்வாறான செயலே திருக் கோயில்களில் இப்பொழுது அன் றாட நிகழ்ச்சியாக நிகழ்ந்து வருகின்றது . இதனை மாற்றவும் கூடாது என்கி றார்கள் . அருள்மொழி : ஆரிய வேதம் தொன்று தொட்டு அருள் மொழியாக வழங்கி வருகின்றது . ஆயினும் திருமுறைகள் பின்பு ஒரு காலத் தில் அருள் மொழிகளாகக் கொள்ளும் நிலைமை ஏற்பட்டது . அவை சிவன் கோயில் அர்ச்சனைக்கு அல்லது விநாய கர் முருகன் உமையம்மை இலக்குமி சரசுவதி இவர்களுக்குச் செய்ய விரும்பும் அர்ச்சனைக்கு எப்படிப் பயன்படும் ? என்று கேட்கலாம் . அஃது உண்மைதான் என்றாலும் விநா யகர் முதலிய கடவுளருக்கும் துதிப் பாடல்கள் தமிழில் இல்லாமற் போக வில்லை ; உள்ளன . 52 விநாயகருக்கு உரிய பாடல்கள் பதி னொன்றாந் திருமுறையில் பல உள்ளன . மற்றும் ஒளவையார் பாடிய விநாயக புரா ணப் பாடல்கள் இவைகளும் உள்ளன . முருகனுக்குப் பரிபாடல் திருமுருகாற் றுப் படை திருப்புகழ் கந்தர் அலங்காரம் கந்தர் அனுபூதி கந்தபுரணம் கந்தர் கலிவெண்பா இவை உள்ளன . தேவியர்கட்குத் திருமந்திரத்தில் பாடல் கள் உள்ளன . அபிராமியந்தாதி உமையம் மைக்கு மிகச் சிறந்ததாகும் . திருமால் அர்ச்சனைக்குப் பரிபாடல் திவ்யப் பிரபந்தங்கள் ஏற்கனவேயுள்ளன . இங்கு ஒன்றை அறிதல் வேண்டும் . அஃதாவது போற்றி என வரும் பாட கள் தாம் அருச்சனைக்கு உரியவை என்று வரையறை செய்தல் கூடாது . அற்சனை பாட்டேயாகும் என்னும் சேக்கிழார் வாக்கில் பாட்டு என்றது போற்றிப் பாடல்களை மட்டுமே குறித்த தன்று . அகத்தியர் தேவரத் திரட்டில் சம்பந்தர் சுந்தரர் திருப்பதிகங்களுள் போற்றியல் லாத பாடல்களே அருச்சனை என்ற தலைப்பில் முன்பே திரட்டப்பட்டுள் ளன் . சொல்லும் செயலும் : திருக்கோயில்களில் அர்ச்சகர்கள் தங்க ளுக்குத் தமிழ்ப்பாடல்கள் மனப்பாடம் இல்லை என்று சொல்வார்களாயின் தனி யார் வழிபாடாயினும் திருக்கூட்ட வழி பாடாயினும் அருச்சனை செய்வோர் தமிழ்ப்பாடல்களை முறையாகச்சொல்ல அர்ச்சகர் பூவும் பச்சிலையும் திருவடி மேல் தூவலாம் . எந்த வகையிலோ தமிழில் அருச்சனை செய்ய விரும்புவோருக்கு அவர்கள் விருப் பத்தை நிறைவேற்றி வைத்தல் கோயிலா ருக்கும் அரசாங்கத்தாருக்கும் தருமமும் நீதியுமாகும் .