சிவஞான முனிவர் நோக்கில் சைவ சித்தாந்தம்

சிவஞான முனிவர் நோக்கில் சைவசித்தாந்தம் "மதிவளர் சடைமுடி மன்றுளாரைமுன் துதிசெயு நாயன்மார் தூய சொன்மலர் பொதிநலன் நுகர்தரு புனிதர் பேரவை விதிமுறை உலகினில் விளங்கி வெல்கவே' என்று சேக்கிழார் கூறும் அளவுக்கு அக்காப்பகம் வலிவு பெற்றிருந்தது. அருளாளர்களின் வாழ்வையும் வாக்கையும் மூலமாகக் கொண்டு சாத்திர நூல்கள் தோன்ற முற்பட்டன. பன்னிரு திரு முறைகளில் ஒன்றாகிய திருமந்திரம் சாத்திர நூலாகத் திகழ்ந்த போதிலும், ஞானாமிர்தமே முதல் சாத்திர நூலாகத் தோற்றம் பெற்றது என அறிஞர் கூறுவர். ஆயினும் மெய்கண்டாரை முன்னிட்டுக் கொண்டுதான் சாத்திர நூல்கள் தமிழகத்தில் வளம் பெறலாயின. திருமுறைப் பெருநெறியில் வந்தவரே மெய்கண்டார். அவருடைய மூன்றாம் அகவையில் திருக்கயிலையில் காவல் பூண் டொழுகும் நந்தியெம்பெருமானுடைய திருவருள் மரபில் வந்த சமய குரவர் நால்வருள் நான்காமவராகிய பரஞ்சோதியார், மூன்றாண்டுக் குழந்தைக்குச் சிவஞானச் செம்பொருளை உணர்த்தி, மெய்கண்டார் எனப் பெயரிட்டு, "இப்போது நல்கிய சிவஞானத்தை இனிய தமிழில் அமைத்து எல்லா மக்கட்கும் வழங்குக" என உபதேசித்துச் சென்றார். அவர் தாம் கேட்டு இன்புற்ற சிவஞானத்தைச் சிவஞானபோதம் என்று பெயரிய நூலாக அமைத்து, தம்பால் வந்தார்க்கு அறிவுறுத்தி வருவாரா யினர். அவ்வகையில் நாற்பத்தொன்பது மாணாக்கர்கள் அவரிடம் பாடம் கேட்டதாக அறிஞர்கள் கூறுவர். அவர்களில் அருணந்தி சிவாசாரியார், திருவதிகை மனவாசகம் கடந்தார், சிற்றம்பல நாடிகள் ஆகியோர் குறிப்பிடத் தக்கவராவர். அவ்வகையில், சாத்திரக் கொள்கையை வரையறுத்து உணர்த்தும் வகையில் பதினான்கு நூல்கள் அமைந்தன. அவை மெய்கண்ட சாத்திரங்கள் எனப்பெற்றன. இங்கே ஒரு கருத்தை உடன் இணைத்துச் சிந்தித்தல் வேண்டும். மெய்கண்டாரை முதல்வராகக் கொண்டு மெய்கண்ட சந்தானம் அமைந்தது. அவ்வழியில்
சிவஞான முனிவர் நோக்கில் சைவசித்தாந்தம் மதிவளர் சடைமுடி மன்றுளாரைமுன் துதிசெயு நாயன்மார் தூய சொன்மலர் பொதிநலன் நுகர்தரு புனிதர் பேரவை விதிமுறை உலகினில் விளங்கி வெல்கவே ' என்று சேக்கிழார் கூறும் அளவுக்கு அக்காப்பகம் வலிவு பெற்றிருந்தது . அருளாளர்களின் வாழ்வையும் வாக்கையும் மூலமாகக் கொண்டு சாத்திர நூல்கள் தோன்ற முற்பட்டன . பன்னிரு திரு முறைகளில் ஒன்றாகிய திருமந்திரம் சாத்திர நூலாகத் திகழ்ந்த போதிலும் ஞானாமிர்தமே முதல் சாத்திர நூலாகத் தோற்றம் பெற்றது என அறிஞர் கூறுவர் . ஆயினும் மெய்கண்டாரை முன்னிட்டுக் கொண்டுதான் சாத்திர நூல்கள் தமிழகத்தில் வளம் பெறலாயின . திருமுறைப் பெருநெறியில் வந்தவரே மெய்கண்டார் . அவருடைய மூன்றாம் அகவையில் திருக்கயிலையில் காவல் பூண் டொழுகும் நந்தியெம்பெருமானுடைய திருவருள் மரபில் வந்த சமய குரவர் நால்வருள் நான்காமவராகிய பரஞ்சோதியார் மூன்றாண்டுக் குழந்தைக்குச் சிவஞானச் செம்பொருளை உணர்த்தி மெய்கண்டார் எனப் பெயரிட்டு இப்போது நல்கிய சிவஞானத்தை இனிய தமிழில் அமைத்து எல்லா மக்கட்கும் வழங்குக என உபதேசித்துச் சென்றார் . அவர் தாம் கேட்டு இன்புற்ற சிவஞானத்தைச் சிவஞானபோதம் என்று பெயரிய நூலாக அமைத்து தம்பால் வந்தார்க்கு அறிவுறுத்தி வருவாரா யினர் . அவ்வகையில் நாற்பத்தொன்பது மாணாக்கர்கள் அவரிடம் பாடம் கேட்டதாக அறிஞர்கள் கூறுவர் . அவர்களில் அருணந்தி சிவாசாரியார் திருவதிகை மனவாசகம் கடந்தார் சிற்றம்பல நாடிகள் ஆகியோர் குறிப்பிடத் தக்கவராவர் . அவ்வகையில் சாத்திரக் கொள்கையை வரையறுத்து உணர்த்தும் வகையில் பதினான்கு நூல்கள் அமைந்தன . அவை மெய்கண்ட சாத்திரங்கள் எனப்பெற்றன . இங்கே ஒரு கருத்தை உடன் இணைத்துச் சிந்தித்தல் வேண்டும் . மெய்கண்டாரை முதல்வராகக் கொண்டு மெய்கண்ட சந்தானம் அமைந்தது . அவ்வழியில்