சிவஞான முனிவர் நோக்கில் சைவ சித்தாந்தம்

தோற்றுவாய் தந்த வாழ்வியல் மரபுகளும் சிவஞான சுவாமிகளின் வாழ்வியற் பின்னணிகளாக அமைந்தன எனக் கொள்ளுவதில் தவறில்லை. 3 வேதம், வேதாந்தம், ஆகமம், ஆகமாந்தம் என்ற நான்கு அடிப்படைகளில் சமய, தத்துவக் கொள்கைகள் விளக்கப்பெற்றன. அதே சமயத்தில், வேதத்துக்கு முரணான கொள்கைகளும் எழுந்தன. பௌத்த, ஆருகத, உலகாயதக் கொள்கைகள் தமிழ கத்தில் தம் செல்வாக்கைப் பயன்படுத்தி வளர முற்பட்ட போதெல்லாம் வேதக் கொள்கைகளும் ஆகமக் கொள்கைகளும் இடையிடையே வந்து மக்கள் மன்றத்தில் விளக்கம் கூறித் தம்மை நிலைநாட்ட முற்பட்டன என்பதையும் காணமுடிகிறது. அவ்வகையில், வைதிகநெறி சைவநெறி என இருவகை நெறி கள் பெருகியோங்கி நிற்க, இவற்றினுள்ளும் உயர்வு தாழ்வு நிலை கள் பேசப்பெற்றன என்பதையும் நாம் காணமுடிகிறது. இந்நிலையில், காரைக்காலம்மையாரை உள்ளிட்டு ஒரு பெரிய அருளியல் எழுச்சியானது தமிழகத்தில் தோற்றம் பெற்றது. காரைக்காலம்மையாரை அடுத்து, தமிழ்நாடு செய்த தவப்பயன் காரணமாகத் திருஞானசம்பந்தர் முதலாக நின்ற அருளாளர்கள் சிவநெறிக்குத் தமிழ் வாயிலாகத் தொண்டு செய்தனர். ஞான சம்பந்தரை ஒட்டிய கால அமைப்பில் அப்பரடிகளும், பின்னர் நம்பியாரூரரும் திருவருள் வழிபட்டு நின்று திருமுறை நெறியை- தமிழ் தழையும் அருள்நெறி வாயிலாகச் சமயத் தொண்டு செய்தனர். முத்தமிழ் வாயிலாக ஆகமத்தின் வழிவந்த சிவநெறி தமிழ்மக்களிடையே நன்கு வேரூன்றி நிலைபெறுவதாயிற்று. நம்பியாரூரர் அருளிய திருத்தொண்டத்தொகையானது தமிழக மக்களின் அருளியல் வரலாற்றில் புதிய திருப்பத்தை உண்டாக் கியது. அதன் அடிப்படையில் மல்ர்ந்ததே சேக்கிழாரின் திருத் தொண்டர் புராணம். நம்பியாரூரர் காலத்தில் திருவாரூர்த் தேவா சிரிய மண்டபத்தே அமைந்த புனிதர் பேரவை இயக்க வடிவம் பெற்று, சைவசமயக் காப்பகமாகத் திகழ்ந்தது. தமிழகத்து அருளியற் சைவத்துக்குரிய நெறிமுறைகளிற் பிழை காணப்படின் ‘புறகு' எனத் தவறு செய்தாரை வெறுத்து ஒதுக்குமளவுக்கு ஆற்றல் பெற்றதாகப் புனிதர் பேரவை இருந்தது. அதனாலேயே சைவநெறி உலகினில் விளங்கி வெல்க என்று சொல்வதற்குப் பதிலாக,
தோற்றுவாய் தந்த வாழ்வியல் மரபுகளும் சிவஞான சுவாமிகளின் வாழ்வியற் பின்னணிகளாக அமைந்தன எனக் கொள்ளுவதில் தவறில்லை . 3 வேதம் வேதாந்தம் ஆகமம் ஆகமாந்தம் என்ற நான்கு அடிப்படைகளில் சமய தத்துவக் கொள்கைகள் விளக்கப்பெற்றன . அதே சமயத்தில் வேதத்துக்கு முரணான கொள்கைகளும் எழுந்தன . பௌத்த ஆருகத உலகாயதக் கொள்கைகள் தமிழ கத்தில் தம் செல்வாக்கைப் பயன்படுத்தி வளர முற்பட்ட போதெல்லாம் வேதக் கொள்கைகளும் ஆகமக் கொள்கைகளும் இடையிடையே வந்து மக்கள் மன்றத்தில் விளக்கம் கூறித் தம்மை நிலைநாட்ட முற்பட்டன என்பதையும் காணமுடிகிறது . அவ்வகையில் வைதிகநெறி சைவநெறி என இருவகை நெறி கள் பெருகியோங்கி நிற்க இவற்றினுள்ளும் உயர்வு தாழ்வு நிலை கள் பேசப்பெற்றன என்பதையும் நாம் காணமுடிகிறது . இந்நிலையில் காரைக்காலம்மையாரை உள்ளிட்டு ஒரு பெரிய அருளியல் எழுச்சியானது தமிழகத்தில் தோற்றம் பெற்றது . காரைக்காலம்மையாரை அடுத்து தமிழ்நாடு செய்த தவப்பயன் காரணமாகத் திருஞானசம்பந்தர் முதலாக நின்ற அருளாளர்கள் சிவநெறிக்குத் தமிழ் வாயிலாகத் தொண்டு செய்தனர் . ஞான சம்பந்தரை ஒட்டிய கால அமைப்பில் அப்பரடிகளும் பின்னர் நம்பியாரூரரும் திருவருள் வழிபட்டு நின்று திருமுறை நெறியை தமிழ் தழையும் அருள்நெறி வாயிலாகச் சமயத் தொண்டு செய்தனர் . முத்தமிழ் வாயிலாக ஆகமத்தின் வழிவந்த சிவநெறி தமிழ்மக்களிடையே நன்கு வேரூன்றி நிலைபெறுவதாயிற்று . நம்பியாரூரர் அருளிய திருத்தொண்டத்தொகையானது தமிழக மக்களின் அருளியல் வரலாற்றில் புதிய திருப்பத்தை உண்டாக் கியது . அதன் அடிப்படையில் மல்ர்ந்ததே சேக்கிழாரின் திருத் தொண்டர் புராணம் . நம்பியாரூரர் காலத்தில் திருவாரூர்த் தேவா சிரிய மண்டபத்தே அமைந்த புனிதர் பேரவை இயக்க வடிவம் பெற்று சைவசமயக் காப்பகமாகத் திகழ்ந்தது . தமிழகத்து அருளியற் சைவத்துக்குரிய நெறிமுறைகளிற் பிழை காணப்படின் புறகு ' எனத் தவறு செய்தாரை வெறுத்து ஒதுக்குமளவுக்கு ஆற்றல் பெற்றதாகப் புனிதர் பேரவை இருந்தது . அதனாலேயே சைவநெறி உலகினில் விளங்கி வெல்க என்று சொல்வதற்குப் பதிலாக