சிவஞான முனிவர் நோக்கில் சைவ சித்தாந்தம்

சிவஞானமுனிவர் நோ க்கில் சைவசித்தாந்தம் சிவசமவாத உரை மறுப்பு, சித்தாந்த மரபு கண்டன கண்டனம் என்ற நூல்கள் மொழிபெயர்த்தும், உரைநடைகளாகவும் அமைக்கப் பெற்றன. 8 சிவஞான முனிவர் நோக்கில் சைவசித்தாந்தம் என்ற இத் தலைப்பின் பொருளைச் செம்மையுறத் தெரிதல் வேண்டும். வரையறை செய்யப்பெற்ற எந்த ஒரு தத்துவக் கொள்கையும் சித்தாந்தமே. பிற கொள்கைகளை ஏற்று, விளக்கி, மறுத்து, தன்னுடைய முடிந்த முடிவை இது என உறுதிப்படுத்தி நிறுவுவதே சித்தாந்தம். பூர்வபட்சம் செய்து சித்தாந்தம் செய்தல் என்பது எல்லாத் தத்துவக் கொள்கைக்கும் பொது. ஆனால், சைவ சீத்தாந்தம் என்ற சொல் முடிந்த முடிபாகிய சைவக் கொள்கை என்ற விளக்கத்துடன் இத்தத்துவத்துக்குரிய இயற்பெயராகவே அமைந்துவிடுகிறது. சித்தாந்தம் என்பதை இயற்பெயராகக் கொண்டதே இத்தத்துவத்தின் தனித் தன்மை. சைவசித்தாந்தத்தில் ஏனைய பேறுகள் சித்திக்கும் என்று விளக்கிய உரைகள் பல. இதுவே முடிந்தமுடிபு; இம்முடிபு எவ் வாற்றாலும் மாற்றமுறாது எனக் காட்டி, இத்தத்துவக் கொள் கையைச் சைவசித்தாந்தம் என நிறுவிக் காட்டிய பெருமை மாதவச் சிவஞான சுவாமிகளையே சாரும். சைவசித்தாந்தம் என்பது இக்கொள்கைக்கு இயற்பெயர் என நிறுவிக்காட்டிய பெருமையுடன் சித்தாந்த மரபு இது என வரை யறை செய்துணர்த்திய பெருமையும் மாதவச் சிவஞான சுவாமி களுக்கே உண்டு. தாம் பிறந்த நாளில் நட்சத்திரத்தில் நவக்கிரக வழிபாடு செய்து கொள்வோரும், காளி, துர்க்கை முதலிய சிறு தெய்வ வழிபாட்டைச் செய்வோரும் சித்தாந்த மரபினர் ஆகார் என்பதை வரையறை செய்துணர்த்தவே காஞ்சிப் புராணத்தை அமைத்துக் காட்டினார் எனக்கொள்ள வேண்டும். திருத்தொண்டர் திருவடிப்பேறும், மகாவாக்யமாயினும் அது ஐந்தெழுத்தினுள் அடங்கும் என்ற அருள் ஞானமும் சித்தாந்த மரபின் இருகண்கள் எனப் போற்றுதல் மாதவச் சிவஞான சுவாமி கள் வாழ்வியல் விளக்கம். திருமுறை நெறிக்கு அப்பால் ஏதும் இல்லை எனக் கொள்ளலே சித்தாந்த மரபு என வரையறைப் படுத்திய பெருமை மாதவச் சிவஞான சுவாமிகளின் திருத் தொண்டு.
சிவஞானமுனிவர் நோ க்கில் சைவசித்தாந்தம் சிவசமவாத உரை மறுப்பு சித்தாந்த மரபு கண்டன கண்டனம் என்ற நூல்கள் மொழிபெயர்த்தும் உரைநடைகளாகவும் அமைக்கப் பெற்றன . 8 சிவஞான முனிவர் நோக்கில் சைவசித்தாந்தம் என்ற இத் தலைப்பின் பொருளைச் செம்மையுறத் தெரிதல் வேண்டும் . வரையறை செய்யப்பெற்ற எந்த ஒரு தத்துவக் கொள்கையும் சித்தாந்தமே . பிற கொள்கைகளை ஏற்று விளக்கி மறுத்து தன்னுடைய முடிந்த முடிவை இது என உறுதிப்படுத்தி நிறுவுவதே சித்தாந்தம் . பூர்வபட்சம் செய்து சித்தாந்தம் செய்தல் என்பது எல்லாத் தத்துவக் கொள்கைக்கும் பொது . ஆனால் சைவ சீத்தாந்தம் என்ற சொல் முடிந்த முடிபாகிய சைவக் கொள்கை என்ற விளக்கத்துடன் இத்தத்துவத்துக்குரிய இயற்பெயராகவே அமைந்துவிடுகிறது . சித்தாந்தம் என்பதை இயற்பெயராகக் கொண்டதே இத்தத்துவத்தின் தனித் தன்மை . சைவசித்தாந்தத்தில் ஏனைய பேறுகள் சித்திக்கும் என்று விளக்கிய உரைகள் பல . இதுவே முடிந்தமுடிபு ; இம்முடிபு எவ் வாற்றாலும் மாற்றமுறாது எனக் காட்டி இத்தத்துவக் கொள் கையைச் சைவசித்தாந்தம் என நிறுவிக் காட்டிய பெருமை மாதவச் சிவஞான சுவாமிகளையே சாரும் . சைவசித்தாந்தம் என்பது இக்கொள்கைக்கு இயற்பெயர் என நிறுவிக்காட்டிய பெருமையுடன் சித்தாந்த மரபு இது என வரை யறை செய்துணர்த்திய பெருமையும் மாதவச் சிவஞான சுவாமி களுக்கே உண்டு . தாம் பிறந்த நாளில் நட்சத்திரத்தில் நவக்கிரக வழிபாடு செய்து கொள்வோரும் காளி துர்க்கை முதலிய சிறு தெய்வ வழிபாட்டைச் செய்வோரும் சித்தாந்த மரபினர் ஆகார் என்பதை வரையறை செய்துணர்த்தவே காஞ்சிப் புராணத்தை அமைத்துக் காட்டினார் எனக்கொள்ள வேண்டும் . திருத்தொண்டர் திருவடிப்பேறும் மகாவாக்யமாயினும் அது ஐந்தெழுத்தினுள் அடங்கும் என்ற அருள் ஞானமும் சித்தாந்த மரபின் இருகண்கள் எனப் போற்றுதல் மாதவச் சிவஞான சுவாமி கள் வாழ்வியல் விளக்கம் . திருமுறை நெறிக்கு அப்பால் ஏதும் இல்லை எனக் கொள்ளலே சித்தாந்த மரபு என வரையறைப் படுத்திய பெருமை மாதவச் சிவஞான சுவாமிகளின் திருத் தொண்டு .